சேலை கட்டி விட்ட கையோடு, அவளையும் பின்னிருந்து அணைத்திருந்தான் கதிர். அவனின் அணைப்பில், அவளின் உள்ளமும் தடுமாற, இருந்தும் அவள் அதை இழுத்துப் பிடிக்க முயற்சிக்க, “உன் மாமம் பாவம்த்தேன்ன? கொஞ்சம் ஏன்னுத்தேன் கேளேன்” என்றான் கதிர்.
அவளோ அப்போதும் அமைதியாய் நின்றிருக்க, “நிலா. நீ எண்ட்ட கேட்கிற வர நான் உன்ன விட மாட்டேன்” என்று அவள் தோள் வளைவில் முகத்தைப் புதைத்தான்.
“கோவில்ல எல்லாரும் உங்கள தேடுவாக” என்று நிலா சொல்ல, “தேடுனா தேடட்டும்” என்றான். அவள் மீண்டும் அமைதியாகிவிட, “இப்போ என்னத்துக்கு இம்புட்டு வீம்பு?” என்றான்.
“அதெல்லாம் இல்ல. நான் நல்லாத்தேன் இருக்கேன். நீங்க விடுங்க” என்று அவள் அவன் கையில் இருந்து விலக முயற்சிக்க, அவளை விலக விடாது மீண்டும் இழுத்துப் பிடித்து, “என் பொண்டாட்டியப் பத்தி எனக்கு தெரியாதா?” என்றான்.
அதில் அவன் பக்கம் திரும்பி நின்றவள், “என்னப் பத்தி என்ன மாமா தெரியும்?” என்று கேட்டாள்.
அவளின் வார்த்தையில், “இப்போ என்னத்த நான் தெரிஞ்சிக்கலையாம்?” என்றப்படி அவளைப் பார்த்து புருவம் உயர்த்தினான்.
“நீங்களே சொல்லுங்க மாமா. என்னப் பத்தி என்ன தெரியும்?” என்றாள். அப்போதே அவள் பார்வையில் தெரிந்த அழுத்தத்தையும், அவள் வார்த்தையில் இருந்த கோவத்தையும் கண்டான்.
அதில் அவனோ, “நிலா அன்னிக்கு நான் வேணும்னு ஏதும் பேசல” என்றவனின் பொறுமையும் குறைந்துக் கொண்டேத்தான் போனது. அதென்னவோ அவனைப் பொறுத்தவரை அவளை சிறு பெண் என்றே பார்த்து விட்டான். அதனால் அவனுடைய யோசனைக்குள்ளும், அவளை அவன் சிறு பெண்ணாகவே வைத்து விட்டான். அதனால் தான், அவள் தவறாய் எடுத்துக் கொள்வாள். புரியாமல் நடந்துக் கொள்வாள் என்ற முடிவை எடுத்திருந்தான்.
இப்போதும் கூட, அவளுடைய கோவமும், பிடிவாதமும் சிறுபிள்ளையின் வீம்பாகத்தான் தெரிந்தது.
“இப்பவும் நான் அன்னிக்கு நடந்தத தப்பா எடுத்திருப்பேண்னு நினைச்சித்தான மாமா பேசிட்டு இருக்கீக?” என்றாள். “நீ தப்பா எடுத்திருப்பேன்னு சொல்லல நிலா. அப்படியே நீ நினைச்சிருந்தாக் கூட அது தப்பெல்லாம் கிடையாது. ஆறா இருந்தாலும்” என்று கதிர் சொல்லி முடிக்கும் முன்னே, “ஆறு சொன்னாலும் நான் என் மாமாவ தப்பா நினைக்க மாட்டேன்” என்றாள்.
அதில் அவன் அவளை நிமிர்ந்துப் பார்க்க, “உங்களுக்கு என்ன புரியல மாமா. அது எனக்கு கஷ்டமா இருக்கு” என்றாள்.
“இல்ல நிலா நான்” என்று கதிர் பேச முயற்சிக்க, “நான் பேசிடுறேன் மாமா” என்று அவள் சொல்ல, அவன் அமைதியானான்.
