வேந்தனே வேண்டாம் என்று சொல்லியவள் தான் இப்போது, அவனின் முன்னே நின்று, “நீங்க இப்போ போய் தான் ஆகனுமா?” என்று கேட்டாள். அதில் கண்ணாடி முன் நின்று சட்டைப் பட்டனை போட்டுக் கொண்டிருந்தவன் திரும்பி அவளைப் பார்த்தான்.
அவன் மனதில் இருந்ததை அவளிடம் சொல்ல, அவளிடமும் வாய்ப்பை வாங்கிக் கொண்டு, இதோ இன்றுடன் ஒரு வாரம் முடிவடைந்திருந்தது.
பெரிதாய் எந்த முன்னேற்றமும் இல்லை என்றாலும், இப்போது அவனுடைய அணைப்பை விலக்கிக் கொள்வதில்லை. அவன் கொடுக்கும் முத்தத்தை சிறு புன்னகையுடன் ஏற்க பழகியிருந்தாள். ஆனால் இன்னும் கூட, அவனுடைய மனைவியாய் மாற, அவளுக்குள் ஏதோ ஒன்று உறுத்திக் கொண்டுத்தான் இருந்தது.
இதற்கிடையில், விழியே கவியிடம், “ஹேய்? உண்மையாவே உங்களுக்குள்ள இருந்த பிரச்சனைய சரி பண்ணிட்டீங்களா? இல்ல எனக்காக நடிக்கிறீயா?” என்று கேட்டாள்.
“நான் ஏன் உனக்காக நடிக்கனும்? அதுவும் போக எங்களுக்குள்ள எல்லாம் சரியாகிடுச்சின்னு யாரு சொன்னா?” என்று கேட்டாள் கவி.
“ஆமா சும்மாவே உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது. இதுல, இப்போ அரசியல்வாதி பொண்டாட்டி வேற, சொல்லவா வேணும்” என்று கிண்டலாய் கேட்டாள்.
“ச் விழி. முதல்ல அந்த சுஜிய இங்க இருந்து அனுப்பு” என்று கடுப்பாய் கூறினாள். ஏனெனில், அவன் அறையை விட்டு வெளியில் வந்தாலே, “மாமா. மாமா.” என்று மூச்சுக்கு முன்னூரு முறை சொல்லி, அவளை கடுப்பேத்தினாள்.
வேந்தனுக்குமே எரிச்சல் தான். ஆனாலும் கூட, கவி அதைப் பார்த்து சூடாவதைப் பார்த்து. அதை அவன் ரசித்தான். இதில் கவிக்குத்தான் பிபி ஏறி ஏறி இறங்கியது.
இப்போது விழியோ, “அவளே பாவம் படிக்கத்தான் வந்திருக்கா. இன்னும் ஒரு வாரத்துல அவளே போயிடுவா” என்றாள்.
“ச் இதையேத்தான் நீ ரெண்டு வாரமா சொல்லிட்டு இருக்க” என்று அவள் முறைக்க, “ஹேய் நான் என்னப் பண்ணட்டும்? அவங்க காலேஜ் திறக்க, இன்னும் ஒன்வீக்காகும்னு சொல்லிட்டாங்க” என்றாள் விழி.
“ச் அதுத்தான் அங்க ஹாஸ்டல் இருக்குத்தான. அங்க கொண்டு போயி விட வேண்டியதுத்தான?” என்று கவி கடுப்பாய் சொல்ல, “ஹேய் இப்போ அவத்தான் எதுவுமே பண்ணலையே. இன்னும் ஒன் வீக் தான” என்றாள்.
அதற்குள்ளாக வேந்தன் வந்திருக்க, அவனிடம் ஓடிய சுஜியை தடுத்து விட்டு, வேகமாய் அவனின் அருகில் சென்று, “லேட்டாகும்னு சொன்னீங்க?” என்று அவன் கையில் இருந்த கவரை வாங்கினாள்.
அதில் அவனோ சிறு புன்னகையுடன், “உன்ன பாக்காம இருக்க முடியல. அதான்” என்று சீண்டலாய் அவள் காதுக்குள் கிசுகிசுத்தான். அவன் வார்த்தையில், அவள் முகம் சிவக்க முயல, இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாது, முறைத்தாள்.
