இதுதான் காதலா? 💞

கோடைக்காலத்துக்கும், பருவ மழைக்காலத்துக்கும் இடையில் இருந்த அழகான நாட்கள் அவை. ஆம் அழகான நாட்கள் தான். ஏனெனில் அன்றுத்தான். வண்ண வண்ண பட்டாம்பூச்சியாய் பல பேர் தங்கள் கனவுகளை நோக்கி அடி எடுத்து வைப்பது போல் கல்லூரிக்குள் நுழைந்தனர். அன்று தான் பல பேருக்கு பள்ளி வாசல் கடந்து கல்லூரி வாசலில் அடி எடுத்து வைக்கும் நாள்.

அப்படி பல கனவுகளோடு நுழைந்தவர்களுக்கு மத்தியில், அந்த கல்லூரி வாசலில் இருந்த பெயர் பலகையைப் பார்த்தப்படி நின்றிருந்தாள் ரேஷ்மி. காலேஜ் கேட்ல நுழையும் போதே அவளின் மனம் என்னமோ செய்தது.

“என்னடா இது? இவ்ளோ நேரம் நல்லாத்தான இருந்தேன். இந்த கேட்க்குள்ள வந்ததும். மனசு என்னமோ சொல்லுது” என்று தனக்குள்ளே கேட்டவள் தன் நெஞ்சில் கரம் பதித்தாள். புதிதாய் ஏதோ நடக்கப் போவது போல் மனம் அடித்துக் கொண்டது. 

அதில் ஒரு நொடி சுத்திப் பார்த்தாள். எல்லாரும் அவங்கவங்க வேலையில மூழ்கி இருந்தார்கள். அப்பத்தான், “ஐயோ இவ எங்கப் போனா?” என்று தன்னுடைய பள்ளித் தோழியைத் தேடினாள். இருவரும் சேர்ந்து வருவதாகத்தான் முடிவு செய்திருந்தனர். ஆனால் முதல் நாள் என்பதால், காவ்யா வீட்டில், அவளை தனியாக அனுப்பவில்லை.

“கால் பண்ணி பாக்கலாம்னா, மொபைல்ல கூட வச்சிருக்க மாட்டா” என்றப்படி அவளை தேடிக் கொண்டே சென்றாள். அங்கே தூரத்தில் லைப்ரரி வாசலில், யாரையோ பார்த்தப்படி நின்றாள் காவ்யா.

அவளைப் பார்த்தப் பின் தான் அவளுக்கு நிம்மதியாய் இருந்தது. காவ்யா, அவளைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், ரேஷ்மியின் உயிர் தோழி. ரேஷ்மிக்கு பேச்சு அழகு என்றால், காவ்யாவுக்கு அவள் சிரிப்புத்தான் அழகு. காவ்யா சிரிச்சா அவ்ளோ அழகா இருப்பா. அந்த சிரிப்புல ஒரு குழந்தைத் தனம் இருக்கும். 

அவளைப் பார்த்ததும், அவளின் அருகில் சென்று, “ஹேய் உன்ன எங்கெல்லாம் தேடுறது? நீ என்னென்னா? இங்க நின்னு யாரையோ பார்த்து சிரிச்சிட்டு இருக்க” என்றாள் ரேஷ்மி.

அவளின் கேள்வியில் பதறியவள், "ஹே. அத். அ... அது ஒண்ணுமில்ல ரேஷ்மி. சும்மா ஒருத்தரைப் பார்த்து... அவரோட பேச்சைக் கேட்டு சிரிப்பு வந்துச்சு." என்றாள்.

“பாருடா என் காவியவே சிரிக்க வச்சிட்டாரா? அப்போ நானும் பார்க்கனுமே” என்று ரேஷ்மி சொல்லும் போதே அவர்களின் அருகில் வந்து நின்றான் அவன். 

நல்ல உயரம், ஸ்மார்ட்டான லுக். பார்த்த உடனே மனசுல பதிஞ்சு போற மாதிரி முகம். அவனைப் பார்த்ததும், நம்ம ரேஷ்மி உலகத்தையே மறந்துத்தான் போனாள். ஏனோ அவனைப் பார்த்த அந்த நொடி, அவனைத் தவிர்த்து வேறு எதையும் அவளால் பார்க்க முடியவில்லை. அவள் பார்வை அவனின் மீது அப்படியே பதிந்துத்தான் போனது. அவள் மனதில் இதுவரை உணராத புதுவித உணர்வு.

