வேந்தன் அவளை கஷ்டப்படுத்த வேண்டியே பேசிக் கொண்டிருக்க, அதை தாங்காது அவளையும் மீறி அவன் சட்டையைப் பிடித்திழுத்து அவன் வாயை தன் உதட்டால் மூடியிருந்தாள் கவி. சட்டென்று நடந்திருந்த அந்த நிகழ்வை அவர்கள் இருவர் மட்டும் அல்ல, சரியாக அன்னேரம் உள்ளே நுழைந்த விழியும் எதிர்பார்த்திருக்கவில்லை.
அவளுக்கே அதிர்ச்சித்தான். சட்டென்று வெளியில் சென்ற விழியோ, “நம்மள விட இவங்க ரொம்ப ஸ்பீடாத்தான் இருக்காங்க” என்று தனக்குள் சொல்லியவள், “அண்ணா, கதவ திறந்து வச்சிட்டேன். நீங்க உள்ள பூட்டிக்கோங்க” என்று அங்கிருந்து குரல் கொடுத்து விட்டு ஓடியிருந்தாள்.
அவளின் சத்தத்தில் கவி வேகமாய் அவனை விட்டு விலக, அவனுக்கே, அவள் கொடுத்த முத்தத்தில் இருந்து வெளியில் வர சில நொடிகள் தேவைப்பட்டது.
இவளுக்கோ சத்தியமாய் அவள் செய்ததை அவளாலையே நம்ப முடியவில்லை. ஒரு வித இயலாமை, தயக்கம், தன்னைக் குறித்தே அசிங்கமாய் தோன்றியது.
“என்னப் பண்ணிட்டேன் நான்?” என்று தன்னைத் தானே கேட்டவளுக்கு, அந்த இயலாமை அவனின் மீதுத்தான் கோவமாய் திரும்பியது. யாரிடமும் கோவத்தை காட்டியே பழகாதவளுக்கு, இப்போது முற்றும் முழுதாய் அவன் மீதே கோவத்தை காட்டுவது பழக்கமாயிருந்தது.
உடல் நடுங்க, முகம் கசங்க, கண்கள் கலங்க, உதடு கடித்து தவறு செய்த குழந்தையாய் அவள் நின்றிருந்த அந்த தோற்றமே, அவள், அடுத்து அவனை என்ன வேண்டுமானாலும் பேசலம் என்பதை அவனுக்கு காட்டியது.
“ச் இதத்தான நீங்க” என்று அவள் பேச ஆரம்பிக்கும் போதே, சட்டென்று தன்னை தேற்றி, முகம் இறுக, “என்னைப் பார்த்தா, உனக்கு இதுக்குத்தான் அலையுற மாதிரி தெரியுதா? இல்ல நான் கொடுத்த எதையுமே வச்சிக்க மாட்டேன்ற திமிரா உனக்கு?” என்றவன் அவள் பேசுவதற்கு வேறு மாதிரியாக குறிப்பு எடுத்துக் கொடுத்தான்.
அரசியல்வாதி அல்லவா? அவள் மனதை மட்டும் அல்லாது, அவள் வார்த்தையையும் தனதாக்கியிருந்தான்.
அவன் அப்படி சொல்லவும், ஒரு வித இயலாமையில் நின்றிருந்தவள், “ஆமா, எனக்கு நீங்க கொடுத்த எதுவுமே வேண்டாம்” என்றாள்.
“சரி அதான் நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்துட்டத்தான, இதுக்கப்புறம் உனக்கும், எனக்கும் நடுவுல எதுவுமே இல்ல. போதுமா” என்று கோவமாய் தான் கேட்டான்.
“அதான் எதுவுமே இல்லன்னு சொல்லிட்டீங்கத்தான. அப்புறமும் எதுக்கு என்னை” என்று அவள் கேட்டு முடிக்கும் முன்னே, “இந்த வேந்தன் எடுத்த முடிவுல இருந்து மாற மாட்டான்” என்று முடித்திருந்தான்.
“என்னை அனுப்பிட்டு நீங்க வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்கோங்க” என்று அவள் பேசி முடிக்கும் முன்னே, “ச் ஏன் என்னை வேற ஒரு பொண்ணோட சேர்த்து வச்சி பாக்க முடியாதா உனக்கு?” என்று நக்கலாய் கேட்டான்.
