“ஐயோ சாரி. சாரி" என்று இவளின் முகத்தைக் கூட பார்க்காமல், பின்னே பார்த்தப்படி அவள் சொல்ல, புஜாவோ மொபைலில் இருந்த கவனத்தை திருப்பி அவளைப் பார்த்தாள்.
அவள் முகத்தில் தெரிந்த பதட்டத்தை பார்த்த பூஜாவோ “பரவாயில்ல. நீங்க ஏன், இவ்ளோ டென்சனா இருக்கீங்க. தண்ணி எதுவும் குடிக்கிறீங்களா?” என்று கேட்டாள்.
“அச்சோ அதெல்லாம் வேண்டாம்ங்க. இந்த ஆடிட்டோரியம் எங்க இருக்குன்னு சொன்னீங்கன்னா போதும்?” என்றாள் அந்தப் பெண்.
“இந்தப்பக்கம் இருக்குன்னு தான் சொன்னாங்க" என்று பூஜாவும் சந்தேகமாக கூறினாள்.
அப்போதே அவளை நிமிர்ந்துப் பார்த்தப் பெண், “அப்போ உங்களுக்கும் தெரியாதா?” என்றாள்.
“ம்ஹூம். நானும் உங்களை மாதிரி பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட் தான்" என்றாள் பூஜா. “அப்படியா? யூஜி ஸ்டூடண்டா?” என்று கேட்டாள் அந்தப் பெண்.
“இல்லைங்க எம்.எஸ்.சி மேக்ஸ்" என்றாள் பூஜா. “ஐயோ சேம்ங்க. நானும் அதே டிபார்ட்மெண்ட் தான்” என்றாள் அந்தப் பெண்.
“அப்படியா? என் பேரு பூஜா. உங்க பேரு?” என்று இவள் கேட்க,. “பிரியா" என்றாள்.
“பிரியா நைஸ் நேம்" என்றாள் பூஜா. “அட போங்க, பிரியான்ற பேருத்தான் பத்து பேர்ல ஒருத்தருக்கு இருக்கே. சரிங்க. சீனியர்ஸ் கண்ணுல படாம ஆடிட்டோரியத்துக்கு போயிடலாம்" என்றாள் பிரியா.
“ஏன் இவ்ளோ பயப்படுறீங்க? நம்ம என்ன யுஜி ஸ்டூடண்டா? பிஜி தான?” என்று கேட்டாள் பூஜா. “அட போ பூஜா. நானும் அப்படி நினைச்சித்தான் தைரியமா வந்தேன். ஆனா, பிஜின்னு சொன்னதுக்குத்தான் ஸ்பெசலா கவனிக்கிறாங்க தெரியுமா?” என்று ஏறக்குறைய அழும் ரீதியில் கூறினாள் பிரியா.
“இங்க ராக்கிங் அலோ கிடையாது தான? அதுலையும் நம்ம டிபார்ட்மெண்ட்ல கிடையாதுன்னு சொன்னாங்களே” என்றாள் பூஜா.
“அப்படியா? உனக்கு இங்க தெரிஞ்சவங்க இருக்காங்களா என்ன?” என்று கேட்டாள் பிரியா.
அதில் சட்டென்று அர்ஜூனின் முகம் நினைவுக்கு வரவும், “இவர் இங்க வேலைப் பார்க்கிறத தாத்தா, ஏன் நம்ம கிட்ட சொல்லவே இல்ல" என்று யோசித்தாள் பூஜா.
அர்ஜூனைப் பற்றிய சிந்தனையில் அவள் அப்படியே நின்றிருக்க, “ஏய் பூஜா. என்னாச்சு? உன்கிட்ட தான கேட்டேன்" என்றாள் பிரியா. “ஆ..ங் அது ஒன்னும் இல்ல. அண்ணா ஒருத்தவங்க இங்கத்தான் புரோபசரா இருக்காங்க" என்று சமாளித்தாள்.
“வாவ் சூப்பர். உன் அண்ணாவும், இங்கத்தான் ஒர்க் பண்றாரா? அப்போ நம்ம இனி யாருக்கும் பயப்பட வேண்டாம்” என்று மகிழ்ச்சியாய் கூறினாள்.
“எங்க அண்ணாவே ஸ்ட்ரிக்ட் தான்” என்று பூஜா விளையாட்டாய் சொல்ல, “என்னது” என்றாள் பிரியா.
“ஹேய்.. ஹேய் சும்மா பன்னுமா. இதுக்கப்புறம் பாரு. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து இந்த காலேஜ்ஜையே ரூல் பண்றோம்" என்று பிரியாவின் தோளில் கைப் போட்டப்படி கூறினாள் பூஜா.