“நான் உங்கள விட சின்னப் புள்ளத்தேன். உங்க அளவுக்கு எனக்கு அனுபவம் கிடையாதுத்தேன். அதுக்குன்னு, என்ன சுத்தி என்ன நடக்குது? ஆறு எப்படிப்பட்டவகன்னு புரிஞ்சிக்க கூட முடியாத அளவுக்கு பக்குவம் இல்லாதப் பொண்ணுல்லாம் கிடையாது. நீங்களும், நானும் புருஷன் பொண்டாட்டின்றத அடுத்தவக சொல்லித்தேன் நான் புரிஞ்சிக்கிடனும்னு கிடையாது. எனக்கு பிடிக்காத விஷயத்த அடுத்தவக சொல்லி செய்ற ஆளும் நான் இல்ல. எனக்கு உங்களப் பிடிச்சிருந்திச்சு. அதனாலத்தேன் கன்னாலம் பண்ணிக்கிட்டேன். உங்க மேல எனக்கு ஆச இருந்திச்சு. அதனாலத்தேன் உங்க கூட வாழவும் ஆரம்பிச்சேன். இதெல்லாம் தப்புன்னோ? இல்ல இந்த வயசுல இதெல்லாம் கூடாதுன்னோ நான் யோசிச்சதே இல்ல. அதே நேரம், இதனால என் கனவ நான் தூக்கிப் போட்டிடுவேன்னு அர்த்தமும் இல்ல. நமக்குன்னு ஒரு குழந்த வந்தா, என் கனவ நான் அடைய முடியாதுன்னு நீங்க நினைக்கிறீங்க. அது ஒன்னும் தப்பில்ல. ஆனா, என்னால ஒரு குழந்தைய சமாளிக்க முடியாதுன்னு நீங்களே முடிவு பண்ணிடுறதத்தேன் மாமா எனக்கு கஷ்டமா இருக்கு. இன்னும் கூட நீங்க என்ன முழுசா புரிஞ்சிக்கல. அப்படி புரிஞ்சிருந்தா, அன்னிக்கு அப்படி பேசியிருக்க மாட்டீங்க. அதுவும் போக, அந்த பிரியாக்கா, உங்க கூட வந்ததுக்கு நான் ஏன் தப்பா நினைக்கப் போறேன். அதுலையும் அவுகள உங்க கூட சேர்த்து வச்சி நான் யோசிப்பேன்னா? நீங்க எப்படி அப்படி யோசிச்சீங்க? உங்கள கேள்வி கேட்கனும்னு நான் எதையும் பேசல. என் மனசுல தோணுனதத்தேன் பேசுனேன். இதுவும் உங்களுக்கு தப்பா தெரிஞ்சா என்னை மன்னிச்சிடுங்க மாமா. இனி பேசல” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியில் செல்ல கதவைத் திறந்தாள் நிலா.
அதற்குள்ளாக அவள் கையின் மீது தன் கையைப் பதித்தவன், “மன்னிச்சிடு தென்றல்” என்றான். அதில் அவள் திரும்பி, “உங்கள மன்னிப்பு கேட்க வைக்கிறதுக்காக சொல்லல மாமா. என்னை புரிஞ்சிக்கோங்க. நீங்க எந்த தப்பும் பன்ணல. நானும் நீங்க தப்பு பண்ணதா நினைக்கல” என்றாள்.
தன் அக்கா மகள் எத்தனை தெளிவாய் இருக்கிறாள்? என்று நினைத்து சந்தோஷப்படுவதா? இல்லை அந்த தெளிவுக்காரியை எப்படி மலை இறக்குவது? என்று கவலைப்படுவதா? என்று அவனுக்கு தெரியவில்லை.
“செரிடி. நான் இனி புரிஞ்சிக்கிடுறேன். செத்த சிரியேன்” என்றான். அதில் அவனைப் பார்த்தவள், “கோவிலுக்கு போனும்” என்று சொல்லியப்படி அவன் கையில் இருந்த தன் கையை உறுவிக் கொண்டு தலையை காய வைத்து பின்னலிட ஆரம்பித்தாள். அதன் பின், அவள், “கிளம்பலாம்” என்றப்படி வெளியில் சென்றாள்.
