பிரியா நிலாவின் கையைப் பிடித்து, ஏதேதோ பேசிக் கொண்டிருக்க, அவள் கன்னத்தில் ஓங்கி அடித்திருந்தாள் நிலா. அதை பிரியா சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“ஹேய் என்னையவே அடிச்சிட்டல்ல, உன்ன” என்ற பிரியாவும் திரும்பி அவளை அடிக்கப் போக, அவள் கையை மடக்கிப் பிடித்த நிலா, “நீங்க பேசுறதெல்லாம் கேட்டுட்டு நிக்கனும்னு எனக்கு எந்த அவசியமும் கிடையாது. ஏதோ கோவத்துல இருக்கீங்க, பொறுமையா போலாம்னு இருந்தா, உங்க இஷ்டத்துக்கு பேசிட்டே போறீங்க. இன்னொரு தடவ என் மாமாவ உங்களுக்கு சொந்தம்னு சொன்னீங்க, பொறவு நான் என்னப் பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. அவர் என் மாமா. இப்போ அவரு என் புருஷன். எமக்கு மட்டும்த்தேன் சொந்தம்” என்று கோவமாய் கூறினாள்.
“சொன்னா என்னடி பண்ணுவ. இப்பவும் சொல்றேன். நீ வாழ்ந்துட்டு இருக்கிறது என் வாழ்க்கை. கதிரு எனக்குத்தேன் சொந்…” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னே அவள் கன்னத்தில் மீண்டும் அடித்திருந்தாள் நிலா.
“ஹே” என்ற பிரியா கன்னத்தில் கை வைக்க, நிலாவோ, “என் மாமா மாதிரி எல்லாம், போனா போதுன்னு மன்னிச்சு விடுற பழக்கம் எமக்கு கிடையாது. இன்னொரு தடம் என் மாமா பேரு உங்க வாயில இருந்து வந்திச்சு, வெட்டி வீசிட்டு போயிட்டே இருப்பேன். ஜாக்கிரத” என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.
அவளுடைய இந்த அவதாரத்தை சற்றும் எதிர்பார்க்காத பிரியா அதிர்ச்சியாய் நிற்க, அதற்குள்ளாக, “அண்ணி, அண்ணே உங்கள கூட்டியார சொன்னாக” என்று ஒருவன் வந்து நின்றான்.
அதில் நிலா, பிரியாவைப் பார்க்க, அவளோ கோவமாய் அங்கிருந்து சென்றாள். அவள் சென்றதும், “செரிண்ணே, நீங்க முன்னாடி போங்க. நான் வரேன்” என்று நிலா சொலல், “இல்ல, உங்கள கையோட கூட்டிவர சொன்னாக” என்றான்.
“செரி ஒரு நிமிஷம்” என்றவள், கையில் இருந்த காயத்தை தன்னுடைய மீத வளையளால் மறைத்தவள், அவனுடன் சென்றாள். அங்கே கதிரோ, நிலாவைப் பார்த்ததும், “வா” என்றான்.
“என்ன மாமா?” என்று அவன் அவள் அருகில் செல்ல, “என் கூடவே நில்லு” என்றான்.
“நான் எப்படி மாமா?” என்றவள் தயங்க, “என் பொண்டாட்டித்தேன்ன, கதிரு பொண்டாட்டி நிக்கலாம்” என்றான். அதில் அவளோ அவனைப் பார்க்க, அவனோ அடம்பிடித்தான்.
அதில் வேறு வழியின்றி அவளும் அங்கேயே நிற்க, அவனும் கோவில் பட்டத்துடன் நடக்க ஆரம்பித்தான். அதை எல்லாம் சற்று தள்ளி நின்று பார்த்த பாண்டிக்கு பற்றிக் கொண்டு வந்தது.
“பொண்டாட்டிய விட்டுட்டு ஐஞ்சு நிமிஷம் நிக்க மாட்டீயா? அப்போ உம்கிட்ட இருந்து அவள நிரந்தரமா பிரிக்கேன்” என்று தனக்குள்ளே அழுத்தமாய் சொல்லிக் கொண்டான்.
இங்கே கதிருக்கு முதல் மரியாதை செய்ய, செல்வி, தாமரை இருவரும் நிலாவுடன் சேர்ந்து அதை ரசித்துப் பார்த்தனர். அவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. கொடியேற்றம் முடியும் வரையிலும் கூட முருகேசன் வரவில்லை.
