நிலாவும், கதிரும் தங்கள் காதல் விசாரணையை எல்லாம் முடித்து வீட்டுக்கு வந்தனர். கதிருக்கோ மீண்டும் கோவில் செல்ல வேண்டியிருந்தது. அதனால் அவன் அப்படியே கிளம்ப போக, “உள்ளார வாங்க” என்று அவன் கையைப் பிடித்தாள்.
“இல்ல செத்த வேல இருக்கு. அத முடிச்சிட்டு” என்று அவன் சொல்ல முயல, “கோவிலுக்கு போயிட்டு முதல்ல வூட்டுக்குள்ளத்தேன் போவனும்” என்றவள், அவனை இழுத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றாள்.
சட்டென்று அன்னையின் நினைவு வந்து விட, அவனும் அவளைப் பார்த்தப்படியே உள்ளே நுழைந்தான். அங்கே செல்வியோ, முருகேசனை எதிர்பார்த்து வீட்டு வாசலைப் பார்த்தப்படி நின்றிருந்தார்.
“என்ன சித்தி? இன்னும் தூங்காம என்னத்த பண்ணிட்டு இருக்கீக?” என்றப்படி நிலா அவரின் அருகில் செல்ல, “ம் உன் சித்தி நான் சொன்னா எங்க கேட்கிறா. புருஷன்காரன் வந்தாத்தேன் ரூமுக்குள்ள போவேன்னு நிக்கா” என்று தாமரை கூறினார்.
“என்னக்கா நீ நான்த்தேன் சொன்னேத்தேன்ன, மாமா, சிவாக் கூடத்தேன் இருக்காரு. இப்ப வந்திடுவாரு. அதுக்குன்னு நீ இப்படி இன்னேரம் வர முழிச்சிருக்கிறது சரியாப்படுதா?” என்று கதிர் கேட்டான்
அதில் அவரோ, “இல்லடா மனசுக்கு ஏனோ ஒப்பல. நான் இத்தன தடவ கால் பண்ணியும் அவரு இப்படி எடுக்காம இருக்க மாட்டாரு” என்று செல்வி சொல்ல, கதிரோ, “செரி நான் போயி பாத்து கூட்டியாரேன். நீ செத்த உன் வயித்துல வளர்ற பிள்ளையையும் யோசிக்கா” என்றான்.
“ஆமா சித்தி. சித்தப்பா, இங்கனத்தேன் எங்கையாச்சும் இருப்பாக. நீங்க வாங்க” என்று நிலா சென்று அவரின் கையைப் பிடித்தாள்.
அதற்குள்ளாக, “டேய் என்ன விடுடா. இன்னிக்கே நான் அத்தனையையும் முடிச்சு விடுறேன்” என்ற முருகேசனின் சத்தம் நடு வீடு வரை கேட்டது.
“இந்தா உன் மாப்பிள்ளையே வந்துட்டாரு” என்று தாமரை சொல்ல, கதிரும் வெளியில் செல்ல வாசலை நோக்கி அடி எடுத்து வைத்தான். அவனைத் தொடர்ந்து மீதி பேருமே வெளியில் செல்ல, அங்கே முழு போதையில் முருகேசன் சிவாவின் கை அணைவில் நின்றிருந்தார்.
அதைப் பார்த்த அத்தனைப் பேருக்குமே அதிர்ச்சி. முருகேசன் குடிப்பார் தான். ஆனால் இப்படி எல்லாம் முழுதாய் குடித்து யாரும் பார்த்தது கிடையாது. அளவாய் குடித்து விட்டு அமைதியாய் சென்று படுத்து விடுவார்.
அப்படி இருக்க இப்படி நிற்க கூட முடியாது சிவாவின் கை தாங்கலில் நின்றிருப்பதைப் பார்க்க, யாருக்கும் எதுவும் ஓடவில்லை.
“இப்போ எதுக்குடா என்ன பிடிச்சு வச்சிருக்க. என்னை விடு” என்று சிவாவின் கையை மீறி அவர் நடக்க முயற்சிக்க, அவர் தடுமாறி கீழே விழ சென்றார்.
