வரம் – 23

அர்ஜூன் ஒரு பக்கம் பூஜாவைத் தேடிக் கொண்டிருக்க, அவளோ, அமைதியாய் அமர்ந்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தாள். அதில் அருகில் இருந்த சிறுவனோ, “அக்கா பீல் பண்ணாதக்கா. உன்ன இப்படி பாக்கவே நல்லா இல்ல” என்றான்.

“எப்படிடா அழாம இருப்பேன் நானு?” என்று அவள் கேட்க, “நீ எவ்வளவு பெரிய ஆளுக்கா, இதுக்கெல்லாம் அசரலாமா?” என்று அச்சிறுவன் கேட்க, “நான் எப்படி இதுக்கப்புறம் காலேஜூக்கு போக முடியும்?” என்றாள்.

“இதுக்கெல்லாமா லீவு வுடுவாங்க?” என்று அச்சிறுவன் கேட்க, இப்போது அவன் தலையிலேயே தட்டியவள், “அக்காக்குத்தான, இந்த பாப்கார்னு. சைக்கிள் கேப்புல நீ காலி பண்ணிட்டு இருக்க” என்றாள்.

“ஐயோ அக்கா! உனக்குத்தேன் வாங்கிட்டு வந்தேன். ஆனா நீத்தேன்ன அழுதுட்டு இருந்த” என்றான். “அழுதுட்டு இருந்தா, அதுக்குன்னு, நீயே சாப்பிட்டிருவீயா? இங்க வந்ததுக்கு, இது ஒன்னுத்தான் யூஸு” என்றவள், அவன் கையில் இருந்த பாப்கார்னை வாங்கி சாப்பிட்டாள்.

“ஏன்க்கா? எனக்கு ஒரு சந்தேகம்! அங்க நடுவுல இருக்கிறவரு ஏன்க்கா, அடிக்கடி, கைய கால தூக்கி காமிச்சிட்டே இருக்காரு? ஓடவும் மாட்டேங்கிறாரு. பிடிக்கவும் மாட்டேங்கிறாரு. அடிக்கவும் மாட்டேங்கிறாரு” என்று அவன் கேட்க, “டேய் அவர் தாண்டா அம்பையர். அவருத்தான் அவுட்டா? இல்ல சிக்ஸான்னு சொல்லுவாரு” என்றாள்.

“ஓ. அப்போ அவரு எந்த டீம்மு?” என்று இவன் கேட்க, அதில் அச்சிறுவனை முறைத்தவனோ, “கம்பெனிக்கு ஆள் இல்லன்னு, உன்ன ஐ பி எல் பாக்க கூட்டிட்டு வந்தேன் பாரு என்ன சொல்லனும்” என்றவள் அங்கே நடந்துக் கொண்டிருந்த மேட்சைப் பார்த்தாள்.

மீண்டும் ஒரு கேட்சை விட்டிருக்க, “ஐயோ போச்சு போச்சு. என்னத்தாண்டா இவனுங்க பீல்டிங் பண்றானுங்க. இவனுங்கள நம்பி வேற காலேஜ் புல்லா, அக்கா வம்பிழுத்து வெச்சிருக்கேன்” என்றாள்.

“விடுக்கா விடுக்கா, அடுத்த மேட்ச்ல பாத்துக்கலாம்” என்று அச்சிறுவன் சொல்ல, “ஏண்டா? இதுல ஜெயிச்சாத்தாண்டா குவாலிபை ஆக முடியும்” என்று அவள் சொல்ல, அதில் அவனோ, “விடுக்கா அப்படியும் அடுத்து மேட்சு வைப்பாங்கத்தான. அதுல வெளையாண்டு ஜெயிப்போம்” என்றான்.

“அப்படீங்க்ற? ஆனாலும், உன்ன கூட கூப்டு வந்ததும் நல்லதாப் போச்சு. இல்லன்னா பாரு. அக்கா தனியா, இந்த கூட்டத்துக்கு நடுவுல சிக்கி சின்னாப்பின்னமாகியிருக்கனும். பாப்கார்னும் கெடைச்சிருக்காது” என்றாள்.

