விழி கேபினுக்குள் நுழையும் போதே, அவளின் மீது பூக்கள் மொத்தமும் கொட்டியிருக்க, ஒரு நொடி அவளுக்கு எதுவுமே புரியவில்லை. ஆனாலும் அந்த நொடி, அந்த நிகழ்வு, அவளுக்கு ஏதோ சினிமா காட்சியைப் பார்ப்பது போல் இருந்தது.
அதில் அவள் அன்னார்ந்து மேலே இருந்து கொட்டும் மலர்களைப் பார்க்க, “வெல்கம் டூ ஹவர் சேனல் மிஸ் சுடர்விழி” என்ற கம்பீரமான ஆடவனின் குரல், அவள் செவியை துளைத்தது.
அதில் சட்டென்று அவள் குரல் வந்த திசைப் பக்கம் பார்க்க, அங்கே ஆறடியில், ஆளை அசத்தும் அழகில் கையில் பொக்கேவுடன் நின்றிருந்தான் ஆர்யன்.
பார்த்த நொடி, அவளுக்குள், என்னவோ ஒரு மெல்லிய வேதியியல் மாற்றம். இதுவரை அவளுக்கு தோன்றிடாத புது உணர்வு. அதில் இமைக்க மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சுடர்விழி.
ஏதோ பார்க்க பாலிவுட் ஹீரோ லுக்கில் இருந்தவனை, ஏனோ புதியவன் என்று மனம் சொல்லவே இல்லை. ஏதோ பல நாள் பழகியது போல் ஒரு தோற்றம். அவன் எதை எதிர்பார்த்தானோ? அது விழியின் கண்களில் அப்படியே தெரிய, இப்போது ஆர்யனுடைய முகத்தில் வெற்றிப் புன்னகை.
“ஐ நோ சுடர். நீ என்கிட்ட இம்பிரஸ் ஆகித்தான் ஆகனும்” என்று தனக்குள் சொல்லியவனின் கண்களில் இருந்ததுத்தான் என்ன? அதை எதிரில் இருப்பவர்கள் கண்டுப்பிடிக்க முடியாத அளவுக்கு கூலர் அவனுடைய கண்களை மறைத்திருந்தது.
அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவளின் முன்னே வந்து நின்றவனோ, “ஹலோ சுடர்விழி. கேன் யு ஹியர் மி” என்று அவள் முகத்திற்கு நேரே சொடக்கிட்டான்.
அப்போதே இவ்வுலகம் வந்தவள், “ச் என்னடி பண்ணிட்டு இருக்க?” என்று சுற்றிப் பார்த்தவள், “இதெல்லாம்” என்று குழப்பமாய் அவனைப் பார்த்தாள்.
“என்னோட சேனல்ல புதுசா ஜாயின் பண்ணவங்களுக்கு, நான் எப்பவுமே ஒரு சின்ன வெல்கம் கொடுப்பேன். அதுத்தான் இதுவும். பிகாஸ், நீங்க எதையுமே அந்நியமா பீல் பண்ண கூடாது பாருங்க” என்றான்.
“என்ன?” என்று அவள் கேட்க, “நத்திங். டேக் திஸ்” என்று கையில் இருந்த பொக்கேவை நீட்டினான். அதில் அவளும் அதை வாங்கிக் கொண்டு, “தேங்க்ஸ் சார்” என்றாள்.
“சார்?” என்று கேட்டு இக் வைத்தவன், பின் அவள் பக்கம் திரும்பி, “நீங்க என்ன ஆர்யன்னே கூப்பிடலாம்” என்றான்.
அதில் அவளோ அவனை ஆழ்ந்துப் பார்க்க, “ஹேய் ஹேய். நான் உங்கள Flirt பண்ணல்லாம் ட்ரைப் பண்ணல. இங்க எல்லாரும்மே அப்படித்தான் கூப்பிடுவாங்க” என்று சிரித்துக் கொண்டே அவன் சொல்ல, அவளுமே வேகமாய், “ஐயோ! அப்படில்லாம் Think பண்ணல” என்றாள்.
“பண்ணியிருந்தாலும் பரவாயில்ல. இவ்ளோ அழகா ஒரு பொண்ணு இருந்தா, யாருனாலும் ட்ரைப் பண்ணுவாங்க இல்லையா?” என்று கேட்டான் ஆர்யன்.
அதில் அவளோ இப்போது புருவத்தை உயர்த்த, “காம்ப்ளீமெண்ட் தான் கொடுத்தேன். பிடிக்கலன்னா, நீங்க கூட என்ன பாராட்டலாம். நான் எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டேன்” என்றான்.