“மாமா” என்று கதிர் சென்று அவனைத் தாங்கிப் பிடிக்க, செல்விக்கோ கோவம் அப்படி வந்தது.
“அந்தாள பாக்க போகாதீகன்னு அப்பவே சொன்னேன். அந்தாளு அவரு கெட்டது மட்டுமில்லாம, இப்புடி அத்தனப் பேரையும் கெடுத்து அனுப்புறாரு. ஏத்தா நிலா நீ போயி நீர் மோர் இருந்தா, அதுல எழுமிச்சைய புளிஞ்சு எடுத்து வா” என்று தாமரை சொல்ல, “செரிம்மா” என்றப்படி நிலா வீட்டினுள் சென்றாள்.
கதிரைப் பார்த்த முருகேசனோ, “எப்படில்ல நீ இப்புடி இருக்க?” என்று கோவமாய் அவனின் சட்டையைப் பிடித்தார். அதில் அவனோ, “என்னத்த மாமா பண்ணிட்டு வந்திருக்கீக” என்று சிறு கோவத்துடன் கேட்டான்.
“உம்ம விடவா நான் பெருசா பண்ணிட்டேன்” என்று முருகேசன் கேட்க, கதிரோ சிவாவிடம், “இதுத்தேன் நீ அவர பாத்துக்கிடுற லட்சணமா?” என்று கோவமாய் கேட்டான்.
“இல்லண்ணே” என்று சிவா தயங்க, “அவென்ன ஏன்ல பேசுற? என்ட்ட பேசு” என்று முருகேசன் விடாமல் பேச, “அவென்கிட்ட பேசுறது கிடக்கட்டும். முதல்ல என்ன பாத்து பேசுங்க” என்று செல்வி கோவமாய் கூறினார்.
மனைவியைப் பார்த்ததும் ஒரு நொடி தயங்கிய முருகேசனோ, அடுத்த நொடி, “என் அத்த பெத்த மணிக்குயிலே, உம்மகிட்ட பேசாம இருப்பேன்னா. வாரேன். ஆனா அதுக்கு முன்னாடி, உன் அக்கான்னு ஒருத்தவக இருப்பாகளே, அவுகள வர சொல்லு” என்று கத்தினார்.
சிறிதும் அவரிடம் நிதானம் இல்லை. தாமரை அங்கு இருக்கிறார் என்பது கூட அவர் கருத்தில் படவில்லை.
அவரின் வார்த்தையில் தாமரையோ, “இப்போ எண்ட்ட என்ன சொல்லனுமாம். அதுவும் சீமத்தண்ணிய ஊத்திட்டு வந்து பேசுற அளவுக்கு என்ன சேதி வச்சிருக்காகளாம்” என்று சடவாய் கேட்டார்.
அப்போதே தாமரையைப் பார்த்த முருகேசனோ, “ஊருல அம்புட்டு பேருக்கு நியாயம் சொல்ற நியாயஸ்தில்ல நீரு. நீங்களே, இதுக்கும் சொல்லுங்க” என்று அவரின் முன்னே சென்றான்.
போதையில் மீண்டும் கால்கள் தடுமாற, “ச் முதல்ல வூட்டுக்குள்ள வாங்க மாமா” என்று கதிர் அவனைப் பிடித்து உள்ளே அழைக்க முயன்றான்.
“இல்ல இந்த வூட்டுக்குள்ள நான் வர மாட்டேன். என் உடம்புல ஓடுற இரத்தம் முழுசும் வத்திப் போட்டும் வரேன்” என்றவருக்கு, அண்ணன் செய்த துரோகத்தை தாங்கவே முடியவில்லை.
“என்ன மச்சான் பேசுறீக?” என்று செல்வியும் கோவமாய் கேட்க, அதற்குள் தாமரையோ, “உங்க அண்ணன் கூட சேர்ந்து உமக்கும் புத்தி மழுங்கிப் போச்சா. புள்ளத்தாச்சி புள்ள முன்னாடி என்னத்த பேசிட்டு இருக்கீக” என்று கோவமாய் கேட்டார்.
