வரம் – 4

அர்ஜூனும், பூஜாவும், காரில் அவர்களுடைய பூர்வீக வீட்டுக்கு வந்திருந்தனர். அந்த கிராமத்துக்கு மத்தில் இயற்கை எழில் கொஞ்சும் அந்த அழகிய வீடு, புதுமையும், பழமையும் கலந்து மின்னியது. வீட்டை சுற்றி மரங்கள், குறிப்பாய் தோட்டத்தில் போடப்பட்டிருந்த ஊஞ்சல் எல்லாம், ஏதோ அந்த கால தலைவர்களின் வீடு போல் இருந்தது. 

கிட்ட தட்ட அர்ஜூன் பல வருடங்களுக்குப் பின் அங்கு வருகிறான். அங்கு வரவே கூடாது என்று நினைத்த நாட்களும் உண்டு. இந்த ஊர், இந்த சொந்தம், குடும்பம் இப்படி எதுவுமே வேண்டாம் என்றுத்தான் நினைத்தான். ஆனால் அவனுடைய அம்மாத்தான் இந்த ஊரை விட்டு வர மாட்டேன் என்று அடம்பிடித்திருக்க, இப்போது அவனும் அங்கு வர வேண்டிய நிலை.

அவன் முகத்தில் இருந்த கடுப்புக்கு நேர்மாறாக பூஜாவின் முகத்தில் அப்பட்டமான சோர்வு இருந்தது. 

“எப்படா இந்த சடங்கு எல்லாம் முடியும்?” என்பது போல் தான் பூஜா அமர்ந்திருந்தாள். இப்போது வரை ஒரு வார்த்தை அவள் யாரிடமும் பேசியிருக்கவில்லை. அது எல்லாம் அவன் மூளையிலும் பதிந்திருக்கவில்லை. பதிந்திருந்தாலும் அதை அப்போது அவன் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லையோ? என்னவோ?

அவர்கள் சொன்ன சடங்குகளை எல்லாம் கடமை என்று செய்தவன், ஒரு கட்டத்தில், உறவுக்காரர்களின் கேலிப் பேச்சை கேட்க முடியாமல், மொபைலுடன் பின் பக்க தோட்டத்துக்கு சென்றிருந்தான்.

மகனின் செயல், தேவிகாவுக்கு கடுப்பைக் கொடுத்தாலும், சொந்தக்காரர்களின் மத்தியில் மகனைக் கண்டிக்க இயலாது தன் மருமகளின் அருகில் வந்தார். 

வந்தவர் மெல்ல அவள் கன்னம் வருடி “என்னடா ரொம்ப அசதியா இருக்கா? இன்னிக்கு ஒரு நாள் தான் இப்படி இருக்கும். அதான் சடங்கெல்லாம் முடிஞ்சிருச்சித்தான. நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு" என்று சொல்லி அவளை அங்கிருந்த ஒரு அறைக்கு அனுப்பி வைத்தார்.

மகனிடம் பேச நினைத்தாலும் சுற்றி இருந்த உறவுகள், அதை செய்ய விடவில்லை. 

ஆனால் பூஜாவுடைய அப்பா, அர்ஜூனைப் பார்க்க வந்தார். அவன் யாரிடமோ மொபைலில் கோவமாய் பேசிக் கொண்டிருக்க, “மாப்பிள்ள” என்று தணிந்த குரலில் அழைத்தார்.

அதில் அவனோ, திரும்பி பார்த்தான். அவனுக்கு அவரை கூட யார் என்று தெரியவில்லை. அவனுக்குத்தான் மனைவியின் முகமே இன்னும் நினைவில் இல்லையே. அப்படி இருக்க, மனைவியின் அப்பாவையா, அவன் நினைவில் வைத்திருக்கப் போகிறான்.

ஏதோ சொந்தக்காரர் என்று நினைத்தவன், “ஒரு முக்கியமான கால் பேசிட்டு இருக்கேன்” என்றவன் அவரை திரும்பியும் பார்க்காது தள்ளி சென்றிருந்தான். அவனுடைய அந்த செயல், அவருக்கு முகத்தில் அடித்தாற்போல் இருந்தது.

திருமணத்துக்கு முன் தான் அவனிடம் பேச அவருக்கும் நேரம் கிடைத்திருக்கவில்லை. தன்னுடைய மகளைப் பார்த்துக் கொள் என்று சொல்லக் கூட அவர் வரவில்லை. ஆனால் இப்படி அர்ஜூன் முகத்தை திருப்பியப்படி சென்றது சற்று பதட்டத்தைக் கொடுத்தது.

