கவியோ விழியைப் பற்றிய யோசனையிலேயே ஹாலில் அமர்ந்திருந்தாள். விழியோ, ஏதோ ஆபிஸ் கால் என்று சொல்லிவிட்டு, அறைக்குல் இருந்தாள்.
“இல்ல இல்ல சுடர் கிட்ட சொல்லனும்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டிருக்க, நேரம் பத்தைத் தாண்டியும் அவன் வந்திருக்கவில்லை. இப்போதெல்லாம் அவன் வீட்டுக்கு வருவதே சற்று தாமதமாகத்தான் இருந்தது.
அதனால் அவளுமே, அவனுக்காக காத்துக் கொண்டிருக்க, அவனுடைய ஜீப் சத்தம் கேட்க, வேகமாய் வெளியில் வந்தாள். உடன் அருளும் வந்திருந்தான்.
இருவருமே பார்க்க அத்தனை சோர்வாய் தெரிய, இவளைப் பார்த்ததும், “சரி. நான் சொன்ன மாதிரி பண்ணிடு. நான் காலையில வந்து பாக்குறேன்” என்றான்.
“சரிங்க சார்” என்று சொல்லிவிட்டு அவனும் அங்கிருந்து சென்று விட, இப்போது வேந்தனோ அவளைப் பார்த்து புன்னகைக்க முயன்றான்.
ஆனாலும் முகத்தில் சோர்வு அப்பிக் கிடக்க, “என்னாச்சு? இன்னும் தூங்கலையா நீ?” என்றான். வந்த உடனே விழியைப் பற்றி சொல்லத்தான் நினைத்தாள். ஆனாலும், அவன் முகம் பார்த்து, “என்னாச்சு? ரொம்ப வேலையா?” என்றாள்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல. வா. நீ சாப்டீயா” என்றப்படி அவளுடன் வீட்டுக்குள் நுழைந்தான்.
“நீங்க போயி ரிபிரஸ் ஆகிட்டு வாங்க. நான் போயி சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று கவி சொல்ல, “சாப்பாடா? இல்ல” என்று சொல்ல வந்தவன், பின் அவள் அவனை அழுத்தமாய் பார்க்கவும், “சரி ரூமுக்கு கொண்டு வறீயா? கொஞ்சம் டயர்டா இருக்கு” என்றப்படி படியேறினான்.
அவளுமே, சரி என்று தலையாட்டிவிட்டு, கிச்சனுக்குள் செல்ல, இங்கே வேந்தனோ அலுப்பு தீரும் மட்டும் நன்றாக குளித்தான். அவன் வெளிவரும் நேரம் அவனுக்கான சாப்பாடோடு கவியும் வந்திருக்க, “குட்டிமா சாப்டாச்சா?” என்று கேட்டான்.
“ஆ..ங் எல்லாரும் சாப்டாச்சு. நீங்க வந்து சாப்டுங்க” என்று சொல்லிய கவி, அவனுக்கு பரிமாறினாள். ஏனோ அத்தனை களைப்பில் வீடு வந்தவனுக்கு, அவள் இப்படி தன்னருகில் நின்று கவனிப்பது ஒரு வித சுகத்தைக் கொடுத்தது.
இன்னும் கூட அவளை இழுத்து மடியில் அமர்த்தி சாப்பாடு ஊட்டி விட ஆசைத்தான். ஆனால் என்ன செய்வது? இன்னும் கவி மனதளவில் முழுதாய் சரியாகவில்லை என்று அவனுக்கு தெரியும். அதனால் அவளை சங்கடப்படுத்துவது போல் எதையும் செய்துவிடக் கூடாது என்பதில் தெளிவாய் இருந்தான்.
அதற்குள் அவள் தான், “என்ன பார்த்தது போதும். சாப்டுங்க” என்றப்படி அவனின் அருகில் அமர்ந்தாள்.
“நீ சாப்டீயா?” என்று அவன் மீண்டும் திருப்பிக் கேட்க, அதில் மெலிதாய் சிரித்தவள், “நான் சாப்பிடாம, உங்க தங்கச்சி சாப்ட மாட்டா” என்றாள்.
