வேந்தன் சென்னை சென்றிருக்க, கவிக்குமே, சற்று வேலை இருக்க, அவளும் கிளம்பி கீழே வந்தாள். விழியோ, வாசலைப் பார்த்தப்படி நின்றிருக்க, “ஹேய் என்னாச்சு உனக்கு? ஏன் இங்க நிக்குற? ஆபிஸ்க்கு டைம் ஆகலையா?” என்று கேட்டாள்.
“ஆ..ங் இல்ல! என்ன கொஞ்சம் ட்ராப் பண்றீயா?” என்று விழி கேட்க, “ச் என்னமோ நான் ட்ரைவ் பண்ணப் போற மாதிரி கேட்குற. கார் வெளியத்தான இருக்கு. ட்ரைவர் அண்ணாவும் வெளியத்தான் இருப்பாங்க” என்றப்படி அவளுடன் சேர்ந்து வெளியில் வந்தாள்.
அங்கே விழியுடைய காரும் நின்றிருக்க, “ஆமா, அந்த காருக்கு என்னாச்சு?” என்று கேட்டாள்.
“ஆ..ங் அது. இல்ல நம்ம சேர்ந்தே ஆபிஸுக்கு போலாமே” என்று விழி சொல்ல, கவியும் வேறு எதுவும் கேட்கவில்லை. சரி என்று அவளுடன் சேர்ந்து அலுவலகம் கிளம்பினாள்.
விழியின் அலுவலகத்தைப் பார்த்த கவியோ, “உண்மையாவே ஆபிஸ் சூப்பரா இருக்கு” என்றாள். சரியாக அன்னேரம் தான் அவர்களுடைய காரைக் கடந்து ஆர்யனுடைய காரும், உள்ளே நுழைந்தது.
“அத வெளிய வந்து பார்த்துத்தான் சொல்லேன்” என்று விழி கவியை பிடித்து வெளியில் இழுக்க, கவியைப் பார்த்த நொடி, ஆர்யன் சடன் பிரேக் அடித்து காரை நிறுத்தினான்.
கவியோ, “ஹேய்! இப்படியா பிடிச்சு இழுப்ப” என்று கேட்க, “சரி என் கூட ஆபிஸுக்கு வறீயா?” என்றாள்.
அதில் இப்போது விழியை முறைத்தவளோ, “லூசா நீ? நீ என்கிட்ட இருந்து எதையாச்சும் மறைக்கிறேன்னு நான் நினைப்பேன்னா?” என்றாள்.
உடனே விழி அமைதியாகிவிட, கவியோ, அவள் கன்னத்தில் கரம் பதித்து, “என் விழிய பத்தி எனக்கு தெரியும். அதுவும் போக என் விழியோட மனசுக்கு எல்லாமே நல்லாத்தான் நடக்கும்” என்றாள்.
அதில் கவியைக் கட்டிக் கொண்டவளோ, “ஐ நோ. நீ என் கூட இருக்கல்ல” என்று சொல்ல, அவளைக் கடந்து சென்ற விக்னேஷோ, “என்ன சுடர் விழி மேடம்? பாஸ் கூட எதுவும் சண்டையா? வீட்டுல இருந்து ஆள் கூட்டிட்டு வந்திருக்கீங்களா?” என்று சீண்டலாய் கேட்டான்.
அப்போதே விழி அவன் பக்கம் திரும்பி, ஏதோ சொல்லப் போக, அதற்குள் கவியோ, “ஏன்? உங்களுக்கு இப்படி அடிக்கடி கூப்டு வந்து ரொம்ப பழக்கமோ?” என்று கேட்டாள்.
அதில் அப்போதே கவியைப் பார்த்தவன், “யாருடா அது? எனக்கே டப் கொடுக்கிறது?” என்றான்.
அதில் சிரித்த விழியோ, “கவி, இவன் விக்கி, என் கூடத்தான் ஒர்க் பண்றான். அடிக்கடி இப்படித்தான் காமெடி பண்றதா நினைச்சி எல்லார்ட்டையும் மொக்க வாங்குவான்” என்றாள்.
