பூஜாவோ, பிரியாவுக்கு கால் செய்து, “என்ன ரெடியா?” என்று கேட்க, “ஹேய் சாரி பூஜா எங்கம்மா, தனியாலாம் போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க. நானும் எவ்வளவோ கேட்டு பார்த்தேன். விடவே இல்ல” என்றாள்.
அதைக் கேட்டவளோ, “ச் உன்ன யாரு உண்மை விளிம்பியா, ஷாப்பிங் போறோம்னு கேட்க சொன்னது? ஸ்டடீஸ்க்கு அசைன்மெண்ட் ப்ரீபர் பண்ணனும். சோ சில திங்க்ஸ் எல்லாம் வாங்கனும்னு சொல்ல தெரியாதா உனக்கு” என்று திட்டினாள்.
“ஹேய் எனக்கு இப்படில்லாம் ப்ளோல பொய் சொல்ல தெரியாதுடி” என்று அப்பாவியாய் கூறினாள் அவள். “க்கும் உன்னெல்லாம் என் பிரண்டா வெச்சிருக்கேன் பாரு. வீக்கென்ட்க்கு கூட வெளிய போகாம, நீல்லாம் என்னத்தான் சாதிக்கப் போறீயோ? சரி, உனக்கு ஏதாச்சும் வேணும்னா சொல்லு நானே வாங்கிட்டு வரேன்” என்றாள்.
“உண்மையாவே சாரி பூஜா” என்று அவள் வருத்தத்துடன் சொல்ல, “ஸ்ப்பா, இதுக்கெல்லாம் சாரியா? எனக்கு ஏற்கனவே தெரியும். நீ இப்படி சொதப்புவன்னு. அதனால ஒன்னும் பிரச்சன இல்ல. நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்” என்றாள்.
“நீ உன் அண்ணாவ கூட்டிட்டு போ பூஜா. ஏன்னா, இப்படி தனியா போறதுலாம் அன்ஷேப்” என்று அவள் சொல்லவும், “அங்க உன் மம்மிக்கிட்ட கேட்டு, இங்க அட்வைஸ் மழைய தூவாத. நான் பாத்துக்கிறேன். நீ போயி உன் ரூம் சுவத்துக்கு என்ன கலர் பெயிண்ட் அடிக்கலாம்னு பாரு” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
பின், கண்ணாடியில் தன்னைப் பார்த்தவளோ, “ரைட்டு, இன்னிக்கு டி நகர ஒரு கலக்கு கலக்குறோம். அப்படியே, மதியத்துக்கு நல்ல ஹோட்டல்லா பார்த்து பிரியாணிய கட்டுறோம். அப்புறம் மறுபடியும் பாரீஸ்கார்னர்ல ஒரு சுத்து சுத்திட்டு, நைட் ஷோ படத்துக்கு போயி செட்டில் ஆகுறோம். அப்புறம் லேட்டா வந்து குப்புறப்படுத்து தூங்குறோம்” என்று அன்றைக்கான திட்டத்தை போட்டு முடித்து தன்னுடைய பேக்கை எடுத்து ஸ்டைலாக மாட்டினாள்.
சரியாக அன்னேரம் அவளுடைய மொபைலுக்கு, அர்ஜூனிடம் இருந்து அழைப்பு வந்தது. அதைப் பார்த்தவளோ, “ஐயோ இவரு எதுக்கு இப்போ கால் பண்றாரு?” என்று ஒரு நொடி புருவம் சுருக்கினாள். அதன் பின், “ஒரு வேள தெரியாம கால் பண்ணியிருப்பாரோ?” என்று யோசித்தப்படி அட்டண்ட் செய்து, “ஹலோ” என்று மெதுவாய் அழைத்தாள்.
அந்தப் பக்கம் இருந்தவனோ, “இன்னும் எவ்வளவு நேரம் உனக்காக வெயிட் பன்றது? இன்னும் ரூம்ல என்னப் பண்ணிட்டு இருக்க” என்று திட்டு திட்டு என்று திட்ட ஆரம்பித்திருந்தான்.
அவனின் திட்டுக்கான காரணமும் புரியாது, “ஹலோ சார். நான் பூஜா பேசுறேன்” என்றவளுக்கோ, அவன் வேறு யாரோ என்று நினைத்து தன்னிடம் பேசுகிறானோ என்ற எண்ணம்.