ஏனோ அவனுடைய பேச்சு, அவளுக்கு ஒரு வித சுவாரஸ்யத்தைக் கொடுக்க, அவனை தவறாய் நினைக்கவே முடியவில்லை. ஆனால் அவள் அறிந்திருக்கவில்லை. அந்த சிரிப்பின் பின்னால், அவன் மனதில் ஒரு பெரிய வேட்கை உள்ளது. அந்த வேட்கையை தீர்த்துக் கொள்ள, அவன் யாரை வேண்டுமானாலும் பலி கொடுப்பான் என்று.
விழி மெதுவாய் சிரிக்க, “ஓ எம் ஜி. சிரிக்கிறப்ப இன்னுமே செம்ம கியூட்டா இருக்கீங்க” என்றான். “ஹேய் ப்ளீஸ் ஸ்டாப்” என்ற விழியின் முகத்தில் ஏனோ மலர்ந்த புன்னகை.
அவள் புன்னகை முகத்தையே சில நொடிகள் பார்த்திருந்தவன், பின், “இன்னும் கூட நீங்க என்ன பத்தி எதுவும் சொல்லல” என்று ஸ்டைலாக கையை நீட்டி கேட்டான்.
அதில் நொடிக்கும் குறைவாய், அவனை மேலிருந்து கீழாய் பார்த்தவளின் விழியில் நிச்சயம் அத்தனை ரசிப்புத்தன்மை இருந்தது.
அதில் அவளையும் மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருக்க, “ஹலோ” என்று அவள் முன்னே கையை ஆட்டினான்.
அப்போதே இவ்வுலகம் வந்தவள், “இல்ல. நீங்களும்” என்று சொல்ல வாய் திறந்தாள். “இவ்ளோ போர்ஸ் பண்ணி எல்லாம் நீங்க சொல்ல வேண்டாம். இனிமே என் கூடத்தான இருக்கப் போறீங்க. சோ எப்பயாச்சும் நானும் உங்கள இம்பிரஸ் பண்ணலாம் இல்லையா? அப்போ நீங்களே சொல்லலாம்” என்றான் ஆர்யன்.
“என்ன?” என்று அவள் அவனைப் பார்க்க, “என் கூடத்தான ஒர்க் பண்ணப் போறீங்க” என்று அவன் அழுத்தி சொல்ல, “ஆ..ங்” என்றவள் அதன் பின்னே அந்த கேபினை சுற்றிப் பார்த்தாள்.
அங்கே இருந்த அத்தனையுமே அவ்வளவு அழகாய் இருந்தது. ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறான், என்பதை அவளால் உணர முடிந்தது.
“என் ரூம் எப்படி இருக்கு?” என்று அவன் கேட்க, அதிலேயே சற்று பதறியவள், “ஆ.ங் இல்ல” என்று தடுமாறினாள்.
“ஆக்சிவலி. என்னோட பெட்ரூம் இத விட சூப்பரா இருக்கும். நீங்க வேணும்னா” என்று சொல்லி முடிக்கும் முன்னே, “ஆர்யன்” என்று அழுத்தி கூறியிருந்தாள்.
ஏனோ அவள் வாயில் இருந்து வந்த ஆர்யன். அவனை என்னமோ செய்தது. அதில் அவனுடைய கண்கள் சிவக்க, அதை வெளிக்காட்டாது, “ஹேய். நான் கேசுவலாத்தான் சொன்னேன்” என்றான்.
“ம். நீங்க ரொம்ப நல்லாவே Flirt பண்றீங்க. அக்சப்ட் பண்ணிக்கிறேன்” என்று அதையும் சிறு புன்னகையுடன் தான் கூறினாள்.
ஆர்யன் பேசியதை எல்லாம் வேறு ஒருவம் பேசியிருந்தால், இன்னேரம் விழியுடைய விரல்கள், அந்த ஒருவனின் கன்னத்தில் பதிந்திருக்கும். ஆனால் ஏனோ ஆர்யன் பேசும் அனைத்தையும் அவள் சிறு புன்னகையுடனே ஏற்றுக் கொண்டாள்.
“தேங்க்யூ. இப்பையாச்சும் எனக்கு காம்ப்ளீமெண்ட் கொடுக்கனும்னு தோணுச்சே” என்று அவனும் பெருந்தன்மையாய் சொல்ல, இப்போது அவளோ இன்னுமே அழகாய் சிரித்தாள்.
அவள் சிரிப்பதையே அவன் பார்த்தப்படி நின்றிருந்தான். அவன் சிந்தைக்குள் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது. வேட்டையாடும் நோக்கமா? இல்லை அந்த புள்ளி மானை களவாடி செல்லும் எண்ணமா?
“பை தி வே. உங்க ஆபிஸ் ரொம்ப அழகா இருக்கு. இங்க ஜாயின் பண்ணதுல நான் ரொம்ப ஹாப்பி” என்றாள்.
