தேன் – 52

வேந்தனோ அத்தனைக் கடுப்பாய் இருக்க, அவனின் அருகில் நின்றிருந்த அருளோ, “எனக்கு இது பத்தி தெரியாது சார். தெரிஞ்சிருந்தா, உங்கள இங்க வர சொல்லியிருக்க மாட்டேன்” என்றான்.

அதில் அவனையும் முறைத்தவனோ, “என்ன தெரியாது. இத கூட விசாரிக்க மாட்டீயா? இதுக்குத்தான் உன்ன என் பிஏ வா வெச்சிருக்கேன்னா?” என்று கடுப்பாய் கேட்டான். அதற்குள் அங்கு வந்த மினிஸ்டரின் ஆளோ, “என்ன எம் எல் ஏ சார்? அன்னிக்கே சொன்னோம்ல. எங்க ஐயா கூட சேர்ந்தா சொகுசா சந்தோஷமா இருக்கலாம்னு. இப்போ பாத்தீங்களா? இன்னும் உங்களுக்கு எம் பி போஸ்டே கிடைக்கல. அதுக்குள்ள சி எம் கூட ஸ்பெஷல் டின்னர்” என்று அரைப் போதையில் உளறினான்.

அதைக் கேட்ட வேந்தனுக்கோ அத்தனை எரிச்சல் என்றால், அவர்கள் வந்திருந்த சொகுசு பங்களவிற்குள், எந்தப் பக்கம் திரும்பினாலும் பெண்களின் சிரிப்பும், ஆண்களின் வலிசலும் தான் தெரிந்தது.

“நான் கிளம்புறேன்” என்று வேந்தன் நகரும் முன்னே அங்கு வந்த கட்சி தலைவரோ, “என்னப்பா? அங்க எங்கப் போற?” என்று அவன் தோளில் கையைப் போட்டார். அதில் கடுப்பை உள்ளிழுத்து, “அதான் டின்னர் முடிஞ்சிருச்சே தலைவரே. அதான்” என்று வெளியேற முயற்சித்தான்.

“டின்னர்த்தான முடிஞ்சிருக்கு. இன்னும் மெயின் டிஷ் எல்லாம் இருக்கே” என்று அங்கே அறையும் குறையுமாய் நடனமாடிக் கொண்டிருந்த பெண்களைப் பார்த்தப்படியே கூறினார். நிச்சயம் அவர் வயதுக்கு, அந்தப் பெண்கள் எல்லாம் அவருடைய பேத்தி வயசு என்று சொன்னால் கூட சரியாகவே இருக்கும். ஆனால் அந்த பெரிய மனிதரோ, அந்தப் பெண்களின் மிச்ச ஆடையையும் நீக்குவது போல் பாத்துக் கொண்டிருந்தார்.

அதில் உள்ளுக்குள் வெறுப்பு பொங்கினாலும், பெரிய இடங்களில் இதெல்லாம் சாதாரணம் என்பது போல் சிரித்தப்படி நின்றிருந்தான்.

“பொறவு, உன் கட்சியில, நீ பண்றதெல்லாம், என் ஆளு சொன்னான். இளம் இரத்தம் இல்லையா? அதான் ரொம்ப சூடா இருக்க. ஆனா, இந்த சூடு, நம்ம கட்சியோட வளர்ச்சிலையும் இருக்கனும் செரியா” என்று அவன் தோளைத் தட்டிக் கொடுத்தார்.

“கண்டிப்பா சார்” என்று வேந்தன் சொல்ல, “ம் உன்ன பாக்குறப்ப, எனக்கு என்ன சின்ன வயசுல பாக்குற மாதிரியே இருக்கு” என்றார்.

அதில் அவனின் அருகில் நின்றிருந்த அருளோ, “எங்க சாரு என்ன பாக்குறதுக்கு அம்புட்டு கேவலமா இருக்காரு” என்று நக்கலாய் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

“சரிங்கய்யா. எனக்கு கொஞ்சம் வெளிய வேல இருக்கு. நான் போயி” என்று வேந்தன் நகர முயற்சிக்க, “ச் இங்க வந்து என்ன வேலைய்யா? இந்த வயசுல அனுபவிக்காம என்னப் பன்ணப் போற. குட்டிங்க எல்லாம் பிரஷ் பீஸு. சும்மா எஞ்சாய் பண்ணு” என்று ஜொள்ளை வடித்துக் கொண்டு கூறினார்.

