வேந்தனின் நேஷத்தில், கவி முற்றும் முழுதாய் உடைந்து தன்னிலை இழந்திருக்க, அவனோ, அவளை சமநிலைக்கு கொண்டு வர முயற்சித்தான். ஆனால் ஒரு முத்தத்தில் அவனையும் அவள் தடுமாற வைத்திருக்க, மெல்ல அவன் இதழை விட்டு தன் இதழைப் பிரித்தாள்.
இப்போது அவன் தாடிக்குள் விரல் நுழைத்து, “என்ன ஏத்துப்பீங்கத்தான?” என்று கேட்டாள்.
அவள் கண்கள் இரத்தமாய் சிவந்திருக்க, அவளுடைய வலி, இங்கே இவனுடைய இதயத்தை குத்தி கிழித்தது.
அவனுடைய கரத்தை இறுக்கி மூடி, தன் கோவத்தை இழுத்துப் பிடித்தவன், “என் கவித்தான் என்ன ஏத்துக்கனும்” என்றான். “ம்ஹூம். நான்” என்றவள் ஏதோ சொல்ல வாய் திறக்க, அவள் உதட்டின் மீது ஒரு விரல் வைத்து தடுத்தான் வேந்தன்.
அதில் கலங்கிய விழிகளோடு அவனைப் பார்க்க, “என் கவியப் பத்தி எனக்கு தெரியும்” என்றான். அதில் மீண்டும் அவனை இறுக்கமாய் கட்டிக் கொண்டாள். ஏனோ அவனை விலக்க அவளுக்கு விருப்பமே இல்லை.
இங்கே வேந்தனுக்கோ, அவளை எப்படி சமாதானப்படுத்த என்று தெரியவில்லை. அவள் கண்களில் இருந்து கொட்டிய கண்ணீரைப் பார்த்த, அந்த வான் மேகமே, அதற்கு மேல் பொறுக்காது, கடகடவென்று, மழையை பூமிக்கு அனுப்பியது.
சடசடவென மழைத்துளிகள் இருவரின் மீதும் விழ, அப்போதும் கவி, வேந்தனை விட்டு விலகவில்லை. அவள் கண்ணீர் துளிகள் எல்லாம், அந்த மழை நீரோடு கலந்து கரைய, இப்போது வேந்தனோ, “கவி” என்று அவளை மெதுவாய் தன்னில் இருந்து பிரித்து நிறுத்தினான்.
இன்னும் கூட அவள் கண்களில் கண்ணீர் மிச்சமிருக்க, அவள் நெற்றியில் அழுத்தி முத்தமிட்டு, அவள் கண்ணீரைத் துடைத்தான்.
“ம்ஹூம் என் கவி அழுதது எல்லாம் போதும். இதுக்கு மேல் என் கவி அழக் கூடாது” என்றான். அதில் இன்னுமே அவள் கண்கள் கண்ணீரை சிந்தப் போக, “இந்த சுடர் மேல நம்பிக்க இருக்குத்தான?” என்று கேட்டான்.
அதில் சட்டென்று கண்ணீரை உள்ளிழுத்து, அவன் கரத்தைப் பிடித்தாள். அதில் அவன் அவளை கேள்வியாய் பார்க்க, அவளோ, “இப்பவே” என்று சொல்ல முயன்றாள்.
அதில் அவள் வாயை தன் கரத்தால் மீண்டும் மூடியவன், “என் கவிய நான் எடுத்துப்பேன்த்தான். ஆனா இப்படி கிடையாது” என்றான்.
அவனின் வார்த்தையில், அவளோ “அப்போ” என்று பேசி முடிக்கும் முன்னே, சட்டென்று அவள் இடையோரம் கைக் கொடுத்து தன்னை நோக்கி இழுத்துப் பிடித்தான்.
அதில் அவள் மொத்தமாய் அவன் நெஞ்சில் மோதி நிற்க, அவள் முகத்தில் விழுந்த முடியை ஒரு விரலால் ஒதுக்கினான். அவனின் தொடுகை, அவளை என்னமோ செய்ய, கொட்டும் மழை வேறு, அதன் தாக்கத்தை காட்டியது.
அவனோ, அவள் விழிகளைப் பார்த்து, “நமக்கான நாள். நமக்கானதா மட்டும் தான் இருக்கும். அதுல என் கவி முகத்துல இந்த கண்ணீர் தடம் கூட இருக்காது. அவ முகத்துல எனக்கான, எனக்கே மட்டுமான காதல் மட்டும் தான் இருக்கும். அவளுக்கு சந்தோஷத்த மட்டும்த்தான் அந்த நாள் கொடுக்கும்” என்றான்.