அதன் பின்னே அவன் சாப்பிட ஆரம்பிக்க, அவனை சில நொடிகள் இமைக்க மறந்துப் பார்த்தாள். அறியாத வயதில், அவள் அவனிடம் ‘பசிக்குது’ என்று சொல்லியிருக்க, ஏனோ அதன் பின், தெரியாமல் கூட அவள் அதை கேட்டு விடக் கூடாது என்பதில் அத்தனைக் கவனம். எங்கு சென்றாலும், எப்போது பார்த்தாலும் அவனிடம் இருந்து வரும் முதல் கேள்வி அதுவாகத்தான் இருக்கும்.
“நீ மட்டும் என்னையவே பாக்குற?” என்று அவன் கேட்க, “எனாச்சுங்க? ரொம்ப வேலையா?” என்று சிறு அக்கறையுடன் கேட்டாள்.
“எம் எல் ஏக்கு வேல இல்லன்னாத்தான் ஆச்சர்யம்” என்று சொல்லியவன், ஒரு வாய் உணவை அவளுக்கு ஊட்ட, அவளும் எதுவும் சொல்லாது வாங்கிக் கொண்டாள்.
“சாப்டு முடிச்சதும், விழிய பத்தி பேசனும்” என்று குறித்துக் கொண்டாள். அதற்குள் அவன் கை கழுவும் முன்னே அவனுடைய மொபைல் அடிக்க, அவன் அதை எடுக்க சென்றான்.
“ச் முதல்ல தண்ணிய குடிங்க” என்று அவள் அழுத்தி சொல்ல, “சரிங்க மேடம். நீங்க சொல்லி கேட்காமலா” என்று அப்போதுமே அவளிடம் சொல்லிவிட்டே தண்ணீரை எடுத்துக் குடித்தான்.
அதன் பின் மொபைலை எடுத்துப் பார்க்க, அருளிடம் இருந்துத்தான் அழைப்பு வந்தது.
அதில் அவன் அட்டண்ட் செய்து, “என்னாச்சு? இப்பத்தான கிளம்புன” என்றவன் கேட்க, அந்தப் பக்கம் என்ன சொல்லப்பட்டதோ, “என்ன? ச் இதுக்குத்தான் முதல்லையே அத பண்ண சொன்னேன்” என்றவனுடைய முகத்தில் இதுவரை இருந்த இளக்கம் மறைந்து இறுக்கம் கூடியது.
அதில் அவன் எழுந்து சென்று விட, இப்போது கவியோ, “என்னாச்சு? எதுவும் பிரச்சனையா இருக்குமோ?” என்று யோசிக்கும் போதே, பேசி முடித்து வந்தவன், “கவி. நீ தூங்கு. எனக்கு கொஞ்சம் வேல இருக்கு. நான் போயிட்டு வந்துடுறேன்” என்றான்.
“இப்பத்தான வந்தீங்க?” என்று அவள் கேட்க, “இல்ல. இப்போ நான் போயே ஆகனும்” என்று சொல்லும் போதே, மீண்டும் அவனுடைய மொபைல் அடிக்க, கட்சி தலைவர் அழைத்திருந்தார். அதற்கு மேல் அவனால் அங்கு இருக்க முடியவில்லை. அவரிடம் பேசியப்படியே ஜீப் சாவியை எடுத்துக் கொண்டவன், கவியிடம் தலையசைத்துவிட்டு கிளம்பியிருந்தான்.
அதனால் அன்று விழியைப் பற்றி, அவளால் பேச முடிந்திருக்கவில்லை. அன்று மட்டும் அல்லாது, அதற்கு பின்னும் கூட, வேந்தன் தாமதமாகத்தான் வீட்டுக்கு வந்தான். வந்ததும் அவன் உறங்கிவிட, இவளாலும் எதுவும் செய்ய முடியவில்லை.
இதற்கிடையில் விழியிடமும் நிறைய மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்திருந்தது. முன்பென்றால், அவள் முன் அமர்ந்தே போன் பேசுவாள். இப்போதெல்லாம் அழைப்பு வந்தாலே, அவள் தனியே சென்று விடுவாள்.
கிட்ட தட்ட, அடுத்தடுத்த வாரங்கள் ஓடியிருந்தது. அன்றும் அப்படித்தான். விழி தாமதமாக வீட்டுக்கு வந்திருக்க, கவியோ, “என்னாச்சு விழி? ஏன் இவ்ளோ லேட்?” என்றாள்.
“லேட்டா?” என்று விழி மணியைப் பார்க்க, அதுவோ ஒன்பது மணி என்று காட்டியது.
