தேன் – 68

விழி அன்று முழுவதும், கவியுடைய அலுவலகத்தில் தான் இருந்தாள். இரண்டு மாதத்தில், கவி அங்கு ஏகப்பட்ட மாற்றங்கள் கொண்டு வந்திருந்தாள். உடனே சக்சஸ் ஆகிவிடும் என்று சொல்ல முடியாவிட்டாலும், நிச்சயமாய், கூடிய விரைவில், இந்த அலுவலகம் அதன் பெயரை இவ்வுலகுக்கு சொல்லும் என்பதில் சிறு சந்தேகமும் இல்லை.

“வாவ் உண்மையாவே சூப்பரா இருக்கு கவி. பேசாம, நானும் இங்கேயே வந்து ஜாயின் பண்ணிக்கட்டுமா?” என்றாள். அதில் இப்போது அவளைப் பார்த்தவளோ, “லூசா நீ? உன்னோட ஆசை என்னவோ அத மட்டும் பண்ணு. என்னிக்கா இருந்தாலும், இதுவும் உன் ஆபிஸ்த்தான். எங்கேயும் போயிடாது. பட் கிடைச்சிருக்க சான்ஸ வேஸ்ட் பண்ணாத” என்றாள்.

அதில் விழியோ அமைதியாய் இருக்க, இப்போது கவியோ, “நான் தான் சொல்றேன் தான. உன்னோட கோவம் எல்லாம், என்னை என்னப் பண்ணிடும்? இதுக்காக எல்லாம், நான் என் விழிய தப்பா நினைப்பேன்னா?” என்றவள் இதோடு இதை ஒரு ஆயிரம் தடவை சொல்லியிருப்பாள்.

“இல்ல கவி! இதுவரைக்கும், உனக்கும், எனக்கும் நடுவுல இப்படி எல்லாம் நடந்ததே இல்ல. எல்லாத்துக்கும் அந்த ஆபிஸ்த்தான்” என்று அவள் ஆரம்பிக்க, “உனக்கு அந்த வேல பிடிச்சிருக்கா? இல்லையா?” என்றாள்.

“ஆ..ங் அது” என்று விழி இப்போது தயங்க, “மனசுக்கு பிடிச்ச வேல கிடைக்கிறது அவ்ளோ ஈஸி கிடையாது டா. உனக்கு அங்க போக பிடிக்கலன்னா சொல்லு. நம்ம வேற கம்பெனி கூட பாக்கலாம். பட் உனக்கு அந்த கம்பெனி, வேல எல்லாம் பிடிச்சிருக்குத்தான?” என்று கேட்டாள்.

ஆயிரம் கூறினாலும், விழிக்கு அவளுடைய வேலை அத்தனைப் பிடித்திருக்கிறதே. அதனால் அமைதியாய் இருந்தாள். அதைக் கவனித்த கவியோ, “ஐ பிராமிஸ் யூ. உனக்கும், எனக்கும் நடுவுல எப்பவும், எந்த விஷயமும் வந்து நிக்காது. இவ்வளவு ஏன், உன் அண்ணா கூட நமக்கு நடுவுல வர மாட்டாரு போதும்மா?” என்று கேட்டாள்.

விழியின் அண்ணன் வர மாட்டான். ஆனால், அந்த ஆர்யன் வருவானே. அதை யார் கவிக்கு சொல்வது?

இப்போது விழியோ கவியை மீண்டும் கட்டிக் கொண்டாள். “ஹேய்! ஓவர் செண்டியா இருக்குப்பா. நம்ம ஷாப்பிங் போவோம்மா?” என்று ஏதேதோ பேசி ஒரு வழியாய், அவளுடன் ஊர் சுற்றி முடித்து வீட்டுக்கு வரும் போது, வேந்தனே வீட்டுக்கு வந்திருந்தான்.

அவனைப் பார்த்ததும், கவியோ, “லேட்டாகும்னு சொன்னீங்க” என்றாள். “ம். இல்ல கொஞ்சம் பணம் தேவையா இருந்திச்சு. அத எடுக்கத்தான் வந்தேன்” என்றவன் இப்போது திரும்பவும் கிளம்பியிருந்தான்.

“சாப்டீங்களா? இல்லையா?” என்று கவி கேட்க, “ஆ..ங்” என்று ஏதோ சொல்ல வந்தவன், விழி அமைதியாய் இருப்பதை பார்த்தவன், “ஹேய் குட்டிமா. என்னாச்சு உனக்கு? ஆர் யூ ஒகே?” என்று அவள் தலை முடியை கோதிக் கொடுத்தான்.

