தேன் – 58

பெரிதாய் ஆள் நடமாட்டம் இல்லாத, அந்த கடற்கரையில், அந்த கடலை விட பெரும் ஆர்ப்பரிப்போடு, வேந்தனின் இதயம் தாறுமாறாய் துடித்தது. அதற்கு முழு முதல் காரணம் அவனின் மனைவி. அவளுடைய அமைதி, இங்கே இவனை நிலை இல்லாது தடுமாற வைக்க, அந்த அமைதியை முடிக்க நினைத்து அவன் உதட்டைப் பிரிக்க, இப்போது அவன் இதழுக்குள், அவளின் இதழ்.

ஒரு நொடி அவனுக்கு புரியவே இல்லை. அவளோ இமையைத் திறக்காது, அவன் இதழுக்குள் மூழ்கினாள். இவனுக்குத்தான் அத்தனை குழப்பம். ஏனெனில், நடந்த விஷயத்துக்கு, நிச்சயம் அவளிடம் வேறு மாதிரியான எதிர்வினையைத்தான் அவன் எதிர்பார்த்திருந்தான்.

முழுதாய் அரை நிமிடம் கடந்த அந்த முத்தத்தை, மிக மெதுவாய், நிதானமாய் முடிவுக்கு கொண்டு வந்தாள் கவி. அவள் இதழ்கள், கொஞ்சம் கொஞ்சமாய் அவன் இதழை விட்டு விலக, இப்போது மீண்டும் வேந்தனுடைய இதயம் தாறுமாறாய் துடிக்க ஆரம்பித்தது.

அவளோ அவனையே பார்த்தாள். அவனும் கூட அவள் விழியில் இருக்கும் செய்தி என்ன என்று படிக்க முயற்சித்தான். மீண்டும் சில கணங்கள் அங்கே அமைதி.

அதில் இப்போது வேந்தன், கஷ்டப்பட்டு இதழ் பிரித்து பேச நினைக்கும் முன்னே, “இனிமே உங்க வாயில இருந்து கூட சில பேர் வரக் கூடாது” என்று அழுத்தம் திருத்தமாய் கூறினாள்.

அதில் அவன் அதிர்ச்சியாய் அவளைப் பார்க்க, இப்போது அவன் கன்னத்தில் கரம் பதித்து, “புரியுதா சார்?” என்று கேட்டு புருவம் உயர்த்தினாள்.

“கவி. நான்” என்றவனுக்கு வார்த்தைகள் வர மறுக்க, “சுடர் கவிக்குத்தான். கவிக்கு மட்டும் தான்” என்று அவன் நெஞ்சில் கை வைத்து, அழுத்தம் திருத்தமாய் கூறினாள்.

நிச்சயம் அதைக் கேட்டு, அவனுடைய உள்ளம் அத்தனை சந்தோஷப்பட்டது. வர்ஷினியை வைத்து மீண்டும் தங்களுக்குள் எதுவும் குழப்பம் வந்துவிடுமோ? என்று அவன் பயந்திருக்க, அவனின் பயம் அவசியமற்றது என்பது போல், அவனின் மனைவி பேசியிருந்தாள்.

அதில் அவன் அவளையே பார்க்க, “உங்களுக்கு எப்படி என்னோட பாஸ்ட் பத்தி கவல இல்லையோ? அதே மாதிரி எனக்கும் கிடையாது. ஆனா!” என்று அவள் சொல்லி நிறுத்தினாள்.

அவளுடைய அந்த ‘ஆனா-வில்’ அவன் அவளைப் பார்க்க, “உங்க அளவுக்குலாம் எனக்கு பெருந்தன்மை கிடையாது. பாஸ்ட் பாஸ்டா மட்டும் தான் இருக்கனும். அகைன் வந்தா” என்று சொல்லி முடிக்கும் முன்னே, “கவி. அது என்னோட பாஸ்ட்லாம்” என்று அவன் ஏதோ சொல்ல வந்தான்.

அவன் வாயை தன் கரத்தால் மூடியவள், “என்னோட பாஸ்ட் உங்களுக்கு தேவ இல்லன்னு சொன்னீங்கத்தான? அப்போ எனக்கும் நீங்க எந்த விளக்கமும் கொடுக்க வேண்டாம்” என்றாள்.

