வேந்தனுடைய கேள்விக்கு பதில் சொல்ல முடியாது கவி தடுமாறி, வேகமாய் அங்கிருந்து செல்ல முயற்சித்தாள். அதற்குள்ளாக, அவள் கையை அழுத்திப் பிடித்து, “பதில் சொல்லாம நீ போக கூடாது” என்றான்.
அதில் அயர்வாய் பார்த்தவள், பின் அவன் கண்ணைப் பார்த்து, “அன்னிக்கு நான் சொன்னதுல, உண்மை இல்லன்னு நினைக்கிறீங்களா? அன்னிக்கு உங்க மேல எனக்கு என்ன உரிம இருந்திச்சு?’ என்றாள்.
“என் மேல உனக்கு எல்லா உரிமையும் இருந்திச்சு. அது உனக்கு நல்லாவே தெரியும். பட் எனக்கு தெரிய வேண்டியது, அன்னிக்கு, உன் மேல எனக்கு உரிம இருந்திச்சா? இல்லையா? நான் யாரோ ஒருத்தனா உனக்கு? உன்னோட மனசுல சின்னதா கூட, நான் ஒரு ஓரத்துல தெரிஞ்ச ஒருத்தரா கூட உன் கண்ணுக்கு தெரியலையா?” என்று கேட்டான்.
அவனின் ஒவ்வொரு கேள்வியிலும் இங்கே இவளுடைய இதயம் பலமாய் துடித்தது. எப்படி சொல்வாள்? அவள் மீது அவனுக்கு இல்லாத உரிமையா? இல்லை அவள் உயிரே அவன் கொடுத்தது. அப்படி இருக்க, அதை அவள் சொல்லிவிடுவாளா?
அன்று அவள் அப்படி பேசிய பாவத்துக்கான தண்டனையை, இன்று வரை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள். அப்படி இருக்க, மீண்டும் ஒரு முறை அதை சொல்வாளா? அதுவும் அவன் கையால், அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் அந்த தாலியை உணர்ந்தும் சொல்லி விடத்தான் முடியுமா?
“ப்ளீஸ் சார்” என்று அவள் கெஞ்சலாய் அவனைப் பார்க்க, “எனக்கு இதுக்கான பதில் தெரிஞ்சே ஆகனும். உனக்கு என்ன பிடிக்கலன்னு சொல்லிட்ட. உன் மனசுல என் மேல எந்த அபிப்ராயமும் இல்லன்னு சொல்லிட்ட. அதெல்லாம் பரவாயில்ல. பட் நான் உனக்கு யாருமே இல்லையா? உன் மேல எனக்கு உரிமை இல்லையா? ஒரு நாள் கூட, என்ன நீ உன் சொந்தம்மா நினைச்சதே இல்லையா?” என்று கேட்டான்.
அவன் குரல் சத்தமாகத்தான் ஒலித்தது. ஆனால் அதன் பின்னே அத்தனை வலி இருந்தது. அதை அவளால் உணர முடிந்தது. அவளுடைய அந்த வார்த்தை, அவனை இத்தனை வருடத்துக்கு பின்னும், நிலைத்தடுமாற வைப்பதை அவள் உணர்ந்தாள்.
அதில் கரத்தை இறுக்கி மூடி, எதை அவனிடம் சொல்ல வேண்டாம் என்று நினைத்தாளோ? அதை சொன்னாள். “எனக்குன்னு இந்த உலகத்துல ஒரு சொந்தம் இருக்குன்னா, அது நீங்களும், விழியும் மட்டும் தான். இவ்வளவு ஏன், இவ்வளவுக்கு பின்னாடியும் என் உடம்புல உசுருன்னு ஒன்னு ஒட்டிட்டு இருக்குன்னா, அதுக்கு காரணமும் நீங்க ரெண்டு பேர் மட்டும் தான். உங்களுக்கு என் மேல உரிமை இல்லன்னு சொன்னா, நான் இந்த உயிர உடம்புல சுமக்க மாட்டேன்னு சொல்றதுக்கு சமம்” என்றாள்.
அவள் கண்கள் சிவந்து கண்ணீருக்கு தயாராக இருக்க, அவளின் அந்த வார்த்தை சுடரின் மன காயத்தை சத்தமின்றி ஆற்றியது.
அதில் அவள் கன்னம் பற்றி, “என்ன மன்னிச்சிடு. அன்னிக்கு நான் போயிருக்க கூடாது. நீயே சொல்லியிருந்தாலும், அத நான் செஞ்சிருக்க கூடாது” என்றான்.
