தேன் – 47

அன்றிரவு தொடங்கிய போராட்டம், அந்த வாரம் முடிந்தும் கூட கவிக்கு நின்றப்பாடில்லை. வேந்தனுடைய அதிரடியான செயலில், அவள் திணறிக் கொண்டிருந்தாள். இன்று கூட, அலுவலகமே செல்ல மாட்டேன் என்ற முடிவை எடுக்க வைத்திருந்தான் சுடர் வேந்தன்.

“ஹேய் ஆபிஸ்ல ஜாயின் பண்ணி முழுசா ரெண்டு மாசம் ஆகல. அதுக்குள்ள, ஆபிஸ் வர மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்?” என்று நக்கலாய் கேட்டாள் விழி.

“இங்கப்பாரு எனக்கு பயங்கரமா தல வலிக்குது. என்ன இரிட்டேட் பண்ணாம கிளம்பு” என்றாள் கவி. அன்னேரம் அங்கு வந்த வேந்தனோ, “என்னாச்சு குட்டிமா? இன்னும் நீங்க ஆபிஸ் கிளம்பலையா?” என்று கேட்டான்.

அவனின் கேள்வியில் கவியோ இப்போது வேந்தனை முறைத்தாள். ஆனால் அவனோ ஒற்றை கண் சிமிட்டி, உதடு குவித்து ஒரு பறக்கும் முத்தத்தை அவளிடம் அனுப்பினான்.

அவனின் செயலில், அவள் தடுமாற, “ச் தங்கச்சிய பக்கத்துல வச்சிக்கிட்டு என்னப் பண்ணிட்டுருக்காரு இவரு” என்று மனதிற்குள் முனுமுனுத்தாள்.

“ஸ்ட்ரைட்டாவே கூட முத்தம் கொடுப்பேன் பாக்குறீயா?” என்ற வேந்தனின் குரல் அவள் செவியோரம் கேட்க, திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

அவனோ, “சரி குட்டிமா. இன்னிக்கு எனக்கும் கூட எந்த வேலையும் இல்ல. அதனால நானே உன் அண்ணிய பத்திரமா பாத்துக்கிறேன். நீ கிளம்பு” என்றான்.

அதில் தன் அண்ணனைப் பார்த்தவளோ, அவன் என்னவோ முடிவு செய்து விட்டான் என்பது புரிய, “அப்போ சரிண்ணா. நீங்க பாத்துக்கிட்டா எனக்கு ஒகேத்தான். சரி கவி நான் கிளம்புறேன். நீ நல்லா ரெஸ்ட் எடு” என்றப்படி கிளம்ப முயன்றாள்.

“என்ன? நான் உன் அண்ணா கூட தனியா இங்கேயா?” என்று பதறியவள், “ஹேய் விழி நில்லு. நானும் வரேன்” என்றாள். ஆனால் அவளோ, “இல்ல இல்ல. உனக்கு தலவலின்னு சொன்னத்தான சோ நீ ரெஸ்ட் எடு. நான் மட்டும் போறேன்” என்றாள்.

“ஐயோ, உன் அண்ணாக்கு, அந்த தலவலியே பரவாயில்ல. நான் ஆபிஸுக்கு வரேன்” என்றவள் முதல் பாதியை முனுமுனுத்துவிட்டு, இரண்டாம் பாதியைத்தான் அவளிடம் கூறினாள். ஆனாலும் வேந்தனுக்கு அவள் சொல்லியது தெளிவாகவே கேட்டது.

அதில் கவியை மேலும் நெருங்கி, “நீ போயிட்டு வா குட்டிம்மா. உன் அண்ணிக்கு நீ தனியா போயி வேல பாத்து கஷ்டப்படுவீயோன்னு ஒரு எண்ணம். அதனாலத்தான் இப்படி எல்லாம் பேசுறா. உனக்கு ஏதாச்சும்னா அருள் கிட்ட கேளு. அவன் பண்ணிக் கொடுப்பான்” என்று சொல்லி வேந்தன் விழியை அங்கிருந்து அனுப்பி வைத்தான்.

அவளோடே செல்ல முயன்ற கவியின் கரத்தை அழுத்திப் பிடித்து நிறுத்தியவன், “நீ வாடா செல்லம். வந்து ரெஸ்ட் எடு” என்றான்.

அவனின் பேச்சில் முறைத்தவள், “ச் என்னப் பண்ணிட்டிருக்கீங்க நீங்க? என்ன விடுங்க. நான் போறேன்” என்று கடுப்பாய் அவள் சொல்ல, “அச்சச்சோ! தல ரொம்ப வலிக்குது போலையே. இங்க வா. அத்தான் நானே உன் தலைய பிடிச்சி விடுறேன்” என்று சீண்டலாய் கூறினான்.

