வரம் – 6

அர்ஜூன் அங்கிருந்து சென்றதும், அன்றிரவு தோட்டத்தில் நின்று நிலவைப் பார்த்துக் கொண்டிருந்த பூஜாவிடம் வந்தார் தாத்தா.

அவர் வந்தது கூட தெரியாத அளவுக்கு அவள் ஏதோ யோசனையில் இருந்தாள். “பூஜா” என்று அவர் அழைக்க, அப்போதே இவ்வுலகம் வந்தவள், “ஆ.ங் தாத்தா” என்று சிறு புன்னகையுடன் திரும்பினாள்.

“என்னடா?அந்த அர்ஜூன் போன் எதுவும் பண்ணான்னா?” என்று கேட்க, “ஆ.ங் அது” என்றவளுக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை. அவள் தடுமாறுவதைப் பார்த்தவரோ, “அவன்ன எதுக்குடா போக விட்ட?” என்றார்.

அவளோ அமைதியாகவே இருக்க, அவரோ, “நீ மட்டும் அவன்ன தனியா அனுப்பபலன்னா, நாங்க உன்னையும் அவன் கூடவே அனுப்பி வச்சிருப்போம்த்தான” என்று கேட்டார்.

“அவர் எப்படியும் வந்து கூப்டு போவார் தாத்தா. அதான் சொல்லிட்டுத்தான போயிருக்காரு” என்றாள். அதில் அவளைப் பார்த்தவரின் மனமோ, அவன் திரும்பி இவளை வந்து அழைத்து செல்வான் என்று நினைக்கவில்லை.

ஆனாலும், “சீக்கிரமே அவனும் உன் மனச புரிஞ்சிப்பாண்டா” என்றார். அதில் அழகாய் சிரித்தவள், “உங்களுக்கு குடிக்க காபி போட்டு கொண்டு வரேன்” என்றப்படி உள்ளே ஓடினாள்.

அதில் இவருக்கோ தன் பேரனின் மீது அத்தனைக் கோவம் வந்தது. ஆனாலும் கட்ட முடியாத சூழ்நிலையில் இருந்தார். 

அர்ஜூன் அங்கு சென்ற பின் வீட்டுக்கு கூட கால் செய்யவில்லை. அவனுடைய அம்மாத்தான் கால் செய்து கேட்டார். வந்து விட்டேன் என்று சொல்லியவன் அதன் பின் முற்றும் முழுதாய் அழைப்பைக் கூட ஏற்கவில்லை.

வீட்டுக்கே கால் செய்யவில்லை எனும் போது பூஜாவுக்கு கால் செய்திருப்பானா? என்ன? 

தேவிகா தான். அர்ஜூனின் நம்பரை பூஜாவிடம் கொடுத்து, பேச சொல்லியிருந்தார். ஆனால் பூஜாக்கோ தயக்கம். அதுவும் போக அவன் அழைக்காமல், நாம் எப்படி அழைப்பது? என்ற சிந்தனை. ஆனால் தேவிகா வற்புறுத்தவும் கால் செய்தாள்.

அங்கே அவனோ மும்முரமாய் பரிட்சை பேப்பரை திருத்திக் கொண்டிருந்தான். அன்னேரம் அன்நோன் நம்பரில் இருந்து அழைப்பு வரவும் புருவத்தை சுழித்தான்.

பின் அட்டன் செய்து காதில் வைக்க, இங்கே பூஜாவோ அவளுடைய தேன் குரலில் “ஹலோ நான் பூஜா" என்று மெல்ல வாய் திறந்தாள்.

அவளுடைய குரலில் இவனின் உள்ளம் ஒரு நொடி தடுமாறியது. ஆனால் அதை வளர விடாது அவள் சொல்லி முடிக்கும் முன்னே “நான் வேலையில இருக்கேன். இப்படி சும்மா சும்மா கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணாத. ப்ரீயானதும் நானே கூப்பிடுவேன்" என்று சொல்லிவிட்டு கால்லை கட் செய்திருந்தான்.