“எதே ரூல்லா? நம்மளா? என்னமோ சொல்ற. ஆனாலும் உன் கூட இருக்கிறப்ப, எனக்கே கொஞ்சம் தைரியமாத்தான் இருக்கு. ஆமா உன் அண்ணாவ எனக்கு இன்ட்ரோ கொடுப்பத்தான?” என்றப்படி அவளுடன் நடந்தாள் பிரியா.
“இண்ட்ரோத்தான கொடுத்துட்டா போச்சு” என்றப்படி இவளும் வந்த முதல் நாளே ஒரு தோழியைப் பிடித்துக் கொண்டு ஆடிட்டோரியம் நோக்கி சென்றாள்.
அங்கே அவளின் கணவனோ, அவனுடைய மொத்த குடும்பத்தையும் திட்டி தீர்த்துக் கொண்டிருந்தான்.
“அவங்க மனசுல என்னத்தான் நினைச்சிட்டு இருக்காங்க. கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சதும் இல்லாம, இப்படி அவள நான் வேலைப் பார்க்கிற இடத்துக்கே அனுப்பி வச்சிருக்காங்க. இப்படி எல்லாம் பண்ணா, நான் அவளை அக்சப்ட் பண்ணிப்பேன்னா? நோ நெவர்" என்று பாத்ரூமில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துக் கொண்டிருந்தான் அர்ஜூன்.
அவனுக்கு என்னவோ கோவம். ஆனா. அது ஏன் என்றுத்தான் தெரியவில்லை. ஒரு வேளை அவள் இவனைப் பார்த்தவுடனே, ஓடி வந்து, கட்டிப் பிடித்து, “என்னங்க” என்று அழைத்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பானோ?
அதற்குள் அவன் மனசாட்சியோ, “இப்போ அவ இங்க வந்ததுல உனக்கென்ன பிரச்சன?” என்று கேட்டது.
“என்ன பிரச்சனையா? அவ எதுக்கு இங்க வரனும்? எனக்கு தெரியும். இதெல்லாம் எங்கம்மாவோட வேலையாத்தான் இருக்கும்” என்று அன்னையை திட்டியப்படி தன் யோசனையில் மூழ்கியிருந்தான்.
அன்னேரம் அங்கு வந்த மாதவன், இவனைப் பார்த்து, “இவனுக்கு என்னாச்சு? காலையில வர்றப்ப கூட நல்லாத்தான வந்தா. இப்போ எதுக்கு குட்டி போட்ட பூன கணக்கா, பாத்ரூம்ம சுத்திட்டு இருக்கான்” என்றப்படி, அவன் தோளில் கையை வைத்தான்.
அதில் சட்டென்று திரும்பிய அர்ஜூனோ, அவனைப் பார்த்து முறைக்க, இவனோ “என்ன சார்? காலையில வாக்கிங் போக மறந்துட்டீங்களா? இப்படி பாத்ரூம்ல அங்கையும், இங்கையும் நடந்துட்டு இருக்கீங்க?” என்று கேட்டான்.
அவனின் சீண்டலில். சட்டென்று அவன் சட்டையைப் பிடித்து இழுத்தவன், “எல்லா பிரச்சனைக்கும் காரணமே நீ தாண்டா. உன்னை அடிச்சாத்தான் எல்லாம் சரியா வரும்" என்று அவன் மூக்கிலேயே ஓங்கி குத்தினான் அர்ஜூன்.
“ஐயோ கொலை. கொலை” என்று மாதவன் கத்த, “வாயை மூடுடா” என்று அவன் வாயையும் மூடினான் அர்ஜூன்.
“டேய் எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்டா. நான் வேற வீட்டுக்கு ஒரே பிள்ளை டா” என்றான் மாதவன்.
அதில் அவன் சட்டையை விட்டவன், “போடா” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.
“இவனுக்கு என்னாச்சு? திடீர்னு காத்து கருப்பு எதுவும் அடிச்சிருச்சா?” என்று புலம்பியப்படி தன்னுடைய சட்டையை சரி செய்தான் மாதவன்.
அங்கே பூஜாவும், பிரியாவும் ஒரு வழியாக கல்லூரியையே சுற்றி விட்டு ஆடிட்டோரியம் சென்றமர்ந்தனர்.
“நல்ல வேளை இடம் கிடைச்சிச்சு” என்றாள் பிரியா. பூஜாவோ, சுற்றி அர்ஜூன் எங்கும் தெரிகிறானா? என்று பார்த்தாள்.