“சுடர்” என்று அவள் பல்லைக் கடிக்க, அவனோ, “ப்பா. உன் வாயால என் பேர கேட்கிறப்ப, செம்ம ஹிக்கா இருக்கு தெரியுமா?” என்றான்.

“ஐயோ கடவுளே, ஆபிஸ்ல உங்க தொல்ல தாங்கலன்னுத்தான், நான் ஆபிஸுக்கே போகலன்னு சொன்னேன். இப்போ இங்கேயும் வந்து என்ன ஏன் இம்சைப் பண்றீங்க?” என்று கோவமாய் கேட்டாள்.

“அச்சச்சோ! இத முன்னாடியே சொல்லிருக்கலாமே” என்று அவன் பரிதாபப்பட, “அப்படி சொல்லிருந்தா மட்டும் விட்டிருப்பீங்களா?” என்று எரிச்சலாய் கேட்டாள் கவி.

“அப்கோர்ஸ். கண்டிப்பா. பட், என் கூடவே உன்ன கூட்டிட்டு போயி பத்திரமா பாத்திருப்பேண். இப்போ பாரு. வீட்டுல இருக்க வேண்டியதா போச்சி” என்று படு நக்கலாய் கூறினான்.

அவனின் நக்கலில் கடுப்பானவள், “ச் உங்க கிட்டலாம் மனுஷி பேசுவாளா?” என்று சொல்லியப்படி நகர முயற்சிக்க, அவன் விட்டால் தானே. 

“கரெக்ட் தான். என்கிட்டலாம் மனுஷியால பேச முடியாது. பட் உன்ன மாதிரி ஒரு ராட்சசி..” என்று சொல்ல வந்து பின் நிறுத்தி, “ச்சே. ச்சே ஆயிரம் தான் சொன்னாலும், யுவார் மை லவ். சோ, அப்படி எல்லாம் சொல்லக் கூடாது. அதனால உன்ன மாதிரி ஒரு தேவத பேசலாம்” என்றான்.

அவனுடைய இந்த சேட்டையில் அவளுக்கோ அத்தனை கோவம். ஆதங்கம் அத்தனை எரிச்சல். ஆனால் அவனோ எதுவுமே நடக்காதது போல் சிரித்துக் கொண்டிருந்தான்.

அதில் இன்னும் இன்னும் கோவம் கொண்டு செய்வதறியாது தடுமாறி, “ஏன் வேந்தன் சார் இப்படி எல்லாம் பண்றீங்க?” என்று சோர்வாய் கேட்டாள்.

அதில் இதுவரை இருந்த விளையாட்டுத்தனத்தை எல்லாம் நிறுத்தி விட்டு, “சரி நான் உன்கிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்குறேன். அதுக்கு மட்டும் நீ பதில் சொல்லிட்டா, இப்போ இங்க இருந்து நான் கிளம்பிடுறேன்” என்றான்.

“என்ன?” என்று கேட்க வாய் வரை வார்த்தை வந்தாலும், எப்படியும் அவன் வில்லங்கமாகத்தான் ஏதாவது கேட்பான் என்பது புரிய, ஒரு நொடி தயங்கினாள். அதற்குள்ளாக, “என்ன? கேள்வி கேட்கிறதுக்கு முன்னாடியே பதில் என்னவா இருக்கும்னு யோசிக்கிறீயா?” என்று கிண்டலாய் கேட்டான்.

“பதில் சொல்லிட்டா, கிளம்பிடுவீங்கத்தான?” என்று அவள் கேட்க, “அப்கோர்ஸ்” என்று அவன் சொல்ல, “சரி கேளுங்க” என்றாள்.

“நீ என்னையும், குட்டிமாவையும் விட்டு விலகிப் போறதுக்கு என் குடும்பத்து ஆளுங்கத்தான் காரணமா? அவங்கத்தான் உன்ன எங்கள விட்டு போக சொன்னாங்களா?” என்று நேரடியாய் கேட்டான்.

இத்தனை நேரடியான கேள்வியை அந்த நொடி அவள் சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை. வேந்தன் மிகப்பெரிய புத்திசாலி என்று தெரியும். அதிலும் எதிரில் நிற்பவன் பேசும் வார்த்தையில் இருந்தே தனக்கான பதிலை எடுத்துக் கொள்வான் என்றும் தெரியும். அதனால் சட்டென்று, “ச் உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? இதுல அவங்க எப்படி சம்மந்தப்படுவாங்க” என்று அவன் விழியைப் பார்த்துக் கேட்டாள்.

