தென்றல் – 151

நிலா பால்லை எடுத்துக் கொண்டு அத்தனை தயக்கத்துடன் அவன் அறைக்குள் நுழைந்தாள். ஆனால் அவனோ அவள் வந்ததை கூட உணராத அளவுக்கு, அந்த மல்லிகைச் சரத்தை தான் வாசம் பிடித்துக் கொண்டிருந்தான்.

அதில் இவளுக்கோ அடி வயிற்றில் சுள்ளென்ற ஒரு உணர்வு. என்னமோ செய்தது. பட்டாம்பூச்சி பறக்கிறதா? இல்லை சூறாவளியின் தாக்கமா? என்று பிரித்து அறியா வண்ணம் ஒரு இம்சையான உணர்வு அவளை ஆக்கிரமித்தது. அவளின் மாமன் தான். அவனுடன் ஈருடல் ஓருயிராய் கலந்திருந்தவள் தான். ஆனால் இன்று, புதிதாய் ஏதோ ஒன்று அவளை மொத்தமாய் பிடித்து இழுத்தது.

அடுத்த அடி எடுத்து வைக்காது, அம்மன் சிலையென நின்றிருந்தவளை எதார்த்தமாய் நிமிர்ந்துப் பார்த்த கதிருக்கும் அதே நிலைத்தான். புடவையைக் கூட மாற்றாது, அவள் அப்படியே சென்றிருக்க, இப்போது அவனின் கண்களில், கள்ளன் வந்து குடி புகுந்தான்.

காலையில் அவன் தான் அந்த சேலையை கட்டிவிட்டான். இப்போது ஏனோ, அதை அவிழ்த்துப் பார்க்க நினைக்க, மனம் முரண்டியது. 

அவனின் பார்வை செல்லும் இடமும், அதனுள் இருக்கும் அர்த்தமும், இன்னும் இன்னும் நிலாவை அப்படியே தேக்கி நிறுத்தியது.

அவள் நகராது இருக்கவும், இங்கே இவன் எழுந்து அவளின் அருகில் வந்தான். அவன் அருகில் வர வர, அவளோ அன்னிட்சையாய் பின்னே எட்டு வைக்க முயற்சிக்க, அதற்குள்ளாக, அவளை மொத்தமாய் நெருங்கி, அறைக் கதவை தாழ்பாள் போட்டிருந்தான் கதிர்.

அவனின் செயலில், அவள் அதிர்ந்து அவனைப் பார்க்க, அவனோ, “எனக்குத்தேன்ன எல்லாம். பின்ன கொடுக்காம இப்புடியே நின்னா என்ன அர்த்தம்?” என்று சீண்டலாய் கேட்டான்.

அவனின் கேள்வியில், அவள் மான் விழிகள் இன்னும் விரிந்து அவனைப் பார்க்க, அவள் விரல் தொட்டு, அழுத்தி அந்த பால் கிளாஸைப் பிடித்தான்.

அவன் தொடுதலில், இவள் கரைந்துருக, அவனோ, “பால்ல சொன்னேன். இது எனக்குத்தேன்ன?” என்றான்.

“ம்” என்றவள் வேகமாய் தன் கரத்தை விலக்கிக் கொள்ள, இப்போது அவளைப் பார்த்தப்படியே அந்த பால்லை அவன் சொட்டு சொட்டாய் குடிக்க, இங்கே இவள் எச்சிலை விழுங்கினாள்.

சடசடவென வேர்வைத் துளிகள், அவள் முகத்தில் துளிர்க்க ஆரம்பிக்க, அதை எல்லாம் தன் இதழ் கொண்டு துடைக்க நினைத்தான் கதிர்.

அவளையே அவன் பார்த்திருக்க, இவளுக்கோ மூச்சு முட்டியது. “பூ வைக்கலையா?” என்றான்.