அவனின் கேள்வியில் ஒரு நொடி தடுமாறி, அடுத்த நொடியே, “உங்க மேல ஊர்ல எல்லாருக்கும் நிறையா மரியாத இருக்கு. பொண்டாட்டி இருக்கிறப்பையே, இன்னொரு பொண்ண கூட வச்சிருந்தீங்கன்னா, அது உங்களுக்குத்தான் அவமானம். அந்த அவமானத்த உங்களுக்கு நான் வர விட மாட்டேன். நீங்க வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணதுக்கப்புறம் நான் இங்க இருக்க மாட்டேன். அதுக்கு மேல நீங்க இங்க இருக்க வச்சா, நான் உயிரோடவே இருக்க மாட்டேன்” என்றவள், என்ன பேசிக் கொண்டிருக்கிறாள் என்று அவளுக்காவது புரிந்தால் மகிழ்ச்சியே.
“அத அப்போ பாக்கலாம். இப்போ குட்டிமா காத்துட்டு இருப்பா. வா” என்று அவன் அழைக்க, அவளோ அவனை முறைத்தாள். அதை சற்றும் கண்டுக் கொள்ளாதவன், “முதல்ல என் குட்டிமா, என்ன உன்னை விட்டுட்டு வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்க சொல்லட்டும். அதுக்கப்புறமா, நீ சொல்ற மாதிரி நடக்குதா? இல்ல நான் சொல்ற மாதிரி நடக்குதான்னு பாக்கலாம். பட் அவ்ளோ ஈஸியாலாம் என் முடிவ மாத்திட முடியாது” என்றான்.
இப்போது அவளோ, “என்ன மாத்திக்க மாட்டீங்க. அன்னிக்கு என்னவோ, ஒரு கல்யாணம்னுத்தான் சொன்னீங்க. இப்போ தங்கச்சிக்காக பண்ணிப்பீங்கன்னு சொல்றீங்கத்தான” என்று கோவத்தில் கடுப்பாய் உளறியவளுக்கு, உண்மையில் என்ன வேண்டும் என்றே தெரியவில்லை.
ஆனால் அவனுடைய புருவங்களோ, அவளை ஒரு நொடி அளந்தது. அந்த பார்வையில் தான், இத்தனை நேரம் என்ன பேசிக் கொண்டிருக்கிறோம் என்பது புரிய, “இல்ல. நான் அப்படி அதுக்கு” என்று தடுமாறினாள்.
“ச் நீ எதுக்கு வேணும்னாலும் சொல்லிட்டுப் போ. உன் பேச்சோ, இல்ல செயலோ எதுவும் என்ன பாதிக்காது. முன்னாடி சொன்னதுத்தான். என் குட்டிமா இங்க இருக்கிற வரைக்கும் அவ சந்தோஷமா இருக்கனும். அவ கஷ்டப்படுற மாதிரி நீ நடந்துக்கிட்ட, அதுக்கப்புறம் இந்த வேந்தனோட இன்னொரு முகத்த நீ பார்ப்ப” என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தான்.
“ஆமா என்னப் பண்ணிடுவீங்க? இப்போ நான் கொடுத்தத திருப்பி கொடுப்பீங்க. அவ்வளவுத்தான?” என்று கேட்டவளின் நாக்கில் இன்று சாட்சாத் அந்த சனி பகவானே குடியிருந்தார் போலும். சட்டென்று அவன் திரும்பி அவளைப் பார்க்க, அப்போதே கோவத்தில் ஏதோ பேசியது புரிய, நாக்கைக் கடித்து அப்படியே பேச்சை நிறுத்தினாள்.
“ஐயோ கவி என்னாச்சுடி உனக்கு? ஏன் இப்படி தப்பு தப்பா பேசிட்டு இருக்க?” என்று தன்னைத் தானே நொந்துக் கொண்டவள், அவனைப் பார்க்க, “தெரிஞ்சா சரி” என்று சாதாரணமாய் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தான்.
அவனின் வார்த்தையில் அவளோ சில நொடிகள் அப்படியே நின்று விட, “கீழ விழுறப்ப பாத்துட்டே நின்னாரு. அதுக்கு மட்டும் என்ன தொடமாட்டாரு. இதுக்கு மட்டும் தொடுவாரா?” என்று அவள் முனுமுத்தாள்.
“இப்பவும் நான் உன்ன தொடல” என்ற அவன் குரலில், அவள் பட்டென்று நிமிர்ந்துப் பார்க்க, “உனக்காக என் குட்டிமாவும் பசியில இருக்கனுமா?” என்று எரிந்து விழுந்தான்.
