தேன் – 70

அன்று அலுவலகம் வந்த விழிக்கு, ஆர்யனிடம் சில குறிப்பிட்ட விவரங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. கிட்ட தட்ட இரண்டு நாட்களாய், அவனைத் தவிர்த்தவளுக்கு இப்போது, அவனைப் பார்த்தே ஆக வேண்டும். அதனால், வேறு வழியின்றி அவன் கேபின் நோக்கி சென்றாள்.

“என்னாச்சு விழி உனக்கு? அந்த ஆர்யன் உன்னோட பாஸ். அவ்வளவுத்தான்” என்று தனக்குத் தானே அழுத்தமாய் சொல்லிக் கொண்டு கேபின் கதவைத் திறக்க, அங்கே ஆர்யன் இல்லை.

அதில் குழப்பமாய் அவள் சுற்றிப் பார்க்க, அன்னேரம் அங்கு வந்த அவனுடைய அஸிஸ்டெண்டோ, “என்னாச்சு? ஏன் இங்க நிக்குறீங்க?” என்றான்.

“இல்ல சார பார்க்கனும்” என்று அவள் சொல்ல, “இன்னிக்கு சார் ஆபிஸுக்கு வரல. அவருக்கு ஏதோ ஹெல்த் இஸ்யூன்னு சொன்னாங்க” என்று சொல்லிவிட்டு அவன் சென்று விட, இப்போது விழிக்கோ சிறு பதட்டம்.

“உடம்புக்கு முடியலையா?” என்று யோசித்தவளின் விரல்கள் அடுத்த நொடி ஆர்யனுக்கு கால் செய்ய போக, “இல்ல இல்ல. நீ எதுக்கு கால் பண்ணனும். வேண்டாம்” என்று மூளை எச்சரித்தது.

அதே நேரம் இதற்கு முன்பு அவளுக்கு உடல் நிலை சரியில்லை என்று தெரிந்ததும், அவனே அவள் கேபின் வந்து அவளுக்கு தேவையானதை எல்லாம் பார்த்து பார்த்து செய்திருந்த ஆர்யனின் முகம் நினைவடுக்கில் வந்து இம்சித்தது.

“அச்சோ ஆர்யன். சாதாரன ஹெட்டேக் தான். அதுக்குப் போயி டாக்டர எல்லாம் வர சொல்லுவீங்களா?” என்றாள் விழி.

“நோ நோ. யுவார் மை ஸ்பெஷல் பர்ஷன். உனக்கு ஏதாச்சும் ஆச்சின்னா, என்னால என் வேலைய பாக்க முடியாது. இப்போ நீ மட்டும் டாக்டர பாத்துக்க ஒத்துக்கலன்னா, நாள் புல்லா, இப்படி நான் உன் பக்கத்துல உட்கார்ந்து உன்னத்தான் பார்த்துட்டு இருப்பேன்” என்று அடம்பிடித்தான்.

அவனின் அடத்தில். விழியின் மனம் தடுமாற, அவனோ, மெல்ல அவள் கழுத்தில் கரம் பதித்து, “காய்ச்சல் எதுவும் இல்லத்தான” என்றான். ஏனோ அவனின் தொடுகை பெண்ணவளை தடுமாற வைத்திருக்க, “ஆ..ங் அதெல்லாம் ஒன்னும் இல்ல” என்றப்படி விலகி அமர்ந்தாள்.

அவனோ, “ப்ளீஸ் விழி. பர்ஸ்ட் உன்ன நீ பார்த்துக்கோ. அதுக்கப்புறமா, வேலைய பாக்கலாம்” என்றப்படி அன்று முழுவதும் அவளை கூடவே இருந்து பார்த்துக் கொண்டான். அவள் வீட்டுக்கு சென்ற பின்னும் கூட, மணிக்கு ஒரு முறை கால் செய்து அவள் உடல் நிலை குறித்துக் கேட்டான்.

அப்படி இருக்க, இப்போது, ஒரு கால் செய்ய தயங்குவது அவளுக்கே என்னமோ போல் தோன்ற, கால் செய்ய முயன்றாள். ஆனால் அதற்குள்ளாக, அவளுடைய ஹெட்டிடம் இருந்து அழைப்பு வந்தது.