கதிரோ சிவாவிடம், “என்னாச்சிடா? எங்கனப் போனீங்க?” என்று கோவமாய் கேட்டான்.
“என்ன தொடாத மாப்பிள்ள நீ” என்றவர் தாமரையிடம் மீண்டும் செல்லப் போக, சிவாவோ கதிருக்கு மட்டும் கேட்கும் தோரணையில், “செந்தில் மாமாக்கூடத்தேன்னே பேசிட்டு இருந்தாரு. அவுகளுக்குள்ள ஏதோ வாக்குவாதம் போல தெரிஞ்சிச்சு” என்றான்.
அதைக் கேட்டவனுக்கோ ஏதோ புரிந்தும், புரியாமலும் போக, முருகேசனைப் பார்த்தான்.
அதற்குள் செல்வியோ, “நல்ல நாள் அதுவுமா ஏங்க இப்படி பண்ணிட்டிருக்கீக” என்று ஆதங்கமாய் கேட்டார். ஏனோ அவருக்கு அவமானமாய் இருந்தது.
நேற்று வரை, அந்த வீட்டில் முருகேசனுக்கு அப்படி ஒரு பெயர் இருந்தது. எங்கே இவரின் சத்தத்தை கேட்டு, சங்கரேயன் எழுந்து வந்து விடுவாரோ? என்று பதட்டமாகவும் இருந்தது.
“நல்ல நாள்த்தேன். இல்லண்ணா, இத்தன நாள் ஆறுக்கும் தெரியாத விஷயம் எமக்கு தெரிய வந்திருக்குமா?” என்றவர் அதைத் தாண்டி பேச முயற்சிக்க, “மாமா” என்று கதிர் அவரை தடுத்தான்.
“என்னல்ல, இதுக்கு மேலையும் நான் பேசலன்னா, நான்லாம் மனுஷனே கிடையாது” என்றவர் தாமரையிடம் ஏதோ பேசப் போக, “எல்லாரும் உள்ளாரப் போங்க. நான் மாமாவ பின்னாடி இருக்க வூட்டுக்கு கூட்டிப் போறேன்” என்றான்.
“இல்ல” என்று செல்வி ஏதோ பேச வர, “அக்கா நான்த்தேன் சொல்றேன்த்தான ராத்திரி நேரத்துல இப்புடி நிக்கிறது நல்லா இருக்காது” என்றான் கதிர்.
தாமரையும், “அவென் சொல்றதும் சரித்தேன். புள்ளத்தாச்சிப் புள்ள இப்படி கருக்கல்ல வெளிய நின்னா, அது குழந்தைக்கு ஆகாது. நீ வா. மாமனாச்சு, மாப்பிள்ளையாச்சு, அவுக பாத்துப்பாக, எப்படியும் இப்போ நீ பேசுனாலும், அவுக மண்டையில உரைக்காது” என்ற தாமரை செல்வியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.
“நில்லுங்க. இன்னிக்கே நான் எல்லாத்தையும் சொல்லனும்” என்ற முருகேசன் கதிரின் பிடியில் இருந்து துள்ள, சிவாவும், கதிரும் சேர்ந்து அவரை பின் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
“விடு மாப்புள்ள. போதும் இத்தன நாள் நீ அனுபவிச்சதெல்லாம் போதும். இதுக்கு மேல உன்ன ஆறும், எதுக்கும் விரல் நீட்டி பேசக் கூடாது” என்று முருகேசன் சொல்ல, கதிரோ சிவாவிடம், “நீ போயி செந்தில் மாமாக் கூட இரு. நான் இங்கன பாத்துக்கேன்” என்றான்.
“அவென்ன எதுக்குல்ல பாக்கனும். செத்தா சாகட்டும். இப்போ அவென் உசுரோட இருந்து என்னத்த சாதிக்கப் போறான்” என்று கோவமாய் கேட்டார்.