“இல்ல” என்று கவி ஏதோ சொல்லியப்படி, விலக முயற்சிக்க, அவளை விலக விடாது, மேலும் இழுத்துப் பிடித்தவன், “இதுக்கப்புறம் நீயே சொன்னாலும் நான் போக மாட்டேன். இந்த ஜென்மத்துல இந்த சுடர் கூட என் தேனும் இருப்பா” என்றான்.
அவனின் வார்த்தையில், அவள் மனம் தடுமாற, அவளுடைய கரம் அவளையும் மீறி அவனை அணைக்க முயற்சிக்க, மின்னலென, இவ்வுலகம் வந்தவள், “முடியாது” என்றப்படி வேகமாய் திரும்பினாள்.
திரும்பியவளை பின்னிருந்து மொத்தமாய் அணைத்துக் கொண்டவன், “என்னாலையும் நீ இல்லாம இருக்க முடியாது” என்றான். அவனின் அணைப்பில், இவள் உலகம் தலைகீழாய் சுழல, அவனின் வார்த்தை அவள் கல் மனதை கரைக்க முயற்சித்தது.
“சுடர். நான்” என்றவள் வார்த்தையை தேர்ந்தெடுத்து பேச நினைக்க, “ப்ளீஸ்டீ. இதுவரைக்கும் கஷ்டப்பட்டதெல்லாம் போதும். இதுக்கப்புறமாச்சும், நீ, நான், குட்டிமான்னு ஒரே குடும்பமா சந்தோஷமா வாழலாம்” என்றான்.
ஏனோ அவன் சொல்லியதை நினைத்துப் பார்த்தவளுக்கு ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும், ஆனால் ஏனோ வேறொருவனுடன் இருந்த நாட்கள் எல்லாம் நினைவுக்கு வர அவள் தடுமாறினாள்.
அவள் அணைப்புக்குள் இருந்தவளின் உடல் அவமானத்தில் கூனி குறுகியது. அவள் விலக நினைக்க, அவளை மேலும் இறுக்கமாய் அணைத்துக் கொண்டவன், “பழச எல்லாம் விட்டுடலாம். புதுசா நம்ம ஒரு லைப்ப ஸ்டார்ட் பண்ணலாம்” என்றான்.
அவளுக்கும், அவனுடன் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க ஆசைத்தான். ஆனால் ஏதோ ஒன்று அதை தடுக்க, அவளை யோசிக்க விடாமல், “உனக்கு ஒன்னும் நான் வாழ்க்க கொடுக்கிறேன்னு சொல்லல. எனக்கு வாழ்க்க கொடுன்னுத்தான் சொல்றேன். என்னால, உன்ன தவிர வேற ஒருத்திய என் பொண்டாட்டியா இல்ல, என் குட்டிமாக்கு அண்ணியா கூட யோசிக்க முடியாது” என்றான்.
அவனின் வார்த்தையில், “ச் ஏன் சுடர் இப்படி பண்றீங்க” என்று அத்தனை ஆதங்கமாய் கேட்டாள். “எனக்கு ஒரு வாய்ப்பு கூட கொடுக்காம, முடியவே முடியாதுன்னு சொன்னா என்ன அர்த்தம்?” என்று கேட்டான்.
அவனின் கேள்வியில், “புரிஞ்சிக்கோங்க சுடர். என்னால உங்களுக்கு நல்ல ஒரு வாழ்க்க கிடைக்காது” என்றாள்.
“நீ இல்லன்னா, எனக்கு வாழ்க்கையே கிடையாது” என்றான் வேந்தன். அவனின் வார்த்தையிலும் அவன் அணைப்பின் இறுக்கத்திலும், முதன் முதலாய் கவியின் மனதில் பூட்டப்பட்டிருந்த கதவு திறக்க முயற்சித்தது.
“சுடர்” என்றவளின் குரலே அத்தனை பலவீனமாய் வந்தது. அவளை பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று அவனுக்கு தெரிந்துத்தான் இருந்தது. ஆனால் அதற்காக எல்லாம் அவன் இன்று அவளை விடப் போவதில்லை. அவனுக்கு அவள் வேண்டும். அவளை விலக விட்டால். விலகிக் கொண்டே இருப்பாள். இதற்கு மேல் முடியாது.