அவர் மனம் புரிந்தது போல் அங்கு வந்த தாத்தா, “இப்பத்தான கல்யாணம் ஆகியிருக்கு. எல்லாம் சரியாகிடும்” என்றார்.

“என்னமோய்யா. எனக்கு என் பொண்ணு சந்தோஷமா இருக்கனும்” என்று சொல்லிவிட்டு, தன்னுடைய குடும்பத்துடன் கிளம்பியிருந்தார்.

இங்கே அடுத்த சடங்காய் முதலிரவுக்கு ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தது. அது பற்றி அறியாத பூஜாவோ, அங்கிருந்த ஒரு அறையில் படுத்து நன்றாக உறங்கியிருந்தாள்.

யாரோ உறவுப் பெண் ஒருவள் வந்து எழுப்பும் போதே பதறியடித்து எழுந்தாள். “ஹேய் புது பொண்னு. நாங்கத்தான். இதுக்கே இப்படி துள்ளுனா, ராத்திரி என்னாகுறது” என்று சீண்டலாய் கேட்க, அவளோ திரு திருவென முழித்தாள்.

அதற்குள் அங்கு வந்த தேவகித்தான், “ச் இப்பவே என் மருமகள வம்பிழுக்காதீங்க. நீங்க போங்க. நான் என் மருமகள பாத்துக்கிறேன்” என்று அனுப்பி வைத்தார்.

அதன் பின் அவருடைய அத்தை அவருக்கு கொடுத்த நகைகளை எல்லாம் அவளுக்கு கொடுத்தார். அவளோ அதை வாங்கவும் செய்யாது, மறுக்கவும் செய்யாது குழப்பமாய் பார்த்தாள்.

அதில் அவள் கன்னத்தில் கை வைத்து சிரித்தவர், “இதெல்லாம் என் அத்த எனக்கு கொடுத்தது. இப்போ நான் உனக்கு கொடுக்கிறேன்” என்றப்படி அவரே அவளுக்கு போட்டு விட்டார். அதன் பின் மேலோட்டமாய் அவளுக்கு சில அறிவுரைகள் சொல்லிவிட்டு செல்ல, மற்ற உறவுப் பெண்கள் அவளை முதலிரவு அறைக்கு அனுப்பி வைத்தனர்.

மனதில் மெல்லிய பதட்டம் அவளிடம் இருந்ததா? என்ற கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை. ஆனால் கையில் வைத்திருந்த பால் செம்பு சற்று குலுங்கி, சற்று பால் வெளியில் சிந்தியது. புது சேலை வேறு, அவளுடைய கால்லை பிடித்துக் கொண்டு, அடுத்த அடி எடுத்து வைக்க விடாது தடுமாற செய்தது.

மொத்தத்தில் சட்டென்று யார் பார்த்தாலும், அந்த வெள்ளை நிறத்தில் சில்வர் பார்டர் வைத்து, ஆங்காங்கே வெள்ளி நிறத்தில் பூ டிசைன் பதிக்கப்பட்டிருந்த அந்த சேலையில், மோகினியாகவே காட்சியளித்தாள். அதிலும் தலை நிறைய சூழியிருந்த மல்லிகை. காற்றுக்கு விலகும் அந்த சேலை மடிப்பு. நிச்சயம் ஒரு ஆடவனை தடுமாற வைக்கும் அத்தனை அழகும் அவளிடம் இருந்தது.

ஆனால் அந்த அழகை ரசிக்க வேண்டவனோ, அத்தனை கடுப்பில் பால்கனியில் அங்கும் இங்கும் என்று நடந்துக் கொண்டிருந்தான். “ச் எல்லாரும் என்னத்தான் நினைச்சிட்டு இருக்காங்க. எல்லாமே அவங்க இஷ்டத்துக்கு நடக்கனும்னா, அப்புறம் எனக்கு என்ன மரியாத இருக்கு. இதெல்லாம் வேண்டாம்னு சொல்லியும் கேட்காம, இத பண்ணி வச்சிருக்காங்க. அப்படின்னா என்ன அர்த்தம்? நான் என்னமோ சும்மா சொல்லிட்டு இருக்கேன்னுதான நினைச்சிட்டு இருக்காங்க். காட்டுறேன் இந்த அர்ஜூன் யாருன்னு நான் எல்லாருக்கும் காமிக்கிறேன்” என்று தனக்குள்ளே கர்ஜித்துக் கொண்டிருந்தான்.