“ஆனா” என்றவன், ஏனோ இந்த விஷயத்தில் அவள் வேறு எதுவும் தவறாய் யோசிக்க கூடாது என்று நினைத்தான். அதனால் இப்போதே அதை சொல்லி தெளிவுப்படுத்திவிடலாம் என்று சிந்தித்தான்.

ஆனால் அதற்கு அவனின் மனைவி சம்மதிக்க வேண்டுமே. “நீங்க கொடுத்தத நான் கொடுத்து முடிச்சிட்டேன். சோ இதுக்கப்புறம் எந்த கணக்கும் கிடையாது” என்றாள்.

அவளுடைய சம்பந்தமில்லாத பேச்சில் எதுவும் புரியாது, “என்ன?” என்று கேட்டான் வேந்தன்.

அதில் அவனையே பார்த்தவள், “எம் எல் ஏ சாருக்கு, ஒரு முத்தத்துலையே கணக்கு மறந்துப் போயிருச்சா?” என்று சீண்டலாய் கேட்டாள்.

அப்போதே அவள் சொல்ல வருவது புரிய, அவன் முகத்தில் அத்தனை நிம்மதி. “கவி” என்றவன் மீண்டும் அவளை நெருங்க, அவன் சட்டையில் கையை வைத்து அவனைத் தடுத்தவள், “பொது இடத்துல, கொஞ்சம் நாகரீகமா நடந்துக்கோங்க எம் எல் ஏ சார். அப்புறம், யாராச்சும் பாத்துட்டு போயி ஏதாச்சும் சொல்லிட போறாங்க” என்று மேலும் சீண்டினாள்.

அவளுடைய சீண்டலில், இப்போது அவளை சட்டென்று இழுத்துப் பிடித்தவனோ, “எவென் சொன்னா எனக்கென்ன? என் பொண்டாட்டிக்கிட்ட எப்படி நடந்துக்கனும்னு எனக்கு தெரியும்” என்றவனின் பிடி அத்தனை இறுகியது.

அவள் முத்தமிட்ட போது கூட தோன்றாத நடுக்கம். இப்போது அவன் பிடியில் உருவாக, ஏனோ, அவள் கண்களில் ஒரு வித தவிப்பு வந்து ஒட்டிக் கொண்டது.

இருவருக்கும் இடையில் நூலிடை இடைவெளி மட்டுமே இருக்க, அந்த கடற்கரை காற்று அதையும் குறைக்க முயற்சித்தது. ஆனால் அவள் கண்ணில் தெரிந்த அந்த தவிப்பு, வேந்தனுடைய நிதானத்தை மீண்டும் கொண்டு வர, மெதுவாய் அவளை விலக்கினான்.

அவன் விலகியப் பின்னே இவளால் மூச்சு விட முடிந்தது. மீண்டும் சில நொடிகள் அப்படியே கழிய, இப்போது வேந்தனோ, “கவி! ஆனாலும் நமக்குள்ள” என்று ஆரம்பித்தான்.

“நமக்குள்ள எல்லாத்தையும் ஒவ்வொன்னா சொல்லி, விளக்கித்தான், புரிஞ்சிக்கனும்னு எதுவும் இல்ல சார். எனக்கு என் சுடர தெரியும். இப்போ அவரோட ஒயிப் இந்த கவி மட்டும்த்தான்” என்றாள்.

“பட் நீ வேணும்னே என்ன பேச விட மாட்ற கவி” என்று குறைப்பட்டான். அதில் இப்போது கவியோ, “ப்ளீஸ் சுடர். நீங்க என்ன சொன்னாலும், அது என்ன பயப்பட வைக்கும்” என்று மனதில் இருந்ததை கூறினாள்.

அவள் கண்ணில் அப்பட்டமான ஒரு பயம். அது இந்த விதி, அவனை விட்டு அவளை மீண்டும் எங்கோவாது தூக்கி வீசி விடுமோ என்ற பதட்டம்.

அவள் பயத்தைப் பார்த்தவனோ, அவள் கன்னத்தில் கரம் பதித்து, “என் கவிய நான் பயப்பட வைப்பேன்னா?” என்றான்.

