கிட்டதட்ட பூஜாவுக்காக, அர்ஜூன் முழுதாய் அரை மணி நேரம் ஆடிட்டோரியத்தில் காத்துக் கொண்டிருந்தான். ஆனால் அவள் வரவே இல்லை. அது அவனுக்கு அத்தனைக் கோவத்தைக் கொடுத்தது.
“அப்படி என்ன அவளுக்கு திமிரு?” என்று யோசித்தவன், “இன்னிக்கு வீட்டுக்கு வருவாத்தான. அப்போ பேசிக்கிறேன்” என்றப்படி ஸ்டாப் ரூமிற்கு சென்றான்.
இங்கே பூஜாவோ, விஷ்வா பிரியாவுடன் கேண்டினில் அமர்ந்திருந்தாள். “ஹேய் உனக்கு என்னாச்சு? அதான் அர்ஜூன் சாரே பனிஷ்மெண்ட வாபஸ் வாங்கிட்டார்த்தான?” என்றாள் பிரியா.
அதற்குள் விஷ்வாவோ, “என்ன, கிளாஸ் சார் ஏதாச்சும் ரொம்ப திட்டிட்டாரா?” என்று கேட்டான். இப்போது பூஜாவோ, “ஹேய் கொஞ்ச நேரம் பேசாம இருக்கீங்களா? எனக்கு பசிக்குது” என்றவள் சாப்பிட ஆரம்பித்தாள்.
இப்படியாக அன்றைய தினம் சென்றிருக்க, அன்றுக்கு கல்லூரி முடிந்ததும் வீட்டுக்கு செல்லாது, நீண்ட நாட்களுக்குப் பின் பீச்சுக்கு வந்தமர்ந்தாள்.
அங்கே அர்ஜூனோ கையில் கட்டியிருந்த வாட்சையும், வீட்டு வாசலையும் பார்த்தப்படி அங்கும், இங்கும் என்று சுற்றிக் கொண்டிருந்தான்.
“ச் இவளுக்கு மட்டும் தனியாவா காலேஜ் முடியுது? இன்னும் வீட்டுக்கு வராம என்னப் பண்ணிட்டு இருக்கா?” என்ரு முணுமுணுத்தான்.
அவனின் மனமோ, “ஏன்பா ராசா? அவ்ளோ அக்கற இருந்தா, நீயே வர்றப்ப கூப்டு வந்திருக்க வேண்டியதுத்தான?” என்று கேட்டது.
“ச் அக்கற எல்லாம் ஒன்னும் கிடையாது” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாலும், அவள் வருகைக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தான்.
ஆனால் அவளோ, இன்னும் இன்னும் அவனுடைய பொறுமையை சோதிக்க, ஒரு கட்டத்தில், “ச் இன்னும் ஏன் வரல” என்றவனுக்கு மெல்லிய பதட்டம் கூட எட்டிப் பார்த்தது.
“எதுக்கும் ஒன்ஸ் நம்ம போயி” என்று யோசிக்கும் போதே, பூஜா வீட்டுக்கு வந்திருந்தாள்.
அவளைப் பார்த்தப் பின்னே சற்று நிம்மதி. ஆனாலும் சிறு கோவமும் சேர்ந்தே வர, அவளிடம் ஏதோ பேச நினைத்து வந்தான்.
அவளோ அவன் பக்கம் கூட திரும்பாது அவளுடைய அறைக்கு செல்லப் போக, “ஹேய்? காலேஜ்ல இருந்து வீட்டுக்கு வர்றதுக்கு உனக்கு இவ்வளவு நேரமா?” என்று கோவமாய் கேட்டான்.
அவனுடைய கேள்வியில் இப்போது அவளோ, அவனை நிமிர்ந்து ஒரு பார்வைப் பார்த்தாள்.
அந்த பார்வையே சொன்னது? அதைக் கேட்க நீ யார் என்று?