இதுதான் காதலா? முதல் பார்வையிலேயே வருமா? என்ன உணர்விது? இதுவரை அறியாத ஒருவனைப் பார்த்து மனம் இப்படி அலைப்பாயுமா?

ரேஷ்மி அவள் கனவு உலகில் இருக்கும் போதே அந்த ஒருவனோ "ஹாய் காவ்யா," என்று சிறு சிரிப்புடன் அவளிடம் பேசினான். ஏனோ அவன் சிரிக்கவும், இங்கே ரேஷ்மியின் மனதில் இன்னுமே அவன் அழகனாய்  தெரிந்தான்.

"ஹாய் ஜித்தேஷ். இவதான் என்னோட பெஸ்ட் ஃபிரண்ட், ரேஷ்மி." என்று காவ்யா ரேஷ்மியை அறிமுகப்படுத்தினாள்.

அவனோ வெகு இயல்பாய் "ஹாய் ரேஷ்மி," என்று ஜித்தேஷ் சொல்லும்போதே அவளை நேராய் பார்த்தான். அந்த ஒரு நொடி பார்வை ரேஷ்மிக்குள் ஒரு பெரிய அலையை உருவாக்கியது.

அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க ஜித்தேஷோ, “ஹலோ ரேஷ்மி. உங்களத்தான்” என்று கையை ஆட்டினான்.

அப்போதே இவ்வுலகம் வந்தவள், "ஹ... ஹாய்," என்று தடுமாற்றத்தோடே கூறினாள்.

“என்ன காவ்யா? உன்ன மாதிரியேத்தான் உன் பிரண்ட்-ம் இருப்பாங்க போலையே. ஒரு வார்த்த வர்றதுக்கு இவ்ளோ டைம் எடுத்துக்கிறாங்க” என்று கிண்டலாய் சொல்லும் போதே, ஜித்தேஷை அவன் தோழன் ஒருவன் அழைத்தான். அதில் அவனும் அங்கிருந்து சென்று விட்டான்.

ஆனால் இப்போது ரேஷ்மிதான் இன்னும் கூட அப்படியே செல்பவனையே பார்த்தப்படி நின்றாள்.

“ஹேய் ரேஷ்மி” என்று காவ்யா உழுப்ப, “ஆ.ங் என்ன?” என்றாள். “என்னாச்சு உனக்கு. வா கிளாஸுக்கு போலாம்” என்று சொல்ல, “ஆமா அது யாரு?” என்றாள்.

“அது என்னோட டியூசன் மாஸ்டரோட பையன்” என்று காவ்யா சொல்ல, “ஓ அவருக்கு இவ்ளோ அழகான பையனா?” என்று தனக்குள்ளே யோசித்தவளை, காவ்யாத்தான் கிளாஸுக்கு இழுத்துச் சென்றாள்.

ஆனால் அன்று கல்லூரி முடியும் வரையிலுமே ரேஷ்மியின் மனதில் ஜித்தேஷின் முகமும், அவனுடைய சிரிப்பும், அவன் பேச்சும் மட்டுமே நினைவில் இருந்தது. திரும்ப திரும்ப அவளுக்கு ஜித்தேஷோட சிரிப்பும், அவனோட அந்த பார்வையும் தான் ஞாபகத்துக்கு வந்தது. 

“ஹேய் இதெல்லாம் ஜஸ்ட் கிரஸ்” என்று சொல்லி அவனின் நினைவை அடித்து விரட்டவே நினைத்தாள். ஆனால் அது அடுத்த சில நாட்களிலேயே ஒரு தலைக் காதலாய் மாற ஆரம்பித்திருந்தது.

காலேஜ்ல அவனைப் பார்க்குற ஒவ்வொரு நொடியும் அவ மனசுல பட்டாம்பூச்சி பறக்குற மாதிரி இருந்துச்சு. அவனைப் பார்கக்வே கூடாது என்று நினைத்தும், அவளால் அது முடியவே இல்லை. அவனுக்காக என்று அவள் ஒவ்வொரு நாளும், பார்த்து பார்த்து ஏதேதோ செய்தாள். அவன் அவளை கடந்து செல்லும் நொடிகளில் எல்லாம், அவள் இவ்வுலகிலேயே இல்லை.

ஒரு பக்கம் அந்த காதல் உணர்வு அவளை ஆட்டிப்படைத்தாலும், அதே சமயம் ஒரு பயமும் இருந்தது. 

“அவன எனக்குக் கிடைப்பானா? இல்ல இது வெறும் கனவா போயிடுமா?” என்ற கேள்வி அவளுக்குள் எழ ஆரம்பித்தது. அதற்கு முக்கிய காரணம், இவள் தான் அவன் பின்னால் சுத்தினாலே தவிர, அவன் இவள் பக்கம் கூட பார்த்திருக்கவில்லை.

