அதன் பின் ஊரில் இருந்து வந்த மாதவன், அவனைத் தேடி அவன் பிளாட்டுக்கு வந்தான். இருவரும் ஒரே அபார்ட்மெண்ட் தான். மாதவன் நான்காவது ப்ளோரிலும், அர்ஜூன் ஐந்தாவது ப்ளோரிலும் தங்கியிருந்தனர்.
இரண்டு படுக்கை அறை கொண்ட ப்ளாட் தான். ஆனாலும் அர்ஜூன் ஒரு தனிமை விரும்பி. ஆனால் மாதவன் அப்படி கிடையாது. விடுமுறை நாட்களில் அர்ஜூனின் வீட்டில் தான் இருப்பான். கல்லூரியில் மட்டும் தான் மாதவன் அர்ஜூனுக்கு பயப்படுவான். மத்தப்படி, அவனுடைய நல்ல நண்பன். யாரையும் சேர்த்துக் கொள்ளாத அர்ஜூனிடமே நட்பு பாராட்டியிருந்தான். அதற்கு முக்கிய காரணம். அவன் எவ்வளவு அடித்து துரத்தினாலும், இவன் அதை கொஞ்சமும் கண்டுக் கொள்ளாமல், அவனின் பின் தான் வந்து நிற்பான்.
அதனாலையே அர்ஜூனும், அவனின் தொல்லையை சமாளிக்க பழகியிருந்தான். ஆனாலும் அவ்வப்போது கோவப்பட்டு திட்டவும் செய்வான். “உன்ன எல்லாம் திருத்தவே முடியாது. நீ எதுக்கு, அந்த ப்ளாட்டுக்கு வாடகை கொடுக்கிறேன்னே தெரியல" என்று அவ்வப்போது கடுப்படிக்கவும் செய்வான்.
இப்போதுமே மாதவன் வந்து கதவைத் திட்ட, ஒரு வித எரிச்சலுடன் வந்து கதவைத் திறந்தவனின் முகத்தில் முழுதாய் ஒரு மாதம் ஷேவ் செய்யாத தாடி புதர் போல் வளர்ந்திருந்தது.
ஒரு நொடி மாதவனுக்கே அவனை அடையாளம் தெரியவில்லை. “ஐயோ சாரி சார். நான் ரூம் மாறி வந்துட்டேன் போல” என்று அவன் கிளம்ப, “ச் இப்போ எதுக்கு வந்த?” என்றான் அர்ஜூன்.
அதில் இவனோ “அர்ஜூன் நீயாடா இது” என்று அவன் தாடியை பிடித்திழுத்தான். அதில் அவன் முறைக்க, “என்னடா? இப்படி ரிஷி மாதிரி இருக்க. ஒரு நாள் கூட ஷேவ் பண்ணாம இருக்க மாட்ட. இப்போ உனக்கு என்னாச்சு?” என்றான்.
“ச் என்னவோ ஆச்சு? இப்போ எதுக்கு வந்தன்னு சொல்லிட்டு கிளம்பு” என்று எரிச்சலாய் அவன் சொல்ல, சரியாக அன்னேரம் வீட்டில் இருந்து அழைப்பு வந்தது.
அதைப் பார்த்து அவன் கடுப்பாக, மாதவனோ, “உங்க அம்மாதாண்டா கால் பண்றாங்க” என்றான். “சரி அதுக்கு என்ன?” என்றான்.
“என்னடா எதுவும் பிரச்சனையா?” என்று மாதவன் கேட்க, “ச் யாருடா நீ? சும்மா சும்மா பிரச்சனையா? பிரச்சனையான்னு கேட்டுட்டு இருக்க. நானே இன்னும் என் வேலைய முடிக்கலையேன்னு கடுப்புல இருக்கேன்” என்று திட்டினான்.
“சரி சரி விடு. அம்மா திரும்ப திரும்ப கூப்பிடுறாங்க பாரு. எடுத்துப் பேசு” என்று மாதவனே அட்டண்ட் செய்யப் போக, அதற்குள் இவனே பிடுங்கி காதில் வைத்தான்.
“உன் மனசுல என்னத்தாண்டா நினைச்சிட்டு இருக்க?” என்று தேவிகா கோவமாக கத்த.
பின்னால் இருந்து, “தேவிகா பொறுமையா பேசு" என்று தாத்தா சத்தம் கொடுத்தார்.
“எப்படிப்பா? பொறுமையா இருக்க சொல்றீங்க? இவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சின்ற நினைப்பு கூட இல்லாம" என்று தேவிகா சொல்லும் போதே கால் கட்டாகியிருந்தது.
