வரம் – 20

அர்ஜூன் சக ஆசிரியர் ஒருவரிடம் பேசியப்படி நிற்க, அங்கே சென்ற பூஜா அவனை அழைத்தாள். அதில் அந்த ஆசிரியரிடம் “சரி மேடம் நீங்க போங்க! நான் பாத்துக்கிறேன்” என்றவன், பூஜாவின் குரல் கேட்டு திரும்பினான்.

சரியாக அன்னேரம் பார்த்து “ஐயோ சார்!” என்று பதறி அவனைக் கட்டிப் பிடித்தாள் பூஜா.

ஒரு நொடி அவனுக்கு எதுவுமே புரியவில்லை. பட்டென்று, அவனுக்குள் இருந்த புரோபசர் எட்டிப் பார்க்க, “ஹே என்னப் பண்ற? இது காலேஜ்” என்றப்படி அவளை தன்னில் இருந்து விலக்க முயற்சித்தான்.

அவளோ அவனை விடாது, “ப்ளீஸ் ப்ளீஸ் சார்” என்றப்படி, மேலும் அவனை இறுக்கி அணைத்தாள். அதிலும் அவள் பாதத்தை காலில் வைக்காது, அவன் பாதத்தின் மேல் அவள் ஏறி நிற்க, “ஹேய் பூஜா” என்று கிட்ட தட்ட உறுமினான்.

நல்ல வேளையாய், அனைவருமே சற்று தூரமாய் நின்றிருக்க, அர்ஜூனின் உயரத்துக்கு பூஜா யார் கண்ணுக்கும் தெரிந்திருக்கவில்லை.

ஆனால் அருகில் நின்றிருந்த அந்த மேடம் மட்டும் சிறு அதிர்ச்சியுடன் அங்கேயே நின்று விட, “சார்” என்றவள் அவன் சட்டையைப் பிடித்து அதற்குள் முகத்தைப் புதைத்தாள்.

ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமை இழந்தவன், “ச். விடு” என்று அவளை வலுக்கட்டாயமாய் தன்னில் இருந்து விலக்கி, கோவமாய் அவளை ஓங்கி அடிக்க சென்றான்.

அதற்குள்ளாக, அவளோ, “சார் அடிச்சிடாதீங்க” என்று கண்ணை இறுக்கி மூடினாள்.

அவளுடைய அந்த குழந்தை முகம், அவனை தடுக்க, அதற்குள் அருகில் இருந்த அந்த மேடமோ, “உனக்கு என்னாச்சு பூஜா? என்னப் பண்ணிருக்கன்னு புரியுதா?” என்று கோவமாய் கேட்டார்.

எப்படியும் பூஜாவின் அம்மா வயது அவருக்கு இருக்கும். அவருடைய குரலில், அவள் மெல்ல கண்ணைத் திறக்க, அவளோ, பாவமாய், “ப்ராக் மேடம்” என்றாள்.

“வாட்?” என்று அந்த மேடம் கேட்க, “தவள மேடம். தவள” என்றவள், அங்கே துள்ளி குதித்து ஓடியதைப் பார்த்து சிறு பயத்துடன் கையை நீட்டினாள்.

அதில் அர்ஜூனும் அதைப் பார்க்க, அந்த மேடமோ, “ச் இதுக்குப் போயி பயப்படுவீயா நீ?” என்றார்.

“இல்ல மேடம். அத பாத்தாலே ஒரு மாதிரி ரொம்ப பயம்” என்று அவள் சொல்ல, “ச் அதுக்குன்னு, இப்படி பண்ணுவீயா நீ? ஏதோ அர்ஜூன் சாரா இருந்ததால பரவாயில்ல. வேற யாரும்னா என்னாகியிருக்கிறது” என்றவருக்கு, அர்ஜூனின் மீது ஒரு நல்ல அபிப்ராயம் உள்ளது.

அதே நேரம் தன் மகள் வயதில் இருக்கும் பெண்ணின் பாதுகாப்பும் முக்கியமாயிற்றே. அதனால் அவர் சொல்ல, இங்கே இவளின் உள்மனமோ, “அவரா இருந்ததாலத்தான் கட்டிப் பிடிச்சேன்” என்று முனுமுனுத்தது.

“சாரி மேடம் அது பயம்” என்று பூஜா சொல்ல, இப்போது அவர் தான் அர்ஜூனிடம், “தப்பா எடுத்துக்காதீங்க சார். அத பாத்து கொஞ்சம் பயந்துட்டா போல” என்றார்.

ஆனால் அர்ஜூன் தான் இன்னும் ஏதோ எரிமலையில் விழுந்த கடுகு போல், முறைத்துக் கொண்டிருந்தான்.

