முருகேசன் முற்றிலும் போதையில் இருக்க, அவர் கேட்ட எந்த கேள்விக்கும் கதிரிடம் பதில் இல்லை. விரும்பியும், விரும்பாமலும் கதிருடைய கடந்த காலம் அங்கே ஓடியது.
பெரிய வீட்டின் தலைவர் சங்கரேயன் என்றாலும், ஊர் பிரச்சனைகளுக்கு மட்டுமே அவர் முன்னுரிமை கொடுப்பார். அதனால், வீட்டில் பெரும்பாலும் வெள்ளையம்மாளுக்குத்தான் அத்தனையும் தெரியும். அவரிடம் கேட்காமல், எந்த முடிவும் எடுக்கப்படாது.
மிகவும் அன்பானவர். அதே நேரம் தப்பு என்றால் தப்புத்தான். சங்கரேயன் வெள்ளையம்மாளுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள். முதலில் தாமரை அதன் பின் செல்வி. ஒரு மகன் வேண்டும் என்று தவமாய் தவமிருந்து, கிட்ட தட்ட தாமரைக்கு பதினாறு வயது இருக்கும் போது பிறந்தவன் தான் கதிர்.
வீட்டின் செல்லப் பிள்ளை. அவன் கேட்ட விஷயம், அவன் நினைக்கும் முன்னே அவன் கையில் வந்து சேர்ந்து விடும். அவனின் அன்னையை விட, தாமரையிடம் தான் கதிர் அதிக நெருக்கம். தாமரையும், கதிரும் ஏறக்குறைய அவனுடைய அம்மாவின் குணம். செல்வி அப்படியே சங்கரேயருடைய குணம்.
ஆனால் ஆரம்பத்தில் இருந்தே, செந்திலுக்கும், கதிருக்கும் ஆகாது. எத்தனையோ முறை அவன் அக்காவிடம் அவரை திருமணம் செய்யாதே என்று கூறியிருக்கிறான். ஆனால் சிறு பிள்ளை என்பதால் பெரிதாய் அவன் பேச்சு எடுபடவில்லை.
தாமரைக்கு திருமணம் ஆகும் போது, கதிருக்கு ஐந்தில் இருந்து ஆறு வரை இருக்கும், மண மேடையில் அக்காவின் மடியை விட்டு இறங்க மாட்டேன் என்று அடம்பிடித்தான். செந்தில் காது படவே, “அக்கா, இந்தாளு உனக்கு வேண்டாம்க்கா” என்று கூறியிருந்தான்.
அதற்குள் சுற்றி இருந்தவர்களோ, “என்னல நீ? உம்ம அக்காக்கு கன்னாலம் ஆனாத்தேன்ல, உமக்கு பொண்ணு பெத்து கொடுப்பா” என்று கேலி பேச, செல்வியும், வெள்ளையம்மாள் தான் அவனை கஷ்டப்பட்டு அங்கிருந்து இழுத்து சென்றனர்.
அதை எல்லாம் பார்த்த செந்தில், அதன் பின் தாமரையிடம் கதிரை நெருங்கவிடவில்லை. திருமணத்துக்கு பின், கணவர் தானே எல்லாம். அதனால் கதிருக்கும், தாமரைக்கும் இடையில் இருந்த நெருக்கம் குறைய ஆரம்பித்தது. ஆனாலும் கூட தம்பிக்கு தேவையான அனைத்தையும் அவர் தான் செய்வார். அவரின் முதல் குழந்தையாய் கதிரைத்தான் நினைத்தார்.
என்ன கதிருக்கு இருக்கும் ஒரே கெட்ட குணம். அவன் முன்கோபி. சட்டு சட்டென்று கோவம் வந்து விடும். யார் என்ன என்று பார்க்க மாட்டான். அடித்து விடுவான்.