“என்னடா பேசலையா?” என்று கேட்டான் மாதவன். “சிக்னல் இல்ல போல கட்டாகிடுச்சி" என்றவன், சைலண்டில் போட்டு விட்டு அவனறைக்குள் சென்றான்.
“டேய். டேய் நான் இப்போ கிளம்பிடுவேன். நாளைக்கு காலேஜ் ஆரம்பிக்குது. இப்படியே ரிஷி முனிவர் மாதிரி வந்து சேர்ந்துடாத. முதல்ல ஷேவ் பண்ணு. அம்மா ஊர்ல இருந்து உனக்கும் சேர்த்து பலகாரம் எல்லாம் கொடுத்து விட்டுருக்காங்க” என்றப்படி அந்த கவரை வெளியில் வைத்து விட்டு கிளம்பினான்.
ஏனெனில் அர்ஜூனுடைய அறைக்குள் செல்ல யாருக்குமே அனுமதி கிடையாது. அந்த வீட்டில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் அவனின் அறை அவனுக்கு மட்டுமே. அதனால் தெரியாமல் கூட மாதவன் அந்தப் பக்கம் செல்ல மாட்டான்.
“போடா போ. உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணுலாம் ரொம்ப பாவம். அவளையாச்சும் ரூமுக்குள்ள சேர்ப்பீயா? இல்ல" என்று கேட்டான் மாதவன். நல்ல வேளை அது அவன் காதில் விழவில்லை. விழுந்திருந்தால், மாதவனை வெளியில் தள்ளி கதவை சாத்தியிருப்பான்.
அன்று தான் புது மாணவர்களின் வருகை, என்பதால், அந்த கல்லூரியே வண்ணமயமாக காட்சியளித்தது. ஆங்காங்கே சீனியர்கள் அமர்ந்து புதிதாக வரும் மாணவர்களை ராக் செய்து கொண்டிருந்தனர். புரோபசர்ஸ் அனைவரும், அவர்களுடைய விடுமுறை தினத்தைப் பத்தியும், அட்மிஷன் பற்றிய அனுபவங்களையும் ஸ்டாப் ரூமில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
இப்படி அனைவரும் சற்று இயல்பாய் இருக்க, அர்ஜூனின் பிரண்டாக இருக்கும் ஒரே காரணத்தால், மாதவன் லைப்ரரிக்கும், ஸ்டாப் ரூமுக்கும் நடந்துக் கொண்டிருந்தான்.
“ச் இந்த நோட்ட எடுத்துட்டு வர்ற வேலைய எல்லாம் ஸ்டூடண்ட் கிட்ட சொன்னாலே செய்வாங்க. இவன் என்னென்னா, இவன் நேர்மையா இருக்குறேன்னு என்ன போட்டு பாடாப்படுத்துறான்” என்றவன் புலம்பியப்படியே நோட்டை தூக்கிக் கொண்டு வர, எதிரில் வந்த பெண்ணின் மீதே மோதி, கையில் இருந்த புக்ஸை எல்லாம் தவற விட்டான்.
“ஐயோ சாரிம்மா. அடி எதுவும் பட்டிருச்சா?” என்று மாதவன் கேட்க, “அதெல்லாம் ஒன்னும் இல்லண்ணா” என்றவள் அவளே குனிந்து அந்த புக்கை எல்லாம் எடுத்துக் கொடுக்க உதவினாள். அவளின் அந்த செயலும், அவளின் அண்ணா என்ற அழைப்பும், அவனுக்கு அவள் மீது சிறு பாசத்தை உருவாக்கியது.
“இட்ஸ் ஒகேண்ணா” என்றாள் புதிதாய் வந்த மாணவி. “அண்ணாவா? என்னைப் பார்க்க காலேஜ் படிக்கிற பையன் மாதிரியா இருக்கு?” என்று சட்டையை ஸ்டைலாக சரி செய்தப்படி கேட்டான் மாதவன்.
அதில் அவளைப் பார்த்தவனோ, “பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்டா?” என்று கேட்க, “ஆமா அண்ணா. ஆனா, யுஜி இல்ல. பிஜி” என்றாள்.
“பிஜியா? ஆனா உன்னைப் பார்க்க யுஜி ஸ்டூடண்ட் மாதிரித்தான் இருக்கு. எனிவேய்ஸ் எந்த டிபார்ட்மெண்ட்?” என்று கேட்டான் மாதவன்.
