அடுத்த நாள் பூஜாவும், அர்ஜூனும் கிளம்பி கீழே வர, மாதவ்-ம் சரியாக அவர்களோடு லிப்டிற்குள் நுழைந்தான்.
“குட் மார்னிங்ண்ணா” என்று பூஜா சொல்ல, “குட் மார்னிங் டா. நைட்டெல்லாம் தூங்குனீயா? இல்லையா? பாரு கண்னெல்லாம் எப்படி சிவந்திருக்குன்னு?” என்றான் மாதவ்.
அதில் அவனை முறைத்தவனோ, மனதினுள், “அடேங்கப்பா. பெரிய டாக்டருன்னு இவனுக்கு நினப்பு” என்று உள்ளுக்குள் சொல்ல, அதற்குள் பூஜாவோ மாதவினை குனிய சொல்லி, அவன் அருகில் சென்று, “நைட்டெல்லாம் உங்க பிரண்ட் தூங்கவே விடல” என்றாள்.
“என்ன?” என்று கேட்டவன் அதிர்ந்து, அர்ஜூனைப் பார்க்க, அர்ஜூனோ, “அப்படி இவ என்ன சொன்னா? எதுக்கு இவன் இப்படி பாக்குறான்?” என்று குழப்பமாய் யோசித்தான்.
“இவனா?” என்று மாதவ் கேட்க, “என்ன இவனா? அவ என்ன சொன்னா?” என்று கேட்டான் அர்ஜூன்.
“அது” என்று மாதவ் ஆரம்பிக்கும் முன்னே, “அதொன்னும் இல்ல சார். நீங்க நேத்து நைட் என்ன தூங்க விடலத்தான. அதத்தான் சொன்னேன்” என்றாள் பூஜா.
சரியாக அன்னேரம் லிப்ட் கதவு திறந்திருக்க, அங்கே வெளியில் நின்றிருந்தவர்களுக்கும் அது கேட்டிருக்க, அவர்களுமே தங்களுக்குள் சிரித்துக் கொள்ள, அர்ஜூனோ. “ஹேய்” என்றப்படி அவளை இழுத்துக் கொண்டு தனியே சென்றான்.
அதைப் பார்த்து அங்கிருந்த பெரியவர் ஒருவரோ மாதவ்விடம் “என்னப்பா உன் பிரண்ட் எல்லாம் கல்யாணம் பண்ணிட்டான். நீ எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போற?” என்றார்.
“ம் உங்க பேத்தி வந்ததும் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று மாதவ் சொல்லிவிட்டு செல்ல. “ஸ்டுபிட்” என்று அவனை திட்டிவிட்டு லிப்டிற்குள் சென்றார்.
“பொண்னு கொடுத்தா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னா சொல்றேன்? இவனுங்க வீட்டு பொண்ண கேட்டா மட்டும் எரியுது” என்று முனுமுனுத்தப்படி வந்தான்.
அங்கே அர்ஜூனோ, பூஜாவிடம், “என்ன பேசிட்டு இருக்க?” என்றான். “என்ன சார்? நான் உண்மையத்தான சொன்னேன். நீங்கத்தான நோட்ஸ் எழுத சொல்லி என்ன தூங்க விடல” என்றாள்.
“ஹேய் அத போயி இப்படியா சொல்லுவ. அவங்க என்ன நினைப்பாங்க?” என்று கேட்டான் அர்ஜூன். “அவங்க என்ன நினைப்பாங்க?” என்று இவள் அப்பாவியாய் கேட்க, “அது” என்று சொல்ல வந்தவன் பின் அதை சொல்லாது, “ச் உனக்கு காலேஜூக்கு லேட் ஆகலையா?” என்றான்.
“ஆ..ங் இல்ல, அவங்க எதுக்கு சிரிச்சாங்க?” என்று வேண்டுமென்றே கேட்க, அதற்குள் மாதவ்-ம் அங்கு வந்திருந்தான்.