இவனுக்கோ அத்தனை கடுப்பு. ஆனாலும் சில நேரங்களில், சில விஷயத்தை நேரடியாய் மறுக்க முடியாது, அதனால், “நீங்க போங்க சார். ரொம்ப நேரமா அங்க உங்களுக்காகத்தான் வெயிட் பண்றாங்க” என்றவன் அவரின் பிஏ வை கண் காட்டினான்.

“செரி காலையில நான் சொன்னத எல்லாம் மறந்துடாத. இந்த தடவையும் நம்மத்தான்” என்று அரை போதையில் சொல்லியப்படி அவர் செல்ல, இங்கே வேந்தனோ மீண்டும் எரிச்சலாய் அருளைப் பார்த்தான்.

அதற்குள்ளாக, வேந்தனுடைய தோளில் யாரோ கரத்தைப் பதிக்க, சட்டென்று திரும்பினான். ஒரு பெண் சேலையை கட்டியிருக்கிறாளா? இல்ல பெயருக்கு ஒட்டி வைத்திருக்கிறாளா? எனும் கோலத்தில் கையில் மது கோப்பையுடன் நின்றிருந்தாள்.

சட்டென்று அந்தப் பெண்ணின் கரத்தை அவன் தட்டிவிட, “ஒய் ஹேண்ட்சம். இங்க இருக்கிறதுலையே யங்கா, மேன்லியா நீத்தான் இருக்க” என்று அப்பெண் அவன் சட்டையை தடவி, அவன் சட்டைப்பட்டனை கழட்ட முயற்சிக்க, இவனுக்குள்ளோ அத்தனை எரிச்சல்.

“அருள்” என்று கோவமாய் கத்தினான். “ஐயோ இதுங்க வேற” என்று சொல்லியப்படி, “ஏம்மா இந்தப் பக்கம் வா” என்று அந்தப் பெண்ணை, அங்கிருந்து அழைத்துச் சென்றான்.

இவனோ அங்கிருந்த சோபாவில் அமர, அத்தனை எரிச்சல். சரியாக அன்னேரம் அவன் எரிச்சலை குறைக்க என்றே, கவியிடம் இருந்து அழைப்பு வந்தது.

அப்போதே மணியைப் பார்த்தான். கிட்ட தட்ட பத்து மணிக்கு மேல் ஆகியிருக்க, “ஐயோ, இன்னிக்கு நான் வருவேன்னு நினைச்சிட்டு இருந்திருப்பாளே” என்று தனக்குள்ளே சொல்லியவன், மொபைலுடன் பின் பக்க தோட்டத்துக்கு வந்தான்.

அங்கேயும் ஆங்காங்கே சிலர் சில பெண்களுடன் குடித்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க, அவனோ சற்று மறைவில் இருந்த மரத்திற்கு பின்னே சென்று அட்டண்ட் செய்தான்.

“கவி” என்று இவன் அழைக்க, அந்தப் பக்கம் அத்தனை அமைதி. அதில் இவனோ, “சாரிடா. என்னால இன்னிக்கு வர முடியல” என்றான்.

அந்தப் பக்கம் இருந்த கவியோ அப்போதும் அமைதியாகவே இருக்க, “கவி லைன்ல இருக்கீயா? நான் பேசுறது கேட்குதா?” என்றான்.

“என்கிட்ட சொல்லிட்டு போகனும்னு கூட உங்களுக்கு தோனலல்ல” என்று கோவமாய் கேட்டாள். ஏனோ மனைவியின் அந்தக் கோவம் கூட அவனுக்கு அத்தனைப் பிடித்தது. மனைவியின் உரிமையை அவள் காட்டும் போதெல்லாம், இவனுக்குள் ஜில்லென்ற இதம் பரவியது.

“இல்லடா. சொல்லனும்னுத்தான் நினைச்சேன். ஆனா திடீர்னு” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்னே, “ஒரு மெசேஜ்ல சொல்றதுக்கு என்ன?” என்றாள்.

அதில் இவனோ, “சாரி. சாரி..” என்றான். “ச் போங்க. அங்க போனதும், உங்களுக்கு என் ஞாபகமே இல்ல. என்ன மறந்துட்டீங்க” என்று குற்றப் பத்திரிக்கை வாசித்தாள்.

“உன்ன மறப்பேன்னா நானு? ஒவ்வொரு செகண்ட்ம் உன்ன பத்தித்தான் யோசிச்சிட்டு இருக்கேன்” என்றான்.