“எம்.எஸ்.சி மேக்ஸ்ன்னா” என்றாள் அவள். “ஓ நம்ம டிபார்ட்மெண்டு" என்றான் அவன் சொல்லவும். “நீங்க பி.எச்.டி ஸ்டூடண்டாண்ணா?” என்று கேட்டாள் அவள்.
“எதே பி.எச்.டியா? க்கும் எம்டெக் முடிக்கிறதுக்கே நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். அதெல்லாம் எங்க டிபார்ட்மெண்ட்லையே ஒருத்தன் தான் அந்த மாதிரி வேண்டாத ரிஸ்க் எல்லாம் எடுப்பான்" என்றான் இவன்
“அப்போ உங்க பொண்ணை விட வந்தீங்களாண்ணா?” என்று அசராது அவள் கேட்க, “எதே? எனக்கு இன்னும் கல்யாணம்மே ஆகலம்மா. அதுக்குள்ள என்னை அப்பாவாக்கிட்ட. ம்ஹூம் ஏன் என்னை எல்லாம் பார்த்தா புரோபசர் மாதிரி தெரியலையா?” என்று கேட்டான் மாதவன்.
“தெரியலையே” என்று அவளும் சிறு கேலியுடன் சொல்ல. “ஹே உண்மையாவே, நான் புரோபசர் தான்மா. வேணும்னா என் ஸ்டூடண்ட் யாரையாச்சும் சொல்ல சொல்றேன்” என்று சுற்றி தேடினான் மாதவன். அவனின் நேரத்திற்கு யாரும் இல்லாமல் போக, அர்ஜூன் அப்போது தான் பைக்கில் வைத்த நோட்ஸை எடுப்பதற்காக வெளியில் வந்தான்.
உடனே அர்ஜூனிடம் சென்றவன், “நல்ல வேளை அர்ஜூன் நீ வந்த. இல்லன்னா என் மானம் போயிருக்கும். வா என் கூட” என்றிழுத்தான்.
அவனின் செயலில் கடுப்பானவனோ, “ச் என்னப் பண்ணிட்டிருக்க நீ? இது ஒன்னும் வீடு கிடையாது காலேஜ்" என்றான் அர்ஜூன்.
“ச் அது எனக்கும் தெரியும். பட் இது என்னோட பிரஸ்டீஜ் சம்மந்தப்பட்ட விஷயம். நீ என் பிரண்ட் தான? வா ப்ளீஸ்" என்று அவனை வழுக்கட்டாயமாக இழுத்து வந்தான் மாதவன்.
அவனுடைய செயலில் எரிச்சலாய் “இப்போ என்னடா உன் பிரச்சன?” என்றப்படி அவனுடன் செல்ல, மாதவனோ “இந்தப் பொண்ணுக்கிட்ட, நான் இந்த காலேஜ்ல புரோபசரா வேலைப் பார்க்கிறேன்னு சொல்லுடா” என்றான்.
“என்ன உளறிட்டு இருக்க நீ?” என்று அர்ஜுன் கேட்க, “டேய் சொல்லுடா” என்று அவன் வற்புறுத்தவும், “ச் இம்சைடா” என்று அவனைத் திட்டியப்படி திரும்பியவன், அங்கே அதிர்ந்து நின்றிருந்த, அவனின் திருமதியைப் பார்த்து மேலும் அதிர்ந்தான்.
(எதே? நம்ம பூஜாவா? இங்கேயா? என்னடா சொல்றீங்க? உண்மையாவா?)
ஒரு நொடி தன் பிரம்மையோ? என்று யோசித்தவன், “நீ இங்க?” என்று குழப்பமாய் அவளைப் பார்த்தான். அவளோ அவனைப் பார்த்து அசையாது அப்படியே நின்றிருக்க, “பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட் டா. நம்ம காலேஜ்ல நியூவா ஜாயின் பண்ணிருக்காங்க. நம்ம டிபார்ட்மெண்ட் தான்” என்று அவளுக்கு பதில் மாதவன் பேசினான்.
அதில அரூனோ, அதிர்ந்து, “என்ன? இவ நம்ம காலேஜ்ல ஜாயின் பண்ணியிருக்காளா?’ என்று தனக்குள் யோசிக்க, இங்கே மாதவனோ, “ஆமா உன் பேரு என்னம்மா?” என்று கேட்டான்.
அப்போதே இவ்வுலகம் வந்து சேர்ந்தவள், “அத் அது" என்று ஒரு நொடி தடுமாறி, அடுத்த நொடி, “பூ…ஜா. பூஜா" என்று அழுத்தம் திருத்தமாய் கூறினாள்.
