வரம் – 42

அர்ஜூன் கோவத்தில் ஏதோ சொல்ல வந்திருக்க, பூஜாவோ, “எந்த உரிமையில சார் அவர்கிட்ட போயி கேட்பீங்க?” என்று கேட்டாள் . அதில் சொல்ல வந்த வார்த்தையை பாதியில் விழுங்கி அவளைப் பார்த்தான்.

அவளோ, அவனையேத்தான் இமைக்காதுப் பார்த்தாள். ஒரு நொடி தடுமாறினாலும், அடுத்த நொடியே, “உன்னோட கார்டியன்னா நான் போயி கேட்பேன். அப்படி இல்லையா? ஒரு புரோபசரா கூட, நான் போயி கேட்பேன். ஸ்டூடண்ட்ஸ கார்னர் பண்றது, டார்கட் பண்றது எல்லாம் கொஞ்சமும் சரி கிடையாது. எல்லாரையும் ஈகுவல்லா பார்க்குறதுத்தான் ஒரு புரோபசருக்கு அழகு” என்றான்.

இப்போது அவளோ, “ஏற்கனவே நீங்க எனக்காக நிறையா பண்ணிட்டீங்க சார்” என்றாள்.

“ச் நான் தான் சொல்லிட்டேன் தான. நீ என்னோட ரெஸ்பான்சிபிலிட்டி. உனக்காக நான் பண்ணாம வேற யார் பண்ணுவா? நீ அத பத்தி எல்லாம் யோசிக்காத. நீ படிக்கிற வேலைய மட்டும் பாரு. மீதி எல்லாத்தையும் நான் பார்த்துப்பேன்” என்றான்.

“ஸ்ப்பா! கேரிங்கா பேசுறப்ப கூட, வாத்தியார் டோன் மாறவே மாறாது. இவர எல்லாம் என்ன லவ் பண்ண வச்சி, என் பின்னாடி சுத்த வைக்கிறதுக்கு இன்னும் நான் எவ்வளவு போராடனுமோ தெரியலையே” என்று தனக்குள்ளே முனுமுனுத்தாள்.

“என்ன? நான் சொன்னது புரியுதா?” என்று அவன் கேட்க, இப்போது அவளோ, “பட்! ஹாஸ்டல்” என்று அவள் ஆரம்பிக்க, “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். அங்க போயி உனக்கு உடம்புக்கு முடியாம போச்சுன்னா, யார் பார்த்துப்பா? நீ இங்க இருந்தே காலேஜூக்கு போ” என்றான்.

“உங்களுக்கு டிஸ்டர்பா” என்றவள் இன்று அவனை விடுவதாய் இல்லை. “ச் அதெல்லாம் ஒன்னும் எனக்கு டிஸ்டர்ப் இல்ல. சும்மா சும்மா அதையே சொல்லிட்டு இருக்காத. அந்த கிளாஸ் டீச்சர் அகைன் உன்கிட்ட பிரச்சன பண்ணா, என்கிட்ட வந்து சொல்லு. நான் பார்த்துக்கிறேன்” என்றான்.

“ம்” என்று அவள் தலையாட்ட, இப்போது அவனோ, “கொஞ்சம் பால் எதுவும் கொண்டு வரட்டுமா?” என்று கேட்டான். “ம்ஹூம்” என்றவள், இப்போது அவன் மடியில் இன்னும் வாகாய் தலை வைத்துக் கொண்டு, அவன் கரத்தைப் பிடித்துக் கொண்டாள்.

