வேந்தனுடைய ஒவ்வொரு கேள்வியும், கவியுடைய மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க, ஒரு கட்டத்துக்கு மேல் அவனை அவளால் தவிர்க்கவே முடியவில்லை. “கண்டிப்பா நான் உன்ன கஷ்டப்படுத்த மாட்டேன்” என்று வேந்தன் சொல்லி முடிக்கும் முன்னே இறுக்கமாய் வேந்தனைக் கட்டிக் கொண்டாள்.
அவள் அணைப்பின் வேகத்தில், இங்கே வேந்தன் ஒரு அடி பின் சென்று, அவளை தாங்கி நின்றான். அவளோ, அவன் சட்டையில் முகம் பதித்து, கண் கலங்கினாள்.
அவள் கண்ணீர் அவன் சட்டையை நனைக்க, “ச் கவி” என்று தன்னில் இருந்து விலக்கி அவள் முகத்தைப் பார்க்க முயற்சித்தான்.
ஆனால் அவளோ, “ப்ளீஸ் சுடர்” என்றாள். அதற்கு மேல் அவன் அவளை தடுக்கவில்லை. சில நிமிடம் அவன் அணைப்புக்குள் அடங்கி இருந்தாள்.
ஒரு கட்டத்தில் வேந்தனோ, “கவி என்னைப் பாரு” என்றான். அவளோ, “ம்ஹூம், எனக்கு பயமா இருக்கு சுடர். என்னால. அது” என்று வெகுவாய் தடுமாறினாள்.
அவளுடைய நடுக்கம், இங்கே இவனை மேலும் இளக்க, அவள் மீது காதல் அந்த நொடி இன்னும் இன்னும் கூடியது. “என் மேல நம்பிக்க இருக்குத்தான?” என்றான்.
“ம். ஆனா என்னால” என்றவள் பெரிதாய் தடுமாற, இப்போது அவளை தன்னில் இருந்து விலக்கி, அவளைப் பார்த்தான். அவள் முகம் எல்லாம் கலங்கி இருக்க, அவள் நெற்றியில் அழுத்தி முத்தமிட்டான்.
அதை கண் மூடி வாங்கிக் கொண்டவளுக்கு, ஏனோ இன்னும் கூட அவனை ஏற்க முடியும் என்று தோன்றவில்லை. அதை அவள் மூடிய விழிகளுக்குள், அங்கும், இங்கும் அலைப்பாயும் கருவிழிகள் சொல்லியது.
அவள் கன்னம் பற்றி, “கண்ணத் திறந்து என்னைப் பாரு” என்றான். அவளோ தயங்க, “பாரு” என்று அழுத்தம் கொடுத்து கூறினான்.
மெல்ல அவள் விழி திறக்க, இவனோ, தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து அந்த தங்க செயினை கையில் எடுத்தான். அதைப் பார்த்தவளின் விழிகள் அதிர்ச்சியைக் காட்ட, “இது. இது எப்படி உங்களுக்கு” என்றவள் வேகமாய் அதை தொட்டுப் பார்த்தாள்.
அது அந்த செயின்தானா? என்று யோசித்தவளுக்கு அதுத்தான் என்று தெரிந்ததும், அத்தனை மகிழ்ச்சி. அது அவள் முகத்திலேயே தெரிந்தது.
அதைப் பார்த்தவனின் முகத்திலோ அத்தனை கனிவு. “இது நீ தொலைச்ச அந்த செயின் தான்” என்றான். அதில் அவளோ ஒரு நொடி இறுகி, “இல்ல நான் தொலைக்கல. தெரிஞ்சேத்தான்” என்று சொல்ல முடியாது தடுமாறினாள்.
“நீ தெரிஞ்சே கூட தூக்கிப் போட்டிருக்கலாம். பட் இது உன் கழுத்துல இருக்க வேண்டியது. ஈவன் அது உனக்கு மட்டும் தான் சொந்தமானது” என்றப்படி, அந்த செயினை மீண்டும் அவள் கழுத்தில் போட்டு விட்டான் வேந்தன்.
ஏனோ அவன் தாலி கட்டிய நொடியில் கூட இத்தனை நெகிழ்ந்திருப்பாளா? என்று கேட்டால், நிச்சயம் இல்லை. ஆனால் இந்த நொடி, ஏதோ மிகப்பெரிய சக்தி அவளுக்கு கிடைத்தது போல் தோன்றியது.
