தேன் – 61

“இப்போ நீங்க சொல்லப் போறீங்களா? இல்லையா?” என்று கவி பொறுமையிழந்து, வேந்தனின் தோளில் அடித்தாள். “ஹேய்! பப்ளிக் ப்ளேஸ்ல வச்சி, ஒரு எம் எல் ஏ மேல கைய வச்சா என்னாகும் தெரியும்த்தான” என்று கிண்டலாய் கேட்டப்படி காரை ஓட்டினான்.

அதில் அவனை இன்னும் முறைத்தவளோ, “இப்படி பட்ட பகல்ல, எம் எல் ஏ சார், ஒரு பொண்ண கடத்திட்டு போனா என்னாகும்னு தெரியும்த்தான” என்றாள்.

“என் பொண்டாட்டிய, நான் கடத்திட்டு போறேன்” என்று அவன் சொல்ல, “நானும் என் ஹஸ்பண்ட” என்று சொல்ல வந்தவள், சட்டென்று அதை சொல்லாது அப்படியே நிறுத்தி விட்டாள்.

ஏனோ, அந்த வார்த்தையை சொல்ல அவளுக்குள் ஒரு வித தயக்கம். அதை புரிந்தவன் போல, “அதனால, இந்த வேந்தன யாரும், எந்த கேள்வியும் கேட்க முடியாது” என்றான்.

“ச் ப்ளீஸ் சார். என்ன எங்க கூட்டிட்டுப் போறீங்க?” என்று அவள் அதையே கேட்க, “வெயிட். வெயிட்” என்று சொல்லியவன் அடுத்த சில நொடிகளில், ஒரு உயர்ந்த பில்டிங்கின் முன்னே காரை நிறுத்தினான்.

அதில் அவள் வெளிப்பக்கம் திரும்ப போக, “இல்ல இல்ல” என்று அவளை திரும்பவிடாது தடுத்தான். “என்ன?” என்று அவள் கேட்க, “ஒரு நிமிஷம் கண்ண மூடு” என்று அவன் சொல்ல, “என்ன?” என்றாள்.

“ச் நான் தான் சொல்றேன் தான. கண்ண மூடு” என்று அவன் சொல்ல, அவளும் கண்ணை மூடினாள். அதற்குள் காரை விட்டு இறங்கி, அவள் பக்கம் வந்து கதவைத் திறந்தான் வேந்தன்.

அதில் அவள், “இப்பயாச்சும் கண்ண திறக்கட்டுமா?” என்று கேட்க, “ம்” என்றான். அதில் அவள் கண்ணைத் திறக்க, அவளின் முன்னே வேந்தன் தான் சிறு புன்னகையுடன் நின்றிருந்தான்.

“என்ன சார்?” என்று அவள் கேட்க, அவள் முன்னே தன் கரத்தை நீட்ட, அவளும் அவன் கரத்தை மெதுவாய் பற்றி கீழே இறங்கினாள். இறங்கியவளின் பார்வை இப்போது வேந்தனைக் கடந்து, அந்த உயர்ந்த கட்டிடத்தை பார்த்தது.

“இங்க எதுக்கு வந்திருக்கோம்?” என்று அவள் கேட்டு முடிக்கும் முன்னே, அங்கே மின்னிய “தேன் சுடர் பப்ளிகேசன்ஸ்” என்ற பெயர்பலகை அவள் கண்ணில் விழுந்தது.

அதில் அவள் அப்படியே நின்று விட, இப்போது வேந்தன் அவளருகில் வந்து, “உன்னோட ஆசை இதுத்தான?” என்று கேட்டான்.

அவன் அப்படி கேட்கவும், சட்டென்று திரும்பி அவனைப் பார்த்தவளுக்கு, ஏனோ வார்த்தை வர மறுத்தது. கண்ணெல்லாம் கலங்க முயற்சிக்க, “என்ன சுடர் இதெல்லாம்?” என்றாள்.

“உள்ள வந்து பார்த்தா உனக்கே தெரிய போது” என்று சொல்லியவன் அவள் கரத்தைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான்.