அதில் அண்ணனின் தோளில் சாய்ந்துக் கொண்டவள், “எனக்கென்னன்னா, நீயும், அண்ணியும் இருக்கீங்க. அது போதும்” என்றாள். அதில் மெலிதாய் புன்னகைத்தவன், ஏதோ சொல்லும் முன்னே அவன் மொபைல் விடாமல் அடித்தது.

“ச் சரிடா. ரெண்டு பேரும் கவனமா இருங்க. அண்ணா வந்துடுறேன்” என்றப்படி, அவளிடமும், கவியிடமும் சொல்லிவிட்டு கிளம்பியிருந்தான். இப்போது கவியோ, “ஊருல எந்த எம் எல் ஏவாச்சும் இப்படி ஓடி, ஓடி வேல பார்த்து நீ பார்த்திருக்கீயா?” என்று கடுப்பாய் கேட்டாள்.

அவள் கடுப்பைப் பார்த்து சிரித்த விழியோ, “என்ன மேடம்? என் அண்ணாவ ரொம்ப மிஸ் பண்றீங்க போலையே” என்று கிண்டலாய் கேட்க, “ஆ..ங் அதெல்லாம் ஒன்னும் இல்ல. ஜஸ்ட் சொன்னேன். அவ்வளவுத்தான்” என்றாள்.

இப்போது அவள் கன்னத்தில் கரம் பதித்தவளோ, “எனக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கு கவி. நீயும், அண்ணாவும் இப்படியே ஹாப்பியா இருக்கனும்” என்றாள்.

அதில் இப்போது தன் தோழியின் பக்கம் திரும்பியவளோ, “எங்க சந்தோஷம் மொத்தமும் நீத்தான். சோ மேடம் நீங்க ஹாப்பின்னா, நாங்களும் ஹாப்பித்தான்” என்று சொல்லிக் கொண்டாள்.

அன்றைய தினம் அப்படி செல்ல, அடுத்த நாள் விழி ஒரு வித தயக்கத்தோடு தான் அலுவலகம் சென்றாள். ஏனோ ஆர்யனை எதிர்கொள்ள அவளுக்கு ஒரு வித பதட்டம்.

ஆனால் அந்த தயக்கத்துக்கு அவசியமே இல்லை என்பது போல், ஆர்யன் அன்று அலுவலகம் வந்திருக்கவில்லை. அன்று மட்டும் அல்ல, அதன் பின்னான ஒரு வாரமும் ஆர்யன் அலுவலகத்துக்கு வரவில்லை.

அவளுக்கும் மெசேஜ்ஜோ, அழைப்போ அழைத்திருக்கவில்லை. அது ஒரு பக்கம் நிம்மதியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் அவனுக்கு எதுவும் பிரச்சனையோ? என்று யோசித்தது.

அவள் அப்படி யோசிக்கும் போதே, கவியிடம் இருந்து அழைப்பு வந்திருக்க, இப்போது சட்டென்று ஆர்யனுடைய நினைவை அடித்து விரட்டினாள்.

அவள் கண்ணில் தான் ஆர்யன் விழுந்திருக்கவில்லை. ஆனால் அவளைத்தான், ஆர்யன் பார்த்துக் கொண்டிருந்தான். 

“ஒரு வாரமா உன் கண்ணுல நான் படல. ஆனா அது உனக்கு ஒரு விஷயமாவே இல்லல்ல” என்றவனுக்கு அத்தனைக் கோவம் வந்தது. 

“உனக்கு நான் மட்டும் தான் முக்கியமா இருக்கனும் சுடர்விழி” என்று அழுத்தம் திருத்தமாய் சொல்லியவன், அவனுடைய முதல் திட்டத்தை உடனே செய்ய ஆரம்பித்தான்.

அதற்கு வேந்தன் அங்கு இருக்க கூடாது என்பதால், அவன் ஊருக்கு செல்லட்டும் என்று காத்திருந்தான்.

அடுத்த ஒரு வாரமும் மின்னல் வேகத்தில் ஓடி மறைந்திருக்க, வேந்தனும், சென்னை கிளம்பியிருந்தான். கவியோ இம்முறை, “மூனு நாள்ல திரும்பி வரலன்னா?” என்று முறைத்தாள்.

“திரும்பி வந்துட்டா மேடம் என்ன கொடுப்பீங்க” என்றவனுடைய இறுகிய அணைப்பில் இருந்த கவியோ, “சாருக்கு என்ன வேணுமோ அத கொடுப்போம்” என்றான்.

“நிஜமாவா?” என்று அவன் ஆசையாய் அவளை நெருங்க, இப்போது அவன் நெஞ்சில் கை வைத்து தடுத்தவள், “அப்படி சாருக்கு என்ன வேணும்?” என்று அப்பாவியாய் கேட்டாள்.

“ஏன்? எனக்கு என்ன வேணும்னு உனக்கு தெரியாதா?” என்றவனுடைய கண்ணில், அவள் மீதான காதலும், மோகமும் வடிந்தது.