அந்த சிங்கத்தின் கர்ஜனை எல்லாம் அவனின் பின்னே தட்டுத்தடுமாறி வந்து நின்ற பூஜாவின், “க்கும்” என்ற அழைப்பைக் கேட்கும் வரையில் தான்.

அவளுடைய குரல் அத்தனை இனிமையாய், அந்த நொடி அவள் செவியில் ஒலித்தது. சட்டென்று அவன் திரும்ப, திரும்பியவனால் ஒரு நொடி இமைக்க முடியவில்லை. கண் முன்னே நின்றிருந்தவளைப் பார்த்து அவன் தேகம் ஜில்லிட்டது.

அவனின் முகத்தில் இருந்த கடுமை எல்லாம் மறைந்து அவளை ரசிக்கும் ரசிகன் வந்து எட்டிப் பார்த்தான். அவளையே உச்சித் தொட்டு பாதம் வரை பார்த்தான். அதிலும் சேலை விலகுமா? விலகாதா? என்பது போல் காற்றுக்கு ஆடிய அந்த இடையோரம் இருந்த சேலையை சிறு கோவத்துடனே பார்த்தான்.

ஏனோ அவன் பார்க்க நினைத்த ஒன்றை தடுத்துப் பிடித்தது போல் அவனுக்கு தோன்றியது. அவனின் பார்வை அவளை அக்கு வேறாய் ஆராய், அவளோ, நீட்டிய கரத்தில் இருந்த பால்லைத்தான் பார்த்திருந்தாள்.

அவள் கரத்தில் இருந்த நடுக்கத்தின் விளைவாய், பால் மெல்ல அவன் மேல் தெளிக்க, அப்போதே இவ்வுலகம் வந்தான் அர்ஜூன்.

அதில் தன்னையே நொந்துக் கொண்டவன், “என்னடா பண்ணிட்டிருக்க. இப்படியா ஒரு பொண்ண பாத்துட்டு நிப்ப” என்று திட்டினான்.

பூஜாவோ ஒரு நொடி தயங்கி பின் மெல்ல அவனைப் பார்த்து  “பால் எடுத்துக்கோங்க" என்று மிக மெதுவாய் கூறினாள். நேற்றில் இருந்து, இப்போது வரை அவளுடன் தானே இருக்கிறான். அனேகமாக அவள் அவனிடம் பேசிய முதல் வார்த்தை அதுவாகத்தான் இருக்கும். இல்லை இல்லை. அந்த இரண்டு நாளில், அவள் பேசிய முதல் வார்த்தை அதுத்தான். ஆனால் அவள் பேசியது, அவளுக்கே கேட்டிருக்குமா என்பது சற்று சந்தேகம் தான். அத்தனை மென்மையான ஒரு குரல். அந்த குரலில், செம்பை கோவமாய் தட்டி விட நினைத்து முன்னேறியவன், “அங்க வச்சிடு. நான் அப்புறமா குடிச்சிக்கிறேன்" என்றான் அர்ஜூன். “ம்" என்றவள் அவன் சொன்ன இடத்தில் அந்த செம்பை வைத்து விட்டு, குனிய முயற்சித்தாள்.

அவள் செயலில், அவனோ கோவமாய், “ஹேய் என்னப் பண்ற நீ? கால்ல விழுந்தாத்தான் மரியாதையா? அதெல்லாம் ஒன்னும் தேவ கிடையாது. இந்த மாதிரி விஷயஙக்ள் எல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்காது” என்றான்.

ஆனால் உண்மையில் பூஜா செய்ய நினைத்தது என்னவென்றால், கொலுசில் சிக்கியிருந்த தன் சேலையை எடுத்து விடத்தான் நினைத்தாள். அதற்காகத்தான் குனிந்தாள். ஆனால் அவன் அப்படி சொல்லவும், இவளோ, “இல்ல அது” என்று ஆரம்பித்தாள்.

ஆனால் அவனோ அவளை பேச விடாது, “இங்கப்பாரு. இந்த கல்யாணம் உன்ன பொறுத்த வரைக்கும் வேணும்னா, உன் விருப்பத்தோட நடந்ததா இருக்கலாம். ஆனா எனக்கு. ச்.. இங்கப்பாரு, எனக்கு இன்னும் டைம் வேணும். ஈவன், நான் இந்த கல்யாணம் இத பத்தி எல்லாம் இப்போ யோசிக்கவே இல்ல. என் லைப்ல நான் செய்ய வேண்டியது நிறையா இருக்கு. அதனால தேவையில்லாத ஆசைய எல்லாம் வளர்த்துக்காத” என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்தான்.

