வரம் – 43

பைக்கில் செல்லும் அர்ஜூனைப் பார்த்தப்படி நின்றிருந்த பூஜாவின் அருகில் வந்த பிரியா, “யாரு பூஜா அது?” என்றாள்.

அவளின் கேள்வியில், இப்போது அவள் பக்கம் திரும்பியவளோ, “எது?” என்று கேட்டாள்.

“அதான், இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, யார் கூடையோ நின்னு பேசிட்டு இருந்தீயே” என்றால் பிரியா.
“யாரு? நானா?” என்று இவள் திருப்பிக் கேட்க, “ஆமா. நான் தான் பார்த்தேன்னே” என்று பிரியா சொல்ல, “அப்படியா பார்த்தீயா? நான் யார் கூட பேசிட்டு இருந்தேன்?” என்று அவளையே திருப்பிக் கேட்டாள் பூஜா.

அவளின் கேள்வியில், “எதே? யாரா? ஹேய் நீத்தான பேசிட்டு இருந்த. அப்ப அது யாருன்னு உனக்குத்தான தெரியும்” என்று பிரியா குழப்பமாய் பூஜாவைப் பார்க்க, “ஆனா நீத்தான பார்த்தேன்னு சொன்ன. அப்போ உனக்கு தெரிஞ்சிருக்கும்த்தான” என்று அவளை இன்னுமே குழப்பினாள்.

“என்னது? எனக்கு தெரியுமா? ஹேய் என்ன சொல்ற நீ? நீ யாரோ ஒருத்தர்ட்ட பேசிட்டு இருந்ததத்தான் பார்த்தேன். ஆனா அது யாருன்னுலாம் நான் பாக்கல” என்றாள் பிரியா.

“ஐயோ! எவ்வளவு குழப்புனாலும் தெளிவா கேள்வி கேட்குறாளே. ம்ஹூம், இவள இன்னும் கேள்வி கேட்க விட்டா, நம்மளே உண்மைய சொல்லிடுவோம்” என்று தனக்குள்ளே பூஜா யோசிக்க, அதைப் பார்த்தவளோ, “ஹேய்! என்ன? உன்கிட்டத்தான கேட்குறேன்” என்றாள்.

“ஆ.ங் அது. யாருன்னு எனக்கும் தெரியல. சும்மா லிப்ட் கேட்டு வந்தேன்னா, அதான் தேங்க்ஸ் சொல்லிட்டு இருந்தேன்” என்றாள் பூஜா.

“என்ன சொல்ற நீ? லிப்ட் கேட்டு வந்தீயா? உனக்கு அறிவு இருக்கா? இல்லையா? இப்படியா யாருன்னு தெரியாதவங்க கூட பைக்ல வருவ” என்று அவளைத் திட்டினாள் பிரியா.

“ஹேய் தெரிஞ்சவங்க எப்படி லிப்ட் கேட்க முடியும்?” என்று பூஜா கேட்க, “ச் உனக்கு எல்லாத்துக்கும் விளையாட்டா போச்சு. ஏன் உன் அண்ணா இங்கத்தான ஒர்க் பண்றாரு. அவரு கூட வர வேண்டியதுத்தான” என்றாள்.

“ம் இதையேத்தான் நானும் என் அண்ணாக்கிட்ட சொன்னேன். ஆனா பாரு, உனக்கு இருக்கிற இந்த அக்கற கூட அவருக்கு இல்ல” என்று அவள் அப்பாவியாய் சொல்ல, இப்போது பிரியாவோ, “ச் பூஜா. அதுக்கு ஏதாச்சும் ஆட்டோ பிடிச்சு வர வேண்டியதுத்தான” என்றாள்.

“ஹேய்! இப்போ அதுக்காக, மறுபடியும் லிப்ட் கொடுத்தவர கண்டுப்பிடிச்சு, மறுபடியும் ரிட்டர்னா போக முடியும்?” என்றாள் பூஜா.

“அம்மா தாயே! நீ பண்ணாலும் பண்ணுவ. அப்படி எதுவும் பன்ணிடாத. வா” என்று அவளை இழுத்துக் கொண்டு கல்லூரிக்குள் சென்றாள் பிரியா.

பூஜாவோ, அர்ஜூன் எங்கும் தெரிகிறானா? என்று சுற்றிப் பார்த்தப்படியே வர, பிரியா பேசிய எதுவுமே அவள் காதில் விழவில்லை.

ஒரு கட்டத்தில், “ஹேய் நீ என் பேக்க கிளாஸ்ல வச்சிடு. நான் இப்போ வந்துடுறேன்” என்றப்படி ஓட முயன்றாள் பூஜா.

