கல்லூரி அத்தனைப் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்க, விஷ்வாவோ கோவமாய், “ச் எங்க கிட்ட எதுக்கு நீ சொல்லல” என்றான். “ஏன் உன்கிட்ட சொல்லிருந்தா, அப்படியே நீ போய் திருப்பி அடிச்சிட்டு வந்துடுவீயா?” என்று கேட்டாள் பிரியா.
அதில் பிரியாவை முறைத்தவனோ, “அட்லீஸ்ட் மேனேஜ்மெண்ட்க்கிட்ட கம்பிளைண்ட் பண்ணிருக்கலாம்த்தான” என்றான். “ஆமா! ஆமா அப்படியே ஆக்சன் எடுத்துடுவாங்க” என்று பிரியா கேட்டாள்.
“ஹேய் ரெண்டு பேரும் இப்போ எதுக்கு, என்ன பாட்டு கேட்க விடாம டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கீங்க” என்றவள் காதில் இருந்த ஏர்பட்ஸை எடுத்தாள். “ஹேய், உனக்காகத்தான பேசிட்டு இருக்கோம்” என்று பிரியா சொல்ல, “ச் அதுலாம் ஒரு விஷயமா? ஆமா நெக்ஸ்ட் ஹவர் யாரோடது” என்றாள்.
“ஹே என்ன நீ இவ்ளோ ஈஸியா சொல்லிட்ட. அந்த சீனியர்ஸ் உன்கிட்ட அப்படி பிகேவ் பண்ணியிருக்காங்க. ஏதாச்சும் பிரச்சனையாகியிருந்தா?” என்று கேட்டாள்.
“அதெல்லாம் ஆகாது. ஈவன் நம்ம சீனியர்ஸ் அந்த அளவுக்குலாம் ஒர்த் இல்ல” என்று கிண்டலாய் பூஜா சொல்ல, “ஹேய் உனக்கு எல்லாமே விளையாட்டுத்தான். எனக்கென்னமோ உன்கிட்ட அடி வாங்கிட்டு போன அந்த சீனியர்ஸ்! சும்மா இருப்பாங்கன்னு தோணல. பேசாம, உங்க அண்ணன்கிட்ட சொல்லிடலாம்” என்றாள் பிரியா.
அதில் பூஜாவோ, “அண்ணாவா?” என்று ஒரு நொடி யோசித்து அடுத்த நொடி, “உன் அண்ணாட்ட அப்படியே சொல்லிட்டாலும், உடனே வந்து கேட்டிருவாரு” என்றவளுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு அவனுடன் நடந்த நிகழ்வு மின்னலென நினைவுக்கு வந்தது.
அவளை ஹாஸ்டலில் இருந்து அழைத்து வந்திருந்த நாள். பூஜா நிம்மதியாய் தூங்கியிருக்க, அர்ஜூன் தான் விடிய விடிய அவளைப் பார்த்தப்படியே அமர்ந்திருந்தான்.
அவள் கண் விழிக்கும் போதே அவன் தன்னை மறந்து உறங்கியிருக்க, அவளுடைய விடியல். அவன் முகத்தில் தான் ஆரம்பமானது. அவனைப் பார்த்தப் பின்னே, அவளுக்கு எங்கு இருக்கிறோம்? என்ற விஷயமே நினைவுக்கு வர, “ஐயோ பூஜா! அவருக்கு ஆப்பு வைக்கிறேன்னு, இப்படி கடைசியில, உனக்கு நீயே ஆப்பு வெச்சிக்கிட்டீயே” என்று தலையில் கையை வைத்தாள்.
பின்பு ஏதோ யோசனை வந்தது போல், “நான் எதுக்கு டென்சன் ஆகனும்? எப்படியும் இவரு, என்ன இன்னிக்கே வேற ஹாஸ்டல் கொண்டு போய் சேர்த்து விட்டுடுவாரு” என்று தனக்குத் தானே சொல்ல, “ஹேய் நீ என்ன லூசா? எல்லா ஹாஸ்டலும் அந்த ஹாஸ்டல் மாதிரியா ப்ரீயா இருக்கும்? அதுவும் காலேஜ் ஹாஸ்டல்ல எல்லாம் சேர்த்து விட்டுட்டா, அதுக்கப்புறம் மூனு வருஷமும் சிறை வாசம் தான். அப்புறம் எங்க நீ வெளிய போறது?” என்று மூளை நினைவுப்படுத்தியது.