அதில் அட்டண்ட் செய்து, “சொல்லுங்க சார்” என்று சொல்ல, “என்னம்மா? சார்கிட்ட அப்ரூவல் வாங்கிட்டீயா? பிகாஸ் அவர்கிட்ட அப்ரூவல் வாங்குனாத்தான், நம்மளால டெலிகேஸ்ட் பண்ண முடியும். நம்ம கிட்ட டைம் இல்ல” என்றார்.

“இல்ல சார். இன்னிக்கு ஆர்யன் சார் ஆபிஸுக்கு வரல” என்று விழி சொல்ல, “அட என்னம்மா நீ? நம்ம ஒர்க்கே பீல்ட் ஒர்க் தான். சார் எங்க இருக்காருன்னு கேட்டு, அங்கப் போயி சைன் வாங்கிட்டு வாம்மா” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தார்.

அதில் அவளுமே ஒரு நொடி யோசித்துவிட்டு அடுத்த நொடி ஆர்யனுக்கு கால் செய்தாள். அழைப்பு சென்றதே தவிர, அவன் எடுக்கவில்லை.

“என்னாச்சு?” என்று யோசித்தவளுக்கு இப்போது அவனுக்கு எதுவும் பிரச்சனையாகிருக்குமோ என்ற மெல்லிய பதட்டம் எட்டிப் பார்த்தது. அதனாலையே, மீண்டும் கால் செய்தாள். இப்போது யாரோ ஒருவர் அட்டண்ட் செய்து, “சாருக்கு ரொம்ப உடம்புக்கு முடியல. அவர் ரூம்ல இருக்காரு. போன்ன இங்க வெச்சிட்டு போயிட்டாரு” என்ற தகவலை கூறினர்.

“என்ன? இப்போ அவரு எங்க இருக்காரு?” என்று கேட்டவள், அடுத்து எதையுமே யோசிக்கவில்லை. உடனே அவன் தனக்காக கொடுத்த காரை எடுத்துக் கொண்டு ஆர்யனுடைய ஹெஸ்ட்வுஸ் நோக்கி கிளம்பியிருந்தாள்.

ஆனால் அவள் யோசித்திருக்க வேண்டும். அவனுடைய மொபைலை வேறு ஒருவர் அவன் அனுமதி இன்றி தொட முடியுமா? இல்லை. இத்தனை தூரம் பேசுபவர்கள், அவனை மருத்துவமனை அழைத்து செல்ல மாட்டார்களா? என்று.

ஆனால் என்ன செய்வது? காதல் ஒருவரின் மீது வந்து விட்டால், மனம் மூளை சொல்வதை கேட்பதே இல்லை. ஆம் காதல் தான் விழிக்கு ஆர்யனின் மீது. அது முழுதாய் இன்னும் காதலாய் மாறவில்லைத்தான்.

அவனைப் பார்த்த முதல் நாள் தொட்டு வந்த ஈர்ப்பு. அது தானாக வந்ததா? இல்லை அவன் உருவாக்கினானோ? ஏதோ ஒன்று. ஒரு ஆடவனை, அதுவும் இன்னமும் முழுதாய் கூட பரிட்சையம் ஆகாத ஒருவனைத் தேடி ஹெஸ்டவுசிற்கு சென்றுக் கொண்டிருந்தாள் விழி.

அங்கே அவனுடைய அறையில் அமர்ந்து திராட்சை பழத்தை ரசித்துக் கொண்டிருந்தவனுடைய கண்களில், நிச்சயம் குரோதம் பளிச்சிட்டது.

“இப்போ நீ என்ன தேடி வந்துத்தான் ஆகனும். ஆனா இதுக்கப்புறம் நீ என்னை விட்டு போகவே முடியாது” என்று சொல்லிக் கொண்டான்.

அவனுக்கு என்னானதோ? ஏதானதோ? என்ற பதட்டத்தில் காரை ஓட்டியவள், இடையில் வேறு காரை ஒரு இடத்தில் மோதியிருந்தாள். அதில் அவள் நெற்றியில் மெல்ல இரத்தம் சிந்த ஆரம்பித்தது.

அங்கே ஏதோ வேலையில் இருந்த கவிக்கு, சட்டென்று மனம் என்னமோ செய்ய, அங்கே வேந்தனுக்குமே பொரையேற ஆரம்பித்தது. அருள் வந்து அவனுக்கு குடிக்க தண்ணீர் எடுத்துக் கொடுக்க, ஏதோ ஆபத்து என்று மனம் அடித்து சொல்லியது.