“ஹேய் என்ன? யாரை தேடுற?” என்று கேட்டாள் பிரியா. “தெரிஞ்ச ஒருத்தரை தேடுறேன்" என்றாள் பூஜா.
“யாரு உன் அண்ணாவா?” என்று கேட்டாள் பிரியா. “ம் இல்ல உன்னோட அண்ணாவ தேடுறேன்" என்றபடி தேடியவளின் கண்ணில் வந்து விழுந்தான் அர்ஜூன்.
பிரின்சிபல் கல்லூரியைப் பற்றி பேசிக் கொண்டிருக்க, அர்ஜூன் மேடையின் கீழ் விறைப்பாக நின்றுக் கொண்டிருந்தான்.
“என்னடி சொல்ற? எனக்கு அண்ணாவா? நான் எங்க வீட்டுக்கு ஒரே பொண்ணு” என்றாள். ஆனால் அது எங்கே அவள் காதில் விழுந்தது? அவள் தான் அவள் பேசுவதை காதில் வாங்காமல், அர்ஜூனைத் தான் ஆராய்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சைட்டடித்தாளா? என்று கேட்டால் அதற்கும் பதில் இல்லை. ஆனால் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனையே உச்சி தொட்டு பாதம் வரைப் பார்த்தாள்.
திருமணத்துக்குப் பின் அவனை இப்படி எல்லாம் நேரடியாய் பார்த்திருக்க கூட அவன் சந்தர்ப்பம் கொடுத்திருக்கவில்லை. டார்க் ப்ளூ கலர் ஷேர்ட், பிளாக் பேண்டில் பார்மலாக நின்றிருந்தவனை சட்டென்று யாராவது பார்த்தால், கல்லூரி மாணவன் என்றே சொல்லிவிடலாம்.
முகத்தில் புன்னகைக்கான தடயம் தான் சுத்தமாய் இல்லை. அதுவே அவனை சற்று ஸ்ட்ரிக்ட் வாத்தியாக அவள் கண்ணுக்கு காட்டியது.
“அன்னிக்கு வேஷ்டி சட்டையில பார்த்தத விட, இந்த பார்மல் பேண்ட், ஷர்ட்ல ஸ்மார்ட்டாவே இருக்காரு” என்று அவள் உள் மனம் கவுண்டர் கொடுக்க, “என்னடி சைட்டடிக்கிறீயா?” என்று மனம் கேள்வி கேட்டது.
“ச்சே ச்சே இல்லையே. ஜஸ்ட் அவரைப் பார்த்தேன். அவ்வளவுத்தான்” என்று பதில் கொடுத்தாள். அப்போதும் கூட அவள் பார்வையை திருப்பவெல்லாம் இல்லை. அவனைப் பற்றி ஆராய முயற்சித்தாளோ? என்னவோ அவனைப் பார்த்தாள்.
இப்படி அவள் அர்ஜூனையே பார்த்துக் கொண்டிருக்க, அங்கே அவனுக்கு ஏதோ சட்டென்று தோன்ற, வேகமாக பூஜா அமர்ந்திருந்த பக்கம் பார்வையை திருப்பினான்.
அவன் சட்டென்று திரும்பவும், அதை எதிர்பார்க்காதவள், உடனே வேகமாக பிரியாவின் மடியில் ஒளிந்துக் கொண்டாள்.
அவளின் செயலில், “ஹேய் என்னாச்சு?” என்று பிரியா கேட்க, “அது வர்றப்ப, புரோபசர்னு தெரியாம, ஒருத்தர் கிட்ட வம்பு பண்ணிட்டேன். அதான்" என்றாள்/
“எதே? என்னடி சொல்ற? புரோபசர் கிட்ட வம்பு பண்ணிட்டீயா? அதுவும் வந்த முதல் நாளேவா?” என்று பயத்துடன் பிரியா கேட்க, “தெரியாமத்தான் நடந்திச்சு” என்றாள் பூஜா.
“அடிப்பாவி. இப்படியா பண்ணுவ? ஒரு வேளை அவர் நம்மளோட டிபார்ட்மெண்டா இருந்தா என்னப் பண்ணுவ?” என்று கேட்டாள் பிரியா.
“அதான் உன் அண்ணா இருக்கார்தான? அவர் பார்த்துப்பாரு" என்றாள் பூஜா.
“ஹேய் பயத்துல மாத்தி சொல்ற பூஜா. என் அண்ணன் இல்ல உன் அண்ணன் தான் இங்க புரோபசரா வேலைப் பார்க்கிறாரு" என்றாள் பிரியா.
