தேன் – 55

சுடர் கவியைத் தேடி அவனின் அறைக்குச் செல்ல, இங்கே விழிக்கோ, மீண்டும் அந்த ஸ்டார் சேனல் எம்டி யிடம் இருந்து அழைப்பு வந்தது. “ஐயோ, இன்னும் நான் அங்க போகனுமா? இல்லையான்னே முடிவு பண்ணலையே” என்று தனக்குள் யோசித்தாள்.

அதற்குள்ளாக அழைப்பு முடிந்திருக்க, இப்போது விழிக்கோ அத்தனைக் குழப்பம். அவளுக்குமே அது மாதிரியான பெரிய சேனலில் வேலைப் பார்க்க ஆசைத்தான். ஆனாலும் கவியை விட்டு தனியே செல்ல அவளுக்கு விருப்பம் இல்லை.

அதே நேரம், கவிக்கும், வேந்தனுக்கும் இடையில் இப்போது சற்று சுமூகமாக இருப்பது போல் தோன்ற, அவர்களுக்கு தனிமை கொடுக்கவும் யோசித்தாள்.

இப்படியே அடுத்த சில பல நிமிடம் யோசித்திருப்பாள். அதன் பின் ஒரு முடிவு எடுத்தவளாய், இப்போது அவளே அந்த ஸ்டார் கம்பெனி எம்டி ஆர்யனுக்கு கால் செய்தாள்.

அந்தப் பக்கம் இருந்தவனோ, அவள் அழைப்பை ஏற்காது இருக்கவும் ஒரு நொடி புருவத்தை சுழித்தான். பின்பு அவளே அழைக்கவும் இப்போது அவன் முகத்தில் வெற்றிப் புன்னகை. ஆனால் இப்போது அவன் உடனே எடுக்கவில்லை.

அழைப்பு முடியும் வரை வேண்டுமென்றே, திரையில் மின்னிய சுடர்விழி என்ற பெயரைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அந்த பெயரை மட்டும் அல்லாது, வாட்சப் புகைப்படத்தில், கவியும், விழியும் சேர்ந்து எடுத்த புகைப்படமும் இருக்க, இப்போது கவியை மட்டுமே பார்த்தான்.

இப்போது விழியோ, “கூப்பிடுறப்பையே எடுத்திருக்கலாமோ? இப்போ எதுவும் தப்பா நினைச்சிருப்பாரோ? எம் டியே கால் பண்ணி கூப்டும் நம்ம எடுக்கலன்னு வேல இல்லன்னு சொல்லிடுவாங்களோ” என்று இப்படி எதை எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த சில நிமிடம் அவளை புலம்ப வைத்தவன், இப்போது அவனுடைய அபிசியல் மெயில் ஐடியில் இருந்து அவளுக்கு ஒரு மெயில் அனுப்பினான்.

“க்ளிக்” என்ற மெசேஜ் சத்தத்தத்தில், விழி வேகமாய் அதை திறந்துப் பார்க்க அதில் அவளுடைய அப்பாயின்மெண்ட் லெட்டர் மற்றும், ஜாயினிங் டேட் என்ன என்பது குறித்த விவரம் இருந்தது.

அதைப் பார்த்ததும், அவளுக்கு அத்தனை மகிழ்ச்சி, உடனே தேங்க்யூ என்று வந்த மெயிலுக்கு பதில் அனுப்பி விட்டு, உடனே கவியைப் பார்க்க படியேற சென்றாள். அதற்குள்ளாக, “ம்ஹூம் வேண்டாம். வேண்டாம் அவங்களே சமாதானம் ஆகிட்டு வரட்டும்” என்றப்படி இப்போது சுஜியைத் தேடி வெளியில் சென்றாள்.

அங்கே மேலே வேந்தனோ, கவியிடம் தலையணையால் அடி வாங்கிக் கொண்டிருந்தான்.

“இங்கப்பாரு. நடந்ததுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. என்ன நம்பு” என்றான்.

அதில் அவளோ, “என்ன சம்பந்தம் இல்ல? அவ கொடுக்கிறப்ப, சிரிச்சிட்டே வாங்குனீங்கத்தான” என்றப்படி மீண்டும் அடிக்க ஆரம்பித்தாள்.

அதில் அந்த தலையணையை தடுத்துப் பிடித்தவன், “ஹேய் நான் எங்க சிரிச்சேன்?” என்றான்.

“ச் என்கிட்ட பேசாதீங்க. எனக்கு பிடிக்கவே இல்ல. ஐ ஹேட் யூ” என்று அவனின் மீதே தலையனை எறிந்து விட்டு அங்கிருந்து வெளியில் செல்ல கதவை திறக்க சென்றாள்.

