தேன் – 59

விழி அன்றுத்தான், தன்னுடைய புது அலுவலகத்துக்கு கிளம்பியிருந்தாள். அதைப் பார்த்த கவியோ, அவளுக்கு ஆயிரம் பத்திரம், ஆயிரம் அறிவுரை சொல்லியிருக்க, “ஹே நான் எல் கே ஜி க்கா போறேன்” என்று சொன்னாலும் கூட, அவள் ஊட்டிய உணவை வாங்கிக் கொண்டிருந்தாள்.

இப்போது கீழிறங்கி வந்த வேந்தனின் பார்வையோ, தங்கை மற்றும் மனைவியின் நெருக்கத்தைப் பார்த்து அழகாய் புன்னகைத்தான். ஏனோ இதற்காக, என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றியது.

“என்னடா? பர்ஸ்ட் டே ஆபிஸ் போறோம்னு எதுவும் டென்சனா?” என்று கேட்டப்படி வேந்தனும் விழியின் அருகில் வந்தமர்ந்தான்.

“டென்சன் தான் அண்ணா. ஆனா எனக்கு இல்ல. அண்ணிக்குத்தான் டென்சன்” என்று கிண்டலாய் விழி சொல்ல, கவியோ அவளை முறைத்தாள்.

அதைப் பார்த்த வேந்தனோ, “இந்த வேந்தன் தங்கச்சிக்கிட்ட வம்பு பன்றதுக்கு புதுசா ஒருத்தன் பொறந்து வரனும்” என்றான்.

அதில் இப்போது தன் கணவனுக்கு ஒரு தட்டு எடுத்து வைத்து பரிமாறியவளோ, “ஆனா, உங்க தங்கச்சி, வம்பு வளர்க்காத ஆளே கிடையாது” என்று தோழிக்கும், கணவனுக்கு சேர்த்தே கொட்டு வைத்தாள்.

அதில் இப்போது விழியோ, “கவி” என்று முறைக்க, வேந்தனோ தன் தங்கையைப் பார்த்தான்.

“ஐயோ அண்ணா! நானா போயிலாம் வம்பு பண்ணவே மாட்டேன். ஆனா அவனுங்களா வந்தா, அப்புறம் நான் யாருன்னு காமிக்க வேண்டாமா?” என்று கேட்டாள் விழி.

அதில் மெல்ல சிரித்தவனோ, “நீ சொன்னா சரியாத்தாண்டா இருக்கும்” என்றவன் தங்கைக்கும் ஒரு வாய் ஊட்டி விட்டு அவன் சாப்பிட ஆரம்பித்தான்.

“ம் நீங்க ஒருத்தர் போதும். அவ எல்லாம் வம்பையும் வாங்கிட்டு வர்றதுக்கு” என்று கவியும் பதில் சொல்ல வாய் திறக்க, இப்போது அவள் கையைப் பிடித்து தன் அருகில் அமர்த்திக் கொண்டவன், அவளுக்கும் ஒரு வாய் ஊட்டினான்.

அதில் கவியின் கவனம் தவற, இப்போது விழியோ, அமைதியாய், அவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்காது அங்கிருந்து எழுந்து சென்றாள்.

இப்போது அவனோ மனைவியை காதலைப் பார்க்க, விழி சென்றதைக் கூட அறியாத கவியோ, “ச் உங்க தங்கச்சிய பக்கத்துல வச்சிட்டு என்ன” என்று சொல்லி முடிக்கும் முன்னே, “அவ எங்க இருக்கா?” என்றான்.

அதன் பின்னே கவி சுற்றிப் பார்க்க, அவளோ எப்போதோ தன்னுடைய ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தாள்.

“ச் என்ன சுடர்? இப்போ பாருங்க. அவ பாதி சாப்பாட்டுலையே போயிட்டா” என்று கணவரை முறைத்தாள். அதில் சிரித்தவனோ, இப்போது அவள் கையில் இருந்த உணவை வாங்கிக் கொண்டவன், “எனக்கு ஊட்டுனா கூட, குட்டிமா சாப்ட மாதிரித்தான்” என்றான்.