அவனோ இன்னும் அழகாய் சிரிக்க, அதற்குள் இடையில் வந்த சுஜியோ, “என்ன வாங்கிட்டு வந்திருக்கீங்க மாமா” என்று கவியின் கையில் இருந்த கவரை பறித்தாள்.
அவளின் செயலில், வேந்தனுக்கு எரிச்சலாக, அவனோ தங்கையைப் பார்க்க, கவியும் விழியைப் பார்க்க, “ஐயோ, இவள வெச்சி அவங்கள சேக்கலாம்னு பார்த்தா, இவ என்னையவே அவங்க கிட்ட இருந்து பிரிச்சு அனுப்பிடுவா போலையே” என்று தனக்குள் யோசித்தப்படி, “சுஜி. அது அண்ணா கவிக்கு வாங்கிட்டு வந்தது. அத அவகிட்ட கொடு” என்றாள்.
“ஏன்? அவளுக்கு வாங்குனதுன்னா, நான் பாக்க கூடாதா?” என்று சுஜி கேட்க, “பாக்க கூடாது” என்று அழுத்தம் திருத்தமாய் கூறினான் வேந்தன்.
அவன் குரலில் தெரிந்த அழுத்தத்தில், அன்னிட்சையாய் சுஜி கவரை விட்டு விட, கவியோ அதை விழியிடம் கொடுத்தாள்.
“சரி மாமா. எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க?” என்று மீண்டும் அவன் சட்டையை அவள் பிடிக்கப் போக, “இந்தப் பக்கம் வா” என்று கவி அவளை இழுத்து நிறுத்தினாள். விழியுமே இப்போது சுஜியிடம், “ச் சுஜி. அண்ணாவே இப்பத்தான் வந்திருக்காங்க. அவங்கள ரெஸ்ட் எடுக்க விடு. உனக்கு ஏதாச்சும் வேனும்னா என்கிட்ட சொல்லு. நான் வாங்கித் தரேன்” என்றாள்.
வேந்தனோ ஒரு வித கடுப்புடன் அவன் அறைக்கு சென்று விட, கவியோ, விழியிடம், “இவ கண்டிப்பா என்கிட்ட அடி வாங்கிட்டுத்தான் இந்த வீட்ட விட்டு போவா பாரு” என்று சொல்லிவிட்டு மேலே சென்றாள்.
அவர்கள் மேலே சென்றதும், இப்போது சுஜியிடம் திரும்பிய விழியோ, “நீ நாளைக்கே ஹாஸ்டல் கிளம்பு” என்றிருந்தாள். “ஹேய், இன்னும் ஒரு வாரம் இருக்குத்தான. எனக்கு இன்னும் திங்க்ஸ் கூட வாங்கல” என்று உதட்டை சுழித்தாள்.
“அப்போ ஒழுங்கா கவிக்கிட்ட வம்பு இழுக்காம இரு” என்று விழி சொல்ல, “அப்படி என்ன அவ உங்களுக்கு ஸ்பெஷல்? நான் தான உங்க அத்த பொண்ணு” என்று கேட்டாள் சுஜி.
“நீ எனக்கு வெறும் அத்த பொண்ணு மட்டும் தான். பட் கவி என்னோட பிரண்ட். அது மட்டும் இல்லாம, என் அண்ணாக்கு” என்று விழி சொல்லும் முன்னே அவளுடைய மொபைலுக்கு அன்நோன் நம்பரில் இருந்து அழைப்பு வந்தது.
இப்படியாக நாட்கள் சென்றிருக்க, இப்போது வேந்தனோ கட்சி வேலை விஷயமாய் ஒரு வாரம் சென்னை செல்ல வேண்டியிருந்தது. அதை அவன் சொல்ல, கவிக்கோ அவன் இல்லாது இருக்க முடியும் என்று தோன்றவே இல்லை.
இத்தனை நாள் அவன் அணைப்புக்குள் அடங்கியே உறங்கி பழகிவிட்டாள். இப்போது அவன் போடும் சட்டைப் பட்டனை எல்லாம், இவள் கழட்டிக் கொண்டிருந்தாள்.
அவளின் செயலில், அவள் இடையோரம் கரம் கொடுத்து தன்னோடு இழுத்துப் பிடித்தவன், “ஒரு வாரம் நான் இல்லாம நீ ஜாலியா இருக்கலாம்” என்று சீண்டலாய் கூறினான்.