அதில் கதிரோ சிவாவிடம் கண்ணைக் காமிக்க, அவனும் அங்கிருந்து சென்றான்.
அதைப் பார்த்த முருகேசனோ, “எனக்கு மனசு ஆறலல்லே. உமக்குப் போயி துரோகம் பண்ண, அந்தாளுக்கு எப்படில்ல மனசு வந்திச்சு. அவென் செஞ்ச கொலைக்கு, நீ ஏன்ம்ல இன்னமும் தண்டனைய அனுபவிச்சு கிடக்கனும்?” என்று சொல்லும் போதே முருகேசனுடைய கண்கள் எல்லாம் கலங்கியது.
அதிலேயே கதிருக்கு, முருகேசனுக்கு அனைத்து உண்மையும் தெரிந்து விட்டது என்பது புரிந்தது. அதில் அவனோ, “முதல்ல செத்த அமைதியா உட்காரு மாமா” என்று கட்டிலில் அமர வைக்க முயற்சித்தான்.
“எப்படில்ல அமைதியா இருக்க சொல்ற. உம்ம அம்மை, என் அத்தைய கொண்ணுருக்கான்ல அவென். அப்புடி இருக்கிறப்ப, எப்படில்ல, என்னால கம்முன்னு கெடக்க முடியும்?” என்று கோவமாய் கேட்டார்.
சரியாக அன்னேரம் தான் கையில் ஜூஸுடன் நிலா அங்கே வந்தாள். அவள் காதில் அது விழ, அப்படியே அங்கேயே நின்று விட்டாள்.
“எதுவா இருந்தாலும், விடிஞ்சதும் பேசிக்கலாம் மாமா” என்ற கதிர் அவரை அடக்க முயன்றார்.
அவனின் வார்த்தையில், “எப்புடில்ல, நீ இத்தன வருஷமா, உன் ஆசை, கனவு, லட்சியத்த உனக்குள்ளையே போட்டு கொன்னுட்டு பேசுனீயே, அப்படியா?” என்றார்.
“மாமா” என்ற கதிருக்கு சட்டென்று வார்த்தை வரவில்லை. “என் அத்தைய கூட ஒரு தடவைத்தான்ல அவென் கொன்னான். ஆனா, இத்தன வருஷத்துல அதுக்காக நீ எத்தன தடவ செத்து புழைச்சிருப்பேன்னு, அடுத்தவுகளுக்கு வேணா தெரியாம போகலாம். கூடவே இருந்த எமக்கு தெரியும்ல. உண்மைய சொல்லு. இப்போ நிக்கிறீயே. இதுத்தேன் என் மாப்பிள்ள கதிரா? சொல்லுல்ல. நீ என் கதிரா?” என்று ஆதங்கமாய் அவனுடைய சட்டையைப் பிடித்தார்.
அவரின் வார்த்தையில் கதிர் இழந்த அனைத்தும் அவன் கண் முன்னே வந்து நின்றது. அதில் அவனுடைய இதயமும் அத்தனைப் பலமாய் துடித்தது. அவன் நினைவடுக்கில் பழைய கதிர் ஒரு நொடி வந்து சென்றான்.
அந்த கதிரின் முகத்தில் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது. ஆனால் இப்போதிருக்கும் கதிருக்கு? என்ற கேள்விக்கு அவனிடமே பதில் இல்லை.
“நிசமா சொல்றேன்ல, உன் இடத்துல நான் இருந்தேன்னு வை. அவென்ன எப்பவோ வெட்டி வீசிடுப்பேன். ஆனா நீ ஏன்ல இப்படி பண்ண. எல்லா தப்பையும், உன் தல மேல எதுக்குல்ல போட்டுக்கிட்ட? யாருல்ல அவென்? அவெனுக்காக, உன் வாழ்க்கைய நீ ஏன் தொலைச்ச?” என்று கேட்டார் முருகேசன்.