“ஐயோ! ஆமால்ல. இத எப்படி நான் மறந்தேன்” என்றவள் இப்போது சோபாவில் கன்னத்தில் கை வைத்து தூங்கிக் கொண்டிருப்பவனைப் பார்த்தாள்.
“அட என்ன புரோபசர். உங்க ரூல்ஸ எல்லாம் கேட்டா, ஸ்டூடண்ட் எங்களுக்கே டென்சன் ஆகும். அவங்க டென்சன் ஆக மாட்டாங்களா? சோ இது உங்க தப்புத்தான். அப்போ அந்த தப்புக்கான புல் ரெஸ்பான்சிபிலிட்டியும் நீங்கத்தான் ஏத்துக்கனும்” என்று அவனைப் பார்த்து கூறினாள்.
அவனோ அணிந்திருந்த கண்ணாடியை கூட கழட்டாது அப்படியே, உறங்கிக் கொண்டிருக்க, “கனவுலையும் கிளாஸ் எடுத்துட்டு இருப்பாரோ?” என்று கிண்டலாய் யோசித்தவள், பின் மெல்ல அவனை நெருங்கி, அவன் கண்ணில் அணிந்திருந்த கண்ணாடியை கழட்டினாள்.
அதில் அவன் இப்போது சற்று அசைய, “ஐயோ” என்று இவள் வேகமாய் எழ நினைக்க, அதற்குள் அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான் அர்ஜூன்.
சட்டென்று அவன் படுத்துக் கொள்ளவும், ஒரு நொடி அவளுக்கு புரியவே இல்லை. ஆனாலும் அந்த நொடி அவளுக்குள் என்னவோ ஒரு மாற்றம்.
“ச்சே, இந்த வாத்தி ஏன் என்ன இவ்ளோ டிஸ்டர்ப் பண்றாரு” என்று தன்னைத் தானே கேட்டாள். அவனோ இப்போது அவள் வயிற்றைக் கட்டிக் கொண்டு தூங்க, அவனுடைய தாடி, அவளுக்கு குறுகுறுப்பை ஏற்படுத்தியது.
அதிலும் அவள் இரவு உடை சற்று மேலேறியிருக்க, அவள் வெற்று இடையில் அவன் கன்னம் மெலிதாய் தீண்டியிருக்க, பெண்ணவளுக்கு அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது.
“உப்.. தள்ளி நின்னு சைட்ட்டிக்கிறப்பையே, என்னென்னமோ தோணும். இப்போ இப்படி மடியில படுத்திருந்தா, எனக்கு வேற தூக்கி கொஞ்சனும்னு தோணுமே” என்றவள் இப்போது அவன் முகத்தைப் பார்த்தாள்.
கலைந்த சிகை, உறக்கத்திலும் முகத்தில் ஒரு வித இறுக்கம், அதிலும் அவனுடைய அழகான, அளவான தாடி, அவன் கூர்மையான மூக்கு” என்று அவனையேத்தான் பார்த்தாள்.
“ப்பா செம்ம ஹேண்ட்சம் பீஸு. இத்தனூண்டு சிரிச்சா, மொத்த காலேஜும் இவர் பின்னாடித்தான் வரும்” என்று அவனை மானசீகமாய் ரசித்தாள்.
“வேண்டாம் வேண்டாம். சிரிக்காமே இருக்கிறப்பையே சாருக்கு டிமெண்ட் ஜாஸ்தி! இதுல சிரிச்சிட்டா, அப்புறம் நமக்கு காம்பிடீசன் அதிகமாகிடும்” என்று தனக்குள்ளே சொல்லியவள், இப்போது மெல்ல அவன் சிகைக்குள் விரல் நுழைத்தாள்.
“ம்மா” என்று முனங்கியவன், இன்னுமே அவளை இறுக்கிக் கொள்ள, அவனுடைய முரட்டு உதடுகள், அவள் தேகத்தை அழுத்தமாய் தீண்டியது.