அவன் என்ன பேசினாலும், அதில் அவனுடைய நேஷமும், குணமும் மட்டுமே முன் வந்து நின்றது. “சுடர்” என்றவளின் உதடுகள் தந்தியடிக்க, அவள் கரத்தை அழுத்திப் பிடித்தான்.
“இப்போ, இந்த செகண்ட் உன் முன்னாடி இருக்கிறது மட்டும் தான் நிஜம். இதுக்கு முன்னாடி என்ன வேணும்னாலும் நடந்திருக்கட்டும். ஆனா, அதோட சின்ன நிழல் கூட உன் மேல பட விடாம நான் பார்த்துப்பேன்” என்றான்.
அவளுக்காக உலகையே எதிர்த்து நிற்பேன் என்று சொல்பவனுக்கு பதில். அவளிடம் ஒன்றே ஒன்றுத்தான் இருந்தது.
கொட்டும் மழையில் அந்த இரவில் இருவரும் அதை சிறிதாய் கூட பொருட்படுத்தாது நின்றிருக்க, இப்போது கவியோ சுடரைப் பார்த்து, “ஐ லவ் யூ சுடர். ஐ லவ் யூ சோ மச். நான் உங்கள என் மனசார காதலிக்கிறேன். இன்னும் எத்தன நாள், எத்தன வருஷம் நான் இருப்பேன்னு எனக்கு தெரியாது. ஆனா நான் உயிரோட இருக்கிற கடைசி நிமிஷம் வரைக்கும் உங்க கூடத்தான் இருக்கனும்னு ஆசப்படுறேன். உங்களோட அன்புக்கு என்னால என்ன கொடுக்க முடியும்னு எனக்கு தெரியல. பட் கண்டிப்பா, உங்களுக்காக என் உயிர கொடுக்கனும்னா கூட நான் கொடுப்பேன். எஸ் ஐயம் லவ் வித் யூ. மேட்லி. டீப்லீ. ஈவன்” என்று ஏதோ சொல்ல வந்து பின் அப்படியே நிறுத்தினாள்.
ஆனால் இங்கே அவள் தன் காதலை சொல்லியதில் உறைந்துப் போய் நின்றிருந்தான் வேந்தன்.
அவனின் கரத்தை பிடித்து, தன் நெஞ்சில் பதித்து, “நான் உங்களுக்கு தகுதியானவளான்னு எனக்கு தெரியல. பட் எனக்கு நீங்க வேணும். இத சொல்றதால என்ன இந்த உலகம் தப்பானவன்னு” என்று சொல்லி முடிக்கும் முன்னே, அவள் இதழை மூடியிருந்தான்.
இம்முறை கரத்தால் அல்ல, அவன் வன் உதடுகளால். அவனுக்கு கோவம். ஏன் அவர்களுடைய வாழ்க்கையில் மட்டும் இத்தனைக் குழப்பம்?
மழைநீர்த்துளிகளோடு சேர்த்து, இருவரின் உயிர் துளிகளும் கலந்து இருவரின் தொண்டைக்குழிக்குள்ளும் புகுந்தது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத, பரிமாறிக்கொள்ளப்படாத பல உணர்வுகள் அங்கு அரங்கேறியது.
இருவருக்குமே மூச்சு காற்றின் தேவை தேவையாய் இருக்க, மெல்ல விலகினான் சுடர். அதற்குள் இருவரும் முற்றும் முழுதாய் நனைந்திருந்தனர். அவளின் மொத்த பலமும், முத்தத்தில் கரைந்திருக்க, இப்போது, அந்த குளிரையும், மழையும் தாங்க இயலாது அவள் உடல் நடுங்க ஆரம்பித்தது.
அப்போதே, அத்தனை நேரம் மழையில் நின்றிருப்பதே அவனுக்கு புரிய, தடுமாறியவளை தாங்கிப் பிடித்தான் வேந்தன்.
கவிக்கோ இன்னும் கூட மூச்சுக்காற்றின் தேவை தேவையாய் இருக்க, அதை விட அவன் மார்பு சூட்டின் வெப்பம் போதுமானதாய் இருக்க அவன் மார்பில் முகம் புதைத்தாள்.
அழகான அழகிய மோக உணர்வுகள் மெல்லமாய் பூக்க முயற்சித்த நொடி அது. ஆனால், அதை அதற்கு மேல் வேந்தன் நகர்த்தி செல்ல நினைக்கவில்லை.
அவளை அணைத்தப்படியே அவளை தங்கள் அறைக்குள் அழைத்து வந்தாள். ஏனோ வெளியில் தெரியாத குளிர் இப்போது, நன்றாகவே தெரிய, அவனோடு குளிருக்கு இதமாய் ஒன்றினாள்.