பள்ளியில் ஆசிரியர் தப்பு செய்தாலும் யோசிக்க் மாட்டான். தினம் ஒரு பிரச்சனையை இழுத்துக் கொண்டு தான் வீட்டுக்கு வருவான். ஆனால் அவனின் முகம் வாடவிடாது அத்தனைப் பேரும் பார்த்துக் கொள்வார்கள்.
அவனின் அம்மா மட்டும் தான், அவனுடைய கோவத்தை குறைக்க சொல்லி அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். பன்னிரெண்டாம் வகுப்பில் அவன் தான் முதல் மாணவனாகவும் வந்திருந்தான்.
அடுத்து என்னாகப் போகிறாய்? என்று யாரும் கேட்கவே தேவையில்லை. ஏனெனில், அவனுடைய ஒரே ஆசை லட்சியம், போலீஸ் ஆவது மட்டும்த்தான். அதனால் அதற்கு தகுந்தாற் போல், ஒரு சாதாரண பிரிவை எடுத்து கல்லூரியில் சேர்ந்தான்.
எந்தளவுக்கு படிப்பானோ? அந்த அளவுக்கு சேட்டைப் பிடித்தவன். கல்லூரியில் சைட் அடிப்பதில் இருந்து ஊர் திருவிழாவில், பெண்ணின் கையைப் பிடித்து வம்பிழுப்பது வரை அத்தனை வேலையையும் பார்த்திருக்கிறான்.
நண்பர்களுக்கு பஞ்சமே கிடையாது. தியேட்டரில் ஆரம்பித்து, திருவிழா வரை அவன் வம்பு செய்யாத இடமே கிடையாது. என்ன ஊர் தலைவரின் மகன் என்பதால், யாரும் பெரிதாய் அதை பெரியவர்களிடம் கொண்டு செல்லவில்லை. ஆனால், அவன் சிறிதாய் ஒன்று செய்தாலும், அதை அவனின் அம்மா வெள்ளையம்மாள் கண்டுப்பிடித்து விடுவார்.
அதென்னவோ அவரிடம் மட்டும் அவனால் உண்மையை மறைக்கவே முடியாது. அவனாகவே அத்தனையையும் சொல்லிவிடுவான்.
“இங்கப்பாருய்யா. நீ தப்பு பன்ண மாட்டேன்னு தெரியும். ஆனா, இந்த கோவத்த மட்டும் செத்த குறைச்சிக்கோய்யா. உம்ம காக்கி சட்டையில பாக்கனும்ன்றதுத்தேன் அம்மாவோட ஒத்த ஆச” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார்.
“அதெல்லாம் எனக்காக இல்லன்னாலும், உமக்காகன்னாலும் நான் அந்த போலீஸ் ட்ரஸ போட்டு உன் முன்ன நிப்பேன்ம்மா” என்று கதிர் சொல்ல, அதற்குள்ளாக, “மாப்பிள்ள” என்றப்படி முருகேசன் அங்கு வந்தார்.
அப்போதுத்தான் செல்விக்கும், முருகேசனுக்கு நிச்சயம் முடிந்திருந்தது.
“வாங்க மருமவனே” என்று வெள்ளையம்மாள் அழைக்கவும், “ஐயோ அத்த இங்கனத்தேன் இருக்காகளா” என்று தனக்குள்ளே சொல்லியவருக்கு, மாமாவை விட, அத்தை என்றால் சற்று பயம் அதிகம்.
“அத்த” என்றப்படி சற்று தயங்கிக் கொண்டே உள்ளே வர, “என்ன சேதி மருமவனே” என்றார்.
“அதொன்னுமில்லத்த. சும்மாத்தேன் மாப்பிள்ளைய கூட்டிட்டு போலாம்னு வந்தேன்” என்று மெதுவாய் சொல்ல, “ஆறு நீங்களாம் சும்மா ஒரு வேலைய செய்றவகளா?” என்று மகனையும், மருமகனையும் சந்தேகமாய் பார்த்தார்.