அதில் அவளோ, “ஹேய் வர வர நீ ஸ்ட்ரிக்ட் அண்ணியாகிட்ட தெரியுமா? ஒன்பது மணி எல்லாம் லேட்டா?” என்று கேட்டாள்.
“உன் ஆபிஸ் ஐஞ்சு மணிக்கு முடிஞ்சிடும்த்தான?” என்று கவி கேட்க, “ஆபிஸ் முடிஞ்சிருச்சி. பட் பார்டி ஒன்னு இருந்திச்சு. அதான். ஈவன் நான் தான் இருக்கிறதுலையே சீக்கிரமா கிளம்பி வந்தது தெரியுமா?” என்றாள்.
ஆம் இப்போதெல்லாம் அடிக்கடி பார்டி, அது, இது என்று வீக்கெண்ட்களிலும் அலுவலகம் சென்றிருந்தாள்.
பெரிய பெரிய கம்பெனிகளில் இதெல்லாம் சாதாரணம் என்று புரிந்தாலும் கூட, ஏனோ அவளுக்குள் மெல்லிய பயம். அப்போதென்று பார்த்து, வேந்தனும் வந்திருந்தான்.
அதிசயத்திலும் அதிசயமாய், அவன் அன்று சீக்கிரம் வந்திருக்க, வேந்தனைப் பார்த்ததும், “அண்ணா” என்று ஓடி சென்று கட்டிக் கொண்டாள் விழி.
அவனுமே தங்கையைப் பார்த்து பல நாட்கள் ஆகியிருக்க, “என்னடா குட்டிமா? எல்லாம் ஒகேத்தான?” என்று அவள் தலையைக் கோதிக் கொடுத்தான்.
“எனக்குலாம் ஒகேத்தான்ணா. ஆனா, அண்ணிக்குத்தான், என்னப் பத்தி அவ்ளோ பயம்” என்று சீண்டலாய் அவள் சொல்ல, கவியோ அப்போதும் தெளியாஅ பாவனையில் தான் இருந்தாள்.
“என்னப் பயம் அவளுக்கு?” என்று கவியைப் பார்க்க, “என்ன இன்னும் சின்ன பிள்ளைன்னே நினைக்கிறா” என்று குற்றப் பத்திரிக்கை வாசித்தாள்.
அதில் அவனோ, “எங்களுக்கு நீ எப்பவுமே சின்னப் பிள்ளத்தாண்டா” என்றான். “அட்லீஸ்ட், இதாச்சும் உங்களுக்கு புரிஞ்சதே” என்றாள் கவி.
“அண்ணா! என்ன நம்பி, எங்க எம்டி, எவ்வளவு பெரிய வேலை எல்லாம் கொடுத்திருக்கார் தெரியுமா? நீங்க என்னென்னா, இன்னும் என்ன சின்னப் புள்ளன்னு சொல்லிட்டு இருக்கீங்க” என்று முகத்தை சுருக்கினாள்.
“அப்படியா? ஆமா புது ஆபிஸ் எல்லாம் எப்படி இருக்கு?” என்றவனும் அப்போதுத்தான் அது குறித்துக் கேட்டான்.
“சூப்பரா இருக்கு அண்ணா” என்று அவள் சொல்ல, “உன் அண்ணி செலக்ட் பண்ண கம்பெனியாச்சே. அப்போ சூப்பராத்தான் இருக்கும்” என்றான்.
“ஆமாண்ணா. அதுலையும் எங்க எம்டி செம்ம ஸ்வீட். அவர் கொடுக்கிற இன்புட் எல்லாம் அவ்ளோ யூஸ்புல்லா இருக்கும்” என்றவள், ஆர்யனைப் பற்றி பேச ஆரம்பித்தாள்.
அது, வேந்தனுக்கு வித்தியாசமாய் தெரியவில்லை. ஆனால், கவிக்குத்தான், உறுத்தியது. ஏனெனில் அந்த எம்டியைப் பற்றி பேசும் போதெல்லாம், விழியுடைய கண்களில் வந்துப் போகும் ஒரு வித உணர்வு, நிச்சயம் கவிக்கு மிகப்பெரிய அச்சத்தை உருவாக்கியிருந்தது.
கவி அப்படியே நின்றிருக்க, “சரிடா. சாப்டீங்களா?” என்று இருவரிடமும் கேட்க, “இல்லண்ணா. நீங்க வாங்க. நம்ம மூனு பேர் சேர்ந்து சாப்பிடலாம்” என்றாள் விழி.
