தேன் – 67

அடித்து பெய்துக் கொண்டிருந்த மழை எல்லாம் ஓய்ந்திருக்க, வேந்தன் அன்று சீக்கிரமே வேலை விஷயமாய் கிளம்பியிருந்தான். ஆனால் கவிக்குத்தான் இன்னமும் கூட, அவனிடம் தன் காதலை சொல்லியதை நம்ப முடியவில்லை.

அதிலும் அவள் குழம்பி நின்றிருந்த நிலையில், அவள் பின்னிருந்து அணைத்துக் கொண்டவன், அதன் பின் இரவு முழுவதும் அவளை ஏதோ, கோழி குஞ்சை பாதுகாப்பது போல், அவனுக்குள் பொத்தி வைத்துக் கொண்டான்.

எப்போது அவளை மறந்து அவள் உறங்கினாள், என்று அவளுக்கே தெரியவில்லை. காலையிலும் கூட, நீண்ட நாட்களுக்கு பின்னான நிம்மதியான விடியல். ஆம் அவன் அவளருகில் தான் அப்போதும் இருந்தான்.

அவள் நெற்றியில் இதழ் பதித்து, “இன்னிக்கு சீக்கிரம் வர முடியுமான்னு தெரியல. பட் முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமா வர ட்ரைப் பண்றேன்” என்று சொல்லிவிட்டுத்தான் கிளம்பினான்.

“சாப்டீங்களா?” என்று அவள் அவசரமாய் எழுந்து அவனின் பின்னே வர, “போற வழியில சாப்டுக்கிறேன். இப்ப உடனே கெளம்பனும்” என்றான். அவன் குரலில் தெரிந்த அவசரத்தில், இப்போது அவளோ, “ச் இப்படி என் முன்னாடி உட்கார்ந்திருந்ததுக்கு பதிலா, போய் சாப்டிருக்கலாம்த்தான” என்றாள்.

அதில் அறையை விட்டு வெளியேற சென்றவன் மீண்டும், அவளருகில் வந்து அவள் இடையை வளைத்து அவள் முகத்துக்கு நேரே நெருங்கி, “சாப்பாட்டுல என்ன இருக்கு? அதான் எனக்கு தேவையானது மொத்தமும் உன்கிட்ட இருக்கே. இத விடவா அது எனர்ஜிய கொடுத்துடும்” என்றவனின் பார்வை அவள் கழுத்தை விட்டு கீழிறங்க, “ச் சுடர்” என்று அவன் கண்ணை மூடினாள்.

அதில் கொஞ்சமாய் சிரித்தவன், “என் கண்ண மூடிட்டா, எப்படி சேலைய சரி பண்ணுவ” என்று விஷமமாய் அவன் அவள் காதுக்குள் கிசுகிசுக்க, அவசரமாய் அவனை விட்டு விலகி, வேகமாய் சேலையை சரி செய்தாள்.

அவளின் செய்கையில், இப்போது நன்றாகவே சிரித்தவன், “எல்லா நேரமும் சரி பண்ண டைம் கொடுத்துட்டே இருக்க மாட்டேண்” என்றவன் மேலும், மேலும் அவளை சிவக்க வைக்க, “ஐயோ சுடர். ஏதோ அர்ஜண்ட் வேலன்னு சொன்னீங்கத்தான. கெளம்புங்க” என்றாள்.

“நான் இன்னும் சாப்பிடலையே. அதுக்குப் பதிலா” என்றவன் மீண்டும் அவள் செவ்விதழைப் பார்த்து நெருங்க, அதற்குள் மீண்டும் அருளிடம் இருந்து அழைப்பு வந்தது.

அதில் எரிச்சலானவன், “ச் இவனோட” என்று பொறுமியவன், இப்போது அவளிடம், “சரி கவி. வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு செல்ல அடி எடுத்து வைத்தான். பின் பட்டென்று திரும்பி, நச்சென்று அவள் கன்னத்தில் ஒரு முத்தத்தை வைத்து விட்டுத்தான், அங்கிருந்து கெளம்பியிருந்தான்.

இப்போது கிச்சனில் இருந்து அதை எல்லாம் யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு, அங்கே குக்கர் விசில் அடிக்கும் சத்தம் கூட கேட்கவில்லை.