“அட போக்கா. உன்னாலத்தேன், நான்லாம் இந்த கிரவுண்ட்க்குள்ளையே வந்திருக்கேன். என் சட்டைய பாத்தாலே, வாசல்ல நிக்குற வாட்ச்மேன் கூட உள்ள வுட மாட்டாரு. என் சோக்காலி பசங்க கிட்டலாம் சொல்லுவேன் பாரு” என்றான்.

அதில் அவன் தலை முடியை கலைத்து விட்டவளோ, “விடு அடுத்த மேட்ச்க்கு அவங்களையும் கூட்டிட்டு வந்திடுவோம்” என்றாள் பூஜா.

“செரிக்கா. செரிக்கா. உன் நல்ல மனசுக்காண்டியாச்சும், இன்னிக்கு நம்ம மேட்சு ஜெயிப்போம் பாரு” என்று அச்சிறுவன் சொல்ல, “அப்படிங்க்ற” என்றவள் மீண்டும் விளையாட்டில் மூழ்கிப் போனாள்.

இங்கே, அவளைத் தேடி அலைந்தவனோ, ஒரு கட்டத்தில் அங்கிருந்த ரோட்டோரம் பைக்கை நிறுத்திவிட்டு அப்படியே நின்றுவிட்டான். கலைந்த தலை முடி, கலங்கிய முகம், நிச்சயம் அவன் இப்படி ஒரு நாளும் இருந்திருக்க மாட்டான்.

“ச் எங்கப் போன பூஜா?” என்றவனுக்கு நொடிகள் கூட, கூட உண்மையில் அத்தனைப் பயமாய் இருந்தது.

“சிட் எல்லாம் என் தப்புத்தான். அவள அடிச்சிட்டு நான் பாட்டுக்கு வந்திருக்க கூடாது” என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டான்.

“அடிச்சிருக்கவே கூடாது அர்ஜூன். எந்த உரிமையில அவள நீ அடிச்ச. உன்ன பொறுத்தவரைக்கும அவ ஸ்டூடண்ட் தான. அப்படி இருக்கிறப்ப, கை நீட்டிடுவீயா?” என்று மீண்டும் மீண்டும் மனம் தடுமாற, மீண்டும் வீட்டுக்கு அழைத்தான்.

இம்முறை அழைப்பை அட்டண்ட் செய்தவரோ, “என்னடா? பூஜாவ பத்தி ஏதாச்சும் தெரிஞ்சிதா?” என்று கேட்க, “ஆ..ங் அது. நான் அவ பிரண்ட் நம்பர் கொடுக்கிறேன். எதுக்கும் அவ கூட இருக்காளான்னு கேட்டு சொல்றீங்களா?” என்றான்.

அதில் அவருக்கோ இன்னும் கோவம் கூடியது. “ஏன் இத கூட உன்னால கேட்க முடியாதா?” என்றவர் திட்ட, “ம்மா இன்னேரத்துல ஒரு ப்ரோபசர். ஸ்டூடண்ட் போனுக்கு எப்படி கால் பண்ண முடியும்?” என்றார்.

“ப்ரோபசரா கால் பண்ண வேண்டாம்ண்டா. பூஜா உன் பொண்டாட்டித்தான” என்று அவர் சொல்லி முடிக்கும் முன்னே, “ச் கால் பண்ணி கேட்டு சொல்ல முடியுமா? முடியாதா?” என்றான்.

“கேட்கிறேண்டா. உன்ன நம்பி அவள அனுப்பி வெச்சேன்ல எனக்கு இதுவும் வேணும். இதுக்கு மேலையும் வேணும்” என்று சொல்லியவர் அதன் பின் பிரியாவுக்கு கால் செய்து விசாரிக்க, அவளுக்கும் எதுவும் தெரிந்திருக்கவில்லை.