இங்கே கதிரோ அவள் பேசியதை எல்லாம் கேட்டு, “ஏல கதிரு. உம்ம பொண்டாட்டி சமத்துத்தேன். அவ உன்ன பாத்துப்பா” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். ஏனோ அவனையும் மீறி புன்னகை அவன் முகத்தை நிறைத்தது.
அவளின் கணவன் என்பதில் மெல்லிய கர்வம் கூட எட்டிப் பார்த்தது. அந்த சிரிப்புடனே அவனும் கீழிறங்கி வர, முருகேசனும் செல்வியும், “என்னம்மா? கோவிலுக்கு கிளம்பலாம்மா? இல்ல இன்னும் ஏதும் வேல இருக்கா?” என்றார்.
அதற்குள்ளாக தாமரையோ, “உம்ம வீட்டுக்காரன் கிட்ட பூ கொடுத்து விட்டேன்னே, தலைக்கு பூ வச்சிக்கலையா?” என்றார்.
“அச்சோ ஆமம்மா கொடுத்தாரு. மறந்துட்டேண். இந்தா வச்சிட்டு வந்திடுறேன்” என்று அவள் மேலே மீண்டும் படியேற முயற்சிக்க, அவளை மறித்து நின்றான் கதிர்.
“பூ” என்று அவள் சொல்ல, தன் கையில் இருந்த பூவை அவளிடம் காட்ட, அவள் எடுக்க சென்றாள். அதற்குள்ளாக அவளைத் திருப்பி, அவள் தலையில் அந்த பூவை வைத்து விட்டான்.
அதைப் பார்த்த செல்வி, தாமரை மற்றும் முருகேசன் மூவருக்குமே மனம் லேசானது.
தாமரைக்கு மெலிதாய் கண் கலங்க, அதற்குள்ளாக செல்வியோ, “ஆமாக்கா, எங்க செந்தில் மாமாவ காணும்?” என்றார்.
அதில் தாமரையோ, “அவருக்கு ஏதோ வேலன்னு சொல்லிட்டு காலையிலையே கிளம்பிட்டாரு” என்றார். அதில் கதிர் முருகேசனைப் பார்க்க நிலாவோ, “அப்போ அப்பா கோவிலுக்கு வரலையாம்மா?” என்றாள்.
“அவரு என்னிக்கு கோவிலுக்கெல்லாம் வந்திருக்காரு. சும்மா நம்ம கூட செத்த நேரம் நிப்பாரு. அம்புட்டுத்தேன்ன. அதுலையும் இன்னிக்கு கொடி கட்டுத்தேன்ன” என்றார் தாமரை.
ஆனால் கதிருக்கோ ஏதோ சரியாய் படவில்லை. அதில் முருகேசனிடம், “அவரு எங்கனன்னு செத்தப் பாருங்க மாமா” என்றார்.
“செரி மாப்புள்ள பாக்க சொல்றேன்” என்று முருகேசன் சொல்ல, “செரி செரி கோவிலுக்கு கிளம்பலாம்” என்றார் தாமரை. கதிர் புல்லட்டை எடுக்க, நிலா செல்வியுடன் காரில் ஏறப் போக, தாமரைத்தான், “இங்கன எங்க வர்ற? உன் புருஷன் கூட வா” என்றார்.
“இல்லம்மா அவருக்கு ஏதாச்சும் வேல இருக்கும். நான் சித்தி கூடையே” என்று சொல்லப் போக, “உம்ம வீட்டுக்காரனுக்கு என்னிக்கு வேல இல்லாம இருந்திச்சு. பொண்டாட்டிய கோவிலுக்கு கூட்டிட்டு வரக் கூட நேரம் இல்லையாக்கும்” என்றார் தாமரை.
