அர்ஜூன் அவளிடம் பேச வந்த விஷயத்தை பேசவே விடாது அடுத்த நாளும் சென்றிருந்தது. பிரியாவோ பூஜாவிடம், “நீ ஏன் இப்படி பண்ற? சும்மா எதுலையாச்சும் கலந்துக்கோ. தேவையில்லாம அர்ஜூன் சார்கிட்ட பிரச்சன வச்சிக்காத” என்றாள்.
“ஹேய் அதான் அவரே அதுக்கப்புறம் கேட்கலத்தான?” என்று பூஜா சொல்ல, அதை பிரதன்யா கேட்டு விட்டாள்.
அதற்குள் அர்ஜூனுமே வந்திருக்க, அனைவரும் புத்தகத்தை திருப்பினர். பிரதன்யா எழுந்து, “சார் கார்னிவல் ப்ரோகிராம் பத்தி டிப்ஸ் சொல்றதா சொல்லிருந்தீங்க” என்று நினைவுப் படுத்தினாள்.
“ஆமால்ல” என்றவனும் “சரி ஒவ்வொரு பேட்ஜா வாங்க” என்று சொல்லியப்படி இருக்கையில் சென்றமர, பூஜாவோ இப்போது கன்னத்தில் கை வைத்தப்படி அவனைப் பார்க்க ஆரம்பித்திருந்தாள்.
ஏனெனில் அவளைத் தவிர மீதி அத்தனைப் பேருக்குமே வேலை இருந்தது. அர்ஜூனும் ஒவ்வொருவருக்கும் விளக்கம் அளித்துக் கொண்டிருக்க, “இவர் கொஞ்சம் ஓவர் ஸ்மார்ட் தான். பட் இன்னுமே கேசுவல் வியர்ஸ்லாம் போட்டா, செம்ம ஹேண்ட்சம் லுக்ல இருப்பாரு. நெக்ஸ்ட் டைம் ஷாப்பிங் போறப்ப, ரெண்டு செட் எடுத்துக் கொடுக்கனும்” என்று யோசித்துக் கொண்டாள்.
எதார்த்தமாய் நிமிர்ந்தவனின் பார்வையில், அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது புரிய, ஒரு நொடி அவள் பார்வையில் தடுமாறியவன், அடுத்த நொடியே, “பூஜா. உங்க ஒர்க்க பாருங்க” என்றான்.
அதற்குள் பிரதன்யாவோ, “அவத்தான் எதுலையுமே கலந்துக்கலையே” என்று கிண்டலாய் தோழியிடம் சொல்வது போல் சத்தமாய் போட்டுக் கொடுத்தாள். அப்போதே அவனுக்கு அந்த விஷயமே நினைவுக்கு வந்தது.
அதில் அர்ஜூன் “பூஜா கம் பிரண்ட்” என்றான். “ஐயோ போட்டுக் கொடுத்துட்டாளே சகுனி. வீடுன்னா ஈஸியா சமாளிச்சிடுவேன். கிளாஸ் ரூம்ல வச்சி என்னப் பண்றது?” என்று புலம்பியப்படி அவனின் முன்னே வந்து நின்றாள்.
“அன்னிக்கே சொன்னேன் தான? இன்னும் எதுக்கு எதுலையும் நேம் கொடுக்கமா இருக்க?” என்றான். “ஆ..ங் அது வந்து சார். அது. ஆ..ங் இன்னும் முடிக்க வேண்டிய அசைன்ட்மெண்ட் எல்லாம் பெண்டிங் இருக்கு சார். அதான் இந்த கேப்ல அத கொஞ்சம் முடிச்சிடுவேன்” என்றாள்.
அதில் அவளையே புருவம் உயர்த்திப் பார்த்தவன், “மீதி பேரும் உன் கூடத்தான படிக்கிறாங்க. அப்படி அசைன்மெண்ட்ஸ் முடிக்கனும்னா, அத வீட்டுல தூங்காம உட்கார்ந்து எழுதி முடிங்க. இப்போ நீ ஏதாச்சும் ஒன்னுல ஜாயின் பண்ணித்தான் ஆகனும். ஆல்ரெடி லேட்டாயிருச்சி. சோ. நானே நீ எதுல சேரனும்னு சொல்றேன். இண்டர்வல்க்கு என் கேபின் வா” என்றான்.
“போச்சு போ, இன்னிக்கு வாத்தி ரைட் ஸ்டார்ட்” என்று தனக்குள்ளே அவள் புலம்ப, அதற்குள், பெல்லும் அடித்திருந்தது. அதில் அவனோ, “ஒகே ஸ்டூடண்ட்ஸ். கார்னிவல் பிராஜக்ட்க்கு ஹெல்ப் பண்றதுக்குன்னே ஸ்டாப் அலாட் பண்ணியிருக்கோம். சோ அவங்க ஹவர்ல, நீங்க கேட்டுக்கோங்க” என்று சொல்லியவன் பூஜாவையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, அங்கிருந்து கிளம்பி சென்றான்.