அவனின் பேச்சில் முறைக்க முயன்று, பின் சிரித்தவளோ, “நல்ல தங்கச்சி. நல்ல அண்ணன்” என்று சொல்லியப்படி அங்கிருந்து எழுந்தாள்.

எழுந்தவளின் இடையோரம் கைக்கொடுத்து அவன் இழுத்து அமர வைத்திருக்க, “ச் சுடர். என்னப் பண்றீங்க? நடு ஹால்ல இருக்கோம்” என்று நினைவுப்படுத்தினாள்.

“நான் என்னப் பண்றேன்” என்றவன் இப்போது ஒவ்வொரு வாயாய் எடுத்து அவளுக்கு ஊட்டினான். அதில் கவியின் கண்கள் சற்று கலங்க முயற்சிக்க, இருந்தும் அதை உள்ளிழுத்து, “நீங்க சாப்பிடுங்க” என்றாள்.

“சாப்டா போச்சு” என்றவன், இப்போது அவள் செவ்விதழ் நோக்கி நெருங்க, “ச் சுடர்” என்று அவன் நெஞ்சில் கை வைத்து தடுத்தாள்.

“இல்ல, உதட்டுல ஏதோ ஒட்டிருந்திச்சு. துடைக்கலாம்னு வந்தேன்” என்று அவன் சொல்ல, “ம் எனக்கும் கை இருக்கு. நானே துடைச்சிப்பேன்” என்றவள் புறங்கையால் துடைத்தாள்.

“உனக்குத்தான் எதையும் வாயில சொல்லனும் தான? அதான்” என்று அவன் சொல்ல, “ஐயோ! நான் ஒன்னும் அந்த அர்த்தத்துல சொல்லல” என்றாள்.

“எனக்கு தெரிஞ்சது ஒரே அர்த்தம் தான்” என்றவனும் விடுவதாய் இல்லை. அதில் அவன் தொடையில் நறுக்கென்று கிள்ளி வைத்தவள், “எம்.எல்.ஏ மாதிரி நடந்துக்கோங்க” என்றாள்.

அதற்கும் அவன் ஏதோ சொல்லப் போக, அதற்குள் அருளிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்திருந்தது.

அதில் நெற்றியை நீவியவன், “முதல்ல இவன்ன வேலைய விட்டு அனுப்பனும்” என்று சொல்ல, “ஐயோ பாவம் அண்ணா” என்று கவி சொல்ல, “யாரு அவன் பாவமா?” என்று வேந்தன் கேட்க, “ச் முதல்ல எடுத்து பேசுங்க” என்றவள், இப்போது அங்கிருந்து எழுந்தாள்.

“நீ இன்னிக்கு ஆபிஸ் வர்றத்தான?” என்று வேந்தன் கேட்க, “ம் வரனுமா?” என்றாள் கவி.

அவளுடைய கேள்வியில் இப்போது வேந்தன் முறைக்க, அவளோ, “சரி வரேன்” என்றாள்.

ஆனால் அவளுடைய யோசனை எதிலோ இருப்பது போல் தோன்ற, “என்ன? என் பொண்டாட்டிக்கும் என் ஆபிஸ்ல வேல பாக்க பிடிக்கலையா?” என்று கிண்டலாய் கேட்டான்.

“ஆமா” என்று கவி பட்டென்று சொல்ல, இப்போது வேந்தனோ, “பரவாயில்ல பழகிக்கோ” என்றான்.

அதில் இப்போது அவனை முறைத்தவளோ, “அப்புறம் எதுக்கு நீங்களும், உங்க தங்கச்சியும் என்கிட்ட கேள்வி கேட்குறீங்க? எப்படியும் நீங்க நினைக்கிறதத்தான பண்ணப் போறீங்க?” என்றாள்.

“அது நீ என்ன நினைக்கிறன்னு, நாங்க தெரிஞ்சிக்கிடுறதுக்காக” என்று சொல்லியவன், மொபைலுடன் வெளியில் செல்ல, இப்போது கவியோ மீண்டும் நேற்று கட்சி அலுவலகத்தில் நடந்ததை நினைத்தாள்.