அதற்குள்ளாக, அவளை அப்படியே கதவில் சாய்த்து நெருங்கி நின்றவன், “எங்க என்னப் பார்த்து சொல்லு” என்றான்.

அதில் அவனை முறைத்தாலும், உள்ளுக்குள் மெல்லிய தடுமாற்றம் இருக்கத்தான் செய்தது.

“என்ன? சொல்லு” என்று வம்புக்கு சென்றான். “இங்கப்பாருங்க. என்ன விடுங்க” என்று அவள் விலக முயற்சிக்க, அவனோ, “சொல்லு விடுறேன்” என்றான்.

“ஏன் சொல்ல மாட்டேன்னு நினைக்கிறீங்களா?” என்று மூக்கு விடைக்க கோவமாய் கேட்டாள்.

“சொல்லித்தான் பாரேன்” என்று அவன் விடாது சொல்ல, உடனே அவளும் வேகமாய், “ஐ ஹே.” என்று சொல்ல ஆரம்பிக்கும் போதே, அவள் செவ்விதழில் தன் செவ்விதழை புதைத்தான். அவனின் அந்த அதிரடி தாக்குதலை எதிர்பார்க்காதவள், அதிர்ச்சியில் விழிக்க, அவனோ, இடக்கரத்தால். அவளின் இரு கரத்தையும் கதவில் வைத்து சிறை எடுத்திருக்க, மறு கரம் பாரபட்சமே இல்லாத இடத்தில் பதிந்து அவளை இம்சிக்க, அவன் முத்தத்திலும், ஆளுமையிலும் முற்றும் முழுதாய் தொலைந்தாள் கவி.

நிறுத்தி நிதானமாய் எல்லாம் இல்லை. சற்று வன்மையாகத்தான். ஆனால் அதே நேரம் அவளுக்கு சிறு வலியைக் கூட கொடுக்காது, அவனுக்கு வேண்டியதை அவன் எடுத்துக் கொள்ள, ஏனோ அவன் வேகத்திற்குள் இருக்கும் நிதானம். அந்த வன்மைக்குள் ஒளிந்திருந்த அந்த மென்மை என மொத்தமாய் அவன் முத்தத்தை ஏற்றாள்.

மனதில் இன்னும் கூட அவனுடனான வாழ்க்கையை வாழ முடிவெடுத்துவிட்டாளா? அது அவளால் முடியுமா? என்றெல்லாம் அவளுக்கு தெரியவில்லை. ஆனால் இந்த நொடி அவன் கொடுத்த முத்தத்தை முழு மனதாய் ஏற்றுக் கொண்டாள்.

அதை அவனும் உணர்ந்தான். அதில் அவன் சிறைக்குள் சிக்கியிருந்த அவள் கரத்தை மெல்ல விடுவிக்க, இன்னும் கூட அவள் நகராது அப்படியே கதவில் சாய்ந்திருந்தாள்.

மெல்ல, கீழ் உதடு, மேல் உதடு, என தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டவன், கொஞ்சம் கொஞ்சமாய் அவள் சிவந்த அதரங்களை விட்டு மெல்ல விலக, அப்போதே இவ்வுலகம் வந்தாள் கவி.

ஆனாலுமே அவன் முத்தம் தந்த மயக்கம் மிச்சமிருக்க, மருண்ட மான்விழிகளுடன் அவனைப் பார்த்தாள். அவன் விழியில், இவன் மேலும் தொலைய, அவள் குண்டு கன்னத்திலும் அப்படியே அழுத்தி முத்தமிட்டான்.

அதில் அவள் கண்ணை இறுக்கி மூட, இப்போது மெல்ல அவள் நெற்றியிலும், மூடிய இமையின் மீதும் முத்தமிட்டான். அவளின் கரம் அன்னிட்சையாய் அவன் சட்டையை அழகாய் பற்றிக் கொண்டது.

ஆசை தீர, அவளுக்கு முத்தம் கொடுத்தவன், இப்போது மெல்ல அவள் செவியோரம் குனிந்து, “இப்போ பிடிச்சிருக்கா?” என்றான்.

“ஆ..ங் என்ன?” என்று அவள் அப்பாவியாய் முழிக்க, சில நொடிகளுக்குப் பின்னே அவன் என்ன கேட்கிறான் என்பது புரிய, வெட்கமும், கூச்சமுமாய், “ச் போங்க” என்று அவனை தள்ளிவிட்டு விலகி ஓட முயற்சித்தாள்.

