விழி வேகமாய் கவியை கட்டிக் கொள்ள, அவளோ தன்னில் இருந்து அவளை விலக்கி, “உனக்கு ஒன்னும் இல்லத்தான?” என்று மேலிருந்து கீழாக பார்த்தாள், அப்போதே அவள் முன் நெற்றியில் ஏதோ இரத்த காயம் தெரிய, “ஹேய் என்னாச்சு” என்றவள் வேகமாய் அவள் கன்னத்தில் கரம் பதிக்க, விழியோ வலியில் முகம் சுருக்கினாள்.
அதில் மேலும் பதறியவள், “என்னாச்சு உனக்கு?” என்றவள் அவசரமாய் வேறு எங்கும் அடிப்ப்பட்டிருக்கிறதா என்று பார்த்தாள்.
அதற்குள் விழியோ, “ஒன்னும் இல்ல சின்ன ஆக்ஸிஸ்டெண்ட் அவ்வளவுத்தான்” என்று வெளியில் வர துடித்த கண்ணீரை இழுத்துப் பிடித்துக் கூறினாள்.
“என்ன சொல்ற நீ? ஆக்ஸிடெண்டா? வா ஹாஸ்பிடல் போலாம்” என்று கவி அழைக்க, இங்கே விழியோ, “இல்ல இல்ல அவ்ளோ பெருசுலாம் ஒன்னும் இல்ல. நீ எங்கப் போன?” என்றாள்.
“உன்னத் தேடித்தான்” என்று சொல்லிய கவி. பின், “நீ வா முதல்ல” என்று அவளே, அவள் காயத்துக்கு மருந்திட்டாள். பின்பு அவள் கையிலுமே சிறு சிறு நக காயங்கள் இருக்க, “கையில என்னது?” என்று கவி அவள் கரத்தைப் பிடிக்க சென்றாள்.
சட்டென்று தன் கரத்தை சுருட்டிக் கொண்டவள், “நான் போயி ட்ரஸ் மாத்திட்டு வரேன்” என்றப்படி அருகில் இருந்த உடையை எடுத்து கொண்டு குளியலறைக்குள் புகுந்தாள் விழி.
ஆனால் அவளுடைய உடலும், மனமும் உள்ளே கொதித்துக் கொண்டிருந்தது. அப்படியே சவரின் அடியில் சென்று நின்றவளுக்கு, கண்களில் இருந்து கண்ணீர் கொட்ட, அங்கேயே மடிந்து அமர்ந்து விட்டாள்.
இங்கே கவிக்கோ விழியை பார்த்துவிட்டதே பெரிய நிம்மதியைக் கொடுத்தது. அதில் அவளுமே அப்படியே அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தாள். அப்போதே தரையில், ஈரமும், இரத்தமும் சிந்தியிருப்பதைப் பார்த்தாள்.
அதில் பதறியவள், “விழி” என்று வேகமாய் குளியலறைக் கதவைத் தட்ட, அப்போதே சுயம் பெற்றவள், ஷவரை அணைத்து விட்டு, “என்ன கவி?” என்றாள்.
அழுகையில் வார்த்தை வர மறுத்தது. “உனக்கு வேற எங்கையும் அடிப்பட்டிருக்கா?” என்று பதட்டமாய் அவள் கேட்க, அதன் பின்னே, அவள் தன் உடல் காயங்களையே பார்த்தாள். அதுவும் போக, “ஆ” என்று அழக் கூட முடியாத அளவுக்கு வாயை மூடிக் கொண்டாள்.
“விழி. விழி” என்று கவி வெளியில் இருந்து கதவைத் தட்ட, “இல்ல இல்ல விழி. பி ஸ்ட்ராங்” என்று தனக்குத் தானே சொல்லியவள், “ஆ..ங் கவி. அதெல்லாம் இல்ல. கொஞ்சம் பேட் மட்டும் எடுத்துத் தறீயா? ப்ரீயட்ஸ்” என்று சிறு தயக்கத்துடன் கூறினாள்.
அதன் பின்னே சற்று நிம்மதியானவள், “சரி சரி. நான் எடுத்து தரேன்” என்றப்படி வேறு உடையையும், அவள் கேட்டதையும் எடுத்து கதவைத் தட்டினாள்.
அதை வாங்கிக் கொண்ட விழியோ, “சரி கவி நீ போயி முதல்ல ட்ரஸ் மாத்து” என்று சொல்ல, “சரி நீ பொறுமையா குளிச்சிட்டு வா” என்றப்படி அந்த அறையை சுத்தம் செய்தாள் கவி.
