வேந்தனும், கவியும் ஒரு வழியாய் சமாதானம் ஆகி, கீழே வந்தனர். கவிக்குமே ஏனோ முன்பு போல் எல்லாவற்றையும் மனதில் வைத்துக் கொள்ளாமல், வேந்தனுடன் பகிர்ந்துக் கொண்டதே ஒரு வித நிம்மதியைக் கொடுத்தது.
எல்லாம் மாறிவிடுமா? என்ற கேள்விக்கான பதில் அவளிடமே இல்லை. ஆனால். வேந்தன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை இருந்தது. அதில் சற்று சாதாரணமாகவே இருந்தாள். ஆனால் வேந்தன் வெளியில் சாதாரணமாய் தெரிந்தாலும், கவியுடைய ஒவ்வொரு வார்த்தையும், வலியும் அவனை வேரோடு அசைத்துத்தான் பார்த்தது.
அவள் நம்புகிறாள். அவனால் அவளை மாற்றி விட முடியும் என்று. ஆனால், இவனுக்குத்தான் அதை எப்படி செய்ய என்று தெரியாது தடுமாறினான்.
மீண்டும், மீண்டும் அவள், தன்னை விட்டு விலகி செல்ல காரணமாய் இருந்தவர்களை எல்லாம் தேடி கொல்லும் வேகம் எழுந்தது. அன்று அவன் அவளை விட்டு விட்டு சென்றிருக்க கூடாதோ? அவளே விலகி சென்றிருந்தாலும், இவன் அவளை இழுத்துப் பிடித்திருக்க வேண்டுமோ? இப்படி ஏதேதோ சிந்தனைகள். ஆனால் அது எதுவும், நடந்ததை மாற்ற உதவாதே.
அப்படியான குழப்பத்தில் இருக்கும் போதே, “அம்மா தாயே!. நானே அந்த சட்னிய வச்சிட்டேன். நீங்க வந்தீங்கன்னா சாப்பிடலாம்” என்றாள் விழி.
அதில் கவியோ, “ஆமா அந்த லூசு எங்க?” என்று கடுப்பாய் கேட்டாள். “ஆனாலும் உனக்கு அவ மேல தனி பாசம் தான். அவ சாப்பிடாம சாப்பிட மாட்டேன்னு சொல்ற பாரு” என்று இவளும் விடாது கிண்டலடிக்க, “சாப்பிடுறப்ப வந்தான்னா, அடுத்த தடவ சாப்பாட்டுல விஷம் வச்சிருவேன்னு சொல்லிடு” என்றாள்.
“சரி சரி டென்சன் ஆகாத. எப்படியும் அவ ரூம்ம விட்டு இன்னிக்கு வெளிய வர மாட்டா. அதனால நீ ப்ரீயா சாப்பிடு” என்றாள் விழி.
“ச் அவள எப்போத்தான் ஹாஸ்டல் கொண்டு போய் விடுறதா இருக்கீங்க?” என்று இப்போது இருவருக்கும் கேட்கும் படியே கேட்டாள்.
அப்போதே சிந்தனையில் இருந்து மீண்டவன், “யார கொண்டு போய் விடனும்?” என்றப்படி இட்லியை எடுத்து வைக்க சென்றான்.
“ஓ. அப்போ உங்களுக்கு அவள ஹாஸ்டல்ல விடுற ஐடியாவே இல்ல” என்று கோவமாய் கேட்டாள். “எவள?” என்று கேட்க வந்தவன், அதன் பின்னே கவியின் கோவத்தை உணர்ந்து, “ஐயோ! வேந்தா. என்னாச்சுடா உனக்கு, திருப்பியும் எதுக்கு தப்பான சுவிட்ச போடுற” என்று தன்னைத் தானே நொந்தவன், “ஆ..ங் நாளைக்கே விட்டுடலாம்” என்றான்.
“யார மாமா விடப் போறீங்க?” என்று கேட்டப்படி சுஜி அங்கு வந்து விட, அதிலும், வேந்தனுடைய சட்டையை வேறு அவள் போட்டிருக்க, அவ்வளவுத்தான் கவியுடைய பொறுமை எல்லாம் கரையைச் சேர்ந்தது.
“ஐயோ! இன்னிக்கு ஒரு நாள் நைட் இவள சமாளிக்கலாம்னு பார்த்தா, இவ அதுக்குள்ள, அத்தன வேண்டாத வேலையையும் பார்த்து வைக்கிறாளே” என்று வேந்தனைப் பார்த்தாள்.