“ஆமா சாரு ரூமுக்குள்ளையே இருக்கே அந்தப் பொண்ணு. அது எம் எல் ஏ க்கு தெரிஞ்ச பொண்ணா?” என்று ஒருவன் கேட்டிருக்க, “அப்படித்தான் போல” என்றான் இன்னொருவன்.

அதற்குள், “பாத்தா தெரிஞ்ச பொண்ணு மாதிரி மட்டும் தெரியலையே. என்னமோ அந்தப் பொண்னுக்காண்டி, ஏசி எல்லாம் வாங்கி மாட்டியிருக்காங்களாம்” என்று இன்னொருவர் பொறுமினார்.

அதற்குள் அங்கிருந்த ஒருவளோ, “நம்மளே இங்க காண்ட்ரக்ட்க்கு வேல பாத்துட்டு இருக்கோம். கொடுக்கிறத வாங்கிட்டு நம்ம வேலைய பாப்போம். அத விட்டுட்டு பெரிய இடத்து விவகாரம் எல்லாம் நமக்கு தேவையா?” என்றாள்.

“நம்ம எம் எல் ஏ சாரும் பொண்னுங்க விஷயத்துல” என்று இன்னொருவன் ஆரம்பிக்கும் முன்னே, “எம் எல் ஏ சார் வர்றாரு” என்ற குரல் கேட்க அமைதியாய் அனைவரும் அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்தனர்.

இங்கே எதார்த்தமாய், ஜெராக்ஸ் எடுக்க வந்தவளின் காதில் இது விழுந்திருக்க, அவளுக்கோ அத்தனை ஆதங்கம். அவள் தான் அவள் யார் என்று தெரியப்படுத்த வேண்டாம் என்று கூறியிருந்தாள். அதனால் அவர்கள் அவளை மட்டும் தப்பாய் பேசியிருந்தாள் பரவாயில்லை. அவனையும் சேர்த்துப் பேசியிருக்க, அவளுக்கோ அங்கு செல்ல விருப்பமில்லை.

அவளும், நடந்த விஷயத்தை சொல்லாது, வேலைக்கு வரவில்லை என்று சொல்லிப் பார்க்க, வேந்தனோ விடுவதாய் இல்லை.

அதனால் பொறுமிக் கொண்டேத்தான் வீட்டை விட்டு வெளியில் வந்தாள். வந்தவளின் முன்னே காரை வந்து நிறுத்தினான் வேந்தன். அதில் ஒரு நொடி அந்த பி எம் டபிள்யூ காரையும். அவனையும் பார்த்தாள்.

வழக்கமாய் வெள்ளை வேஷ்டி சட்டையில் உலா வருபவன், இன்று பார்மல் ஷர்ட் அண்ட் பேண்ட் அணிந்திருந்தான். அவளுக்கும் கூட அவனை இப்படி பார்க்கத்தான் பிடிக்கும். அதில் நொடிக்கும் குறைவாய் அவள் அப்படியே நிற்க, “என்ன மேடம்? நான் தூக்கிட்டு வந்து உட்கார வைக்கனுமா?” என்று கிண்டலாய் கேட்டான்.

அப்போதே இவ்வுலகம் வந்தவள், “உங்கலோட பிளாக் பேபிய காணும்” என்று அவன் தார் காரை தேடினாள்.

“பேபிய சர்வீஸுக்கு விட்டிருக்கேன். நீ வா” என்று அவன் கார் கதவைத் திறந்து விட, இப்போது அவளோ, “நான் ஆட்டோல வரட்டுமா?” என்றாள்.

விழியுடன் சேர்ந்து பைக்கில் போவதற்கே அவர்கள் எல்லாம் கண் காது வைத்து பேசினார்கள். அப்படி இருக்க, இவனுடன் சென்றால்? என்ற கேள்வித்தான் அவளுக்குள் ஓடியது.

ஆனால் வேந்தனோ, “இப்போ நீ ஏறப் போறீயா? இல்லையா?” என்றான். அவனின் குரலில் அவளோ வேறு வழியின்றி பின்னே செல்லப் போக, “முன்னாடி ஏற சொன்னேன் கவி” என்றான்.