“ஐயோ ரொம்ப டென்சன் பண்ணிட்டோம்மோ? இப்படி முறைக்கிறாரு” என்று தனக்குள் அவள் யோசிக்க, அதற்குள் அர்ஜூனோ, அங்கிருந்து கடுப்பாய் செல்ல முயன்றான்.

“அர்ஜூன் சார்” என்று அவள் வேகமாய் அழைக்க, “ச் என்ன?’ என்று பல்லைக் கடித்தான். “நீங்க கேட்ட டீடெய்ல்ஸ் எல்லாம் ரெடி பண்ணிட்டேன்” என்று ஒரு பேப்பரை அவனிடம் நீட்ட, அவள் முகத்தை கூட பார்க்காது, அதை பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

“சார் சார்” என்றவள் மீண்டும் அவனின் முன்னே சென்று நிற்க, இப்போது அவளை நிமிர்ந்துப் பார்த்தவனோ, அத்தனை கோவமாய் பார்த்தான்.

அவளோ, “இதுல எனக்கு ஒரு ஐடியா இருக்கு சார். அத சொல்லலாமா?” என்று கேட்டாள்.

“உன்கிட்ட நான் என்ன வேல கொடுத்தேன்னோ, அத மட்டும் பாத்தா போதும். தேவையில்லாத விஷயத்துல தலையிட வேண்டிய அவசியம் இல்ல” என்று கடுப்பாய் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தான் அர்ஜூன்.

செல்பவனைப் பார்த்த பூஜாவோ, “அச்சச்சோ! இத முன்னாடியே சொல்லியிருக்கலாம். பட் எனக்குத்தான் எதையும் சொல்லிட்டு பண்ணி பழக்கம் இல்லையே. சோ வெல்கம் பார்டில உங்களுக்கும் அது சர்பிரைஸா இருக்கட்டும்” என்று சொல்லிக் கொண்டால்.

அதற்குள் அவள் தோளில் கை வைத்த அந்த ஆசிரியரோ, “பூஜா, நீ வெகுளித்தனமா இருக்கிறதுலாம் சரித்தான். அதுக்குன்னு, இப்படி இருக்காத. எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க” என்றவர் தான், அர்ஜூனுக்கு அடுத்து அவளுக்காக பரிதாபப்படும் ஒருவர்.

ஏனோ மற்ற ஆசிரியர்கள் அத்தனைப் பேரும் அவளை திட்டிக் கொண்டிருப்பதாலேயே, அந்த ஆசிரியருக்கு பூஜா மேல் சிறு அக்கறை உண்டு. அவர் பெயர் பூங்கொடி.

“ஒகே மேடம்” என்று அவள் தலையாட்ட, “சரி கிளாஸுக்கு போ” என்று சொல்லவும் அவளும் அங்கிருந்து வந்திருந்தாள்.

பூஜாவிடம் அவளுக்கே தெரியாது ஒரு நல்ல குணம் இருந்தது. அது என்னவென்றால் அவளிடம் ஒருவர் நல்லவிதமாக நடந்துக் கொண்டால், அவளும் நல்லவிதமாய் நடந்துக் கொள்வாள். அப்படித்தான், அர்ஜூன், பூங்கொடி இவர்கள் இருவரிடமும் இதுவரை அவளுடைய வால்தனத்தை காட்டியது இல்லை.

ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு இருக்கு இல்லையா? அப்படித்தான் அவள் சேட்டைக்காரி என்பதை அவர்களும் தெரிந்துக் கொள்ள, அந்த வெல்கம் பார்டி நாளும் வந்தது.

காலையில் அர்ஜூன் மும்முரமாய் கிளம்பிக் கொண்டிருக்க, அவன் அன்னையிடம் இருந்து அழைப்பு வந்தது. ஏற்கனவே அவன் தாமதமாகிவிடக் கூடாது என்பதில், சாப்பிடாமல் பைக் சாவியை எடுத்தான்.

வீட்டில் இருந்து அழைப்பு வரவும், “இப்போ பேசுனா தேவையில்லாம ஏதாச்சும் சொல்லுவாங்க” என்று யோசித்தப்படி கால்லை கட் செய்து விட்டு தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

இங்கே அந்த நிகழ்ச்சிக்கான முழு பொறுப்பும் அர்ஜூன் என்பதால், ஸ்டேஜ் டெகரேசனில் ஆரம்பித்து, அடுத்தடுத்து மாணவர்கள் குழுக்களை ரெடி செய்து அனுப்புவது அது அத்தனையுமே அவன் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.

அவனுக்கு துணையாய் பூங்கொடி ஆசிரியரும் அவருக்கான வேலையை பார்த்தார். ஆனால் இப்போது அவர் முகத்தில் அப்பட்டமான பதட்டம் தெரிய, அவரின் அருகில் வந்த அர்ஜூன், “என்னாச்சு மேடம்? எல்லாம் ஒகேத்தான! செக்ரட்ரி சார் எல்லாரையும் வர சொல்லிடலாம் இல்லையா?” என்றான்.