ஆனால் அவனுக்கோ, அவள் அணிந்திருப்பது அவனுடைய சட்டை என்பது கூட தெரியவில்லை. ஏனெனில். அவன் என்று சுஜியைப் பார்த்திருக்கிறான். அதிலும் அவள் கண்ணைத் தாண்டி, அவன் அவள் முகத்தை கூட பார்த்திருக்க மாட்டான். பின் எங்கே அவள் அணிந்திருந்த சட்டையை எல்லாம் கவனிக்கப் போகிறான்.
“யார கேட்டு இந்த சட்டைய எடுத்து போட்ட நீ?” என்று கவிக்கு சண்டைக்கு செல்ல, அவளோ, “என் ரூம்ல இருந்திச்சு. எடுத்துப் போட்டேன். அதுல என்ன இருக்கு? பாரேன் எனக்கு எவ்ளோ அழகா இருக்குன்னு” என்று விழியிடம் வேறு கேட்டாள்.
அதன் பின்னே வேந்தன் அவள் அணிந்திருக்கும் சட்டையைப் பார்க்க, அவனுக்கே எரிச்சல் தான் வந்தது.
“ச் என்ன சுஜி இது? ஒருத்தவங்க ட்ரஸ அவங்க பர்மிஷன் இல்லாம எடுத்து போடக் கூடாதுன்னு உனக்கு தெரியாதா?” என்று கோவமாய் கேட்டான் வேந்தன்.
“ஏன்? அன்னிக்கு இந்த கவிக்கூடத்தான் உங்க ட்ரஸ எடுத்து போட்டிருந்தா. அதான் நானும் எடுத்துப் போட்டேன்” என்றாள் சுஜி.
அதில் விழியோ, “நீ எப்போ போட்ட. அதுவும் எனக்குத் தெரியாம?” என்று கேட்டாள்.
அதில் கவியோ, வேந்தனின் நினைவாய் அவன் சட்டையை எடுத்து போட்டிருக்க, அதை இந்த லூசு அவனின் முன்னே சொல்வாள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.
அதில் சற்று அசடு வழிந்தாலும், அடுத்த நொடியே, “ச் நான் போடுறதும், அவ போடுறதும் ஒன்னா? ஒழுங்கு மரியாதையா, அந்த சட்டைய வாங்கி கொடு. இல்லன்னா அவ்வளவுத்தான்” என்றாள் கவி.
அதற்குள் வேந்தனோ, “அவ என் சட்டைய போடுவா. ஆனா நீ போட கூடாது” என்று அழுத்தம் திருத்தமாய் சொல்ல, “அதென்ன? உங்க அத்த பொண்ணு எனக்கு இல்லாத உரிமை அவளுக்கு இருக்கா?” என்று கோவமாய் கேட்டாள்.
“என் குட்டிமாக்கு இல்லாத உரிமை கூட, அவளுக்கு மட்டும் தான் இருக்கு. ச் அதெல்லாம் உன்கிட்ட சொல்லிட்டு இருக்கனும்னு எந்த அவசியமும் எனக்கு கிடையாது. இங்க நீ காலேஜ் சேரத்தான வந்த. வந்த வேலைய மட்டும் பாரு. நாளைக்கு நீ ஹாஸ்டல் கிளம்பியிருக்கனும்” என்று அத்தனை கோவமாய் கூறினான்.
அவனுடைய கோவத்தில். கவிக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. அவளுக்கு சுஜியைப் பிடிக்காதுத்தான். ஆனாலும் அவள் எதையும் மனதில் வைத்துக் கொண்டு செய்யும் ஆள் எல்லாம் கிடையாது. அதிலும் அவளுக்கு வேந்தனைப் பிடிக்கும் தான். அதற்காக, அதற்கு வேறு மாதிரியான பிம்பமும் கிடையாது. எல்லாமே அவளுக்கும் தெரியும் தான். ஆனாலும் வேந்தனின் மீது புதிதாய் உருவாகியிருக்கும் உரிமை உணர்வு, அவளை சற்று கட்டுப்பாடிழக்க வைத்தது.
அவன் அப்படி சொல்லவும் சுஜியோ அழுதுக் கொண்டே, “இதையே வர்ஷினி அக்கா பண்ணியிருந்தா, இப்படி சொல்லியிருக்க மாட்டீங்கத்தான. உங்களுக்கு எப்பவுமே, நான்னா ஒரு மாதிரி, வரு அக்கான்னா ஒரு மாதிரித்தான்” என்று மூக்கை உறிஞ்சினாள்.