காவ்யாவுடன் இவள் இருக்கும் போது சிறு சிரிப்புடன் கடந்து செல்வான். அவ்வளவுத்தான்.

இப்படியே நாட்கள் செல்ல, அன்று ரேஷ்மி காவ்யாவிடம், ஜித்தேஷைப் பற்றி மெதுவாய் பேச ஆரம்பித்தாள்.

"காவி, ஜித்தேஷ் பார்க்கிறதுக்கு ரொம்ப நல்லப்பையனா தெரியுதுல்ல. ஆமா என்ன படிக்கிறாரு?" என்று தெரிந்துக்கொண்டேத்தான் கேட்டாள்.

"ஆமா ரேஷு. அவரு இங்க ஃபைனல் இயர் படிக்கிறாரு. ரொம்ப நல்ல பையன் தான். எல்லார்கிட்டயும் மரியாதையா பேசுவாரு." என்ற காவ்யா நோட்டில் எதையோ எழுதிக் கொண்டிருந்தாள்.

"அப்படியா? அப்போ ஜித்தேஷ் பத்தி உனக்கு நிறையா தெரியுமா?” என்று தூண்டில் போட, “நிறையாலாம் இல்ல. ஆனா கொஞ்சம் கொஞ்சம் தெரியும். அங்கத்தான ரெண்டு வருஷமா டியூசன் படிச்சேன்” என்றாள்.

“ம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா, நானும் நீ கூப்பிடுறப்பையே அந்த டியூசன் அந்து சேர்ந்திருப்பேன்” என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டாள்.

“என்னடி?” என்று காவ்யா கேட்க, “ஆ..ங் இல்ல அவருக்கு என்ன பிடிக்கும்னு உனக்குத் தெரியுமா?" ரேஷ்மி கொஞ்சம் தயக்கத்தோடே கேட்டாள்.

அதில் காவ்யாவோ, “அத தெரிஞ்சிட்டு நீ என்னப் பண்ணப் போற” என்று எதார்த்தமாய்த்தான் கேட்டாள். “இல்ல இல்ல. ஜஸ்ட் தெரிஞ்சிக்கலாம்னுத்தான். இங்கத்தான நம்மளும் படிக்கிறோம். சீனியர பத்தி தெரிஞ்சு வச்சிக்கிடுறது நல்லதுத்தான” என்றாள் ரேஷ்மி

"ம்... அவருக்கு புக்ஸ் படிக்க ரொம்ப பிடிக்கும். அதுவும் ஹிஸ்டரி நாவல்ஸ்னா ரொம்ப இஷ்டம். அப்புறம் கிரிக்கெட் விளையாடியும் பார்த்திருக்கேன்." என்று காவ்யா அவளுக்கு தெரிந்ததைக் கூறினாள்.

அவளுக்கு தெரியாத விஷயத்தைக் கூட, ரேஷ்மி காவ்யாவிடம் கொஞ்சம் கொஞ்சமாய் கேட்டு தெரிய வைத்திருந்தாள். ஜித்தேஷைப் பத்தி ஒவ்வொரு விஷயம் தெரிஞ்சுக்கும் போதும் ரேஷ்மிக்கு அவனை இன்னும் அதிகமா புடிச்சிருந்தது. 

ஆனா அதே நேரம் “இப்படி எல்லாத்துலையும் பர்பக்டா இருக்கிற ஜீவனுக்கு, நம்மள பிடிக்குமா?” என்று யோசித்துப் பார்த்தாள்.

இப்படி அவள் குழப்பத்தில் இருக்கும் போதுத்தான் அந்த சம்பவம் நடந்தது. திடீரென ஒரு நாள் ஜித்தேஷ் ரேஷ்மியை தனியே பார்க்க வந்தான். 

அவனைப் பார்த்ததும் வழக்கம் போல், அவள் கண்கள் அவனை சைட்டடிக்க, அதை இழுத்துப் பிடிக்கவே அவள் படாதப்பாடு பட்டாள். ஆனாலும் அவனே அவளிடம் வந்து நிற்பதை சிறு குழப்பத்துடனும் பார்த்தாள்.

ஏனெனில் காவ்யா இல்லாமல், அவன் இவள் பக்கம் திரும்பவே மாட்டான். இப்போது அவனே வந்து நிற்கவும், “என்னைய பாக்கவா வந்தாரு?” என்றப்படி அவனைப் பார்த்தாள்.