“அழகுக்கு பின்னாடித்தான் ஆபத்தும் இருக்கும் சுடர்விழி” என்றான். “என்ன?” என்று அவள் மீண்டும் அவனைப் பார்க்க, “இல்ல. நீங்க பார்க்கப் போற ஜாப் அப்படி? ஏற்கனவே உங்களுக்கே தெரிஞ்சிருக்குமே. உங்கள கிரைம் டிபார்ட்மெண்ட்லத்தான் அப்பாயிண்ட் பண்ணியிருக்கேன். சோ உங்களோட புல் திறமைய நீங்க காமிக்கலாம். நம்பர் டூ ல இருக்கிற சேனல்ல கண்டிப்பா, நீங்க நம்பர் ஒன்க்கு கொண்டு போயிடுவீங்கன்னு நம்புறேன்” என்றான்.
“டெபினட்லி சார். கண்டிப்பா, என்னோட வேலைக்கு நான் ஜென்யூன்னா இருப்பேன். ஈவன் என்ன நம்பி. இவ்ளோ பெரிய பொசிசன் அண்ட் பிராஜக்ட் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்” என்றாள்.
“எனக்கு தேங்க்ஸ் இப்படி வேண்டாம்” என்று அவன் சொல்ல, “பின்ன?” என்று அவள் கேட்க, “சின்னதா ஹக் பண்ணிக் கூட சொல்லலாம்’ என்று அவன் தோளைக் குலுக்கினான்.
“ஆரி” என்று அவள் அழுத்தி சொல்ல, இப்போது அவனோ, “ஐயம் ஜஸ்ட் கிட்டிங் சுட்டி” என்றான்.
“சுட்டியா?” என்று அவள் கேட்க, “ஆர்யன் ஆரியா இருக்கிறப்ப, சுடர், சுட்டியா இருக்கலாம் இல்லையா?” என்றான்.
அப்போதே அவள் அவளையும் மறந்து அவனை அப்படி சொல்லியதையே உணர்ந்தாள். “ஐயோ சாரி. நான் ஏதோ தெரியாம” என்றவளுக்குமே ஏனோ பார்த்த முதல் நாளே அவனிடம் அதிக உரிமை எடுத்துக் கொண்டது போல் தோன்றியது.
“ஹேய். இட்ஸ் ஒகே. ஆக்சிவலி எனக்கு எப்பவுமே எம்பிளாயிஸ் கூட பிரண்ட்ஷிப் வச்சிக்கத்தான் பிடிக்கும். பட் என்னப் பண்றது சுட்டி? நீ மட்டும் தான். என்ன பார்த்த உடனே உன்னோட பிரண்டா அக்சப்ட் பண்ணிக்கிட்ட. மத்தவங்க ஏன்னே தெரியல. என்னப் பார்த்து பயப்படத்தான் செய்றாங்க” என்றான்.
ஆனால் உண்மையில், அவன் அந்த அலுவலகத்தில் மற்றவர்களிடம் மெலிதாய் புன்னகைத்திருப்பானா? என்று கேட்டால், நிச்சயம் இல்லை என்ற பதில் தான் வரும். அத்தனை கோவக்காரன். ஆனால் இவளிடம் ஏதோ பிளே பாய் லெவலுக்கு பேசிக் கொண்டிருந்தான்.
“ஆக்சிவலி என்னத்தான் இருந்தாலும் நீங்க எம் டி இல்லையா?” என்று அவள் கேட்க, “நீ இல்லன்னா நான் வெறும் EMPTY தான்” என்றான்.
“என்ன?” என்று இவள் மீண்டும் அவனைப் பார்க்க, “ஐ மீன். எம்பிளாயிஸ் இல்லன்னா, இந்த MD வெறும் EMPTY தான் இல்லையா?” என்று கேட்டான்.
அதில் இப்போது விழியோ மீண்டும் புன்னகைக்க, அவனோ, அவள் சிரிப்பதைத்தான் சிறு குரோதத்துடன் பார்த்தான்.
அதற்குள், “எக்ஸ் கியூஸ் மீ சார்” என்று யாரோ அழைக்க, அதில் சற்று இறுக்கமானவன், “டேக் யுவர் சீட் மிஸ்.சுடர் விழி” என்றான்.
அப்போதே அத்தனை நேரமும் இருக்கையில் அமரக் கூட செய்யாது, அவனின் அருகில் அத்தனை நெருக்கத்தில் நின்று பேசிக் கொண்டிருப்பதே அவள் மூளையில் உரைத்தது.
அதில் அவளுமே, “ச் என்னாச்சு விழி உனக்கு?” என்று தன்னைத் தானே நொந்துக் கொண்டவள், இப்போது அமைதியாய் இருக்கையில் அமர்ந்தாள்.