“ஆ.ங். என்ன?” என்று அவள் தடுமாற, “பூ” என்றவன் கண்களால் கட்டிலைக் காட்ட, அவளுக்கோ வெட்கம் நெட்டி தள்ளியது.

அவள் வெட்கத்தை அனு அனுவாய் ரசித்தவன், தான் குடித்து வைத்த மிச்சப் பால்லை அவளிடம் நீட்ட, அவளோ, அவனைப் பாவமாய் பார்த்தாள். அவளுக்குத்தான் பால் பிடிக்காதே.

“குடி நிலா” என்று அவன் அவள் உதட்டருகே, கொண்டு செல்ல, அவன் பேச்சை மறுக்க இயலாது, அவள் குடிக்க முயல, அடுத்த நொடி, அவள் இதழோடு சேர்த்து அந்த மிச்சப் பால்லையும் அவனே குடித்திருந்தான். சட்டென்ற அவன் அதிரடியை, சத்தியமாய் அவள் எதிர்பார்க்கவில்லை.

பூவுக்கு தெரியாமலே தேன் எடுக்கும் வித்தையை எந்த வண்டிடம் கற்றுக் கொண்டு வந்தானோ? அவளின் கரம் அவன் சட்டைக் காலரை மொத்தமாய் இறுக்கிப் பிடித்திருக்க, இப்போது அவனின் கரத்தில் இருந்த டம்ளர் சத்தமில்லாது தரை விரிப்பில் விழுந்திருக்க, அவனின் கரம் அவள் இடையை இறுக்கிப் பற்றியது. இருவருக்கும் இடையில் இருந்த இடைவெளி மொத்தமாய் விலக, அவனோ, அவள் இதழில் மொத்தமாய் மூழ்கிப் போனான்.

“ம்மா.ம்.. மாமா.” என்ற அவளின் முணகல்கள் எல்லாம் அவள் தொண்டைக்குள்ளே அடங்கிப் போக, இத்தனை நாள் தீண்ட முடியாத அந்த தென்றலை மொத்தமாய் தொட்டு தழுவி தனக்குள் அடைத்துக் கொள்ள நினைத்து வேகமாய் முன்னேறினான்.

அவன் கேட்டு, அவள் மறுத்த நாள் உண்டா என்ன? அவனின் வேகத்துக்கு தன்னையும், தன் இதழையும் அவனுக்கு விட்டுக் கொடுத்து நின்றாள் இவள். அவள் இரு இதழையும், ஒவ்வொன்றாய் பொறுமையாய் அவன் கையாள, இவளோ கண்ணை இறுக்கி மூடி உணர்வுகளை எல்லாம் இழுத்துப் பிடித்தாள்.

ஆனால் எங்கே? அவனின் சுவாசத்துக்கே, இவளின் தேகம் அவனுக்கு வழிக் கொடுக்க, மெல்ல அவள் இதழ்களை விட்டு பிரிந்து அவள் தாடையில் கன்னத்தை தேய்த்தான். இப்போதெல்லாம் அவன் அடிக்கடி கிளீன் சேவ் செய்வதால், அதில் அவளுக்கு சிறு வருத்தம் தான். இப்போது மூன்று நாள் சவரம் செய்யாத அந்த தாடி அவளுக்கு குத்த, “மாமா தாடி வளர்த்துக்கோ” என்று சினுங்கலாய் கூறினாள்.

அதில் அவன் மீசையோரம் பூத்த புன்னகையை அப்படியே அவள் கன்னக்குழியில் அழுத்தி முத்தமிட்டு, அவளுக்கும் சொந்தமாக்கினான்.

“கலெக்டரம்மா பர்மிஷன் கொடுத்தா சரித்தேன்” என்று சீண்டலாய் சொல்லியவனின் இதழ்கள், அவள் முகமெங்கும் பரவி அவள் கழுத்தை சுற்றி வலம் வர, இவளோ அவன் மேல் சட்டையை இறுக்கிப் பிடித்தாள்.