அது செல்விக்கு சற்று உறுத்தலாகத்தான் இருந்தது. முருகேசனுக்கு கால் செய்ய அவருடைய மொபைலோ சுவிட்ச் ஆப் என்று வந்தது.
“செரிக்கா வாங்க உங்கள வூட்டுல விட்டுறேன்” என்று கதிர் சொல்ல, “இன்னும் உன் மாமா வரலையேய்யா” என்றார் செல்வி.
“ஏதாச்சும் வேலையா போயிருப்பாக. நான் என்னென்னு பாக்க சொல்றேன். நீங்க வாங்க” என்று கதிர் அழைக்க, தாமரையோ, “எல்லாம் அந்தாள சொல்லனும், அவரத் தேடி போயி, இப்படி இவரும் பொண்டாட்டி புள்ளைங்க கூட சாமிய கும்பிட முடியாம போயிடுச்சி” என்று வருத்தப்பட்டார்.
“ச் ஏன்க்கா இப்புடி பேசுற” என்று செல்வி சொல்ல, கதிருக்குமே சற்று உறுத்தலாய் இருந்தது. அதனால், சிவாவுக்கு கால் செய்தான். அந்தப் பக்கம் அவனோ ஒரு வித பதட்டத்தோடுத்தான் பேசினான்.
“எங்க இருக்க நீ?” என்று கதிர் கேட்க, “இங்கனத்தாண்ணே, என்ன விஷயம்” என்று சிவா கேட்க, “இங்கனன்னா? மாமா வேற எங்கன இருக்காருன்னு தெரில. அவர பாத்தீயா?” என்று கேட்டான்.
“என் கூடத்தேண்ணே இருக்காரு. இங்கன செத்த வெளிய வந்தோம்” என்று சிவா சொல்ல, அதன் பின்னே கதிருக்கு சற்று நிம்மதியாக இருந்தது.
“உன் கூடத்தேன் இருக்காகளா? செரி. எப்போ வறீக?” என்று கதிர் கேட்க, “செத்த நேரத்துல வூட்டுக்கு வந்திடுவோம்ன்னே” என்று சிவா சொல்ல, கதிரும் அதையே செல்வியிடம் கூறினான்.
அதைக் கேட்ட செல்வியோ, “செரிய்யா. அவருக்கு எப்பவுமே இப்பத்தேன் வேல வரும். செரி நாங்க பொறப்படுறோம். அவர சாமிய பாத்துட்டு வர சொல்லு” என்றார்.
“அதெல்லாம் சிவா கூடத்தேன் இருக்காராம். அவென் பாத்துப்பான்” என்று கதிர் சொல்ல, அவர்களும் வீட்டுக்கு கிளம்பினர். கதிரும் நிலாவும் பைக்கில் வர, நிலாவோ, “மாமா” என்று மெதுவாய் அழைத்தாள்.
அதில் அவனோ, “என்ன? ஏதும் பண்ணுதா? தூக்கம் வருதா. செத்தப் பொறு. வூட்டுக்கு போயிடலாம். இல்லன்னா, தோள்ல சாஞ்சிக்கோ” என்று கேள்வியையும் கேட்டு பதிலையும் கூறினான்.
அவனின் வார்த்தையில், “அதில்ல மாமா” என்று அவள் அழுத்தி சொல்ல, கண்ணாடி வழியே அவள் முகத்தைப் பார்த்தவன், அவள் ஏதோ யோசனையாக இருப்பது புரிந்தது.
“வேறென்ன?” என்று அவன் கேட்க, “மாமா, என்ன ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?” என்று கேட்டாள்.
அவளின் வார்த்தையில் அவன் பைக்கை சடன் பிரேக் போட்டு நிறுத்த, அவன் முதுகில் சென்று மோதினாள். “மாமா பாத்து” என்று அவள் சொல்ல, அவனோ, “இப்போ எதுக்கு இந்த கேள்வி?” என்றான்.
“சொல்லுங்க மாமா” என்று அவள் கேட்க, “உன் அப்பா எதுக்கு எங்கக்காவ கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க?” என்று கடுப்பாய் கேட்டான். அவனின் வார்த்தையில், “அதில்ல மாமா. உங்களுக்கு டவுன் காரப்பிள்ளைய கட்டிக்கனும்னுத்தேன்ன ஆச?” என்று கேட்டாள்.