அங்கே வேந்தனைப் பார்த்ததும், அங்கே ரிசப்சனில் இருந்தவர்கள் எழுந்து நிற்க, அவர்களை எல்லாம் பார்வையாலையே அமர சொல்லிவிட்டு அவளுடன் அங்கே இருந்த லிப்டிற்குள் நுழைந்தான்.

இன்னும் கூட கவி நடப்பதை நம்ப முடியாது. அப்படியே நின்றிருக்க, கடைசியில், மிசஸ், தேன் கவி சுடர் வேந்தன்” என்ற பெயர் பலகைப் பொருந்திய கேபினைப் பார்த்துத்தான் இவ்வுலகம் வந்து சேர்ந்தாள்.

அதில் அவள், மேலும் அதிர்ந்து, வேந்தனைப் பார்க்க, அவனோ சிறு புன்னகையுடன், “உள்ள வாங்க எம் டி மேடம்” என்றான்.

“என்ன?” என்றவள் அதன் பின்னே அந்த பெயருக்கு கீழே, இருந்த மேனேஜிங் டைரக்டர் என்ற எழுத்தைப் பார்த்தாள். அதற்குள்ளாக அவளே உள்ளே அழைத்துச் சென்று அங்கிருந்த இருக்கையில் அமர வைத்திருந்தான் சுடர் வேந்தன்.

“கங்கிராசுலேசன்ஸ் மை பொண்டாட்டி” என்று அவன் அழுத்திச் சொல்ல, பட்டென்று அந்த இருக்கையில் இருந்து எழ முயற்சித்தாள். அதற்குள்ளாக, அவளை எழ விடாது, பின்னிருந்து அந்த சீட்டில் கரம் பதித்து, “இந்த சீட் உனக்காக ரொம்ப வருஷமா வெயிட் பண்ணிட்டு இருக்கு. இதுக்கு மேலையும் வெயிட் பன்ண வைக்காத” என்றான்.

அவனின் வார்த்தையில் சட்டென்று அவள் திரும்ப, இப்போது அவனுடைய முகமும், அவள் முகமும் அத்தனை நெருக்கத்தில் இருந்தது. அவன் விழிகளில் இருந்த ஏதோ ஒன்று இவளுடைய செயலை எல்லாம் கட்டுப்படுத்தியது.

“என்ன சொல்றீங்க?” என்று கேட்கத்தான் நினைக்கிறள்? ஆனால் அவன் ஏதாவது சொல்லி, அதை கேட்டு மேலும் மேலும், தானே தன் வாழ்க்கையை கெடுத்துக் கொண்டதை தெரிந்துக் கொள்ள விரும்பவில்லை.

அவள் தொண்டைக்குழி ஏறி இறங்குவதைப் பார்த்தவன், பின், “ஆக்சிவலி, இத நான் மிஸ். தேன் கவிக்கு பிரசனட் பண்ணலாம்னு இருந்தேன். பட் காட் கிரேஸ்! மிசஸ் வேந்தனுக்கு கொடுக்கிறேன்” என்று விழி நிறைய மகிழ்ச்சியில் கூறினான்.

அவன் கண்களில் தெரிந்த சந்தோஷம், இங்கே கவியுடைய மனதில் ஏதோ ஒன்றை புகுத்தியது. “சுடர்” என்றவளுக்கு வார்த்தை வர மறுக்க, அதற்குள் அவளை விட்டு விலகி, அவளுக்கு எதிரில் இருந்த ஒரு பைலை கையில் எடுத்து அவளிடம் நீட்டினான்.

“என்ன?” என்பது போல் அவள் பார்க்க, “இன்னியோட, இந்த பப்ளிகேசன்ஸ் பொறுப்ப, உன்கிட்ட ஒப்படைக்கிறேன்” என்றான்.

அதில் அவளோ வேகமாய், “என்னப் பண்ணி வச்சிருக்கீங்க? இது உங்களோடது” என்று சொல்லி முடிக்கும் முன்னே, “இது என் தேனுக்காக, இந்த சுடர் உருவாக்குனது” என்றான்.