அவளோ தன் அத்தையைப் பார்க்க, அவரோ “என்னாச்சுமா? பேசுனான்னா?” என்று கவலையாக கேட்டார். 

அவர் கவலையான முகத்தைப் பார்த்தவளோ, “ஆ..ங் அத்தை அவர் ஏதோ முக்கியமான வேலையில இருக்கார் போல. யாரோ கூப்டாங்கன்னு வச்சிட்டாரு. ஈவ்னிங் கால் பண்றேன்னு சொல்லிருக்காரு" என்று கூறினாள்.

தன் மருமகள், தனக்காக பொய் சொல்கிறாள் என்று புரிந்துக் கொள்ள முடியாதவர் இல்லையே அவர். அவள் தலையை மெல்ல வருடியவர், “உன்னோட மனசுக்கு எல்லாம் சீக்கிரமே சரியாகிடும்" என்று சொல்லிவிட்டு சென்றார்.

அங்கே, கடுப்பாக அமர்ந்திருந்த அர்ஜூனின் முன் வந்தமர்ந்த மாதவன், “என்னாச்சு சார்? எதுக்கு இவ்ளோ டென்சனா இருக்கீங்க?” என்று கேட்டான்.

அதில், அவனை கோவமாக முறைத்தவன், “எல்லாம் உன்னாலத்தாண்டா. உன்னை எவன்டா, அவ்வளவு பெரிய தொகைய வட்டிக்கு வாங்க சொன்னது?” என்று திட்டி தீர்த்தான்.

“என்ன அர்ஜூன்? அந்த பிரச்சனை இருக்கிறப்ப கூட, நீ என்னை திட்டலையே. இப்போ என்னாச்சுடா உனக்கு?” என்று பாவமாய் கேட்டான் மாதவன்.

“ச் என்னை டென்சன் பண்ணாத. கொஞ்சம் ப்ரீயா விடு" என்று சொல்லிவிட்டு அர்ஜூன் அங்கிருந்து சென்றான்.

செல்லும் அர்ஜூனைப் பார்த்த மாதவன், “ஒரு வேளை வேற எங்கேயும் காசு வாங்கி சிக்கல்ல மாட்டிக்கிட்டானோ?” என்று யோசித்தான். ஏனெனில் மாதவனிடமும் அவன் அவனுக்கு திருமணம் ஆனதை சொல்லியிருக்கவில்லை.

அதன் பின் ஒரு வாரமும் அர்ஜூன் சற்று வித்தியாசமாகத்தான் சுற்றினான். மாதவன் கேட்டும் அவன் எதுவுமே சொல்லியிருக்கவில்லை. இப்படியாக நாட்கள் செல்ல, அங்கே கல்லூரியில், கல்சுரல்ஸ், போட்டிகள் ஆரம்பமாகியிருக்க, அலுமினி என அவனுடைய நாட்களும் பிஸியானது. சும்மாவே வீட்டைப் பற்றி யோசிக்க மாட்டான். இப்போது சொல்லவே வேண்டாம். பூஜாவை மட்டும் அல்லாது, அவனுக்கு திருமணம் ஆன விஷயத்தையும் மறந்திருந்தான்.

பூஜா அவனிடம் திட்டு வாங்கிய பின், அவனுக்கு அழைக்கவில்லை. சம்பந்தப்பட்ட இருவரும், எப்போதும் போல் தான் இருந்தனர். ஆனால், சுற்றி இருந்தவர்களுக்குத்தான், இவர்களின் வாழ்க்கை என்னவாகுமோ? என்ற பயம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

ஏனோ எப்போதுமே விலகி செல்பவனை விட்டு விட்டு, வீட்டில் இருப்பவளுக்கு புத்திமதி சொல்வது போல், அத்தனைப் பேரும் பூஜாவைத்தான் நோண்டினர். அவளோ எதுவுமே சொல்ல மாட்டாள். சிறு புன்னகையுடன் தலையாட்டிவிட்டு நகர்ந்து விடுவாள்.