அதனால், “உன்னோட சுடருக்காக நீ இத கூட செய்ய மாட்டீயா?” என்று அவள் கன்னத்தில் மீசை முடி உரச கேட்டான்.
அவனின் தொடுகை ஒரு வித இதத்தை கொடுத்தாலும், பல கசப்பான நினைவுகளையும் சேர்த்தே கொடுத்தது. ஆனால் அதைத் தாண்டி அவன் வார்த்தை அவளை செயழிலக்க வைத்தது.
முற்றிலும் தடுமாற்றமான நிலை அவளுக்கு. அதில், “என்னால முடியலன்னா?” என்று சோர்வாய் கேட்டாள். “ட்ரை பண்ணாம, முடியாதுன்னு நீ எப்படி சொல்லலாம்?” என்றான் சுடர் வேந்தன்.
அவளுக்கோ குழப்பம். அவன் அணைப்பை தகர்த்தாலாவது, அவள் சற்று தன்னை நிலைப்படுத்த முயற்சித்திருப்பாள். ஆனால் எங்கே? அவன் தான் அவளை தன் அணைப்புக்குள் பூட்டி வைத்திருந்தானே.
“ப்ளீஸ் தேனு. இதுவரைக்கும், இந்த வேந்தன் யார்கிட்டையாச்சு இப்படி கெஞ்சி நீ பார்த்திருக்கீயா? எனக்காக என் கூட வாழ முயற்சிப் பண்ணிப் பாரேன். ஒரு வேள அது உன்னால முடியலன்னா, இல்ல நான் உன்ன கஷ்டப்படுத்துனா, கண்டிப்பா நீ என்ன விட்டு போலாம்” என்றான்.
“ச் இதெல்லாம் எதுக்கு? நீங்க” என்று கவி ஏதோ சொல்லப் போக, “எனக்கு உன்ன மாதிரி ஒரு குட்டி கவி வேணும்” என்றான்.
அவனின் வார்த்தையில் இவள் உடலில் மெல்லிய அதிர்வு. நொடியில். அவன், குழந்தை என்று குடும்பமாய் தன்னை நினைத்துப் பார்த்தாள்.
அவள் கண்கள் மேலும் கலங்கியது. “சுடர் என்னால முடியவே இல்ல. நீங்க என்ன ரொம்ப டவுன் பண்றீங்க” என்றாள்.
இப்போது சட்டென்று அவளை தன் பக்கம் திருப்பி, “எங்க என் கண்ண பாத்து சொல்லு. உனக்கு நான் வேண்டாமா?” என்றான்.
அவன் கண்களில், அவள் மீதான காதல் அப்பட்டமாய் தெரிந்தது. அது அவளை நிலைக்குலைய வைக்க, “நான் உங்களுக்கு வேண்டாமே சுடர்” என்று கெஞ்சலாய் கேட்டாள்.
அவள் இரு கன்னத்தையும் தன் கரத்தால் தாங்கி, “இப்படி நான் தாலி கட்டுன பொண்டாட்டியே என்ன ஏத்துக்கலன்னா, பின்னாடி யாரு என்ன ஏத்துப்பா?” என்று பாவமாய் கேட்டான்.
அவனின் கேள்வியில் அவள் அவனை முறைக்க முயல, அவள் நெற்றி முட்டியவன், “ஏத்துக்கோடி. நானும் பாவம் தான” என்று கிறக்கமாய் சொல்லி அவள் நாசியோடு நாசி உரசினான்.
அவனின் நெருக்கத்திலும், வாசத்திலும், இங்கே இவளுக்குள் போடப்பட்டிருந்த வேலி கொஞ்சம் கொஞ்சமாய் தளர ஆரம்பிக்க, “சுடர்” என்று உணர்வுகளை இழுத்துப் பிடித்தாள்.
“ஐ லவ் யூ. லவ் யூ சோ மச். உனக்காக வேண்டாம். எனக்காக. எனக்கே எனக்குன்னு, ஒரே ஒரு சான்ஸ் கொடு டி” என்றான்.
அவள் அமைதியாய் இருக்க, “ஒரு எம் எல் ஏ வ கெஞ்ச விட்டுட்டு இருக்க தெரியுமா?” என்றான். அதில் அவளோ அவனை முறைக்க, “ஹேய் இப்படி முறைச்சிட்டே இருக்காம, கொஞ்சம் எனக்காக சிரிக்கலாமே” என்றான்.
