தேன் – 54

பேசி பேசியே மனைவியை கரைக்கும் வித்தையை எங்கிருந்துத்தான் கற்று வந்தானோ? சரவெடியாய் வெடித்துக் கொண்டிருந்தவளை, தண்ணீர் பட்ட பட்டாசாய் மாற்றி, அவளை தடுமாற வைத்துக் கொண்டிருந்தான் வேந்தன்.

அவள் இடையோரம் கைக் கொடுத்து, அவன் இறுக்கமாய் கட்டிக் கொள்ள, இவளுடைய இதயம் அத்தனைப் பலமாய் துடித்தது. “ச் என்னப் பண்ணிட்டு இருக்கீங்க?” என்றவள் அவனை விலக்கத்தான் எந்த முயற்சியும் செய்யவில்லை.

இப்போது அவள் கழுத்து வளைவில் தாடி புதைய முகத்தை பதித்தவன், “உன்ன எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா?” என்றான். அவனின் மூச்சுக்காற்று, அவள் தேகத்தை தொட்டு அவளை சிலிர்க்க வைக்க, இருந்தும அவள் வயிற்றோரம், பதிந்திருந்த அவனின் கரம் அழுத்தத்தை கூட்டி, அவளை மெய் மறக்க வைத்தது.

“ச் சும்மா சொல்லாதீங்க” என்றவள், அவன் விரலோடு விரல் கோர்த்துப் பிடித்தாள். அது அவன் செய்கையை தடுப்பதற்கா? இல்லை அவன் செய்கைக்கு உடன்படுவதற்கா? என்பதை அவளே அறிவாள்.

தன் விரலோடு உறவாடிக் கொண்டிருந்த, அவள் விரலை, மெதுவாய் வருடியப்படி, “சும்மாலாம் சொல்லுவேன்னா, உண்மையாவே ரொம்ப மிஸ் பண்ணேன். நான் வேணும்னா எவ்ளோ மிஸ் பண்ணேன்னு சொல்லட்டுமா?” என்று கேட்டவனின் இதழ்கள், அவள் கன்னத்தை பட்டும் படாமல் உரசி, அவளை தீமூட்டியது.

“ச் ஒன்னும் சொல்ல வேண்டாம். விலகுங்க” என்று அவன் விரலில் இருந்து தன் விரலை விலக்கி, அவன் நெஞ்சில் கரம் பதித்து தள்ளினாள்.

ஆனால் அவள் தள்ளிய வேகத்துக்கு மீண்டும் அவளுடன் வந்து ஒட்டிக் கொண்டவன், “நீ சொன்ன மாதிரியே வாய்ட்டையே சொல்றேன்” என்றப்படி அவள் இதழை நோக்கி நெருங்கினான்.

அவனின் இந்த சேட்டையில், இப்போது அவள் உள்ளம் தடுமாற, அவனை காணாத, இந்த இரண்டு வார ஏக்கம் வேறு மனதிற்குள் இருக்க, அவனைத் தடுக்க முடியாது தடுமாறினாள்.

அவள் தடுமாற்றத்தை சரியாய் பிடித்துக் கொண்டவன், அவளை விட்டு விலகாது, மேலும் மேலும் நெருங்கி, அவள் நெற்றி முட்டினான்.

“ச் சுடர்” என்று அவள் உதடுகள் முணுமுணுக்க, “ம்” என்றவனின் இதழ்கள் இப்போது மெதுவாய் அவள் நாசியின் மீது முத்தமிட்டது. அவன் முத்தத்தில், மயங்கி அன்னிட்சையாய் அந்த திண்டில் அவள் சாய, அவளோடே சாய்ந்தவன், அவள் இடையோரம் கைக் கொடுத்து, அவளை அப்படியே தூக்கி அந்த திண்டில் அமர்த்தினான்.

இப்போது அவள் செவ்விதழ், அவன் இதழுக்கு நேராய் இருக்க, அவள் விழிகளோ, அவன் விழிகள் காட்டும் மாயாஜாலத்தில், சொருகியது.

“தேனு” என்று அவன் கிறக்கமாய் அழைக்க, அதில் அவளோ மெல்ல விழி உயர்த்தி அவனைப் பார்த்தாள். “சொல்லட்டா” என்று மோகத்துடன் கேட்டான் அவன்.

“என்ன?” என்றவள் புரியாது அவனைப் பார்க்க, அவள் இடையோரம் பதிந்திருந்த கரத்தில் மேலும் அழுத்தம் கூட்டி, “வாய்ட்ட சொல்லட்டா” என்று ராகம் இழுத்தான்.