அதைப் பார்த்த தேவிகாவோ, அவர் அப்பாவிடம், “என்னப்பா? இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சாலாச்சும், வீட்டோட இருப்பான்னு பார்த்தா, இப்போ இப்படி எனக்கென்னன்னு இருக்கான்” என்றார்.

“இதெல்லாம் நம்ம எதிர்பார்த்ததுத்தான?” என்று அவர் சொல்ல, “எனக்கென்னமோ தேவையில்லாம பூஜாவோட வாழ்க்கையையும் சேர்த்து கெடுத்துட்டோம்னு தோனுது” என்றார்.

அதில் அவரோ எதையோ யோசித்து, “ஏன்மா? பூஜா எதுவும் வருத்தப்பட்டாளா?” என்று கவலையாய் அவர் கேட்க, “அப்படி வருத்தப்பட்டாத்தான் பரவாயில்லையே. அவ மனசுல என்ன இருக்குன்னே தெரியல. எனக்குத்தான் மனசு கேட்க மாட்டேங்கிது. நானாச்சும் அவன் அம்மா. அவன் என்ன பாக்கலன்னா கூட பரவாயில்ல. ஆனா இப்படி தாலி கட்டி கூட்டிட்டு வந்த பொண்டாட்டிக்கிட்டையும், அவன் இப்படி இருந்தா என்னத்தான் பண்றது?” என்றார்.

“அதான் அவன் சொன்ன ஆறு மாசம் இன்னும் முடியலத்தான. கொஞ்சம் பொறுத்திருந்துப் பார்ப்போம்” என்றார்.

“என்னப்பா? பேசாம நம்ம வேணும்னா சென்னை போயி” என்று ஆரம்பித்த தேவிகாவிடம், “முள்ளு மேல சேலைய தூக்கி வீசியாச்சி. இப்போ உடனே எடுக்கனும்னு நினைச்சா, அது அந்த சேலைக்குத்தான் கஷ்டம். அதுவும் போக. பூஜாவே தைரியமாத்தான இருக்கா. அதனால இப்போதைக்கு நம்ம எதுவும் பண்ண வேண்டாம்” என்றார் அவர்.

“ஆனா” என்றவருக்கு ஏனோ மனமே கேட்கவில்லை. “அவன் விருப்பமில்லாமத்தான் இந்த கல்யாணத்த பண்ணிக்கிட்டான்னு நமக்குத்தான் தெரியுமே. அப்படி இருக்கிறப்ப, மறுபடியும் அவனுக்கு விருப்பம் இல்லாத விஷயத்த நம்ம செய்யப் போயி அவன் மொத்தமா ஒதுங்கிட்டா என்னப் பண்றது? நம்மள கூட விடு. பொண்டாட்டியையும் சேர்த்து ஒதுக்கி வச்சிட்டா? என்னப் பண்ணுவ?” என்றார்.

அதைக் கேட்டதும் தேவிகா, “என்னப்பா இப்படில்லாம் சொல்றீங்க? அவன் இந்தளவுக்கு வீம்பு பிடிச்சவனா இருப்பான்னு நினைக்கவே இல்ல. என்னமோ அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம்” என்று சொல்லிவிட்டு அவரும் சென்றுவிட்டார்.

அப்படியே நாட்கள் யாருக்கும் நிற்காமல் கடகடவென்று ஓட, அர்ஜூனோ மாதவனிடம் கூட பேசுவதை நிறுத்தியிருந்தான். 

அப்படித்தான் அன்றொரு நாள், லேப்பில் அமர்ந்து, லேப்டாப்பில் எதையோ போட்டு நோண்டிக் கொண்டிருந்தான். அவனை சுற்றி நிறைய பேப்பர்ஸ்லயும் நோட்ஸ்லயும் அவன் போட்டு வைத்திருக்க, சரியாக அன்னேரம் தான் மாதவன் இருவருக்குமான காபியுடன் அங்கு வந்தான்.