“நான்த்தேன் சொன்னேன்னே மாமா. என் அம்மைக்கிட்ட எதையாச்சும் மறைக்க முடியுமா? ஊர காத்து நிக்கிற குல தெய்வமாச்சே. கருக்கல்க்குள்ள வூட்டுக்கு வந்திடுவோம்” என்று சொல்லிய கதிர் முருகேசனை அழைத்துக் கொண்டு கிளம்பியிருந்தான்.
இப்படித்தான், அவனை எதிர்த்து பேசவே முடியாத அளவுக்கு பதிலை சொல்லிவிட்டு சென்று விடுவான். வீட்டில் இருக்கும் நேரத்தை விட வெளியில் இருக்கும் நேரம் தான் அதிகம். நிலா அப்போதுத்தான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.
செந்திலுக்கு, கதிரை பிடிக்காது என்பதால், தாமரை தன் மகளை தம்பிக்கு கட்டிக் கொடுக்கவெல்லாம் நினைத்தது கிடையாது. கதிருமே, நிலாவை பெரிதாய் பார்த்தது கிடையாது.
ஆனால் நிலா அவனை அடிக்கடி பார்ப்பாள். ஏனெனில் பிரச்சனை என்று ஒன்று நடந்தால் அந்த இடத்தில் கதிர் இருப்பான். அவளின் தோழிகள் வேறு அவனைப் பற்றித்தான் பேசிக் கொண்டே இருப்பார்கள். தோழிகள் என்றல்ல, எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், அங்கே பேசு பொருள் கதிராகத்தான் இருப்பான்.
அதனாலையே நிலாவுக்கு கதிரை மிகவும் பிடிக்கும். அதிலும் அவனுடைய அக்கா மகள் என்பதில் அவளுக்கு தனிப்பெருமை. அவனுடைய தாடி, முடி ஹேர்ஸ்டைல் என்று அத்தனையையும் ரசிப்பாள்.
அவன் என்ன செய்தாலும் பிடிக்கும். எளிதில் ஒருவரை சிரிக்க வைத்து விடுவான்.
தனியாக அவனைப் பார்க்கவே முடியாது. எப்போதும் அவனை சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். திருவிழா நேரத்தில் எல்லாம் சொல்லவே வேண்டாம். அங்கு, இங்கு என்று கதிர் மட்டுமே நிலாவின் கண்ணுக்கு தெரிவான்.
அவன் கிண்டல் செய்து வம்பிழுக்கும் பெண்கள் கூட, அவனிடம் மயங்கி நிற்கவே செல்வார்கள். யாரிடமும் எல்லை மீறி விளையாட மாட்டான். ஆனால் அதற்காக அத்தனை எளிதில் விட்டு விடவும் மாட்டான்.
இப்படி கதிருடைய வாழ்க்கை வண்ண மயமாக சென்றுக் கொண்டிருந்தது. அதில் யார் கண் பட்டதோ, அந்த வருட திருவிழாவின் பொறுப்பை செந்தில் ஏற்றுக் கொள்ளப் போவதாக கூறினார்.
நீண்ட நாட்களாகவே அவருக்கு, ஊர் மரியாதை தனக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம். அப்போதும் தாமரை, “என்னப் பேசுறீக நீங்க? அது எங்கப்பாக்கு பொறவு என் தம்பிக்குத்தேன் போகனும். உங்களுக்கு எப்படி பண்ண முடியும்” என்று கேட்டிருந்தார்.
அதில் இருவருக்கும் சண்டைக் கூட வந்திருக்க, தாமரை நிலாவை அழைத்துக் கொண்டு, அன்னை வீட்டுக்கு வந்திருந்தார்.