அவளோ அவன் சொல்லியதை கேட்டாளா? இல்லையா? என்பது போல் சுற்றி அலங்காரம் செய்யப்பட்டிருந்த அந்த அறையைப் பார்த்தாள். அதைப் பார்த்து கடுப்பானவன், “ச் உன்கிட்டத்தான சொல்றேன். எனக்கு இப்போ இதுல விருப்பம் எல்ல” என்று வார்த்தையைக் கடித்து துப்பினான்.

அவனுடைய குரலில் அவள் பயப்படவெல்லாம் இல்லை. அதே நேரம் அதிரவோ? இல்லை எதிர்க்கவோ எதுவுமே செய்யவில்லை. உடனே கட்டிலில் இருந்த பெட்சீட்டை எடுத்து தரையில் விரித்துக் கொண்டாள். 

அதைப் பார்த்த அர்ஜூனுக்கோ, இன்னுமே எரிச்சல் தான் மிஞ்சியது. “பூம் பூம் மாடு மாதிரித்தான் இந்த கல்யாணத்துக்கும் தலையாட்டிருப்பா போல. நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன். ஏன் இப்படி சொல்றேன். எனக்கு ஏன் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு எதையாச்சும் கேட்கிறாளா பாரு” என்று முனுமுனுத்தான்.

ஆனால் பூஜாவோ நீ இன்னும் கூட இப்படியே நில்லு எனக்கு தூக்கம் வருகிறது என்பது போல் ஆழ்ந்த உறக்கத்திற்கே சென்றிருந்தாள்.

அவளுடைய செயலில், அவனோ கட்டிலில் அமர்ந்து அவளைத்தான் பார்த்தான். இப்படி ஒருவன் தன்னை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது கூட தெரியாத அளவுக்குத்தான், அவள் உறங்கியிருந்தாள்.

“இந்த மாதிரி நேரத்துல கூட இவளால எப்படி தூங்க முடியுது?” என்றவனின் பார்வை வேறு இப்போது சரியாக அவள் சேலை விலகிய மெல்லிடையில் பதிந்து மீண்டது.

நிச்சயம் அவள் படுத்திருந்த தோரணை, அவனை மொத்தமாய் மயக்கி, அவளை கட்டிக் கொண்டு படுக்கும் படித்தான் இருந்தது.

அவனின் எண்ணம் போகும் திசையை உணர்ந்தவன், “ச் என்னடா அர்ஜூன் நீ? அவகிட்ட அப்படி எல்லாம் பேசிட்டு இப்போ இப்படி பண்ற” என்றவன் அவளுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டான்.

ஆனாலும் மீண்டும் மீண்டும் கன்னியவளின் இடையும், அவள் படுத்திருந்த கோலமுமே நினைவுக்கு வர மீண்டும் திரும்பினான். அவனை இன்னுமே மெல்டாக்குவது போல், இப்போது அவள் சேலை சற்று கால் பக்கமும் விலகியிருந்தது. அது அவனுடைய இதயத்தை சற்று பலவீனமாக்கியது. மீண்டும் அவன் பார்வை அவன் அனுமதி இன்றி அவள் மேனி எங்கும் வலம் வர, ஒரு நொடி அவனையும் மீறி எழுந்து விட்டான்.

(ஏன்பா ராசா. இதுத்தான் உன் கடமை கன்னியம் கட்டுப்பாடா? ரொம்ப பெருமையா இருக்கு. நீ எல்லாம் ஒரு வாரம் தாங்குவீயான்னே தெரியல. சரி பாக்கலாம். இன்னும் நம்ம ஹீரோ என்னெல்லாம் பண்ணப் போறாரு. அப்புறம் நம்ம ஹீரோயினுக்கு பேச்சு வருமா? வராதான்னு வேற தெரியல. அதையும் என்னென்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச் சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்புறம் மறக்காம இந்த சைட்ட உங்க ஹோம் ஸ்கீரீன்ல ஆட் பண்ணிக்கோங்க. அப்பத்தான் உங்களுக்கு டெய்லியும் ஈஸியா என்னோட அப்டேட்ட தெரிஞ்சிக்க முடியும். சரி அதுக்கு முன்னாடி எப்பவும் போல உங்களுக்கு பிடிச்ச ரியாக்சன்ன கொடுத்துட்டு, உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க. முடிஞ்சா ரேட்டிங்கும் கொடுத்திடுங்க.)

தொடரும்…

Comments   8

*** வரம் – 4 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***