வரம் – 14

பூஜா தன்னுடைய அம்மாவிடம், பேசியப்படி திரும்ப, அங்கே அவளைப் பார்த்தப்படி நின்றிருந்தான் அர்ஜூன். அவனைப் பார்த்ததும், அவள் அதிரவெல்லாம் செய்யவில்லை. வெகு இயல்பாய், “உங்க மாப்பிள்ள என்ன முறைச்சிட்டு இருக்காரு. என்னென்னு கேட்டுட்டு வரேன்” என்று போனில் சொல்லிவிட்டு, இப்போது அவனின் முன் வந்து நின்றாள்.

அவனோ, “இன்னும் ஹாஸ்டல் போகாம, இங்க என்னப் பண்ணிட்டிருக்க?” என்று சிறு கோவத்துடன் கேட்டான். “காபி குடிக்கலாம்னு வந்தேன் சார்” என்று அவள் காபி கப்பைக் கட்ட, அதில் அவனோ முறைத்தான்.

“என்னடா இது? கிளாஸ் ரூம்ல வம்பு பண்ணாத்தான் தப்பு. கேண்டீன்ல வந்து காபி குடிக்கிறது கூடவோ, இவருக்கு தப்பு” என்று மனதிற்குள் கவுண்டர் கொடுத்தாள்.

“இங்கப்பாரு. முன்னாடியே சொன்னதுத்தான். மறுபடியும் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ. காலேஜ்ஜ பொறுத்த வரைக்கும், உனக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதனால நானே வந்து உனக்கு என்னேரமும் ஹெல்ப் பண்ணிட்டு இருப்பேண்னு நினைக்காத. இங்க மத்த ஸ்டூடண்ட்ஸ் எனக்கு எப்படியோ? அப்படித்தான் நீயும்” என்றவன். காலையில் சொல்லியதையே திரும்ப சொல்லப் போக, “எனக்குமே, நீங்க ஜஸ்ட் என்னோட புரோபசர் மட்டும் தான் சார்” என்று இவளும் அந்த சாரில் சற்று அழுத்தம் கூட்டியே கூறினாள்.

அதில் இவனுக்கோ, இன்னும் கூட கோவம் கூடியது. இவன் அவளை மாணவி என்று சொல்வானாம். ஆனால் அவள் அவனை சார் என்று சொல்லக் கூடாதாம். அவன் மனம் என்னத்தான் நினைக்கிறது? அதை அவனாவது அறிவானா?

“அந்த நினப்பு இருந்தா சந்தோஷம்” என்று கடுப்பாய் சொல்லிவிட்டு திரும்பியவன், பின் ஒரு நொடி நின்று, மீண்டும் அவள் பக்கம் திரும்பினான். அவளோ அப்போதுத்தான் சூடான காபியை எடுத்து வாயில் வைத்திருக்க, இவனின் கரம் தெரியாமல், அவள் கையை உரசியிருந்தது.

அதில் காபி, அவள் உதட்டை சுட்டு விட, “ஸ்” என்று அவள் முணங்க, இவனோ சற்றும் யோசிக்காது, அவள் கரத்தில் இருந்த காபி கப்பை வாங்கி ஓரமாய் வைத்தவன், “என்னாச்சு? சுட்டிருச்சா?” என்றப்படி அவள் உதட்டை பெருவிரலால் வருடினான்.

அவன் என்னமோ எதார்த்தமாய் தான் செய்தான். இங்கே பெண்ணவளுக்குள், அந்த வயதுக்கே உண்டான ஹார்மூன் சற்று தன் வேலையை செய்ய, அவள் முகம் சிவக்க முயற்சித்தது.

அவனுமே, அவள் உதட்டின் மென்மையை, சற்று தாமதமாகவே உணர, அவனின் விரல்கள், இப்போது பூவின் இதழைத் தீண்டுவது போல், மெல்ல வருடிக் கொடுத்தது.

அவளோ நாவால் அதை எச்சில் செய்ய முயற்சிக்க, அவனோ, “கவனமா குடிக்க மாட்டீயா? காபி சூடா இருக்குன்னு தெரியாதா?” என்று கோவமாய் கேட்டான்.

ஏற்கனவே அவள் செவ்விதழ்கள், கோவப்பழமாய் சிவந்திருக்க, இப்போது சூடு பட்டதும், இன்னுமே இரத்தமாய் சிவந்திருந்தது. அதில் இங்கே அர்ஜூனுடைய ஆழ்மனம் கூட மெலிதாய் தடுமாறியதோ என்னவோ? ஏனோ அவள் உதட்டில் இருந்த விரலை அவன் விலக்கவே இல்லை.