“உன் அண்ணனும் இங்கத்தான் பார்க்கிறாரு" என்றாள் பூஜா. “ஹேய் நான் ஒரே ஒரு பொண்ணு தான். எனக்கு அண்ணாலாம் இல்ல" என்று மீண்டும் கூறினாள் பிரியா.
அதை சற்றும் காதில் வாங்கிக் கொள்ளாதவள், அர்ஜூன் வேறு பக்கம் திரும்பவும், பிரியா மடியில் இருந்து எழுந்தாள்.
இப்போது அவன் மேடையில் கவனம் பதித்திருக்க, இப்போது மீண்டும் அவனைப் பார்க்க ஆரம்பித்தாள். முன்பு போலவே விட்ட இடத்தில் இருந்து அவனைக் கவனிக்க ஆரம்பித்தாள்.
அளவான மீசை, ட்ரிம் செய்யப்பட்ட தாடி, இடது கையில் ஒரு வாட்ச். வலது கையில் காப்பு அணிந்திருப்பான் என்பது இவளுடைய சிந்தனை. ஆனால் அவனோ முழு கை சட்டையை அளவோடு மடித்து விட்டிருக்க, அந்த காப்பு இவள் கண்ணுக்கு தெரியவில்லை. ஆனால் அன்றைக்கு என்று பார்த்து வழக்கத்தை விட சற்று தாராளமான அழகுடனே இருந்தான்.
“சொந்த ஹஸ்பண்டையே, இப்படி யாரையோ சைட் அடிக்கிற மாதிரி சைட் அடிக்கிறவ நீயாத்தான் இருப்ப" என்று அவளுடைய மனசாட்சி அவளை காரி துப்பியது.
“ஹலோ சைட் எல்லாம் அடிக்கல. ஜஸ்ட் ரொம்ப நாளாச்சேன்னு பார்த்தேன் அவ்வளவுத்தான். மத்தப்படி, இந்த பூஜா எல்லாம் யாரையும் சைட் அடிக்க மாட்டா” என்று தனக்குத் தானே வீராப்பாக சொல்லிக் கொண்டாள் பூஜா.
“ஹேய் என்னடி இது? பர்ஸ்ட் டேவே இப்படி தூங்க வைக்கிறாங்க" என்று உழுப்பினாள் பிரியா.
“உன்னை யாரு பேசுறதை கவனிக்க சொன்னா? ஏதாச்சும் நல்ல பையனா பார்த்து சைட் அடிக்க வேண்டியது தான?” என்றாள் பூஜா.
(எதே? ஏம்மா. உன்னையா, அமைதின்னு, அந்த வாத்தி நம்பிட்டு இருக்கான்? ஐயோ பாவம் பிரண்ட்க்கு ரொம்ப நல்ல ஐடியா கொடுக்கிறம்மா. அதான, என்னிக்கு என் ஹீரோயின் எல்லாம் அமைதியா இருந்திருக்காங்க. ஆனாலும் நீ பண்றதெல்லாம் ரொம்ப ஓவர்ம்மா.இந்த புள்ளையோட உண்மையான சுயரூபம் மட்டும் நம்ம சாருக்கு தெரிய வரனும். அப்போ இருக்கு)
“எதே சைட்டா? போவீயா? எங்கம்மாலாம், என்னை காலேஜூக்கு அனுப்புறதுக்கு முன்னாடி ஆயிரம் சத்தியம் வாங்கிட்டுத்தான் அனுப்புனாங்க தெரியுமா. அந்த தப்பெல்லாம் நான் பண்ண மாட்டேன் பா” என்று கூறினாள் பிரியா.
“க்கும் நீ எல்லாம் வாழ்றதே வேஸ்ட். நான்லாம் காலேஜ் வந்ததே கண்ணுக்கு குளிர்ச்சியா நாலு பேர சைட் அடிக்கலாம்னுத்தான்" என்றாள் பூஜா.
“எதே? உங்க வீட்டுல ஒன்னும் சொல்ல மாட்டாங்களா?” என்று பிரியா கேட்க, “நான் என்ன லூசா? நான் எதுக்கு இதெல்லாம் எங்க வீட்டுல சொல்லப் போறேன்” என்று கிண்டலாய் கேட்டாள்.
“ஆ.ங் அவங்களுக்கு தெரிஞ்சிட்டா, வருத்தப்படுவாங்கத்தான” என்று அப்பாவியாய் கேட்ட பூஜாவை, ஒரு பார்வை பார்த்தவள், “சைட்டடிக்கிறதே கிரைம்னு நினைச்சிட்டு இருக்கிற நைண்டீஸ் கிட்டா நீ? நம்மளாம் டூ கே கிட். சோ ரிஸ்க் எடுக்கிறதுக்கெல்லாம் பயப்படக் கூடாது” என்று சொல்லிய பூஜா சுற்றி வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்.