அதைக் கேட்டு கவி சிரிக்க, விக்கியோ, “ஏம்மா விழி? இத விட மோசமான ஒரு இண்ட்ரோவ வேற யாரும் கொடுக்கவே முடியாது. சரி மேடம் யாருன்னு சொல்லல” என்றான்.
“ஷி இஸ் மை ஸ்வீட் அண்ணி” என்று அவள் தோளில் கைப் போட்டு அறிமுகப்படுத்தினாள்.
அதில் அவனோ, “உன் அண்ணா லக்கித்தான்” என்று சொல்லிவிட்டு “எப்படி மேடம், இவள வீட்டுல வெச்சி சமாளிக்கிறீங்க? சரியான அறுந்த வாலு” என்றான்.
“டேய் டேய் போடா” என்று விக்கி சொல்ல, “பார்த்தீங்களா சிஸ்டர். எவ்வளவு மரியாத கொடுக்கிறான்னு” என்று மேலும் சில நொடி நின்று பேசிவிட்டு அங்கிருந்து உள்ளே சென்றான்.
அதன் பின்னும் அடுத்தடுத்து சிலர் விழியிடமும், கவியிடமும் பேசிவிட்டு செல்ல, ஏனோ கவிக்கு சற்று ஆறுதலாக இருந்தது. அவர்கள் பேச்சே, அவர்கள் நல்லவர்கள் என்பதை சொல்ல கவியும், “நீ சொன்ன மாதிரி உன் கூட ஒர்க் பண்றவங்க எல்லாம் நல்லவங்கத்தான்” என்றாள்.
“ஹேய் உடனே எல்லாம் சொல்லிடாத. எதையும் உடனே முடிவு பண்ணிடக் கூடாது” என்று சீண்டலாய் விழி சொல்ல, அவள் காதைப் பிடித்து திருகியவள், “சரி சரி சீக்கிரம் உள்ள போ. வர்றப்ப பிக் பண்ணிக்கிறேன்” என்றாள்.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஆர்யனோ கவியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான். அதிலும், கவி, விழி இருவருடைய அந்த நெருக்கம், அதையே பார்த்துக் கொண்டிருக்க, இப்போது கவிக்கு யாரோ தன்னைப் பார்ப்பது போல் தோன்ற, சட்டென்று திரும்பினாள்.
ஆனால் அங்கே யாரும் இருந்திருக்கவில்லை. அதில் குழப்பமாய், “சரி விழி நான் கெளம்புறேன்” என்றப்படி காரில் ஏற, இப்போது ஆர்யன், கார் கண்ணாடியை இறக்கினான்.
“சீக்கிரமே உன்ன என் கூட வெச்சிப்பேன் கவி” என்று அழுத்தமாய் சொல்லிக் கொண்டவன், கவியுடைய கார் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்தான்.
பின் விழியின் பக்கம் திரும்ப, அவளும் கூட, அங்கேயே நின்றிருந்தாள். எதார்த்தமாய் அவள் திரும்ப ஆர்யனுடைய காரைப் பார்த்ததும், உள்ளுக்குள் ஒரு வித பதட்டமும், நிம்மதியும் சேர்ந்தே வந்தது.
ஆனாலும் அதை வெளிக்காட்டாது அவள் உள்ளே சென்று விட, இப்போது ஆர்யனோ அதன் பின்னே அலுவலகத்துக்குள் நுழைந்தான். நேரே அவனுக்கான லிப்டிற்குள் நுழைந்தவன், அவன் கேபினுக்குள் செல்ல, விழியோ, “முதல்ல அவர் கொடுத்த காரை அவர்கிட்டையே ரிட்டர்ன் பண்ணனும்” என்று யோசித்தாள்.
“ஹேய் அது உன் ஒர்க்குக்காக கொடுத்தது. அத ரிட்டர்ன் பண்ணா, அவர் என்ன நினப்பாரு?” என்று மனசாட்சி கேள்வி கேட்க, “இல்ல இல்ல. இதெல்லாம் வேண்டாம்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
அதன் படியே அன்று மாலை அவனைப் பார்க்க அவன் கேபினுக்குள் சென்றாள். அங்கே விக்கியிடம் அவன் என்னவோ பேசிக் கொண்டிருக்க, அவளைப் பார்த்தும், உள்ளே வர சொல்லாது அவன் வேலையை தொடர்ந்தான்.