அதில் அவள் கண்கள் மேலும் கலங்க, கலங்கிய அவள் விழிகளை தன் இரு விரல்களால் துடைத்தவன், “இப்பயாச்சும் என்ன உன் ஹஸ்பண்டா ஏத்துப்பீயா?” என்று கேட்டான்.
அவனின் வார்த்தையில், அவளோ கோவமாய் அவனை முறைத்து, பின் வேகமாய் அவனைக் கட்டிக் கொண்டாள். முந்தைய அணைப்பு போல் எல்லாம் இல்லாமல், இப்போது உரிமையாகவே அவனைக் கட்டிக் கொண்டாள்.
அதில் இப்போது வேந்தனும் அவளை இறுக்கமாய் இறுக்கிக் கொள்ள, அடுத்த சில நொடிகள், அவர்களுக்கான நெருக்கத்தை கொடுத்தது.
ஒரு கட்டத்தில் கவித்தான் மெதுவாய் விலகி, “இத ஏன் என்கிட்ட இத்தன நாள் கொடுக்கவே இல்ல” என்றாள். “இத கொடுத்திருந்தா, அப்பவே என்ன ஏத்துக்கிட்டுருந்தீப்பீயா?” என்று கேட்டான்.
அதில் அவளோ சட்டென்று அமைதியாகிவிட, அதில் அவள் முகத்தைப் பார்த்தப்படி, “கொடுக்க கூடாதுன்னுலாம் இல்ல. எங்க என்ன வேண்டாம்னு சொன்ன மாதிரி, இதையும் வேண்டாம்னு சொல்லிடுவியோன்னு ஒரு பயம். அதான் கொடுக்கல” என்றான்.
அவன் சொல்லியதில், ஏனோ அவன் மீது இரக்கம் சுரந்தது. அதே நேரம் தன் நிலையை நினைத்து கழிவிறக்கமும் தோன்றத்தான் செய்தது.
“இப்போ கூட நான்” என்று கவி சொல்லி முடிக்கும் முன்னே, “ம்ஹூம் என் பொண்டாட்டி, என்னோட செயின்ன வேண்டாம்னு சொல்ல மாட்டா” என்று அழுத்திக் கூறினான்.
ஏனோ அவனுடைய அந்த பொண்டாட்டி, என்ற அழைப்பு கவிக்குள் ஒரு வித உவகையை கொடுத்தது. அதைத் தாண்டி, பெரிய அச்சத்தையும் கொடுக்க, “சுடர். நான் எப்படி உங்களுக்கு?” என்று தடுமாறினாள்.
“இந்த உலகத்துல உன்ன தவிர வேற யாருக்குமே அந்த உரிமைய நான் கொடுக்கப் போறது இல்ல. சோ இது உனக்கு மட்டுமே சொந்தமானது” என்றான்.
“ஏன் சுடர்? அப்படி நான் உங்களுக்கு என்னப் பண்ணேன்?” என்று கேட்டாள். “சொல்லனுமா?” என்று அவன் கேட்க, “ம்” என்றாள் அவள்.
இருவருக்குள்ளும் இருந்த நெருக்கத்தை குறைத்தவன், அவள் கன்னம் பற்றி, “முத முதல்லா, என் உசுருக்கும் மேலான என் குட்டிமாவ காப்பாத்துன. அடுத்து, என்னால என்ன முடிய்ம்னு எனக்கு புரிய வைச்ச. ஈவன், இந்த உலகத்துல என்ன நம்புன முத ஆளு நீத்தான். என்னோட அந்த வயசுலையே, நான் உன்ன பாத்துப்பேன்னு என்ன முழுசா நம்புன. கொஞ்சம் கொஞ்சமா என் மனசுல மட்டும் இல்லாம, இப்போ என் உசுரா என் முன்னாடி நின்னுட்டு இருக்க. இதுக்கு மேல நீ என்ன பண்ணனும்?” என்று தன் நெஞ்சை நீவியப்படி கூறினான்.