அவன் வேறு அர்ஜூனையே குறுகுறுவென்று பார்க்க, “ச் என்ன எதுக்கு பாத்துட்டு இருக்க? போ இவள கூட்டிட்டு கிளம்பு” என்று கடுப்பாய் கூறினான்.
“என்னையவே இன்னிக்கு நீத்தான் கூட்டிட்டு போகனும்” என்றான் மாதவ். “வாட்?” என்று இவன் கேட்க, “என் பைக் பஞ்சர்” என்றான்.
“அப்போ ஆட்டோ பிடிச்சு போ. என்னால எல்லாம் கூட்டிட்டு போ முடியாது” என்றான்.
“என்ன ஒன்னும் கூட்டிட்டு போ வேண்டாம். என் தங்கச்சிய மட்டும் கூட்டிட்டுப் போ” என்றான்.
அதில் அவனை அர்ஜூன் முறைக்க, அதற்குள் பூஜாவோ, “இல்லண்ணா. நம்ம ஆட்டோலையே போலாம்” என்றப்படி அவனுடன் நடக்க முயன்றாள்.
அதற்குள் அவள் கரத்தைப் பிடித்து நிறுத்தியவன், “அவன் ஆட்டோல வரட்டும். நீ என் கூட வா” என்றான். “ஆனா” என்று அவள் ஏதோ சொல்லப் போக, “காலேஜூக்கு லேட்டாகுது. ஒழுங்கா வா” என்றப்படி அர்ஜூன் முன்னே சென்றான்.
இப்போது மாதவ்வின் பக்கம் திரும்பியவளோ, “வண்டிய பஞ்சர்லாம் பண்ணல. ஜஸ்ட் ஏர் தான் ரிமூவ் பண்ணி விட்டேன். வாட்ச்மேன் அண்ணாட்ட சொல்லிருக்கேன். ஏர் பம்ப் கொடுப்பாரு. யூஸ் பண்ணிக்கோங்க” என்று சொல்லிவிட்டு அர்ஜூனின் பின்னால் ஓடினாள்.
“என்னது?” என்று அதிர்ந்த மாதவ்வின் மனமோ, “அப்போ காத்து போன டயரத்தான், பஞ்சராக்குனீயா?” என்று காரி துப்பியது. ஏனெனில், அவனுமே, அதே திட்டத்துடன் தான் காலையிலையே, பைக் முன் வீலை ஊசியால் குத்தி பஞ்சராக்கியிருந்தான். ஆனால் பூஜாவோ நேற்றே பைக்கை அவன் நிறுத்தும் போதே, பைக்கில் காற்றை இறக்கி விட்டிருந்தாள்.
இங்கே அர்ஜூனின் பைக்கில் பின் அமர்ந்தவளோ, “ஹாஸ்டல்ல விட மாட்டீங்கத்தான?” என்றாள்.
“ம் நைண்டி பர்ஷண்டேஜ் எடுப்பத்தான” என்றான். “அதெல்லாம் பக்கா சார்” என்று அவள் சொல்ல, அதில் கண்ணாடி வழியே அவளைப் பார்த்தவன், “ம் பாக்கலாம்” என்றப்படி பைக்கை ஸ்டார்ட் செய்தான்.
அங்கே ஆதியோ வெங்கட்டிடம், “அந்த சாருக்கு என்ன பிரச்சன? எதுக்கு தேவையில்லாம என் வழியில வர்றாரு” என்று கோவமாய் கத்திக் கொண்டிருந்தான்.
“அந்தாளுக்கு சும்மாவே நம்மள பிடிக்காது. இதுல நம்ம வேற ரிஜிஸ்டர் ஆபிஸ் வரைக்கும் போயி சிக்கியிருக்கோம். அதனாலத்தான், அவரு நம்மள சான்ஸ் கிடைக்கிறப்பலாம் மாட்டி விடுறாரு” என்றான்.
“இந்த டைம் அந்த கார்னிவல் அந்தாளுத்தான ஆர்கனைஸ் பண்றாரு” என்று கோவமாய் ஆதி கேட்க, “டேய் ஏதாச்சும் பிரச்சனைய இழுத்து வைக்காத. இன்னொரு தடவ பிரின்சிபல் முன்னாடி போயி நின்னா, சஸ்பென்சன் ஆர்டர கொடுத்திடுவாரு” என்றான்.