அவனின் தொடுகையிலும், வார்த்தையிலும் அவள் இதயம் அத்தனைப் பலமாய் துடிக்க ஆரம்பிக்க, அருகில் இருந்த திண்டின் முனையை மேலும் அழுத்திப் பிடித்தாள்.

அவள் இதயத் துடிப்பை, தன் இதயத்தால் உணர்ந்தவன். இன்னுமே அவளை நெருங்கி, தன் இதழால், அவள் மேல் உதட்டை மென்மையாய் வருடினான். அதில் அவளுக்கு இன்னுமே மூச்சு முட்ட, “ச் சுடர். வேண்டாம்” என்று சொல்ல துடித்த வார்த்தைகள், அவள் தொண்டைக்குழியை விட்டு எழவே இல்லை.

அவள் எச்சிலை கூட்டி விழுங்குவது, அவள் தொண்டைக்குழியை இன்னுமே அழகாய் காட்ட, பட்டென்று இதழை விடுத்து அவள் தொண்டைக்குழியில், சற்று பல் படாது, முத்தமிட்டு அதை விழுங்கிக் கொள்ள முயற்சித்தான்.

அவனின் அந்த இராட்சச முத்தத்தில். இவள் மொத்தமாய் தன்னிலை இழக்க, கண்களை இறுக்கி மூடினாள். அவனோ இப்போது, கொஞ்சம் கொஞ்சமாய் அவள் கழுத்தில் இருந்து கீழே, தன் இதழை கொண்டு செல்லப் போக, அவளுடைய இதயம் வேறு இன்னும் இன்னும் என்று பலமாய் துடிக்க ஆரம்பிக்க, அவள் கரம் அன்னிட்சையாய் அவன் சட்டையை பற்றி தடுக்க உயர்ந்தது. அதற்குள் அவள் கைப்பட்டு, மேலே அடுக்கி வைத்திருந்த பாத்திரம் எல்லாம் சரசரவென்று விழ ஆரம்பிக்க, அப்போதே, மோகம் விலகி, தன்னிலைக்கு வந்தாள் கவி.

அவனின் இதழ் செல்லும் போக்கை புரிந்தவள், சட்டென்று அவனை விலக்கி, “ச் என்னப் பண்றீங்க” என்று கோவமாய் கேட்டாள். அவனோ, “ஜஸ்ட் சொல்லத்தான் ட்ரைப் பண்ணேன்” என்று சாதாரணமாய் சொல்ல, “நீங்க ஒன்னுமே சொல்ல வேண்டாம். முதல்ல போங்க” என்று வாசல் பக்கம் கை காட்டினாள்.

“மாட்டேன்” என்றவன் மீண்டுமே அவளை நெருங்க, சட்டென்று அவன் காலரில் கை வைத்து தடுத்தவள். “கொஞ்சமாச்சும் ஒரு அண்ணன்னா பொறுப்பா நடந்துக்கோங்க. தங்கச்சிய வீட்டுல வச்சிட்டு என்னப் பண்ணிட்டிருக்கீங்க? அதுவும் கிச்சன்ல வச்சி. விழி வந்தா என்ன நினைப்பா” என்று அவனை திட்டினாள்.

“அதெல்லாம் என் குட்டிமா வர மாட்டா” என்றப்படி மீண்டுமே அவளை நெருங்கி, அவள் கன்னத்தோடு சேர்த்து தாடையைப் பற்றி, தன்னைப் பார்க்க வைத்தான்.

அவனின் செயலில், அவள் அவனைப் பார்க்க, அவனோ, “உன் முன்னாடி முதல்ல புருஷனா நடந்துக்கிறேன். அதுக்கப்புறமா, குட்டிமாக்கு அண்ணன்னா இருக்கிறத பார்த்துகலாம்” என்றவன் இப்போது மீண்டுமே அவள் செவ்விதழை விரலால் வருடினான்.

அவனின் வருடலில், “ச் சுடர்” என்றவளின் உதடுகள் மெல்லமாய் தந்தியடிக்க, அதை ரசித்தவன், “இந்த உதடு கூட என்ன மிஸ் பண்ணுதுன்ற உண்மைய சொல்லுது. நீத்தான் என்ன பதில் சொல்லவே விட மாட்ற” என்று குறைப்பட்டான்.

அவன் விரல் வருடலில், கரைந்துக் கொண்டிருந்த, தன் உணர்வுகளை இழுத்துப் பிடிக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள் கவி.