“ச் நம்ம எதுக்கு சொல்றோம்னே புரிஞ்சிக்க மாட்டாங்க” என்றவள் தன் தோழியையும் சேர்த்தேத்தான் திட்டினாள். அவள் முணங்குவது அவன் காதில் விழுந்தாலும், அதை சற்றும் கண்டுக் கொள்ளாது, அவள் பக்கம் திரும்பி, “சீட் பெல்ட் போடனும்னு சொன்னாலும் கேட்கிறது இல்ல” என்றான்.

“நான் சொல்ற எதையாச்சும் நீங்க கேட்குறீங்களா?” என்று அவள் அவன் பக்கம் திரும்பி கேட்க, இப்போது அவனோ அவள் பக்கம் நெருங்கி சீட் பெல்டை எடுத்து அவனே அவனுக்கு போட்டு விட ஆரம்பித்தான்.

அவனின் நெருக்கத்தில் வழக்கம் போல், அவளுடைய தொண்டைக்குழி ஏறி இறங்க, அவனோ வேண்டுமென்றே, அவள் இடையில் விரல் உரச, சீட் பெல்டை மாட்டிவிட்டான்.

அவனின் தொடுகையில், “சுடர்” என்று அவள் நெளிய, “என்னாச்சு?” என்று எதுவுமே தெரியாதவன் போல் கேட்டாள்.

அதில் அவளோ அவனை முறைக்க, இப்போது அவனோ கரத்தை அவள் கழுத்தின் கீழ் கொண்டு செல்ல, “ச் சுடர்” என்று வேகமாய் அவன் கையைப் பிடித்து தடுத்தாள்.

அவனோ, “பெல்ட் திரும்பியிருக்கு. அத சரிப் பண்ணலாம்னுத்தான் வந்தேன்” என்று அவன் சீண்டலாய் சொல்ல, “ம் எனக்கு கை இருக்கு. நானே பண்ணிக்கிறேன்” என்று இப்போது அவளே அதை சரி செய்தாள்.

“கையாலையும் சொல்லக் கூடாது. வாயாலையும் சொல்லக் கூடாதுன்னா, ஒரு எம் எல் ஏ வேற எப்படி சொல்வான்” என்று அவன் மேலும் சீண்ட. “ச் இப்போ நான் கார்ல இருக்கட்டுமா? இல்ல இறங்கட்டுமா?” என்று கேட்டாள்.

“சரி சரி” என்றவன் காரை ஸ்டார்ட் செய்தான். அவளின் எண்னம் எல்லாம் அந்த அலுவலகத்தில் இருப்பவர்களைப் பற்றியே இருக்க, அவனுடைய கார், கட்சி அலுவலகம் செல்லாது வேறு பக்கம் செல்வதை அவள் கவனிக்கவே இல்லை.

நீண்ட நேரங்களுக்குப் பின்னே இவ்வுலகம் வந்தவள், “இவ்ளோ நேரமா ஆபிஸ் வரல” என்று நிமிர்ந்துப் பார்த்தாள். கார் எங்கோ சிட்டியை தாண்டி சென்றுக் கொண்டிருக்க, “எங்கப் போறீங்க?” என்றாள்.

“உன்ன கடத்திட்டு போறேன்” என்று அவன் சிரித்துக் கொண்டே சொல்ல, “ச் சுடர்” என்றாள் கவி.

அதே நேரம் அங்கே விழியோ, அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டருடன் எம்டியின் அறைக்குள் நுழைய, “டொப்” என்ற சத்தத்துடன், அவள் மேலே பூ மழை கொட்ட ஆரம்பித்தது. ஒரு நொடி அதிர்ந்து, அடுத்த நொடி அவள் மேல் பொழிந்த அந்த மலர் இதழ்களை அன்னார்ந்துப் பார்த்தாள் விழி.

(ப்பா ஆர்யனோட வரவேற்பு ரொம்ப பலமா இருக்கே. சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம்.  சரி அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   0

*** தேன் – 59 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***