வெளியில் வெள்ளி நிலா குளிர் காய, பால்கனியில் உலாவிக் கொண்டிருந்த அர்ஜூனின் கண்களிலோ அத்தனைக் கோவம். கோவத்தைக் கட்டுப்படுத்த வழி தெரியாது, அங்கும், இங்கும் என்று உலாவிக் கொண்டிருந்தான்.
அவனுடைய ஒட்டு மொத்த கோவத்துக்கும் காரணமானவளோ, அவனுடைய அறையில், அவன் கட்டிலில், டெட்டிபியர் ஒன்றை கட்டிப் பிடித்து உறங்கிக் கொண்டிருந்தாள். இப்போது அவனுடைய கோவம் மீண்டும், தன் அம்மாவிடம் திரும்ப, நள்ளிரவு என்றும் பாராது அவருக்கு கால் செய்தான்.
அந்தப் பக்கம் அட்டண்ட் செய்தவரோ, “இன்னேரத்துல எதுக்குடா திரும்ப திரும்ப கால் பண்ற” என்று பாதி உறக்கத்தில் கேட்டார்.
“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க? எனக்கு தெரியாது. உடனே கிளம்பி இங்க வாங்க” என்றான் அர்ஜூன்.
அதில் கடுப்பானவரோ, “இப்போ உனக்கு என்னடா பிரச்சன?” என்று கேட்க, “என்ன பிரச்சனையா? இவள எப்படி நான் என் கூட வச்சிருப்பேன்” என்று கோவமாய் கேட்டான் அர்ஜூன்.
“ம் அதெல்லாம் நீ அவ ஹாஸ்டலுக்கு போயி பிரச்சன பண்றதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும். உன்னாலத்தான் அவள ஹாஸ்டல்ல இருந்து போக சொல்லிட்டாங்க” என்றார் அவர்.
“உங்களாலத்தான். நான் அவள தேடி போனேன்” என்று இவன் பொறுமையிழந்து கத்த, “தேடி போனவன் எதுக்குடா, அவங்க கிட்ட போலீஸ்ல கம்பிளைண்ட் பண்ணிடுவேன். அது இதுன்னு ரூல்ஸ் பேசுன. அதான் அவங்க, கடுப்பாகி, வெளிய போக சொல்லிட்டாங்க” என்றார்.
“ம்மா” என்று அவன் பல்லைக் கடிக்க, “என்னடா ம்மா. அவங்க என்ன உன்னோட ஸ்டூடண்டா? நீ மிரட்டுனதும், அவங்க பயந்துப் போய் சேர்த்துக்கிடுறதுக்கு. அவங்க கிட்ட நீ பணிவாத்தான் பேசியிருக்கனும். இப்போ உன்னாலத்தான். அவளுக்கு இருக்க இடம் இல்லாம போச்சு” என்றார்.
“என்னது?” என்று இவன் கேட்க, “இங்கப்பாரு. நானே மாத்திர போட்டுட்டு படுத்திருக்கேன். சும்மா சும்மா எனக்கு கால் பண்ணி தொல்ல பண்ணாத. அவள உன் பொண்டாட்டின்னு நினைச்சு உன் கூடவே வச்சிக்கிட்டாலும் சரி. இல்ல. தெரிஞ்ச பொண்னுன்னு நினைச்சி தங்குறதுக்கு இடம் கொடுத்தாலும் சரி. பூஜா அங்கத்தான் இருப்பா. அதுக்கு மேல உனக்கு தெரிஞ்ச ஹாஸ்டல் இருந்தா கொண்டு போய் சேர்த்து விடு. இல்லன்னா, உன் பேர யூஸ் பண்ணி, உங்க காலேஜ் ஹாஸ்டல்ல இடம் வாங்கி கொடு” என்று அவனால் செய்ய முடியாத விஷயங்களை சொல்லி வெறுப்பேத்தினார்.
“ச் என்னோட வேலைய என்னால எப்படி மிஸ்யூஸ் பண்ண முடியும்?” என்று கோவமாய் அர்ஜூன் கேட்க, “முடியாதுன்னா, அமைதியா படுத்து தூங்குடா. சும்மா சும்மா நடு ராத்திரி கால் பண்ணி தொல்ல பண்ணிட்டு” என்றவர் கால்லை கட் செய்திருந்தார்.