“எனக்கு சஸ்பென்ஸ் ஆர்டர் கொடுக்கிற தைரியம் எல்லாம் இருக்கா என்ன?” என்று நக்கலாய் கேட்டவன். அடுத்த நொடியே தீவிரமாய் யோசித்தான்.
“இல்லடா. அது” என்று ஏதோ சொல்ல வர, ‘இல்ல நான் முடிவு பண்ணிட்டேன். இந்த கல்சுரல்ல, அந்த அர்ஜூன்ன அவமானப்படுத்தி, அந்த பூஜா மனசுல நான் ஹீரோவ பதியிறேன். அவ முன்னாடித்தான என்ன அன்னிக்கு அடிச்சு அவமானப்படுத்துனான்” என்றான்.
நண்பனின் போக்கு சிறு அச்சத்தைக் கொடுதாலும், எப்படியும் அவன் சொன்னாலும் கேட்க மாட்டான். அதனால் அமைதியானான்.
இங்கே வழக்கம் போல், அர்ஜூன் அந்த கல்லூரி பஸ் ஸ்டாப்பிற்கு முன்பே அவளை இறக்கிவிட, அவளோ, “ஈவ்னிங் நான்” என்று ஏதோ சொல்ல வந்தாள்.
“இங்கேயே வெயிட் பண்ணு. நான் வந்து பிக் பண்ணிக்கிறேன்” என்று அழுத்திக் கூறினான்.
அதில் இவளும், “சரி சார்” என்று தலையாட்டினாள். ஏனோ அவளின் புன்னகை அவனை என்னமோ செய்தது. அதில் கிளம்ப நினைத்தவன், “பூஜா” என்றழைக்க, “என்ன சார்?” என்றாள்.
பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து அவளிடம் கொடுத்தவன், “வச்சுக்கோ” என்றான்.
அவளோ, “எதுக்கு சார்? அதான் அக்கவுண்ட்ல அமெளண்ட் இருக்கே” என்றாள்.
“இன்னிக்கு நெட் பேங்கிங் ஒர்க் ஆகாது. ஈவன் யுபிஐ பேமெண்ட்ஸ்-ம் ஒர்க் ஆகாது. அதனால தேவைப்படும். சோ வச்சிக்கோ” என்றான்.
“அப்படியா? ஆனா எந்த நியூஸ்லையும் சொல்லல” என்று இவள் கேட்க, “ம் அதான் இப்போ நான் சொல்லிட்டேண் தான. போ” என்றான்.
அவளோ இப்போது நகராது, “ச் போங்க சார்” என்று அவள் சலித்துக் கொள்ள, “என்ன?” என்றான். “இந்த ஹெல்மெட்ட கொஞ்சம் கழட்டியிருக்கலாம்” என்றாள்.
“ஏன்?” என்று அவன் கேட்க, “அது” என்றவள் சுற்றி ஒரு நொடி பார்த்துவிட்டு, அவன் ஹெல்மெட்டின் மேலையே முத்தமிட்டு, “தேங்க்ஸ் சார் யுவார் சோ சோ ஸ்வீட்” என்று சொல்லியப்படி அங்கிருந்து ஓடியிருந்தாள்.
ஹெல்மெட் அணிந்திருக்க, அவளின் உதட்டில் சிறு பகுதி மட்டுமே அவன் கண்ணின் கீழ் பகுதியில் உரசியிருக்கும். ஆனால் அந்த சிறு உரசலுக்கே, அவன் மனதில் எரிமலையின் தாக்கம். என்ன உணர்விது? அவளின் ஒவ்வொரு செய்கையிலும் அவன் தொலைந்துக் கொண்டிருந்தான்.