“அப்படின்னு ஆறு சொன்னா?” என்று அவன் கேட்க, “எனக்குத் தெரியும்” என்றாள். அவளின் வார்த்தையில், “எல்லாமே உமக்குத் தெரியும் அப்படித்தேன்ன?” என்று புருவம் உயர்த்திக் கேட்டான் கதிர்.
அதில் அவளோ அவன் முகத்தைப் பார்க்காது, “நீங்க, சைட்டடிச்சதல்லாம் நான் பாத்திருக்கேன்” என்றாள். அவளின் வார்த்தையில் அவனோ பைக்கை விட்டு இறங்கி, “என்னமோ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடித்தேன், என்ன முழுசா நம்புறேன்னு சொன்ன?” என்றான்.
“இப்பவும் நம்புறத்தேன். ஆனா எனக்கு தெரியும். உங்களுக்கு பட்டணக்கார புள்ளைங்களத்தேன்ன பிடிக்கும்?” என்று அழுத்திக் கேட்டாள்.
அவளின் வார்த்தையில், “நான் இப்போ ஆற சைட்டடிச்சேன்னு, என் அக்கா மவ இப்படி பாதி வழியில விசாரண நடத்திட்டு இருக்கா?” என்று சிறு சிரிப்புடனே கேட்டான்.
ஏனெனில் நேற்று வரை கூட அவள் சிறு பிள்ளை என்று நினைத்து வார்த்தையை விட்டிருப்பான். ஆனால் இப்போது அவனுக்கு ஒன்று தெளிவாய் புரிந்தது. அது என்னவென்றால், அவன் கோவப்பட்டாலும், அவனுக்குத்தான் பிரச்சனை. அவள் கோவப்பட்டாலும் அவனுக்குத்தான் பிரச்சனை. அதனால் பொறுமையாகவே பேசினான்.
“இப்போ எல்லாம் நீங்க அடிக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா முன்னாடி அடிச்சிருக்கீங்கத்தேன்ன?” என்று கேட்டாள். அதில் அவனோ நெற்றியை சுருக்கினான். ஏனெனில், அவன் கல்லூரி படிக்கும் போது, குறிப்பாய் அவன் அன்னை இறக்கும் முன் வரை அப்படி எல்லாம் ரோட்டோரம் நின்று சைட்டடித்துள்ளான் தான். ஆனால் அப்போது நிலாவுக்கு வயது ஒன்றும் இருக்காது. இத்தனைக்கும் அவனுக்கு அப்போதெல்லாம் நிலாவை பார்த்ததாய் நினைவில் கூட இல்லை. ஆனாலும் இத்தனை தெளிவாய் கேட்பது அவனுக்கு சிறு சுவாரஸ்யத்தைக் கொடுத்தது.
“அடிச்சிருக்கேன்த்தேன். இப்போ அதுக்கு என்ன?” என்று அவன் கேட்டான். “இல்ல அப்பவும் உங்களுக்கு டவுன்ல இருந்து வந்தப் பொண்ணுங்களத்தேன்ன பிடிக்கும்?” என்று மீண்டும் அழுத்திக் கேட்டாள்.
அதென்னவோ, எல்லா நேரமும் பெரிய பெண்ணாய் அவளைக் காட்டிக் கொண்டாலும், சிறு பிள்ளைத்தனமும் எட்டிப் பார்த்தது.
அதனால் அவனோ, “அதெல்லாம் இல்லையே. அழகா இருந்தாலே சைட் அடிச்சிருப்பேன்னே” என்று சீண்டலாய் கூறினான்.
அதில் அவள் அவனை முறைக்க, அவனோ வெகு சாதாரணமாய், “அதேன் என் பொண்டாட்டிக்கு முன்னமே தெரிஞ்சிருக்குத்தேன்ன” என்றான்.
“அதில்ல மாமா” என்றவள் கடுப்பாய் அவனைப் பார்க்க, “என் பொண்டாட்டிக்கு என்னாச்சு? எதுனாலும் நேரடியா கேட்க வேண்டியதுத்தேன்ன?” என்றான்.
“நீங்க சிவாண்ணேக்கிட்ட, உங்களுக்கு நல்லா படிச்ச நாகரீகம் தெரிஞ்ச பொண்ணுத்தேன் வேணும்னு சொன்னீங்கத்தேன்ன?” என்று கேட்டான்.
உண்மையில், எப்போதோ கதிர் சிவாவிடம், ஏதோ பேசும் போது, எதார்த்தமாய் சொல்லியிருந்தான். அது அவனுக்கே நினைவில் இல்லை. ஆனால் நிலாவுக்கோ அது ஆழமாய் மனதில் பதிந்திருந்தது. அது மட்டும் அல்லாது, பிரியாவை பிடித்ததுக்கு காரணம் கூட அதுவாக இருக்கலாம் என்று அவள் நினைத்தாள்.