"ரேஷ்மி, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்." என்று அவன் கொஞ்சம் தயக்கத்தோடு கூறினான். 

"சொல்லுங்க ஜித்தேஷ்." ரேஷ்மி அவனையே பார்த்துக்கிட்டு இருந்தாள். ஏனோ அவனுடைய தயக்கமும், பதட்டமும் இவள் மனதுக்குள் பல கற்பனைகளை வளரவிட்டது.

“ஒரு வேள எனக்கு பிடிச்ச மாதிரியே அவருக்கும் என்ன பிடிச்சிருக்குமோ?” என்று அந்த சில நொடி இடைவெளியில் என்னென்னவோ யோசித்து விட்டாள்.

“சொல்லுங்க ஜித்தேஷ்” என்று ரேஷ்மி சொல்ல, இப்போது அவனோ தன் தயக்கத்தை விடுத்து "எனக்கு... எனக்கு காவ்யாவ பிடிச்சிருக்கு." என்றிருந்தான்.

அவன் சொல்லியதை, அவள் புரிந்துக் கொள்ளவே சில கணங்கள் தேவையாய் இருந்தது. அது புரிந்ததும், ரேஷ்மிக்கு ஒரு நிமிஷம் உலகமே நின்னு போன மாதிரி இருந்துச்சு.

“என்னது? அவனுக்கு காவ்யாவ பிடிச்சிருக்கா? அப்போ நான் தான் தப்பா நினைச்சிட்டேன்னா?” என்று தனக்குள் அவள் யோசிக்கும் போதே அவளுடைய இதயம் அத்தனை வலித்தது.

"ஓ..." என்ற ரேஷ்மியால வேற எதுவும் பேச முடியவில்லை.

"ஆமா ரேஷ்மி. எனக்கு அவ மேல முன்னாடி இருந்தே சின்ன கிரஸ் இருந்துச்சு. அவளோட பேச்சு, சிரிப்பு எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா... அவ என்ன நினைக்கிறான்னு எனக்குத் தெரியல. நீ அவளோட க்ளோஸ் ஃபிரண்ட் தான. நீ எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?” என்றான்.

ஏனோ அவனுடைய ஒவ்வொரு வார்த்தையும், இங்கே அவள் இதயத்தை பதம் பார்த்துக் கொண்டிருப்பதை அவன் அறிந்திருக்கவில்லை. அவள் கண்கள் எல்லாம் கலங்க முயற்சித்தது.

ஆனாலும் அதை இழுத்துப் பிடித்து, “இதுல நான் என்ன ஹெல்ப் ப்ண்ண முடியும்?” என்று வார்த்தையைக் கோர்த்துக் கேட்டாள்.

“அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க எனக்கு உன் உதவி வேணும்?" என்று அத்தனை நம்பிக்கையோடு அவளைப் பார்த்தான்.

ரேஷ்மிக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. தன்னோட காதலையே அவள் அவனிடம் சொல்லியிருக்க வில்லை. இதில் தான் காதலிக்கிறவனே வேற ஒருத்தருக்காக ஹெல்ப் கேட்கிறதை அவ எப்படி ஏத்துக்கிறது?

“எவ்ளோ பெரிய விஷயத்த ஈஸியா கேட்டுட்டான்? என் மனசு எவ்வளவு வலிக்குதுன்னு இவனுக்குத் தெரியுமா?” என்று தனக்குள்ளே சொல்லியவளுக்கு அந்த நொடி சுவாசிக்கவே அத்தனை கஷ்டமாய் இருந்தது.

ஆனாலும் வெளியில் ஒரு பொய்யான சிரிப்போட, "நிச்சயமா ஜித்தேஷ். எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்." என்றாள்.

அதைக் கேட்டவனோ, “ரொம்ப தேங்க்ஸ் ரேஷ்மி. இத மட்டும் நீ எனக்காக பண்ணிட்டா, என் லைப் லாங் உன்ன மறக்கவே மாட்டேன்” என்று சந்தோஷமாய் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.

ஆனால் இங்கே ரேஷ்மித்தான் முற்றும் முழுதாய் உடைந்துப் போனாள். அன்று ரேஷ்மி வீட்டுக்கு வந்து ரொம்ப நேரம் அழுதா. தன்னோட காதலை யார்கிட்டயும் சொல்ல முடியாம, தான் நேசிக்கிறவனே வேற ஒருத்தரை நேசிக்கிறான்ங்கிற உண்மையை ஏத்துக்க முடியாம அவ ரொம்ப வேதனைப்பட்டா. 

'ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது? நான் நேசிச்ச ஒருத்தன் வேற ஒருத்தர நேசிக்கிறான். அதுக்கு என்கிட்டையே வந்து உதவியும் கேட்கிறான்?” என்று சில நொடிக்ள் புலம்பினாள்.' ஆனாலும், தன்னோட ஃபிரண்ட் சந்தோஷமா இருக்கணும்ங்கிறதுக்காக அவ எல்லாத்தையும் தாங்கிக்கிட்டா. 

'நான் ஒரு நல்ல ஃப்ரண்டா இருக்கணும். அவங்க சந்தோஷத்துல என் சந்தோஷம் இருக்குன்னு நான் நம்பணும்.' என்று தனக்குத் தானே சொல்லி அதை தன் மனதிலும் பதிய வைக்க முயற்சித்தாள்.

அடுத்த நாள் காலையில் ரேஷ்மியும், காவ்யாவும் கேண்டினில் அமர்ந்திருந்தனர். இரவெல்லாம் உறங்காததால், அவள் கண்கள் சற்று சிவப்பேறியிருந்தது.

காவ்யாவோ சுற்றி வேடிக்கைப் பார்த்தப்படி காபியை குடித்துக் கொண்டிருந்தாள். ரேஷ்மிக்கோ ஜித்தேஷ் சொல்லியதுத்தான் ஓடிக் கொண்டிருந்தது. மனம் என்னமோ செய்தது.

கையில் இருந்த காபியைக் கூட குடிக்காது, எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள், பின் தன்னைத் தானே தேற்றி, “காவி நேத்து லைப்ரரில ஒருத்தரைப் பார்த்தேன். ஏதோ ஒரு ஹிஸ்டரி புக் படிச்சுக்கிட்டு இருந்தாரு” என்றாள். அவள் ஜித்தேஷை நினைத்துத்தான் கூறினாள். ஏனெனில் ஜித்தேஷின் உலகம் முக்கால்வாசி நேரம் அந்த நூலகம் தான்.

இப்போது காவ்யாவோ, ரேஷ்மியை சிறு சந்தேகத்துடன் பார்த்தாள், “ ஓகோ! அப்போ நம்ம ரேஷ்மி யாரையோ கண்டுபுடிச்சுட்டா போலையே? யாரு அது? என்கிட்ட சொல்லுவீயா? இல்லன்னா சஸ்பென்ஸா வெச்சுக்கப் போறியா?” என்று கிண்டலாய் கேட்டாள் காவ்யா.

அதில் சட்டன்னு நிகழ்காலத்துக்கு வந்து, ஒரு பொய்யான சிரிப்போடு “ஹேய் சும்மாடி. ஒருத்தர் அவ்வளவு அமைதியா, அந்த புத்தகத்துல முழுசா மூழ்கிப் போயிருந்ததைப் பார்த்தேன். இப்பல்லாம் அப்படி படிக்கிறவங்கள பார்க்கவே முடியறதில்ல. எல்லாரும் கையில போனை வெச்சுக்கிட்டுதான் சுத்திக்கிட்டு இருக்காங்க. அதான்” என்றவள் வெளியில் கூறினாள்.

உள்ளுக்குள் அவள் மனமோ ‘உனக்குத் தெரியுமா காவி? அவன் மத்தவங்க மாதிரி இல்ல. ரொம்ப ஸ்பெஷல்’ என்று சொல்லியது.

அதற்குள் காவ்யாவோ “ஆமா ரேஷு. நீ சொல்றது உண்மைதான். நிறைய பேர் டைம் பாஸ் பண்றதுக்காகத்தான் காலேஜுக்கு வர்றாங்க. இதுல புக் படிக்கிறவங்களாம் ரேர் தான். ஆமா அப்படி என்ன புக்க அந்த பையன் படிச்சிட்டு இருந்தான்” என்று கேட்டாள். 

“ஆ..ங் ஹிஸ்டரி நாவல்னு நினைக்கிறேன். ஏதோ பழைய காலத்து ராஜாக்கள், ராணிகள் கதை மாதிரி இருந்துச்சு. எனக்கு அந்த மாதிரி கதைகள்னா ரொம்பப் பிடிக்கும். படிக்கும்போது வேற ஒரு உலகத்துக்குப் போன மாதிரி இருக்கும்” என்று ரேஷ்மி ஏதோ கூறினாள்

ஆனால் அவள் மனமோ ‘எனக்கும் அவனை ரொம்பப் பிடிக்கும் காவி. அவனோட இன்ட்ரஸ்ட்டும் என் இன்ட்ரஸ்ட்டும் ஒரே மாதிரி இருக்கு. ஆனா இந்த ஒற்றுமை நமக்கு இல்ல. ஏன்னா அவனுக்கு உன்னத்தான் பிடிச்சிருக்கு. உன்ன மாதிரி அமைதியா இருக்கிற பொண்ணுங்களத்தான் பசங்களுக்கு பிடிக்கும்’ என்று தனக்குள்ளே சிறு வலியோடு சொல்லிக் கொண்டது.