“ச் நானும் உன்கிட்டத்தான் பேசிட்டு இருக்கேன். அதான் எங்கம்மாக்கு கால் பண்ணி, என்ன வர சொல்ல தெரிஞ்சிச்சுத்தான. அப்போ கரெக்டான டைமுக்கு கீழ வர மாட்டீயா?” என்று அதற்கும் சேர்த்து திட்டினான்.
“எதே? நான் வர சொன்னேன்னா? இதென்னடா புது பொரளியா இருக்கு” என்ற யோசனையுடன் அவசரமாய், அவள் ஹாஸ்டலை விட்டு வெளியில் வந்தாள். அங்கே அவனோ அவனுடைய பைக்கை கூட நிறுத்தாது, அவளை திட்டிக் கொண்டிருந்தான்.
“இப்போ எதுக்கு இவரு இங்க வந்திருக்காரு” என்று யோசித்தவள், அழைப்பை கட் செய்து விட்டு அவனின் முன்னே சென்று நிற்க, அவளைப் பார்த்ததும் அவன் முறைத்தான்.
“இங்க என்ன சார் பண்றீங்க?” என்று அவள் கேட்க, “என்ன ட்ராமா பண்றீயா நீ? ஊருல இருந்து தனியா கிளம்பி வர தெரிஞ்ச உனக்கு, உனக்கு தேவையானத தனியா போயி வாங்கிக்க தெரியாதா?” என்று திட்டினான்.
அதில் அவளோ அவனை பார்க்க, “ச் உன்னால என்னோட வீக்கெண்ட் பிளான் மொத்தமும் ஸ்பாயில் ஆகிடுச்சி. சும்மா நின்னுட்டு இருக்காம, வண்டியில வந்து ஏறு” என்று திட்டி தீர்த்தான்.
“எதே? வண்டியில ஏறனுமா? இவர யாரு வர சொன்னது” என்ற ரீதியில் அவள் அப்படியே நின்றாள். “ச் உன்கிட்டத்தான சொல்றேன். பைக்ல ஏறு. எனக்கு நிறையா வேல இருக்கு. உன்ன கூட்டிட்டு ஊர் சுத்துறது என் வேல கிடையாது. ஏதோ எங்கம்மா சொல்லிட்டாங்களேன்னு வந்திருக்கேன். என்ன இரிட்டேட் பண்ணாத” என்று சுடு எண்ணெயில் போட்ட அப்பளம் போல் பொரிந்தான்.
இப்போது அவளோ வெகு நிதானமாய், “என்னோட பிரண்ட்ஸ் வரேன்னு சொல்லிருக்காங்க சார். நீங்க உங்க வேலைய போய் பாருங்க” என்றாள்.
அவ்வளவுத்தான் அவனுக்கு வந்ததே அத்தனைக் கோவம். பைக்கை சைட் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு சட்டென்று பைக்கில் இருந்து இறங்கினான். அவனின் செயலில், இவளோ, அவனைப் பார்க்க, “ஆர் யூ மேட்? இங்க வந்து முழுசா ஒரு வாரம் ஆகல. அதுக்குள்ள பிரண்ட்ஸ் கூட தனியா போறேங்கிற” என்று கேட்டான்.
சட்டென்று அவன் நெருங்கவும், அவளின் மனமோ அன்னேரம் பார்த்து அவனுடைய கலைந்திருந்த முடியை ரசனையாய் பார்த்து தொலைத்தது. அதில் சற்று எக்கி, அவன் தலை முடியை சரி செய்தவள், “ஹேர் வாஸ் பண்ணிட்டு, கொஞ்சம் ஜெல் வச்சி சீவுனீங்கன்னா, உங்க முடிக்கும் செம்மையா ஹேர் ஸ்டெயில் மெயிண்டெயின் ஆகும் சார்” என்றாள்.
அவள் சட்டென்று அவனின் சிகையை சரி செய்ய, இப்போது இவனின் உள்ளம் தடுமாறியது. அதிலும் அவனின் உயரத்துக்கு, அவள் எக்கி நிற்க, அவள் அணிந்திருந்த மேல் டாப் வேறு சற்று ஏறி, அவள் மெல்லிடையை கொஞ்சமாய் அவனுக்கு கடை பரப்பியது.