அதில் அவளோ ஒரு வித எரிச்சலுடன், “இப்போ உங்க ரெண்டு பேரையும் நானா பசியில இருக்க சொன்னேன். எல்லாத்தையும் இவங்க பண்றாங்க. ஆனா திட்டு மட்டும் எனக்கு” என்று இப்போது கவனமாய் தன் மனதிற்குள் சொல்லியப்படி அவனைக் கடந்து சென்றாள்.
ஆனால் அவனோ அப்போதும், “அப்படித்தான் நாங்க பண்ணுவோம். உன்னால என்ன பண்ண முடியும்?” என்றான் வேந்தன்.
“ஐயோ கடவுளே, இவர வச்சிக்கிட்டு மனசுல கூட எதுவும் நினைக்க முடியல” என்றவள் இப்போது பாதி மனதிலும், மீதி வார்த்தையுமாய் சொல்லிவிட்டு அங்கிருந்து கீழே ஓடியிருந்தாள்.
அவள் சென்றப் பின்னே தன் கோவ முகத்தை குறைத்தவனுக்கு, அவள் கொடுத்த அந்த முத்தம் உயிர் வரை தொட்டு தழுவியது உண்மை. மெல்ல தன் உதட்டை வருடியவனோ, “செம்ம ஸ்ட்ராங்காத்தான் கிஸ் பண்றா. வேந்தா, ரிட்டர்ன் கிப்ட் லேட்டா கிடைச்சாலும், ஸ்ட்ராங்கவேத்தான் கிடைச்சிருக்கு” என்று தனக்குள்ளே சொன்னாலும், அவள் பேசிய வார்த்தைகள் எல்லாம் நினைவுக்கு வர அவனுடைய கோவம் கடகடவென்று கூறியது.
“என்னை அவ உடம்புக்காக அலையுறேன்னு சொல்லிட்டாள்ல” என்றவனுக்கு முகம் பாறையென இறுகியது. இருந்தும் அதை வெளிக்காட்டாது கீழிறங்கி சென்றான். அங்கே விழியோ கவியை வைத்து செய்துக் கொண்டிருந்தாள்.
“இத்தூனூண்டு முத்தத்துல இஷ்டம் இருக்கா? இல்ல இங்கீலீஸ் முத்தத்துல கஷ்டம் இருக்கா” என்று கவியைப் பார்த்தப்படியே விழி பாட, அவளோ, “ச் விழி. போதும் நீ நினைக்கிற மாதிரி இல்ல” என்று அவளிடம் போராடிக் கொண்டிருந்தாள்.
“கரெக்ட்த்தான் கவி. நான் நினைச்ச மாதிரி எதுவுமே இல்ல” என்று கேலியாய், கிண்டலாய் அவள் சொல்லிய தோணியில் கவிக்கோ அவளை நிமிர்ந்துக் கூட பார்க்க முடியவில்லை.
இயல்பான கணவன், மனைவியாய் இருந்திருந்தால், அவள் பேசியதற்கு வெட்கம் வந்திருக்கும். ஆனால் இவளுக்கோ சங்கடமாகவும், குற்ற உணர்ச்சியாகவும் இருந்தது.
அது விழிக்கு புரியவில்லை. அவள் அதை வெட்கம் என்று நினைத்து தன் தோழியை சீண்டிக் கொண்டிருந்தாள். ஆனால், வேந்தனுக்கோ அவளின் மன நிலை நன்றாக புரிந்தது.
அதனால் தன் தங்கையின் அருகில் வந்தமர்ந்தவனோ, “அப்புறம் குட்டிமா? மேல படிக்கிறீயா? இல்ல கல்யாணத்துக்கு மாப்பிள்ள பாக்கட்டுமா?” என்றான்.
அதைக் கேட்ட விழியோ கவியை கிண்டல் செய்வதை நிறுத்திவிட்டு அண்ணனை சிறு அதிர்வோடு பார்த்தாள்.
அவள் அதிர்ச்சியைப் பார்த்த வேந்தனோ, “உனக்கு யாரையாச்சும் பிடிச்சிருக்கா?” என்று அத்தனை பொறுமையாய் கேட்டான். கவிக்கோ இப்போதும் வேந்தனின் மீது பிரமிப்புத்தான் வந்தது. ஒரு அண்ணன் இப்படியும் இருப்பானா? அதில் அவனையேத்தான் வைத்தக் கண் வாங்காமல் பார்த்தாள்.
