வேந்தன் வெளியூர் சென்று இன்றோடு ஒரு வாரம் முடியப் போகிறது. ஆனால் அவன் தான், இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று சொல்லி கவியை காதல் பித்தில் தத்தளிக்க வைத்துக் கொண்டிருந்தான்.
சென்னை சென்றிருந்தவனை, அக்கட்சி தலைவர், கட்சி விஷயமாக டெல்லிக்கு தன்னுடன் அழைத்துச் சென்றிருக்க, அவனால் கவியிடம் சொல்லக் கூட முடியவில்லை.
இங்கே இவளோ அன்று அவன் வந்து விடுவான் என்று, வீட்டையே சுற்றிக் கொண்டிருந்தாள். பற்றாக்குறைக்கு அன்றுத்தான் சுஜியும் கல்லூரிக்கு செல்வதாக இருக்க, “ஸ்ப்பா, இன்னியோட இவ தொல்ல எனக்கு இல்ல” என்று விழியிடம் முணுமுணுத்தாள்.
அதற்குள் சுஜியோ, “ஹேய், இப்போ எதுக்கு என்ன இப்பவே கிளம்ப சொல்ற. மாமா கூட இன்னும் வரலத்தான. அவர் கூட போயி மாஸா இறங்குனா எப்படி இருக்கும் தெரியுமா?” என்று கேட்டாள்.
அதில் இப்போது கடுப்பான கவியோ, “ஹேய் உனக்கு அவரைப் பார்த்தா, டாக்ஸி ட்ரைவர் மாதிரி தெரியுதா? இல்ல உனக்கு பாடிகார்ட் மாதிரி இருக்கா? அவர் உன்ன காலேஜ்ல கொண்டு வந்து விடுறேன்னு சொன்னாரா?” என்று கோவமாய் கேட்டாள்.
“ச் நான் என் மாமாவ பத்தி பேசுனா, உனக்கென்ன பிரச்சன?” என்று சுஜியுடம் விடாது கேட்க, “எனக்கென்ன பிரச்சனையா?” என்ற கவியும் அவளிடம் சண்டைக்கு செல்ல, விழியோ, “ஹேய் காலையிலையே ரெண்டு பேரும் ஏன் இப்படி நிக்குறீங்க” என்று கேட்ட விழிக்கு தலை விண் விண் என்று வலித்தது.
அதன் பின்னே விழியைப் பார்த்த கவியோ, “ஹேய் உனக்கு என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்டாள்.
“என்னென்னே தெரியல கவிம்மா. ஒரு மாதிரி ஹெட்டேக்கா இருக்கு” என்று அவள் தோளில் சாய்ந்துக் கொண்டாள். அதில் சுஜியிடம் வம்பு வளர்க்காது மெல்ல அவள் தலையைக் கோதிக் கொடுத்தவள், “நைட் ரொம்ப நேரம் உட்கார்ந்து சீரிஸ் பாக்காதன்னு சொன்னா கேட்குறீயா? நில்லு நான் போயி” என்று செல்ல முயற்சித்தாள்.
“ச் அதெல்லாம் வேண்டாம். ஐயம் ஒகே” என்று சொல்லிய விழி எழப் போக, இப்போது அவள் மொபைலுக்கு மீண்டும் அன்நோன் நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. அதைப் பார்த்தவளுக்கோ, ஒரு வித கடுப்பும், கோவமும் ஒருங்கே வந்தது.
“என்ன ஒகே? ஒழுங்கா உட்காரு. நான் போயி சூடா காபி போட்டு எடுத்துட்டு வரேன். ரொம்ப முடியலன்னா, ஹாஸ்பிடல் போலாம்” என்றாள் கவி.
அதற்குள்ளாக சுஜியோ, “என்னாச்சு விழி உனக்கு. பேசாம நான் வேணும்னா காலேஜூக்கு லீவ் போட்டுடட்டுமா?” என்று கேட்டாள்.
அதில் இப்போது சுஜியை முறைத்த கவியோ, “ஒழுங்கு மரியாதையா, ட்ரைவர் வருவாரு. அவர் கூட கிளம்பி போ. முத நாளே காலேஜூக்கு லீவ் போட பாக்காத” என்று திட்டினாள்.