“எதே? பூஜா பூஜாவா? ம் பூஜான்னே பிக்ஸ் பண்ணிக்கிறேன்" என்ற மாதவன், அர்ஜூனிடம், “டேய் உன்னை நான் என்ன சொல்ல கூப்டு வந்தேன். அதை விட்டுட்டு, அந்தப் பொண்ணைப் பத்துன டீடெய்ல்ஸ கேட்டுட்டு இருக்க?” என்று கத்தினான்.
ஆனால் அது எங்கே அவன் காதில் விழுந்தது. கண் முன்னே, நடப்பதை கொஞ்சமும் நம்ப முடியாமல், அப்படியே நின்றிருந்தான். அவனுக்கே ஒரு நொடி தன்னுடைய கற்பனையோ? என்று கூட தோன்றியது.
“ஆமா அப்படியே இவ நினப்புலத்தான் நீ தூங்காம திரிஞ்ச. உனக்கு அப்படியே கனவு கினவு வந்துடப் போகுது” என்று மனசாட்சி வாரியது.
அதற்குள் மாதவனோ, “டேய் அர்ஜூன்” என்று அவனைப் போட்டு உழுப்பினான். அப்போதே உணர்வு பெற்று மீண்டும் தன் முன்னே நிற்பவளைப் பார்த்தான். அவள் கண்ணில் இப்போது அந்த அதிர்ச்சி எல்லாம் இல்லை. வெகு சாதாரணமாய் நின்றிருந்தாள்.
“ஸ்டூடண்டா?” என்று யோசித்தவன், அவசரமாய் அவள் கழுத்தில் தாலியை தேடினான். அது இல்லாமல் போகவும், “ஒரு வேள அவள மாதிரியே இருக்கிற வேற பொண்ணா இருக்குமோ?” என்று யோசித்தான்.
“அவளை மாதிரி இருக்கிற பொண்ணுக்கும், அதே பேரா இருக்க முடியும்?” என்று அவனுடைய மூளை எதிர் கேள்வி கேட்டது.
அதில் அவனுக்கு கோவம் சுள்ளென்று ஏறியது. அவள் மாணவியாக வந்ததுக்கான கோவமா? இல்லை அவள் கழுத்தில் தாலி இல்லை என்பதால் வந்ததால் உண்டானா கோவமா?
அவனுக்கே தெரியவில்லை. ஆனால் ஒரு வித கடுப்பு உருவானதை அவனால் மறைக்க முடியவில்லை.
அதனால் விரல் நீட்டி, ஏதோ சொல்லப் போக அதற்குள், அங்கு இன்னும் சில மாணவர்கள் வந்தனர். அதில் நீட்டிய விரலை இறக்கியவன், மாதவனையும், பூஜாவையும் முறைத்து விட்டு, உள்ளே சென்றான்.
“டேய். சொல்லிட்டு போடா” என்று மாதவன் கத்துவதை காதில் வாங்காமல் சென்றான்.
“அவர் இங்கத்தான் புரோபசரா ஒர்க் பண்றாரா அண்ணா?” என்று கேட்டாள் பூஜா.
“ஏன்மா? அவனைப் பார்த்தா மட்டும் புரோபசர் மாதிரி தெரியுது. ஆனா என்னைப் பார்த்தா உனக்கு தெரியலையா?” என்று வடிவேல் மாடுலேஷனில் கேட்டான்.
அதில் பூஜா அழகாய் இதழ் விரித்து, “உங்களைப் பார்த்தா, எனக்கு அண்ணா பீல் தான் வருது சார்” என்றாள்.
அதில் அவனுமே, “காலேஜ்ல யாராச்சும் பிரச்சனை பண்ணா, என் பேரை சொல்லு. ராக்கிங் எதுவும் நம்ம டிபார்ட்மெண்ட்ல பண்ண மாட்டாங்க. அப்படி ஏதாச்சும் நடந்தா, என்கிட்ட வந்து சொல்லு நான் பார்த்துக்கிறேன்" என்றான்.
“தேங்க்ஸ்ண்ணா” என்று அவள் சொல்லும் போதே, இளங்கலை மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விழா ஆடிட்டோரியத்தில் ஆரம்பமாகியிருந்தது.
“சரிடா. பங்க்சன் ஸ்டார்ட் ஆயிருச்சின்னு நினைக்கிறேன். நேரா ஆடிட்டோரியத்துக்கு வந்துடு. ஆமா உனக்கு ஆடிட்டோரியம் எந்தப் பக்கம் இருக்குன்னு தெரியும்த்தான?” என்றான்.