அது அவனுடைய கோவத்தை இன்னுமே கூட்ட, “இங்க நீ இருக்கிற வரைக்கும்” என்று அர்ஜூன் சொல்லி முடிக்கும் முன்னே, “நானே வேற ஹாஸ்டல் பாத்துட்டேன் சார். நாளைக்கு காலையில அங்க கிளம்பி போயிடுவேன். இதுவரைக்கும், எனக்கு உங்க வீட்டுல தங்க பர்மிஷன் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்” என்று அழுத்தம் திருத்தமாய் சொல்லிவிட்டு அங்கிருந்து அவளறைக்குள் சென்று விட்டாள் பூஜா.
“என்ன?” என்றவனுக்கு ஒரு நொடி அவள் சொல்லியது புரியவே இல்லை. அது புரிந்த நொடி, அவனுக்கு இன்னும் இன்னும் கோவம் வந்தது.
“எல்லாத்தையும் இவளே முடிவு பண்ணிட்டா, அப்புறம் நான் எதுக்கு இருக்கேன்?” என்று தனக்குள்ளே யோசித்தவனுக்கு, ஏனோ அவள் செல்கிறேன் சொல்லியது மனதை என்னமோ செய்தது.
அதே நேரம் அவனின் மனசாட்சியோ, “நீயும் இதையேத்தான அவகிட்ட சொன்ன” என்று கேட்டது. சட்டென்று அன்று இரவு நடந்த விஷயங்கள் எல்லாம் நினைவில் ஓடியது.
அவள் குல்பியின் மயக்கத்தில் ஏதேதோ பிதற்றியிருக்க, அவளின் நெருக்கத்தில் இவனுமே தடுமாறியிருக்க, சரியாக அன்னேரம் அவள் சொல்லிய வார்த்தையும், அவனுக்கு வந்த போன் அழைப்பும், அவனை இவ்வுலகம் இழுத்து வந்திருந்தது.
அதில் கோவமாய் ஏதோ திட்ட நினைத்து, “என்னப் பண்ணிட்டிருக்க நீ?” என்று அவளை விட்டு விலகி அவன் கேட்க, அவளோ அவன் மார்பில் சாய்ந்து உறங்கியிருந்தாள்.
“ஹேய்” என்றவனுக்கு அவள் மீது கோவம். ஆனாலும், தூங்குபவளை அவனும் என்னத்தான் செய்வான்? சிறுது நேரத்தில். அவள் பல ரகளைகள் செய்திருக்க, இப்போது அவளை கட்டிலில் படுக்க வைத்தான்.
அவளோ உறக்கத்திலேயே, “போங்க சார். நீங்க மோசம்” என்று பிதற்ற, அது இவனுடைய சினத்தை இன்னும் இன்னும் கூட்டியது.
“புல் சிட்? இவ என்னைப் பத்தி என்ன நினைச்சிட்டு இருக்கா? இதுக்கெல்லாம் நாளைக்கே முடிவு கட்டுறேன்” என்றவன் அவளின் அருகில் கூட படுக்காது, சோபாவில் சென்று படுத்துக் கொண்டான்.
அடுத்த நாள் காலையில் பூஜா எழும் போது அவளுக்கு இரவு நடந்த எதுவும் பெரிதாய் நினைவில் இல்லை. ஆனாலும், கொஞ்சம் கொஞ்சமாய் நினைவில் இருக்க, “ஐயோ பூஜா? என்னடி பண்ணி வெச்சிருக்க?” என்று யோசித்தப்படி வேகமாய் அர்ஜுனைத் தேடினாள்.
அவன் அங்கு இல்லை. “நல்ல வேள இல்ல” என்று அவள் யோசித்து முடிக்கும் முன்னே, அங்கு வந்த அர்ஜூன், “உடனே நீ ஊருக்கு கெளம்பு” என்றிருந்தான்.
அதில் அவளோ அதிர்ந்து, “என்ன சார்?” என்று கேட்க, “உனக்கு ஹாஸ்டல் கிடைக்கிற வரைக்கும், நீ ஊர்ல போயி இரு” என்றான்.
