தேன் – 53

சமையலறையில் நின்றிருந்த கவி, வேந்தனை திட்டும் சத்தம் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த விழி வரை கேட்டது.

“ஹேய் என் அண்ணன்ன தாழிக்காம, கொஞ்சம் அங்க அந்த சட்னியையும் தாழிக்கலாம்” என்று கிண்டலாய் விழி சொல்ல, “ஆமா. நீ ஏன் பேச மாட்ட. உனக்குத்தான் உன் அண்ணா என்ன தப்பு பண்ணாலும் தெரியாதே” என்று அதற்கும் சேர்த்து திட்டினாள்.

“என் அண்ணாக்குலாம் தப்பு பண்ணவே தெரியாது” என்று விழி சொல்ல, இப்போது சட்னியை தாழிக்க கரண்டியை எடுத்தவள், அப்படியே வந்து, “யாருக்கு? உன் அண்ணனுக்கு தெரியாதா? அத நீ பார்த்த?” என்று கோவமாய் கேட்டாள்.

அவள் முகம் அத்தனை கோவத்தில் இருக்க, அதைப் பார்த்த விழியோ, “ஹேய், இப்போ எதுக்கு உனக்கு இவ்வளவு கோவம்?” என்றாள்.

“ஏன் உனக்கு தெரியவே தெரியாதா?” என்று இவள் எரிச்சலாய் கேட்க, “ம் சொன்னாத்தான தெரியும்” என்று கிண்டலாய் கேட்டவள், சமையல்கட்டு திண்டில் ஏறி அமர்ந்தாள்.

“உனக்கு தெரியவே வேண்டாம்’ என்று சொல்லியவள், சமையல் வேலையில் மூழ்க, விழியோ திடீரென, “அண்ணா. வந்துட்டீங்களா?” என்று வேகமாய் திண்டில் இருந்து குதித்தாள்.

அவளின் வார்த்தையில், கவியோ வேகமாய் அத்தனை எதிர்பார்ப்புடன் திரும்ப, அங்கே வேந்தன் இல்லை. அதில் அவளோ, ஒரு நொடி குழம்பி பின் வெளி ஹாலையும் எட்டிப் பார்த்தாள்.

அங்கேயுமே அவன் இல்லை. அதில், “ச் எங்க உன் அண்ணன்?” என்று இப்போது கவி, விழியின் பக்கம் திரும்பினாள். அதைக் கேட்டு சிரித்த விழியோ, “ஓஹோ. அப்போ மேடம்மோட கோவத்துக்கு இதுத்தான் காரணம்” என்று சீண்டினாள்.

அப்போதே அவள் பொய் சொல்லியிருக்கிறாள் என்பது புரிய, “உனக்கும், உன் அண்ணாக்கும், எப்பவுமே அறிவுன்றது கிடையவே கிடையாது. இப்படி கிண்டல் பண்ணிட்டே சுத்துங்க. அதுக்குத்தான் ரெண்டு பேரும் லாய்க்கு” என்றாள் கவி.

அதில் இப்போது விழியோ, “ஐயோ அண்ணா. உண்மையாவே வந்துட்டீங்களா?” என்று கேட்டாள்.

அவள் அப்படி சொல்லவும், இப்போது இன்னும் எரிச்சலானவளோ, “உனக்கு என்ன பாத்தா பைத்தியம் மாதிரி தெரியுதா? நீ சொல்ற பொய்ய கேட்டு, மறுபடி மறுபடி ஏமாறுவேன்னா? உனக்கும், உன் அண்ணனுக்கும் ஒருத்தவங்க மனசோட விளையாடுறது, விளையாட்டா இருக்கு. இல்ல இல்ல உன்ன சொல்லி தப்பு இல்ல. எல்லாம் உன் அண்ணன்ன சொல்லனும். செல்லம் கொடுத்து கொடுத்து, உன்ன கெடுத்து வச்சிருக்காரு. இதுல உனக்காக பண்றேன். உனக்காக பண்றேண்னு சொல்லி சொல்லி, எல்லா வேண்டாத வேலையும் சேர்த்து பாக்க வேண்டியது. போன் பண்ணி கூப்டா. ஒரு வாரம் ஆச்சு. ஒருத்தி கோவிச்சிக்கிட்டாளே. என்ன ஏதுன்னு கேட்கிறது கூட இல்ல. அதான. அவரு ஏன் கேட்கப் போறாரு. அதான் அவருக்கு அங்க கூட சேர்ந்து சுத்துறதுக்கு, கூத்தடிக்கிறதுக்கும் தான் எக்கசக்கமான பேரு இருக்காங்களே” என்று அவள் பாட்டுக்கு வேந்தனை பாரபட்சமே இன்றி திட்டினாள்.