“சும்மா பொய் சொல்லாதீங்க. அப்படி ஞாபகம் வந்திருந்தா, எனக்கு கால் பண்ணியிருப்பீங்க. இப்ப மணி என்ன தெரியுமா? நீங்க வருவீங்க, வருவீங்கன்னு வெயிட் பண்ணி, இவ்வளவு நேரமும் வாசல்லத்தான் இருந்தேன்” என்றாள்.

மனைவி தன்னை தேடுகிறாள். இந்த நொடி அவளின் முன்னே ஓடி சென்று நிற்க மனம் துடித்தது. ஆனாலும் அது முடியாதே, “உண்மையாவே ரொம்ப ரொம்ப சாரிடா. இங்க கொஞ்சம் டென்சன். அதான்” என்றான்.

அவன் குரலில் உண்மையான வர்த்தம் தெரிய, “என்னாச்சு? அங்க ஒன்னும் பிரச்சன இல்லையே?” என்று கேட்டாள்.

“எப்படி பிரச்சன இல்லாம இருக்கும்? அதான் என் பொண்டாட்டி என் கூட இல்லையே” என்றான். அவனின் வார்த்தையில் இப்போது கவியின் முகத்தில் மெல்லிய புன்னகை. ஆனாலும் அதை வெளிக்காட்டாது, “நீங்கத்தான் என்ன விட்டுட்டு போயிட்டீங்க” என்றாள்.

“சரி விடு. இதுக்கப்புறம் எங்கப் போனாலும், என் பொண்டாட்டிய கூட்டிட்டே போறேன்” என்று வேந்தன் சொல்ல, “சும்மா சொல்லாதீங்க எம் எல் ஏ சார்” என்றாள்.

“சும்மாலாம் இல்ல. உண்மையாவே, இப்போ இந்த செகண்ட் என் பொண்டாட்டிய நான் எவ்வளவு மிஸ் பண்றேன் தெரியுமா?” என்றான்.

“உங்க அரசியல் டயலாக் எல்லாம் இங்க வேண்டாம். நானா கால் பண்ணிருக்கேன்” என்று நினைவுப்படுத்தினாள். “நீ பண்ணலன்னாலும், நானே பண்ணியிருப்பேன்” என்றான் வேந்தன்.

“அதான் பாத்தேன்னே” என்று கவி உதட்டை சுழித்து சொல்ல, “கவி” என்றான் வேந்தன்.

“என்ன?” என்று அவள் கேட்க, “பிராமிஸா உன்ன நான் ரொம்ப மிஸ் பன்றேன்” என்றான்.

அதில் இந்தப் பக்கம் கவியோ ஒரு நொடி அமைதி. பின், “எப்போ வருவீங்க?” என்றாள்.

அவளுக்கும் தான் அவனை இப்போதே பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

அவன் இல்லாத ஒரு வாரமும் அவள் சரியாக கூட தூங்கவில்லை. இப்போதும் கூட அவனின் நினைவில் தலையணையைத்தான் மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

“இப்பவே வரனும்னுத்தான் நினைக்கிறேன். ஆனா சி எம் கூட வந்திருக்கேன். அவர் கிளம்புறப்பத்தான் என்னாலையும் கிளம்ப முடியும்” என்றான்.

“அப்போ உங்க சி எம் கூடவே இருங்க” என்று இவள் உதட்டை சுழிக்க, இப்போது மெலிதாய் சிரித்தான் வேந்தன்.

அதற்குள் அவன் சிரிப்பை சினமாய் மாற்றுவது போல், அவன் பின் பக்க முதுகில் முகம் பதிய “தனியா இங்க என்ன பண்ற? அதான் நான் இருக்கேன் தான. உனக்காக எவ்வளவு நேரம் வெயிட் பண்றது” என்று ஒரு பெண் வந்து அவனைக் கட்டிப் பிடித்தாள்.

அவளின் மோன குரலில், வேந்தன் திரும்ப, இங்கே அழைப்பில் இருந்த கவிக்கோ, அவளுடைய அந்த குழையும் குரல் பிபியைத் தாறுமாறாய் ஏற்றியது.

“யாரு அவ?” என்று கவி கோவமாய் கேட்க, அதற்குள் வேந்தனோ, தன்னை கட்டிப் பிடித்தவளை, சட்டென்று விலக்கி தள்ளியிருந்தான்.