“ஐயோ சார்!. என்ன டெம்ட் பண்ணிட்டு இருக்கீங்க” என்று உறங்கிக் கொண்டிருந்தவனிடம் பேசினாள். அவனுக்கோ நீண்ட நாட்கள், இல்லை இல்லை நீண்ட வருடங்களுக்குப் பின், அவனுக்கே அவனுக்கான ஒரு மடி கிடைத்த நிம்மதியில் உறக்கத்தில் இருந்து எழுந்திருக்கவில்லை.
மெல்ல அவன் தலையைக் கோதிக் கொடுத்தவளுக்கு, அவனை இப்படியே ரசித்துக் கொள்ளத்தான் ஆசை. ஆனால் அவளுடைய இயல்பு தலைத் தூக்க, “இத ஒரு செல்பி எடுத்து வெச்சிக்கலாம். பியூசர்ல யூஸ் ஆகும்” என்றப்படி தன் மொபைலை எட்டி எடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டாள்.
ஆனால் அவள் அறிந்திருக்கவில்லை. அந்த புகைப்படத்தால், அர்ஜூன் எத்தனை பெரிய சவாலை எல்லாம் வருங்காலத்தில் சந்திக்க நேரிடும் என்று
“இன்னும் கூட கொஞ்சம் க்ளோஸா எடுத்துக்கலாம்” என்றவள், அவன் முகத்தை நோக்கி குனிய, சரியாக அன்னேரம் தான், அர்ஜூனுடைய மொபைல் சத்தம் போட்டு அடித்தது.
அந்த சத்தத்தில், பூஜா வேகமாய் விலக, அர்ஜூன் கண்ணைத் திறக்க, அந்த நொடி அவனுமே அப்படி ஒரு விடியலை எதிர்பார்த்திருக்க மாட்டான்.
“என் ரூம்ல என்னப் பண்ற?” என்று அவன் அதிர்ச்சியாய் கேட்க, “என் மடியில நீங்க என்னப் பண்ணிட்டு இருந்தீங்களோ அதேத்தான் சார் பண்ணிட்டு இருந்தேன்” என்று அசராது கூறினாள்.
அப்போதே அவள் மடியில் படுத்திருப்பதே புரிய, “ஐயோ!” என்று அடித்துப் பிடித்து எழுந்தான் அர்ஜூன். ஏனோ அவனுடைய அந்த பதட்டம், இவளை அவனுடன் விளையாட சொல்லி வம்பிழுந்தது.
“அட என்ன சார்? நைட்டெல்லாம் தூங்க விடாம இப்படி பண்ணிட்டீங்க” என்று குறையாய் அவள் சொல்ல, “என்ன?” என்று அதிர்ந்தவனுக்கு ஒரு நொடி உலகமே தலைகீழாய் சுற்றிய உணர்வு.
“நானா? நான் எப்படி?” என்றவனுக்கு அவன் வரும் போது அவள் உறங்கிக் கொண்டிருந்தாள், என்ற விஷயமே தற்காலிகமாய் மறந்திருக்க, அவனுடைய பதட்டத்தை சில நொடி ரசித்தவள், அதன் பின்னே, “ஐயோ சார்! நீங்க நினைக்கிற மாதிரி பெரிய தப்புலாம் இல்ல சார். சின்னதா குட்டி தப்புத்தான்” என்று விரலை குவித்துக் கூறினாள்.
“என்ன?” என்றவன் அப்போதும் அதிர்ச்சியாக, அதற்குள் அவனுடைய மொபைல் மீண்டும் அடித்தது. அதில் அவன் மொபைலைப் பார்க்க, பூஜாவோ, அப்படியே நைஸாக எழுந்து குளியலறைக்குள் புகுந்திருந்தாள்.
“ச்சே அர்ஜூன்? எப்படிடா? அவ மடியில படுத்து தூங்கியிருக்க. அவ உன்னப் பத்தி என்ன நினைச்சிருப்பா? நீ ஒரு புரோபசர். அவ உன்னோட ஸ்டூடண்ட்” என்று தனக்குத் தானே திருப்பி திருப்பி சொல்லியவனை சரியாக புலம்ப கூட விடாது, மாதவ் லைனில் வந்தான்.
‘ச் இவன் எதுக்கு இன்னேரத்துல கூப்பிடுறான்” என்று கடுப்பாய் எடுத்து காதில் வைக்க, “அர்ஜூன் உனக்கொன்னும் பிரச்சன இல்லத்தான?” என்று கேட்டான் மாதவ்.