சட்டென்று அவளை மொத்தமாய் தூக்கி, கட்டிலில் கிடத்தியவன், அங்கிருந்த பூவை எடுத்து அவளுக்கு வைத்து விட்டான். அவனின் செயலில், அவளோ, “கசங்கிடும் மாமா” என்று அந்த பூவின் மீது பரிதாபப்பட. அந்த கள்வனோ, “புடவ கூட கசங்கிடும்த்தேன்ன. அதுவும் பாவம்த்தேன்ன” என்று விசமமாய், அவள் புடவையில் கையை வைத்தான்.

அவனின் வார்த்தையில் அவளோ வெட்கப்பட்டு, “ச்சோ மாமா” என்று அவனை இறுக்கிக் கட்டிக் கொள்ள, அவனோ, அவள் தேகத்தோடு தன் தேகம் புதைய அணைத்துக் கொண்டான்.

இடையில் இருந்த அவர்கள் ஆடையை நிச்சயம் அவர்கள் தேகமும் விரும்பவில்லைப் போலும். அவனின் கரம் அன்னிட்சையாய் அவன் இதழுக்கு வழி செய்துக் கொடுக்க, அவளின் சேலை கொஞ்சம் கொஞ்சமாய் அவளை விட்டு விலகிக் கொண்டே சென்றது.

அவனின் விரல் தீண்டலுக்கே நிலா, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, அவனின் கரம் அவள் மேனியில் சில இடங்களில் அழுத்தமாய் பதிய, அவளோ பெரிதாய் முணங்கினாள். அதில் அவள் முணங்கலை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளும் முயற்சியில் மீண்டும் அவள் இதழ்களை தனதாக்கி, அவனின் கரம், அவளிடம் எல்லை மீற, இவள் வயிற்றில் மட்டும் அல்லாது உடல் எங்கும் பட்டாம்பூச்சி பறந்தது.

பாதி ஆடையில் இருந்தவளை விட்டு சற்று விலகி, அவன் அந்த கோலத்தை ரசிக்க, “ச்சீ மாமா” என்று அவன் கண்ணை மூடி, அவனை கீழே சாய்த்து அவன் மேலே இவள் விழுந்தாள்.

அவளின் செயல், அவனுக்கு இன்னமுமே வசதியாகிப் போக, மெல்ல அவள் உள்ளங்கையை விலக்கி, அதை தன் கரத்திற்குள் புதைத்து, அவனோ, “பெரிய பொண்ணாகிட்ட தென்றல்” என்று அவளை வெட்கத்தால் கூசி நெளிய வைத்தான் அவளின் மாமன்.

“மாமா” என்றவளுக்கு அவன் பேசாது என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டு போகட்டும் என்ற எண்ணம். அதில் வேகமாய் அவன் வாயை அவள், தன் இதழால் இப்போது மூடினாள். அதில் இப்போது அவன் சொல்லியதையும் அவன் அறிந்ததையும், வார்த்தையால் அல்லாது செயலால் அவளுக்கு உணர்த்தினான். 

அவனின் செயலில், அவளோ, அவன் இதழில் இருந்து தன் இதழைப் பிரிக்க, இப்போது அவளை தனக்கு கீழே கொண்டு வந்து, இதுவரை அவன் கரம் மட்டும் உணர்ந்த அந்த இதத்தை தன் இதழுக்கும் கொடுக்க நினைத்து, அவள் மேல் படர்ந்து இதழால் தழுவி எச்சிலால் குளிப்பாட்ட ஆரம்பித்தான்.

“ம்மா..மாமா….” என்ற அவள் சினுங்கல்களும், அவளையும் மீறி அவன் முதுகில் பதிந்த நகக்கீறல்களும் அவனின் வேகத்தை அப்பட்டமாய் காட்டியது. அவளிடம் அவன் எப்போதுமே மென்மைத்தான். ஆனால் ஏனோ இத்தனை நாளாய் அவன் தேகம் அனுபவித்த ஏக்கத்தை தீர்க்க, இம்முறை சற்று அவன் வன்மைக்கு மாறியிருந்தான்.