இப்போது ஆர்யனோ உள்ளே வந்த பெண்ணை அத்தனை கோவமாய் முறைத்தான். அதன் அர்த்தம், எதுக்காக வந்தாய்? என்பது. ஏனெனில் அவன் முன்பே சொல்லிவிட்டான். இன்னும் ஒரு மணி நேரத்துக்கு வேறு யாரையும் அவன் அறைக்கு அனுப்ப கூடாது என்று.
அந்த எரிச்சல் அவன் முகத்தில் தெரிய, வந்தப் பெண்ணோ, “சார். உங்கள பாக்க” என்று திக்கி திணறி சொல்ல வந்தாள்.
அதில் அவனோ, “அவங்கள, மேல என் ரூம்ல வெயிட் பண்ண சொல்லுங்க” என்று அழுத்தி சொல்ல, “சார் ஆனா” என்று சொல்ல முயற்சித்தாள்.
“நான் சொன்னத செய்ங்க” என்று அவன் அவளைப் பார்த்தப்படியே சொல்ல, அவளும், “சரி சார்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றாள்.
“ஹேமா ஒன் செகண்ட்” என்று அவன் அழைக்க, அதில் அவளும் திரும்பி, “எஸ் சார்” என்றாள்.
“இவங்க சுடர் விழி. நம்ம ஆபிஸ்ல கிரைம் பிராஞ்ல நியூவா ஜாயின் ஆகியிருக்காங்க. இவங்களுக்கு நம்ம ஆபிஸ சுத்தி காமிங்க. நெக்ஸ்ட், உங்களோட ஒர்க்க கூட, அவங்களுக்கு நீங்க ட்ரெயின் பண்ணிடுங்க” என்றான்.
“சார்” என்று ஹேமா சற்று அதிர்ச்சியாய் கேட்க, அவனோ, “உங்களுக்கு ப்ரோமோசன் வரப் போகுது இல்லையா?” என்று அழுத்திக் கேட்டான்.
ஏனோ அவன் சாதாரணமக பேசினாலே, ஹேமாக்கு பயம் தான். இப்போது அவன் வார்த்தையில் இருந்த ஏதோ ஒன்று, உண்மையிலேயே அவளை பயமுறுத்தியது.
ஆனால் விழிக்கோ அப்படி எதுவுமே தெரியவில்லைப் போலும். “இவ்ளோ கூலான எம் டிய பார்த்து கூடவா இப்படி பயப்படுவாங்க” என்று எண்ணிக் கொண்டாள்.
“ஒகே சார். சுயர் சார்” என்று அவள் சொல்ல, இப்போது சுடர் விழியின் பக்கம் திரும்பியவனோ, “நீங்க ஹேமா கூட போங்க. அவங்க கைட் பண்ணுவாங்க. அதத் தாண்டி” என்று சொல்ல வந்தவன் ஒரு நொடி மீண்டும் ஹேமாவைப் பார்த்தான்.
அதில் அவளோ, அடுத்த நொடி அங்கிருந்து வெளியில் சென்று விட, இப்போது விழியைப் பார்த்தவன், “எப்போ வேனும்னாலும், என்ன வேணும்னாலும் நீ என்ன பிங் பண்ணலாம். ஐயம் ஆல்வேய்ஸ் தேர் பார் யூ” என்றான்.
“தேங்க்யூ சார்” என்று சொல்லிவிட்டு அவள் எழ, அவனோ, “சுட்டி” என்றழைத்தான். அதில் அவள் அவனைப் பார்க்க, அவனோ, தன் கையை நீட்டினான்.
அவள் இப்போது குழப்பமாய் அவனைப் பார்க்க, “ஒரு ஆல் தி பெஸ்ட் சொல்லக் கூடாதா?” என்றான்.
அதில் சிரித்தவளோ, அவனுடன் தன் கையை சேர்த்தாள். அந்த நொடி, இருவரின் உடலிலுமே ஒரு வித மின்சார தாக்கம். என்ன உணர்வு இது? என்று விழி தனக்குள்ளே யோசிக்க, அங்கே அவனின் மனதிலோ மிகப்பெரிய இரைச்சல். அதில் வேண்டுமென்றே சில நொடிகள், அவள் கரத்தை விலக்காது, சற்று விரலால் அழுத்தி தீண்டினான்.
ஆனால் அவளுடைய மனக்குழப்பத்தில் அவள் இருக்க, அதை அவள் உணர்ந்திருக்கவில்லை.
அதே நேரம் அங்கே கவியோ, “ச் எங்க கூட்டிட்டு போறீங்க?” என்று விடாது கேட்டாள்.
(இவன் எங்க கூட்டிட்டு போறான்? இந்த ஆர்யன் என்னப் பண்ணப் போறான்? இப்படி எல்லாத்தையுமே அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். சரி அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தித்திக்குமா?..
Samrin Shamil
sis pls aryan ku tough role kudungha..He seems interesting..Sudar Vendhan vs Aryan semma tough aa irukuramaari
Anbu Anbu
super