அவனுக்கோ அவளுடைய தொடுகை இதெல்லாம் கொஞ்சமும் தவறாய் தோண்றவே இல்லை. ஏனெனில், அவளுக்கு உடல் நிலை சரியில்லை. அவளை பத்திரமாய் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டும் தான் அவனுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

அதிலும் இதுவரைக்கும், அவன் யாரையும் இப்படி பார்த்துக் கொண்டதும் கிடையாது. தனியாகவே வளர்ந்து விட்டான். தனியாகவே இருந்தும் விட்டான். முன்பு கூட எப்படியோ? பூஜாவை, அவள் அம்மாவும், அப்பாவும் தாங்குவதை பார்த்திருக்க, இத்தனை ஏன், அவனுடைய அம்மா, தாத்தா கூட அவளை பூ போல் பார்த்திருக்க, இப்போது அப்படிப்பட்டவளை, தானும் அதே போல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம்.

ஆனால் இங்கே பூஜாவின் மனமோ, “இன்னும் கொஞ்சம் டைட்டா ஹக் பண்ணிப்போம்மா? எதுவும் சொல்வாரா?” என்று தாறுமாறாய் யோசித்துக் கொண்டாள்.

“இல்ல இல்ல வேண்டாம். வேண்டாம். இனிமே இங்கத்தான இருக்கப் போறோம். அப்போ பார்த்துக்கலாம்” என்று சொல்லியவள், இப்போது கண்ணை மூடிக் கொள்ள, அவன் தான் அவளைப் பார்த்தபடியே இருந்தான்.

அவள் சிறிதாய் அசைந்தால் கூட, அவளுக்கு என்னவோ? என்பது போல் அவன் அமர்ந்திருக்க, கிட்ட தட்ட நள்ளிரவைத் தாண்டித்தான் அவன் கண் அசந்தான். அவனும் அவளின் அருகிலேயே படுத்து விட, இப்போது அவளோ, அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு படுத்துக் கொண்டாள்.

அடுத்த நாள் காலையில் அர்ஜூன் கண் விழித்துப் பார்க்கும் போது அவனின் மனைவியின் கால், அவன் நெஞ்சை மிதித்துக் கொண்டிருந்தது. ஒரு நொடி கண்ணைக் கசக்கிப் பார்த்தவன், அடுத்த நொடி, “ச் இப்படி ஏடாகூடாம படுத்தா, வயிறு வலிக்காம என்னப் பண்ணும்” என்றுத்தான் யோசித்தான்.

உடனே எழுந்து அவளை தலையனையில் நேராக படுக்க வைத்து விட்டு எழுந்து குளியலறைக்கு சென்றான். வழக்கமாகவே காலையில் சீக்கிரம் எழும் பழக்கம் எல்லாம் அவளுக்கு கிடையாது. இப்போது விடிய விடிய ஒருவன் தாலாட்டு பாடியிருக்க, சொல்லவா வேண்டும்? எழும் எண்ணமே இல்லாமல் உறங்கிக் கொண்டிருந்தாள்.

இங்கே குளித்து முடித்து வெளியில் வந்தவனோ, “இன்னும் ஸ்டொமக் பெயின் இருக்குமோ? இல்லன்னா காய்ச்சல் எதுவும் வந்திருக்குமோ?” என்றப்படி அவளை நெருங்கி, அவள் நெற்றியில் கை வைத்தான்.

குளித்து முடித்து வந்தவன் இன்னும் சட்டைக் கூட அணியாமல் இருந்திருக்க, அவன் மேனியில் இருந்த நீர்த்துளிகள். அவள் மேலே சொட்டு சொட்டாய் விழ, அதிலும் அவனுடைய ஈர உள்ளங்கையின் குழுமை அவள் உயிரைத் தொட்டு எழுப்பியது.

அதில் சிறு சினுங்கலுடன், அவள் கண்ணைத் திறக்க, அத்தனை நெருக்கத்தில் அர்ஜூனின் முகம். அவள் கனவென்று நினைத்தாளோ? இல்லை அதை நிஜம் என்று தெரிந்துத்தான் செய்தாளோ, 

“அச்சோ என் அஜ்ஜு பேபி. எவ்ளோ கியூட்” என்று அவன் கன்னம் கிள்ளி, அவள் நெற்றியில் அழுத்தி முத்தமிட்டாள். அவள் கன்னத்தைப் பிடித்ததுக்கே, அவன் அதிர்ந்து அவளைப் பார்த்திருக்க, இப்போது அவள் கொடுத்த முத்தத்தில், பேலன்ஸ் தடுமாறி அவளின் மீதே விழ சென்றான்.