அதில் இவளுடைய உள்ளங்கால் கூச, இருந்தும் அதை இழுத்துப் பிடித்து, “தெரியலையே” என்றாள். அவளுடைய பேச்சில், அவளை இன்னுமே தன்னோடு இறுக்கியவன், “சரி தெரிய வேண்டாம். நானே எடுத்துக்கிறேன்” என்றான்.

“ம் பாக்கலாம்” என்று அவள் வேண்டுமென்றே சீண்ட, “ஹேய் கெளம்புற நேரத்துல என்ன உசுப்பேத்தாத” என்று அவன் சொல்ல, “உசுப்பேத்துனா?” என்றவள் புருவத்தை உயர்த்தினாள்.

அதில் அவள் இன்னுமே பேரழகியாய் தெரிய, அவளுடைய குண்டு கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டவன், “மூனு நாள்ல வந்திடுவேன்” என்றான்.

“ம்” என்று அவள் சாதாரணமாய் சொல்ல, “ஹேய் நிஜமாவே வந்துடுவேன்” என்றான். “சரிப்பா. வாங்க. அதுக்கு என்ன?” என்றாள்.

அதில் இப்போது அவள் தாடையைப் பற்றி தன்னைப் பார்க்க வைத்தவனோ, “நான் வர மூனு நாள் ஆகும்” என்றான். அதில் இப்போது இவளுக்கு மெல்லிய வெட்கமும், புன்னகையும் எட்டிப் பார்க்க, “அதான் எனக்கு தெரியுமே” என்றாள்.

“தெரிஞ்சா மட்டும் போதும்மா” என்றவனுடைய பார்வை, அவள் தேன் சிந்தும் அதரங்களை நோக்கி அலைப்பாய்ந்தது. அவனின் எண்ணம் அவளுக்கு புரியத்தான் செய்தது. ஆனாலும் அவனுடைய விளையாடிப் பார்க்க மனம் சொல்ல, “வேற என்னப் பண்ணனும்?” என்றாள்.

“ச் கவி” என்றவன் சிறுவனாய் சினுங்க, “பிளைட்க்கு டைம் ஆகலையா?” என்றாள். “ஆனா ஆகட்டும்” என்றவன் இப்போது அவளை விட மாட்டேன் என்று அடம்பிடிக்க, “உங்க கட்சி தலைவர் உங்களுக்காக ஆசையா காத்துக்கிட்டு இருப்பாரு” என்று சீண்டினாள்.

அவளின் பேச்சில், “ஹேய் உனக்கு என்ன பார்த்தா எப்படி தெரியுது?” என்றான். அதில் அவனை மேலிருந்து கீழாக பார்த்தவளோ, “உங்களுக்கு என்ன? கட்சி தலைவரே சைட் அடிக்கிற அளவுக்கு சூப்பராத்தான் இருக்கீங்க” என்று சொல்லி கண்ணடித்தாள்.

“எதே?” என்றவன் அவனை முறைக்க, இப்போது கவியோ, “என்ன முறைச்சது போதும். கெளம்புங்க” என்றாள்.

“ஹேய் மூனு நாளுக்கு சேர்த்து ஏதாச்சும் கொடுக்கனும்னு உனக்கு தோணலையா?” என்று கேட்டான். “ம் நான் சொல்லியும் கேட்காம, உங்க தலைவர் பின்னாடி போறதுக்கு பெருசா வேற ஒன்னுத்தான் கொடுக்கனும்” என்றாள்.

“பெருசா அப்புறமா கொடு. இப்போ குட்டியா இந்த லிப்ப எடுத்துக்கிறேன்” என்று சொல்லி முடித்த மறு நொடி அவள் செவ்விதழில் அழுத்தமாய் தன் இதழைப் பதித்து விலகினான்.

மின்னல் வேகத்தில் நடந்தேறிய முத்தத்தில், அவள் அதிர்ந்து நிற்க, அவனோ, இப்போது மீண்டும் அவள் இதழை கைப்பற்ற, அப்போதுத்தான் இவ்வுலகம் வந்து சேர்ந்தாள்.

விடவே மாட்டேன் என்பது போல், அவன் அந்த முத்தத்தை  நீட்டிக் கொண்டே போக, கவித்தான், “ஐயோ.. சுடர்.. ம்மா” என்று அவன் நெஞ்சில் கை வைத்து அவனை விலக்கினாள்.

அவனோ மீண்டும் அவளை நெருங்க, “மூனு நாளுக்கப்புறம் தான் எல்லாம்” என்றாள்.

“எல்லாமுமா” என்று அவன் இன்னும் அவளை சிவக்க வைக்க, “ச் இப்படி பேசிட்டு இருந்தீங்கன்னா, நான் இப்பவே ஆபிஸுக்கு கிளம்புறேன்” என்றப்படி நகர்ந்தாள்.