அரசியல்வாதி அல்லவா, அழகாய் அவளை மடக்கும் அத்தனை வார்த்தை அம்பையும் அவளை நோக்கி செலுத்தினான்.
அது நேராக அவளுடைய இதயத்தை தொட்டு செல்ல, சட்டென்று அவன் கன்னம் பற்றி, எக்கி அவன் நெற்றியில் முத்தமிட்டாள். அதை அவன் உள் வாங்கிக் கொள்ள, அவளோ, “எனக்கு தெரியல சுடர். என்னால இந்த வாழ்க்கைக்குள்ள அடாப்ட் பண்ணிக்க முடியுமா? இல்ல உங்கள நான் காயப்படுத்தப் போறேன்னான்னு எதுவும் தெரியல. ஆனா?” என்றவள் ஏதோ சொல்ல வந்து அப்படியே நிறுத்தினாள்.
அவள் அப்படி நிறுத்தவும், வேந்தன் அவளைப் பார்க்க, அவளோ, “ம்ஹூம்” என்று தலையாட்டியப்படி பின்னோக்கி அடி எடுத்து வைத்தாள்.
அதில் வேந்தனோ சட்டென்று அவள் இடையோரம் கரம் கொடுத்து, அவளை தன்னோடு இழுத்துப் பிடித்தான். அவனின் செயலில், “சுடர்” என்று ஏதோ சொல்ல வந்தாள்.
அதற்குள்ளாக, “ம்ஹூம் இதுக்கப்புறம் உன்ன நான் விலகிப் போக விட மாட்டேன்” என்றான்.
அவனின் வார்த்தையில் இப்போது கவியின் முகத்தில் மெல்லிய புன்னகை. அவள் புன்னகையில் வேந்தன் தன்னைத் தொலைக்க, “நான் உங்களுக்கு ஒன்னு கொடுக்கனும்” என்றாள்.
“ம்” என்றப்படி அவன் கன்னத்தை அவளிடம் காட்ட, இப்போது அவளோ அவனை முறைத்தாள்.
அவள் முறைக்கவும், “ஓ. கன்னத்துல இல்லையா? அப்போ இங்கையா?” என்றவன் அவன் இதழை அவளிடம் காமிக்க, இப்போது ஏனோ கவிக்கு சிரிப்புத்தான் வந்தது.
அதில் அவன் கரத்தில் நறுக்கென்று கிள்ளியவள், “என் விருப்பம் இல்லாம என்ன நெருங்க மாட்டேன்னு சொல்லிருக்கீங்க சார்” என்று நினைவுப்படுத்தினாள்.
“இப்பவும் கூட, உன் விருப்பத்துக்குத்தான கொடுத்தேன்” என்று கையை தடவியப்படி அவன் சொல்ல, “ச் விடுங்க சார்” என்று அவன் பிடியில் இருந்து விலகினாள்.
“என்ன?” என்று வேந்தன் கேட்க, “ஒரு நிமிஷம்” என்றவள் வேகமாய் அங்கே ஓரமாய் இருந்த பழைய கபோர்ட் ஒன்றை சென்று திறந்தாள். வேந்தனோ குழப்பமாய், எட்டிப் பார்க்க, அவளோ அதில் இருந்த ஒரு பாக்ஸை எடுத்துக் கொண்டு, அவனின் முன் வந்து நின்றாள்.
“என்ன?” என்று அவன் கேட்க, “திறந்துப் பாருங்க” என்று அவனிடம் நீட்டினாள். உடனே அவனுமே சிறு குழப்பத்துடன் அதை வாங்கி பிரித்துப் பார்க்க, உள்ளே ஒரு கடிகாரம் இருந்தது.
முதலில் சாதாரணமாய் பார்த்தவனுடைய விழிகள், அந்த கடிகாரத்தைப் பார்தத்தும் கண்கள் பெரிதாய் விரிந்தது. “இது. இந்த வாட்ச்” என்று தடுமாற்றமாய் அவளைப் பார்த்தான்.
“உங்க வாட்ச் தான். என்னால முடிஞ்ச அளவுக்கு சரி பண்ணியிருக்கேன்” என்று சொல்ல, சட்டென்று அவள் கரத்தைப் பிடித்து உள்ளங்கையில் முத்தமிட்டு, வேகமாய் கட்டிக் கொண்டான்.