இங்கே விழியோ தேம்பி தேம்பி அழுதுக் கொண்டிருந்தாள். இன்னும் கூட நடந்த காட்சிகள் கண் முன்னே நிழலாட, அவளுக்கு மூச்சு கூட விட முடியவில்லை.
“அழு நல்லா அழு. இத பார்த்து உன் அண்ணன் கதறித் துடிக்கனும்” என்றவனுடைய குரல், அவள் காதில் கேட்க, சட்டென்று அழுகையை துடைத்தாள்.
“நான் எதுக்கு அழுகனும்? நான் அழ மாட்டேன்” என்றவள் அவசரமாய் முகத்தை துடைத்தாள். ஆனாலும் உடலெல்லாம் இருந்த நகக் கீறல்களும், பல் தடங்களும், பற்றாக்குறைக்கு உடலில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் இரத்தப் போக்கும், அவளை தடுமாற வைத்தது. உடல் மொத்தமும் சோர்ந்துக் கிடக்க, மேலும் சில நிமிடங்கள் கழித்தே, உடை மாற்றி வெளியில் வந்தாள்.
அவள் வரும் போது அறை எல்லாம் சுத்தமாய் இருக்க, அறிவும் கூட, “நடந்த எல்லாத்தையும் கனவா நினைச்சி மறந்துடு விழி” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.
ஆனாலும் உடல் எல்லாம் இன்னும் அந்த அதிர்வில் இருந்து வெளியில் வராமல் இருக்க, இப்போதும் கூட எப்படி அங்கிருந்து இவ்வளவு தூரம் வந்து சேர்ந்தாள்? என்று அவளுக்கே தெரியவில்லை.
ஏதோ ஒரு வேகம். வந்து விட்டாள். அவளுடைய மொபைல் அந்த ஹெஸ்டவுஸில் தான் இருந்தது. அதை எடுத்தவனின் முகம் ஏதோ வேட்டையாடி களைத்த சிங்கத்தினைப் போல் இருந்தது.
“எனக்கு நீ பண்ண எல்லாத்துக்கும், உனக்கு நான் கொடுத்திருக்கிற கிப்ட் ரொம்ப பெருசு. எஞ்சாய் வேந்தன்” என்று குரோதமாய் சொல்லியவன். கிழிந்து கிடந்த அவனின் சட்டையை காலால் உதைத்து குப்பைத் தொட்டியில் வீசியிருந்தான்.
அந்த சட்டையைத் தாண்டி, அவனுடைய நெஞ்சிலும் கூட, நகக் கீறல்களும், பல் தடங்களும் சற்று ஆழமாய் பதிந்திருக்க, அதை தடவியவனுக்கு எரியவில்லை. அதற்கு மாறாக, பல நாள் பகையை தீர்த்துக் கொண்ட வெறி மட்டுமே அவனிடம்.
ஆனால் அந்த காயங்களுக்குள் விழியுடைய கதறலும், கெஞ்சலும், கண்ணீரும், ஒழிந்திருப்பதை அந்த மூடன் அறிய மறுத்தான். அவனின் பலிவாங்கல் வெறி ஒரு பெண்ணுடைய மனதையும், உடலையும் மொத்தமாய் கொன்று புதைத்ததை அவன் அறிந்திருக்கவில்லை.
இப்போது அவள் மொபைலில் இருந்த கவியும் விழியும் சேர்ந்திருந்த அந்த வால்பேப்பரை எடுத்துப் பார்த்தவன், “இதுக்கப்புறம் உனக்காகவாச்சும், கவி என்கிட்ட வருவா” என்று நக்கலாய் சொல்லிவிட்டு, அந்த மொபைலையும் தூக்கி வீசியிருந்தான்.
இங்கே கவியுமே அவசரமாய் உடை மாற்றிவிட்டு, கீழே வந்து விழிக்கு சூடாக மசாலா பாலையும், கூடவே அவள் வழக்கமாய் எடுத்துக் கொள்ளும் அவுள் வடையையும் வேகமாய் செய்து எடுத்துக் கொண்டு விழியைத் தேடி சென்றாள்.
அவளோ அப்படியே சோபாவில் அமர்ந்திருக்க, “நல்ல வேள தூங்கல நீ. இந்தா முதல்ல இந்த பால்ல குடி. அப்புறம் இத சாப்டு. கொஞ்சம் நல்லா இருக்கும்” என்று நீட்டினாள்.