“ஹேய் நீங்க யாருமே வராம நான் மட்டும் எப்படி காலேஜூக்கு போறது. நான் போகல” என்று சுஜி ஒரு பக்கம் மல்லுக்கட்ட, கவிக்கோ இப்போது விழியைப் பார்த்துக் கொள்வதே பெரிய விஷயமாய் தெரிய, “ச் இன்னிக்கு காலேஜூக்கு மட்டும் போயிட்டு வா. நாளைக்கு கூட ஹாஸ்டல் கிளம்பலாம்” என்றாள் கவி.
“இல்ல” என்று சொல்ல வந்த சுஜியை விழித்தான். “ச் சுஜி. கவி சொல்றதும் சரித்தான. பர்ஸ்ட் டேவே காலேஜ் போகலன்னா, நல்லா இருக்காது. உனக்கு எங்க அண்ணாத்தான் சீட்டு வாங்கிக் கொடுத்திருக்காரு. அப்படி இருக்கிறப்ப, நீ இப்படி பண்ணா, அது என் அண்ணாக்குத்தான் கஷ்டம்” என்று அது இது என்று சொல்லி சுஜியை கல்லூரிக்கு கிளம்ப வைத்தாள்.
அவளோ செல்லும் போதே, “மாமா வந்து என்ன விட்டாத்தான் நான் ஹாஸ்டல் சேருவேன்” என்று கவியைப் பார்த்து அழுத்தி சொல்லிவிட்டுத்தான் ட்ரைவருடன் சென்றாள்.
“ச் இவள எங்க இருந்துத்தான் பிடிச்சீங்களோ?” என்று கடுப்பாய் சொல்லிய கவியும், விழிக்கு காபி போட கிச்சனுக்கு சென்றாள்.
அவள் செல்லவும், மீண்டும் விழியுடைய மொபைலுக்கு அழைப்பு வந்தது. வந்த நம்பரைப் பார்த்தவளோ, கோவமாய் அட்டண்ட் செய்து, “உனக்கு என்ன பிரச்சன? அதான் சொல்லிட்டேன் தான. திரும்ப திரும்ப அதையே சொல்லி இரிட்டேட் பண்ணிட்டு இருக்க. நான் யாருன்னு தெரியாம நீ விளையாண்டுட்டு இருக்க, என் அண்ணாக்கிட்ட சொன்னேன்னா, அடுத்த செகண்ட் நீ இருக்க மாட்ட” என்று கத்தினாள்.
அந்தப் பக்கம் சில நொடிகள் பலத்த அமைதி. அதில் இவள் கத்துவதை நிறுத்தியிருக்க, “ஹலோ, இது மிஸ்.சுடர்விழி தான” என்ற ஒரு குரல் கம்பீரமாய் அவள் காதுக்குள் கேட்டது.
அந்த குரலின் கம்பீரத்தில், ஒரு நொடி விழிக்கு வார்த்தையே வரவில்லை. அதன் பின்னே மீண்டும் அந்த நம்பரை எடுத்துப் பார்த்தாள். வேற நம்பராக இருக்க, “ஐயோ. அந்த லூசுன்னு நினைச்சி, வேற யாரையோ திட்டிட்டேன்னே” என்று தனக்குள் சொல்லியவள், “யா எஸ் நீங்க?” என்று பொறுமையாய் கேட்டாள்.
அதில் அந்தப் பக்கம் இருந்தவனோ, சிறு புன்னகையுடன், “யாருன்னே தெரியாமத்தான் என்ன அந்த திட்டு திட்டுனீங்களா?” என்று கேட்டான்.
ஏனோ அவன் வார்த்தையில் தெரிந்த அந்த மரியாதை அவனைப் பற்றி ஒரு வித நல்ல எண்ணத்தை இவளுக்கு கொடுத்தது. அதே நேரம் அந்த குரலுக்கு சொந்தக்காரனுடன் ஏதோ தனக்கு சம்பந்தம் இருப்பது போல் உள்ளுணர்வு அழுத்தி சொல்லியது.
அதில் அவளோ, “ஐயோ சாரிங்க. நான் வேற ஒருத்தர்னு நினைச்சி, அப்படி பேசிட்டேன். சரி நீங்க சொல்லுங்க. நீங்க யாரு?” என்றாள்.
அதில் மீண்டும் ஒரு நொடி அமைதிக் காத்தவனோ, அவள் முதல் சொல்லிய விஷயத்திலேயே மூழ்கியிருந்தான். அவனுடைய கண்கள் கோவத்தில் சிவந்தது. ஏனெனில், அவள் சொல்லியதை வைத்தே, அவளை யாரோ தொந்தரவு செய்கிறார்கள் என்பது புரிய, இப்போது அந்த ஒருவனோ வேந்தனைத்தான் மீண்டும் திட்டி தீர்த்தான்.