கடைசி நொடியில் சுதாரித்து, விலகியவன், “பூஜா” என்று அழுத்தி சொல்ல, “ஐயோ வாத்தி!” என்று தனக்குள்ளே புலம்பியவள், அதை முகத்தில் காட்டாது, “என்னோட டெட்டி” என்று அருகில் இருந்த டெட்டி பியரை மீண்டும் கட்டிக் கொண்டு படுத்துக் கொண்டாள்.

அதில் அர்ஜூனின் மனமோ, “டேய் அவ ஏதோ பொம்மன்னு நினைச்சி அப்படி பண்ணிட்டாப் போல. அதுக்குள்ள எதுக்கு கத்துற?” என்று திட்டியது.

அதில் தன் கன்னத்தை தடவிப் பார்த்தவன், “அவ கண்ணுக்கு என்னப் பார்த்தா, டெட்டி பியர் மாதிரியா தெரியுது?” என்று அப்படியே அங்கிருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்தான்.

அப்போதே சட்டைக் கூட அணியாதது அவன் மூளையில் பதிய, “ச் இப்படியேவாடா அவ கிட்ட போவ” என்று தன்னைத் தானே நொந்துக் கொண்டவன் சட்டையை எடுத்துக் கொண்டு உடை மாற்றும் அறைக்கு சென்றான்.

அவன் அறைக்கு சென்ற மறு நொடி, கண்ணைத் திறந்தவளோ, “ஸ்ப்பா கிரேட் எஸ்கேப். இல்லன்னா, அன்னிக்கு வாங்குன மாதிரி இன்னிக்கும் வாங்கியிருக்கனும். ஆனாலும் பூஜா, நீ ரொம்பத்தான் ஓவரா போற” என்று மனம் எச்சரித்தது.

“ச் இப்போ நான் என்ன அப்படி ஓரமா போயிட்டேன். வாத்திக்குத்தான் நான் பொண்டாட்டின்ற நெனப்பே இல்ல. அதுக்குன்னு நானும் மறந்துடனுமா? ஹஸ்பண்ட் கன்னத்துல கிஸ் பண்றது ஒன்னும் அவ்ளோ பெரிய தேச குற்றமா என்ன?” என்று அசராது சொல்லிக் கொண்டாள் பூஜா.

இப்படி இவள் ஒரு முடிவில் இருக்க, அவனோ இதன் பின் அவளுக்கும், அவள் படிப்புக்கும் எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவன் முடிவு எடுத்து வைத்திருந்தான்.

அதன் பின், அன்று அவளை லீவ் எடுக்க சொல்ல, அவளோ, “அதெல்லாம் இல்ல சார். இப்ப ஒகேத்தான்” என்று சொல்ல, அவனும், “சரி பட் ஏதாச்சும் இஸ்யூன்னா, சிக் ரூமுக்கு போயிடனும்” என்றான்.

“ஏன் சார்? உங்க கிட்ட வந்து சொல்லக் கூடாதா?” என்று இவள் கேட்க, “ஆ.ங் அது. வந்து. ம் சொல்லலாம் தான். ஆனா” என்றவனுக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியவில்லை.

அதில் இவளோ, “கவலப்படாதீங்க சார். காலேஜ்ல வச்சி, கண்டிப்பா நான் அட்வாண்டேஜ் எல்லாம் எடுத்துக்க மாட்டேன்” என்றாள்.

அதில் அவனோ, “இல்ல ஏதாச்சும் பிரச்சனைன்னா, நீ வந்து சொல்லு. பிராபளம் இல்ல” என்று சிறு தயக்கத்தோடு அவன் சொல்ல, ஏனோ அவனை இன்னுமே அதிகமாய் பிடித்தது.