அதில் அவளோ, “இவ்ளோ ஸ்பீட் காமிக்காத. என்ன அவசரம் ரூமுக்கு போயிட்டு மிச்சத்த வச்சிக்கலாம்” என்று போதையில் பிதற்ற, இவனோ தலையில் அடித்துக் கொண்டான்.

அதற்குள்ளாக அங்கு அருள் வர, வேந்தனோ, அவன் கன்னத்திலும் ஒரு அடி விட்டான்.

இங்கே கவியோ அழைப்பை கட் செய்திருக்க, வேந்தனோ அருளிடம் இருந்த கார் சாவியை பிடுங்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியில் வந்தான்.

காரில் ஏறி அமர்ந்ததும் கவிக்கு கால் செய்ய அவளோ எடுக்கவில்லை. “ஐயோ. இப்பத்தான் அவ கொஞ்சம் இறங்கி வந்தா” என்று தனக்குள் சொல்லும் போதே, அவளிடம் இருந்து வீடியோ கால் வந்தது.

அவனுமே அதை பெரிதாய் கவனிக்காது அட்டண்ட் செய்து, “கவி. நான்” என்று சொல்ல முயன்றான்.

அதற்குள்ளாக, அவன் கன்னத்தில் இருந்த லிப்ஸ்டிக் கரையையும், அவன் சட்டையில் இழுவியிருந்த பொட்டையும் அவன் மனைவி பார்த்திருந்தாள்.

“இதுத்தான் நீங்க சொன்ன முக்கியமான வேலையா?” என்று அத்தனைக் கோவமாய் கேட்டாள். அதில் அவனோ, “ஹேய் நீ நினைக்கிற மாதிரில்லாம் இல்ல. இங்க சின்னதா ஒரு பார்டி. சி எம் கூடத்தான் வந்தேன். அதனால கிளம்ப முடியல” என்று வேகமாய் தன்னிலை விளக்கம் கொடுக்க முயற்சித்தான்.

“சி எம்மால கிளம்ப முடியலையா? இல்ல” என்றவளின் பார்வை மீண்டும் அவன் கன்னத்தை தொட்டு சென்றது. அதன் பின்னே கார் மிரரில் தன் முகத்தைப் பார்த்தவன், “சிட்” என்றப்படி அவசரமாய் கன்னத்தை துடைத்தான்.

அதை எல்லாம் பார்த்த கவியோ, “ஐ ஹேட் யூ” என்றாள். “ஹேய்.. இன்னும் நீ லவ் யூ கூட சொல்லலடி. அதுக்குள்ள ஹேட் யூ சொல்ற” என்றான்.

“நீங்க பண்றதுக்கு நான் ஐ லவ் யூ வேற சொல்லுவேன்னா? எனக்கு உங்கள பிடிக்கல. போங்க. போயி அந்த பொண்னுக் கூடவே இருங்க” என்று அழாத குறையாய் கூறினாள் கவி.

அவள் கண் கலங்கவும். “அடியே, உனக்கு என்னப் பத்தி தெரியாதா? நான் போயி” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்னே, “நாளைக்கு காலையில நீங்க இங்க வரலன்னா, நான்” என்று ஏதோ சொல்ல வந்தாள்.

“உன்னால என் வீட்ட விட்டு போ முடியாது” என்று கோவமாய் வேந்தன் சொல்ல, இவளோ, “நான் அங்க கிளம்பி வர முடியும்” என்று கோவமாய் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் கவி.

(ம் இப்போ இவ என்ன சொல்ல வர்றா? சரி எப்படியும் நம்ம வேந்தனுக்கு பெரிய ஆப்பு இருக்கு. சரி அது என்னென்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அப்புறம் இந்த ஸ்டோரி இன்னும் எத்தன நாளைக்கு இதுல இருக்கும்னு தெரியாது. சோ இப்பவே என்னொட இன்ஸ்டா ஐடி sarmi_ss ஆ பாலோ பண்ணிக்கோங்க. அதுல இந்த ஸ்டோரிய ப்ரீயா படிக்கிறதுக்கான லிங்க் ஷேர் பண்றேன். என் இன்ஸ்டால டெலிகிராம் அண்ட் வாட்சப் சேனல் லிங்க் கொடுத்திருக்கேன். அதுலயும் ஜாயின் பண்ணிக்கோங்க. அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   1

*** தேன் – 52 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***