அதில் சட்டென்று அவள் இடையில் கரம் பதித்து, தன்னில் இருந்து அவளை விலக்கி நிறுத்தினான் அர்ஜூன்.
(ஏன்பா, தள்ளி போக சொல்றதுக்கு சொல்றதுக்கு கூட, சாரு அங்கத்தான் கை வைப்பீங்களா? கேட்டா நீ ஸ்ட்ரிக்ட் புரோபசர்னு வேற என்கிட்டையே கத சொல்லுவ. இதெல்லாம் எனக்கு தேவையா?)
“ச் என்ன விட்டு தள்ளியே இரு” என்று அவன் கோவமாய் சொல்ல, அவளோ தன் இடையில் இருந்த அவன் கரத்தை மெதுவாய் விலக்கி, “சரி சார்” என்றாள்.
அப்போதே அவனுக்கு, அவன் கரம் பதிந்திருந்த இடம் மூளையில் பதிய, “ச் இந்த சில்வண்டுக்கிட்ட ஏண்டா, நீ இப்படி பிகேவ் பண்ற” என்று தன்னைத் தானே நொந்துக் கொண்டான்.
ஆனாலும் கெத்தை விடாது, “அவ இருக்கிற ஹெயிட்க்கு, கை அங்கத்தான் படும்” என்று மனசாட்சியே இன்றி சாக்கு சொன்னான்.
இப்போது இவளோ, “சார் அதெல்லாம் என் பிரண்ட்ஸ்” என்று சொல்லி முடிக்கும் முன்னே, “ச் இதெல்லாம் நீ எங்கம்மாகிட்ட பேசுறதுக்கு முன்னாடி பண்ணியிருக்கனும். இப்போ நான் உன்ன கூட்டிட்டு போகலன்னா, அதுக்கும் தேவையில்லாம என் அம்மா டென்சன் ஆவாங்க. ஏற்கனவே இருக்கிற டென்சன் பத்தாதா எனக்கு” என்று திட்டினான்.
அதில் இவளின் மனமோ, “ஐயோ அத்த. உங்க தவ புதல்வன்ன, நான் எப்போ வர சொன்னேன்? இந்த ஸ்ட்ரிக்ட் வாத்தியோட ஷாப்பிங் போகவா, நான் காலையிலையே இப்புடி டிப் டாப்பா ட்ரஸ் போட்டுட்டு வந்தேன்.” என்று மனதிற்குள், தன் அத்தையை திட்டினாள்.
பின் வேறு வழியின்றி அவனுடன், பைக்கில் சென்று ஏற, அவளின் உயரத்துக்கு அதில் ஏற முடியவில்லை. அதில் அவன் தோளை அழுந்தப் பிடித்து, ஏற முயற்சிக்க, “ச் தொடாதன்னு சொல்றேன்ல” என்றான்.
“அப்போ நீங்களே என்ன தூக்கி உட்கார வைங்க சார்” என்று கையை நீட்டினாள் அவள்.
“என்னது?” என்று அவன் அதிர, “நீங்களே உங்க பைக்க பாருங்க சார்” என்றாள். அதில் அவனோ, “சரி தோள்ள பிடிச்சு ஏறு” என்றான்.
“அதத்தான பண்ணேன். இவர தொடாம பைக்ல ஏறனும்னா, நான் ஏதாச்சும் சர்க்கஸ் தான் கத்துக்கனும்” என்று மனதிற்குள் கவுண்டர் கொடுத்தப்படி பைக்கில் ஏறி அமர்ந்தாள்.
இப்போது அவளோ வேண்டுமென்றே அவனை விட்டு ஒரு அடி தள்ளி அமர்ந்திருக்க, ஏனோ அந்த விலகலும் அவனுக்கு பிடிக்கவில்லை.
அதில் பைக்கை ஸ்டார்ட் செய்யாது, “போற வழியில எங்கையாச்சும் விழுந்து எந்திரிக்கனும்னு வேண்டுதலா? ஒழுங்கா பிடிச்சிக்கோ. என்னால திரும்பி திரும்பி பாத்துல்லாம் வண்டி ஓட்ட முடியாது” என்று சிடுசிடுத்தான்.