வெளியில் செல்ல நினைத்தவள் மீண்டும் அவனிடம் வந்து, “நீங்க இருக்கிறப்ப எனக்கு எந்த பிரச்சனையும் வராது சார்” என்று சிறு புன்னகையுடன் சொல்லிவிட்டு வெளியில் செல்ல முயன்றாள்.

“ஹேய் நில்லு” என்று அவள் கையைப் பிடித்தவன், “எப்படி போற?” என்றான். “எப்படி போறன்னா? எப்பவும் போலத்தான்” என்று அவள் சொல்ல, “இல்ல உனக்கு உடம்புக்கு முடியலத்தான? நானே உன்ன கூட்டிட்டு போறேன்” என்றான்.

“என்ன?” என்று கேட்டவளுக்கு அத்தனை அதிர்ச்சி. அவளால் அவள் காதில் விழுந்ததை நம்பவே முடியவில்லை. அதற்குள் அவன் சென்று ஹெல்மெட்டும், பைக் சாவியையும் எடுத்து வந்திருந்தான்.

“இன்னும் ஏன் நிக்கிற? வா” என்று அவன் அவளை தன்னோடு அழைக்க, “உங்க கூடவா?” என்றாள். ஏனெனில், இந்த பிளாட்டில், அவனும் அவளும் சேர்ந்து இருக்கிறார்கள் என்றுத்தான் பெயர். ஆனால் எதிர் பிளாட்டில் இருப்பவர்களுக்கு கூட, அவர்கள் ஒரே வீட்டில் இருக்கிறார்கள் என்று தெரியாது.

அதிலும் பகல் நேரத்தில் எல்லாம் அவன் அவள் பக்கம் கூட திரும்ப மாட்டான். இரவில் மட்டும் தான் அவளை அழைத்துக் கொண்டு வருவது. இதெல்லாம்.

இப்போது அவனே கூப்பிடவும் சிறு அதிர்ச்சித்தான். ஆனாலும் அவனுடன் நடந்தாள். சட்டென்று நின்றவன், அவள் பக்கம் திரும்பி, “அந்த தாலி செயின் தெரியிற மாதிரி போட்டுக்கோ” என்றான்.

“என்ன சார்?” என்று அவள் புரியாது கேட்க, இப்போது அவனே அவள் சுடிதாருக்குள் மறைத்து வைத்திருந்த தாலி செயினை தெரியும்படி போட்டு விட்டான்.

அவனின் தொடுகையில், இவள் அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க, அவனோ, அவள் கையைப் பிடித்து லிப்டிற்குள் அழைத்துச் சென்றான்.

“என்னடா நடக்குது இங்க? நான் எதுவும் கனவுல இருக்கேன்னா?” என்று குழப்பமாய் அவள் யோசிக்க, அதற்குள் தரைத்தளம் வந்திருந்தது. அந்த அபார்ட்மெண்ட் எப்போதுமே காலை ஏழு மணிக்கெல்லாம் காலியாகிவிடும். ஆம் அத்தனைப் பேரும் வேலை வேலை என்று ஓடும் ரகங்கள் தான்.

ஒருவர் வீட்டில், என்ன நடக்கிறது? என்று இன்னொருவருக்கு தெரியாது. தெரிந்துக் கொள்ளவும் அவர்கள் நினைப்பதில்லை. மீதி சில வயதானவர்களும், ஹவுஸ் ஒயிப்களும் மட்டுமே அன்னேரத்தில் இருப்பார்கள்.

பெரும்பாலும் அர்ஜூனை எல்லாம் அவர்கள் பார்ப்பதே அரிதுத்தான். இப்போது அவனின் பின்னே ஏறி அமர்ந்த பூஜாவுக்கோ நடப்பதை நம்பவே முடியவில்லை. கிட்ட தட்ட கல்லூரி வரும் வரை, அவள் ஒரு மாய உலகத்தில் தான் இருந்தாள்.