இப்போது காவ்யாவோ, காபியை குடித்தப்படி, “ம் எனக்கு அதுல எல்லாம் பெருசா இண்ட்ரஸ்ட் இல்ல. ஆனா ஹிஸ்டரி நாவல்ஸ்னா... ஜித்தேஷ் கூட அடிக்கடி அந்த மாதிரி புக்ஸ் தான் படிப்பாரு. ஒரு தடவை ஒரு கதைய என்கிட்ட அவ்ளோ இன்ட்ரஸ்ட்டா சொல்லிட்டு இருந்தாரு. எனக்கே அவர் சொன்ன விதம் ரொம்ப பிடிச்சிருந்திச்சு” என்றாள்.

அதைக்க் கேட்ட ரேஷ்மிக்கு மெல்லிய வலி. ஆனாலும் அதை வெளிக்காட்டாது “அப்படியா? நல்ல விஷயம் தானே. அந்த மாதிரி விஷயங்கள்ல இன்ட்ரஸ்ட் இருக்கிறவங்ககிட்ட பேச நிறைய இருக்கும். பொதுவா நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்குவாங்க. வெறும் சினிமா, சீரியல்னு இல்லாம வேற விஷயங்களும் தெரிஞ்சு வச்சிருப்பாங்க” என்றாள்.

வார்த்தை அப்படி என்றால், உள்ளே அவள் மனமோ ‘ஆமா காவ்யா. அவன் பேச ஆரம்பிச்சா நேரம் போறதே தெரியாது. ஆனா அந்த பேச்செல்லாம் உனக்காகத்தான் இருக்கு. எனக்காக ஒரு வார்த்தை கூட பேச மாட்டானா அவன்?’ என்று மெலிதாய் ஏங்கியது.

“ஹேய் லூசா நீ! ஜித்தேஷ்க்கு காவ்யாவத்தான் பிடிச்சிருக்கும்” என்று மீண்டும் ஒரு முறை தனக்கு தானே பதிய வைத்துக் கொண்டாள் ரேஷ்மி.

“ஆமா ரேஷ்மி. அவரும் நிறைய விஷயங்கள் தெரிஞ்சு வச்சிருப்பாரு. சில சமயம் நான் ஏதாவது டவுட் கேட்டா கூட பொறுமையா சொல்லிக் கொடுப்பாரு” என்றாள்.

“அப்போ நல்ல பையனாதான இருக்கான். உனக்குப் பிடிச்சிருக்கா அவனை?” என்று நேரடியாகவே கேட்டு விட்டாள். ஆனால் அவளின் மனமோ அத்தனைப் பதறியது.

‘ப்ளீஸ் காவ்யா. அவனை உனக்குப் பிடிக்கலைன்னு ஒரு வார்த்தை சொல்லு. ப்ளீஸ்’ என்று தனக்குள்ளே சிறு கெஞ்சலோடு அவளைப் பார்த்தாள்.

ஆனால் அவளுடைய எதிர்பார்ப்பை மொத்தமாய் குழிதோண்டிப் புதைப்பது போல், காவ்யாவுடைய முகம் மின்னல் வேகத்தில் குங்குமமாய் சிவந்தது. அவள் முகத்தில் படிந்த அந்த வெட்கமே, காவ்யாவுக்கும், ஜித்தேஷைப் பிடித்திருக்கிறது என்பதை புரிய வைத்தது.

அதில் மீதமிருந்த அவளுடைய நம்பிக்கையும் கரைய, காவ்யாவைப் பார்த்தாள்.

“ம்... நல்ல பையன்தான். மத்தவங்ககிட்ட ரொம்ப மரியாதையா நடந்துக்குறான். அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றாள்

ரேஷ்மிக்கு ஒரு பக்கம் ஜித்தேஷ்க்காக சந்தோஷப்பட்டா. “நல்ல வேள எனக்கு தந்த வலிய, என் காவிக்கும், ஜித்துக்கும் அந்த கடவுள் கொடுக்கல” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

பின், “ஆமா காவ்யா. அது ரொம்ப முக்கியம். மத்தவங்ககிட்ட எப்படி நடந்துக்குறாங்கன்னு பார்த்தாலே அவங்க எப்படிப்பட்டவங்கன்னு தெரிஞ்சுடும். மத்தவங்க ஃபீலிங்ஸ மதிக்கத் தெரிஞ்சவங்க எப்பவுமே நல்லவங்களாதான் இருப்பாங்க.. உனக்கு கண்டிப்பா ஜித்தேஷ் பெஸ்ட் பார்ட்னரா இருப்பாரு” என்று சொல்லிவிட்டாள்.