“சரிடா” என்றவனும், மேலே சென்று விட, இப்போது விழியோ, “செரி கவி. நானும் போயி ட்ரஸ் சேஞ் பண்ணிட்டு வரேன்” என்றப்படி உள்ளே அறைக்கு சென்றாள்.
இப்போது கவியோ, “நான் தான் ரொம்ப ஓவரா திங் பண்றேனோ?” என்று தனக்கு தானே கேள்வி கேட்டவளுக்கு, பதில்த்தான் கிடைக்கவில்லை.
அதன் பின் மூவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, விழியோ சாப்பாட்டில் ஒரு பார்வையும், மொபைலில் இன்னொரு பார்வையையும் பதித்திருந்தாள்.
இதற்கிடையில் வேந்தன் வேறு இரு முறை அவளிடம் எது குறித்தோ கேட்டிருக்க, அது அவள் காதிலேயே விழவில்லை. அதில் சற்று கடுப்பான கவி, சட்டென்று அவள் கையில் இருந்த மொபைலை பிடுங்கினாள்.
சரியாக அன்னேரம் தான் ஆர்யனிடம் இருந்து, “சீரியஸ்லி, இன்னிக்கு பார்டில உன்னோட டான்ஸ். வேற லெவல்” என்று குறுஞ்செய்தி வந்திருந்தது. அதற்கு முன் அவளோ, “இன்னிக்கு பார்டில உங்கள மிஸ் பண்ணேன்” என்று அனுப்பியிருந்தாள்.
எங்கே மெசேஜ்ஜை கவி பார்த்து விடுவாளோ என்ற பயத்தில், “என்ன கவி? இப்போ எதுக்கு மொபைல்ல பிடுங்குன” என்று சிறு கோவத்துடன் கேட்டாள் விழி.
“சாப்பிடுறப்ப என்ன போன்னு?” என்று கவி கேட்க, “ச். முக்கியமான விஷயம். அதான் பேசிட்டு இருந்தேன். அத கொடு” என்று வேகமாய் அதை கவியிடம் இருந்து பிடுங்கினாள்.
அதில் வேந்தனோ, “என்ன குட்டிமா இது? இப்போ எதுக்கு கவிக்கிட்ட இப்படி குரல்ல உசத்தி பேசுற” என்றான். ஏனெனில், இப்படி எல்லாம் தங்கை கவியிடம் பேச மாட்டாளே. இதென்ன புது பழக்கம். அதுவும் போக, கவி இப்போது அவளுடைய தோழி மட்டுமே கிடையாது. அப்படி இருக்க, நிச்சயம் இப்படி அவள் பேசுவது சரியும் கிடையாது. அதனாலையே அவன் கேட்டான்.
“இல்லண்ணா. அது கொஞ்சம் இம்பார்டண்ட் ஒர்க். அதான்” என்று குரலை தாழ்த்தினாள்.
“என்ன வேலையா இருந்தா என்ன? சாப்பிடுறப்ப மொபைல் பாக்குறது தப்புன்னு உனக்கு தெரியாதா?” என்றான்.
ஏனோ கவிக்குத்தான் மெல்லிய பதட்டம். எங்கே தன்னால், அவர்கள் இருவருக்குள் எதுவும் பிரச்சனை வந்துவிடுமோ என்று, அதனால் வேகமாய், “ஐயோ! என்ன சுடர் நீங்க? எங்களுக்குள்ள நாங்க சும்மா விளையாடிட்டு இருக்கோம். நீங்க சாப்பிடுங்க” என்றாள்.
ஆனால் விழிக்குமே அண்ணனுடைய கோவம் புரிந்தது. அவளுக்குமே கவியிடம் கோவப்பட்டது அதன் பின்னே புரிய, “சாரி கவி. நான் ஏதோ தெரியாம. தப்புத்தான்” என்று காதைப் பிடித்துக் கொண்டாள்.
அவளின் செயலில், இப்போது கவியோ, “ஹேய், என்னாச்சு உனக்கு? இப்போ எதுக்கு சாரி, அது இதுன்னு சொல்லிட்டு இருக்க. சாப்டு” என்றாள்.
ஏனோ விழிக்கு அப்போதுமே கவியிடம் அப்படி பேசியது ஒரு வித குற்ற உணர்ச்சியை கொடுத்திருக்க, சாப்பிடாது உணவை பிசைந்தாள்.