அதில் அவள் பார்வையையே சில நொடிகள் கூர்ந்துப் பார்த்தவன், “ஆக்சிவலி. நீ ஆமான்னு சொல்லியிருந்தாக் கூட எனக்கு சந்தேகம் வந்திருக்காது. பட், இவ்வளவு ஸ்பீடா நோ சொல்ற. அதுவும் என் கண்ண பாத்து பதில் சொல்றீயே? அப்போ இதுல என்னமோ இருக்கு” என்றான் வேந்தன்.

அதில் இப்போது கடுப்பானவளோ, “என்ன இருக்கு? சும்மா உங்க கற்பனைக்கு கேள்வி கேட்டா, நான் ஒன்னும் பண்ண முடியாது. இத வச்சிட்டு, நீங்க போயி உங்க வீட்டாளுங்க கிட்ட சண்ட போட்டாலும் எனக்கு எந்த கவலையும் கிடையாது” என்று தோளைக் குலுக்கினாள்.

“சண்டப் போடுறதா? நானா? அதுவும் என் குடும்பத்துக்கிட்டையா?” என்று சிறு கேலியாய் கேட்டான். அதில் அவள் அவனைப் பார்க்க, அவனோ சட்டென்று அவள் முகம் நோக்கி குனிந்து அவள் விழியைப் பார்த்து, “இதுல மட்டும் அவங்க சம்பந்தப்பட்டிருக்காங்கன்னு தெரிஞ்சிச்சு. அதுத்தான் அவங்க என் குடும்பமா இருக்கிற கடைசி நிமிஷமா இருக்கும்” என்று அத்தனை குரோதமாய் கூறினான்.

அவன் கண்களில் கோவம் கொந்தளித்தது. அந்த கோவம் முழுக்க முழுக்க, கவியை இக்கட்டில் மாட்டி விட்ட தன் இயலாமையை நினைத்து அவன் மீதும் எழுந்தது. அதை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

இதற்குத்தானே அவள் பயந்தாள். இப்போது அது நடக்க, அவளோ, “ச் குடும்பம்னா உங்களுக்கு ஈஸியா போச்சா, அதெல்லாம் என்ன மாதிரி குடும்பம் இல்லாதவ” என்று சொல்லி முடிக்கும் அவள் தாடையை அழுந்தப் பற்றி, “உன் புருஷன் நான், உன் கண்ணு முன்னாடி இன்னும் உயிரோடத்தான்ன நின்னுட்டு இருக்கேன். அப்படி இருக்கிறப்ப, உனக்கு குடும்பம் இல்லன்னு நீ சொல்லுவீயா?” என்று கோவமாய் கேட்டான்.

ஏனோ அவன் கண்ணில் தெரிந்த அந்த உரிமை உணர்வு, இங்கே இவள் மனதை என்னமோ செய்தது. ஆனாலும் அவன் உயிரைப் பற்றி எல்லாம் பேச, இவளுக்கு கோவம் வந்தது.

“ச் லூசா நீங்க? என்ன பேசுறீங்க?” என்று அவள் கோவப்பட, “முன்னாடியே சொல்லிருக்கேன். உன் வாயில இருந்து வர்ற ஒவ்வொரு வார்த்தையும், ரொம்ப கவனமா வரனும். இல்லன்னா?” என்றவன் எதுவும் சொல்லாது அங்கிருந்து செல்ல முயன்றான்.

சட்டென்று அவன் கரத்தைப் பிடித்து நிறுத்தியவள், “சரி நான் சொன்னா நீங்க கேட்பீங்கத்தான” என்றாள்.

அதில் புருவத்தை சுருக்கி, அவளைப் பார்த்து, “உன்னை விட்டு போன்னு நீ இல்ல. அந்த கடவுளே வந்து சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். அதே மாதிரி, உன்ன என்ன விட்டு போ வச்ச ஒருத்தரையும் நான் சும்மா விட மாட்டேன். சோ அத தவிர நீ என்ன வேணும்னாலும் கேளு” என்றான்.

அவனின் வார்த்தையில் இப்போது அவளோ அவனை முறைத்தாள். அவள் முறைப்பை பொருட்படுத்தாது, அவளை நெருங்கி, அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்து, “இன்னும் தல வலி இருக்கா?” என்று கேட்டான்.