அதற்குள் அவள் பின்னே வந்த அர்ஜூனோ, “பெல் அடிக்கப் போகுது. இன்னும் கிளாஸுக்கு போகாம இங்க என்னப் பண்ணிட்டு இருக்கீங்க?” என்று கேட்டான்.

அவனின் குரலில், பூஜா வேகமாய் திரும்ப, பிரியாவோ, “ஐயோ சாரு” என்று ஒரு அடி பின்னே சென்றாள்.

அர்ஜூனின் பார்வை ஒரு நொடி பூஜாவைத் தொட்டு, பின் மீண்டும் பிரியாவை கேள்வியாய் பார்க்க, “ஆ..ங் சார். இந்தா கிளாஸுக்குத்தான் சார் போயிட்டு இருக்கோம்” என்றாள்.

“ம் சரி பர்ஸ்ட் ஹவர் யாரு?” என்று அர்ஜூன் கேட்க, “அது” என்று ஒரு நொடி பிரியா யோசிக்க, பூஜாவோ அர்ஜூனை மட்டும் தான் வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ப்பா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எவ்ளோ அழகா சிரிச்சிட்டு இருந்தாரு. இந்த காலேஜூக்குள்ள வந்ததும், அப்படியே கஞ்சிய குடிச்ச மாதிரி இப்படி விறப்பா நின்னுட்டு இருக்காரு” என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டாள்.

அர்ஜூனோ பூஜாவின் பக்கம் திரும்பவே இல்லை. பிரியாவோ, “ஆ..ங் சார் அது இப்போ சுந்தரம் சார் கிளாஸ் சார்” என்றாள்.

“ம் சரி! டைமுக்கு கிளாஸுக்கு போங்க” என்று சொல்லிவிட்டு அர்ஜூன் அவர்களை கடந்து ஸ்டாப் ரூமிற்குள் சென்றான்.

அப்போதுத்தான் பிரியா அர்ஜூனுடைய சட்டையைப் பார்க்க, இப்போது அவளோ, “ஏன் பூஜா? உனக்கு லிப்ட் கொடுத்தவரு கூட, இந்த கலர் சட்டைத்தான போட்டிருந்தாரு” என்றாள்.

அவளின் கேள்வியில், சட்டென்று இவ்வுலகம் வந்தவள், “என்ன?” என்று கேட்க, “இல்ல. உன் கூட பேசிட்டு இருந்தவரு கூட பாக்க அர்ஜூன் சார் மாதிரித்தான இருந்தாரு” என்றாள்.

அவளுடைய பேச்சில், “ஏண்டி? போர்டுல கொஞ்சம் சின்னதா எழுதி போட்டிருந்தா, அந்த எழுத்து என்னென்னு என்கிட்ட கேட்ப. ஆனா, அவ்வளவு தூரத்துல இருந்து பார்த்த ஒருத்தர் சட்ட கலர் உனக்கு தெரிஞ்சிடுச்சா?” என்றாள்.

“ஹேய்! இல்ல எனக்கென்னமோ இந்த கலர் மாதிரித்தான் தெரிஞ்சிச்சு” என்று பிரியா சொல்ல, “ஹேய் தூரத்துல இருந்து பார்த்த உனக்கு தெரியுமா? இல்ல பக்கத்துல உட்கார்ந்து வந்த எனக்குத் தெரியுமா?” என்றாள்.

“சரி சரி விடு. நான் தான் தெரியாம சொல்லிட்டேன்னோ என்னமோ? ஆனாலும் அர்ஜூன் சார் எல்லாம் யாருக்காச்சும் லிப்ட் கொடுப்பாரா என்ன?” என்று சொல்லியப்படி பிரியா கிளாஸுக்குள் செல்ல, பூஜாவோ “அவர் ஒயிப் என்னையவே ஐ சி யு ல அட்மிட் பண்ற ஸ்டேஜ்லத்தான் பைக்ல ஏத்துவாரு. இதுல மத்தவங்களுக்கு கொடுத்துட்டாலும்” என்று சொல்லிக் கொண்டாள்.

அவள் அங்கேயே நிற்கவும், “ஹேய் இன்னும் ஏன் அங்க நிக்குற? உள்ள வா” என்று பிரியா இழுத்துக் கொண்டு சென்றாள்.

அன்றைய தினம் பெரிதாய் எந்த சச்சரவும் இன்றி ஒரு வித அமைதியோடே செல்ல, பூஜா வழக்கமான துள்ளலுக்கு மீண்டிருந்தாள்.