“ஆ.ங் சார். ஒரு சின்ன பிரச்சன” என்று அவர் சொல்ல, “என்னாச்சு?” என்று அவன் கேட்க, “இல்ல சார். ஓபனிஸ் ஷாங் பர்பார்மன்ஸுக்கு இன்னும் காஸ்டியூம் வரல” என்றார்.

“என்ன சொல்றீங்க? இப்படி கடைசி நேரத்துல வந்து சொன்னா என்ன அர்த்தம்?” என்று சிறு கோவத்துடன் கேட்டான்.

“இல்ல! அது” என்றவருக்குமே என்ன சொல்ல என்று தெரியவில்லை. “ச் சரி யார்கிட்ட கொடுத்திருக்கீங்க?” என்று இவன் கேட்க, “பூஜாகிட்டத்தான் சார் கொடுத்திருந்தேன். அவத்தான் கரெக்ட் டைமுக்கு ரெடியாகிடும்னு சொன்னா” என்றார் அவர்.

“பூஜாவா? அவளுக்கு என்ன தெரியும்?” என்று கேட்க, “இல்ல சார் அவளுக்கு தெரிஞ்சவங்கத்தான் பொட்டிக் வெச்சிருக்கிறதா சொன்னா. நேத்தே கலெக்ட் பண்ணிட்டேன்னும் சொன்னா. ஆனா என்னென்னு தெரியல. அவள இன்னும் காணும்” என்றார்.

அதை சொல்லும் போதே அவருக்கு அத்தனைப் பதட்டம். தன் மகன் வயது இருக்கும் ஒருவன் தான் அர்ஜூன். ஆனாலும், அவன் வேலை விஷயத்தில் வயது வித்தியாசம் எல்லாம் பார்க்க மாட்டான். தப்பு என்றால் தப்புத்தான். அதனாலையே அவருக்கு மெல்லிய பதட்டம்.

“இன்னும் காணும்னா?” என்றவன் மணியைப் பார்க்க, இன்னும் பங்சன் ஆரம்பிக்க வெறும் பத்து நிமிடம் தான் இருந்தது.

அதில் எரிச்சலானவனோ, “என்ன மேடம்? நீங்க எவ்வளவு சீனியர்? அப்படி இருக்கிறப்ப, ஸ்டூடண்ட் நம்பி கொடுக்கலாமா” என்றான்.

“இல்ல சார்! பூஜா” என்றவருக்கோ அவள் பெயரை சொல்வதை தவிர்த்து வேறு எதுவும் வரவில்லை. அதில் இவனுடைய கோவம் இன்னும் இன்னும் கூடியது.

“பூஜா,. பூஜான்னா அப்போ அவளுக்கு கால் பண்ணி பாருங்க. இல்லன்னா அவ பிரண்ட்ஸ்கிட்ட கேளுங்க” என்றான்.

“இல்ல சார். அந்த பொண்ணுக்கு லைன் போகல. இப்போ என்னப் பண்றதுன்னு தெரியல. ஹெஸ்ட் வேற வர ஆரம்பிச்சிட்டாங்க” என்று அவர் சொல்ல, இப்போது அவரை முறைத்தவனுக்கோ, பூஜாவுக்கு என்ன ஆனது என்ற கேள்வி ஓடியதுத்தான்.

ஆனாலும், இப்போது அவன் எடுத்து நடத்தும் நிகழ்ச்சியே முன் வந்து நிற்க, “அப்போ அந்த டான்ஸ கட் பண்ணிட்டு, ஸ்ட்ரைட்டா வெல்கம் ஸ்பீச்க்கு போலாம்” என்றான்.

அதில் இப்போது அவரோ, “சார் அதுவும் பூஜாத்தான்” என்று சொல்ல, இப்போது இவனோ, “வாட்? பூஜாவா?” என்றான்.

ஏனெனில் அவன் தான் அத்தனைப் பேரையும் பார்த்து பார்த்து முடிவு செய்திருந்தான். அப்படி இருக்க, பூஜாவுடைய பெயர் அவன் கொடுத்த லிஸ்டில் இல்லவே இல்லை.

அதில் அவன் அவரைப் பார்க்க, “எஸ் சார். ஆல்ரெடி நம்ம செலக்ட் பண்ணியிருந்த ஸ்டூடண்ட். ஸ்டேஜ் பியர்ன்னு சொல்லி வாபஸ் வாங்கிட்டா. அதான் பூஜா அத பண்ண வேண்டியதா போச்சு” என்றார்.