உச்சி தொட்டு பாதம் வரை இதழ் ஊர்வலம் நடத்தியவன் ஆங்காங்கே அவனின் பல் தடத்தையும் மெலிதாய் பதித்திருக்க, அவளுக்கோ புது இரத்தம் உடலெங்கும் பாய்ந்தது. அவனின் வெம்மை இவளுக்குள்ளும் புதைய, இதற்கு மேல் முடியவே முடியாது என்ற நிலை. இன்னுமே தொட்டுத்தழுவி, முத்தமிட்டு என்று அவன் ஒரு எல்லைக்குள்ளையே இருக்க, “முகி மாமா” என்ற அவளின் அழைப்பில், அவள் நெற்றி தொட்டு மொத்தமாய் அவளை கொள்ளையிட நினைத்து அவள் மிச்ச ஆடையையும் துயில் உறிக்க ஆரம்பித்தான் அவன்.

அவனின் வேகத்தை கண்டு திகைத்து, அவளே அவள் ஆடையை விலக்க உதவி செய்ய, அதையும் அவன் தனக்கு சாதகமாக்கி, அவன் ஆடையை அவளை வைத்து கழட்ட வைத்தான் அவளின் கணவன்,

அதில் வெட்கமும் கூச்சமுமாய், அவன் திண்ணிய மார்பில் முகம் புதைக்க, அவனுமே, அவன் முகத்தை அவளிடம் பதிக்க நினைக்க, அதற்குள் கரடியாய், கதிருடைய மொபைல் அத்தனை சத்தமாய் அடித்தது.

ஆனால் மோகப்பிடியில் இருந்தவனுக்கு அது சுத்தமாய் கேட்கவில்லை. அவளுமே அவனுடைய ஆளுமைக்குள் இருக்க, அவளுக்கும் கேட்கவில்லை. அவள் நெற்றி முட்டி அவள் தேகத்தில் வாசம் பிடித்து, “தென்றல், எனக்குள்ள வந்துடுறீயா?” என்று அத்தனை நேசமாய் அவன் கேட்க, அவளால் மறுக்க முடியுமா என்ன?

“மாமா” என்ற அவளின் அந்த அழைப்பே அவனுக்கான பதிலைச் சொல்ல, அவன் அவளை கொள்ளையிட நினைத்து முன்னேற, மீண்டும் கரடியாய் அவனுடைய மொபைல் அடித்தது.

இம்முறை அது இருவரின் செவியிலுமே விழுந்திருக்க, இருந்தும் அதை எடுத்துப் பேசும் நிலையில் எல்லாம் அவன் இல்லவே இல்லை.

“மாமா போன்” என்று அவள் சொல்ல, “அடிச்சிட்டு போட்டும் விடு” என்றவன் இப்போது மொத்தமாய், அவளின் கணவனாய் மட்டுமே இருந்தான்.

அதில் அவளோ, அவனுள் புதைய, அதற்குள் மீண்டும் மீண்டும் அவனுடைய மொபைல் விடாது அடித்தது. அதில் அவன் முகத்திலோ அப்பட்டமான எரிச்சல். நிலாவுக்கோ சிரிப்பாய் வந்தது.

பின்னே எத்தனை நாள், இவளிடம் நெருங்கி பின் அவனே விலகி சென்று இவளை படுத்தி எடுத்திருப்பான்.

இப்போது அவன் முகத்தில் அந்த எரிச்சலைப் பார்க்க இவளுக்கு பிடித்திருந்தது. அதனால், அவளோ, “என்னென்னு கேளுங்க மாமா” என்றாள்.

அதில் இவனோ இப்போது அவளைப் பாவமாய் பார்க்க, அதற்குள் மீண்டும் மீண்டும் என்று கத்தியது. “சிட் அத முதல்ல உடைச்சி போட்டிருக்கனும்” என்று கடுப்பாய் சொல்லியவன், அவளை விட்டு மெதுவாய் விலகி, எக்கி அவன் மொபைலை எடுத்தான்.