அவசரமாய் அவன் அவளை விட்டு விலகி, துண்டை தேடப் போக, அவளோ அவனை விடாது அவன் சட்டையைப் பிடித்து தன்னை நோக்கி இழுத்தாள் தேன்கவி.
அதில் அவனோ, “கவி முதல்ல தலைய துவட்டு. ஈரமா இருக்கப் பாரு” என்றவன் அப்போதும் அவளை விலக்கவே நினைத்தான்.
ஆனால் அவளோ மீண்டும் அவனை நெருங்கி, அவன் ஈரச்சட்டையில் தன் முகத்தைத் துடைத்தாள். அதில் அவளுடைய உதடுகள் அவன் நெஞ்சை உரசி தீமூட்டியது.
இங்கே இவனுக்குள்ளும் விரத தாபம் எழ துடிக்க, இருந்தும் கூட அந்த நிலையை அவன் உபயோகிக்க நினைக்கவே இல்லை.
ஏனெனில், அவளுடைய முதல் வாழ்க்கையில் அவள் பட்ட எந்த கஷ்டத்தையும் அவன் தெரியாமல் கூட கொடுத்து விடக் கூடாது என்பதில் தெளிவாய் இருந்தான். அதிலும் அவர்களுடைய முதல் கூடல், இப்படி ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் நடக்க அவனுக்கு விருப்பமில்லை.
முதலில் கவியின் மன காயத்தை ஆற்றிவிட்டுத்தான் அதன் பின் அதை பற்றி யோசிக்கவே செய்வான். அதனால், இப்போது, அவனோ அவளை சில நொடிகள் அணைத்துப் பின், “கவி. முதல்ல போயி ட்ரஸ்ஸ மாத்திட்டு வா” என்றான்.
அதில் அவள் அவனை நிமிர்ந்துப் பார்க்க, அவன் கண்ணில் கண்டிப்பு தெரிய, அவளோ, அவனை விட்டு விலகினாள்.
அவள் முகத்தில் மெல்லிய ஏமாற்றம் வந்து மறைய, இப்போது அவனோ சிறிதும் இளக்கம் கட்டாது, “ஈர ட்ரஸ்ல ரொம்ப நேரம் இருக்க கூடாதுன்னு சொல்லிருக்கேன் தான” என்றான்.
அதில் இப்போது அவளோ, “நல்ல சான்ஸ மிஸ் பண்ணிட்டீங்க எம்.எல்.ஏ சார். இதுக்கு நீங்க உண்மையாவே கஷ்டப்படத்தான் போறீங்க” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து குளியலறைக்குள் சென்றிருந்தாள்.
“என்ன?” என்றவன் யோசிக்கும் முன்னே அவள் அங்கிருந்து ஓடியிருக்க, இப்போது இவன் முகத்திலோ மெல்லிய புன்னகை எட்டிப் பார்த்தது.
அதில் அவனோ இப்போது, “எனக்கு எப்போ, எப்படி சான்ஸ கிரியேட் பண்ணிக்கனும்னு நல்லாவே தெரியும். அதனால மிசஸ்.எம்.எல்.ஏ கவலப்பட வேண்டாம்” என்று சத்தமாய் கூறினான்.
உள்ளே பாத்ரூமிற்குள் இருந்தவளுக்கோ அவன் சொல்லிய வார்த்தையில் அழகான வெட்கம் எட்டிப் பார்த்தது. ஆனாலும் அதை உள்ளிழுத்து, “ஓவர் கான்பிடண்ட் எல்லாம் வேண்டாம் சார்” என்றாள்.
அதில் இவனோ, “அது ஓவர் கான்பிடண்ட் கிடையாது. என் மேல எனக்கு இருக்கிற நம்பிக்க” என்றப்படி அவளுக்கு மாற்று உடை ஒன்றை எடுத்துக் கொடுத்தான்.
“ரொம்பத்தான் நம்பிக்க” என்று சொல்லியப்படி அவளும் அதை வாங்கிக் கொண்டு கதவை மூடிக் கொண்டாள்.
இங்கே வேந்தனுமே, அணிந்திருந்த சட்டையை கழட்டியப்படி பால்கனிக்கு வந்து நின்றான். இன்னும் மழை கொட்டிக் கொண்டுத்தான் இருந்தது. மனதில் கவி காதலை சொல்லிய தருணம் ஓடிக் கொண்டிருக்க, அவனின் மனதில் அப்படி ஒரு சந்தோஷம். ஆனாலும் அதே நேரம் அவளுடைய கண்ணீர் அவனை அத்தனை இறுக்கமாக்கியது.
அதைப் பற்றிய சிந்தனையில் நின்றிருந்தவனின் தோளில் ஏதோ பட சட்டென்று திரும்பினான். கவித்தான் கையில் துண்டோடு நின்றிருந்தாள்.
