தேன் – 23

வேந்தனின் கேள்வியில் திடுக்கிட்டு, “என்ன?” என்று அதிர்வாய் அவனைப் பார்த்தாள். அவனோ, கையில் இருந்த காயினைக் காட்டி, “கேரம் சேம்பியன் கூட, ஒரு கேம் விளையாட சான்ஸ் கிடைக்குமான்னு கேட்டேன்” என்று அடக்கப்பட்ட புன்னகையுடன் கேட்டான்.

“ஆ..ங் அது” என்றவள் வெகுவாய் தயங்க, “சரி உனக்கு வேணும்னா நான் ஒரு சான்ஸ் கொடுக்கிறேன். இதுல மட்டும் நீ ஜெயிச்சிட்டா, நீ என்கிட்ட இருந்து என்ன கேட்டாலும் தரேன்” என்பதில் “என்ன கேட்டாலும்” என்ற வார்த்தையில் சற்று அழுத்தம் கூட்டிக் கூறினான்.

அவனின் அந்த அழுத்தம் அவளிடம் சற்று வேலையைக் காட்ட, அமைதியாய் அவனுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

அவனும் சிரித்தப்படி தன் இருக்கையில் அமர, கவியோ கலைந்திருந்த கேரம் காயினை எடுத்து அடுக்க ஆரம்பித்தாள்.

“ஹேய் ஹேய் ஒரு நிமிஷம்” என்று அவன் சொல்ல, அதில் அவளோ கேள்வியாய் அவனைப் பார்த்தாள். அவனோ அங்கிருந்து எழுந்து அங்கிருந்த அறை ஒன்றிற்கு சென்று எதையோ எடுத்து வந்தான்.

அதில் அவள் அவன் கையைப் பார்க்க, கேரம் போர்டை எடுத்து ஓரமாய் வைத்து விட்டு, டேபிளில் செஸ் போர்டை வைத்தான். இப்போது அவளோ அவனை முறைத்தாள்.

“என்ன? நீ கேரம் சேம்பியன்னு எனக்கு நல்லாவே தெரியும். அதுவும் போக விழிக்கிட்ட, நீ எப்படி விளையாடுவேன்னும் தெரியும். அதுவே நான் அப்படின்னா, நீ எப்படி விளையாடுவேன்னும் தெரியும். சோ ரெண்டு பேருக்கும் பொதுவான ஒரு கேம்மா இருக்கனும் இல்லையா?” என்றான்.

அதில் இப்போது அவள் இன்னும் இன்னும் அவனை நன்றாகவே முறைத்தாள். அதை சற்றும் பொருட்படுத்தாது, “ஈஸியா என்ன ஜெயிச்சிடலாம்னு நீ நினைச்சிட கூடாது பாரு” என்று அந்த செஸ் போர்டில் காயினை எடுத்து வைக்க ஆரம்பித்தான்.

“அத விட எனக்கு இது ரொம்ப ஈஸி” என்றாள். அதில் புருவத்தை உயர்த்தி, “இன்னும் நீ என்ன அந்த பழைய வேந்தனாவே நினைச்சிட்டு இருக்க. பட் இந்த வேந்தன நீ இன்னும் முழுசா புரிஞ்சிக்கல. ம் அதையும் இன்னிக்கு பாத்திடலாம்” என்றவன் எந்த காயின் வேண்டும் என்று அவளையே கேட்டான்.

“பிளாக்” என்று அவள் சொல்ல, அவனோ, இப்போது அந்த கருப்பு காயினை தன் பக்கம் அடுக்க ஆரம்பித்தான்.

“நான் எனக்குத்தான் பிளாக் சொன்னேன்” என்று அவள் சிறு கோவத்துடன் சொல்ல, “பரவாயில்ல, உனக்கு பிடிச்சத நான் எடுத்துக்கிறேன். எனக்கு பிடிச்சத நீ எடுத்துக்கோ. இது ஜஸ்ட் செஸ் கேம் தான” என்று சொல்லியவனின் வார்த்தையில், அந்த செஸ் என்ற வார்த்தையில் தெரிந்த அழுத்தம், இவளுக்கு முகத்தில் வியர்வை துளிகளை படர வைத்தது.

அதைக் கண்டுக் கொண்டாலும் அவன் சாதாரணமாய் இருக்க, “பேச்சு கொஞ்சம் கூட சரியே கிடையாது” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாலும், ஒரு நொடி அந்த செஸ் போர்டைப் பார்த்தாள்.