“என்ன சார்? ஒரே நாள்ல, ராமானுஜனாகனும்னு எதுவும் பிளான்னா?” என்று கிண்டலாய் அவனிடம் காபி கப்பை நீட்டினான். அவனோ, லேப்டாப்பில் இருந்த பார்வையை விலக்காது, அந்த காபியை மட்டும் வாங்கிக் கொண்டான்.

அதில் அவனின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தவனோ? காலேஜ்ஜே எம்டி ஆகிடுச்சி. நீ என்னென்னா, இங்க இந்த புக்ஸோட உட்கார்ந்துட்டு இருக்க” என்றான்.

அதில் அவனோ, “ச் உனக்கு லேட்டாச்சுன்னா கிளம்பு” என்றப்படி மீண்டும் மீண்டும் அதற்குள் தான் மூழ்கினான்.

“என்னாச்சுடா? எதுவும் பிரச்சனையா? அந்த மனி பிராபளம்க்கு அப்புறம் நீ என்கிட்ட சரியா பேசுறது கூட இல்ல. உண்மையாவே நான் எதையும் வேணும்னு பண்ணல” என்று மன்னிப்பு கேட்டான்.

அதில் அவனை நிமிர்ந்துப் பார்த்தவனோ, “ச் நானே, இந்த பார்முலா சரியா வரலையேன்ற டென்சன்ல இருக்கேன். நீ என்ன இரிட்டேட் பண்ணாத” என்று கடுப்பாய் கூறினான்.

“என்னது? உனக்கே பார்முலா வரலையா? அப்படி என்ன சம் போடுற நீ” என்று லேப்டாப்பை எட்டிப் பார்த்தான். அதுவோ கலர் கலர் கோடிங் லெட்டராய் இருக்க, “என்னடா இது? லேப்டாப் ஸ்கீரீன் எதுவும் ஒர்க் ஆகலையா? டிஸ்பிளே போயிடுச்சா என்ன?” என்றான்.

அவனின் பேச்சில் அவனை முறைத்தவனோ, “என்ன டிஸ்டர்ப் பண்ணாம கிளம்பு” என்றான்.

“முதல்ல நீ என்னப் பண்ணிட்டு இருக்க?” என்று மாதவன் கேட்க, “ச் ஆப் க்ரீயேட் பண்ணிட்டு இருக்கேன்” என்றான்.

அவனின் வார்த்தையில், “அத எதுக்கு நீ க்ரீயேட் பண்ணிக்கிட்டு. அதான் தினம் ஒரு ஆப்புன்னு நம்மகிட்ட வந்துட்டுத்தான இருக்கு” என்று கிண்டலாய் கூறினான்.

அவனின் கிண்டலில், அவன் தலையில் தட்டியவன், “ஆப்பு இல்லடா, ஆப். மொபைல் அப்ளீகேசன் கிரியேட் பண்ணிட்டு இருக்கேன்” என்றான்.

“என்னடா சொல்ற? மேக்ஸ் புரோபசர் தான நீ? திடீர்னு என்னமோ டெக்னாலஜி ஸ்டாப் மாதிரி என்னென்னமோ சொல்ற. உனக்கு இதெல்லாம் தெரியுமா?” என்று கேட்டான் மாதவன்.

அவனோ பதில் சொல்லாது அவன் வேலையில் மூழ்க, “ஹேய் இந்த ஆப் என்னப் பண்ணும்” என்றான்.