அவனின் பேச்சில், பட்டென்று அவனை நெருங்கி, அவள் வயிற்றோரம் கரம் கொடுத்து கட்டிக் கொண்டாள். அவள் அணைப்பாள் என்று எதிர்பார்க்காதவனுக்கு உடல் ஒரு நொடி அதிர்ந்து பைக்கை கூட பிடிக்க முடியாத அளவுக்கு தடுமாறியது.
ஆனால் அவளோ, “போதும்மா சார். இதுக்கப்புறம் நான் விழ மாட்டேன்” என்றப்படி அவள் தோளில் தாடையைப் பதித்து விழி மூடிக் கொண்டாள்.
அவளின் செயலில் இங்கே இவனுக்குத்தான் மூச்சு முட்டியது. “ச் என்னப் பண்ற நீ?” என்று கேட்க வாய் வரை வார்தை வந்தாலும், அவளின் அந்த நெருக்கத்தை விலக்கத்தான் அவனுக்கு மனமே இல்லைப் போலும்.
ஆனாலும் இப்படியே ரோட்டில் செல்ல அவனின் மனம் இடம் கொடுக்க மறுக்க, “ச் அதுக்குன்னு இப்படித்தான் வேதாளம் மாதிரி முதுகுல ஒட்டிட்டு வருவீயா? பாக்குறவங்க என்ன நினைப்பாங்க. கொஞ்சம் விலகி உட்காரு” என்றான்.
“ச் இப்போ நான் என்னத்தான் சார் பண்றது? உங்க பைக்ல பிடிக்கிறதுக்கு எங்க இடம் இருக்கு” என்றாள். அதில் அவனோ, “ச். தோள்ள பிடிச்சிக்கோ” என்றான்.
“எனக்கு பைக்ல போறதுனா ரொம்ப பயம் சார். இப்படி பிடிச்சிக்கிட்டாத்தான் எனக்கு பயம் இல்லாம இருக்கும்” என்று அப்பாவியாய் கூறினாள்.
“ச் பேசாம கேப் பிடிச்சே போயிருக்கலாம்” என்று அவன் முனுமுனுத்தது. அவள் செவியிலும் விழுந்தது. ஆனால் அவளோ, “என்னோட பிளான்ன கெடுத்தீங்கத்தான. இன்னிக்கு உங்க Day-ஆ, நான் என்னெல்லாம் பண்றேன்னு பாருங்க” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
அதே நேரம் அவளின் மனமும் கூட, அந்த அணைப்பை விரும்பவே செய்தது. ஏனோ, கொஞ்சம் கூட வேறு ஆடவன் என்ற நினைவு அவளிடம் இல்லவே இல்லை. கணவன் என்றும் அவள் யோசிக்கவில்லை. ஆனால், அவனிடம் ஏனோ அவள் இயல்பாய் இருந்தாள்.
ஆனால் அவனுக்குத்தான் அவனுடைய இயல்பு தடுமாறியது. இப்படி எல்லாம் சென்னை ரோட்டில், தன் மனைவியுடன் இத்தனை நெருக்கமாய் பயணம் செய்வான் என்று அவன் கனவிலும் நினைத்திருக்க மாட்டான்.
அதிலும் அவளின் கன்னம் வேறு அவனின் தாடியில் பட்டும் படமால் உரசிக் கொண்டே இருக்க, இவனுக்கு மூச்சு முட்டியது. அங்கே அவளின் மனமும் கூட அந்த உரசலை சற்று உள்வாங்கிக் கொள்ளத்தான் செய்தது.
“சும்மா சொல்லக் கூடாது, சார் சூப்பரா பைக் ஓட்டுறாரு. இப்படி இவர் கூட பைக்ல போறதுக்காகவே ஒன் டே வேஸ்ட் பண்ணலாம். தப்பில்ல” என்று சொல்லியவளும் கூட அந்த பயணத்தை ரசிக்கவே செய்தாள்.
அதிலும் காற்றுக்கு அவன் சிகை கலைந்துக் கொண்டே இருக்க, அவளோ அதை சரி செய்கிறேன் என்று அவனை நோண்டிக் கொண்டே வர, அவனோ முழு வேகத்தில் பைக்கை ஓட்டினான்.