ஆனால் பிரியா பதட்டப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம். அவள் இப்படி இரவெல்லாம் எங்காவது சுற்றுவாள் என்று அவளுக்குத்தான் தெரியுமே. ஆனாலும், “இல்ல ஆண்டி. இங்க என் கூட இல்ல. நான் வேணும்னா மத்த பிரண்ட்ஸ்ட்ட கேட்டு பாக்குறேன்” என்றாள்.

இப்போது அர்ஜூனோ அப்படியே தூரத்தில் தெரிந்த கடலை வெறித்தப்படி, அப்படியே நின்றிருந்தான். மனம் அவனைப் போட்டு அத்தனைப் படுத்தியது. தினம் படிக்கும் செய்திகள். கண் முன்னே நடக்கும் சம்பவங்கள். அத்தனையும் நினைவுக்கு வர, “இல்ல இல்ல என் பூஜாக்கு எதுவும் ஆகாது” என்று தன் நெஞ்சில் கரத்தைப் பதித்தான்.

பதட்டத்தில் அவன் உள்ளம் “என் பூஜா” என்று சொல்லியதைக் கூட அவன் உணரவில்லை. ஆனால் இப்போதைக்கு அவளைப் பார்த்தால் போதும் என்ற நிலையில் தான் இருந்தான்.

கிட்ட தட்ட மணி பதினொன்றை தாண்டியிருக்க, அதற்கு மேல் பொறுமை இழந்தவன், போலீஸ் ஸ்டேசன் சென்று விடலாம் என்ற முடிவுக்கே வந்திருந்தான்.

அங்கே அவளோ, அணிந்திருந்த ஜெர்சியை கழட்டி, கழுத்தில் துண்டு போல் சுற்றிக் கொண்டவள், “மேட்ச் பாக்க வந்ததுக்கு, இந்த கோக் தாண்டா மிச்சம். இப்புடி சொதப்பிட்டானுங்களே” என்று அச்சிறுவன் தோளில் கைப் போட்டப்படி வந்தாள்.

“இப்போ என்னக்கா? அதான் கடைசியில நம்ம தல இறங்கி ரெண்டு சிக்சர் அடிச்சார்லக்கா” என்று இவன் சொல்ல, அதில் அச்சிறுவனைப் பார்த்தவளோ, “கொரோனோ ஐ பி எல் கிட்டா டா நீ? உன்ன மாதிரி ஆளுங்களாலத்தாண்டா, எங்க டீமுக்கே அவமானம். ஆனாலும் நீ சொன்னதும் செரித்தான். தல செம்ம மாஸ்ல” என்றவள் மேட்சைப் பற்றி மும்முரமாய் பேசிக் கொண்டிருக்க, அங்கே சரியாய் அவ்வழியாய் வந்த அர்ஜூனோ, பாதையில் கவனமின்றி ஒரு நொடி தடுமாறியிருக்க, அந்த பைக் லைட் வெளிச்சத்தில் இப்போது பூஜாவோ, “ச் யாருடா இது மூஞ்சுக்கு நேரா பைக்க கொண்டு வர்றது” என்று கையால் முகத்தை மறைத்திருக்க, அர்ஜூனின் பார்வையில் அவள் விழுந்திருக்கவில்லை.

அதிலும் அவள் கழுத்தை சுற்றியிருந்த ஜெர்சி, அவள் அணிந்திருந்த சேலையை மறைந்திருந்தது. அவனும் ஏதோ நினைவில் பைக்கை ஓட்டியவன், கவனித்திருக்கவில்லை.

இங்கே அச்சிறுவனோ, “ஐயோ அக்கா! ஓரமா வாக்கா” என்று பிடித்திழுத்து சென்றிருந்தான்.

அதன் பின்னே மணியைப் பார்த்தவள், “செரிடா. அக்கா கெளம்புறேன். நீ பாத்து வூட்டுக்கு போ” என்று சொல்ல, “ஏன்க்கா. நானும் வந்து வுட்டுட்டு போறேன்க்கா” என்றான்.