அவன் விரல் வருடலில், இவள் அடிவயிற்றில் மெல்லிய மாயாஜாலம் நடப்பது போல் தோன்ற, “பரவாயில்ல சார்” என்று அவனை விட்டு விலகி நின்றாள்.

அவள் விலகியப் பின்னே, தான் செய்த காரியம் மண்டையில் உரைக்க, “ச். என்னடா அர்ஜூன்? இப்படி இருக்க” என்று தன்னைத் தானே திட்டியவனுக்கு, கல்லூரியில் வைத்து, அவளிடம் அத்தனை நெருக்கத்தை காட்டியது வேறு உறுத்தியது.

இப்போது அந்த கோவமும் அவளின் மீது திரும்ப, “உனக்கு படிக்க வர்றதுக்கு வேற காலேஜ்ஜே கிடைக்கலையா? சும்மா தேவையில்லாம ஏதாச்சும் பண்ணி, என் மனச மாத்தலாம்னு ட்ரைப் பண்ணாத” என்று திட்டி தீர்த்தான்.

அதில் இவளோ, “எதே? நீங்க தயவு செஞ்சு உங்க மனச மாத்திக்காதீங்க சார்” என்று தனக்குள் கவுண்டர் கொடுத்தாள்.

பின், “கிளாஸ் முடிஞ்சதும் ஹாஸ்டல் போற வழியப் பாரு” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான். ஆனாலும் கூட அவனின் ஆழ்மனம், அவள் அவனிடம் தன்னை அழைத்துச் செல்ல சொல்லி கேட்க வேண்டும் என்று ஆசைப்பட்டது.

அவளோ அதற்கான முயற்சியை கூட செய்யாதது அவனுக்கே சற்று ஏமாற்றம் தான். ஆனாலும், அவளிடம் செல்ல துடித்த மனதை அடக்கி, விறுவிறுவென்று சென்றவன், இப்போது அவனுடைய பைக் சாவியை அங்கேயே வைத்து விட்டு வந்திருந்தான்.

இப்போது அவனின் பின்னே மூச்சு வாங்க ஓடி வந்த பூஜாவோ, “அர்ஜூன் சார்” என்று கத்தி அழைத்தாள். அவளின் குரலில் அவன் திரும்ப, அவனின் மீதே மீண்டும் வந்து மோதினாள்.

இப்போது அவனின் மனமோ ஒரு நொடி மனைவியின் பரிஷத்தில் தடுமாறியது.

“என்னப் பண்ணிட்டிருக்க” என்று அவன் கோவமாய் கத்த, “இல்ல சார். நீங்க அது” என்று ஓடி வந்ததில் மூச்சு வாங்கியது. அதனால் சொல்ல வந்ததை சொல்ல முடியாது தடுமாற, அதற்குள் இவனோ, “ச் இப்பத்தான சொன்னேன். உன்ன என் கூடலாம் கூட்டிட்டு போக முடியாது” என்றான்.

இப்போது இவளோ, “நான் எப்படா கூட்டிட்டு போக சொன்னேன்? நானே கொஞ்ச நாள், இந்த வீட்டு தொல்ல இல்லாம நிம்மதியா இருக்கத்தான நினைச்சேன்” என்று கவுண்டர் கொடுத்தாள்.

அதற்குள் இவனோ, “ஒழுங்கா ஹாஸ்டல்ல இருந்து படிக்கிறதா? இருந்தா படி. இல்லையா ஊருக்கு கிளம்பி போ” என்று பேசி முடிக்கும் முன்னே அவன் முன்னே பைக் சாவியை நீட்டினாள் பூஜா.

அதில் அவன், அவளைப் பார்க்க, “உங்க சாவிய விட்டுட்டு போயிட்டீங்க. அத கொடுக்கத்தான் வந்தேன். பிடிங்க” என்று சொல்லியவள், அவன் கரத்தில் சாவியை திணித்து விட்டு அங்கிருந்து வெளியில் நடந்தாள்.

“ச்சே. என்னடா” என்று தன்னைத் தானே திட்டியவன், அதன் பின்னே சுதாரித்து அவளைப் பார்க்க, அவளோ காலேஜ் கேம்பஸை தாண்டி வெளியில் சென்றிருந்தாள்.

“இவ எதுக்கு வெளியப் போறா? ஹாஸ்டல் இந்தப் பக்கம் தான இருக்கு” என்று யோசித்தவன், பைக்கை எடுத்துக் கொண்டு வரும் முன்னே, அவள் எங்கோ மறைந்திருந்தாள்.