ஒரு வழியாய் அந்த மாலின் முன்பு வந்து அவன் பைக்கை நிறுத்தியிருக்க, அவளோ அப்போதும் கூட அவனை விட்டு விலகாது, அப்படியே அமர்ந்திருந்தாள்.
“ச் மால் வந்திருச்சு” என்று அவன் தோளைக் குலுக்க, “ஓ வந்திருச்சா” என்றவள் வேகமாய் அவனை விட்டு விலகி, இறங்க முயற்சிக்க, “ஹேய் பார்த்து” என்று அவள் கையைப் பிடித்து இறங்க வைத்தான்.
சரியாக அன்னேரம், அர்ஜூனுக்கு மாதவனிடம் இருந்து அழைப்பு வர, அவனோ புருவத்தை சுழித்தான். அதற்குள் இவளோ, “நீங்க போன் பேசிட்டு வாங்க சார். நான் அதுக்குள்ள என்ன வாங்கலாம்னு பாக்குறேன்” என்று உரிமையாய் அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த வாலட்டை எடுத்து அதில் இருந்த ஏடிஎம் கார்டையும் தேடி எடுத்தாள்.
எடுத்ததோடு இல்லாது, “பின் நம்பர் மட்டும் எனக்கு மெசேஜ் பண்ணிடுங்க சார்” என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடியிருந்தாள் பூஜா. அதில் அர்ஜூன் அழைப்பை கூட ஏற்காது அப்படியே நின்றிருந்தான்.
(அட என்ன புரோபசர் சார்? இதுக்கே அசந்துட்டா எப்படி? அவ இன்னும் என்னெல்லாம் பண்ணப் போறாளோ? சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. பெஸ்ட் கமெண்ட்ஸ பேனர்ல போஸ்ட் பண்ணிருக்கேன். சோ உங்க கமெண்ட்ஸும் அதுல வரலாம். சோ அத செக் பண்ணிக்கோங்க. அப்புறம் மறக்காம ரேட்டிங் கொடுத்திடுங்க)
தொடரும்…
gayathri Shini
very good pooja.neethan vathiku eatha aalu
Indhu Mathi
super ❤😍❤
Vedha Hani
அவ அடிக்கிற லூட்டில இன்னும் என்னென்ன ஆக போகுதோ, வாத்தி நீங்க தான் வசமா மாட்டிக்கிடீங்க
Koki Koki
super nice 👍
Koki Koki
super💞🥰
Ammu Gnanarajan
Haiyoo thanga katty pooja super da epdi aarathu poonu tha arjun ku venum 😂😂😂😂🤣🤣🤣🤣 Haiyoo arjun un thaikulam unna pooja kita kothu vitutanga . Pooja unkita matala arjun neetha pooja kita matikita 😛😛🤣🤣
Santhanalakshmi S
super sissymaa🎉🎉🎉achoo pooja ma sema 😁😁😁inaiku vathi ne panna atrocity la stun aytaru🤣🤣🤣bike scene sema 😍 vathi ajju un nilamai nenacha ayyo ayyoooo 🤣🤣🤣ini main picture iruku😎
Geetha Thulasi
one day spoil பண்ணதுக்கு உன்னுடைய one month salary போகுமுன்னு நினைக்கிறேன் ம்ம் பார்க்கலாம் 🥰🥰🥰🥰 very nice superrrrrrr 🥰🥰
Ponmalar M
Pooja semma 🥰🥰🥰
SINDUJA SANKAR
சூப்பர் பூஜா ❤️❤️
Shree Ram
சூப்பர் பூஜா🤣🤣🤣🤣🤣🤣😱😱😍😍😍😍🥹😍😍
Jebaselvi Jeba
so sweet pooja chellam 🥰🥰🥰🥰
vishnu priya
pooja arjun oda bike la pora scene romba azhaga irundhudhu sis….. pooja atrocities vera level😂😂
Devi Saravanan
super sis
Nisha Nis
இத நான் எதிர்பார்க்கவே இல்ல பூஜா🙄
Ammu Sathish
சூப்பர்… ஐயோ பூஜா 🤣இன்னும் என்ன எல்லாம் செய்ய போறா.. பாவம் வாத்தி 🤣😂😂