இதை எல்லாம் அவளின் பின்னே வந்து நின்ற வேந்தன் கேட்க, விழியோ சிரிப்பை அடக்கி, “ஆனாலும் நீ என் அண்ணாவ ரொம்பத்தான் டேமேஜ் பண்ற” என்றாள்.

“ஏன்? உன் அண்ணாவ பத்துன உண்மைய எல்லாம் சொன்னதும் உனக்கு கோவம் வருதோ? வரட்டும். ஆனா அதுக்காகலாம் நான் சொன்னதுலாம் இல்லன்னு ஆகாது. சி எம்ம பாக்குறேன். பி எம் ம பாக்குறேன்னு, உன் அண்ணன் டெல்லி போயி என்ன வேல எல்லாம் பாக்குறாரு தெரியுமா?” என்று தோசைக்கல்லை அடுப்பில் வைத்தப்படி கேட்டாள்.

“அப்படி என்ன அவரு பாத்தத நீ பார்த்த?” என்ற விழி வேண்டுமென்றே வேந்தனைப் பார்த்தப்படி கேட்க, “ம் நீ அவரு தங்கச்சியா போயிட்ட. அதனால, அதெல்லாம் உண்ட்ட சொல்ல முடியல. இல்லன்னா” என்றப்படி அவள் திரும்ப, “இல்லன்னா?” என்று கேட்டான் வேந்தன்.

வேந்தனின் குரலிலும், தன் முன்னே தெரிந்த அவன் பிம்பத்திலும் சொல்ல வந்த வார்த்தையை அப்படியே பாதியில் நிறுத்தி, அவனை அதிர்ச்சியாய் பார்த்தாள்.

“சொல்லு கவி. அதான் என் அண்ணன் கேட்க்குறாறே” என்று படு நக்கலாய் விழி சொல்ல, அவள் செவியில் அதெல்லாம் எங்கு விழுந்தது. வேந்தன் கண் முன்னே நிற்கும் அதிர்ச்சியே அவள் விழியை விட்டு அகலவில்லை.

ஏதோ பேயடித்தது போல் அவள் நின்றிருக்க, இப்போது வேந்தனோ, “என்ன?” என்று புருவம் உயர்த்திக் கேட்டான். அப்போதே இவ்வுலகம் வந்தவள், இப்போது தன் தோழியிடம் திரும்பி, “எப்போடி உன் அண்ணா வந்தாரு” என்றாள்.

“ம் நீ அவருக்கு பன்னீர் அபிஷேகம் பண்ணனும்னு சொன்னப்பவே வந்துட்டாரு” என்று சொல்லிய விழி அங்கிருந்து சென்றிருந்தாள்.

அவள் செல்லவும் இப்போது வேந்தனோ, கவியை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க, அன்னிட்சையாய் அவள் பின் எட்டு வைத்தாள். அவளுக்கு வேந்தனின் மீது எப்போதுமே ஒரு பயம் இருக்கும். பயமா? மரியாதையா? என்று அவள் இன்று வரை அதை பிரித்துப் பார்த்தது இல்லை.

அவன் தன்னை வெறுக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவனுடன் சரிக்கு சமமாய் நின்று பேசியிருப்பாளே தவிர மற்றப்படி, வேந்தனுடன் நேருக்கு நேர் மல்லுக்கட்டுவது எல்லாம் அவள் இயல்பு கிடையாது.

அதில் அவள் அன்னிட்சையாய் தடுமாற, இப்போது அவள் இரு பக்கமும் நகர முடியாத அளவுக்கு இரு கரத்தால் அணைக்கட்டியவன், “என்ன மேடம்? ரொம்ப சூடா இருக்கீங்கப் போல?” என்று சீண்டலாய் கேட்டான்.

அவனின் இந்த சீண்டலில், தன்னுடைய கோவத்தை இழுத்துப் பிடித்தவள், அவன் கரத்தை தட்டிவிட்டு, “இப்போ நான் எப்படி இருந்தா உங்களுக்கு என்ன?” என்று சொல்லியப்படி அவனுக்கு முதுகு காட்டி நின்றாள்.