அதைப் பார்த்த விழியோ, “ஹேய் இன்னும் என் அண்ணாவ நீ சைட் அடிக்கிறத நிறுத்தலையா?” என்று சீண்டினாள். அதில் விழியை முறைத்தவளோ, “அதான் உன் அண்ணா கேட்கிறார்த்தான. அதுக்கு பதில் சொல்லு. தேவையில்லாம என்கிட்ட வராத” என்றாள் கவி.
“ஏன்? உன் வீட்டுக்காரர சைட் அடிக்கிறதுக்கு நான் டிஸ்டர்பா இருக்கேன்னா” என்று விழி விடாது கேட்க, “ச் அண்ணன் தங்கச்சி ரெண்டு பேர்ட்டையும் பேசவே முடியாது. என்னமோ பண்ணுங்க” என்றவள் அமைதியாய் மூவருக்கும் உணவை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.
“குட்டிமா சொல்லு, அப்படி யாராச்சும் இருக்காங்களா?” என்றான் வேந்தன்.
“எனக்கு பிடிச்சவங்கள எனக்கு கட்டி வைக்கனும்னா, இந்த உலகத்துலையே இவ ஒருத்தித்தாண்னா இருக்கா. அவளத்தான் நீ கல்யாணம் பண்ணிட்டீயேன்னா” என்று கவியின் கழுதைக் கட்டிக் கொண்டு கூறினாள்.
அவளின் செயலில், கவி அவளை முறைக்க, “உனக்கும் வேணும்னா நீயும் பண்ணிக்கோ. எனக்கொன்னும் பிரச்சன இல்ல” என்றான் வேந்தன்.
அவனின் பேச்சில், “என்னது?” என்று அவள் அதிர்ந்து கேட்க, விழியோ விடாது, “யு கே ல ஒரு பொண்ணும், பொண்ணும் கல்யாணம் பண்ணிக்கிடுறதெல்லாம் ரொம்ப காமன் தெரியுமா?” என்று கேட்டாள்.
அதில் “உங்க ரெண்டு பேர் பாசத்துக்கு நடுவுல, என்ன பங்கு வைக்காதீங்க. உங்க பாசத்த கொண்டு போய் எங்கையாச்சு கொட்டுங்க. என்ன விடுங்க” என்று வேகமாய் விழியின் அருகில் இருந்து எழுந்தவளோ வேந்தனுக்கு மறுபக்கம் சென்று அமர்ந்துக் கொண்டாள்.
அதைப் பார்த்து சிரித்த விழியோ, “பாருண்ணா. பேருத்தான் என் பிரண்ட். ஆனா அவளுக்கு நீன்னாத்தான் இஷ்டம்” என்றாள்.
அதில் கவியோ அதிர்ந்து, “என்ன?” என்றவளுக்கு அப்போதுத்தான் வேந்தனின் அருகில் வந்தமர்ந்ததே புரிந்தது. அதில் அவள் மிரள, வேந்தனோ, அதைப் பொருட்படுத்தாது. “சீரியஸா சொல்லு குட்டிமா. மாப்பிள்ள பாக்கட்டுமா? இல்ல” என்று நிறுத்தி அவளிடமே கேட்டான்.
“இப்போதைக்கு மேல படிக்கிற ஐடியாவும் இல்ல. மேரேஜ் பண்ணிக்கிற ஐடியாவும் இல்ல. கொஞ்ச நாள், உங்க ரெண்டு பேர் கூட இருக்குறேன்னே” என்றவள் அண்ணனின் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.
“சரிடா உன் விருப்பம்” என்று அவன் சொல்ல, “க்கும் இப்படி அவ விருப்பம் விருப்பம்னு, கடைசியில அவ கல்யாணம்மே வேண்டாம்னு சொல்லிட்டு உங்க கூடவே இருப்பா. அப்பவும் இப்படியே சொல்லிட்டிருங்க” என்றாள் கவி.
“அப்படியே இருந்தா இருந்துட்டு போகட்டுமே, என் தங்கச்சி சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்” என்றான் வேந்தன். இப்போதும் கவி அவனைத்தான் அத்தனை ஆச்சர்யமாய் பார்த்தாள். அந்த நொடி விழியைப் பார்த்து அவளுக்கு பொறாமையாய் இருந்தது. இப்படி ஒருவன் இருப்பானா? மீண்டும் கவி வேந்தனையே பார்த்திருந்தாள்.
(க்கும் என்ன பாத்து என்ன? ஒரு டெவலப்மெண்ட்ம் இல்லையே. சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தித்திக்குமா?..
0 Comments
No comments yet.