எந்தளவுக்கு என்றால், கல்லூரியில் பைக்கை நிறுத்திவிட்டு, ஸ்டாப் ரூம் சென்று அமர்ந்தவன் இடையில் அவனிடம் பேசிய, அவனுக்கு குட்மார்னிங் சொல்லியவர்க்ள் கூட அவன் மூளையில் பதியவில்லை.
எந்தப் பதிலும் பேசாமல் தான் வந்திருந்தான். வழக்கமாகவே அவன் பெரிதாய் யாரிடமும் சிரித்து பேச மாட்டான் என்பதால் அங்கிருப்பவர்களுக்கு வித்தியாசமாய் தெரியவில்லை.
கல்லூரி மணி அடிக்க, அப்போதே இவ்வுலகம் வந்தவனுக்கு, அப்போதுத்தான் இத்தனை நிமிடம் அமைதியாய் அமர்ந்திருப்பதே புரிந்தது.
“ச் என்ன அர்ஜூன் பண்ணிட்டு இருக்க?” என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டவன் இப்போது புரோபசர் மூடுக்கு மாறியிருந்தான்.
அப்போதுத்தான் அந்த ஸ்டூடண்ட் நேம் பட்டியல் அவன் கண்ணில் பட, “நேத்தே இத பத்தி அவகிட்ட பேசனும்னு நினைச்சேன்னே” என்றவன் நெற்றியை தேய்த்தான்.
அதன் பின் மதிய இடைவெளியில். பூஜாவைத் தவிர்த்து மீதி அத்தனைப் பேரும், ஏன் பிரியாவே கூட ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதாக பெயர் கொடுத்திருந்தாள்.
அதைக் கேட்டவனுக்கு இப்போது அதுவரை இருந்த இதம் எல்லாம் மறைந்து அவள் மீது கோவம் எட்டிப் பார்த்தது.
அதில் வீடு செல்லும் வரை கூட பொறுமை இல்லாதவன். அன்று மாலை அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு செல்லாது இடையில் இருந்த பார்க்கில் பைக்கை நிறுத்தினான்.
அவன் என்னவோ, அவளை திட்ட அழைத்து வந்திருந்தான். ஆனால் அதற்குள் அவளோ, “ஐயோ அஜ்ஜு சார்!. சூப்பர் நானே உங்க கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன். நீங்களே கரெக்டா கூட்டிட்டு வந்துட்டீங்க. இங்க விக்கிற காட்டன் கேண்டி செம்ம டேஸ்டீயா இருக்கும் தெரியுமா?” என்றவள் வேகமாய் அந்த பூங்காவை நோக்கி ஓடினாள்.
“என்ன? காட்டன் கேண்டீயா?” என்றவன் நிமிர்ந்து அந்த பூங்காவின் பெயரைப் பார்க்க, சிறுவர் பூங்கா என்று எழுதப்பட்டிருந்தது.
அதில் தன் நெற்றியை தேய்த்தவன் உள்ளே வரும் போது பூஜா அங்கிருந்த சிறுவர்களோடு சேர்ந்து அவர்களுக்கு போட்டியாய் விளையாட ஆரம்பித்திருந்தாள்.
அவளின் செயலில், “என்னப் பண்ணிட்டிருக்கா இவ? காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரியா பிகேவ் பன்றா? ஸ்கூல் கிட்ட விட மோசம்” என்று சொன்னாலும் கூட, அவள் அந்த சிறுவர்களுக்கு மத்தியில் ஓடியாடி விளையாடுவதைப் பார்க்க அவனுக்கு பிடித்திருந்தது.
அதில் அவளையேத்தான் வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். இடையில் வேறு அவள், “சார் நீங்களும் வறீங்களா?” என்று அழைத்திருக்க, அவன் முறைத்த முறைப்பில். “இல்ல சார். நீங்க அங்கேயே இருங்க” என்று நாக்கை நீட்டி சுழித்து சொல்லிவிட்டு மீண்டும் விளையாட ஆரம்பித்தாள்.
சில பல மணி நேரம் ஆகியும் அவள் அங்கிருந்து கிளம்புவதாகவே தெரியவில்லை. “ஏண்டா? அவள இங்கேயா கூட்டிட்டு வருவ?” என்று தன்னைத் தானே நொந்துக் கொண்டான்.