அவனின் வார்த்தையில், அவளோ, அவனை முறைத்து விட்டு வேகமாய் விலகினாள். அதில் அவளை விடாது மேலும் இழுத்துப் பிடித்தவன், “என்ன? நீத்தான சொன்ன. நான் இல்லாம ஹாப்பியா இருக்கேன்னு” என்று சீண்டினான்.
“ஆமா எனக்கென்ன? நான் ஜாலியாத்தான் இருப்பேன்” என்று அவள் உதட்டை சுழிக்க, “அப்புறம் என்ன? நீ இங்க ஜாலியா இருப்பீயாம். நான் அங்க போயி ஜாலியா இருந்துட்டு வருவேன்னாம்” என்றான்.
அதில் சட்டென்று திரும்பி, “அதெப்டி நீங்க இருக்கலாம்?” என்று கோவமாய் கேட்டாள்.
“பின்ன? நீ மட்டும் இங்க ஜாலியாத்தான இருப்ப. அப்போ நான் மட்டும் ஜாலியா இருக்க கூடாதா?” என்று கேட்டான்.
“நான் ஒன்னும் ஜாலியாலாம் இருக்க மாட்டேன். எனக்கு நீங்க போறதே பிடிக்கல” என்று சிறுமியாய் உதட்டை சுழித்து, அவன் சட்டைக் காலரைப் போட்டு திருகினாள்.
அதில் அவளை மேலும் தன்னோடு இழுத்துப் பிடித்து அவள் நெற்றியோடு நெற்றி முட்டி, “எனக்கு மட்டும், உன்ன விட்டு போவனும்னு ஆசையா என்ன? ஆனா முக்கியமான வேல. தலைவரே கூப்பிட்டிருக்காரு. அதனாலத்தான் போறேன்” என்றான்.
அவளுக்கும் புரியத்தான் செய்தது. ஆனாலும் ஏனோ, அவனை விட்டு விலக அவளுக்கு விருப்பமே இல்லை. அப்படி ஒன்றும் அவனுடன் கொஞ்சி கூடவில்லைத்தான். ஆனாலும் எட்டி நின்று அவனைப் பார்க்கும் போது கிடைக்கும் சந்தோஷமே, அவளை ஒரு வித நிம்மதிக்குள் இழுத்துப் பிடித்திருந்தது.
இப்போது அதுவும் இல்லை என்றதும் அவள் முகம் பிரிவின் வலியில் இப்போதே வாடியது.
அவள் முக வாட்டத்தைப் பார்த்தவன், “ஒரு எம் எல் ஏ பொண்டாட்டி, இப்படி இருக்கலாமா? நாளைக்கு நான் போயிட்டா கூட, எனக்கு பதிலா நீத்தான” என்று ஏதோ அவன் சொல்ல வர, அவன் வாயை தன் கரத்தால் மூடினாள் கவி.
அதில் அவன் அவளைப் பார்க்க, அவள் கண்களோ கோவத்தில் சிவந்திருக்க, “இன்னொரு தடவ இப்படி சொல்லாதீங்க. நீங்கத்தான் எல்லாமே. நீங்க இல்லன்னா, அப்புறம் நானும் இருக்க மாட்டேன். இன்னொரு வாட்டி, என்னால உங்கள” என்றவளுக்கு வார்த்தை வரவே இல்லை. வேகமாய் அவனை இறுக்கி கட்டிக் கொண்டாள்.
அதில் தன்னைத் தானே திட்டிக் கொண்டவன், “ச் நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்மா. இதுக்கெல்லாம் இப்படி சீரியஸ் ஆகலாமா?” என்றான். “நீங்க ஏன் எப்போ பார்த்தாலும் இப்படியே பேசுறீங்க?” என்று கோவமாய் கேட்டாள்.
“செரி இனி பேசல போதும்மா. அதுக்குன்னு, இப்படி அழுதே என் சட்டைய நனைக்க போறீயா?” என்று கேட்டு சூழலை சரி செய்ய முயற்சித்தான்.
அதில் சட்டென்று அவனை விட்டு விலகி, அவன் சட்டையைப் பார்த்தாள். அவள் கண்ணீரின் தடம் மட்டும் அல்லாது, அவள் நெற்றியில் வைத்திருந்த சந்தனம், குங்குமம் கூட அதில் பட்டு இழுவியிருந்தது.