இப்போது பிரதன்யாவோ, “இதுக்குத்தான் எப்பவுமே நம்மத்தான் ஸ்பெஷலா இருக்கோம்னு நினைச்சிக்க கூடாது” என்று நக்கலாய் சொல்லிவிட்டு நகர, “ஹேய், நீ சொன்னாலும் சொல்லனாலும் நான் ஸ்பெஷல் தான். பாக்குறீயா?” என்றாள் பூஜா.
அதில் பூஜாவைப் பார்த்தவளோ, “எது? சார்கிட்ட திட்டு வாங்குறதுலையா?” என்று படு நக்கலாய் அவள் கேட்க, “சரி, இப்போ நான் எந்த ப்ராஜக்ட்லையும் கலந்துக்காமலே, அர்ஜூன் சார பாராட்ட வச்சிட்டா, என்னப் பண்ணுவ?” என்று கேட்டாள்.
“என்ன? சேலஞ் பண்றீயா?” என்று கோவமாய் இவள் கேட்க, “ம் அப்படியும் வச்சிக்கோ” என்று இவள் நக்கலாய் பதில் சொல்ல, “அதையும் பாக்கலாம்” என்று சொல்லிவிட்டு பிரதன்யா சென்றாள்.
இப்போது பிரியாவோ, “ஹேய் அவகிட்ட என்ன சொல்லிட்டு இருக்க? அதெப்டி நீ எதுலையுமே கலந்துக்காம அர்ஜூன் சார் பாராட்டுவாரு?” என்று திருப்பிக் கேட்டாள்.
“ம் லெட்ஸ் வெயிட் அண்ட் வாட்ச்” என்று பூஜா சொல்ல, அங்கே அர்ஜூனோ மாதவ்வை திட்டிக் கொண்டிருந்தான்.
“கூடவே சுத்த தெரியுதுல்ல. அன்ஹைஜீனிக் புட் எல்லாம் பார்த்து பார்த்து வாங்கி கொடுக்கிறல்ல. ஆனா தேவையான விஷயத்த எல்லாம் சொல்ல மாட்டீயா” என்று முறைத்தான்.
“என்னடா நான் சொல்ல? இப்போ எதுக்கு நீ என்ன டீ கூட குடிக்க விடாம திட்டிட்டு இருக்க” என்று பாவமாய் கேட்டான். “ச் சும்மா தங்கச்சி தங்கச்சின்னு சொன்னா மட்டும் பத்தாது. அவ கிளாஸ்ல என்ன பண்ணிட்டு இருக்கா? அதெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கனும்” என்று கத்தினான்.
“ரைட்டு. பூஜா என்னமோ பண்ணி வெச்சிருக்கா. அதுக்குத்தான் இவன் இந்த கத்து கத்திட்டு இருக்கான்” என்று தனக்குள் சொல்லியவன், “செரிடா இன்னிக்கு வீட்டுக்கு போயி கேட்டுக்கிறேன் இப்போ ஆள விடு” என்றப்படி அங்கிருந்து சென்றிருந்தான் மாதவ்.
அங்கே பூஜாவோ அப்போதுத்தான் அர்ஜூனைப் பார்க்க அங்கு வந்துக் கொண்டிருந்தாள்.
அவனைப் பார்த்ததுமே, “என்ன அண்ணா? உங்க பிரண்ட் உங்கள நல்லா பாராட்டுனாரு போல” என்று கிண்டலாய் கேட்டாள்.
“அடிப்பாவி! ஒழிஞ்சு நின்னு கேட்டீயா?” என்று அவன் கேட்க, “அட போங்கண்ணா. அவர் கத்துற சத்தம் தான் இங்க வரைக்கும் கேட்குதே” என்று கிண்டலாய் கூறினாள்.
“கிண்டலா பண்ற? உள்ளப் போ. அவன் உன்ன கத்துறது எங்க கேட்குதுன்னு நானும் பார்க்குறேன்” என்று சொல்லியப்படி அவன் அங்கிருந்து சென்றான்.
அதில் இவளோ, “ஓஹோ. அப்போ நம்ம வாத்தி சூடாத்தான் இருக்கு போலையே. அப்போ எப்படி சமாளிக்கிறது?” என்று ஒரு நொடி யோசித்தவள், அடுத்த நொடியே முகத்தை பவ்வியமாய் வைத்துக் கொண்டு, “எக்ஸ் கியூஸ் மீ சார்” என்றழைத்தாள்.