“ஆ.ங் அண்ணா தெரியும்” என்று அவள் தலையாட்ட, “சரிடா அப்புறம் கிளாஸ்ல பார்க்கலாம்" என்று சொல்லி விட்டு சென்றான் மாதவன்.
அவன் சென்றதும், அங்கேயே நின்றவள், தன் மொபைலில் யாருக்கோ கால் செய்தாள். ஆனால் அந்தப்பக்கம் எடுக்கப்படவில்லை. அந்த யோசனையில் மொபைலைப் பார்த்து நின்றிருந்தவளின் மீதே வந்து மோதினாள் இன்னொருவள்.
(அட என்னம்மா? இன்னிக்கு எல்லாரும் யார் மேலையாச்சும் மோதிட்டே இருக்கனும்னு வேண்டுதல் வச்சிருக்கீங்களா? சரி இது யாருன்னு பாக்கலாம்.சரி எப்படியோ, ஹீரோவும் ஹீரோயினும் ஒரே இடத்துக்கு வந்தாச்சு. இதுக்கப்புறமாச்சும், ஏதாச்சும் சம்திங் சம்திங் நடக்குமா? சரி நம்ம ஹீரோ சார் என்னப் பண்ணப் போறாருன்னு பொறுத்திருந்து பார்ப்போம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. பெஸ்ட் கமெண்ட்ஸ பேனர்ல போஸ்ட் பண்றேன். அப்புறம் ஹோம் ஸ்கீரீன்ல ஆட் பண்றது எப்படின்னு கீழ வீடியோல கொடுத்திருக்கேன். பார்த்து அதே மாதிரி பண்ணிடுங்க. அப்புறம் மறக்காம ரேட்டிங் கொடுத்திடுங்க)
தொடரும்
Indhu Mathi
super 👌
Ammu Sathish
சூப்பர்.. ஆஹா வாத்திக்கு சரியான மனைவி இல்ல, இல்ல மாணவி தான் 😂😂
Sarmi SS
April 21, 2025ha ha.. damm true sis. 😍
Jebaselvi Jeba
super sis❤
Sarmi SS
April 21, 2025thank you
Nisha Abdul
super..
Sarmi SS
April 21, 2025thank you
Santhanalakshmi S
super sissymaa🎉🎉🎉sema nenacha pooja ma dhanu 😁😁😁madhavan ultimate ponnu vida vandhingala pooja ma pangam pannita po🤣🤣🤣pooja ma madhvan brother sister bonding super😍😍😍… elay arjun edhirpakkave ilala inum niraiya sambavam nadakkum polaye eagerly waiting 😁😁😁😁…. thatha sollirundha ne inga vandhurupiya ilaya nu konjam doubt dhan😊😊😊
Sarmi SS
April 21, 2025thanks a lot sis. check the banner for best comment.
Anbu Anbu
super…..
Sarmi SS
April 21, 2025thank you 😍
Shree Ram
நான் நினைத்தேன் 👏👏🥳🥳🥳🥳🥳🥳🥰🥰🥰🥰🥰
காலேஜ் சூப்பரா போகும் 🤣🤣🤣🤣🤣🤣🤣
நல்ல என்ஜாய் பண்ணலாம் 😍😍♥♥♥♥♥♥♥
Sarmi SS
April 21, 2025kandippa. kandippa..😅
Sivaranjitha Ragunathan
Superrrrr Superrrrr 👌👌👌👌
Sarmi SS
April 21, 2025thank you sis
Ponmalar M
super sis 😍😍😍 inimel than semma interesting irukum next ud waiting 😅😅🥰🥰🥰
Sarmi SS
April 21, 2025thank you sis. keep reading
Devi Saravanan
nenachen inimelthan arjunku sothanaikalam arambam.evenevanlam poorakitra pesi vaangikattikkaporangalo
Sarmi SS
April 21, 2025that design appudi. onnum solrathukku illa.
Vel raj
very interesting…..
Sarmi SS
April 21, 2025thank you. keep reading
Vedha Hani
இனிமேல் தான்பா மெயின் கிளாஸ் இருக்கு வாத்திக்கு 😂😂😂😂😂😂
Sarmi SS
April 21, 2025ayo pavam namma vaathi 😂
Ammu Gnanarajan
enaku purila🙄🙄. aana onnu arjunu ne pooja pooja nu pinnadi sutha pora 😜😜😜
Sarmi SS
April 20, 2025ha ha vaaippu irukku sis😅 thank you