பின் அவனிடம், “நான் ஜெயிச்சிட்டா நீங்க சொன்ன மாதிரி நடந்துப்பீங்கத்தான?” என்று கேட்டாள். “அரசியல்வாதிக்கிட்ட கேட்க கூடாத கேள்வித்தான். ஆனாலும், நீ ஆசைப்பட்டுட்ட. சோ நீ ஜெயிச்சா கண்டிப்பா, நான் சொன்னத செய்றேன். பட் ஒரு வேள நீ தோத்துட்டா?” என்று கேட்டான்.

“நீங்க நினைக்கிறத ஒரு நாளும் நான் செய்ய மாட்டேன்” என்று பட்டென்று கூறினாள். அதில் அவனோ, “சரி அப்போ நீயே சொல்லு. நீ தோத்துட்டா எனக்கு என்ன கொடுப்ப?” என்று அவளிடமே கேட்டான்.

“இதுக்குத்தான் நான் வரலன்னு சொன்னேன். ஆரம்பத்துல நீங்க இதெல்லாம் சொல்லவே இல்லத்தான” என்றாள். “இன்னும் கேம் தான் ஆரம்பிக்கவே இல்லையே. சோ அதுக்கு முன்னாடியே, கொடுக்கல், வாங்கல்ல பேசிக்கிறது சரிதான?” என்று கேட்டான்.

அதில் அவனை முறைத்தவளோ, “இல்ல நான் வரல” என்று அவள் சொல்ல, “நல்லா யோசிச்சிக்கோ. அப்புறம் இப்படி ஒரு சான்ஸ் உனக்கு கிடைக்கவே கிடைக்காது. அதுவும் போக உன் திறமை மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?” என்றவன் அவளை எங்கு அடித்தால் என்ன வேலை செய்யும் என்பதை, தெளிவாய் தெரிந்து அங்கு அடித்தான்.

அதில் சில நொடிகள் யோசித்தவளோ, “சரி நான் தோத்துட்டா, என்னப் பண்ணனும். ஆனா, இந்த கல்யாணத்த ஏத்துக்கிடுறது, உங்க கூட வாழனும், இப்படி இல்லாம வேற எதுனாலும் சம்மதம்” என்றாள்.

“விவரமா பேசுறதா நினைப்பு” என்று தனக்குள் சொல்லியவன், “ஹலோ எக்ஸ்கியூஸ் மீ நீ ஒரு விஷயத்த மறந்துட்ட. நீயே என்னை தொட்டாலும், நான் உன்ன தொட மாட்டேன்னு சொல்லிருக்கேன். அப்படி இருக்கிறப்ப, நான் ஏன் அதெல்லாம் சொல்லப் போறேன்” என்று கேட்டான்.

ஏனோ அதுவும் அவளுக்கு வருத்தத்தைத்தான் கொடுத்தது. அவளுக்கே அவனிடம் அவள் என்ன எதிர்பார்க்கிறாள் என்று தெரியவில்லை. ஆனாலும் அதை முகத்தில் காட்டிக் கொள்ளாது, “சரி அப்போ என்னப் பண்ணனும்?” என்றாள்.

“நான் சொல்ற வேலைய நீ பார்க்கனும்” என்றான். “ச் இப்பவும் அதான பண்ணிட்டு இருக்கேன்” என்று அவள் சலிப்பாய் சொல்ல, “ஹலோ, இங்க நீ பண்ணிட்டு இருக்கிறது, உன்னோட கடமை. உனக்கு பிடிச்சாலும், பிடிக்கலன்னாலும், உன் கழுத்துல நான் கட்டியிருக்கிற தாலி இருக்கு. சோ உன்னோட ரூல்ஸ் படி பார்த்தா, இதெல்லாம் தாலி கட்டுன புருஷனுக்கு, ஒரு மனைவி செய்ற அத்தியவாசிய கடமை” என்று நக்கலும், குத்தலுமாய் கூறினான்.

அதில் அவனை முறைக்க நினைத்தாலும் அதை செய்யாது, “என்ன வேல?” என்று கேட்டாள்.

“இன்னும் வேல என்னென்னு டிசைட் பண்ணல. பட், நீயும், குட்டிமாவோட சேர்ந்து, நான் சொல்ற இடத்துக்கு வேலைப் பார்க்கப் போறீங்க” என்றான்.

“என்னது?” என்று கவி பெரிதாய் அதிர, அவனோ அதை சட்டை செய்யாமல், “ம் கேம் ஸ்டார்ட் பண்ணு” என்றான் வேந்தன்.

“ஆ.ங் இல்ல என்னால எங்கேயும் போ முடியாது” என்று அவள் பட்டென்று சொல்ல, “ஏன்? வேலைக்கே போகாம, இப்படியே சொகுசா இருந்திடலாம்னு நினைச்சீயா?” என்று வார்த்தையில் கடுமையைக் கூட்டி சொன்னான்.