“அடேங்கப்பா. போடா! அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்” என்றவள், அந்த ஜெர்சியை அவனிடமே கொடுத்து விட்டு தள்ளி வந்தாள். வந்தவள் அப்போதே மொபைலை கையில் எடுத்தாள்.

“ம் இன்னேரம் எப்படியும், நம்ம அத்த அந்த வாத்திய போன் போட்டு செம்மையா டோஸ் விட்டுடுப்பாங்க. என்னையவே அடிச்சாருல்ல. அனுபவிக்கட்டும்” என்றவள் மொபைலை ஆன் செய்தாள்.

அவள் ஆன் செய்த மறு நொடி சரசரவென்று மெசேஜ் குவிந்திருக்க, அங்கே அர்ஜூனோ போலீஸ் ஸ்டேசனுக்குள் நுழைந்திருந்தான்.

“என்னது இது? இத்தனப் போனு. மெசேஜ் வந்திருக்கு. பிரியாலாம் கூப்டிருக்கா” என்றவள், வாட்சப்பை ஓபன் செய்ய, பிரியாவோ, “ஹேய் எங்கடி ஊர் சுத்திட்டு இருக்க. உன் வீட்டுல இருந்து கால் பண்ணாங்க” என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.

“ஐய்யய்யோ! பிரியா நம்பர் எப்படி அவங்களுக்கு தெரிஞ்சிச்சு” என்று தன்னைத் தானே நொந்தவள், அடுத்த நொடி அவசரமாய், தேவகிக்கு கால் செய்தாள். 

அந்தப் பக்கம் அவரோ அர்ஜூனிடம் பேசிக் கொண்டிருக்க, இப்போது, இவள் நம்பரில் இருந்து அழைப்பு வரவும்.”அர்ஜூன். பூஜா போன்ல இருந்துத்தான்பா கால் வருது” என்றார்.

“என்ன? உடனே பேசுங்க” என்று இவன் சொல்லி முடிக்கும் முன்னே, அழைப்பு கட்டாகியிருக்க, இப்போது தேவகியும், அர்ஜூனும் ஒரே நேரத்தில் அவள் மொபைலுக்கு ட்ரை செய்தனர்.

அதன் விளைவு மீண்டும் அவளுக்கு கால் செல்லவில்லை. அதற்குள்ளாக, அங்கே ஸ்டேசனில் இருந்தவரோ, “சார் அடுத்து நீங்க உள்ள போலாம்” என்றார்.

“ஒரு நிமிஷம் சார்” என்றவன் வேகமாய் வெளியில் வந்து இப்போது மீண்டும் பூஜாவுக்கு பதட்டமாய் கால் செய்ய, அங்கே பூஜாவோ, “ஐயோ இவரு எதுக்கு இப்போ எனக்கு கால் பண்றாரு” என்று யோசித்தவள் அட்டண்ட் செய்யாது நகத்தை கடித்து துப்பினாள்.

அவனோ மீண்டும் மீண்டும் கால் செய்ய, “வேற வழியே இல்ல பூஜா. இப்போ அவரு திட்டு திட்டுன்னு திட்டுவாரு. நீ எப்பவும் போல சைலண்ட் மூடுக்கு போயிடு. அதுத்தான் ஷேப்” என்று சொல்லியப்படி அட்டண்ட் செய்து காதில் வைத்தாள்.

அந்தப் பக்கம் அர்ஜூனோ, “பூஜா… எங்கப் போன நீ? இப்போ நீ எங்க இருக்க?” என்று அத்தனை ஆதங்கமாய் கேட்டான்.

அவன் வார்த்தையில் இருந்த அக்கறையில், ஒரு நொடி மனம் இறங்கினாலும், “நோ நோ பூஜா. இப்போ நீ ஏதாச்சும் பேசுன, அவரு மறுபடியும் மல ஏறிடுவாரு. அதனால கொஞ்சம் அமைதிய மெயிண்டெயின் பண்ணு. உன்ன எப்படில்லாம் திட்டுனாரு” என்று தனக்குள்ளே சொல்லியவள் வாயைத் திறக்கவே இல்லை.