அப்போது வெள்ளையம்மாள், கதிரிடம் அது குறித்து கேட்க, அவனோ, “ம்மா, எனக்கு இந்த ஊர் மருவாத மேலெல்லாம் எந்த நாட்டமும் இல்ல. ஆனா அப்பா இடத்த என்னால ஆறுக்கும் விட்டுக் கொடுக்க முடியாது” என்றான்.
“ஆறுக்கோ இல்ல ராசா. அவரு உன் அக்கா வீட்டுக்காரர். உன் மாமன்த்தேன்ன” என்று அவர் சொல்ல, சங்கரேயனும் அதற்கு சம்மதிக்க, அந்த வருடம் செந்திலிடம் அத்தனைப் பொறுப்பையும் கொடுத்திருந்தனர்.
கதிருக்கு அதில் பெரிதாய் உடன்பாடில்லை. அதனால் அவனுடைய நண்பர்களிடம் சொல்லி சற்று கவனமாகத்தான் இருக்க கூறினான். அந்த திருவிழா பிரச்சனையின்றி முடிவடைந்திருந்தது. ஆனால் அடுத்த திருவிழா ஆரம்பிக்கும் போதுத்தான், கதிருக்கு, செந்தில் கோவில் நகைகளை எல்லாம் கையாடல் செய்த விவரம் தெரியவந்தது.
அதில் முதலில் ஊர் முன்னே நிற்க வைக்கவே நினைத்தான். ஆனால், ஆயிரம் கூறினாலும் அக்காவின் கணவராகி போக, அவரை சந்தித்து, “கொடிக்கட்டுக்கு முன்னாடி, அத்தன நகையும் வந்திருக்கனும். இல்லன்னா அம்புட்டு பேர்ட்டையும் சொல்லிடுவேன்” என்று எச்சரித்து விட்டுத்தான் வந்திருந்தான்.
உடனே செந்திலோ பாண்டியிடம் உதவியைக் கேட்க, அவனோ, “கடைசி நேரத்துல் வந்து நின்னா என்னப் பண்ண முடியும். அதுவும் இருணூறு பவுன் நகைன்னா சும்மாவா?” என்று சொல்ல, “என்னப் பாண்டி, உன்ன நம்பித்தான்ன நான் அத வட்டிக்கு கொடுத்தேன்” என்றார்.
“அட என்ன மாமா? இப்படி சொல்ற. உனக்கு நான் ஒரு யோசனத்தேன் கொடுத்தேன். அதுக்குன்னு என் மேல சொன்னா என்னர்த்தம் மாமா. இப்போ என்ன? உனக்கு பதிலா நான் அந்த பலிய ஏத்துக்கிட்டு ஊர் முன்னாடி நிக்கட்டுமா? உனக்காக நான் என் உசுர கூட கொடுப்பேன்” என்று அநியாயத்துக்கு நடித்தான்.
அதனால் பாண்டியை அவர் முழுதாய் நம்பிவிட, அவனோ, “மாமா நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத. இந்த கதிரு இருக்கிற வரைக்கும் நமக்கும் பஞ்சாயத்துத்தேன். அவென்ன போட்டுட்டா என்ன?” என்று நயவஞ்சகமாய் அவர் மனதில் விஷத்தை விதைக்க ஆரம்பித்தான்.
முதலில் அவர் மறுக்க, அதன் பின் அவருக்குமே வேறு வழி தெரியவில்லை. அதனால், கதிரை கொலை செய்ய முதலில் ஆட்களை அனுப்பினர்.
திருவிழாவுக்காக, வெளியூரில் இருந்து எல்லாம் ஆட்கள் வந்திருக்க, மஞ்சரி என்ற ஒரு சென்னைப் பெண்ணும், தோழி வீட்டுக்கென்று அந்த ஊருக்கு வந்திருந்தாள்.
கதிருடைய நண்பர்கள் எல்லாம், மஞ்சரியை கதிருடன் சேர்த்து பேச, அந்த வயதுக்கே உண்டான வேகம். அதில் விளையாட்டாய், “பொண்ணத் தேடில்லாம் நம்ம போக கூடாதுல்ல. அவுகளத்தேன் நம்மள தேடி வர வைக்கனும்” என்றான்.