அதில் அவளின் தன்மானம் விழித்திக் கொள்ள, “எப்பவும் நான் எங்கேயும் சொகுசா வாழனும்னு நினைச்சது கிடையாது. இங்க நான் இருக்கிறதுக்கு கூட தினமும் வேலை பார்த்துத்தான் சாப்பிடுறேன்” என்று ரோஷமாய் கூறினாள்.

“அப்போ அந்த வேலையில இருந்து நான் தூக்கிடுறேன். என் பர்மிஷன் இல்லாம, உன்னால எப்படி இங்க வேலை பாக்க முடியும்? சோ எனக்கு இந்த வேலை பார்க்க எல்லாம் ஆள் இருக்கு. நீ வேலைக்கு போயி எனக்கு சம்பாதிச்சுக் கொடு” என்றான்.

ஏனோ அந்த வார்த்தையில் கவியின் மனதில் ஒரு நொடி மெல்லிய சலனம். அவனை நிமிர்ந்துப் பார்த்தாள். அவள் அடிக்கடி விழியிடம் சொல்லும் வார்த்தைத்தான், “ஏன் நான் வேலைக்கு போயி என் ஹஸ்பண்ட்க்கு சம்பாதிச்சுக் கொடுக்க கூடாதா?” என்று சொல்லியது சட்டென்று நினைவுக்கு வந்தது.

அதில் அவளோ இப்போது, “ஏன்? எம் எல் ஏ வா இருந்து சம்பாதிக்கிறது பத்தலையோ” என்று கடுப்பாய் கேட்டாள். “ம் எம் எல் ஏ வா இருந்து சம்பாதிக்கிறது, தங்கச்சிக்கும், பொண்டாட்டிக்குமே பத்தல. அப்படி இருக்கிறப்ப, குழந்த குட்டின்னு வந்தா வேணும்ல. அப்போ என் பொண்டாட்டியும் சம்பாதிச்சுக் கொடுத்தா நல்லதுத்தான” என்றான்.

அதில் அவள் உள் மனதுக்குள் ஏதோ ஒன்று பொங்கி வெளியில் வர துடித்தது. ஆனாலும் அதை இழுத்துப் பிடித்து, “உங்க பொண்டாட்டின்னு நீங்க சொல்றவ, உங்களுக்கு அவமரியாதைய மட்டும் தான் சம்பாதிச்சுக் கொடுப்பா. அதனால, தேவையில்லாத கற்பனைய வளர்த்துக்காதீங்க” என்று வெடுக்கென்று சொல்லிவிட்டு தன்னுடைய முதல் காயினை நகர்த்தினாள்.

அவளின் பேச்சில் சுள்ளென்ற கோவம் எழுந்தாலும், அதை முகத்தில் வெளிக்காட்டிக் கொள்ளாது, “விளையாட்டு ஆரம்பிக்கிறப்பையே, நான் தான் ஜெயிப்பேன்னு சொல்ற” என்று சொல்லியப்படி அவனும் காயினை நகர்த்தினான்.

“இன்னிக்கு உங்கள நான் ஜெயிச்சு காமிக்கிறேன்” என்று சொல்லியப்படி, அவளும் கேம்மை மும்முரமாக விளையாட ஆரம்பித்தாள். ஆனால் அவனோ விளையாட்டில் கவனத்தை பதிக்காது, அவளையேத்தான் பார்த்திருந்தான்.

“ம் சும்மா சொல்லக் கூடாது, நடு ராத்திரி கூட என் பொண்டாட்டி அழகாத்தேன் இருக்கா. வேந்தா நீ அதிர்ஷடக்காரன் தான். என்ன? இப்புடி தள்ளி வச்சே மனுஷனா சாவடிக்கிறா” என்றவனின் பார்வை, அவள் மேனியில் பாரபட்சமே இன்றி பாய்ந்தது. ஏனோ பார்வை செல்லும் இடம் இல்லாம், அவனும் செல்லத் துடித்தான்.

அவளோ அவனுடைய காய்களை வரிசையாய் வெட்டிக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் கவியின் மனமோ, “என்னமோ பெருசா பேசுனாரு? இப்போ என்னென்னா, வேணும்னே தோத்துட்டு இருக்காரு. தோத்தா என்ன டைவர்ஸ் பண்ணனும்ன்ற பயமே அவர்கிட்ட இல்லையா?” என்று கவலையும் பட்டது.