அதனால் இப்போது அவனோ, “செரி அப்படி சொல்லிருந்தாக் கூட, ஏன் இப்போ கிராமத்துலையும் பொண்னுங்க அப்படித்தேன்ன இருக்காங்க” என்றான்.
“ம்ஹூம் எனக்குத் தெரியும். உங்களுக்கு டவுன் பொண்ணுத்தேன் பிடிக்கும்” என்று அதையே அவள் சொல்ல, “செரிடி. அப்படியே இருந்துட்டு போகட்டும். ஆனா இப்போ என் பொண்டாட்டிய தவிர வேற ஆறையும் எனக்கு பிடிக்காது” என்றான்.
அதில் அவளோ, “அது எனக்கே தெரியும்” என்று உதட்டை சுழித்தாள். அவளின் செயலில், அவனின் மனம் மனைவியிடம் தாவியது. அதில் மெலிதாய் புன்னகைத்தவன், “அதேன் உமக்கே தெரியுதுத்தேன்ன? பொறவென்ன?” என்றான்.
அதில் அவளோ, “ஒன்னுமில்ல. நீங்க வண்டிய எடுங்க” என்று சொல்லியப்படி பைக்கில் ஏற சென்றாள். ஆனால் அதற்குள்ளாக அவள் இடையோரம் கைக் கொடுத்து இறுக்கிப் பிடித்தவன், “கதிரு பொண்டாட்டி, காரணம் இல்லாம ஏதும் கேட்க மாட்டான்னு தெரியும். சொல்லு என்ன விஷயம்?” என்று கேட்டான்.
அதில் அவன் கண்ணை நேருக்கு நேர் சந்தித்தவள், “பொறவு ஏன் மாமா என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சீங்க?” என்று கேட்டாள்.
“நீ என் அம்மா மாதிரி தெரியுமா? இந்த உலகத்துல என் அம்மாக்கடுத்து என்ன புரிஞ்சிக்கிட்டது நீ மட்டும்த்தேன்” என்றான். அவனின் வார்த்தையில் சற்றும் யோசிக்காது அவனை இறுக்கமாய் கட்டிக் கொண்டாள்.
ஒத்தையடிப் பாதைத்தான் இருள் மொத்தமும் சூழ்ந்திருந்ததுத் தான். ஆனாலும் கொடியேற்றம் முடிந்து அனைவரும் வரும் பாதை என்பதால், “ஆறாச்சும் பாக்க போறாங்கடி” என்றான்.
“பாத்தா பாக்கட்டும். என் மாமாவ நான் கட்டிப்பேன்” என்றவள் இன்னும் வாகாய் அவன் மார்பில் புதைந்தாள். அதில் அவளை மெல்ல கட்டிக் கொண்டவன், “ஆறும் ஏதும் சொன்னாகளா?” என்றான்.
“ம்ஹூம்” என்றவள் சில நொடிக்கு பின் அவனை விட்டு விலகி, “இப்போ மட்டும் இல்ல இனி எப்பவுமே சைட் அடிக்க கூடாது” என்றாள்.
அதில் சிரித்தவனோ, “ம்ஹூம் அதெல்லாம் நான் நல்லாவே சைட் அடிப்பேன்” என்று சொல்ல, அவள் அவனைப் பார்க்க, அதற்குள்ளாக அவள் நெற்றி முட்டியவன், “என் பொண்டாட்டிய சைட் அடிப்பேன்” என்றான். அவனின் வார்த்தையில் பெண்ணவளின் முகம் வெட்கத்தில் சிவந்தது.
அங்கே முருகேசன் தான் கண்டமேனிக்கு குடித்துக் கொண்டிருந்தார். சிவா தடுக்க முயற்சித்தான்.
(ஏன்ப்பா. உன் அண்ணன் ஒருத்தன் குடிச்சு கெட்டு போனது பத்தாதா? இப்போ நீயும் ஆரம்பிச்சிட்டீயா? செரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தென்றல் தீண்டுமா?..
Anandhi G
today episode…? pls
Yasarath Yazar
pls akka nxt podunga
Keerthi Keerthi
nxt ud podunga paa pls….
Keerthi Keerthi
today episode..??? pls update pannuga sis
gayathri Shini
excellent sister