அதில் அர்ஜூனோ, “உள்ள வா” என்றழைக்க, அவளோ, “சொல்லுங்க சார். என்ன எதுக்கு வர சொன்னீங்க?” என்று கேட்டாள்.
அவளின் கேள்வியில், “ஏன் கிளாஸ்லையே சொல்லிட்டுத்தான வந்தேன். அதென்ன எல்லாரும் பேரைக் கொடுத்திருக்காங்கத்தான? உனக்கு மட்டும் என்ன வந்திச்சு?” என்று கோவமாய் கேட்டான்.
“அதான் எல்லாரும் பேர் கொடுத்திருக்காங்களே சார். நான் மட்டும் தனியா என்னப் பண்ணப் போறேன்?” என்று கேட்டாள். “ச் என்ன பேசுற நீ? எல்லாரும் கொடுத்தா, நீ கொடுக்க கூடாதா?” என்றான்.
“அட என்ன சார்? இப்போ இதுல கலந்துக்கிட்டு நான் என்னப் பண்ணப் போறேன்?” என்று அவள் கேட்க, “ச் பூஜா” என்று பல்லைக் கடித்தான்.
“சார் கோவப்படாதீங்க. நான் எதுக்கு கலந்துக்கல தெரியுமா?” என்று கேட்டாள். “ம் வர வர உனக்கு சோம்பேறித்தனமும், அசால்டும் கூடிப்போச்சு. அதான்” என்றான்.
“சார் பேஸிக்கலி நான் கொஞ்சம் அசால்டுத்தான். அதுக்குன்னு சோம்பேறிலாம் ஒன்னும் இல்ல” என்று அவள் முகத்தை சுருக்கி உதட்டை சுழித்தாள்.
அவளின் செயலில், மனம் ஒரு நொடி தடுமாற, இருந்தும் அதை இழுத்துப் பிடித்தவன், “ஒழுங்கா நான் சொல்ற டாபிக்கு ப்ரீபர் பண்ணு” என்றான்.
“ம்ஹூம்” என்று அவள் தலையாட்ட, “பூஜா” என்று முறைத்தான். “சார் உங்களுக்காகத்தான் நான் கலந்துக்கல” என்றாள்.
“என்ன? எனக்காகவா? என்ன உளறிட்டு இருக்க?” என்று அவன் கேட்க, “ஆமா சார் லாஸ்ட் டைம் என்னெல்லாம் நடந்திச்சுன்னு மறந்துட்டீங்களா?” என்று கேட்டாள் பூஜா.
அதில் அவனோ, “ச் இப்போ நீ என்ன சொல்ல வர்ற?” என்று எரிச்சலாய் கேட்க, “என்ன நம்புங்க சார்” என்றவள் அவனிடம் சிலவற்றை விளக்கி கூறினாள்.
அதை எல்லாம் கேட்டவனுக்கு அவள் சொல்வது சரி என்று தோன்றினாலும், “ச் இத நீத்தான் பண்ணனும்னு என்ன இருக்கு? நான் ஏதாச்சும் ஸ்டாப்ஸ வெச்சி பண்ணிக்கிறேன்” என்றான்.
“அட என்ன சார்? ஸ்டூடண்ட் சைக்காலஜி எல்லாம் ஒரு ஸ்டாப்ஸுக்கு புரியவே புரியாது” என்றான். “பூஜா” என்று அவன் முறைக்க, “அட இல்ல சார். எல்லாரும் உங்கள மாதிரியே புரிஞ்சிப்பாங்கன்னு சொல்ல முடியாது இல்லையா?” என்று கிண்டலாய் கூறினாள்.
அதில் அவனோ, “ரொம்ப பேசாத” என்றான். “சரி சார் நான் எதுவும் சொல்லல. பட். நான் சொன்ன மாதிரி பண்ணா, கண்டிப்பா, லாஸ்ட் டைம் நடந்த மாதிரி எந்த பிராபளமும் வராது” என்றாள்.
“ம் சரி ஆனாலும் திஸ் இஸ் தி லாஸ்ட் பூஜா. அடுத்த டைமும், இப்படியே நான் அக்சப்ட் பண்ணிப்பேன்னு நினைச்சிக்காத. முன்னாடியே சொன்ன மாதிரி, இது எல்லாமே உன்னோட இண்டர்னஸ் மார்க்ஸ அபெக்ட் பன்ணு. சும்மா நைண்டி பர்ஷண்டேஜ் எடுத்து காமிக்கிறேன்னு சொன்னா மட்டும் பத்தாது. அதுக்கான விஷயத்த எல்லாம் சரியா பண்ணனும்” என்றான்.