“இவன்லாம் என்ன பெரிய எம் எல் ஏ. சொந்த தங்கச்சிய எவனோ ஒருத்தன் டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கான். அவன்ன என்னென்னு கேட்க முடியல. இவன் ஊர காப்பாத்துறானா?” என்று தனக்குள் நினைத்தப்படி, “நான் ஸ்டார் சேனலோட எம் டி பேசுறேன்” என்றான்.
அதைக் கேட்டவளுக்கோ ஒரு நொடி கண் முன்னே அந்த பளபளப்பான கண்ணாடி கட்டிடம் வந்து நின்றது.
அதோடு சேர்த்து சிறு மரியாதையும் வந்து விட, “சார். நீங்க எனக்கு எதுக்கு?” என்று குழப்பமாய் கேட்டாள். “உங்களோட ரெஸியூம் பார்த்தேன். அதான்” என்று அவன் பேச, இவளுக்கோ குழப்பம். “என்னோட ரெஸியூம்மா? ஆனா நான் எந்த சேனலுக்கும் செண்ட் பண்ணலையே” என்றாள்.
சரியாக அன்னேரம் அங்கு வந்த கவியோ, “ஹேய், நான் தான் செண்ட் பண்ணேன்” என்றாள்.
“என்னது?” என்று விழி இங்கு கவியைப் பார்க்க, அதற்குள் மொபைலை வாங்கிய கவியோ, “ஹலோ சார். நான் தான் அவ ப்ரோபைல் உங்களுக்கு செண்ட் பண்ணேன். நீங்க இண்டர்வியூ ஸ்லாட் எப்போன்னு சொன்னீங்கன்னா, கரெக்டா வந்திடுவா” என்றாள்.
ஏனோ கவியின் குரலைக் கேட்ட அவனுக்கோ ஒரு நொடி பேச்சே வரவில்லை. அவனுடைய தொண்டைக் குழியில் ஏதோ ஒன்று பிடித்திழுத்தது.
“ஆ..ங்” என்று அவன் பேசும் முன்னே, அந்தப் பக்கம் விழியோ, “ஹேய் இப்போ எதுக்கு நீ வேற கம்பெனிக்கு அப்ளை பண்ண?” என்று திட்டினாள்.
விழியின் குரலில் தன்னை தேற்றி, இப்போது சற்று குரலை மாற்றி, “இண்டர்வியூ ஸ்லாட் சொல்றதா இருந்திருந்தா, எச் ஆர் டீம்மே டீல் பண்ணியிருப்பாங்க. எனக்கு, அவங்களோட வொர்க்ஸ் ரொம்ப பிடிச்சிருக்கு. சோ, நெக்ஸ்ட் வீக் அவங்க வந்து ஜாயின் பன்ணிக்கலாம். அப்பாயின்மெண்ட் லெட்டர கொடுக்க சொல்றேன். கலெக்ட் பண்ணிக்கோங்க” என்றான்.
அதைக் கேட்ட கவிக்கே ஒரு நொடி ஆச்சர்யம் தான். ஆனாலும், “ரொம்ப தேங்க்ஸ் சார். சுயரா வந்து ஜாயின் பண்ணுவாங்க” என்று சொல்லிவிட்டு கவி அழைப்பைத் துண்டித்தாள்.
அந்தப் பக்கம் தன்னுடைய ரோலிங் சேரில் சாய்ந்தமர்ந்தவனோ, கண்களை இறுக்கி மூடினான்.
யாரிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தானோ, காத்திருந்தானோ? அந்த இரு பெண்களிடமும் அவன் பேசியிருக்க, மனம் அத்தனை நிறைவாய் இருந்தது. ஆனால் அதே நேரம் அந்த வேந்தனின் மீது அத்தனைக் கோவம் வந்தது.
“எல்லாம் உன்னாலத்தான் வேந்தா. இதுக்கெல்லாம் கண்டிப்பா நீ அனுபவிப்ப” என்று தனக்குள்ளே சொல்லியவனுக்கு, இப்போது விழிக்கு தொந்தரவு கொடுப்பவன் யார் என்று அறிய வேண்டியிருந்தது.
அதனால் உடனே தன்னுடைய டிடெக்டிவ் டிபார்ட்மெண்ட்க்கு கால் செய்து, விழியுடைய மொபைல் நம்பரை ட்ராக் செய்ய கூறினான்.