மனைவியின் கோவத்தை ரசித்தவன், “எனக்கென்னவா? பொண்டாட்டி சூடா இருந்தா, அதுனால புருஷனுக்குத்தான ஆபத்து” என்று சொல்லியப்படி அவளை ஒட்டிக் கொண்டு நின்றான்.

அதில் பட்டென்று திரும்பி அவனை முறைத்தவள், “ஓ சாருக்கு பொண்டாட்டின்னு ஒருத்தர் இருக்கிறதெல்லாம் ஞாபகத்துல இருக்கா?” என்று கேட்டாள்.

“பின்ன இல்லாமலா? ஏர்போர்ட்ல இருந்து ஆபிஸுக்கு கூட போகாம, ஏன் ரூமுக்கு கூட போகாம, என் பொண்டாட்டிய தேடி கிச்சனுக்கு வந்திருப்பேன்” என்று சொல்லியப்படி, ஸ்டைலாக அந்த திண்டில் சாய்ந்து நின்றான்.

அவனின் பேச்சில், “ஆமா ஆமா ரொம்ப சீக்கிரம் வந்துட்டீங்க போல. ஏன்? அங்க இருந்தவங்களாம் அதுக்குள்ள போர் அடிச்சிட்டாங்களா? இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல. அப்படியே டெல்லி, மும்பைன்னு போக வேண்டியதுத்தான” என்று எரிச்சலாய் கேட்டாள்.

“ச் என்னத்தான் சொன்னாலும் என் பொண்டாட்டி மாதிரி வராதே” என்றவன், அவள் இடையோரம் கரத்தை கொண்டு வர, கையில் வைத்திருந்த தோசைக் கரண்டியால் அவன் கையிலேயே அடித்தாள்.

“ஐயோ அம்மா” என்று அவன் கத்த, “மேல கைய வைக்கிற வேல எல்லாம் வேண்டாம்” என்று கரண்டியை வைத்து மிரட்டினாள்.

“என்னடி நீ? பின்னாடி கத்தி இருந்திச்சு. உன் மேல பட்டுடக் கூடாதே நகர்த்தி வைக்கலாம்னு வந்தேன்” என்று கரத்தை உதறியப்படி கூறினான் வேந்தன்.

அதன் பின்னே அவளும் பின்னே திரும்பி பார்க்க, அங்கே கத்தி இருந்தது. அதில், சிறு குற்ற உணர்ச்சி ஏற்பட்டாலும், அவனின் மீதிருந்த கோவத்தில், அதை வெளிக்காட்டாது, “ஏன் அத வாய்ட்ட சொன்னா ஆகாதா?” என்றாள்.

“சரிங்க மேடம். இனிமே வாய்ட்டையே சொல்றேன் போதும்மா” என்று சொல்லியப்படி இப்போது அவளை நோக்கி வேகமாய் நெருங்கினான். அவனின் தாடி அவள் தாடையை உரசும் அளவுக்கு அவன் நெருங்க, பட்டென்று அவன் நெஞ்சில் கை வைத்து, “ச் என்னப் பண்றீங்க நீங்க” என்று தள்ளினாள்.

“நீத்தான சொன்ன எதுன்னாலும், வாய்ட்ட சொல்லனும்னு. அதான்” என்றவனின் பார்வை அவள் உதட்டையும். புடவை மறைக்காத வெற்றிடையையும் வட்டமடித்தது. அதில் பட்டென்று அவனை இன்னும் விலக்கிவிட்டு அவசரமாய் தன் சேலையையும் சரி செய்தாள்.

அதைப் பார்த்து, “கையும் பட கூடாது. வாயும் படக் கூடாதுன்னு பொத்தி பொத்தி வைக்கிறதுல்லாம் கொஞ்சமும் சரி இல்ல” என்று குதர்க்கமாய் அவன் சொல்ல, அவள் உடல் ஒரு நொடி சிலிர்த்தது.

ஆனால் அடுத்த நொடியே, “சும்மா இப்படி தப்பு தப்பா பேசுறதெல்லாம் என்கிட்ட வேண்டாம்” என்றாள். “என்னடா இது? இப்போ நான் அப்படி என்ன தப்பா பேசிட்டேன்?” என்று அவன் நக்கலாய் கேட்க, “ச் நான் உங்க கிட்ட பேசவே விருப்பப்படல. நீங்க போகலாம்” என்றாள்.