அதில் பிரியாவுக்கும், விஷ்வாவுக்கும் மகிழ்ச்சி என்றால், இன்னும் சிலருக்கு அத்தனைக் கடுப்புத்தான். அந்த கடுப்பை இன்னும் அதிகமாக்குவது போல், அர்ஜூனுடைய வகுப்பு ஆரம்பமானது.

வழக்கமாய் பூஜாவை எழுப்பி தாறுமாறாய் கேள்வி கேட்பவன், இன்று அவளிடம் சாதாரணமாக நடந்துக் கொண்டான். வகுப்பு முடிந்து கிளம்பும் போது, அந்த கார்னிவல் டேக்கான பொறுப்பை பூஜா ஏற்றுக் கொள்கிறாளா? என்று அவளிடமே கேட்டான்.

அதில் பிரதன்யாவுக்கு அத்தனை எரிச்சல். “என்னடி? இதோட இவ தொல்ல இருக்காதுன்னு பார்த்தா, மறுபடியும் இந்த அர்ஜூன் சார் ஆரம்பிச்சு வைக்கிறாரு” என்றாள்.

“லாஸ்ட் டைம் பண்ணது ஞாபகம் இருக்குத்தான? இந்த டைம் அத விட பெருசா ஏதாச்சும் பண்ணலாம்” என்று சொல்லிக் கொண்டாள்.

ஆனால் இம்முறை பூஜாவோ, “இல்ல சார். என்னால இத பண்ண முடியுமான்னு தெரியல. இட்ஸ் பெட்டர். கிளாஸ்ல இருக்கிற மீதி பேருக்கு அந்த சான்ஸ் கொடுங்க” என்றாள்.

அதில் அர்ஜூன் அவளை ஒரு நொடி கேள்வியாய் பார்க்க, அவளோ, அமைதியாய் நின்றாள்.

“ம் சரி இன்னும் கார்னிவல் பத்தி அபிசியல் அனோன்ஸ்மெண்ட் எதுவும் வரல. சோ வந்ததுக்கப்புறம், நம்ம அது என்னென்னு முடிவு பண்ணலாம்” என்று சொல்லிவிட்டு அங்கிருது சென்றிருந்தான்.

இப்போது பிரியாவோ பூஜாவிடம், “ஏன் பூஜா? உனக்குத்தான் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் பிடிக்கும்த்தான?” என்று கேட்டாள்.

“பிடிக்கும் தான். பட் அதுக்குன்னு ஒரே விஷயத்த பண்ணிட்டு இருந்தா போர் அடிக்காதா? அதுவும் போக லாஸ்ட் டைம், என்னால சரியா எஞ்சாய் பண்ணவே முடியல. சோ இந்த டைம், நம்ம கடைசி ரோல உட்கார்ந்து தாறுமாறா கலக்குறோம்” என்றாள் பூஜா.

“அப்பாடா! அப்போ இந்த தடவ நாங்க தப்பிச்சிட்டோம்” என்று விஷ்வா சொல்ல, “ம் இப்போதைக்கு” என்று சொல்லிய பூஜாவோ அவர்களுடன் கேண்டீனுக்கு சென்றாள்.

இங்கே ஸ்டாப் ரூமுக்கு வந்த அர்ஜூனிடம் மாதவ்வோ, “இவங்க எல்லாரும் சொல்றது உண்மையா? கார்னிவல் வைக்கனும்னு, பிரின்சிபல்கிட்ட சொன்னீயா?” என்று அதிர்ச்சியாய் கேட்டான்.

ஏனெனில் இது பற்றி மாதவ் அன்று பேசியதுக்கு அவனை அந்த திட்டு திட்டி அல்லவா அனுப்பியிருந்தான். இப்போது அவனே அது நடத்த அத்தனை ஆர்வமாய் இருக்கிறான் என்று தெரிந்தால், அவனுக்கு அதிர்ச்சியாகத்தானே இருக்கும்.

அர்ஜூன் எதுவும் சொல்லாது புத்தகத்தை திருப்பிக் கொண்டிருக்க, “ச் அர்ஜூன் உன்கிட்டத்தான கேட்குறேன்” என்றான்.

“ச் இப்போ உனக்கு என்ன தெரியனும்?” என்று அவன் சிறு கடுப்போடு கேட்க, “இல்லடா? நீதான அதெல்லாம் வச்சா, ஸ்டூடண்ட்ஸ் படிப்பு கெட்டு போயிடும்னு சொன்ன” என்று அப்பாவியாய் மாதவ் கேட்டான்.