“அட்வைஸ் எல்லாம் அடுத்தவங்களுக்குத்தான் இல்ல. முதல்ல போயி ட்ரஸ் மாத்துங்க” என்றாள். அதில் இப்போது அந்த பால்கனி கம்பியில் சாய்ந்து நின்றப்படி அவளை மேலிருந்து கீழாக பார்த்தான்.
அவன் பார்வை அவளுக்குள் என்னென்னமோ செய்ய, “ச் என்னப் பண்றீங்க நீங்க?” என்றாள்.
“நான் என்னப் பண்ணேன்? நான் சும்மாத்தான இருக்கேன்” என்றவன் கையை விரித்துக் கேட்க, அவளோ, “ச் நீங்க சும்மா இருந்தது போதும். போயி முதல்ல ட்ரஸ மாத்துங்க. மழை வேற நிக்காம பெய்யுது” என்றாள்.
அதில் சிறு புன்னகையுடன் அவள் கரத்தில் இருந்த துண்டை விரல் உரச வாங்கியவன், அவளை கடக்கும் நொடி அவள் கன்னத்தில் அழுத்தி இதழ் பதித்து, “சீக்கிரமே சான்ஸ யூஸ் பண்ணிக்கிறேன்” என்றான்.
அவனின் வார்த்தையில், அவள் விழிகள் விரிந்து அவன் பக்கம் திரும்ப, அதற்குள் அவன் அங்கிருந்து குளியலறைக்குள் சென்று மறைந்திருந்தான்.
இப்போது கன்னத்தில் கை வைத்தவளுக்கோ, அவன் சொல்லிய வார்த்தையில் முகம் குங்குமமாய் சிவந்தது. அதே நேரம் சட்டென்று வேறு சில விஷயங்களும் நினைவுக்கு வந்து விட, அவள் முகம் அப்படியே வாடியும் போனது.
அவனை காதலிக்கிறாள். அதை அவனிடம் சொல்லவும் செய்துவிட்டாள். இந்த நொடியே அவன் அவளை எடுத்துக் கொண்டாலும், அவளுக்கு சம்மதம் தான். ஆனால், அவளுடைய அந்த கடந்த கால வாழ்க்கையின் நிழலின் தாக்கத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறாள்?
அவனின் தொடுகையை உயிர் ஏற்றுக் கொள்ளும். ஆனால் அவளின் உடல் அதை ஏற்றுக் கொள்ளுமா? ஏதோ ஒரு வேகத்தில் அவனிடம் இப்போதே எடுத்துக் கொள் என்று சொல்லிவிட்டாள். ஆனால் அவன் அதை செய்திருந்தால், அதற்கு எதிர்வினை அவளிடம் எப்படி இருந்திருக்கும்? அவனை தெரியாமல் ஒரு வார்த்தை தவறாய் சொல்லிவிட்டால், அவன் தாங்கிக் கொள்வானா? இப்போது அதை எல்லாம் யோசித்தவளுக்கு மீண்டும் தலை வலித்தது.
அவள் மனம் தடுமாறப் போக, அதற்குள்ளாக அவளை பின்னிருந்து இறுக்கமாய் கட்டிக் கொண்டான் வேந்தன்.
(ஏன்பா ராசா. நீ அவ பக்கத்துலையே இரு. இல்லன்னா, அடுத்த செகண்டே கண்டத யோசிச்சு என்னையும் சேர்த்து டென்சன் பண்றா. சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். இதுக்கப்புறம் என்னோட எல்லா கதையும் என் சைட்லத்தான் வரும். இந்த கதையுமே அங்க நீங்க ப்ரீயா படிக்கலாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இங்க அப்டேட் வந்துடும். பட் என்னோட சைட்ல டெய்லியும் அப்டேட் வரும். சோ நீங்க அங்க ப்ரீயாவே படிக்கலாம். கூகுள்ல போயி lovebeatnovels.com அப்படின்னு search பண்ணீங்கன்னா வரும். அப்படியும் வரலன்னா, என்னோட இன்ஸ்டா ஐடி sarmi_ss ஆ பாலோ பண்ணிக்கோங்க. அதுல bio ல கொடுத்திருக்கேண். ஷோசியல் மீடியால இல்லாதவங்க என்னோட மெயில் ஐடி smartsarmi.ss@gmail.com க்கு மெயில் பண்ணுங்க. நானே உங்களுக்கு லிங்க் ஷேர் பண்றேன். சரி அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தித்திக்குமா?..
Raja Veni
next episode update pannunga sis
Umakrish Krish
When Next episode 🤔
Umakrish Krish
Nice story…
Yasarath Yazar
super sis