“அச்சோ சாரி சாரி” என்று வேகமாய் அவன் சட்டைப் படட்னை கழட்டப் போக, அவள் விரல் மீது தன் விரல் வைத்து தடுத்தவன், “பரவாயில்ல. இதுவும் புது டிசைன்னா நல்லாத்தான இருக்கு” என்றான்.
அவனின் வார்த்தையில் மெலிதாய் முகம் மலர்ந்தாலும், அவன் கரத்தில் ஒடி அடி போட்டு விலக்கிவிட்டு, “ஒரு எம் எல் ஏ, இப்படியே வெளிய போனா நல்லாவா இருக்கும்” என்று கேட்டப்படி அவளே அவன் சட்டையை கழட்டினாள்.
“அதுக்குன்னு, இப்படி சட்ட இல்லாம போனா நல்லாவா இருக்கும்?” என்று கேட்டவன், மேலும் அவளோடு ஒட்டி நின்றான். வெறும் உள் பனியனுடன் அவன் நின்றிருக்க, திரண்டிருந்த புஜங்களும், அவன் மார்பு முடியும், அவளை சில நொடிகள் மயக்கத்தான் செய்தது. அதிலும் அவனுக்கே உண்டான ஆண் வாசமும் அவளை ஏதோ ஒரு மாய சுழலுக்கு இழுத்துச் சென்றது.
அவளையும் மீறி அவள் விரல்கள், அவன் புஜத்தில் பதிய, அவனோ, “என்ன? நீ சைட்டடிக்கிற மாதிரி இருக்கேன்னா?” என்று சீண்டலாய் கேட்டு கண்ணடித்தான்.
அப்போதே இவ்வுலகம் வந்து சேர்ந்தவள், அவசரமாய் அவனை விட்டு விலகி, “முதல்ல வேற சட்டைய மாத்துங்க” என்றப்படி திரும்பினாள்.
திரும்பியவளை பின்னிருந்து மீண்டும் கட்டிக் கொண்டவன், “நீத்தான கழட்டுன. அப்போ நீத்தான போட்டு விடனும்” என்று அவள் காதுக்குள் கிசுகிசுத்தான். அதில் அவன் மீசை முடி, அவளை கிச்சு கிச்சு மூட்ட, “ச் இப்படி பிடிச்சு வச்சிக்கிட்டா, நான் எப்படி போட்டு விடுறது?” என்று கேட்டாள்.
“அதெல்லாம் உன் பிரச்சன. நீ போட்டு விட்டா சட்டையோட போறேன். இல்லன்னா, இப்படியே வெளிய போறேன்” என்றப்படி விலக முயன்றான். அவனின் பேச்சில், சட்டென்று அவன் பக்கம் திரும்பி, “இப்படியே போயிடுவீங்களா நீங்க?” என்று கோவமாய் கேட்டாள்.
“ஏன்? இதுவும் ஸ்டைலா, மாஸா நல்லாத்தான இருக்கு?” என்று தன் ஆர்ம்ஸை தூக்கி காட்டி கேட்டான். அதற்குள் வேறொரு வெள்ளைச் சட்டையை எடுத்து வந்து போட்டு விட்டவள், “ஒழுங்கா எம் எல் ஏ மாதிரி நடந்துக்கோங்க. நீங்க ஒன்னும் பாடி பில்டர் கிடையாது” என்று அழுத்திக் கூறினாள்.
“அப்போ மேடமும், நான் திரும்பி வர்ற வரைக்கும், எம் எல் ஏ பொண்டாட்டியா பொறுப்பா, இந்த வீட்டையும், குட்டிமாவையும், குறிப்பா, என் கவிக்குட்டியையும் பத்திரமா பாத்துக்கனும்” என்றான்.
அவன் சட்டையை சரி செய்தவளோ, “அப்போ என் சுடரும், அவர பத்திரமா பாத்துக்கனும். சுடர் பத்திரமா இருந்தா, அவரோட குட்டிமாவும், கவிக்குட்டியும் பத்திரமா இருப்பாங்க” என்றாள் கவி.
(பாருடா? என்ன ஒரு முன்னேற்றம்? இருக்கட்டும் இருக்கட்டும். சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பன்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பன்ணுங்க)
தித்திக்குமா?..
Shree Ram
super ♥♥💖🥰💖🥰💖🥰💖🥰💖 kavi