அதில் கடுப்பானவனோ, “உனக்குத்தான் பிரச்சனையாக போது” என்று திட்ட, “இல்ல அர்ஜூன் எனக்கு நேத்து ஒரு கனவு. சடனா நீ எனக்கு கால் பன்ணி. லேடிஸ் ஹாஸ்டல்ல இடம் வேணும்னு சொன்ன மாதிரி” என்று மாதவ் சொல்ல, இங்கே அர்ஜூனோ பல்லைக் கடித்தான்.
“ச் போன்ன வை டா” என்று திட்டிவிட்டு அழைப்பைத் துண்டித்த அர்ஜூன், அடுத்த நொடி ஆன்லைனில் இருந்த அத்தனை வுமன்ஸ் ஹாஸ்டலையும் மின்னலென அலசினான். ஆனால் எங்குமே இடம் இல்லை என்ற தகவல் மட்டுமே வர அவன் சோர்ந்துத்தான் போனான்.
“பேசாம காலேஜ் ஹாஸ்டல்ல கேட்டுடலாம்” என்ற முடிவோடுத்தான், அர்ஜூன் அன்று கல்லூரிக்கு வந்திருந்தான். ஆனால் அங்கேயும் இப்போதைக்கு இடம் இல்லை என்ற தகவல் தான் கிடைத்தது.
அப்போது கூட, “உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணுக்கா?” என்று கேட்க, “ஆ.ங் அப்படில்லாம் இல்ல. ஸ்டூடண்ட் ஒருத்தவங்களுக்குத்தான்” என்றிருந்தான். ஒரு வேளை அவனுக்கு தெரிந்த பெண் என்று சொல்லியிருந்தால் சீட் கிடைத்திருக்கும். ஆனாலும் அதை செய்ய அவனுடைய ஈகோ விட்டிருக்கவில்லை.
அதன் விளைவு இந்த ஒரு வாரமாய், அவளுடன் தான் இருக்கிறான். ஆனால் அந்த ஒரு நாளுக்குப் பின், அவன் அந்த அறைக்குள் தலை வைத்தே படுக்கவில்லை. அவனுடைய ஸ்டடி ரூம்மையே பெட்ரூம்மாக்கி அங்கேயே படுத்துக் கொண்டான்.
அவனுக்கு அத்தனை எளிதில் புது இடம் எல்லாம் ஒத்தே போகாது. அதன் விளைவு தினமுமே ஒரு வித எரிச்சலுடன் தான் கல்லூரிக்கு வந்துக் கொண்டிருந்தான் அர்ஜூன்.
இதை எல்லாம் யோசித்துப் பார்த்துக் கொண்டிருந்த பூஜாவின் செவியில், “ஹேய் அர்ஜூன் சார் வந்துட்டு இருக்காரு” என்ற மாணவர்களின் பதட்டமான குரல் விழ, இவ்வுலகம் வந்து சேர்ந்தாள்.
அவள் கண்கள் அன்னிட்சையாய் அவனைத் தேடி அலைப்பாய, அவனோ அத்தனை இறுக்கத்துடன் தான் வகுப்பறைக்குள் நுழைந்தான்.
“என்ன பிரியா? சார் ரொம்ப ஜாலி மூட்ல இருக்காரு போலையே” என்று கிண்டலாய் பூஜா கேட்க, “ச் வாயை மூடுடி. நேத்தே நம்ம மூனு பேர வெளிய அனுப்பிட்டாரு” என்றாள்.
“வா இன்னிக்கு போவோம். இன்னேரம் கேண்டின்ல” என்று பூஜா ஏதோ சொல்லி முடிக்கும் முன்னே, “சைலண்ட்” என்று டேபிளில் ஓங்கி தட்டினான்.
அதில் அத்தனைப் பேரும் அவனைப் பார்க்க, அவனோ, அத்தனை கோவமாய் “எல்லாரும் படிக்கத்தான வந்திருக்கீங்க?” என்று கேட்டான்.