“ம்மா” என்றவனுடைய சத்தம் எல்லாம் பால்கனி காற்றோடு சேர்ந்து கரைந்தது. “ஏண்டா அர்ஜூன்? அவங்க கிட்ட போயி பிரச்சன பண்ண?” என்று தன்னைத் தானே நொந்துக் கொண்டான்.
ஏனெனில் பூஜாவைப் பார்த்ததும் ஒரு நொடி இளகியவன், அவளுக்கு ஒன்னும் ஆகவில்லை என்றப் பின்னே சற்று தெளிந்தான். அதன் பின் அவளிடம் எதுவும் கேட்காது ஹாஸ்டலுக்கு அழைத்து சென்றான்.
ஆனால் அங்கே இருந்த ரிசப்சனிஸ்டோ, “உங்க திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு நீங்க கிளம்பலாம்” என்றிருந்தார். அதைக் கேட்டு பூஜாவுக்கு அதிர்ச்சி என்றால் அர்ஜூனோ கோவமாய், “என்ன சொல்றீங்க நீங்க?” என்றவன் ரூல்ஸ் பத்தி எல்லாம் பேசினர்.
அவர்களோ மிகவும் எளிதாய், “இது ஒர்க்கிங் வுமன் ஹாஸ்டல். இங்க நாங்க படிக்கிற பொண்ணுக்கு இடம் கொடுத்ததே பெரிய விஷயம். அப்பவே சொல்லித்தான் நாங்க ரூம் அலாட் பண்ணியிருந்தோம். நீங்க என்னென்னா, போலீஸ், அது இதுன்னு மிரட்டுறீங்க. இந்தப் பொண்ண இங்க வச்சிருந்தா, தேவையில்லாம எங்க ஹாஸ்டல் நேம் தான் ஸ்பாயில் ஆகும். அதனால, நீங்களே தாராளமா, இவங்கள கூட்டிட்டு போகலாம்” என்றிருந்தனர்.
அதில் பூஜாவோ அர்ஜூனைப் பார்க்க, அவனோ, “ச் அது எங்கம்மா பண்ண டென்சன்லத்தான். அப்படி” என்று பூஜாவிடம் தனக்கு கவலையே இல்லை என்பது போல் பேசினான்.
ஆனால் அவளோ எதுவுமே சொல்லாது, “இப்போ நான் எங்க தங்குறது?” என்று கேட்டாள்.
“ஆ..ங் அது” என்று இவன் பேசி முடிக்கும் முன்னே, அவள் தேவகிக்கு கால் செய்திருக்க, அவரோ, “இன்னேரத்துல அவள ரோட்டுல நிக்க வச்சிட்டு இதெல்லாம் பேசுவீயாடா? நீ எல்லாம் மனுஷனா? ஒழுங்கா அவள உன் வீட்டுக்கு கூட்டிட்டு போ. அதுக்கப்புறம் காலையில பாத்துக்கலாம்” என்று முடித்து விட்டார்.
அதில் பூஜாவுக்குமே அதிர்ச்சித்தான். “என்னது? இவர் வீட்டுலையா? ஐயோ பூஜா! உனக்கு நீயே ஆப்பு வச்சிக்கிட்டீயே. இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா, நான் மொபைல்ல ஆப் பண்ணியே வச்சிருக்க மாட்டேன்னே” என்று தனக்குள் புலம்பினாள்.
அர்ஜூனுமே வேறு வழியின்றி அவளை தன்னுடைய பிளாட்டுக்கு அழைத்து வந்திருந்தான்.
வந்தவன், “இங்கப்பாரு. இங்க நீ அந்த ரூம்ல” என்று அவன் அவனுடைய அறைக்குள் செல்லவே கூடாது என்று சொல்ல வந்தான்.
ஆனால் அவனின் தர்மபத்னியோ, “ஒகே சார். நான் இனிமே அங்கேயே தங்கிக்கிறேன்” என்று சொல்லியப்படி வந்த உடனேயே அவனுடைய அறையை அவனிடம் இருந்து பறித்துக் கொண்டாள்.