அதில் அதை வாங்கிக் கொள்ளாது, “டிக்கெட் எப்போ புக் பண்ணியிருக்க?” என்று கேட்டான் வேந்தன்.

“நாளைக்கு ஈவ்னிங் சார்” என்று அருள் சொல்ல, “இல்ல, இயர்லி மார்னிங் பிளைட் புக் பண்ணு” என்றான். “ஆனா சார். இங்க” என்று அருள் சொல்லி முடிக்கும் முன்னே, “மீதிய நீ இருந்து பார்த்துக்கோ. அதுக்கு மேல, தலைவர் கேட்டா, நான் பேசிக்கிறேன்” என்றான்.

இங்கே கவியோ மணியைப் பார்த்தாள். கிட்ட தட்ட ஆறு மணியைத் தொட்டிருந்தது. மழை எப்போது வேண்டுமானாலும் கொட்டி தீர்த்து விடும் என்று சொல்லும் அளவுக்கு, வானம் கரு மேகத்தால் சூழ்ந்திருந்தது.

“விழிக்கு ஒர்க் முடிஞ்சிருச்சா?” என்று யோசித்தப்படி வேந்தனும், கவியும் ஒரே நேரத்தில் அவளுக்கு கால் செய்ய, லைன் தான் இருவருக்கும் கிடைக்கவில்லை.

இங்கே விழியோ, தனக்கு அடிப்பட்டதைக் கூட பொருட்படுத்தாது, காரை மீண்டும் ஸ்டார்ட் செய்து ஆர்யனுடைய கெஸ்டவுஸிற்கு வந்து சேர்ந்தாள்.

கிட்ட தட்ட சிட்டியை விட்டு தள்ளி இருந்த அந்த பங்களா, அந்த மழை நேரத்தில் சிறு திகிலை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவளுக்கோ அது எதுவுமே மூளையில் பதியவில்லை. வாசலில் காரை நிறுத்தி விட்டு அவசரமாய் விழி வீட்டு ஹாலிங் பெல்லை அடிக்க, வீட்டில் வேலைப் பார்க்கும் ஒருவர் வந்து கதவைத் திறந்தார்.

அவரோ இவளைப் பார்த்து, “யாரு நீங்க?” என்று கேட்க, “ஆர்யன் சார பாக்கனும்” என்றாள்.

அதில் இப்போது அவரோ அவளை கேள்வியாய் பார்த்தார். ஒரு வயது பெண், அதுவும் இந்த நேரத்தில் வந்திருக்க, ஏதோ சொல்ல முயற்சித்தார்.

அதற்குள், உள்ளிருந்து வந்த இன்னொரு பெண்ணோ, “சார் மேலத்தான் படுத்திருக்காரு” என்றார். “சரி நான் போயி பாக்குறேன்” என்றவள் எந்த உரிமையில், இப்படி ஒருவர் வீட்டுக்குள் செல்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை.

ஆனால் அவள் சென்றதும், இப்போது அந்த வீட்டில் மிச்சமிருந்த வேலையாட்கள் அனைவரும் அவர்கள் வேலை முடிந்தது என்பது போல், அங்கிருந்து கிளம்பியிருந்தனர்.

இவள் ஆர்யனுடைய அறை எது என்று தெரியாது தயங்கி நிற்க, அங்கே வெளியில் மழை பெய்ய ஆரம்பித்தது.

“இதுல எந்த ரூம்மா இருக்கும்?” என்று அவள் யோசிக்க, ஏதோ ஒரு அறையில் இருந்து சத்தம் கேட்க, சற்றும் யோசிக்காது அங்கு ஓடியிருந்தாள்.

இங்கே வேந்தனோ விழிக்கு கால் செய்து லைன் கிடைக்காததால், அடுத்ததாக கவிக்கு கால் செய்தான்.

“சொல்லுங்க சுடர்” என்று கவி சொல்ல, “எங்க இருக்க கவி? அங்க எல்லாம் ஒகேத்தான” என்று கேட்டான். அவன் குரலில் தெரிந்த பதட்டத்தில், தன் பயத்தை மறைத்தவள், “என்னாச்சு சுடர்? ஏன் ஒரு மாதிரி டென்சனா பேசுறீங்க?” என்று கேட்டாள்.

“ஆ..ங் இல்ல. என்னமோ குட்டிமாக்கிட்ட பேசனும்னு நினைச்சேன். வீட்டுக்கு போயிட்டீயா? அவ வந்துட்டாளா?” என்றான்.