அதற்குள்ளாக, அவள் கரத்தைப் பிடித்து மீண்டும் தன்னோடு இழுத்துப் பிடித்தவன், “எங்க சொல்லு” என்றான்.

அவனின் சேட்டையில். “ச் இதெல்லாம் சரியே இல்ல” என்று முகத்தை சுழித்தாள். “அப்படியா? சரியா கொடுக்கலையா? சரி விடு, இப்போ வேணும்னா மறுபடியும்” என்றப்படி மீண்டும் அவள் செவ்விதழை தேடி அவன் குனிய, “சுடர்” என்று முறைத்தாள் கவி.

அவள் முறைப்பில் இப்போது அவன் முகத்தில் குறும்பு புன்னகை உதயமானது. “என்ன? நீத்தான சொன்ன” என்றான்.

அதில் அவளுக்கோ இப்போது மெல்லிய வருத்தம், என்ன முயன்றும் கடந்த கால நினைவுகளை அவளால் மறக்க முடியவில்லை. அவளுக்கோ ஏனோ கோவமாய் வந்தது. அதே நேரம் அவனுடைய நெருக்கம் அவளுக்கு தேவையாகவும் இருந்தது.

“சுடர். நான் கெட்டப் பொண்ணுலாம் இல்லத்தான” என்று கேட்டாள். அவளின் வார்த்தையில் பட்டென்று விலகி அவளை முறைத்தவன், “பைத்தியமா நீ? நீ என் பொண்டாட்டி. நான் உன் ஹஸ்பண்ட். நமக்குள்ள நடக்கிறது” என்று சொல்லி முடிக்கும் முன்னே, “நான் வேற ஒருத்தருக்கும் மனைவியா இருந்திருக்கேன்னே?” என்றாள்.

அவளின் வார்த்தையில் அவனுடைய கண்கள் சிவந்தது. கோவத்தில் கரத்தை இறுக்க மூடி, அந்த சுவற்றில் ஓங்கி குத்த முயன்றான். பின்பு கவி அவனைப் பார்க்கவும், “ச் என் தப்புத்தான். நான் உன் பர்மிஷன் இல்லாம இப்படி பண்ணியிருக்க கூடாது. இனிமே உன் பக்கத்துல கூட நான் வரல. பட் இன்னொரு தடவ, இப்படி பேசுனன்னா, அதுக்கப்புறம்” என்றவன் சொல்லி முடிக்கும் முன்னே மீண்டும் அவனை வந்து கட்டிக் கொண்டாள் சுடரின் தேன்.

அதில் இப்போது சுவற்றில் சாய்ந்தவனுக்கோ, நெருங்கவும் முடியாத, விலகவும் பிடிக்காத ஒரு நிலை. அவளோ, “சாரி. நான் உங்கள கஷ்டப்படுத்தனும்னு நினைக்கல. ஆனாலும் என்ன மீறி சில விஷயம் என்ன ரொம்ப கஷ்டப்படுத்துது” என்றாள்

அதில் மெல்ல இறுக்கத்தை குறைத்து, “நானும் அதோட சேர்ந்து உன்ன கஷ்டப்படுத்துறேன்னா?” என்று சிறு வருத்தத்துடன் கேட்டான். அவனின் வருத்தம் அவளுக்கு வலிக்க, சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், “உங்களால மட்டும் தான் உயிரோட இருக்கேன்” என்று சொல்லி அவன் கன்னத்தில் முத்தமிட சென்றாள்.

ஆனால் சட்டென்று அவள் விலகி விட, “என்ன?” என்றான். “அவ இந்த கன்னத்துலத்தான கிஸ் பண்ணா” என்று கோவமாய் கேட்டாள்.

இப்போது மெலிதாய் புன்னகைத்தவன், “இந்த கன்னம் ப்ரீயாத்தான் இருக்கு. ஈவன், கன்னத்துலத்தான் கொடுக்கனும்னு இல்ல. இங்க கூட கொடுக்கலாம்” என்று அவள் முன்னே தன் முகத்தை கொடுத்தான்.

அதில் அவனை முறைக்க முயன்றாலும், பின் மெல்ல அவன் கன்னத்தில் கரம் பதித்து, “சுடர், என்னோட லைப்ல அது அந்த” என்றவளுக்கு ஏனோ சில விஷயங்களை அவனிடம் சொல்லவே முடியவில்லை. 

அவளின் நிலை உணர்ந்து, அவளை மீண்டும் தன்னோடு அணைத்துக் கொண்டவன், “உன்ன கஷ்டப்படுத்துற எதையும் நான் தெரிஞ்சிக்க வேண்டாம். எனக்கு உன் லைப்ல என்ன நடந்திருந்தாலும் எனக்கு கவலை கிடையாது. இப்போ இந்த செகண்ட், என் ஒயிப். என் கவி. அவ்வளவுத்தான். இதுக்கப்புறம் எப்பவுமே என் கவி, இந்த வேந்தனோட மனைவியாத்தான் இருப்பா” என்றான்.