“ஹேய் இல்ல!” என்றவன் வேகமாய் அவளின் பின்னே செல்லப் போக, அவளோ, “சார். நான் ட்ரஸ் மாத்தனும்” என்றாள்.
“மாத்து அத ஏன் என்கிட்ட சொல்ற?” என்றவன் எரிந்து விழ, அவளோ, “நீங்க இப்படி என் பின்னாடி வந்தா, நான் எப்படி சேஞ் பண்ண முடியும்?” என்று அவள் என்னவோ சாதாரணமாய்த்தான் கேட்டாள்.
இங்கே இவனுக்குத்தான், என்னவோ போல் ஆகி விட, “ஐயோ இல்ல. நீ மாத்து” என்று திரும்பியும் பார்க்காது வெளியில் வந்திருந்தான்.
அதைப் பார்த்த பூஜாவோ, “சாரு அப்போ அந்த விஷயத்துல வீக்த்தான் போலையே. செரி. இத வச்சே, இங்க இருக்கிற வரைக்கும் சமாளிச்சிடலாம்” என்று தனக்குள்ளே சொல்லியவளும் கதவை சாத்திக் கொண்டாள்.
அதன் பின் அந்த அறைப் பக்கமே தலை வைத்துப் படுக்காதவன், அவனுடைய வீட்டுக்கு கால் செய்திருக்க, அவர்களோ, அவனுடனே வைத்துக் கொள் என்று சொல்லி முடித்து விட்டனர்.
இப்போது அதையெல்லாம் யோசித்தவனின் நினைவில் மாதவன் வர, அப்போதே மாதவனுக்கு கால் செய்து, “டேய் உனக்கு தெரிஞ்ச லேடிஸ் ஹாஸ்டல் இருக்கா?” என்றான்.
அரை உறக்கத்தில் இருந்தவனோ, “என்னடா ஆச்சு உனக்கு. காலையில இருந்து ஒரு மார்க்கமாவே திரியிற. இப்போ எதுக்கு லேடீஸ் ஹாஸ்டல் பத்தி எல்லாம் கேட்குற” என்றான்.
“டேய் அறிவு கெட்டவனே ஒரு புரோபசர் மாதிரி பேசுடா” என்று திட்டினான் அர்ஜூன்.
“எதே? இப்போ நான் என்ன தப்பா சொல்லிட்டேன்னு, இவன் என்ன இந்த திட்டு திட்டுறான்” என்று தனக்குள்ளே புலம்பியவன், “இன்னேரத்துல லேடிஸ் ஹாஸ்டலுக்கு நான் எங்கடா போவேன்” என்றான்.
“ச் எனக்கு தெரியாது. இப்பவே எனக்கு ஒரு ஹாஸ்டல்ல அட்மிஷன் போடனும்” என்று அவன் சொல்ல, “மணி என்ன தெரியுமா? இன்னேரத்துக்கு ஹாஸ்டல் வாட்ச்மேன் கூட தூங்கிட்டு இருப்பான். இன்னேரத்துல நான் யார்ட்ட பேசுறது” என்றான்.
“ச் உன்கிட்ட போயி கேட்டேன் பாரு என்ன சொல்லனும். எதுக்குமே நீ எல்லாம் லாய்க்கு இல்ல” என்று திட்டிவிட்டு அவன் கால்லை கட் செய்தான்.
அங்கே முற்றிலும் தூக்கத்தை பறிக் கொடுத்தவன், “இவனுக்கு என்னாச்சு? எதுவும் காத்து கருப்பு அடிச்சிருச்சா? கொஞ்ச நாளா ஒரு மாதிரியே திரியிறான். இவனுக்கு எதுக்கு லேடிஸ் ஹாஸ்டல்ல ரூம்?” என்று யோசித்தான்.
ஆனால் இப்போதைக்கு அவன் உறக்கமே முன்னிலை வகிக்க, மாதவனும் இழுத்துப் போர்த்தி தூங்கி விட்டான்.
இப்படி அத்தனைப் பேரும் தூங்கிவிட, அர்ஜூன் மட்டும் தான் விடிய விடிய கண் விழித்துக் கிடந்தான். கிட்ட தட்ட அதிகாலைப் போல் அப்படியே பால்கனி சோபாவில் அமர்ந்தப்படியே அவன் கண் அசர, அவனின் நேரத்துக்கு குளிர் அவனை தொல்லை செய்தது.