ட்ரைவரிடம் இருந்துத்தான் அழைப்பு வந்திருந்தது. அதில் யோசனையாய் அவன் புருவத்தை சுழிக்க, இவளோ தன் உடையை சரி செய்தப்படியே, அவனை கேள்வியாய் பார்த்தாள்.

“ஆறு மாமா?” என்று இவள் கேட்க, இவனோ அட்டன்ட் செய்து, “ஹலோ” என்றான்.

அந்தப் பக்கம் அவன் சொன்ன விஷயத்தை கேட்டவனுக்கோ, மோகம் எல்லாம் எங்கோ சென்றிருக்க, அதிர்ச்சியும், கோவமும் மட்டுமே வந்தது.

“என்ன?” என்றான். அவன் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியே, என்னமோ சரியில்லை என்பதை சொல்ல, அவளும் எழுந்தமர்ந்தாள்.

“சரி நான் சொல்றேன். வெயிட் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அதற்குள் நிலாவோ, “என்னாச்சு மாமா?” என்று கேட்க, “உன் போன்ன எங்க?” என்றான்.

அதில் அவளோ, “அது” என்றவள் சோபாவில் போட்டிருந்தாள். அவள் விடுப்பில் இருந்ததால், அலுவலக நம்பரை ஆப் செய்திருந்தாள். பர்ஷனல் நம்பரையுமே இப்போது அவள் சைலண்டில் போட்டிருக்க, அதில் வந்த அழைப்புகள் எதையும் அவள் கவனிக்கவில்லை.

வேகமாய் சென்று அவன் சோபாவில் இருந்த அந்த மொபைலை எடுத்துப் பார்க்க, ஷீபாவிடம் இருந்து அத்தனை அழைப்பு வந்திருந்தது.

“ஷீபாட்ட பேசு நிலா” என்று அவன் மொபைலை எடுத்து அவளிடம் நீட்ட, அவளுமே இத்தனை தடவை அவள் கால் செய்திருக்கவும், உடனே அவளுக்கு அழைத்தாள். அந்தப் பக்கம் அவள் சொல்லியதை கேட்ட நிலாவோ, “என்ன? இதெப்டி நடந்திச்சு?” என்றவளுக்கு சுத்தமாய் புரியவில்லை.

அங்கே இப்போது நிலா சென்றே ஆக வேண்டும். இத்தனை நேரம் அவள் தனியாய் சமாளித்ததே பெரிய விஷயம். அதில் இப்போது நிலா கதிரைப் பார்த்தாள். அவனுக்கும் வருத்தம் தான். ஆனால் கடமை என்ற ஒன்று இருக்கிறதே. அதை இருவரும் செய்தாக வேண்டுமே. அதில் தன் சட்டையை எடுத்து அணிந்தவன், “கிளம்பலாம்” என்றான்.

“மாமா” என்று அவனிடம் சிறு மன்னிப்பைத் தாங்கி அவள் பார்க்க, “நான்த்தேன்ன ஆரம்பிச்சு வச்சேன். ம் இன்னும் எவ்ளோ இழுக்குதுன்னு பாக்கலாம்” என்று அலுப்பாய் சொல்லியப்படி அவன் உடைமையையும் எடுத்து வைக்க ஆரம்பித்தான். அதில் அவளோ சிறு சிரிப்புடன் எழுந்து குளியலறைக்குள் சென்றாள்.

(இங்கப்பாருங்க பிரண்ட்ஸ், இப்போ நடந்ததுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதனால என்னெல்லாம் யாரும் திட்டக் கூடாது. நானே பாவம். சரி அங்க என்ன பிரச்சனை? அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தென்றல் தீண்டுமா?..

Comments   1

*** தென்றல் – 151 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***