அவளோ, “நீங்க என்ன கார்னர் பண்ண ட்ரைப் பண்றீங்க” என்று சொல்ல, “சரி அப்படியே வச்சிக்கலாம். எனக்கு நீ வேணும். ஈவன் இத நான் சொல்ல கூடாது. பட் இருந்தாலும் சொல்றேன். நான் உன் புருஷன். நீ இல்லன்னு சொன்னாலும் அதுத்தான் உண்மை. சோ, பிடிக்காத புருஷனா இருந்தாலும், வாழ முயற்சி பண்ணாம போறேன்னு சொல்றது கொஞ்சம் கூட சரி கிடையாது. என் கூட வாழத்தான் ட்ரைப் பண்ணேன்” என்று அடம்பிடித்தான்.
அரசியல் வாதிக்கு பேசவா சொல்லிக் கொடுக்க வேண்டும்? இங்கே கவியோ நீரின் மீது மிதக்கும் இலையாய் அங்கும், இங்கும் அலைப்பாய்ந்துக் கொண்டிருந்தாள்.
அதில் அவள் இடையோரம் கைக் கொடுத்து அழுத்திப் பிடித்தவன், “நான் கண்டிப்பா உன் விருப்பம் இல்லாம எதுவுமே பண்ண மாட்டேன். உனக்கா எப்போ எல்லாமே ஒகேன்னு தோணுதோ? அப்போ நம்ம லைப்ப ஸ்டார்ட் பண்ணலாம்” என்றான்.
அதில் அவள் இடையில் இருந்த அவன் கரத்தை விலக்கியவள், அவனைப் பார்த்து, “ஒரு வேள என் கடந்த கால வாழ்க்க, நமக்கு நடுவுல வந்தா? என்னப் பண்ணுவீங்க?” என்று கேட்டாள்.
“உன் நிகழ்காலம், எதிர்காலம் ரெண்டுமே நானா இருக்கிறப்ப, உன் கடந்த காலத்த பத்தி எனக்கு எந்த கவலையும் கிடையாது. அது உனக்கு பிரச்சனையா இருந்தா, ஒரு ஹஸ்பண்டா அத சரி பண்றது என்னோட கடமை. அத விட்டுட்டு, உன்ன விட்டுட்டுலாம் போக முடியாது” என்றான்.
அவனின் வார்த்தை அவள் உயிர் வரை சென்று அழுத்த, “நல்லா யோசிச்சிக்கோங்க. நான் தான் வேணுமா?” என்று கேட்டாள். அதில் ஒரு நொடி அவளையே மேலிருந்து கீழாய் பார்த்தவன், “யோசிக்காம கூட சொல்லுவேன். ஆனாலும் நல்லா யோசிச்சுத்தான் சொல்றேன். எனக்கு நீத்தான் வேணும்” என்று அழுத்தம் திருத்தமாய் கூறினான்.
“இதுல நீங்க கஷ்டப்படுவீங்க” என்று அவள் சொல்ல, “நீ என் கூட இருக்கிறப்ப, எந்த கஷ்டம் வந்தாலும் எனக்கு கவல இல்ல” என்றான்.
“ஆனா” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னே, அவள் இதழை பட்டும் படாமல் முத்தமிட்டு, “கண்டிப்பா என் கூட வாழ்றதுல உனக்கு எந்த கஷ்டமும் இருக்காது. ஐ பிராமிஸ்” என்றான்.
அவனின் வார்த்தையில் அவனை முறைக்க முயன்று பின், அவனை வேகமாய் கட்டிக் கொண்டாள் வேந்தனின் கவி.
(ஸ்ப்பா. எப்படியோ பேசியே அவள கொஞ்சம் மல இறக்கியிருக்கான். அத அப்படியே கண்ட்னீயூ பண்ணி அவள மொத்தமா சரி பண்றான்னான்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தித்திக்குமா?..
Shree Ram
super vendan 👏👏👏👏💕💕💕💞💖💞💕
Amsa Veni
semmaiya irukku pa unga love story real lave nammale poi anga vazhuramathuri irukku ama sarmi love, vazhkai rendum yen vazhkai illa unga love story ha padichi tha love ippadi irukkum nu therinjikitten semma feel pa thank u more love venum and namma ak and vega pola and innum kathir story read pannala pa nallakku padikka start pannuven
Sarmi SS
April 29, 2025thanks a lot sis ❤ its means to me a lot 🤝
Vel raj
daily upload please
Sarmi SS
April 29, 2025sure bro