“அக்கா, இப்போ ஏன் நீ அவன வாரிட்டு இருக்க” என்று செல்வி கேட்க, “நிலா வா” என்றான் கதிர். அதில் அவளும் எதுவும் சொல்லாது அமைதியாய், அவனின் அருகில் சென்றாள்.
“என் மேல கோவம் இல்லன்னு சொல்லிட்டு, இப்புடி உன் அம்மாட்ட எனக்கு திட்டு வாங்கிக் கொடுக்கிற?” என்றான்.
“ஆ..ங் இல்ல அது நான்” என்று அவள் தடுமாற அதை மெலிதாய் ரசித்தவன், “ஏன் கூட கோவிலுக்கு வர மாட்டீயா?” என்றான்.
“உங்களுக்கு வேலை இருக்கும்த்தேன்ன மாமா” என்றாள். “இப்போ என் பொண்டாட்டிய கூட்டிட்டு போறத விட முக்கியமான சோழி ஏதும் இல்ல” என்றான். அதன் பின் அவளும் அவன் பைக்கில் ஏறி அமர்ந்தாள்.
தாமரை, செல்வியை கோவிலில் விட்டு விட்டு, முருகேசன் செந்திலை தேடி தோட்டத்துக்கு சென்றார். இங்கே கதிரும், நிலாவும் பைக்கில் கோவிலுக்கு சென்றனர்.
கிட்ட தட்ட திருமணம் முடிந்து மூன்று வருடங்களுக்கு மேலாகியிருந்தது. ஆனால் முதல் தடவை ஜோடியாக அங்கு வந்திருக்க ஏதோ புதுமணத் தம்பதிகள் போன்று தான் இருவருக்கும் தோன்றியது.
அதனாலையே பைக் கண்ணாடி வழியே அவளைப் பார்த்துக் கொண்டே வந்தான் கதிர். அதில் அவளே, “மாமா முன்னாடி பாதைய பாருங்க” என்று பல முறை சொல்லி விட்டாள்.
ஆனால் அவன் தான் கேட்பதாகவே இல்லை. அழகாக இருந்தாள். அவனின் விழிக்குள் மட்டும் அல்லாது நினைவிலும் அவள் மட்டுமே வந்து இம்சிக்க, தோளில் இருந்த அவள் கையை எடுத்து தன் வயிற்றை சுற்றி கட்டிக் கொண்டான்.
அவனின் செயலில் அவளோ, “மாமா கோவிலுக்கு போறோம்” என்று நினைவுப்படுத்த, “அங்க சாமியே ஜோடியாத்தேன்ன இருக்கு” என்றான்.
அவன் சொல்லிய விதத்தில், அவள் அமைதியாகிவிட, அவனோ, “ஏதாச்சும் குடிக்கிறீயா?” என்றான்.
“இல்ல” என்று அவள் சொல்லப் போக, “உனக்கு பிடிச்ச கலர் சர்பத் விக்கிறாங்க” என்று சொல்ல, அவள் கண்ணில் ஆசை தெரிந்தது. அதில் சிரித்தப்படி பைக்கை ஓரமாய் நிறுத்தியவன் அவளுக்கு வாங்கிக் கொடுத்தான்.
அதற்குள்ளாக ஊர் ஆட்கள் சிலர் அங்கு அவனிடம் பேச, அவனும் நிலாவை பார்த்தப்படியே பேசிக் கொண்டிருந்தான். நிலாவிடமும் சிலர் வந்து பேசினர். அன்னேரம் அந்தப் பக்கம் வந்த துளசியோ, “வாங்க புது பொண்ணு. என்ன அதிசயத்துலையும் அதிசயமா, வெளிய வந்திருக்கீக” என்று சீண்டலாய் கேட்டாள்.
“ச் என்னத்த” என்று அவள் கேட்க, “என்னடி நொன்னத்த. உனக்கப்புறம் கன்னாலத்த முடிச்ச நானே இந்த ஊரத்தேன் சுத்திட்டு கெடக்கேன். நீ என்னென்னா, உன் மாமன்ன கன்னாலம் முடிச்சாலும் முடிச்ச அரண்மன பொண்னுக்கணக்கா அங்கேயே இருந்துட்ட. செத்த ஊரு பக்கமும் வந்தாத்தேன் என்ன?” என்றாள்.