அவளின் வர்ஷினி என்ற பெயரில் வேந்தனுடைய முகத்தில் நொடிக்கும் குறைவாய் ஒரு மெல்லிய தடுமாற்றம் வந்து சென்றதோ என்னவோ? ஆனால் கவித்தான் மொத்தமாய் காற்று போன பலூனாய் மாறியிருந்தாள்.
அவளுக்குத் தெரியுமே. அவள் மட்டும் அவனின் வாழ்க்கைக்குள் வராமல் போயிருந்தால், அவனின் மனைவியாய் இப்போது அந்த வர்ஷினித்தானே இருந்திருப்பாள். அந்த காரணத்துக்காகத்தானே, இவளும் அவனை விட்டு ஓடி மறைந்தாள். இப்போது மீண்டும் சுஜியின் மூலமாய், அந்த பெயரைக் கேட்க, கவியுடைய விரல்கள் நடுங்கியது.
ஏனோ சட்டென்று அடுத்தவர் வாழ்க்கையை தான் வாழ்ந்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது.
“ஏண்டி? அதான் அந்த வர்ஷினி அக்கா அவ்ளோ அழகா இருக்காங்கத்தான. அவங்கள விட்டுட்டு நீ ஏன் எப்போ பார்த்தாலும் என்னையவே அண்ணி, அண்ணின்னு சொல்லி வெறுப்பேத்திட்டு இருக்க” என்று முதன் முதலாய் வர்ஷினியைப் பார்த்த கவி, விழியிடம் கேட்டது இதுத்தான்.
அதில், விழியோ, “அந்த வெள்ளப் பன்னிய எல்லாம் என்னால அண்ணின்னு சொல்ல முடியாது. அதுவும் போக, உன் முன்னாடி, அவ எல்லாம் ஒரே ஆளே கிடையாது. எல்லாம் மேக்கப்பு. நீ வேனும்னா கொஞ்சம் தண்ணிய எடுத்து மூஞ்சியில ஊத்து எல்லாம் அழிஞ்சிடும்” என்று கடுப்பாய் கூறினாள் விழி.
“ச் சும்மா எதையாச்சும் சொல்லாத. அப்படில்லாம் அவங்க ஒன்னும் மேக்கப் போடல. உண்மையாவே அவங்க கலர் அப்படித்தான் இருக்கு. அதுலையும் அழகாவும்த்தான் இருக்காங்க” என்றாள்.
அப்போது அங்கு வந்த வேந்தனும் கூட, வர்ஷினியைப் பார்த்து ஒரு நொடி அப்படியே தடுமாறி நின்றிருந்தான். அவன் கண்ணில் மெல்லிய விருப்பம் தெரிந்ததோ? அதை கவி கவனித்தாளோ? ஆனால் வர்ஷினியின் முகத்தில் வேந்தனைப் பார்த்ததும், அத்தனைக் காதல் நிரம்பி வழிந்தது. மெல்லிய வெட்கம் கூட எட்டிப் பார்க்க, சட்டென்று எழுந்து நின்றாள்.
“ஹேய் கட்டிக்கப் போறவன் கிட்ட அப்படி என்ன வெட்கம். சும்மா உட்காரு” என்று அருகில் இருந்த சொந்தக்காரர்கள் கிண்டல் செய்தது, வேந்தன் அதற்கு எந்த பதிலும் சொல்லாது அவளை ஒரு நொடி பார்த்து விட்டு பின், “குட்டிமா. கிளம்பலாம்” என்றப்படி விழியையும், கவியையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பியிருந்தான்.
இப்போது அந்த நினைவில் இருந்த கவியின் செவியில் “பளார்” என்ற சத்தம் கேட்க, திடுக்கிட்டு திரும்பினாள். அங்கே சுஜியை கோவமாய் வேந்தன் அடித்திருந்தான்.
“சொன்னா உனக்கு புரியாதா? கவி, இந்த வேந்தனோட ஒயிப். அவளுக்கு மட்டும் தான் எல்லா அதிகாரமும் இருக்கு. அது உனக்கோ, உன் அக்காக்கோ கிடையவே கிடையாது. இன்னொரு தடவ. இப்படி உன் வாயில இருந்து வந்திச்சு. அதுத்தான் உன்னோட கடைசி நாளா இருக்கும்” என்றவன் அங்கிருந்த தட்டை தட்டிவிட்டு, கோவமாய் எழுந்து சென்றிருந்தான்.