அதில் கவியோ, “ஹேய் உனக்காக ஸ்பெஷலா நான் சமைச்சது. இன்னும் எப்படி இருக்குன்னு கூட சொல்லல” என்றப்படி அவளே சாப்பாட்டை எடுத்து அவளுக்கு ஊட்டினாள்.
அவள் ஊட்டவும், இப்போது அதை மறுக்காது வாங்கிக் கொண்டவள், அதன் பின், அவளுமே கவிக்கு உணவை ஊட்டினாள். ஏனோ அதன் பின் தான் வேந்தனுக்கு மனம் சற்று அமைதியானது.
அவனுக்கு விழி எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு கவியும் முக்கியம். அதே நேரம் அவர்களுக்குள் எப்போதுமே சின்ன பிரச்சனைக் கூட வந்து விடக் கூடாது என்பதிலும் அவன் உறுதியாய் இருந்தான்.
இப்படியாக செல்ல, அதன் பின் ஆர்யன் அனுப்பிய எந்த குறுஞ்செய்தியையும் விழி பார்க்கவில்லை. அது அங்கே இருந்தவனுடைய கோவத்தை தூண்டியது.
“நோ சுடர் விழி. நீ என்ன அவாய்ட் பண்ணக் கூடாது. அதுக்கு நான் அலோ பண்ண மாட்டேன். உன் மயிண்ட்ல இதுக்கப்புறம் நான் மட்டும் தான் இருக்கனும்” என்று தனக்குத் தானே அழுத்தமாய் சொல்லிக் கொண்டான்.
அதன் பின் நேரம் ஆகியிருக்க, விழியோ கவியிடம், “என் மேல கோவம் இல்லத்தான” என்றாள். “ஹேய் லூசா நீ? உன் மேல நான் கோவப்படுவேன்னா?” என்றாள் கவி.
“தட்ஸ் மை கவி” என்று சொல்லியவள் வழக்கம் போல் அவளை மெல்ல அணைத்து அவள் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டுவிட்டு சென்றாள்.
அவள் சென்றதும், இப்போது கவியோ, “கடவுளே என் விழிக்கு எப்பவும் எந்த பிரச்சனையும் வரக் கூடாது” என்று வேண்டிக் கொண்டாள்.
அதற்குள் அறையில் இருந்த வேந்தன், “கவி” என்றழைக்க, இப்போது இவளும் வேகமாய் அவனைத் தேடி படியேறினாள். அவள் அறைக்குள் நுழைந்த மறு நொடி வேந்தனின் இறுகிய அணைப்புக்குள் இருந்தாள்.
சட்டென்று அவன் அணைக்கவும், ஒரு நொடி தடுமாறி, “சுடர்” என்றவளுக்கு உடனே அந்த அணைப்பை முழுதாய் ஏற்றுக் கொள்ள முடியாது திணறினாள்.
“ரொம்ப நாளாச்சு. கொஞ்ச நேரம் மட்டும்” என்றான். ஏனெனில், கிட்ட தட்ட ஒரு மாதத்துக்கும் மேலாக, அவனால் கவியிடம் சரியாய் பேசக் கூட முடியவில்லை. சிறு அணைப்பு கூட இல்லாது, கடந்திருக்க, இன்றுத்தான் அவனுக்கு சற்று நேரம் கிடைத்திருக்க, அதை கவியுடன் செலவிட நினைத்தான்.
அவன் எல்லை மீறாது அணைத்திருக்க, இப்போது கவியும் அவனை விலக்கவில்லை. அவனோ அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன், “நீயும் கொஞ்சமா ஹக் பண்ணிக்கலாம்” என்றான்.
அதில் இப்போது அவளோ, “இவ்ளோ டைட்டா நீங்க பிடிச்சிருந்தா, நான் கைய எப்படி அசைக்கிறது?” என்றாள். “இப்படித்தான்” என்றவன் அணைப்பை விட்டு விலக்காது, ஒரு கரத்தால், அவள் கையை எடுத்து தன்னை அணைத்துக் கொள்ள வைத்தான் வேந்தன்.
(என்ன சொன்னாலும் எங்க சுடர் வேற லெவல் தான். சரி அடுத்து என்னென்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். சரி அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தித்திக்குமா?..
Gowsi Satheesh
next episode pls
Shailu R
super sis👌👌👌
Yahmeni Yogaraj
next update pls