“அது காலேஜு” என்று அவள் சொல்ல, “போச்சு போ. இன்னும் நீ அந்த புத்தகத்த கட்டிட்டுத்தேன் திரியிறீயாக்கும். இப்படி நீ இருந்தா, பொறவு என் மச்சான் என்னத்த கட்டிட்டு படுப்பாரு. இதெல்லாம் ஆவுறது இல்ல” என்று சீண்டலாய் பேசினாள் துளசி.
“அத்த” என்று சிறிதாய் அவள் வெட்கப்பட, “பொறவென்னடி, எப்ப நல்ல சேதி சொல்லப் போறன்னு கிழடுங்களாம் கேட்கிறதுக்கு முன்னாடி சட்டு புட்டுன்னு பெத்துக்கோ” என்று அறிவுரை வழங்கினாள் துளசி.
அதில் அவளோ அன்னிட்சையாய் கதிரைப் பார்க்க, அவனுமே சற்று தள்ளி இருந்தாலும் அவளைப் பார்த்து, “என்ன?” என்று புருவம் உயர்த்தினான். “ம்ஹூம்” என்று அவள் தலையாட்ட, அவனோ அவளின் அருகில் வந்தான்.
“அதான செத்த உம்ம பொண்டாட்டிய பேசிட கூடாதே, உடனே மூக்கு வேர்த்து வந்திடுவீகளே” என்று துளசி வாயாட, “பங்காளிய எங்க? உம்ம மட்டும் அனுப்பி வச்சிட்டு மனுஷன் சந்தோஷமா திரியிறாக போல” என்று சீண்டலாய் கேட்டான் கதிரு.
“பொறவு அம்முட்டுப் பேரும் உம்ம மாதிரியா, பொண்டாட்டிய புடிச்சிட்டே சுத்துவாக” என்றாள் துளசி.
“உமக்கு பொறாம டி, என் அண்ணன் மாதிரி உனக்கு கெடைக்கலன்னு. ஏ நிலா, நீ வூட்டுக்கு போயி முதல்ல சுத்திப் போடு. அம்புட்டு பேரு கண்ணும் எங்க அண்ணன் மேலையும், உன் மேலையும் தான் கெடக்கு” என்று கதிருக்கு தங்கச்சி முறையில் இருந்த ஒருவள் கூறினாள்.
அதில் நிலா கதிரைப் பார்க்க, கதிரும் நிலாவைப் பார்த்து புன்னகைத்தான்.
இங்கே இப்படியாக செல்ல, அங்கே, செந்தில் குடித்துக் கொண்டிருக்க, முருகேசன் கோவமாய், “ஊரே கோவில் திருவிழான்னு சுத்தபத்தமா இருக்கு. நீ மட்டும் ஏண்ணே இப்படி இருக்க” என்று அவர் கையில் இருந்த பாட்டிலை பிடுங்கினான்.
“எல்லாம் நான் செஞ்ச பாவம்ல. அதேன் இப்படி ஒத்தையில கெடந்து சாகுறேன்” என்றார் செந்தில். அதில் முருகேசனோ, “ச் என்னத்த உளறிட்டு இருக்க” என்று கேட்க, “உளறல்லடா. நான் ஒரு கொலை காரன். அத்தைய கொண்ண பாவி நானு. உண்ட வீட்டுக்கே ரெண்டகம் நினைச்ச படுபாவிடா நானு” என்று போதையில் உளற அதைக் கேட்ட முருகேசன் அதிர்ந்தார்.
(ரைட்டு, ஏன்யா செந்திலு. உண்மைய சொல்றேன்னு எதையாச்சும் சொல்லி அடுத்த ஏழரைய இழுத்து விட்டுடாத. செரி அடுத்து என்னாகப் போது? இதனால அடுத்து என்ன பிரச்சன வரப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தென்றல் தீண்டுமா?...
gayathri Shini
kathir and nila jodi super