அவனின் கேள்வியில் ஏதோ நடந்துள்ளது என்பது புரிய, அத்தனைப் பேரும் பதட்டமாய் ஒருவரை ஒருவர் பார்க்க, பூஜாவோ, அர்ஜூன் அணிந்திருந்த சட்டையைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நம்ம எடுத்து வச்ச ட்ரஸ போட்டுட்டு வந்தாத்தான் என்னவாம்? அத போட்டுட்டு வந்திருந்தா, அப்படியே மேட்சிங்கா இருந்திருக்கும்” என்று அந்த ஆராய்ச்சியில் இருந்தாள்.
அதற்குள் அவனோ, “கம்பிளைண்ட் பாக்ஸ் இருக்கிறது, ஸ்டூடண்ட்ஸோட வெல்பேர் காக. அத வெச்சி விளையாடுறதுக்கு இல்ல” என்று கையில் இருந்த பேப்பரை தூக்கி காட்டி கர்ஜித்தான்.
அந்த பேப்பரைப் பார்த்து அதிர்ந்த பிரியாவோ, “ஐயோ பூஜா, இன்னிக்கு நம்ம காலி” என்றாள். அதன் பின்னே அவள் நிமிர்ந்து அவன் கையில் இருந்த அந்த லெட்டரைப் பார்த்தாள். விஷ்வாவுக்கெல்லாம் மூச்சே வரவில்லை.
ஏனெனில் அதில் இருந்தது அவனுடைய கையெழுத்தாயிற்றே. இப்படி இருவரையும் பயத்தில் உறைய வைத்த பூஜாவோ, இப்போது மீண்டும் அவனைத் தான் மனசாட்சியே இன்றி சைட் அடித்துக் கொண்டிருந்தாள்.
“கோவப்படுறப்ப கூட நம்ம ஆளு ஒரு மாதிரி ஹெத்தா, தெலுங்கு பட ஹீரோ லுக்குலத்தான் இருக்காரு” என்று அவளே வேறு சொல்லிக் கொண்டாள்.
(ஆமம்மா! அவன் அடிச்சா கூட அப்படித்தான் தெலுங்கு ஹீரோ மாதிரித்தான் இருக்கும். உன் பிரண்ட்ஸ் அங்க பயத்துல செத்துட்டு இருக்காங்க. நீ சைட்டடிச்சிட்டு இருக்க. ரைட்டு. அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்த எபிசோட்ல பாக்கலாம். அப்புறம் சில பேருக்கு ரிஜிஸ்டர் பண்ண முடியலன்னு சொல்லிருந்தீங்க. ஒன்ஸ் பிரவுசர் cache எல்லாம் delete பண்ணிட்டு ட்ரைப் பண்ணி பாருங்க பிரண்ட்ஸ். அதுக்கப்புறம் இன்னிக்கு எபிசோட் எப்படி இருந்திச்சுன்னு மறக்காம உங்க கருத்த சொல்லிடுங்க. அப்புறம் பெஸ்ட் கமெண்ட்ஸ பேனர்ல போஸ்ட் பண்ணிருக்கேன். சோ உங்க கமெண்ட்ஸும் அதுல வரலாம். சோ அதையும் செக் பண்ணிக்கோங்க. அப்புறம் மறக்காம ரேட்டிங் கொடுத்திடுங்க)
தொடரும்…
jeyan masila
Good
G Srimathy
அர்ஜுன் நிலை மோசம் தான்
Indhu Mathi
super 👌❤️❤️
Ponmalar M
Innaiku enna sambavam sis 😅😅😅 Superb sis 😍😍😍🥰
Mathan Aarthe
wow super pa ❤
Vel raj
very very nice,
Geetha Thulasi
very nice superrrrrrr 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Santhanalakshmi S
super sissy🎉🎉🎉 nalla panringa da rendu perum😂😂😂yen pooja ma rendu jeevan kadharudhe un kadhula vizhugalaya 😂😁indha ranakalathalayum unaku oru kudhukalam🤭🤭 enjoy thelungu pada hero ena panna porarunu nanga nalaiku vandhu pakkurom🤣🤣🤣
Priya Ranjithkumar
semma
Devi Saravanan
super sis ❤️❤️❤️❤️❤
Ammu Gnanarajan
enga poi mudiyumo
Menaga Mathu
வாவ் எங்க போய் முடியுமோ இது
Koki Koki
super 🤩