“என்ன சார்? இப்போ எதுக்கு?” என்றவளை அதற்கு மேல் பேசவிடாது, “உன் மனசுல என்னத்தான் நினைச்சிட்டு இருக்க? இங்கப்பாரு. என்னைப் பொறுத்த வரைக்கும், நீ என் கிளாஸ்ல படிக்கிற ஒரு பொண்ணு மட்டும் தான். மத்தப்படி உனக்கும், எனக்கும் நடுவுல எதுவும் கிடையாது. ஈவன் அந்த கல்யாணமே ஒரு கம்பள்சன்ல நடந்தது மட்டும் தான். நானே சீக்கிரம் டைவர்ஸுக்கு அப்ளைப் பண்ணலாம்னுத்தான் யோசிச்சிட்டு இருக்கேன். சோ” என்றவன் அதன் பின் பேசிய பேச்சில், பூஜாவுக்கு தலை வலி சென்று நெஞ்சு வலியே வராத குறைத்தான்.
ஆனாலும் நல்ல நாளிலேயே பதில் பேச விட மாட்டான். இப்போது சொல்லவும் வேண்டுமா என்ன? அவளை மொத்தமாய் திட்டி தீர்த்துவிட்டுத்தான் அங்கிருந்து சென்றிருந்தான். அதன் பின் இருவரும் சேர்ந்து சாப்பிடுவது கூட கிடையாது.
இப்போது அதை எல்லாம் யோசித்தப்படி நின்றவனுக்கு, அவன் செய்தது எல்லாம் மறந்து, அவள் அவனை விட்டு விலகி செல்வது மட்டுமே முன் வந்து நின்றது.
அதில் வேகமாய் சென்று அவள் இருக்கும் அறைக் கதவைத் தட்டினான். அந்தப் பக்கம் அவளோ, அப்போதுத்தான் உடை மாற்றிக் கொண்டிருக்க, இவனோ விடாது தட்டினான்.
அதில் அவசரமாய் வந்து அவள் கதவைத் திறக்க, அவனோ, “உன் மனசுல நீ என்ன நினைச்சிட்டு இருக்க?” என்று கோவமாய் கேட்டான்.
இப்போது அவளோ, சற்று சோர்வாய், “இப்போ நான் என்ன சார் பண்ணேன்?” என்றாள். ஏனெனில், அவளுக்கு அன்று பீரியட்ஸ். ஏற்கனவே அந்த எரிச்சலில் இருக்க, இப்போது இவன் வந்து சம்பந்தமே இல்லாமல் கோவப்படவும், அது அவளுடைய கடுப்பை கூட்டியது.
“என்ன பண்ணல நீ? உன் இஷ்டத்துக்கு நீயே எல்லாம் பண்ணிடுவீயா?” என்று கத்தினான்.
அதில் அவளோ, “சரி சார். இனிமே நான் எதுவுமே பண்ணல போதுமா?” என்று கேட்டவளுக்கு வழக்கத்தை விட, இம்முறை சற்று அதிக சோர்வாய் இருப்பது போல் தோன்றியது.
“என்ன நக்கலா உனக்கு? உன்ன நான் ஆடிட்டோரியத்துக்கு வர சொன்னேன்ல எதுக்கு வரல? அவ்ளோ திமிரா?” என்று கேட்டான்.
இப்போது அவனைப் பார்த்தவளோ, “நான் எதுக்கு சார் வரனும்?” என்று கேட்டாள். “எதுக்கு வரனும்னா என்ன அர்த்தம்? நான் வர சொன்னேன் தான” என்று அவன் அதையே சொல்ல, “நீங்க சொன்னா நான் எதுக்கு வரனும்?” என்று கேட்டாள்.