கடைசியாய் அவளுக்கு பிடிக்கும் என்று சொல்லிய அந்த காட்டன் கேண்டியை தேடி கண்டுப்பிடித்து வாங்கி வந்தவன், அதைக் காட்டித்தான் அவளை அழைத்தான்.
அதைப் பார்த்ததும், சிறுமியை போல் ஓடி வந்தவள், “வாங்கிட்டீங்களா?” என்று அவசரமாய் அவனிடம் இருந்து அவள் வாங்கிக் கொள்ள, “டைம் என்ன தெரியுமா?” என்று கேட்டான்.
“என்ன டைம் ஆனா என்ன? செம்மையா இருந்திச்சுல்ல. இன்னும் ஒரு கேம்” என்று விளையாட சென்றவளின் கையைப் பிடித்து நிறுத்தியவன், “டைம் ஆச்சு பூஜா. நம்ம கிளம்பலாம்” என்றான்.
அதில் அவளோ “சரி” என்றப்படி அந்த காட்டன் கேண்டியை சாப்பிடப் போக, “ச் பூஜா. பாரு எப்படி வேர்த்திருக்குன்னு. முதல்ல பேஸ் வாஸ் பண்னு” என்று அவன் தண்ணீரை எடுக்கப் போக, அதற்குள், “அதெல்லாம் இப்படி துடைச்சா போயிடும் சார்” என்றவள், அவன் சட்டையில் தன் முகத்தைத் துடைத்தாள்.
சத்தியமாய் அதை அவளிடம் இருந்து அவன் எதிர்பார்க்காமல் போக, அவளோ, வெகு மெதுவாய் அவன் சட்டையில் மொத்த வியர்வையும் துடைத்துக் கொண்டவள், “இப்போ ஒகேவா சார். சாப்பிடட்டா?” என்று கேட்க அவன் தலை வழக்கம் போல் தானாய் ஆடியது.
(இப்படி நீ தலையாட்டிட்டே இரு அர்ஜூன். உனக்கு புரியுதா? இல்லையா? அவ உன்ன கவுத்துட்டு இருக்காடா. சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். சரி அடுத்து என்னென்ன்னு அடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்புறம் பெஸ்ட் கமெண்ட்ஸ பேனர்ல போஸ்ட் பண்ணிருக்கேன். சோ உங்க கமெண்ட்ஸும் அதுல வரலாம். சோ அதையும் செக் பண்ணிக்கோங்க. அப்புறம் மறக்காம ரேட்டிங் கொடுத்திடுங்க)
தொடரும்…
Carunia Snehalatha
super ❤️❤️
Mithra R
ipdiye pona nalla dha irukum, again sanda mattum venaam
Devi Saravanan
super sis ❤️❤️❤️❤️❤
Anbu Anbu
சூப்பர்…
Subbu Lakshmi
இந்த பொண்ணு விளையாட்டா ஒவ்வொண்ணும் செய்யும் போது அவன் மனசுல இவளை பற்றிய தாக்கத்தை விதைச்சிட்டு தான் இருக்கா, மெல்ல மெல்ல அவனுக்குக்கே தெரியாம, அவமேல காதல் வந்துட்டு இருக்கு அர்ஜுனுக்கு
Ammu Sathish
சூப்பர்… பூஜா நீ இது எல்லாம் தெரிஞ்சு தான் பண்ணுறியா? 😊😊
Kowsi Ram
achoo vara vara poojava vida en kannuku arjun than cutea marrikittu varan😁😁😁
Ammu Gnanarajan
nalla samalikra pooja ne
Thiruviswa Viswa
😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😠😠
Keerthi S
epo marubadium vedhalam murunga maram erumo… aprm author ji maadhuku oru jodi podunga paavam la
Keerthi S
epo marubadium vedhalam murunga maram erumo… aprm author ji maadhuku oru jodi podunga paavam la
Nisha Nis
super da