“சுடர். இது கிச்சன்” என்று அவனுக்கு இருக்கும் இடத்தை நினைவுப்படுத்த, அவனோ, “அதெல்லாம் என் குட்டிமாக்கு மேனஸ் தெரியும். இங்க பூகம்பமே வந்தாக் கூட, இந்தப் பக்கமா அவ வர மாட்டா. சோ இப்போ என் பொண்டாட்டிக்கு பதில் சொல்றேன்” என்றவனின் மீசை முடி அவள் கன்னத்தை மயில் தோகையால் வருடிக் கொடுப்பது போல் வருடியது.

அதில் அவனின் தேக வாசம், அவளை இம்சிக்க, அவளின் விரல்கள் கூட அன்னிட்சையாய். அவன் சட்டைக் காலர் வழி புகுந்து, அவள் கழுத்தை கோர்த்துப் பிடித்தது.

அதில் இப்போது வேந்தனின் முகத்தில் வெற்றி புன்னகை. கொஞ்சம் கொஞ்சமாய் இருவர் இதழுக்கும் இருந்த இடைவெளியை குறைக்கும் நோக்கில் அவன் இஞ்ச் இஞ்சாக முன்னேற, அவளுக்கும் கூட, அவனின் இதழ் அணைப்பு, அந்த நொடி தேவைப்பட்டதோ என்னவோ? அவனின் முற்றுகைக்கு தயாராய் அவனுடன் ஒன்றினாள்.

இதோ, அதோ என்று அவன் அவள் இதழை நெருங்கும் நொடி, “மாமா” என்று எங்கிருந்தோ ஓடி வந்தாள் சுஜி.

அவளின் சத்தத்தில், இருவரின் மோன நிலை கலைய, அதற்குள், “ஹேய் நில்லு” என்ற விழியின் சத்தமும் சுஜியின் பின்னே கேட்க, இப்போது வேறு வழியின்றி வேந்தன் கவியை விட்டு விலகினான்.

இங்கே கவிக்கோ கோவத்தில் மூக்கு நுனி சிவந்தது. வேந்தனுக்குமே சுஜியுடைய வருகை எரிச்சலை கொடுக்க, தலை முடியை அழுந்தக் கோதி, தன் உணர்ச்சிகளை இழுத்துப் பிடிக்க முயற்சித்தான்.

“ஐயோ மாமா. எப்போ வந்தீங்க? நீங்க இன்னிக்கு வறீங்கன்னு சொல்லியிருந்தா, நான் லீவ் போட்டிருப்பேன்ல” என்றவள், கொஞ்சம் விட்டால், அவன் தோள்பட்டையை பிய்த்து எடுத்துக் கொள்வேன் என்பது போல் தொங்கினாள்.

அவளுடைய இந்த செய்கையில் கவியுடைய பிபித்தான் தாறுமாறாய் கூடியது. அதில் அருகில் இருந்த கரண்டியால், சுஜியின் கையிலேயே அடித்தாள்.

“ஸ்..ஆ” என்று அவள் அவன் தோள்பட்டையில் இருந்து கரத்தை விலக்கிக் கொள்ள, கவியோ, “ச் சும்மா சும்மா தொட்டுப் பேசாதன்னு சொன்னா உனக்கு புரியாதா?” என்று கோவமாய் கேட்டாள்.

“ச் என் மாமாவ தொட்டா உனக்கென்ன?” என்று அவள் கையை உதறியப்படி கேட்க, “எனக்கென்னவா?” என்று கோவமாய் கேட்டவள், இப்போது வேந்தனின் பக்கம் திரும்பி, “உங்க அத்த மக சொன்னத கேட்டுட்டு கம்முன்னு நிக்குறீங்க” என்று திட்டினாள்.

அதில் அவனோ, இப்போது எரிச்சலாய், “ச் விழி” என்று கத்தினான். அதற்குள் அங்கு வந்த விழியோ, “ஐயோ வந்ததும் இவ ஆரம்பிக்கிறாளே” என்று தனக்குள் புலம்பியப்படி, “சாரிண்ணா. நான் வெளிய போன் பேசிட்டு இருந்தேன். இவ வந்தத கவனிக்கல” என்றாள்.

“ஹே, இப்போ எதுக்கு எல்லாரும் என்ன முறைக்கிறீங்க. நான் மாமாவ எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா?” என்று உதட்டை சுழித்தாள்.

அதில் கவியோ, வேகமாய் “ஆனா அவரு உன்ன மிஸ் பன்ணல. சோ தள்ளி நில்லு” என்றவள் இப்போது வேந்தனுக்கும், சுஜிக்கும் இடையில் வந்து, வேந்தனை ஒட்டிக் கொண்டு நின்றாள்.