விக்கி சென்றப் பின், “எக்ஸ் கியூஸ் மீ சார்” என்று அவள் அழைக்க, “கமின்” என்றவன் அவன் இருக்கையில் சென்றமர, அவளோ, உள்ளே சென்றாள்.
“என்ன மேடம்? எப்படி இருக்கீங்க? என் கேபின் எல்லாம் ஞாபகம் இருக்கா?” என்று சிரித்தப்படி கேட்டான்.
அவன் சிரிப்பில் ஏதோ வசிய சக்தி இருப்பது போல் ஒரு எண்ணம். ஆனாலும் அதை இழுத்துப் பிடித்து, “இல்ல சார். கொஞ்சம் வேல” என்றாள்.
“ம் சார்…” என்று அவன் அவள் சொல்லியதை குறிப்பிட்டு கேட்க, அவளோ இப்போது, அவன் முன்னே அந்த கார் சாவியை வைத்தாள்.
அதைப் பார்த்து புருவத்தை சுழித்தவன், “என்னது?” என்றான். “நீங்க எனக்கு கொடுத்த காரோட சாவி” என்றாள். ஏற்கனவே ட்ரைவரை காரை எடுத்து வர சொல்லியிருக்க, அது கீழேத்தான் இருந்தது.
இப்போது அவனோ, “என்னமோ என் லவ்வருக்கு நான் கார் கிப்ட் பண்ண மாதிரி, திருப்பி கொடுக்கிற?” என்று கிண்டலாய் கேட்டான்.
“என்ன?” என்று இவள் அதிர்ச்சியாகி அவனைப் பார்க்க, அவனோ, “பின்ன? ஆபிஸ்ல நீ நல்லாப் பண்ணதுக்கு உனக்கு கொடுத்த கார். அத எதுக்கு என்கிட்ட கொடுக்கிற?” என்றான்.
“ஆ.ங் இல்ல. இதெல்லாம் வேண்டாம்” என்று அவள் அதையே சொல்ல, “லுக் மிஸ்.சுடர் விழி. நான் ஒன்னும் உங்களோட பர்ஷனல் தேவைக்காக கார் கொடுக்கல. ஒர்க் விஷயமா நீங்க வெளிய போக வேண்டி வரும். அதுக்காக மட்டும்த்தான் கொடுத்திருக்கேன். சோ கீய எடுத்துட்டு கெளம்புங்க” என்றான்.
“அது” என்று மேலும் அவள் ஏதோ சொல்லப் போக, “ச் உங்கள கெளம்ப சொன்னேன்” என்று கோவமாய் அவன் கத்த, அவளோ பயந்து எழுந்தாள்.
அவள் பயத்தைப் பார்த்து தன் கோவத்தை இழுத்துப் பிடித்தவன், “நோ நோ ஆர்யன். அவகிட்ட கோவத்த காமிக்காத. அது உனக்குத்தான் பேக்பயர் ஆகும்” என்று மனசாட்சி எடுத்துரைத்தது.
அதில், சட்டென்று முகத்தை மாற்றி சிரித்தவன், “ஹேய் என்னாச்சு? பயந்துட்டீயா?” என்றான்.
அவனின் பேச்சில், அவளோ அவனைப் பார்க்க, “இப்போ என்ன? உனக்கு அந்த கார் வேண்டாம். அவ்வளவுத்தான? சரி! இத எடுக்கிறேன். உனக்கு வேல விஷயமா தேவைப்பட்டா, தாராளமா எடுத்துக்கோ” என்றான்.
விழியோ அப்போதும் அப்படியே நிற்க, இருக்கையில் இருந்து எழுந்த ஆர்யன் அவளருகில் வந்து, “ஹேய் ஜில். நான் சும்மா உன்கிட்ட விளையாண்டேன்” என்றப்படி அவள் தோளைத் தொட சென்றான்.