அதற்குள் வேலையாள் ஒருவள் வந்து, “அம்மா. விசில் அடிக்குது” என்று அடுப்பை அணைத்தார். அப்போதே இவ்வுலகம் வந்தவள், “என்ன?” என்று கேட்க, “என்னாச்சும்மா? விசில் அடிச்சிட்டே இருக்கு. நீங்க கவனிக்கவே இல்ல. அதான் நான் ஸ்டவ்வ அணைச்சிட்டேன்” என்று விளக்கம் கொடுத்தாள்.

“ஆ..ங் சரி நீ போ. நான் பார்த்துக்கிறேன்” என்றவள் அதன் பின்னே சமையலில் கவனத்தை செலுத்த, அதற்குள், “விழி, கெளம்பிட்டாளா?” என்று கேட்டப்படி அவளுக்கு சாப்பாடை எடுத்து வைத்தாள்.

“இல்லங்கம்மா. இன்னும் சின்னம்மா, அவங்க ரூம்ல இருந்தே வெளிய வரல” என்றாள் அவள்.

“என்ன?” என்றவள், “சரி இங்க நீ பார்த்துக்கோ. எல்லாம் ரெடி பண்ணிட்டேன். ஒரு ஐஞ்சு நிமிஷம் கழிச்சு. எல்லாத்தையும் டைனிங் டேபிள்ல எடுத்து வெச்சிடு” என்றப்படி விழியைத் தேடி வந்தாள்.

அங்கே விழியுடைய மொபைலுக்கு கிட்ட தட்ட நூறு தடவைக்கு மேல் ஆர்யன் கால் செய்திருப்பான். ஆனால் அவளுடைய மொபைல் சுவிட்ச் ஆப் என்பதைத் தாண்டி வேறு எதையும் சொல்லியிருக்கவில்லை.

அதில் அந்தப் பக்கம் இருந்தவனுக்கோ அத்தனைக் கோவம். “இல்ல இல்ல. கண்டிப்பா, இத நான் இப்படி நடக்க விட மாட்டேன். இந்த ஆர்யன் நினைச்சத செஞ்சே தீருவான்” என்று அத்தனை குரோதமாய் சொல்லியவன், அடுத்த நொடி, விழியுடைய ஹெட்க்கு கால் செய்து, அவள் குறித்து விவரம் கேட்டான்.

இங்கே கவியோ, இன்னும் அலுவலகம் செல்ல தயாராகமல், இரவு உடையில் இருந்தவளைப் பார்த்து நெற்றியை சுருக்கினாள்.

“ஹேய் நீ இன்னும் ஆபிஸ் கிளம்பலையா?” என்றப்படி அவளிடம் வர, அப்போதே ஏதோ யோசனையில் இருந்த விழி, கவியைப் பார்த்ததும், “கவி” என்று ஓடி வந்து கட்டிக் கொண்டாள்.

அதில் இவளோ, “ஹேய் என்னாச்சு விழி? ஏன் உடம்பு இவ்ளோ சூடா இருக்கு. காய்ச்சலா?” என்று வேகமாய் விலகி, அவள் நெற்றி, கழுத்தில் கரம் பதித்தாள்.

காய்ச்சல் என்று சொல்லும் படி இல்லை என்றாலும், அவள் இரவெல்லாம் சரியாய் உறங்கவில்லை என்பதை அவளுடைய சிவந்த விழிகள் சொல்லியது.

அதில், “ச் என்ன விழி? நைட்டெல்லாம் தூங்கலையா? இன்னிக்கு எந்த சீரிஸ உட்கார்ந்து பார்த்த” என்று சிறு கண்டிப்புடன் கேட்டாள்.

“ஆ.ங் அதெல்லாம் இல்ல” என்ற விழியின் வார்த்தையில் வழக்கத்தை விட சோர்வு அப்பட்டமாய் தெரிய, “ஹேய் என்னாச்சு உனக்கு? உடம்புக்கு எதுவும் சரியில்லையா?” என்று பதட்டமாய் கேட்டாள்.

“ஐயம் சாரி” என்று அவள் சிறுமியாய் சொல்ல, “என்ன?” என்றவளுக்கு, அவள் நேற்றிரவு கோவப்பட்ட விஷயம் எல்லாம் சுத்தமாய் நினைவில் இல்லை.