அது போல், மஞ்சரியை தன் பின்னால் சுத்த வைப்பதாகவும் சேலஞ்ச் செய்திருக்க, இதை எல்லாம் நிலாவும் கேட்டிருந்தாள். அதென்னவோ அவனின் மாமன், என்ன செய்தாலும் அவளுக்கு சரி தான். இப்போதும் கூட கதிர் அதில் ஜெயிக்க வேண்டும் என்றுத்தான் வேண்டிக் கொண்டாள்.
அதனால் நிலாவே இரு முறை, மஞ்சரியை கதிரின் கண்ணில் பட வைத்திருக்கிறாள். மஞ்சரிக்கும் கதிரைப் பிடித்திருந்தது. அவனுடைய ஆளுமை, தோரணை, அதிலும் மீசையை முறுக்கியப்படி சிரிக்கும் போது, அவன் முகத்தில் தெரியும் அந்த பொலிவு, அதில் மயங்காத பெண்களே இல்லை என்று சொல்லலாம்.
மஞ்சரி நிலாவை அழைத்து, “அவரு உனக்கு ரிலேட்டிவ் தான?” என்று கதிரை கை நீட்டி கேட்டாள். “ஆமா. என் மாமா” என்று நிலா புன்னகையுடன் சொல்ல, “உன் மாமாவ நான் சொல்ற இடத்துக்கு வர சொல்றீயா?” என்று கேட்டாள்.
“ம்” என்று தலையாட்டிய நிலாவும், சிவாவிடம் சென்று, விஷயத்தை சொல்லி கதிரை அங்கு செல்ல கூறினாள். ஆனால் அதில் தன் அக்கா மகள் சம்பந்தப்பட்டிருக்கிறாள் என்பது கதிருக்கு தெரியாது.
அப்போதே கதிர், “ஏல ஏதோ விளையாட்டுக்குத்தேன்ல பாத்து சிரிச்சேன். இன்னிக்கே அந்தப் புள்ளக்கிட்ட மனசுல ஏதும் வச்சுக்காதன்னு சொல்லனும்” என்று சொல்லியப்படித்தன் கிளம்பி சென்றான்.
இங்கே பாண்டியும், செந்திலும் கதிரைக் கொள்ள ஆட்களை அனுப்பியிருந்தனர். அதை அறியாத நிலாவோ, அவர்கள் என்ன பேசுகிறார்கள்? என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில், நிலாவும் அந்த தோட்டத்துக்கு சென்றிருந்தாள்.
(அப்படி அங்க என்ன நடந்திருக்கும்? மஞ்சரியால கதிர் எதுவும் காயப்பட்டிருப்பானோ? இப்படி எல்லாத்துக்குமான கேள்விய அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தென்றல் தீண்டுமா?..
Keerthi Keerthi
today ud podunga paa…. pls paa♥
Yasarath Yazar
nxt podunga pls
gayathri Shini
super sister
Anbu Anbu
super❤❤❤❤❤
Keerthi Keerthi
flashback spr sis please inu oru ud podunga pls sis…..
Yasarath Yazar
nxt podunga akka pls
Keerthi Keerthi
spr….. ♥♥
Raja Veni
சிஸ்டர் நீங்க பாக்கெட் நாவல்ல போடுற மாதிரி தலைப்பில் எபிசோட் கண்டண்ட்
போடுங்க வெறும் தென்றல்,தேன்,வரம்
இதெல்லாம் வேண்டாம் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ப்ளீஸ் ளீஸ்
Raja Veni
பிளாஸ்பேக் சூப்பர் நெக்ஸ்ட் எபி வெய்ட்டிங்
Raja Veni
1st comment
1st view
1st 👍 and ❤😂🔥💐