அதற்குள் சட்டென்று விலகி நின்றவள், “ஒகே சார். நான் போறேன்” என்றப்படி அங்கிருந்து வெளியில் சென்று விட்டாள்.
அவள் சென்ற மறு நொடி, கையில் இருந்த கார் சாவியை இறுக்கிப் பிடித்தவன், “நான் கொடுத்ததையே திருப்பி கொடுக்கிறீயா? நில்லு உன்னால திருப்பி கொடுக்க முடியாத ஒரு விஷயத்த உனக்கு கொடுக்கிறேன்” என்று உள்ளுக்குள் கோவமாய் சொல்லிக் கொண்டான்.
அன்றைய இரவு, கவி வேந்தனிடம் மொபைலில் பேசிக் கொண்டிருந்தாள். அவனோ, “அது உன்னோட ஆபிஸ் கவி. அங்க உனக்கு என்னப் பண்ணனும்னு தோணுதோ, அத பண்ணு. என்கிட்ட கேட்டுத்தான் பண்ணனும்னு எந்த அவசியமும் கிடையாது” என்றான்.
அவனுடைய பேச்சில், இப்போது இவளோ, “அதென்ன என்னோட ஆபிஸ்?” என்று கோவமாய் கேட்டாள்.
அதில் மெல்ல சிரித்தவன், “சரி சரி நம்மளோட ஆபிஸ் போதும்மா?” என்றவன் அப்போதுத்தான் சாப்பிட அமர்ந்தான். வீடியோ காலில் அதைப் பார்த்தவள், “அப்பவே சாப்டீங்கன்னு சொன்னீங்க” என்றாள்.
“ஹேய் அப்ப சாப்ட போறேன்னுத்தான் சொன்னேன்” என்றான். அதில் இவளோ, “இவ்ளோ நேரம் சாப்பிடாம என்னப் பண்ணீங்க?” என்றாள்.
“சின்ன ஒர்க் வந்திருச்சு. சரி அத முடிச்சிட்டு ப்ரீயா உன்கிட்ட பேசிட்டே சாப்பிடலாமேன்னு நினைச்சேன். நீ என்னென்னா, எல்லாத்துக்கும் திட்டிட்டு இருக்க” என்றான்.
“சரி சரி நான் திட்டல. நீங்க சாப்பிடுங்க. நான் அப்புறம் கூப்பிடுறேன்” என்று சொல்ல, “ஹேய்! இப்பத்தான சொன்னேன். மேடம் கூட பேசிட்டே சாப்பிடனும்னு” என்றான்.
“ம் சாப்பிடுறப்ப பேசக் கூடாது எம்.எல்.ஏ சார்” என்றாள். “சரி நீ பேசு. நான் உன்ன பார்த்துட்டே சாப்பிடுறேன்” என்றான்.
அவனின் பேச்சில் இறுக்கம் தொலைத்து அழகாய் மலர்ந்தவள், “ம் நீங்க பார்த்தது போதும்” என்றாள். “ஹேய்? சும்மா பாக்க கூட கூடாதா?” என்றவனின் வார்த்தையில், என்னென்னவோ ஒழிந்திருக்க, இவள் முகம் சிவக்க முயன்றது.
“ச் சுடர்” என்று அவள் அவனை முறைக்க, அவனோ, “சரி விழி சாப்டாளா?” என்றவன் தங்கையைப் பற்றி கேட்க, “ஆங் நாங்க சேர்ந்துத்தான் சாப்டோம். இன்னிக்கு நான் அவ ஆபிஸுக்கு போனேன்” என்றவள் அங்கு நடந்ததையும் கூறினாள்.
அதே நேரம் அங்கே ஆர்யனோ, “நாளைக்கு நீயே என்ன தேடி வரப் போற சுடர்விழி” என்று அழுத்தமாய் சொல்லிக் கொண்டான்.
(இவன் வேற சும்மா இருக்க மாட்டான் போலையே. சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். சரி அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தித்திக்குமா?..
gayathri Shini
super sister