இவனுக்கோ பதட்டம் ஒரு பக்கம். அதே நேரம், அவர்கள் வீட்டினர் மீது அத்தனைக் கோவம். உடனே அடுத்த நொடி தன் அன்னைக்கு கால் செய்தான். ஆனால் அவரோ எடுக்கவில்லை. இவனும் தன் பைக்கை எடுத்துக் கொண்டு, அங்கே அருகில் இருந்த அத்தனை இடத்தையும் சுற்றியிருப்பான். ஆனால் பூஜாத்தான் அவன் கண்ணில் படவில்லை.

இப்படி அவனை மொத்தமாய் கதி கலங்க வைத்தவளோ, அங்கே பீச்சில், துப்பாக்கி சுடுவதில் தன்னுடைய முழு திறமையை காட்டிக் கொண்டிருந்தாள்.

சரியாக அன்னேரம் பூஜாவுடைய மொபைலுக்கு, தேவிகாவிடம் இருந்து அழைப்பு வர, “என்ன அத்த கூப்பிடுறாங்க” என்று யோசித்தப்படி அட்டண்ட் செய்து, “சொல்லுங்கத்த” என்றாள்.

“அவனுக்கு ஒரு கால் பண்ணி பேசிடேன் டா” என்றார். ஏனெனில். சில நிமிடங்களுக்கு முன்  அவர்களுக்கு கால் செய்து அவர்களை எல்லாம் திட்டி தீர்த்திருந்தான்.

“என்னாச்சுத்த” என்று இவள் கேட்க, “இல்லடா. அவன்கிட்ட சொல்லாம, உன்ன அங்க அனுப்புனதுல அவனுக்கு கோவம். அதுவும் போக, காலேஜ் ஹாஸ்டல்ல இடம் கிடைக்கலன்னு சொன்னதுல இன்னும் கோவமாகிடுச்சி. அதான் எதுக்கும் நீ ஒரு வார்த்த பேசிடுறீயாடா” என்றார்.

“சரிங்கத்த நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டு இப்போது மீண்டும் அந்த பலூனை சரி பார்த்து சுட்டாள். அதற்குள், அந்த சிறுவனோ, “ஐயோ அக்கா. போதும் தெரியாம உன்கிட்ட சவால் விட்டுட்டேன். இதுக்கு மேல் நீ சுடுறதுக்கு, என்கிட்ட பலூனும், இல்ல. குண்டும் இல்ல. விட்டுருக்கா” என்று கெஞ்சினான்.

“ம் அந்தப் பயம் இருக்கட்டும். செரி. போ. அந்த ஐஸ்கீரீம் கடையில போயி, அக்காக்கு பிடிச்ச ஸ்ட்ராபரி ஐஸ்கீரீம் வாங்கிட்டு வா” என்று காசை எடுத்து அவனிடம் நீட்ட, அவனுமே வாங்கிட்டு வந்து அவளிடம் கொடுத்தான். அவளோ அதன் பின்னே அவனிடம் பேசிவிட்டு அவளுடைய ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தாள். ஆனால் அர்ஜூனுக்கு கால் செய்யவில்லை.

அங்கே அர்ஜூனோ அத்தனைப் பேரையும் திட்டி தீர்த்து விட்டு “ச் நான் எதுக்கு அவள பத்தி யோசிக்கனும். முதல்ல அவ எனக்கு யாரு? அவ என்ன? என்ன கேட்டா, இங்க வந்தா. இல்ல, என்ன மதிச்சுத்தான், ஹாஸ்டல்ல இடம் கிடைக்கலன்னு சொன்னாங்களா. அப்படி இருக்கிறப்ப எனக்கென்ன வந்திச்சு? அவ ஜஸ்ட் என்னோட ஸ்டூடண்ட் மட்டும் தான்” என்று சொல்லிக் கொண்டு படுத்துக் கொண்டான். 

ஆனாலும், அடிக்கடி மொபைலை எடுத்து பார்க்கவும் செய்தான். ஆனால் அவனுடைய அம்மாத்தான் கால் செய்து, “அவ ஹாஸ்டல் போயிட்டாளாம். அங்க எல்லாம் அவளுக்கு ஒகேத்தானாம்” என்று சொல்லியிருந்தார்.

“ஏன் அவளுக்கு எனக்கு கால் பண்ண கூட முடியாதா?” என்று நினைத்தவனுடைய ஈகோ அதன் பின் அவளைப் பற்றி யோசிக்க விடவில்லை.

அடுக்கடுத்த நாளில் இருந்து, பூஜாவுக்கு பிரியா, விஷ்வாவுடன் கல்லூரி சிறப்பாகவே சென்றது. அர்ஜூனுடைய கிளாஸில் மட்டும் பூஜா பெரிதாய் எந்த வாலுத்தனமும் செய்வதில்லை. மற்றப்படி மற்ற எல்லா வகுப்பிலும் அவுட் ஸ்டாண்டிங் ஸ்டூடண்டாய் மாறியிருந்தாள்.