விழி அப்படியே இருக்கவும், “என்னாச்சுமா? வலி எதுவும் இருக்கா?” என்று மெல்ல அவள் வயிற்றில் கரம் பதிக்கப் போக, அதற்குள், அவள் கரத்தைப் பிடித்து அவள் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.
அதில் மெல்ல அவள் தலைக் கோதியவளோ, “ஹேய் தல ஈரமா இருக்குப் பாரு” என்று அருகில் இருந்த துண்டை எடுத்து அவள் துவட்டி விட்டாள்.
அதில் கவியையே விழி பார்க்க, “ஹேய் என்ன? அதுக்குத்தான் ஹாஸ்பிடல் போலாம்னு சொன்னேன். எதுக்கும் டாக்டர வர சொல்லவா?” என்றாள்.
“ஆ..ங் இல்ல இல்ல வேண்டாம். அதெல்லாம் ஒன்னும் இல்ல. நைட் புல்லா என்ன தேடுனீயா?” என்றாள் விழி.
“பின்ன தேட மாட்டாங்களா? ஆமா உன் மொபைல் எங்க?” என்று கவி கேட்க, அப்போதே அவளுக்கு அது குறித்தே நினைவே வந்தது. “அத் அது எங்கையோ அது மிஸ் ஆகிடுச்சி” என்றாள்.
“இன்னும் நீ சின்ன பிள்ளையா இருக்கிறதுத்தான் விழி என் கவலையே. கொஞ்சம் கூட கவனமா இருக்கிறதே இல்ல” என்றாள்.
“ஆமா நீ சொல்றது சரித்தான். நான் கவனமா இருந்திருக்கனும்” என்றாள். அதில் கவியோ, “என்ன? வழக்கமா நான் அப்படி சொன்னா, அப்படி இல்லன்னு சொல்லுவ. இன்னிக்கு மேடமே ஒத்துக்கிறீங்க?” என்றாள்.
“ஆ..ங் அதெல்லாம் விடு. அண்னா எப்போ வர்றாங்க?” என்று விழி கேட்க, “அது காலையில பிளைட்ல வரேன்னு சொன்னாரு” என்றவள் அவளுக்கு குடிக்க பாலை புகட்டினாள்.
அன்னேரமே வேந்தனும் வந்திறங்கியிருக்க, கார் சத்தம் கேட்கவும், “உன் அண்ணாவே வந்துட்டாரு போல. நில்லு உன் அண்ணாக்கிட்ட சொல்றேன். அவர் சொன்னாத்தான் நீ” என்றப்படி கவி எழுந்தாள்.
அதற்குள் அவள் கையைப் பிடித்த விழியோ, “ப்ளீஸ் ப்ளீஸ் கவி. இன்னிக்கு நடந்தத அண்ணாக்கிட்ட சொல்லாத ப்ளீஸ்” என்று கெஞ்சலாய் கேட்டாள்.
“அவ்ளோ பயம் இருக்குல. இதுக்கப்புறம் இப்படி எல்லாம் நீ பண்ணக் கூடாது” என்றாள் கவி.
“சத்தியமா பண்ண மாட்டேன்” என்று வேகமாய் கவியின் தலையில் கை வைத்தாள்.
அதில் கவியோ விழியை குழப்பமாய் பார்க்க, அதற்குள், “கவி” என்ற வேந்தனின் குரல் அவள் செவியை அடைந்தது.
அவனின் குரலில், “இந்தா வாரேன்” என்றப்படி அவள் எழ, கவியின் குரல், விழியின் அறையில் இருந்து வரவும் வேகமாய் அங்கு வந்தான்.
அவனைப் பார்த்ததும், விழிக்கோ ஒரு வித பயம். கவிக்கோ ஒரு வித பதட்டம். அவனிடம் சொல்லாது எப்படி சமாளிப்பது? என்று அவள் யோசிக்க அவனுக்கோ அவர்கள் இருவரையும் பார்த்தப் பின் தான் மூச்சே வந்தது.
வேகமாய் வந்தவன் கவியை ஒரு பார்வை பார்த்து விட்டு, “குட்டிமா நீ நல்லா இருக்கத்தான” என்றப்படி அவளின் அருகில் ஓடி சென்று அமர்ந்துக் கொண்டான்.
அவனின் வார்த்தையில், “அண்ணா” என்று வேகமாய் அவனைக் கட்டிக் கொண்டாள். அதைப் பார்த்த கவியோ, வேந்தனுக்கு குடிக்க காபி போட்டு எடுத்து வர நினைத்து அங்கிருந்து செல்ல முயன்றாள்.