அவனின் கோவத்தில் சுஜி அதிர, விழிக்குமே சுஜியின் மீது அத்தனைக் கோவம் வந்தது. இப்போதுத்தான் அண்ணனின் வாழ்க்கை சற்று சீராகி இருக்க, இப்போது தேவையில்லாத விஷயத்தை பேசி பிரச்சனையை உருவாக்கியிருந்தாள்.
ஆனால் கவி பழைய நினைவில் இருந்ததால், சுஜி கடைசியாய், “வர்ஷி அக்காவத்தான உங்களுக்கு பிடிக்கும். அப்படி இருக்கிறப்ப, இந்த கவியாலத்தான” என்று ஏதோ சொல்ல வந்தாள். அதனால் தான் வேந்தன் அவளை அடித்திருந்தான்.
இப்போது சுஜியோ கன்னத்தில் கை வைத்தப்படி அமர்ந்திருக்க, அவன் அடித்த அடியில் அவள் கண்ணெல்லாம் சிவந்திருந்தது.
“நான் இப்போ என்ன சொல்லிட்டேன்னு மாமா என்ன அடிச்சாரு. உண்மையத்தான” என்று சுஜி அழுதுக் கொண்டே மேலும் பேசப் போக, “உன்ன இதுக்குத்தான் இங்க வர வேண்டாம்னு சொன்னேன். ஒழுங்கு மரியாதையா எந்திரிச்சு போயிடு” என்று விழியும் திட்டினாள்.
அதில் இப்போது சுஜியோ, “போங்க நான் போறேன்” என்று அவள் அழுதுக் கொண்டே அங்கிருந்து நகரப் போக, அவள் கரத்தைப் பிடித்து தடுத்தாள் கவி.
அதில், “ச் என்ன விடு. உன்னாலத்தான் எல்லா பிரச்சனையும்” என்று சுஜி கோவமாய் சொல்ல, இப்போது விழி பட்டென்று அவளை அடித்திருந்தாள்.
“ஹேய் விழி” என்று கவி அவளை பிடித்து தடுக்கப் பார்க்க, “கொன்னுடுவேன் உன்ன. என் அண்ணா சொன்னது கேட்டிச்சித்தான. கவி என் அண்ணாவோட ஒயிப். சோ என் அண்ணிக்கு கொடுக்க வேண்டிய மரியாதைய கொடுக்கிறதா இருந்தா மட்டும் இரு. இல்லையா? இப்பவே உன் பெட்டி படுக்கைய தூக்கிட்டு கெளம்பிட்டே இரு” என்று திட்டியிருந்தாள்.
இப்போது சுஜியோ கவியைக் கட்டிக் கொண்டு, “ச் எல்லாரும் எதுக்கு என்னையவே திட்டுறீங்க. வீட்டுலையும், அந்த வர்ஷீ அக்காக்காக எல்லாரும் என்ன திட்டுறாங்க. இங்க உனக்காக திட்டுறாங்க” என்று அழுதாள்.
“ஹேய் உன்ன” என்று விழி மீண்டுமே சுஜியை திட்டப் போக, “ச் உன் அண்ணாவ போயி பாரு” என்றாள் கவி.
“நீ போயி அண்ணாவ பாரு. இந்த லூசு கொஞ்ச நேரத்துல சரியா போயிடும்” என்று கடுப்பாய் கூறினாள் விழி. “விழி” என்று கவி அழுத்தி அழைக்கவும், அதில் வேறு வழியின்றி விழி அங்கிருந்து வேந்தனை தேடி சென்றாள்.
இப்போது தன்னைக் கட்டிக் கொண்டு தன்னையே திட்டியப்படு அழும் சுஜியின் தலையை மெல்ல கோதினாள் கவி.
(ஏன்மா. அவ உன்னத்தான்மா திட்டிட்டு இருக்கா. செரி. இந்த கதைக்குள்ள, வர்ஷினின்னு ஒரு கேரக்டர் வேற இருக்கா. அவ யாருன்னு வேற தெரியலையே. சரி சமாளிப்போம். அடுத்து என்னென்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். சரி அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தித்திக்குமா?..
Geetha Thulasi
very nice superrrrrrr 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Amsa Veni
super