“பட் எனக்கு உன்கிட்ட பேச ரொம்ப பிடிச்சிருக்கே” என்றவன் இப்போது மீண்டும் அவளை ஒட்டிக் கொண்டு வந்து நின்றான்.

அவனின் நெருக்கம் அவளை தடுமாற வைக்க, இருந்தும் அதை இழுத்துப் பிடித்து, “ஒரு வாரமா பேசாமத்தான இருந்தீங்க. அப்படியே போயிடுங்க” என்றாள்.

ஏனெனில் கடைசியாய். அவள் வீடியோ கால்லை கட் செய்து விட்டு போனதுத்தான். அதன் பின் அவள் அவனுக்கு அழைக்கவே இல்லை. அவனுக்குமே உடனே கிளம்ப முடியவில்லை. தனியாக சென்றிருந்தால், நிச்சயம் வேலையை அருளிடம் ஒப்படைத்து விட்டு கூட வந்திருப்பான். ஆனால் சி எம் உடன் சென்றிருக்க, அவனால் தனியாக கிளம்ப முடியவில்லை. அதனால் தான் அவளுக்கு அத்தனைக் கோவம்.

“ஹேய் நான் எத்தன கால் பண்ணேன். நீத்தான் எடுக்கவே இல்ல” என்று வேந்தன் சொல்ல, “ஓஹோ சாரு நான் எடுக்கிற மாதிரித்தான் பண்ணி வச்சிருந்தீங்களா?” என்று கோவமாய் கேட்டாள்.

“நான் உடனே கிளம்பத்தான் ட்ரைப் பண்ணேன் கவி. ஆனா சி எம் தான் விடவே இல்ல” என்றான். “யாரு சி எம் உங்கள விடலையா?” என்று இவள் கடுப்பாய் கேட்க, “ஹேய் நம்புடி. உன் புருஷன் மேல சி எம் க்கு எவ்வளவு நம்பிக்க இருக்குத் தெரியுமா?” என்றான்.

“அந்தாளே ஒரு போர் டிவண்டி. அந்தாளுக்கிட்ட நம்பிக்கைய வாங்கித்தான் நீங்க கோட்டையில ஏறி உட்காரப் போறீங்களாக்கும்” என்று கடுப்பாய் கேட்டாள்.

“அடிப்பாவி. அவர் இந்த ஸ்டேட்டோட சி எம் டி” என்று அவன் சொல்ல, “யாரா இருந்தா எனக்கென்ன? கண்ட இடத்துக்குலாம் உங்களையும் கூட்டிட்டு போயி கெடுக்கிற அவனுக்குலாம் என்னால மரியாத கொடுக்க முடியாது” என்று கரண்டியை காட்டி மிரட்டியப்படி கூறினாள்.

“ஹேய் அப்படில்லாம், உன் புருஷன் கெட்டுப் போயிடுவேன்னா?” என்று கேட்டப்படி அவளை மீண்டும் அவன் நெருங்க, அவளோ, “அமைதியா போயிடுங்க. அப்புறம் கரண்டிய சூடு பண்ணி சூடு போட்டுடுவேன்” என்று அவள் இடையை வருட முயற்சித்த அவன் விரலில் மீண்டும் கரண்டியால் அடித்தாள்.

“ஹேய். நான் ஒரு எம் எல் ஏ டி. நீ என்னென்னா, சின்னப் பையன அடிக்கிற மாதிரி அடிக்கிற” என்று மீண்டுமே அவன் அவளை ஒட்டிக் கொண்டு வந்து நிற்க, ஏனோ இப்போது அவனை விலக்க அவளால் முடியவில்லை. அவனுக்கே உண்டான வாசம் இப்போது அவள் நாசியில் கலந்தது. அதில் அவள் மெல்ல தடுமாற, இங்கே இவனோ சட்டென்று இருவருக்கும் இடையில் இருந்த இடைவெளியை குறைத்து, அவளை இடையோடு சேர்த்து கட்டிக் கொண்டான். அவனின் பிடியில், இவளின் கோவம் மெல்ல கரைய ஆரம்பிக்க, அவன் தொடுகையில் குழைய முயற்சித்தாள்.

(ப்பா. ஆனாலும் வேந்தா அந்த புள்ளைய எப்படின்னாலும் கரெக்ட் பண்ணிடுற. சரி அடுத்து என்னென்னு அடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்னிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?...

Comments   1

*** தேன் – 53 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***