அதில் அவன் மார்பில் இன்னுமே புதைந்துக் கொண்டவள், “ஆனா என் கடந்த கால வாழ்க்கைய என்னால மறக்கவே முடியலன்னா?” என்று சிறு வலியுடன் கேட்டாள். மறக்கும்படியான வாழ்க்கை இல்லையே அது.

பிடிக்காத ஒருவனுடைய நெருக்கம், நரகத்திற்கும் மேல் என்பதை உணர்ந்த கொடுமையான தருணங்கள் அல்லவா அது. அவள் விருப்பமின்றியே அத்தனையும் நடந்து முடிந்திருக்க, இப்போது ஏனோ வேந்தனுடன் அவளால், அவள் விருப்பபடி வாழ முடியாது தடுமாறினாள்.

முதலில் தாலி கட்டியிருந்தவன் நல்லவனாக இருந்திருந்தால் கூட, நிச்சயம் அதை மறந்து அடுத்த வாழ்க்கைக்கு தன்னை தயார்படுத்தியிருப்பாளோ என்னவோ?

அவனுடன் வாழ்ந்த நாட்கள் நரகம் அல்லவா? ஒவ்வொரு விநாடியும், ஒவ்வொரு நிமிடமும் அவள் செத்து செத்தல்லவா வாழ்ந்தாள். ஒருவனின் மரணம் ஒருவளுக்கு நிம்மதியைக் கொடுக்குமா? கொடுத்ததே அவன் இறந்து விட்டான் என்று தெரிந்த அன்று மனதில் ஏதோ ஒரு மூலையில் நிம்மதியை உணர்ந்தாளே.

மீண்டும் அவள் கண் முன்னே வேந்தன் வந்து நிற்க, அந்த நொடி அவள் ஆழ்மனம் மெல்லியதாய் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோ? ஆனால் உணர்வுகளை முற்றும் முழுதாய் இழந்தவளால் தான், அதை அப்போது புரிந்துக் கொள்ள முடியவில்லை.

ஆனால் இப்போது வேந்தனின் நெருக்கத்தில், அவள் உணர்வுகள் ஒவ்வொன்றாய் எட்டிப் பார்க்க, இப்போது மனம் மீண்டும் வாழ ஆசைப்படுகிறது. ஆனாலும் கடந்த கால வலிகள், வேதனைகள், அந்த கருப்பு பக்கங்கள், அவளை பின் தொடர்கிறதே. அவளும் என்னத்தான் செய்வாள்?

அவளுடைய அத்தனை வலிக்கும் ஆறுதலாய் அவளை மேலும் தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டவன், “என்னைப் பத்தி மட்டுமே உன்ன யோசிக்க வைப்பேன். என்னத் தவிர என் பொண்டாட்டிக்கு எதுவுமே தெரியாத அளவுக்கு நான் பாத்துப்பேன்” என்றான்.

அவனின் வார்த்தையில், எரிந்துக் கொண்டிருந்த அவள் வாழ்க்கை குளிர முயற்சிக்க, “முடியுமா?” என்றாள்.

“இந்த வேந்தன் முடிவு பண்ணா பண்ணதுத்தான். அத யாராலையும் மாத்த முடியாது. என் கவிய நான் பார்த்துப்பேன். அவ கூட நான் சந்தோஷமா வாழ்ந்து காமிப்பேன். சீக்கிரமே என் கவி மாதிரி, குட்டி பாப்பா நமக்கே நமக்குன்னு வரும். இதெல்லாம் நடக்கத்தான் போகுது. நீ பாக்கத்தான் போற” என்றான்.

அதில் அவள் கண்களில் மெல்ல ஈரம் கசிய, அதை அவன் சட்டையில் துடைத்தவள், “கவி மாதிரி இன்னொரு ஜீவன் வேண்டவே வேண்டாம். சுடர் மாதிரி மட்டும் போதும்” என்று சொல்லி கட்டிக் கொண்டாள்.

(சரி கவியோ? சுடரோ? எதுவோ ஒன்னு. ம் பாக்கலாம் நம்ம ஹீரோ, கவிய மொத்தமா சேஞ் பண்ணுவாரான்னு. அப்புறம் நம்ம ஆர்யன் பத்தி அடுத்த எபிசோட்ல பாக்கலாம். சரி அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   4

*** தேன் – 55 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***