“பூஜா. நான் பேசுறது கேட்குதா? பூஜா..” என்றவன் வாய் ஓயாது அவள் பெயரைத்தான் மந்திரம் போல் கூறினான். ஏனோ அவன் அவளுக்காக தவிப்பது அவளுக்கு அத்தனைப் பிடித்திருக்க, மேலும் சில நொடிகள் இழுத்தாள்.

“ஹேய் லைன்ல இருக்கீயா? பூஜா” என்று அர்ஜூன் கேட்க, “ம்” என்றாள். ஏனோ அவளுடைய அந்த ஒற்றை வார்த்தையை கேட்டப் பின் தான் அங்கே அவனுடைய இதயம் சீராய் துடிக்க ஆரம்பித்தது.

“உனக்கொன்னும் இல்லத்தான” என்று அவன் கேட்க, அதில் அவள் மீண்டும் அமைதியாய் இருக்க, “ச் எங்க இருக்க நீ?” என்று அவன் கேட்க, “அது. இங்க” என்று சுற்றிப் பார்த்தவள், பின், “கோவில்ல” என்று அங்கே இருந்த கோவிலைப் பார்த்து பச்சையாய் பொய் கூறினாள்.

“எந்த கோவில்? எங்க?” என்று கேட்டவன். பின், “அங்கேயே இரு. இப்போ நான் உடனே வரேன்” என்றவன், அழைப்பை கூட கட் செய்யாது வேகமாய் தன்னுடைய பைக்கை எடுத்து கிளம்பினான்.

இப்போது பூஜாவின் மனமோ “ஹேய் எந்த கோவில்டி இந்த நேரம் திறந்திருக்கும்” என்று கேட்க, “ஐயோ அத மறந்துட்டேன்னே” என்றவள் அவசரமாய் அந்த கோவில் வாசலுக்கு சென்றாள்.

கதவு பூட்டியிருக்க, அங்கே வாசலில் இருந்த திருநீறை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டவள் அருகில் இருந்த பூக்கடையில் இருந்த சந்தனத்தையும், நெற்றியில் இட்டுக் கொண்டாள்.

இங்கே அர்ஜூன் அவளைத் தேடி அவள் முன் வந்து நிற்கும் போது, அத்தனைப் பாவமாய் அந்த கோவில் வாசலில் கன்னத்தில் கை வைத்தப்படி அமர்ந்திருந்தாள். பார்த்தவுடனே அவன் உள்ளம் ஒரு நொடி உருகித்தான் போனது. அதே நேரம் இத்தனை நேரம் அவளைக் காணாது தவித்தவன், அவளைப் பார்த்த மறு நொடி, வேகமாய் ஒடிச் சென்று அணைக்கவே நினைத்தான். ஆனால் அவனுடைய ஈகோ விடாது தடுக்க, அதற்குள் அவனை நிமிர்ந்துப் பார்த்தவள், “அர்ஜூன் சார்” என்று ஓடி வந்து அவனைக் கட்டிக் கொண்டாள்.

(ஏன்மா? இதுக்குத்தான்மா அவன் அடிச்சான். நீ என்னென்னா மறுபடியும் அதையே செய்ற. என்னமோ போ. இதுக்கப்புறம் இவ என்னெல்லாம் அவன்ன பண்ண காத்திருக்காளோ? அது என்னென்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட் எப்படி இருந்திச்சுன்னு மறக்காம உங்க கருத்த சொல்லிடுங்க. அப்புறம் பெஸ்ட் கமெண்ட்ஸ பேனர்ல போஸ்ட் பண்ணிருக்கேன். சோ உங்க கமெண்ட்ஸும் அதுல வரலாம். சோ அதையும் செக் பண்ணிக்கோங்க.  அப்புறம் மறக்காம ரேட்டிங் கொடுத்திடுங்க)

தொடரும்…

Comments   16

*** வரம் – 23 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***