“ஹேய். ஹேய். ஏர்போர்ட் வரைக்கும் வரேன்னு சொல்லியிருக்க” என்று வேந்தன் நினைவுப்படுத்த, “நான் வந்தா தப்பாக்காதா?” என்று சிறு குழப்பத்துடன் கேட்டாள்.

அதில் அவனுடைய கோவம் கடகடவென்று கூட, “நீ என்னோட ஒயிப். நீ என் கூட வந்தா என்ன தப்பாகிடும்?” என்று அத்தனை எரிச்சலாய் கேட்டான்.

கிளம்பும் நேரத்தில் அவனை கோவப்படுத்தி விட்டோம் என்பது புரிய, “சரி சரி. நான் சும்மாத்தான் கேட்டேன்” என்றாள்.

அவனோ அப்போதும் முகத்தை உம்மென்று வைத்திருக்க, “ச் சுடர்” என்று அவன் கன்னம் பற்றினாள். அவனோ “நான் உன்னோட ஹஸ்பண்ட்ன்னு உனக்கு சொல்லிட்டே இருக்கனுமா?” என்றப்படி முகத்தை திருப்பிக் கொண்டான்.

அவனின் கோவத்தில் இப்போது இவளோ, “அப்படில்லாம் இல்ல சுடர்” என்றாள். அவனோ கோவத்தை குறைக்காது அப்படியே இருக்க, அவன் கன்னத்தில் பட்டும் படாமல் இதழால் உரசி முத்தமிட்டவள், “சாரி” என்றாள்.

அவளின் முத்தம் அவனின் கோவத்தை குறைத்தாலும், அவன் உடனே எல்லாம் இறங்கவில்லை. அவளோ இப்போது அவனின் மறு கன்னம், நெற்றி என்று மாறி மாறி முத்தம் கொடுக்க, பல முத்தங்களுக்குப் பின் தான் சற்று சமாதானம் ஆனான்.

“ஸ்ப்பா. இதுக்கு மேல எல்லாம் கொடுக்க முடியாது” என்று இப்போது கவி முகத்தை திருப்பிக் கொள்ள, மீண்டும் அவளை தன் கை வளைவுக்குள் இழுத்துக்கொண்டவன், “இனி நீ கொடுக்க வேண்டாம். நானே எடுத்துக்கிறேன்” என்று செவியில் கிசுகிசுத்தான்.

அதில் வெட்கப்பட்டு அவன் மார்புக்குள் முகத்தை புதைக்க, அதற்குள் ஏர்போர்டில் இருந்து அருள் கால் செய்தான். வழக்கம் போல் அது கரடி வேலைப் பார்க்க, அவனுக்குமே பிளைட்க்கு நேரம் ஆவதால், கவியுடன் ஏர்போர்ட் சென்றான்.

அது பிரைம் டைம் இல்லை என்பதால், அங்கே பெரிதாய் எந்த கூட்டமும் இல்லை. அதனால், கவியுடன் இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டே கிளம்பினான்.

அவன் அங்கிருந்து எக்ஸ்கலேட்டர் வழியே மேலே செல்ல, அதற்கு பக்கத்தில் இருந்த லிப்ட் வழியே ஆர்யன் கீழே இறங்கினான். கவி வேந்தன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, ஆர்யனை அவர்கள் இருவருமே பார்த்திருக்கவில்லை.

ஆனால் ஆர்யனோ, அவர்கள் இருவரைத்தான் பார்த்திருந்தான். கவியின் முகத்தில் இருந்த சந்தோஷமும், வேந்தன் முகத்தில் தெரிந்த பூரிப்பும், நிச்சயம் ஆர்யனுடைய பிபியை கூட்டியிருக்க வேண்டும். இல்லை என்றால், கவியுடைய அந்த சிரிப்புக்கு பின்னால் அவன் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைத்தானோ?

“இதுக்கப்புறம் இந்த ஆர்யன் யாரு. அவனோட கேம் என்னென்னு நீங்க பார்ப்பீங்க” என்று சொல்லியப்படி ஸ்டைலாக கூலரை மாட்டிக் கொண்டு அங்கிருந்து சென்றான் ஆர்யன்.

(ரைட்டு. அப்போ ஆர்யன் யாருன்ற கேள்விக்கு பதில் சீக்கிரமே தெரிய போகுது. நம்ம விழி ஆர்யன்கிட்ட இருந்து தப்பிப்பாளா? இல்ல ஆர்யனோட வலையில, நம்ம கவியும் சேர்ந்துப் போய் விழுவாளா? அப்படின்றத எல்லாம் கண்டிப்பா அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். சரி அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   2

*** தேன் – 68 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***