அப்படி சொல்பவனிடம் என்ன பேசிவிட முடியும். அவள் தடுமாற, இப்போது அவள் கரத்தை அழுத்திப் பிடித்தவனோ, “நான் இங்க பெருசா எதுவுமே பண்ணல கவி. ஜஸ்ட், ஒரு பிளாட்பார்ம ஓபன் பண்ணி வெச்சிருக்கேன். இதுக்கப்புறம், இத நீ எப்படி மாத்தனும்னு நினைக்கிறீயோ? அப்படி மாத்திக்கோ. ஈவன் எனக்கு உன் மேல முழு நம்பிக்க இருக்கு. கண்டிப்பா, இந்த பப்ளிகேசன்ஸ நீ பெரிய லெவல்ல கொண்டு வருவ” என்றான்.

அவன் கண்ணில் அவள் மீது அத்தனை நம்பிக்கை கொட்டிக் கிடந்தது. எப்படி அந்த நம்பிக்கையை வேண்டாம் என்று மறுப்பாள்?

“சுடர்” என்றவள், உதடுகள் கூட நீர் ஆதாரமின்றி காய்ந்திருக்க, அங்கே இருந்த தண்ணீரை எடுத்து அவள் முன் நீட்டினான்.

அவள் கேள்வியாய் அவனைப் பார்க்க, “லிப் ரொம்ப ட்ரையா இருக்கு. அப்புறம் எனக்குத்தான் கஷ்டம்” என்று சீண்டலாய் அவன் சொல்ல, இப்போது அவளோ அவனை முறைக்க முயன்று பின்  தோற்றாள்.

“என்ன சுடர் இதெல்லாம்?” என்று அவள் ஒரு வழியாய் கேட்டு முடித்திருக்க, அவனோ, “அதான் சொன்னேன்னே, இது இந்த கவிக்கு, வேந்தன் கொடுக்கிற கிப்ட்” என்றான்.

“நான் கேட்டேன்னா?” என்று இவள் கேட்க, “கிப்ட் எல்லாம் கேட்டு கொடுக்க கூடாது. அதுவும் போக, இது சுடர், அவனோட தேனுக்காக உருவாக்கனும்னு நினைச்சது. அதையெல்லாம் யாராலையும் மாத்த முடியாது” என்றான்.

“இன்னும் எனக்காக எவ்வளவுத்தான் பண்ணுவீங்க?” என்று ஆதங்கமாய் அவள் கேட்க, “இந்த சுடர் கிட்ட இருக்கிற எல்லாமே என் தேனுக்குத்தான்” என்றான்.

அதில் இப்போது அவளுக்கோ கண்கள் கலங்க, “ச் ஹேய் நீ இப்படி அழுறத பாக்கிறதுக்கா, உன்ன இங்க கூட்டிட்டு வந்தேன். கெத்தா, உன் விருப்பப்படி, யாரோட சின்ன தடங்கலும் இல்லாம, நீ இங்க உன் வேலைய செய்யலாம்” என்றான்.

தனக்காக இத்தனை யோசிப்பவனை, அவளும் எப்படித்தான் விலக்கி வைப்பாள். வேகமாய் எழுந்து அவனைக் கட்டிக் கொண்டாள். அதில் இப்போது மெல்ல அவளை திருப்பி அணைத்துக் கொண்டவனோ, “இப்படி கூட ஆல் தி பெஸ்ட் சொல்லலாம் தான” என்று சீண்டலாய் கேட்டான்.

அவன் சட்டையைப் போட்டு திருகியவள், “ஏன் சுடர். என்ன ரொம்ப ஹார்ட் பண்றீங்க” என்றாள். “ஏன்? உனக்கு இதெல்லாம் பிடிக்கலையா? சரி விடு உனக்கு பிடிச்ச மாதிரி மாத்திடலாம்” என்றான்.

அதில் அவன் நெஞ்சிலேயே வலிக்காது குத்தியவள், “இன்னும் எனக்காக எவ்வளவு பண்ணுவீங்க” என்றாள். 

அதில் இப்போது மெல்ல அவளை விலக்கி அவள் முகம் நோக்கி குனிந்தவன், “இதையே நான் குட்டிமாவுக்காக செஞ்சிருந்தா, இப்படி நீ கேட்டிருப்பீயா?” என்று கேட்டான்.