“ஸ்டூடண்ட்ஸ் காலேஜ் வர்றது படிக்கிறதுக்கு மட்டும் கிடையாது. நாலு விஷயங்கள கத்துக்கவும் செய்யனும். வெறும் புத்தகத்துல இருக்கிறத மட்டுமே சொல்லிக் கொடுக்கிறதுக்கு எதுக்கு, நீயும், நானும் இங்க வேல பாக்கனும். சிம்பிளா எல்லாரும் வீட்டுல இருந்தே யூடியூப்ப பார்த்தே எல்லாம் கத்துக்கலாமே” என்றான்.

“என்னது?” என்று மாதவ் அதிர்ச்சியாய் கேட்க, “கொஞ்சமாச்சும், ஸ்டூடண்ட்ஸுக்கு எந்த சிட்சுவேசனுக்கு என்ன தேவன்னு புரிஞ்சு நடந்துக்க ட்ரைப் பண்ணு” என்று சொல்லிவிட்டு அவன் வேலையைத் தொடர்ந்தான்.

“என்ன இவன்? அன்னிக்கு அப்படி சொன்னான். இன்னிக்கு இப்படி சொல்றான்? இவன என்னால புரிஞ்சிக்கவே முடியலையே” என்று புலம்பியப்படியே அவனும் அடுத்த வேலையைப் பார்க்க சென்றான்.

இப்போது மாதவ் சென்றதும், அந்த சங்கர் சார் இவனை கடந்து செல்ல, ஏனோ அவரைப் பார்த்ததுமே இவனுக்கு அத்தனைக் கோவம் வந்தது.

ஆனாலும் கூட இருக்கும் இடமும், பார்க்கும் வேலையும் அவனைப் பிடித்து நிறுத்தியது. “இன்னொரு தடவ பூஜாக்கிட்ட ரூடா பிகேவ் பண்ணட்டும். அப்போ பார்த்துக்கிறேன்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

அங்கே விஷ்வாவோ, “ஹேய் உனக்கென்ன இன்னிக்கு பர்த்டேவா? இப்படி தாராளமா வாரி வழங்குற” என்று அவள் வாங்கிக் கொடுத்த பப்ஸை தின்றுக் கொண்டே கேட்டான்.

“ஏண்டா? ஆறு மாசமா பிரண்டா இருக்கோம். இன்னும் அவ பர்த்டே எப்போன்னு கூட உனக்கு தெரியாதா?” என்றாள் பிரியா.

“ஈ. இல்ல. இன்னிக்கு அவ பர்த்டே இல்லன்னு எனக்கு தெரியும். ஆனாலும் என்ன ஸ்பெஷல் டேண்னு தெரிஞ்சிக்கலாம்னுத்தான்” என்றவன் அசடு வழிந்தான்.

ஆனால் பூஜாவோ இப்போதும் கூட, அவன் செல்லமாய் தன் தலையை தட்டிய நிகழ்வைத்தான் நினைத்துக் கொண்டிருந்தாள். அதிலும் அந்த நொடி அவன் முகத்தில் இருந்த அந்த புன்னகை அவள் வயிற்றில் பட்டாம்பூச்சியை பறக்க வைத்தது.

“ச் இப்படி சிரிச்சிட்டே இருந்தா எப்படி இருக்கும்?” என்றவள் தன்னை மீறி கேட்க, “ம் பைத்தியம் மாதிரி இருக்கும்” என்றாள் பிரியா.

அப்போதே இவ்வுலகம் வந்த பூஜா, “ஹேய் என்ன?” என்று கேட்க, “பின்ன நேத்து வரைக்கும் எதையோ பறிக் கொடுத்த மாதிரியே சுத்துன. இன்னிக்கு என்ன? காலையில இருந்து ஒரு ஹாப்பி மூட்லையே சுத்திட்டு இருக்க” என்றாள் பிரியா.

“ஆ..ங் அது” என்று பூஜா ஆரம்பிக்கும் போதே, “என்ன பூஜா? எப்படி இருக்க?” என்று கேட்டப்படி அவளுக்கருகே இருந்த இருக்கையில் வந்தமர்ந்தான் ஆதித்யா.

(அட நீ வேற ஏண்டா? இப்போத்தான் அவளே ஒரு ரூட்ட பிடிச்சு அர்ஜூன் கூட க்ளோஸ் ஆக ட்ரைப் பண்ணிட்டிருக்கா. இதுல நடுவுல வந்து இரிட்டேட் பண்ணிக்கிட்டு. சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்புறம் பெஸ்ட் கமெண்ட்ஸ பேனர்ல போஸ்ட் பண்ணிருக்கேன். சோ உங்க கமெண்ட்ஸும் அதுல வரலாம். சோ அதையும் செக் பண்ணிக்கோங்க.  அப்புறம் மறக்காம ரேட்டிங் கொடுத்திடுங்க)

தொடரும்…

Comments   10

*** வரம் – 43 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***