“இல்ல. இப்பத்தான் ஆபிஸ்ல இருந்து கிளம்ப போறேன். அவ ஆபிஸ் போயி பிக் பண்ணிட்டு கூப்டவா?” என்று கேட்டாள்.

“ம் சரி ! பட் கவனமா இருங்க செரியா” என்றான். “இங்க நாங்க பத்திரமாத்தான் இருக்கோம். நீங்க எதையும் போட்டு குழப்பிக்காதீங்க” என்றாள்.

“இல்ல கவி. நான் இப்படி உங்கள தனியா விட்டுட்டு வந்திருக்க கூடாது” என்றான். என்னமோ வேலை வேலை என்று, இவர்களுடன் நேரம் செலவிட கூட முடியவில்லையோ என்று அவனுக்கு தோன்றியது.

அதிலும் உள் மனம் யாருக்கோ? ஏதோ ஆபத்து என்று அடித்து சொல்ல, அவன் வார்த்தைகள் அப்படி வெளிவந்தது. அதை உணர்ந்தது போல், “ச் சுடர். நாங்க என்ன சின்னப் பிள்ளையா?” என்றாள்.

“இல்ல. அப்படி நான் யோசிச்சுத்தான் ஏற்கனவே நான்” என்று ஏதோ சொல்ல வந்து பின் நிறுத்தி, “இன்னிக்கு ஒரு நாள் மட்டும் பாத்துக்கோ. நான் நாளைக்கு வந்துடுறேன்” என்றான்.

“நீங்க சொன்ன மூனு நாள் நேத்தோட முடிஞ்சிருச்சி எம்.எல்.ஏ சார்” என்று நினைவுப்படுத்தினாள்.

அதில் இப்போது மெல்ல சிரித்தவன், “கணக்குல மேடம் புலின்னு ஒத்துக்கிறேன்” என்றான்.

“பட் நீங்க நான் கொடுத்த ஆபர மிஸ் பண்ணிட்டீங்க” என்றாள்.

“என்னது? அதெல்லாம்” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்னே, “அவ்ளோ அக்கற இருந்திருந்தா சரியான நேரத்துக்கு கிளம்பி வந்திருக்கனும்” என்றாள்.

அவள் அவனின் மனநிலையை மாற்ற பேச, அது சற்றும் வேலையும் செய்தது.

அவனோ வேகமாய், “நான் வந்ததுக்கப்புறம், அந்த ஆபர் இருக்கா? இல்லையான்னு செக் பண்றேன். நீ வீட்டுக்கு போயிட்டு கால் பண்ணு” என்று அழைப்பைத் துண்டித்தான்.

அதன் பின் மீண்டும் அருளை அழைத்து, “அடுத்து ஏதாச்சும் பிளைட் இருக்கா?” என்று கேட்டான்.

“பாக்குறேன் சார்” என்று சொல்லியவன், “இன்னும் ஆப் அன் ஹவர்ல ஒரு பிளைட் இருக்கு சார். பட் இப்போ நீங்க கிளம்புனாலும், அங்க போயி ரீச் ஆக முடியாது” என்றான்.

“டிக்கெட் இருக்கா?” என்று கேட்க, “சார்” என்று சொன்னாலும் அவனும் முயற்சித்தான். ஆனால் டிக்கெட் எதுவும் இல்லை.

“இல்ல சார். ஆனால் மிட் நைட் ஒரு பிளைட் இருக்கு” என்று அருள் சொல்ல, “சரி உடனே புக் பண்ணிடு” என்று சொல்லியவன், உடனே அவனுடைய அறைக்கு சென்றான்.

இங்கே கவியோ அலுவலகத்தை விட்டு வெளியில் வர மழை அடித்துப் பெய்ய ஆரம்பித்தது.

“என்ன? இப்படி மழை பெய்யுது?” என்று கவி யோசிக்க, அங்கே சத்தம் வந்த அறையை நோக்கி விழி செல்ல, அங்கே ஆர்யன் அரை மயக்கத்தில் தரையில் விழுந்துக் கிடந்தான்.

(ஆர்யனோட ட்ராமால இருந்து விழிய கவியும், வேந்தனும் காப்பாத்துவாங்களா? இல்ல ஆர்யனோட விளையாட்டுக்கு விழி பழியாவாளா? இப்படி எல்லாத்துக்குமான பதில அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். சரி அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   0

*** தேன் – 70 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***