அவனின் அணைப்பில் சற்று நெளிந்தாலும், அவன் எந்தளவுக்கு உணர்ச்சிவசப்பட்டுள்ளான் என்பது புரிந்து அமைதிக்காத்தாள்.
ஒரு கட்டத்தில் அவனாகவே விலகி, “சீரியஸ்லி, இந்த வாட்ச நான் மிஸ் பண்ணிட்டேன்னுத்தான் நினைச்சேன்” என்று சொல்லி, அந்த வாட்சிலும் முத்தமிட்டான்.
அதைப் பார்த்தவள் முகத்திலும் அழகான புன்னகை. அவனையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்தாள்.
இப்போது அவனோ, “ச் இத ஏன் நீ என்கிட்ட கொடுக்கல” என்று கேட்க, அதில் சட்டென்று அமைதியாகிவிட்டாள். எப்படி சொல்வாள்? இதைத்தான் அவனின் பிறந்த நாள் பரிசாக அவனுக்கு கொடுக்க வந்தாள் என்று.
அவள் அமைதியாகிவிடவும், அவனோ இப்போது யோசனையாய், “இது இத்தன நாள் இங்கத்தான் இருந்திச்சா?” என்று கேட்டான்.
ஏனெனில். கவியை அவன் இங்கு தூக்கி வரும் போது அவளிடம் தான் எதுவுமே இல்லையே. அவள் உடுத்தியிருந்த சேலையைக் கூட மாற்றித்தானே அழைத்து வந்திருந்தான்.
அதனால் தான் அவனுக்கு அந்த கேள்வி வர, அவளோ, “ம் ஆமா” என்று தலையசைத்தாள்.
“இதெப்டி இங்க?” என்று அவன் கேட்க, “உங்களுக்கு சந்தோஷம் தான?” என்றாள்.
“பின்ன இருக்காதா? இத மிஸ் பண்ணிட்டு, நான் எவ்வளவு நாள் பீல் பண்ணியிருக்கேன் தெரியுமா?. யு நோ, இந்த வாட்ச எனக்கு யார் கொடுத்தாங்கன்னு தெரியுமா?” என்று கேட்டான் வேந்தன்.
அவளுக்கா தெரியாது? அந்த வாட்சை சரி செய்ய அவள் எத்தனை சிரமப்பட்டாள் என்று அவளுக்கு மட்டும்த்தானே தெரியும். அவள் அமைதியாய் அவன் முகத்தில் வந்துப் போகும் உணர்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஐயோ தேனு. இப்போ நான் எவ்வளவு ஹாப்பியா இருக்கேன் தெரியுமா?” என்று கேட்டவன், வேகமாய் அவளை தூக்கி சுத்த ஆரம்பித்தான்.
அவனின் செயலில், கவியோ, “ஐயோ சுடர். என்னப் பன்றீங்க? இறக்கி விடுங்க” என்று அவள் சொல்ல, அவனோ, காதில் வாங்காது சந்தோஷ மிகுதியில் சுற்றினான்.
“சுடர்” என்று அவள் அழுத்தி சொல்ல, அதன் பின்னே மெல்ல அவளை கீழே இறக்கிவிட்டான். அவளோ முறைக்க, அவள் கன்னத்தில் மீண்டும் ஒரு முத்தமிட்டான்.
அதில் அவளோ, “ச் சுடர். சும்மா சும்மா கிஸ் பண்ணாதீங்க” என்று கன்னத்தை துடைக்க, அவனோ, “சும்மாலாம் இல்லையே. கண்டிப்பா இதெல்லாமே கடனாத்தான் கொடுக்கிறேன். சீக்கிரமே நீயும் எனக்கு திருப்பி கொடுத்திடனும்” என்றான் சுடர் வேந்தன்.
அவனின் கேலியில், அவள் முகம் அவளையும் மீறி சிவக்க, இருந்தும் அதை வெளிக்காட்டாது அவனை முறைத்தாள்.
(எப்படியோ? கவி ஒரு ஸ்டெப் முன்னாடி எடுத்து வச்சாச்சு. இதுக்கப்புறம் அது எப்படி டெவலப் ஆகுதுன்னு பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தித்திக்குமா?..
Shree Ram
kavi kavi 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