“ச் இது மேக்ஸ் ரிலேட்டட் ஆப். இது மட்டும் சரியா ஒர்க் ஆகிடுச்சின்னா, ஸ்டூடண்ட்ஸ் எல்லாத்துக்கும் ரொம்ப யூஸ்புல்லா இருக்கும். அதுலையும் டிஸ்டன்ஸ் எஜூகேசன்ல படிக்கிறவங்களுக்கு, இது பெஸ்டா அமைஞ்சிடும். அதுவும் போக, இந்த ஆப் மூலமா, நம்மளால படிக்க வசதி இல்லாதவங்களுக்கு கூட படிக்க சொல்லிக் கொடுக்க முடியும். ஜஸ்ட் ஸ்மார்ட் போன் மட்டும் இருந்தா போதும்” என்றான் அர்ஜூன்.

“என்னடா ஏதோ பெருசு பெருசா சொல்ற. இத எப்படி நீ தனியா பண்ணுவ?” என்று கேட்டான் மாதவன். “ச் அதெல்லாம் பண்ணிடுவேன்” என்றான்.

“அப்போ இந்த லீவ்க்கு நீ ஊருக்கு போகலையா?” என்று கேட்டான் மாதவன். “ம்ஹூம் இந்த ஆப்ப சக்சஸ் புல்லா லாஞ் பண்ணாத்தான், மத்தத பத்தி எல்லாம் என்னால யோசிக்க முடியும்’ என்றான் அர்ஜூன்.

“என்னடா சொல்ற?” என்று மாதவன் குழப்பமாய் கேட்க, “ச் நீ ஊருக்கு இன்னிக்கு கிளம்பனும்த்தான. போ போயி கெளம்பு” என்றான்.

“நீ மட்டும் எப்படி” என்று ஏதோ சொல்ல வந்தவனை, “என்னோட வேலைய நான் தனியாவே பாத்துப்பேன். நீ கெளம்பு ” என்று அழுத்தம் திருத்தமாய் கூறினான். அதன் பின் மாதவனும் எதுவும் சொல்லவில்லை.

அதன் பின்னான நாட்கள் மொத்தமும் அவனுக்கு, அந்த ஆப்பை டெவலப் செய்வதில் தான் சென்றது. கிட்ட தட்ட செமஸ்டர் லீவ் எல்லாம் முடிந்து மாணவர்களின் சேர்க்கை எல்லாம் ஆரம்பமாகியிருந்தது. ஏதோ எந்திரன் படத்தில் வரும் வசீகரன் போல், இவனுமே பூஜா என்பவளை அவனின் மெமரியில் இருந்து நீக்கியிருந்தான்.

(இதெல்லாம் ரொம்ப தப்பு கண்ணா. இதுக்கெல்லாம் கண்டிப்பா அனுபிப்ப. நானும் பாத்துட்டே இருக்கேன். ரொம்பத்தான் ஓவரா போற. கல்யாணம் பண்ணிட்டு புது பொண்டாட்டிக் கூட டூயர் ஆடுவன்னு பார்த்தா, நீ ஆப்பு, கீப்புன்னு சுத்திட்டு திரியிற. ஏன்மா பூஜா நீ என்னம்மா? பண்ணிட்டு இருக்க? இவன் தலையில வந்து நறுக்குன்ன் நாலு கொட்டு கொட்டும்மா. சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட் எப்படி இருந்திச்சுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்புறம் இன்னிக்குத்தான் பர்ஸ்ட் டே அப்படின்றதால, மேக்ஸிமம் எல்லாரோட கமெண்ட்ஸுமே பேனர்ல செட் பண்ணியிருப்பேன். பட் நாளைக்குல இருந்து ஒன்னு இல்லன்னா, ரெண்டு பெஸ்ட் கமெண்ட்ஸ் தான் அதுல போஸ்ட் பண்ணப் படும். அப்புறம் ஹோம் ஸ்கீரீன்ல எப்படி ஆட் பண்றதுன்னு இன்ஸ்டால போஸ்ட் போட்டிருக்கேன். அத பார்த்து ஆட் பண்ணிக்கோங்க. அப்புறம் மறக்காம ரேட்டிங் கொடுத்திடுங்க. உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தொடரும்…

Comments   10

*** வரம் – 6 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***