இப்போது அவனுக்கோ அத்தனை எரிச்சல். “புல் சிட். பேசாம. இதுக்கு முன்னாடி இருந்த ஸ்டூடண்டையே” என்று அவன் சொல்ல, “இல்ல சார். அந்தப் பொண்னுக்கு அது வராது” என்று இவர் சொல்ல, இப்போது இவனோ, “ச் அப்போ என்னத்தான் பண்ண சொல்றீங்க?” என்று கிட்ட தட்ட கத்தினான்.

“சார் லாஸ்டா பேசுறப்ப கூட, இங்க பக்கத்துல வந்துட்டதாத்தான் சார் சொன்னா. நான் போயி பார்த்துட்டு வரேன் சார். அதுவரைக்கும் மட்டும் கொஞ்சம் ஹோல்ட் பண்ணலாம்” என்று சொல்ல, இப்போது அர்ஜூனுக்குமே வேறு வழியிருக்கவில்லை. அதே நேரம், பூஜா எங்கு சென்றாள்? என்ற கேள்வியும் முன் வந்து நிற்க, “ச் எந்த பொட்டிக் நேம் சொன்னா?” என்றவன் அவனே அவளைத் தேடி வெளியில் வந்தான்.

ஆனால் அதற்குள்ளாக, “மேடம். மேடம்” என்று மூச்சு வாங்க ஓடி வந்த பூஜா, அவனின் மீதே மோத சென்றாள். “ஹேய் பாத்து” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்னே, கட்டியிருந்த புடவை தடுக்கி, தடுமாறி விழ சென்றாள்.

அதைப் பார்த்து பதறி, அவள் இடையோரம் கைக் கொடுத்து தாங்கிப் பிடிக்க, அவனுடைய உள்ளங்கை அவளுடைய வெற்றிடையில் அழுத்தமாய் பதிந்தது.

அதில் பெண்ணவளுக்கோ மின்சார தாக்கம். அவளுக்கே அப்படி என்றால், இவனுக்கு சொல்லவே வேண்டாம். ஏனோ அவன் கரம் அங்கிருந்து நகர மறுத்தது.

அதிலும் அவனின் பார்வை மொத்தமும் அவளின் மீதுத்தான் இருந்தது. சிவப்பு வண்ண சேலையில், காலை பூத்த மலராய் இருந்தாள். உச்சித் தொட்டு பாதம் வரை பார்த்தவனுக்கு மூச்சு முட்டியது.

அவள் அத்தனை அழகாய் இருந்து தொலைத்தாள். வேகமாய் ஓடி வந்ததில், இன்னமுமே அவளுக்கு மூச்சு வாங்க, அதில் அவனுடைய பார்வை அவள் கழுத்தை விட்டு கீழ் இறங்க. “ஹேய் பூஜா வந்துட்டீயா?” என்ற ஆசிரியரின் வார்த்தையிலையே உணர்வு பெற்று, அவசரமாய் அவளை விட்டு விலகி நின்றான்.

இப்போது அவளோ “சார்” என்று ஏதோ சொல்ல முயற்சிக்க, அவனோ, “ச் இதுத்தான் வர்ற நேரமா?” என்று திட்டியவன், “சீக்கிரம் ஸ்டேஜூக்கு போ” என்று அழுத்தி சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

“ஐயோ போச்சு போச்சு. இன்னிக்குன்னு பார்த்தா இந்த கலர் லிப்ஸ்டிக் போடுவேன்” என்று தன்னைத் தானே திட்டியவள், அவனுடைய சட்டையில் ஒட்டியிருந்த லிப் மார்க்கை புரியாது பார்த்தாள்.

(ஆனாம்மா. எனக்கு உன்ன நினைச்ச ரொம்ப பெருமையா இருக்கு. டெய்லியும் ஏதாச்சு ஒன்னுப் பண்ணி, அவன எதுலையாச்சும் மாட்டிவிட்டுற. செரி அடுத்து என்னாகப் போது? அப்புறம் இந்த வெல்கம் பார்டி என்னாக போது? குறிப்பா, இதுனால அர்ஜூன் பூஜா வாழ்க்கையில என்னெல்லாம் பூகம்பம் வெடிக்கப் போதுன்னு அடுத்த எபிசோட்ல பாக்கலாம்.அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட் எப்படி இருந்திச்சு? உங்களுக்கு எந்த சீன் பிடிச்சிருக்குன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்புறம் கமெண்ட் பண்ண எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். சீக்கிரமே ரிபிளை பண்றேன். அப்புறம் பெஸ்ட் கமெண்ட்ஸ பேனர்ல போஸ்ட் பண்றேன். சோ உங்க கமெண்ட்ஸும் அதுல வரலாம். சோ அதையும் செக் பண்ணிக்கோங்க.  அப்புறம் மறக்காம ரேட்டிங் கொடுத்திடுங்க)

தொடரும்…

Comments   14

*** வரம் – 20 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***