பாதி நேரம் வகுப்புக்கு வெளியிலும், கேண்டீனிலும் தான் இருந்தாள். அதை அடிக்கடி அர்ஜூன் பார்த்தாலும் கூட, ஏனோ மற்ற ஆசிரியர்கள், வேண்டுமென்றே அவளிடம் அப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டான்.

ஏனெனில், பொதுவாகவே ஆசிரியருக்கு ஒரு மாணவியை பிடிக்க வில்லை என்றால், இப்படி நடந்துக் கொள்வது அவனுக்குமே தெரியும்த்தான். அது அவனுக்கு கோவத்தை கொடுத்தது. ஆனாலும் பூஜா அதற்காக கூட அவனிடம் வந்து நிற்காதது ஒரு வித கடுப்பை பூஜாவின் மீது ஏற்படுத்தியது.

(ஏன்பா ராசா. நீத்தான அந்தப் புள்ளைக்கும், உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு சொன்ன. இப்போ என்னென்னா, நீயே இப்படி பண்ணிட்டு இருக்க. என்னமோ போ)

இப்படியாக முழுதாய் ஒரு வாரம் கடந்திருந்தது. அன்று வார இறுதி நாள் என்பதால், தேவிகா அர்ஜூனுக்கு கால் செய்து, “பூஜாக்கு கொஞ்சம் திங்க்ஸ் எல்லாம் வாங்க வேண்டியிருக்காம். நீ கூட்டிட்டு போயி வாங்கி கொடுக்கிறீயா” என்றார்.

அதில் இவனோ கோவமாய், “ச் நான் எதுக்கு வாங்கி கொடுக்கனும். இதுக்காகத்தான், இதெல்லாம் வேண்டாம்னு சொன்னேன். இப்போ இப்படி சொல்லுவீங்க. அதுக்கப்புறம் அவள, இங்கே கூட்டிட்டு வந்து வச்சிக்க சொல்லுவீங்க. உங்க பேச்ச கேட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்றதுக்காக, எல்லாத்தையும் உங்க விருப்பப்படியே பண்ணிப்பேன்னு நினைச்சிக்காதீங்க” என்று சாமியாடினான்.

அதில் அவரோ, “இப்போ என்ன முடியாதுன்னா விடு. அவ அவ பிரண்ட்ஸோடவே போயிட்டு வரட்டும்” என்று சொல்லிவிட்டு கட் செய்ய முயற்சித்தார்.

“என்ன பிரண்ட்ஸ் கூடவா?” என்று அர்ஜூன் கேட்க, “ஆமா” என்று தேவிகா சொல்ல, “உங்களுக்கு அறிவு இருக்கா? இல்லையா? அவ இங்க வந்தே ஒரு வாரம் தான் ஆகுது. அதுக்குள்ள அவளுக்கு அப்படி யார தெரியும்? அதுலையும் அவங்கள நம்பி, இவளையும் போக சொல்லியிருக்கீங்க” என்று அதற்கும் திட்டினான்.

அதில் அவருக்கோ இப்போ கோவம் வந்து விட, “ஏண்டா? பொண்டாட்டின்னு இல்லாட்டியும், ஒரு தெரிஞ்ச பொண்ணுன்னு நினைச்சாச்சி, நீ நடந்துப்பன்னு நினைச்சித்தான் உன்கிட்ட சொன்னேன். நீத்தான முடியவே முடியாதுன்னு சொன்ன. இப்போ மட்டும் என்ன அவ மேல உனக்கு அக்கற. அவ என்னமோ பண்ணிட்டு போகட்டும். நீ ஒன்னும் கவல பட வேண்டாம்” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார் தேவிகா.

இங்கே அர்ஜூனுக்குத்தான் எரிச்சல் தாறுமாறாய் கூடியது.

(சபாஷ் தேவிமா. வெரி குட். என்னப்பா அர்ஜூன். பொண்டாட்டி மேல அம்புட்டு அக்கற இருந்தா. நீயே கூட்டிட்டு போறது. சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. பெஸ்ட் கமெண்ட்ஸ பேனர்ல போஸ்ட் பண்ணிருக்கேன். சோ உங்க கமெண்ட்ஸும் அதுல வரலாம். சோ அத செக் பண்ணிக்கோங்க.  அப்புறம் மறக்காம ரேட்டிங் கொடுத்திடுங்க)

தொடரும்…

Comments   15

*** வரம் – 14 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***