அதற்குள் காலேஜுக்கு முன் இருந்த பஸ்ஸ்டாப்பின் அருகில், பைக்கை நிறுத்தியிருந்தான் அர்ஜூன். அதில் அவன் மீதே மோதி, இவ்வுலகம் வந்தவள், “என்னாச்சு சார்?” என்றாள்.

இப்போது அவனோ, “இங்க இருந்து நீ காலேஜூக்கு வந்துடுவத்தான?” என்றான். “ம் அதான பார்த்தேன்” என்று அவளின் உள் மனம் கவுண்டர் கொடுக்க, இப்போது அவன் ஏன் ஹெல்மெட்டை மறக்காமல் எடுத்து வந்தான் என்பதும் புரிந்தது.

சட்டென்று யார் பார்த்தாலும், அது அவன் என்று கண்டுப்பிடிக்க கூடாதே. அதனால், “சரி சார்” என்றப்படி அவள் பைக்கில் இருந்து இறங்க, “ஹேய்” என்று மீண்டும் அவள் கையைப் பிடித்தான்.

அதில் அவள் கேள்வியாய் பார்க்க, “இப்போ அந்த செயின்ன கவர் பண்ணிக்கோ” என்றான்.

அவள் அவனை புரியாமல் பார்க்க, அதில் அவனோ, “அது அபார்ட்மெண்ட்ல, இப்படி நீ என் கூட சேர்ந்து வர்றப்ப, கழுத்துல தாலி இல்லன்னா, அது தப்பா தெரியும். அதுக்காகத்தான் வெளிய தெரியிற மாதிரி போட சொன்னேன். பட் இங்க காலேஜ பொறுத்தவரைக்கும், முன்னாடி எப்படியோ? அப்படித்தான் இப்பவும். புரியுதா? அத மறைச்சிக்கோ” என்றான்.

“ஏன் என்ன கேட்டா எடுத்து வெளிய போட்டீங்க. இப்பவும் எடுத்து உள்ள போட வேண்டியதுத்தான? இப்போ மட்டும் சார் பொண்டாட்டிய தொட மாட்டாரு” என்று உள்ளுக்குள் அவள் முனுமுனுக்க, அதற்குள் சற்று தள்ளி, “பூஜா” என்ற பிரியாவின் குரல் கேட்டது.

அதில் அர்ஜூன் பூஜாவைப் பார்க்க, அவளோ, “நீங்க கெளம்புங்க சார். நான் பார்த்துக்கிறேன். அவளுக்கு தூரத்துல இருந்து பார்த்தாலாம் கண்ணு தெரியாது. சோ உங்கள பார்த்திருக்க மாட்டா” என்று சிறு புன்னகையுடன் கூறினாள்.

அதைக் கேட்டு அவனையும் மீறி அவள் மண்டையில் செல்லமாய் தட்டியவன், “சேட்டத்தான உனக்கு. கவனமா வந்து சேரு” என்று சொல்லிவிட்டே அங்கிருந்து சென்றான் அர்ஜூன்.

செல்பவனையே பார்த்த பூஜாவுக்கு, அவனுடைய இந்த சின்ன தொடுகை கூட என்னமோ செய்தது. அதற்குள் அவள் அருகில் வந்த பிரியா, “யாரு பூஜா அது?” என்று கேட்டாள்.

(ம் கேளும்மா. உனக்குத்தான் கண்ணு தெரியாதுன்னு அவ சொன்னா. சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்புறம் பெஸ்ட் கமெண்ட்ஸ பேனர்ல போஸ்ட் பண்ணிருக்கேன். சோ உங்க கமெண்ட்ஸும் அதுல வரலாம். சோ அதையும் செக் பண்ணிக்கோங்க.  அப்புறம் மறக்காம ரேட்டிங் கொடுத்திடுங்க)

தொடரும்…

Comments   14

*** வரம் – 42 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***