அதில் மீண்டும் அவன் தோளில் சாய்ந்துக் கொண்டவள், “உங்க கண்ணுல நான் அந்த விருப்பத்த பார்த்திருக்கேன் சுடர். அத உங்க வாயால எனக்கு கேட்க வேண்டாம்” என்றாள்.

ஏனோ அதை சொல்லும் போதே அவளுக்கு அத்தனை வலித்தது. இது என்ன மாதிரியான உணர்வு? அவனை வேண்டவே வேண்டாம் என்று கூறியவள் தான். இப்போது ஏனோ, அவனுடைய கடந்த காலத்தில் யாரோ ஒரு பெண் இருப்பது கூட அவளுக்கு பிடிக்கவில்லை. அதைப் பற்றி மேற்கொண்டு பேசவும் அவள் விருப்பப்படவில்லை.

ஆனால் அவளுக்கு ஒன்று புரியவில்லை. அவன் கண்ணில், அன்று அவள் பார்த்தது, அந்த வர்ஷினியின் மீதுள்ள விருப்பமா? இல்லை. அந்த வர்ஷினியின் பின்னே விழியுடன் பேசிக் கொண்டிருந்த அந்த கவியைப் பார்த்த அந்த வேந்தனின் விழிகள் காட்டிய நேசமா?

அதற்கு பதில் சொல்ல வேண்டியவன் வேந்தன் தான். ஆனால் அவனை பேசவிடாது அவள் கட்டிப் போட்டிருக்க, இப்போது ஏனோ அவளுடைய இந்த மன நிலையை அவன் இன்னமும் மோசமாக்கிக் கொள்ள நினைக்கவில்லை.

அதில் அவளை இன்னுமே இறுக்கமாய் அணைத்துக் கொண்டவன், “என் கவி மேல எனக்கு இருக்கிற காதல்ல விட, அந்த விருப்பம் பெருசா?” என்றான்.

அவளுக்கு பதில் தெரியவில்லை. ஆனாலும் ஏனோ அவனுடைய மனதில் வேறு யாரும் சிறு சலனத்தைக் கூட ஏற்படுத்தக் கூடாது என்று மனம் பேராசைக் கொண்டது.

அதே நேரம் அவளுடைய மனசாட்சியோ, “இப்படி யோசிக்கிறதுக்கு முதல்ல உனக்கென்ன தகுதி இருக்கு? அவர் மனசுல கூட யாரும் இருக்க கூடாதுன்னு நினைக்கிற. அப்போ அதையே சுடரும் நினைச்சா?” என்ற கேள்வி வர அவளோ பட்டென்று சுடரை விட்டு விலகினாள்.

அவள் விலகவும், இப்போது வேந்தனோ, “என்னாச்சுடா?” என்றான். “ம்ஹூம். போலாம்” என்றவள் பட்டென்று மடியில் இருந்த மணலை உதறியப்படி அங்கிருந்து எழுந்தாள்.

அதில், இப்போது அவள் உதறிய மண் துகள்கள் வேந்தனின் கண்ணில் சிதறிவிட, “ஸ்” என்று கண்ணைக் கசக்கினான்.

அப்போதே இவ்வுலகம் வந்தவள், “அச்சோ சுடர்” என்று வேகமாய் அவன் முகத்தை தன் கரத்தில் தாங்கினாள். “ஒன்னும் இல்ல கவி. விடு” என்றான்.

“ஐயோ சாரி சாரி சுடர். அது நான் ஏதோ யோசனையில” என்றவள், இப்போது கலங்கியிருந்த அவன் கண்ணைப் பார்த்தாள்.

ஏனோ அவன் கண்ணை விட, இவளுடைய கண்கள் தான் அதிகமாய் கலங்கியது. அதில் அவனோ ஒரு கரத்தால், தன் கண்ணை கசக்கியவன், மறு கரத்தால், “ஒன்னும் இல்லடா” என்று அவள் கரத்தை விலக்க முயற்சித்தான்.

“ஐயோ இப்படி கசக்காதீங்க” என்று அவன் கரத்தை பிடித்து தடுத்து, மெல்ல அவன் இமையைப் பிரித்து, உதடு குவித்து ஊதினாள்.