அதன் பின் நாட்கள் போகப் போக ஜித்தேஷும் காவ்யாவும் ரொம்ப க்ளோஸ் ஆகிட்டாங்க. அன்று கூட ஏதோ இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது ரேஷ்மி அங்கு வந்தாள்.

ஜித்துவுடன் அவள் இருப்பதைப் பார்த்து கிளம்பத்தான் நினைத்தாள். ஆனால் அதற்குள் ஜித்தேஷ் தான், “வா ரேஷ்மி” என்றான்.

இப்போதெல்லாம் ரேஷ்மியிடமும் ஜித்து நன்றாக பேசினான். ஆனால் ரேஷ்மித்தான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வதோடு நிறுத்திக் கொண்டாள். இல்லை என்றால், காவ்யாவைப் பற்றி ஜித்தேஷிடம் பேசுவாள்.

இப்போதும் காவ்யா, “ரேஷு, நீ ஜித்தா கிட்ட பேசிட்டு இரு. நான் இந்த அசைண்ட்மெண்ட மட்டும் சப்மிட் பன்ணிட்டு வந்துடுறேன்” என்றப்படி அங்கிருந்து ஓடினாள். 

இப்போது ரேஷ்மியோ ஜித்தேஷிடம், "ஜித்து. காவ்யா ரொம்ப சென்சிட்டிவ்வான பொண்ணு. சின்ன விஷயத்துக்குக்கூட வருத்தப்படுவா. ஆனா மனசுல பட்டதை வெளிப்படையா பேசிடுவா. சோ அவ ஏதாச்சும் கோவப்படுற மாதிரி நடந்துக்கிட்டா கூட, நீங்க அவகிட்ட கோவப்பட்டுடாதீங்க” என்றாள்.

அதில் ரேஷ்மியைப் பார்த்தவனோ, “கவலையே படாதீங்க. உங்க பிரண்ட நான் பத்திரமா பாத்துப்பேன். ஈவன் எனக்கு அவகிட்ட பிடிச்சதே அவளோட அந்த கேரக்டர் தான். ஆனாலும் எனக்கு இன்னுமே அவள பத்தி தெரிஞ்சிக்கனும். அவளுக்கு எதுல இண்ட்ரஸ்ட்? அவளுக்கு என்னவாகனும்னு ஆச” என்று அவனும் காவ்யாவைப் பற்றி அவளிடம் கேட்டான்.

"அவளுக்கு டிராயிங்னா ரொம்ப இஷ்டம். காலேஜ் ஃபங்ஷன்ல எல்லாம் சூப்பரா டெக்கரேஷன் பண்ணுவா தெரியுமா?" என்று இப்படி காவ்யாவைப் பற்றி வாய் மூடாது பேசினாள் ரேஷ்மி. அதில் ஜித்தேஷே ஒரு நொடி ரேஷ்மியை அசையாது பார்த்திருந்தான்.

அவனின் பார்வை அவள் பார்வையை சந்திக்க சட்டென்று இவளுக்குள் ஒரு வித தடுமாற்றம், “என்னாச்சு ஜித்து?” என்றாள். “இல்ல நீங்க இவ்ளோ பேசுவீங்கன்னு எனக்கு இன்னிக்குத்தான் தெரியும்” என்றான்.

அதற்குள் காவ்யா வந்து விட, ரேஷ்மி அங்கிருந்து சென்று விட்டாள். அதன் பின் நேரம் கிடைக்கும் போதெல்லாம், ரேஷ்மியிடம் காவ்யாவைப் பற்றி நிறைய கேட்டு தெரிந்துக் கொண்டான்.

உண்மையில் ஜித்தேஷ். காவ்யாவிடம் பேசுவதை விட, ரேஷ்மியிடம் தான் அதிக நேரம் பேசினான். இல்லை இல்லை அவளை பேச வைத்தான். அவள் பேசுவதையே சில நேரம் பார்த்துக் கொண்டே இருப்பான்.