“நான் உண்ட்ட அப்படி பேசியிருக்க கூடாது. எனக்கு என் மேலையே அவ்ளோ கோவம்” என்றவள் மீண்டும் அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

“என்னது?” என்றவளுக்கு வெகு தாமதமாகவே அவள் சொல்லியது புரிய, “ஹேய் லூசா நீ? நான் தான் சொன்னேன் தான. அதெல்லாம் நான் எதுவுமே நினைக்கல. இதுக்காகவா நீ இப்படி இருக்க?” என்று கேட்டாள் கவி.

“இல்ல. நான் பண்ணது ரொம்ப பெரிய தப்பு. உனக்கு இல்லாத உரிமையா? நீ என் போன்ன எடுத்தா, எனக்கு எதுக்கு கோவம் வரனும்? நான் தான் தேவையில்லாம, அப்படி பண்ணிட்டேன்” என்றாள்.

அதைக் கேட்டவளோ, “ச் இப்போ நீ அடி வாங்கப் போற? அதெல்லாம் ஒரு விஷயமே இல்லன்னு சொல்லிட்டு இருக்கேன். நீ என்னென்னா, அதையே பேசிட்டு இருக்க. முதல்ல போ. போயி ரெடியாகிட்டு வா” என்றாள் கவி.

“இல்ல. நான் ஆபிஸுக்கு போகல” என்று விழி சொல்ல, ஏனோ இப்போது அவள் சிறுமியாய் தான் இவள் கண்ணுக்கு தெரிந்தாள்.

“என்ன விழி நீ? நீத்தான சொன்ன. உன் ஆபிஸ்ல உன்ன எல்லாரும் அவ்ளோ நல்லா பாத்துக்கிடுறாங்கன்னு. அப்படி இருக்கிறப்ப, இப்படி லீவ் போட்டா சரியா? சொல்லு” என்றாள்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. ஆல்ரெடி நான் சிக் லீவ் சொல்லிட்டேன். நான் போகல” என்று அவள் அதிலேயேத்தான் நின்றாள்.

ஏனோ கவிக்கும், அவளுக்கும், இடையில் இந்த வேலை வந்து தடையாய் இருக்குமோ என்ற பயம் நேற்றே உருவாகியிருந்தது.

விழியை பொறுத்த வரையில், கவிக்கு வேண்டாம் என்றால், அது விழிக்கும் வேண்டாம். அப்படி இருக்க, அவளுக்கு அந்த ஆர்யன் பத்திய விஷயங்கள் பிடிக்கவில்லை என்றால், இவளுக்கும் அந்த ஆர்யனை பிடிக்க வேண்டாம். அவனைப் பற்றி இனி பேசவே கூடாது. அவனுடனான பிரண்ட்ஷிப் வேண்டவே வேண்டாம் என்று நேற்றே முடிவு செய்து விட்டாள்.

“என்ன விழி சின்ன புள்ள மாதிரி. நான் தான் சொல்றேன் தான. நேத்து நடந்தது ஒரு சாதாரண விஷயம். இதுக்கெல்லாம் போயி, நான் என் விழிய தப்பா நினைப்பேன்னா?” என்று அவள் கேட்க, இப்போது அவள் தோளில் சாய்ந்துக் கொண்டவளோ, “இன்னிக்கு ஒரு நாள் நான் உன் கூட இருக்கேன்னே” என்றாள்.

அதற்கு மேல் கவியும் வற்புறுத்தவில்லை. “சரி என் கூடத்தான இருக்கனும். பட் இப்படி வீட்டுல கிடையாது. நம்ம அப்போ நம்ம ஆபிஸுக்கு போகலாம்” என்றாள்.

அதைக் கேட்டதும் விழிக்கும் மகிழ்ச்சி தொற்றிக் கொள்ள, “ஆமா, ஆமா நானும் அங்க வந்து ஒரு மாசம் இருக்கும்ல. அன்னிக்கு சும்மா கீழ இருந்து பார்த்தேன் அவ்வளவுத்தான். அப்போ இன்னிக்கு அங்க போலாம்” என்றாள்.

அவள் முகம் தெளிவானப் பின்னே, இங்கே கவிக்கு நிம்மதியாய் இருந்தது. “சரி. அங்க போகலாம். முதல்ல மேடம்ம போயி குளிச்சி ரெடியாகிட்டு வாங்க. உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்றாள்.