“ஹேய் நான் உன்னோட” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்னே, “என்னோட புரோபசராவே இருந்தாலும், காரணம் இல்லாம நான் எதுக்கு உங்கள பார்க்க வரனும்?” என்று கேட்டாள்.
அது அவனுடைய ஈகோவை டச் செய்ய, “காரணம் இல்லாம உன்ன நான் கூப்பிடவே இல்ல” என்றான்.
“அப்படியா சரி சார். சொல்லுங்க. உங்க கிட்ட நான் எந்த கார்னிவல் ஐடியா சொன்னேன்?” என்று கேட்டாள். அதில் இப்போது அர்ஜூனுக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை. காலையில் அத்தனைப் பேரின் முன்னாலும், அவள் திட்டு வாங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியாது, ஏதோ அவனுக்கு வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டான்.
இப்போது அவள் அப்படி கேட்கவும், “ச் அது” என்று அவன் தடுமாறினான். அவளோ, “என் மேல பரிதாபப்பட்டு, என்ன காப்பாத்தனும்னு நினைச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ் சார். பட் என்ன எனக்கே பாத்துக்க தெரியும்” என்றப்படி அங்கிருந்து நகர்ந்தாள்.
அவளின் பேச்சில், அவள் கரத்தை அவன் அழுத்திப் பிடித்து அவன் நிறுத்த முயல, அவளோ, “ச் என்ன சார் பண்றீங்க? கைய விடுங்க” என்றாள்.
“இங்க நீ இருக்கிற வரைக்கும் என்னோட பொறுப்பு” என்று அவன் சொல்ல, இப்போது பூஜாவுக்கோ அத்தனைக் கோவம் வந்தது. “அதான் நான் தான் சொல்லிட்டேன் தான. காலையில இங்க இருந்து கிளம்பிடுவேன்னு” என்றப்படி கரத்தை உறுவ முயன்றாள்.
ஏனோ அவன் பிடித்திருந்த பிடி அத்தனை இறுக்கமாய் இறுக்க, வயிறு வேறு வலிப்பது போல் தோன்ற, அவனிடம் இருந்து தன் கரத்தை உறுவ முடியாத இயலாமையும் சேர்ந்துக் கொள்ள கண்ணெல்லாம் கலங்கியது.
“நீ எங்க சேரனும்? எப்போ கெளம்பனும்னு நான் தான் டிசைட் பண்ணுவேன்” என்று அர்ஜூன் சொல்ல, “அத டிசைட் பண்ண நீங்க யார் சார்?” என்று இவளும் கோவமாய் கேட்க, அவனோ, “நான் உன் கார்டியன்” என்றான்.
அவனுடைய பேச்சில், “எனக்கு உங்கள மாதிரி ஒரு கார்டியன் எல்லாம் தேவையே இல்ல” என்றாள்.
“ஹே என்ன நானும் சின்ன பொண்ணுன்னு பொறுமையா பேசுனா, நீ என்னமோ” என்று சொல்லும் போதுத்தான் அவள் கண்கள் வலியில் கலங்கிக் கொண்டிருப்பதையே கவனித்தான். அதில் சட்டென்று வேகமாய் அவன் கரத்தை விலக்கிக் கொள்ள, அவளோ, “உங்களுக்குத்தான் என்ன பிடிக்கலத்தான? என்னைப் பார்க்கவே பிடிக்கலன்னுத்தான, என்ன கிளாஸ விட்டு அனுப்புனீங்க? ஈவன் அந்த சாருக்கும், உங்களுக்கும் பெருசா எந்த வித்தியாசமும் கிடையாது. சும்மா என் மேல அக்கற இருக்கிற மாதிரி நீங்க ஒன்னும் காமிச்சிக்க வேண்டாம். நான் வேணும்னா ஊருக்கே போயிடுறேன்” என்று கடகடவென்று சொல்லிவிட்டு அவள் அறைக்குள் செல்ல முயன்றாள்.