அந்த நொடி, அந்தக் கணம் அவனுக்கு அத்தனைப் பிடித்திருந்தது. கண்ணில் விழுந்த மண் துகள் உறுத்தினாலும் கூட, அதை பொருட்படுத்தாது அவளையே பார்த்தான்.

அவளோ, “ப்.. பூ.. ப்பூ” என்று மெதுவாய் ஊதி அதை வெளியேற்ற முயற்சிக்க, இப்போது அவனின் கண்களுக்கு அவளுடைய செவ்விதழ் மட்டுமே தெரிய, பட்டென்று அவள் இதழை இப்போது அவன் தீண்டியிருந்தான்.

அதில் அவள் கண்கள் அதிர்ந்து விரிய. அவனோ கண்ணை இறுக்க மூடி, அவள் முடித்து வைத்த கணக்கை இவன் மீண்டும் திறந்து வைத்தான்.

முழுதாய் நிமிடத்தை தொட்டு, அவள் மூச்சுக்காக ஏங்கும் நொடித்தான், மெல்ல அவளை விட்டு விலகினான். அப்போதும் கூட அவன் கண்ணை மெல்ல கசக்க, இவளோ வேக வேகமாய் மூச்சு வாங்கினாள்.

திட்டுவதற்காக வந்தவள், பின் மீண்டும் அவன் கண்ணைக் கசக்கப் பார்க்க, மீண்டும் அவன் கரத்தைப் பிடித்து தடுத்தவள், இப்போது, மீண்டும் அவன் விழியை தன் விரலால் திறந்து, அவனையே பார்த்தாள்.

“கொஞ்சம் காரமா சாப்டேன். அதனால எரிச்சல் இருக்கத்தான் செய்யும். ஆனாலும். இப்போ வேற வழி தெரியல” என்றாள்.

ஏனோ அவளுடைய வார்த்தையில், இப்போது அவன் தொண்டைக்குழிக்குள் அமிலம் சுரக்க, கொஞ்சம் கொஞ்சமாய் அவன் முகத்தை நோக்கி நெருங்கினாள்.

நொடியில் அவன் மனதிற்குள் ஆயிரம் கற்பனை ஓடியிருக்க, அவளோ அது எல்லாத்துக்கும் ஆப்பு வைப்பது போல், தன்னுடைய சேலை முந்தானையை சுருட்டி, அதில் காற்றை ஊதி, அவன் கண்ணில் வைத்தாள்.

அந்த சூட்டின் இதம் அவன் எரிச்சலைக் குறைத்தாலும், பேராசைக் கொண்ட மனமோ அவள் வேறு வழியில், அந்த தூசியை வெளியேற்றியிருக்கலாம் என்று அலுத்துக் கொண்டது.

அடுத்த சில நொடிகளில், அவன் கண்ணில் இருந்த தூசி எங்கோ சென்றிருக்க, இப்போது, மெல்ல அவனை விட்டு விலகினாள்.

அவனோ இப்போது அவள் சேலை முந்தானையை விடாதுப் பிடிக்க, “சுடர்” என்று முறைத்தாள். “இல்ல கசங்கியிருச்சுல்ல. அதான்” என்று அவனே அவன் விரலால் அதை சரி செய்ய, இப்போது அவளுக்கு சிரிப்பு வந்தது.

அவள் சிரிப்பதையே சில நொடிகள் பார்த்தவன் பின், “இப்படி நீ சிரிச்சிட்டே இருக்கனும். அதுக்காக நான்” என்று சொல்லி முடிக்கும் முன்னே, “அதுக்கு நீங்க என் கூட இருக்கனும்” என்று அந்த வார்த்தையை முடித்து வைத்தாள் கவி.

இப்போது அவளுடைய வார்த்தையில், இவனுடைய முகம் மீண்டும் மலர்ந்தது. அதுவே அவர்களுடைய வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வுக்கு முதல் படியாய் இருந்தது.

அவர்களை இன்னுமே அதிகம் நெருங்க வைப்பது போல், அடுத்த ஒரு வாரத்தில், வேந்தனுடைய கட்சி ஆபிசில் அந்த நிகழ்வு நடந்தது.

(அப்படி என்ன நடந்திருக்கும்? சரி அது என்னென்னு அடுத்த எபிசோட்ல பாக்கலாம். சரி அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   2

*** தேன் – 58 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***