பின்பு வேறொருவனுக்கு கால் செய்து, “என்னேரமும் அலார்ட்டா இருங்க. நான் டீடெய்ல் அனுப்புன அடுத்த நிமிஷம், அதுக்கு சம்பந்தப்பட்டவன் என் கண்ணு முன்னாடி இருக்கனும்” என்று கோவமாய் சொல்லிவிட்டு அழைப்பை கட் செய்தான்.
அங்கே அப்படி என்றால், இங்கே விழியோ கவியை முறைத்துக் கொண்டிருந்தாள். “ச் என்ன அப்புறம் முறைக்கலாம். முதல்ல இந்த காபிய குடி” என்று அவளிடம் நீட்ட, “என்ன பண்ணி வச்சிருக்க கவி?” என்று கோவமாய் கேட்டாள்.
“ச் காபிய குடி. நான் சொல்றேன்” என்று கவி சொல்லிவிட, அவளுக்குமே தலைவலிக்கு காபி தேவையாய் இருக்க, அதை வாங்கி குடித்தாள்.
குடித்து முடித்தவுடன், “இப்போத்தான், உனக்கும், அண்ணாக்கும் எந்த பிரச்சனையும் இல்லத்தான? அப்புறம் எதுக்கு நீ வேற கம்பெனிக்கு ட்ரைப் பண்ண?’ என்று கோவமாய் கேட்டாள்.
“நான் ட்ரைப் பண்ணேன்னு உனக்கு யாரு சொன்னா? நான் உன்னொட ரெஸ்யூம்மத்தான் செண்ட் பண்ணேன்” என்றாள்.
“என்ன சொல்ற நீ?” என்று குழப்பமாய் விழி கேட்க, “ச் நீ எனக்காகத்தான, உன் அன்னா ஆபிஸ்ல வந்து வேல பார்த்துட்டு இருக்க. அதான் நானே உன் அண்ணா ஆபிஸுக்கு போக சம்மதிச்சிட்டேன் தான. சோ நான் அங்க பார்த்துக்கிறேன். நீ ஒழுங்கா உனக்கு பிடிச்ச மாதிரி ஒரு வேலைக்கு போ” என்று உறுதியாய் கூறினாள் கவி.
“எனக்கு இந்த வேலைய பிடிச்சிருக்குத்தான்” என்று விழி சொல்ல, “ச் சும்மா சொல்லாத விழி. எனக்கு உன்னப் பத்தி நல்லா தெரியும். நான் தான் சொல்றேன் தான. நீ இங்க வேல பாக்கலன்னா கூட, நான் உன் அண்ணா ஆபிஸ விட்டு வர மாட்டேன் போதும்மா?” என்று கேட்டாள்.
“ச் எனக்கு உன் கூடத்தான் வொர்க் பண்ணனும்” என்று விழி சொல்ல, இப்போது அவளை முறைத்தவளோ, “ஏண்டி? அதான் நாள் புல்லா உன் கூடத்தான இருக்கேன். ஈவன் அதான் என்ன எங்கையுமே போக விடாத மாதிரித்தான், நீயும், உன் அண்ணாவும் ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி வச்சிருக்கீங்களே. இதுக்கு மேல நான் எங்கப் போகப் போறேன். நம்ம ஒரே வீட்டுலத்தான இனி இருக்கப் போறோம். சோ நீ உனக்கு பிடிச்ச மாதிரி இடத்துல வேல பாரு” என்றாள் கவி.
ஏனோ அவள் அத்தனை தெளிவாய் சொல்லவும், “அப்போ நான் உன்ன அண்ணின்னு கூப்பிடலாம் தான?” என்று விழி வேகமாய் கேட்க, அதில் அவளை முறைத்தவளோ, “ச் இப்படி சொல்லி சொல்லித்தான. என்ன இங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்க. இதுக்கு மேல என்ன?” என்று சலிப்பாய் சொன்னாலும் கூட, அதில் மறைமுக சம்மதம் இருக்க, “ஐயோ கவி” என்று தன் தோழியை கட்டிக் கொண்டாள் விழி.
ஆனால், அதே நேரம் அங்கே வேந்தனோ, முற்றும் முழுதாய் அப்படி ஒரு கோவத்தில் இருந்தான்.
(அட என்ன கண்ணா? இப்போ உனக்கென்ன பிரச்சன? சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தித்திக்குமா?..
Magi Kamesh
next epi podunga.. story superb