“நான் என்னத்த மாமா பெருசா தொலைச்சிட்டேன். நான் நல்லாத்தேன்ன இருக்கேன். அத விடுங்க. அத பத்தி ஆறுட்டையும் ஏதும் எப்பவும் பேசக் கூடாது” என்றார்.
“அப்படியால்ல, நீ நல்லாத்தேன் இருக்கீயா? எங்க என் கண்ண பாத்து பேசுல்ல” என்றவர் அவனை தன்னைப் பார்க்க கூறினார். ஏனோ அவனுக்கு ஒரு வித தயக்கம்.
“இப்போ நீங்க நிதானத்துல இல்ல மாமா. விடுங்க” என்றான்.
“நான் நிதானத்துல இல்லண்ணே வச்சிப்போம். நீ நிதானத்துலத்தேன்ன இருக்க. எங்க? என் மேல சத்தியம் பண்ணி சொல்லு. நீ முழுசா சந்தோஷமாத்தேன் இருக்கேன்னு. இதுனால நீ எதையுமே இழக்கலன்னு” என்றவர் அவன் கையைப் பிடித்து தன் தலையில் வைத்துக் கேட்டார்.
அவனுடைய கரம் மெலிதாய் நடுங்கியது. “மாமா” என்றவன் அவன் கையை உறுவ முயற்சித்தான்.
“என் மேல உண்மையாவே பாசம் இருந்திச்சின்னா, இந்த கேள்விக்கு பதில் சொல்லுல்ல” என்று கோவமாய் கேட்டார்.
“கஷ்டம்த்தேன் மாமா. ஆனா அதுக்கு என்னப் பண்ண முடியும்? ஆறுக்கு எது கிடைக்கனும்னு இருக்கோ அதுத்தேன் கிடைக்கும்” என்றவன் முகத்தை திருப்பினான்.
“உமக்கு கிடைக்கலன்னா, இந்த உலகத்துல ஆறுக்கும் அது கிடைக்காதுல்ல. இந்த ஊருல கண்ட நாயெல்லாம் உன்ன கேலிப் பண்ணிட்டு திரியுதே. அதுக்கெல்லாம் காரணம் ஆறுல்ல? இன்னேரம் காக்கி சட்டையில, கம்பீரமா இந்த ஊர சுத்தி வர வேண்டியவன் கையில களப்பைய கொடுத்தது ஆறுல்ல? சிரிப்பும், சந்தோஷம் மட்டுமே இருந்த வீட்டுல துக்கத்த அள்ளிப் போட்டவன் ஆறுல்ல. அதெல்லாம் கூட விடுல்ல. என் மாப்புள்ள கதிர கொன்னவன் ஆறுல்ல? இது என் கதிர் கிடையாதுல்ல. நிசமா நீ என் கதிர் கிடையாதுல்ல” என்று அத்தனை ஆதங்கமாய் கத்தினார்.
அதை எல்லாம் கேட்ட நிலாவுடைய இதயம் அத்தனை பலமாய் துடித்தது. அவளுடைய உடல் ஒரு வித நடுக்கத்தை சுமந்தது. அவள் யோசித்த கேள்விக்கான பதில் இப்போது அவளுக்கு கிடைக்க ஆரம்பித்தது. அவள் கண்ணெல்லாம் கலங்கி சிவக்க ஆரம்பித்தது.
(கதிருடைய கடந்த கால வலியை நிலா சரி செய்வாளா? அவன் இழந்த சந்தோஷத்தை மீட்டுத் தருவாளா? இது எல்லாத்தையும் அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட் எப்படி இருந்திச்சுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்னிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தென்றல் தீண்டுமா?..
Keerthi Keerthi
nxt ud podunga paa..????
Thiruviswa Viswa
super
Yasarath Yazar
pls akka nxt podungana
Suba Suba
next epi eppo
Raja Veni
கலங்க வைச்சுட்ட கதிரு
Raja Veni
இப்படி ஒரு தம்பி கிடைக்க தாமரையும் செல்வியும் குடுத்து வெச்சு இருக்கனும்
gayathri Shini
super sister
Keerthi Keerthi
spr♥♥