“அப்போ அதெல்லாம் தப்பு இல்லையா?” என்று இவள் கேட்க, “ம் தப்பாவே இருந்தாத்தான் இப்போ என்ன? அதையும்த்தான் கொஞ்சம் பண்ணிப் பாரேன்” என்றாள் பூஜா.
“எதே? இல்ல இல்ல. இதெல்லாம் தப்புத்தான் நான் பண்ண மாட்டேன்” என்று பிரியா மீண்டும் மேடையைப் பார்க்க ஆரம்பித்தாள்.
“உன்ன எல்லாம் திருத்த முடியாது” என்று அவளும் சுற்றி வேடிக்கைப் பார்க்க, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யா. பணக்கார வீட்டுப் பையன். அவன் அப்பாவின் பெயரை வைத்தே ஒரு கூட்டத்தை அந்த காலேஜில் உருவாக்கி வைத்திருந்தான்.
அவன் நல்லவனா? இல்லை கெட்டவனா? என்பது அவனுக்கே தெரியாது. ஆனால் நினைத்ததை அடைந்து பழக்கப்பட்டவன். இதுவரை அவன் ஆசைப்பட்டு ஒரு பொருள் கிடைக்காமல் போனதே இல்லை. அதனால் இதுவரை அவன் கெட்டவன் அவதாரம் எடுக்க வேண்டிய சூழல் அமைந்திருக்கவில்லை. ஆனால் அப்படியே இருக்குமா? இல்லை அவனுக்குள் இருக்கும் குட்டி சாத்தான் எல்லாம் வெளியில் வருமா? விதியின் கையில்.
(அட ஏண்டா ஏற்கனவே அதுங்க ரெண்டும் என்ன ரூட்டுல சுத்துதுன்னே தெரியல. இதுல நீ வேற . சரி என்னத்தான் நடக்குதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. பெஸ்ட் கமெண்ட்ஸ பேனர்ல போஸ்ட் பண்ணிருக்கேன். சோ உங்க கமெண்ட்ஸும் அதுல வரலாம். சோ அத செக் பண்ணிக்கோங்க. அப்புறம் மறக்காம ரேட்டிங் கொடுத்திடுங்க)
தொடரும்
Indhu Mathi
super 👌
Shree Ram
பூஜா சூப்பர் 🥰🥰🥰 இப்படி தான் இருக்கானும்👏👏💝💕💖💖💖💖💖💖💕💕💕
Ammu Sathish
சூப்பர் 🥰🥰பூஜா நீ நடத்து.. இனி தான் அந்த வாத்திக்கு இருக்கு பாவம் உன்னை கட்டிக்கிட்டு என்ன பாடு பட போறானோ… இன்னைக்கு எபில பூஜா பிரியாவை சைட் அடிக்க சொன்ன சீன் தான் சூப்பர்… இந்த பொண்ணு என்ன இப்படி இருக்கா.. ஏம்மா பூஜா நீ அமைதியா இல்ல அவன் முன்னாடி அமைதியா நடிக்கிறியா? 🥰❤
Vedha Hani
அதான ஹீரோயின்ல அமைதி இல்லையே உங்க ஸ்டோரிலன்னு நெனச்சேன், இதோ ஆரம்பிச்சுட்டாலே ஆட்டத்த, ஆனா இத வாத்தி பாத்தா எப்டி ரியாக்ட் பண்ணுவான்னு தெரியல🔥🔥🔥🔥🔥🔥🔥பூஜா
Devi Saravanan
super sis ❤️❤️❤️❤️❤
Keerthi S
pooja nee kalaku 🤣
Santhanalakshmi S
super sissymaa🎉🎉🎉dai madhava unna nenacha romba pavama iruku da🤣🤣🤣arjun kita adivangiye kali ayduva pola🤭🤭🤭…. arjun sire mind la ena thinking dhan odudhu nu theriyalaye🤔🤔🤔 pooja ma unna oruthan romba amaidhinu nenachtu irukan😂😂😂but ne namma thalaivar shinchan ku tough kudupa pola🤣🤣🤣🤣…. pooja ma hubby ya site adikara…. priya romba payandha pullaiya irupa polaye site ku ipdi payapadura🤭😂🤣….aarambame villain entry ah mr. aadhi pathu kavanama irunga😁😁😁