அதில் வேறு வழியின்றி, பெட்சீட்டை எடுப்பதற்காக அவனுடைய அறைக்கு வந்தான்.
“சிட் என்னோட ரூமுக்குள்ள நான் போறதுக்கே என்ன யோசிக்க வச்சிட்டா” என்று பூஜாவை திட்டியவன். இப்போது கதவை தட்டுவோம்மா? வேண்டாமா?” என்று யோசித்தான்.
“ச் என் ரூம்? நான் எதுக்கு யோசிக்கனும்” என்றப்படி அவன் கதவில் கை வைக்க, அவள் பூட்டியிருக்கவில்லை. அதனால் கதவு திறந்துக் கொள்ள, அங்கே அவனின் மனைவியோ, குழந்தைக் கூட தோற்றுப் போய் விடும். அந்த அளவுக்கு விரலை வாய்க்குள் வைத்துக் கொண்டு சிறுமியாய் படுத்திருந்தாள்.
இதில் பற்றாக்குறைக்கு அவள் அணிந்திருந்த இரவு உடை வேறு, தானும் சிறுமித்தான் என்பது போல் அவனுடைய நிதானத்தை தடுமாற வைத்தது. டிஷர்டும், த்ரீ போர்த பேண்டும் அவள் அணிந்திருக்க, இப்போது சர்வ நிச்சயமாய், அவன் அதை எதிர்பார்த்திருக்கவில்லை.
“இது என்ன ட்ரஸ்னு இத போட்டிருக்கா” என்றவனோ, சுவற்றில் முட்டிக் கொள்ளாத குறைத்தான்.
அதற்குள் அவனின் மனமோ, “அவ எந்த ட்ரஸ் போட்டிருந்தா உனக்கென்ன? நீ இங்க பெட்ஷீட்த்தான எடுக்க வந்த. அந்த வேலைய மட்டும் பாரு” என்று எச்சரித்தது.
“ச் இன்னிக்கு ஒரு நாள் தான். நாளைக்கு காலையிலையே கொண்டு போய் ஏதாச்சும் ஒரு ஹாஸ்டல்ல சேர்த்து விட்டுறனும்” என்று அழுத்தி சொல்லியப்படி அவனுடைய பெட்ஷீட்டை எடுக்க வந்தான்.
ஆனால் அவனின் தர்மபத்னியோ, அதை சுருட்டி, தலைக்கு வைத்துக் கொண்டு படுத்திருந்தாள்.
“ச் பெட்ஷீட்ட எல்லாரும் போர்த்திப் படுத்தா, இவ மட்டும் தலைக்கு வச்சி படுத்திருக்கா” என்றவனின் பார்வை இப்போது இன்னும் குழந்தை முகம் மாறாத பாவையின் முகத்தில் பதிந்தது.
கொஞ்சம் கூட எந்த சிந்தனையுமின்றி, கலங்கமின்றி படுத்திருந்தாள். சட்டென்று அவனைப் பார்த்ததும் ஓடி வந்து அவள் கட்டிக் கொண்டது நினைவு வந்தது.
அவன் அடித்ததுக்கு, அவனிடமே அவனைக் கட்டிக் கொண்டு ஆறுதல் தேடிய அவன் மனைவியின் செயல். அந்த நொடியில் அவனை என்னமோ செய்தது.
இப்போது மீண்டும் அவளைப் பார்த்தான். அவனின் பார்வை அன்னிட்சை செயலாய், அவள் உச்சி தொட்டு பாதம் வரை பயணிக்க முயற்சிக்க, அவள் ஏறி இறங்கும் வதனங்களில், இங்கே இவனுக்கோ மூச்சு முட்டியது.
“டேய் அர்ஜூன்” என்று தன்னைத் தானே திட்டியவன் வேகமாய் முகத்தை திருப்பிக் கொண்டான். “புல் சிட். அவ உன்னோட ஸ்டூடண்ட் டா” என்று மனம் திட்டி தீர்க்க, “இல்ல அவ உன் ஒயிப்” என்று சொல்லாமல் சொல்வது போல், அவன் கட்டிய தாலி வெளியில் வந்து உரிமை கொண்டாடியது.