இப்போது அவள் கரத்தை மெதுவாய் அர்ஜூன் பிடிக்க, அவளோ, “இன்னும் என்ன சார் வேணும்?” என்றாள். அவள் முகத்தில் அப்படி ஒரு சோர்வு, கோவம், வெறுப்பு, இயலாமை.
அவனோ இம்முறை கோவத்தை கை விட்டு விட்டு, “உனக்கு என்னப் பண்ணுது?” என்று கேட்டான்.
ஏனெனில், கிட்ட தட்ட அவளுடன் தானே ஆறுமாதமாய் இருக்கிறான். அவன் எத்தனை கோவப்பட்டு திட்டினாலும், இப்படி எல்லாம் எரிச்சலாகி அவன் பார்த்ததே கிடையாது. இப்போது அவள் முகமே அவளுக்கு ஏதோ பிரச்சனை என்பதை சொல்லியது.
அவளோ, “ஒன்னும் இல்ல” என்று சிறுமியாய் முகத்தை திருப்பிக் கொள்ள, ஏனோ இந்த பூஜா அர்ஜூனின் மனதை நிச்சயமாய் பாதித்தாள்.
அதில் தன்னுடைய இறுக்கம் மொத்தத்தையும் தூக்கி தூர வீசியவன், அவள் கன்னம் பற்றி, “நீ சொன்னாத்தான எனக்கு தெரியும்? காய்ச்சல் எதுவும் அடிக்கிதா?” என்று அவள் நெற்றி, கழுத்தில் கை வைத்துப் பார்த்தான்.
ஏனோ அவனுடைய அந்த அக்கறை, அவளுக்கு அவள் அப்பாவை நினைவுப்படுத்த, அர்ஜூனைக் கட்டிக் கொண்டாள். இம்முறை அவன் கோவப்படவில்லை. மாறாக, “என்னாச்சுடா?” என்றான். அவளோ, அவனை மேலும் இறுக்கமாய் கட்டிக் கொண்டாள்.
அதில் மெல்ல அவள் தலை முடியை கோதிக் கொடுத்தவனோ, “பூஜா” என்றான். “உங்க மடியில கொஞ்ச நேரம் படுத்துக்கட்டுமா?” என்று கேட்டாள் பூஜா.
(இதுக்கெல்லாம் அவன்கிட்ட எதுக்குமா நீ பர்மிஷன் கேட்டுட்டு இருக்க? செரி இருந்தாலும் அவன் கேட்க சொன்னாலும் சொல்லுவான். செரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்புறம் பெஸ்ட் கமெண்ட்ஸ பேனர்ல போஸ்ட் பண்ணிருக்கேன். சோ உங்க கமெண்ட்ஸும் அதுல வரலாம். சோ அதையும் செக் பண்ணிக்கோங்க. அப்புறம் மறக்காம ரேட்டிங் கொடுத்திடுங்க)
தொடரும்…
Santhanalakshmi S
super sissy🎉🎉🎉paravala vathi pooja ma mugam vattama iruka pathu konjam aarudhal panna pesuriye good🥰🥰🥰
Kavi Madhu
last scene super
Yasarath Yazar
nxt podunga pls
Ammu Sathish
சூப்பர்
priya priyanga
last scene super,but last night ethuvum ilainu sonnathu, konjam ematram.
Thiruviswa Viswa
Lovely❤❤❤❤❤❤❤
Indhu Mathi
super super super super super super super super super super super super super super super super super super super super super super super super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍❤️❤️😍❤😍❤️❤️😍❤️❤️😍❤️❤️😍❤️❤️❤️❤️❤️❤️❤️
Vashanthakumar Rushanikka
next part plz
Devi Saravanan
super sis ❤️❤️❤️❤️❤.
gayathri Shini
super sister
Annam Munees
super❤
RadhiAadhi s RadhiAadhi s
nice sis
G Srimathy
Super
Ani Shifana
super 😍
Yamuna Arumugam
❣💫
Keerthi S
ama ama romba than akkarai sakkarai ellam indha vaathiku 😤