அத்தனை கோவமாய் பேசியவன், சட்டென்று கனிவாய் கேட்க, அவனின் கனிவில், மனம் அவனின் பக்கம் சாய்ந்தது. அவளுக்கு அவனைப் பிடிக்கும். ஆனால் அதன் பெயர் காதல் என்றெல்லாம் இல்லை. அவளுக்காக துடிக்கும் இரு ஜீவன்களில் ஒரு ஜீவன் அவன். அதிலும், அவளுக்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் சென்று காத்து நிற்பவன். அப்படி இருக்க அவனைப் பிடிக்காது என்று சொன்னால், அவள் உயிர் கூட அவளை மன்னிக்காது.

இப்போது மெல்ல அவனை கட்டிக் கொண்டவள், “ஏன் சுடர் அன்னிக்கு என்ன விட்டுட்டு போனீங்க?” என்று கேட்டாள். ஏனோ அந்த கேள்வியை அவளாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை. அவனுக்குமே அதற்கு பதில் சொல்ல முடியவில்லை.

இப்போது அவன் உடல் இறுகியது. அவளோ தன்னை மறந்த ஒரு உலகத்தில் அவனுக்குள் புதைந்திருந்தாள். எப்படியும் அதில் இருந்து வெளியில் வந்ததும், அன்னிட்சை செயலால், என்ன சொல்வாள் என்று தெரியும்.

“நான் சொன்னா நீங்க போயிடுவீங்களா? நான் முட்டாள்தனமா ஒரு முடிவு எடுத்தா அப்படியே விட்டுடுவீங்களா? அன்னிக்கு என் இடத்துல உங்க தங்கச்சி இருந்திருந்தாலும் அப்படித்தான் விட்டு போயிருப்பீங்களா?” என்று கேட்டாள்.

அவளின் ஒவ்வொரு கேள்விக்கும் இவனிடம் எந்தப் பதிலும் இல்லை. அப்போது உள்ளவன் அவன் குடும்பத்துக்கு என்ன தேவையோ? குறிப்பாய் அவன் தங்கைக்கு என்ன தேவையோ? அதைத்தானே செய்தான். இப்படி கவியை இழந்து அவளும் அவள் வாழ்க்கையை இழந்து. இப்போது கைக்கு கிடைத்தும், இன்னும் கரைந்துக் கொண்டிருப்பார்கள் என்று தெரிந்திருந்தால் அதை எல்லாம் செய்திருக்க மாட்டான்னோ?

ஆனாலும் இன்று கேட்டான் அவளிடம். நீண்ட நாட்களாய் அவன் மனதில் உறுத்திய அந்த கேள்வியை கேட்டான்.

“அன்னிக்கு எனக்கு உன் மேல எந்த உரிமையுமே இல்லன்னு நீ சொன்னீயே. அத உண்மையா உன் மனசாலத்தான் சொன்னீயா?” என்று கேட்டான் சுடர் வேந்தன்.

உண்மையில் அவள் அன்று சொன்னாளே? “நீ யார் என் வாழ்க்கையைப் பற்றி கவலைப்பட? உனக்கும், எனக்கும் என்ன சம்பந்தம்? நான் சம்பாதித்து, நீ எனக்கு செலவு செய்த காசை எல்லாம் கொடுத்து விடுகிறேன்” என்று என்னெல்லாமோ கேட்டாளே. அந்த கேள்விக்கு பதில் சொல்ல அவனால் அந்த நொடி முடியவில்லை.

முற்றும் முழுதாய் அவளை வேறு ஒருவன் சொந்தம் கொண்டு முன் நிற்க, அந்த நொடி அவன் உயிர் துடித்ததை அவள் அறிவாளா? அவளை தொட்டவனின் கரத்தை கொய்யும் வேட்கை அவனுக்குள் பொங்கியதை இவன் தான் உணர்வானா?

பல கேள்விகள் கடந்த கால வாழ்க்கையை சுற்றியே இருக்க, நிகழ்காலம் என்ற ஒன்றுக்குள் அடி எடுத்து வைக்க முடியாது இருவருமே தடுமாறித்தான் நின்றனர்.

(வேந்தனின் கேள்விக்கு கவியின் பதில் என்னவாக இருக்கும்? அப்படின்னு அடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. ஆல்ரெடி சொன்னதுத்தான் பிரண்ட்ஸ். எழுத சுத்தமா டைம் கிடைக்கல. கொஞ்சம் வேற ஒரு வேலையில இருக்கேன். டைம் கிடைக்கிறப்ப கண்டிப்பா அப்டேட் பண்றேன். அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   2

*** தேன் – 47 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***