“ஒகே சார். நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா நான் எல்லாத்துலையும் கலந்துக்கிறேன். பிராமிஸ்” என்று தன் கழுத்தைப் பிடித்துக் கொண்டு சொல்ல, அவளின் செயலில், “சரி போ” என்றான்.
“ம்” என்று தலையாட்டியவள், ஒரு அடி எடுத்து வைத்து பின் மீண்டும் அவன் பக்கம் திரும்பி, “ஏன் சார்? நான் நைண்டி பர்ஷண்டேஜூக்கு கீழ எடுத்தா, நீங்க சந்தோஷப்படுவீங்களா?” என்றாள்.
“என்ன?” என்று அவன் குழப்பமாய் கேட்க, “ஆ.ங் இல்ல சார். நீங்க என்ன ஹாஸ்டல் துரத்தி விடுற பிளான்லத்தான இருக்கீங்க. அதனால நீங்க உங்க இண்டர்னஸ் மார்க்ல கை வைக்க மாட்டீங்கத்தான?” என்று சீண்டலாய் கேட்டாள்.
“உன்னை” என்றவன் அவளை அடிக்க எதையோ தேட, “ஐயோ இல்ல. இல்ல சார். ஐ நோ. என் அஜ்ஜூ சார் ரொம்ப ரொம்ப நல்லவரு. அப்படி எல்லாம் பண்ண மாட்டாரு. நான் கிளாஸூக்கு போறேன் சார். பாய் சார்” என்று சொல்லியப்படி அங்கிருந்து ஓடியிருந்தாள்.
ஓடுபவளைப் பார்த்தவனுக்கு முகத்தில் புன்னகை ததும்பியது. “வாய் வாய். எப்படித்தான் இவள இவங்க வீட்டுல வெச்சி சமாளிச்சாங்களோ” என்று சொல்லிக் கொண்டவன் வாய் விட்டு சிரித்தான்.
அவன் சிரிப்பதையே உலக அதிசயமாய் பார்த்த மாதவ், “என்கிட்ட மட்டும் அந்த கத்து கத்துனான். அந்தப் புள்ள வந்துட்டு போனா மட்டும் ஏதோ மந்திரிச்சு விட்டதுக்கணக்கா, தானா சிரிக்கிறான்” என்று சொல்லிக் கொண்டான்.
அதன் பின் அன்றைய ஒருவாரமும், ரிகர்சல், பிராக்டீஸ் என்று சென்றிருக்க, அதில் சந்தோஷமாக இருந்த ஒரே ஜீவன் பூஜா மட்டுமே. அத்தனைப் பேரையும் வேடிக்கைப் பார்ப்பதை மட்டும் வேலையாய் பார்த்தாள்.
இதோ அந்த கார்னிவல் தினமும் வந்திருந்தது. அதற்கு முன் தினம் ஆதியோ வெங்கட்டிடம், “என்னடா? நான் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்குத்தான. நாளைக்கு நான் சொல்ற டைம் எலெக்ட்ரிசிட்டி கட்டாகியிருக்கனும். நாளைக்குத்தான் அந்த அர்ஜூன் இந்த காலேஜுக்கு வர்ற கடைசி நாளா இருக்கும்” என்று அழுத்தம் திருத்தமாய் கூறினான்.
(டேய் ஏண்டா? ஏற்கனவே இந்த பூஜா என்னப் பண்ணப் போறான்னு தெரியல. இதுல, நீ வேற ஏதோ ஏழரை வேல இழுக்கப் போறன்னு தெளிவா தெரியுது. சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்புறம் பெஸ்ட் கமெண்ட்ஸ பேனர்ல போஸ்ட் பண்ணிருக்கேன். சோ உங்க கமெண்ட்ஸும் அதுல வரலாம். சோ அதையும் செக் பண்ணிக்கோங்க. அப்புறம் மறக்காம ரேட்டிங் கொடுத்திடுங்க)
தொடரும்…
Ammu Sathish
சூப்பர்… பூஜா மேல அர்ஜுன்க்கு லவ் வருதோ இல்லையோ readers க்கு பூஜா மேல லவ் இருக்கு 🥰❤️❤️❤️
Kowsi Ram
super
Mithra R
arjuna aadhi yedhachum panna namma pooja paathutaa iruppaa. andha aadhiku pooja yedho perusa panna poraalo
Keerthi S
irruku edho perusa sambavam irruku…
author ji evening time ley upload panunga epovum pls ❤
Devi Saravanan
super sis ❤️❤️❤️❤️❤
Ammu Gnanarajan
i think college la ellorukum therinjidumo arjun pooja marriage pathi. .