அவள் சேலை நுனி அவன் தேகத்தை உரச, ஏனோ அது கூட அவனுக்கு அந்த நொடி ஒரு சுகத்தைக் கொடுத்தது.

அதில் இன்னுமே வாகாய் அவள் பக்கம் நெருங்கி நின்றவன், மெதுவாய் அவள் வெற்றிடையில் விரலால் உரசினான். அவனின் சேட்டையில், “ச் சுடர்” என்று அவனை திரும்பி முறைத்தாள்.

இங்கே விழியோ, சுஜியிடம், “சுஜி நீ வா. உன்கிட்ட ஒன்னு காமிக்கனும்” என்றாள்.

“ம்ஹூம் நீ போ. மாமாவ பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு தெரியுமா? இன்னிக்கு பூரா நான் மாமாக்கூடத்தேன் இருப்பேன். மாமா. எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க?” என்று அவன் கையைப் பிடித்தாள்.

இப்போது நெற்றியை நீவியவனோ, “ஜீப்புல இருக்கு போயி எடுத்துக்கோ” என்றான். அவளிடம் கடுமையாக பேசக் கூடாது என்றெல்லாம் இல்லை. அவள் நடந்துக் கொள்வது அவனுக்கு எரிச்சலைக் கொடுத்தாலும், சுஜியை விழி அழைத்து வந்திருக்க, அவனால் அவளிடம் முற்றும் முழுதாய் கடுப்பை காட்ட முடியவில்லை.

ஆனால் கவிக்குத்தான் பற்றிக் கொண்டு வந்தது. அதில் இவள் இடையோரம் பதிந்திருந்த அவன் கரத்தில் நறுக்கென்று கிள்ளினாள். “ஸ்” என்றவன் கரத்தை விலக்கி உதற, சுஜியோ, “ஐயோ என் மாமான்னா மாமாத்தான். நான் போயி எடுத்துட்டு வரேன்” என்று வேந்தனின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு அங்கிருந்து ஓடியிருந்தாள்.

அவளின் செயலில், விழி “ஐயோ போச்சு போச்சு” என்று தலையில் அடித்துக் கொள்ள, கவிக்கோ கோவத்தில் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது.

இவனுமே அவள் முத்தமிடுவாள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. “கவி. அது” என்று அவளிடம் ஏதோ பேச முயன்றான். அவளோ அண்ணன், தங்கை இருவரையும் முறைத்து விட்டு, கோவமாய் அங்கிருந்து அறைக்கு சென்றிருந்தாள்.

கோவமாய் செல்பவளைப் பார்த்த விழியோ, வேந்தனிடம், “சாரிண்ணா, நான் அந்த சுஜிய இங்க கூட்டிட்டு வந்திருக்க கூடாது” என்றாள்.

அதில் தங்கையின் தலையை மெதுவாய் வருடிக் கொடுத்தவனோ, “நீ எதுக்காக கூட்டிட்டு வந்தன்னு எனக்கு தெரியும். ஆனா, அவளும் சின்னப் புள்ள, தேவயில்லாம மனசுல ஏதாச்சும் ஆசைய வளர்த்துக்கிட்டா, அது எல்லாத்துக்கும் கஷ்டம். புரியும்னு நினைக்கிறேன்” என்றான்.

“ம் புரியுதுண்ணா. நாளைக்கு சுஜிய ஹாஸ்டல்ல விட்டுடலாம்” என்று விழி சொல்ல, “ம்” என்றான் சுடர். “கவி கோவிச்சிட்டு போயிட்டா” என்று சொல்ல, அதில் நீண்ட பெருமூச்சை விட்டவன், “ம் மேடம்ம சமாதானப்படுத்த ட்ரைப் ப்ண்றேன்” என்று சொல்லிவிட்டு கவியைத் தேடி மேலே சென்றான் வேந்தன்.

இங்கே விழியோ, “எப்படியோ கவி மனசுல அண்ணா வந்தாச்சு” என்று சொல்லும் போதே, ஸ்டார் கம்பெனியின் எம்.டியிடம் இருந்து விழிக்கு அழைப்பு வந்தது.

(ரைட்டு. நம்ம கவி சுடர் லைப் பரவாயில்ல. ஆனா இந்த விழி லைப்க்குள்ள வரப் பாக்குற அந்த ஆறறிவு ஜீவன் யாரா இருக்கும்? அது யாருன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். சரி அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   0

*** தேன் – 54 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***