“அதெப்டி நான் கேட்க முடியும்? அவ உங்க தங்கச்சி” என்று வேகமாய் கவி சொல்ல, “அப்போ ஒரு அண்ணன்னா, தங்கச்சிக்கு செய்றதுக்கு உரிமை இருக்குறப்ப, ஒரு ஹஸ்பண்டா, ஒரு வெல்விஷரா, என் கவிக்கு செய்றதுக்கும் எனக்கு உரிமை இருக்கு. அதுக்கெல்லாம் நீ எமோஷனல் ஆக வேண்டிய அவசியமே இல்ல” என்றான்.

“ஆனா நான் உங்களுக்குன்னு எதுவுமே பண்ணலத்தான” என்று கேட்டாள். அதில் இப்போது அவள் நெற்றியோடு நெற்று முட்டியவன், “இதுவரைக்கும் பண்ணலன்னா என்ன? இதுக்கப்புறம் கூட பண்ணலாம். பட்! நான் ஒன்னு பண்ணா, நீயும் எனக்கு அதையே பண்ணனும்னு அவசியம் கிடையாது. எனக்கு என் கவிக்கு செய்றதுல எந்த பிரச்சனையும் இல்ல” என்றான்.

கேட்க கூடாது என்றுத்தான் நினைக்கிறாள். ஆனாலும் கேட்டு விட்டாள். “எதுக்காக?” என்றாள்.

அதில் அவளையே பார்த்தவன், “உண்மைய சொல்லட்டா?” என்றான். “ம்” என்று அவள் தலையாட்ட, இப்போது அவள் விழியோடு விழி பார்த்தவன், அவள் கரத்தை எடுத்து தன் நெஞ்சில் பதித்துக் கொண்டான்.

அவனின் செயலில், அவள் அவனைப் பார்க்க, “என் குட்டிமாக்கு அப்புறம், என் மேல அதிகமா நம்பிக்க வச்சது நீத்தான். ஈவன் என் குட்டிமாக்கு கூட, நான் இல்லன்னா, என் அம்மா, அப்பான்னு நிறையா பேர் இருக்காங்க. ஆனா என் கவிக்கு நான் மட்டும் தான். அவளுக்கு என்ன மட்டும் தான் தெரியும். அப்படி இருக்கிறப்ப, அவளுக்கு தேவையானது எல்லாத்தையும் நான் தான் பண்ணிக் கொடுப்பேன். அதுல யார் குறுக்க வந்தாலும் எனக்குப் பிடிக்காது” என்றான்.

அதில் அவனையேத்தான் வைத்தக் கண் வாங்காமல் பார்த்தாள். உண்மைத்தானே. அவன் அவளுக்காக என்ன செய்யவில்லை? ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தானே. கடைசியாக, அவளுடைய திருமணத்தன்று கூட கூறினானே, “உனக்கு கல்யாணம் பண்ணிக்கனும்னா, நான் பார்த்து பண்ணி வைக்கிறேன். இப்போ அந்த தாலிய கழட்டி வீசிட்டு வா” என்ற வார்த்தைகள் இப்போதும் அவள் செவியில் ஓடியது.

அவன் அவளை காதலிக்கவில்லை என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் கூட, அந்த நாள், யாரோ ஒருவன் அவளை உரிமையாய் அணைத்துப் பிடித்திருப்பதைப் பார்த்து கலங்கி துடித்தானே.

அப்போதே அந்த நொடியே அவள் உணர்ந்தாளே, அவனின் வேதனையை. அவளே அறியாமல் நொடிக்கும் குறைவாய், அருகில் நின்றிருந்தவனை உதறி தள்ளிவிட்டு, மீண்டும் அவன் கைக்குள் தஞ்சம் புகுந்துக் கொள்ள நினைத்தாளே. ஆனால் அவளின் விதித்தான் அதை செய்யவிடவில்லை.

ஆனால் இப்போது அவளுக்கு எந்த தடையும் இல்லாமல் போக, எதுவும் சொல்லாது வேகமாய், அதே நேரம் அத்தனை இறுக்கமாய் அவனைக் கட்டிக் கொண்டாள் தேன் கவி.

(என்னமோம்மா? இதுக்கப்புறமாச்சும் ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா சரி. அடுத்து என்னென்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். சரி அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   3

*** தேன் – 61 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***