“ம் சரி அப்போ இன்னிக்கு நம்ம ஷேம்மா ட்ரஸ் பண்ணலாம். எந்த கலர் சேல கட்டப் போற நீ?” என்று அவள் கேட்க, இப்போது கவியே அவளுடைய சுடிதார் ஒன்றை எடுத்துக் கொடுத்து, “இத மாத்திக்கோ” என்றாள்.

“ம் டன்னு” என்று சொல்லிவிட்டு விழி குளியலறைக்குள் சென்று விட, கவிக்கோ விழியை நினைத்து சிரிப்புத்தான் வந்தது.

அதன் பின் அவளுடைய பெட் எல்லாம் குப்பையாய் இருக்க, “அண்ணனும், தங்கச்சியும் வளர்த்திருக்காங்களே தவிர, இன்னும் சின்னப் பிள்ளைங்கத்தான்” என்று சொல்லியப்படி அதை எல்லாம் எடுத்து வைத்தாள்.

அப்போது அவள் தலையணைக்கு கீழே இருந்த பெட்ஷீட்டில் இருந்து ஒரு பிரேஸ்லெட் தரையில் விழுந்தது. அதை கவி எடுத்துப் பார்க்க, அதில், “A” என்ற லெட்டர் பதிக்கப்பட்டிருந்தது.

அதில் இவளோ ஒரு நொடி நெற்றியை சுருக்கிப் பார்த்தாள். “இது யாரோடது” என்று யோசித்தப்படி அவள் நிற்க, பின், “ஹே கவி! இப்போ எதுக்கு டிடெக்டிவ் மாதிரி எல்லாத்தையும் யோசிச்சிட்டு இருக்க. தெரிஞ்சவங்களோடதா கூட இருக்கும்” என்று மனசாட்சி சொல்ல, அவளும் அதை மேஜையின் ஓரத்தில் வைத்தாள்.

இப்போது விழியுடைய மொபைல் சுவிட்ச் ஆப்பில் இருக்க, அதை எடுத்து சார்ஜரில் போட்டாள். பின் அவள் திரும்ப, அங்கே விழியும், கவியும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம், அவள் பர்ஸில் இருந்து விழுந்தது.

அதை எடுத்துப் பார்த்தவளுக்கோ, தோழியின் அன்பில், புன்னகை அரும்ப, “சீரியஸ்லி. நீயும், உன் அண்ணாவும் எனக்கு கெடைச்சதுக்கு நான் கொடுத்து வெச்சிருக்கனும்” என்று சொல்லிக் கொண்டாள்.

ஆனால் அதே பர்ஸில், ஆர்யனுடைய புகைப்படமும் இருந்ததை அவள் கவனித்திருக்கவில்லை. ஒரு வேளை இப்போதே அவனின் புகைப்படத்தை அவள் பார்த்திருந்தால், பின்னால் விழிக்கு நடக்கப் போகும் அநியாயத்தை தடுத்திருப்பாளோ என்னவோ?

இப்போது அந்த அறையை ஒதுங்கு செய்து விட்டு, அங்கிருந்து வெளியில் சென்றாள் கவி. அதன் பின் கிளம்பி வந்த விழியோ, அவள் பர்ஸுக்கு அருகில் இருந்த விழி, கவி புகைப்படத்தைப் பார்த்தவள், அதை எடுத்து உள்ளே வைத்தாள். பின் அதற்குள் இருந்த ஆர்யனின் புகைப்படத்தை எடுத்து, ட்ராயருக்குள்ளே போட்டு விட்டாள்.

மனதிலோ, “சாரி ஆர்யன். என் லைப்ல, என் கவிக்குத்தான் பர்ஸ்ட் பிரயாரிட்டி. உங்களால, அவளுக்கும், எனக்கும் நடுவுல சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் வரக் கூட நான் விரும்பல” என்று சொல்லியப்படி கவியுடன் தேன் சுடர் அலுவலகம் கிளம்பி சென்றாள் விழி.

அங்கே ஆர்யனோ, விழி, கவி சேர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பார்த்து, “இந்த ஆர்யன் என்னிக்குமே தோத்துப் போக மாட்டான்” என்று அத்தனை குரோதமாய் சொல்லிக் கொண்டான்.

(அட நீ வேற ஏண்டா? அவங்க வீட்டுலையே ஏகப்பட்ட பிரச்சன. இதுல நீ வேற உன் பங்குக்கு ஏதாச்சும் பண்ணி வச்சிடாத. சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். சரி அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   1

*** தேன் – 67 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***