அதற்குள் ஒரு கரத்தால் தங்கையை அணைத்திருந்தவன், மறு கரத்தால், அவளுடைய கரத்தைப் பிடித்தான். அதில் அவள் அவனைப் பார்க்க, அவனோ, தன்னருகில் அமர கூறினான்.
அவன் கண்ணில் தெரிந்த பதட்டத்தை உணர்ந்தவள், எதுவும் சொல்லாது அவனின் கையைப் பிடித்தப்படி அவனின் மறுபக்கம் அமர்ந்துக் கொண்டாள்.
ஏனோ அவனுக்கு இருவரும் தன்னிடம் தான் இருக்கிறார்கள் என்று மனதில் பதிய வைக்க சில கணங்கள் தேவையாய் இருந்தது.
அதன் பின்னே, “ஆமா இன்னேரத்துல ரெண்டு பேரும் தூங்காம என்னப் பண்ணிட்டு இருக்கீங்க?” என்று கேட்டான்.
“ஆ..ங் அது” என்று கவி விழியைப் பார்க்க, அவளுக்கோ உள்ளுக்குள் இதயம் அத்தனை பலமாய் துடித்தது. அதற்குள் கவித்தான், “மணி என்னாச்சு தெரியுமா?” என்றாள்.
அதில் கடிகாரத்தைப் பார்க்க, கிட்ட தட்ட, மணி ஆறை தொட்டிருந்தது. அதில் இருவரையும் பார்த்தவன், “என்ன? நான் இல்லன்னு ரெண்டு பேரும் மழையில நனைச்சீங்களா?” என்று கேட்டான்.
“ஆ..ங் அது வந்து இல்ல” என்று இருவருமே தடுமாற, அவனோ இப்போது சிரித்தான்.
“சரி சரி. உங்களுக்கு ஒன்னும் இல்லத்தான?” என்று மீண்டும் ஒரு முறை இருவரையும் பார்த்தான்.
“எங்களுக்கு என்ன?” என்று கவி விழியைப் பார்க்க, “நீங்க இருக்கிறப்ப எங்களுக்கு என்ன அண்ணா ஆகப் போகுது?” என்று வெளிவரத் துடித்த கண்ணீரை உள்ளடக்கி கூறினாள் விழி.
“சரிடா. நான் போயி ரிபிரஸ் ஆகிட்டு வரேன். நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. இன்னிக்கு ஆபிஸ் இருக்கா?” என்று கேட்டான் வேந்தன்.
அந்த கேள்வியில் இப்போது விழிக்கோ, ஆர்யனின் சிரித்த முகமும், அதற்குள் ஒழிந்திருக்க அரக்க குணமும் ஒரே நேரத்தில் நினைவில் வர, அவள் உடல் நடுங்கியது.
அதற்குள் வேந்தனோ, “ரெண்டு பேருமே இன்னிக்கு ஆபிஸ் போக வேண்டாம். நம்ம எங்கையாச்சும் போகலாம் சரியா?” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.
இங்கே கவியோ விழியிடம், “சரிடா நீ படுத்து கொஞ்ச நேரம் தூங்கு. நான் சாப்பிட எழுப்புறேன்” என்றவளும் செல்லப் போக, இப்போது கவியின் கரத்தைப் பிடித்தாள் விழி.
அதில், “என்ன?” என்று அவள் திரும்ப, “நான் தூங்குற வரைக்கும் என் கூட இருக்கீயா?” என்று கேட்க, அதில் கவியோ விழியை சந்தேகமாய் பார்த்தாள்.
“இல்ல இந்த மாதிரி டைம்ல எனக்கு உன் மடியில படுத்தே பழக்கமாகிடுச்சி” என்றாள் விழி. அதில் கவியும், எதுவும் சொல்லாது அவளருகில் அமர்ந்து அவளை தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டாள்.
(விழிக்கு நடந்தது வேந்தனுக்கு தெரிய வந்தால்? இல்லை கவி மட்டும் ஆர்யனை சந்தித்தால்? இந்த கேள்விக்கான பதில கண்டிப்பா அடுத்தடுத்த எபிசோட்லத்தான் பாக்கனும். சரி அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தித்திக்குமா?..
gayathri Shini
nice sister
Saranya Prabu
பெண்மையில் விளையாடுவது மிக தவறு…. ஆரியன் செயல் மிக தவறு …. வேந்தன் மீது நம்பிக்கை உள்ளது …. மீண்டு வா வழி | !!!!