“ம்ஹூம் பெட்ஷீட்ட எடுத்துட்டு கிளம்பு” என்று மனம் திட்ட, அவள் பக்கம் பாக்காது கரத்தை மட்டும் பெட்ஷீட்டை எடுக்க கொண்டு செல்ல, இப்போது அவனின் மனைவியோ, அவள் தேடிய டெட்டிபியர் கிடைக்காது, அவன் கையைப் பிடித்து, அவன் கரங்களில் இருந்து சுருள் முடியில் முகத்தைப் புதைத்து உறக்கத்தை தொடர்ந்தாள்.
அதில் அவனின் கரம், அவள் பரிஷத்தை உணர, தீ சுட்டது போல் அவள் பக்கம் திரும்பினான். அவளோ, சிறு சலனமும் இன்றி உறங்கிக் கொண்டிருக்க, பெண்ணவளின் பரிஷத்தை உணர்ந்துக் கொண்டிருந்த, அவனின் கரமோ, இவனுக்குள் ஏதோ ஒன்றை விதைக்க முயற்சித்தது.
அதில் அப்படியே அவளின் அருகிலேயே கட்டிலில் பொத்தென்று அமர்ந்து விட்டான் அர்ஜுன்.
(ஐயா ராசா. புள்ள கைய புடிச்சதுக்கே, இப்படி ஆப் ஆகிட்ட. அப்போ மத்தது எல்லாம்? செரி. காலேஜ்ல மட்டும் ஒன்னா இருந்தாலே, புதுசு புதுசா ஆப்பு வைப்பா. இதுல இனி அர்ஜூன் சார் கூட வேற. ம்ஹூம் இனி என்னெல்லாம் நடக்கப் போதோ? சரி அது என்னென்னு அடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட் எப்படி இருந்திச்சுன்னு மறக்காம உங்க கருத்த சொல்லிடுங்க. அப்புறம் பெஸ்ட் கமெண்ட்ஸ பேனர்ல போஸ்ட் பண்ணிருக்கேன். சோ உங்க கமெண்ட்ஸும் அதுல வரலாம். சோ அதையும் செக் பண்ணிக்கோங்க. அப்புறம் மறக்காம ரேட்டிங் கொடுத்திடுங்க)
தொடரும்…
Indhu Mathi
super
Tamil Tamil
super sis
Sugashini Vinothan
next episode please
Umakrish Krish
Next episode pls
Santhanalakshmi S
super sissy🎉🎉🎉 achoooo pooja ma cute baby 😍😍😍yen vathi unaku idulam thevai dhana ella place layum namma adhikaram panna ethupangala 🤣🤣🤣paru unaku neeye aapu vachukita🤭🤭🤭ini pooja ma un kuda flat la dhan iruka pora nenaikran sirappana sambavangal irukum nu edhirpakkarom 😂😂😂😂😁😁😁😁
G Srimathy
இனி பூஜா இங்கு தான்
தினமும் டாம் & ஜெர்ரி சண்டை தான்
Geetha Thulasi
very nice superrrrrrr 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Indira Gandhi
டைப் பண்ணா சென்ட் ஆக மாட்டேங்குது
Indira Gandhi
எப்படி அர்ஜுன் 👡 பூஜாவை அவனோட அப்பார்ட்மெண்டுக்கு கூட்டிட்டு வந்துட்டா நம்ப முடியல இனிமே இவன் இப்படியே இரு வச்சிருப்பானா இல்ல வெளியில ஹாஸ்டல் பார்த்து அனுப்பி விட்டுருவானா ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தா தான் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும் 🥳
Anbu Anbu
சூப்பர்
Vel raj
Interesting……
Ponmalar M
super sis 😍😍😍 very excited to next ud sis 😁😁🥰
Ammu Gnanarajan
super arjun um pooja um enimey orey veetla tha irukanum.
Ammu Sathish
சூப்பர்.. அப்ப இனி ஒரு ஜாலி தான்.. 🥰🥰எப்படியோ அர்ஜுன் கூட இனி பூஜா ஒரே வீட்டில இருக்கனும் 🥰