“ச்சே என்ன மானங்கெட்ட மனசோ? அப்படியும் கேட்குது. இப்படியும் சொல்லுது. ச் கவி நீ போகஸ் பண்ணி விளையாடு” என்று தன்னைத் தானே திட்டியப்படி, அவள் காயினைப் பார்க்க ஆரம்பித்தாள்.

ஆனால் அவனோ, இப்போது, சற்று பட்டும் படாமல் தெரிந்த அவளின் வெற்றிடையை பெரும் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அன்றொரு நாள் அவள் வயிற்றில் முகம் புதைத்து அதை முத்தமிட்ட நினைவு வர, இப்போது அவனின் உள்ளமோ அதற்கும் மேல் ஒரு அடிப் போய், கடித்துப் பார்க்க ஆசைப்பட்டது.

சட்டென்று ஏதோ உள்ளுணர்வு உந்த, நிமிர்ந்துப் பார்த்த கவியோ, அவன் கண்ணில் தெரிந்த தாபத்தில், ஒரு நொடி அதிர்ந்து, அவன் பார்வை சென்ற இடத்தைக் கவனித்தவளுக்கோ கோவம் எட்டிப் பார்த்தது.

வேகமாய் அவள் புடவையை சரி செய்துக் கொள்ள, அப்போதும் பார்வையை விலக்கிக் கொள்ளாது, “கீழ சரி பண்ணிட்ட மேல எப்போ பண்ணுவ” என்று கிண்டலாய் கேட்டப்படி காயினை கையில் எடுத்தான்.

அவனின் பேச்சில், “என்ன?” என்று பதறியவள் வேகமாய் தன் மாராப்பு சேலையை சரி செய்யப் பார்க்க, அதுவோ சரியாகத்தான் இருந்தது. அதில் அடக்கப்பட்ட சிரிப்புடன், “நான் தலை முடி கலைஞ்சிருக்குன்னுத்தான் சொன்னேன்” என்றான்.

அவனின் சீண்டல் பேச்சில், அவனை முறைத்தவள், “அங்க உங்க சிப்பாய்ல இருந்து குதிரை வரைக்கும் எல்லாம் கலைஞ்சி கிடக்கு. முதல்ல அதப் பாருங்க. அப்புறம் ரொம்ப ஈஸியா என்கிட்ட தோத்துடுவீங்க” என்றாள்.

“உன்கிட்ட தோக்குறதுல எனக்கொன்னும் பிரச்சன இல்ல. ஆனா, அது காதலா இருக்கனும். இல்லையா கட்டிலா இருக்கனும்” என்று சரசமாய் அவன் சொல்ல, இவளுக்குத்தான் இப்போது திணறியது.

அவள் திணறிய தருணத்தில் அவள் பக்க காய் ஒன்றை அடித்து அவள் கையில் கொடுத்தான்.

பின் மெதுவாய், “கலைஞ்சிருக்கிறத எப்படி மறுபடியும் சேர்க்கனும்னும் தெரியும். அதே மாதிரி சரி பண்ணத எப்படி மறுபடியும் கலைய வைக்கனும்னு தெரியும்” என்றவனின் பார்வை அவள் இடையையும், அவள் தேகத்தையும் தழுவி, பின்னே கடைசியாய் செஸ்போர்டைப் பார்த்தது,

அவனின் பார்வையும், அவன் வார்த்தை சொல்லிய பொருளும், அவள் உடலை அதிர வைத்தது. அவனோ அவளைப் பார்த்தப்படியே அடுத்து ஒரு காயையும் வெட்டி அவள் கையில் கொடுத்தான்.

இப்போது சுதாரித்தவள், மறுபடியும் தன் கவனத்தை திருப்பி, விளையாட்டில் மூழ்க, இப்போது வேந்தனிடம் இருந்த முக்கால்வாசி காய்கள் வெளியேறியிருந்தது. கிட்ட தட்ட வெற்றிப் பெறும் நிலையில் இருந்தாள் தேன்கவி.

“என்ன சார்? தோத்துடுவீங்க போலையே” என்று கிண்டலாய் சொல்லியப்படி அவள் அடுத்த காயை நகர்த்தப் போக, இப்போது வேந்தனின் முகத்தில் அத்தனை கலக்கம். அவன் முகத்தைப் பார்த்தவளுக்கு எடுத்த காயை நகர்த்த முடியவில்லை. 

வேந்தன் கலங்குகிறானா? அதைப் பார்த்து அவனின் கவியால் அமைதியாய் இருக்க முடியுமா?

(ம் வேந்தன்ன நம்ம கவி ஜெயிச்சிடுவாளா? செரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   2

*** தேன் – 23 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***