அவனுடைய அந்த பார்வை இவளைத்தான் தடுமாற வைக்கும். ஆனால் அவனோ ஒரு சின்ன நன்றியோட அவளைப் பார்ப்பான். 

மனதினுள் 'ரேஷ்மி இல்லன்னா காவ்யாவப் பத்தி இவ்வளவு விஷயங்கள் எனக்குத் தெரிஞ்சிருக்காது.' என்று சொல்லிக் கொள்வான்.

இப்படியான ஒரு நாள் ஜித்தேஷ் ரேஷ்மியிடம் "ரேஷ்மி, நீ சொன்னது சரிதான். காவ்யா ரொம்ப நல்ல பொண்ணு. அவகிட்ட பேசும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவளை எனக்கு முன்னாடிய விட இப்போ ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. அதுக்கு ரீசன் நீதான். அவ பர்த்டே அன்னிக்கு ப்ரோபோஸ் பண்ணலாம்னு இருக்கேன்." என்று அவன் சொல்லும் போதே அவன் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி தெரிந்தது.

ரேஷ்மி அதைக் கேட்டு உள்ளுக்குள்ள உடைந்துப் போனாள். ஆனாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாது, "ரொம்ப சந்தோஷம் ஜித்து. காவ்யாவும் உன்னை விரும்புறான்னுத்தான் எனக்குத் தோணுது. சோ கண்டிப்பா உன் லவ்வ அக்சப்ட் பண்ணிப்பா. ஆல் தி பெஸ்ட்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்தாள்.

அன்னிக்கு ரேஷ்மி காலேஜ் முடிஞ்சு தனியா நடந்து போனா. அவ கண்ணுல இருந்து கண்ணீர் தாரை தாரையாய் வடிந்தது. 

'நான் ஏன் இப்படி நடிச்சிட்டு இருக்கேன்? என் பிரண்ட்க்கு ஒரு நல்லது நடக்கிறப்ப நான் ஏன் கஷ்டப்படுறேன்? என் மனசு ஏன் இவ்வளவு வலிக்குது?’ என்று தனக்குத் தானே கேட்டாள்.

ஏனோ தன்னுடைய காதலையும், வலியையும் யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள முடியாது, தனக்குள்ளேயே வைத்து அழுதாள். அதுவே அவளை இன்னும் இன்னும் பலவீனமாக்கியது.

'இந்த வலி எப்ப குறையும்? நான் எப்ப என் மனசுல இருக்கிறதை வெளியே சொல்லுவேன்?' என்று தனக்குத் தானே கேட்டவளுக்கு இதயமே கையில் வந்து விடுவது போல் வலித்தது. 

அங்கே அப்ப்டி என்றால், ஜித்த, ரேஷ்மியிடம் சொல்லியது போல், காவ்யாவின் பிறந்த நாள் அன்று தன் காதலை அவளிடம் சொல்லியிருந்தான். காவ்யாவுமே அவன் காதலை ஏற்றுக் கொண்டாள். ஜித்தேஷும் காவ்யாவும் லவ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. காலேஜ் கேம்பஸ் முழுக்க அவங்க ரெண்டு பேரோட காதல் தான் பேச்சா இருந்துச்சு. 

ரேஷ்மிக்கு அவங்க ரெண்டு பேரையும் பார்க்கும் போது ஒரு மாதிரி சந்தோசமாவும் இருக்கும். ஆனா அவளும் பெண் தானே, அவளுக்கு மனம் என்ற ஒன்று உள்ளதே. அவளுக்குள் முளைத்திருந்த அந்த காதல் இன்னும் கூட அடியோரத்தில் இருந்து அவளை நச்சரிக்கத்தான் செய்தது.

'அவங்க ரெண்டு பேரும் எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க. ஆனா என் மனசு ஏன் அமைதியா இல்ல?' என்று தனக்குள்ளே கேட்டாள். ஏனெனில் அவங்க சேர்ந்து சிரிக்கும் போதும், பேசும்போதும் ரேஷ்மிக்கு ஒரு மாதிரி இருக்கும். 

'நான் ஏன் அவங்க சந்தோஷத்துல சந்தோஷப்பட முடியல? நான் ஒரு நல்ல ஃப்ரண்டா இல்லையா?' என்று பல நேரம் அவளுக்குள் கேள்வி எழுந்தது. ஆனால் அவள் அதை வெளியில் காட்டிக்கவே இல்லை.

'நான் அவங்க சந்தோஷத்த பார்த்து சந்தோஷப்படலன்னா கூட, இப்படி நான் கஷ்டப்படக் கூடாது' என்று முடிவு எடுத்துக் கொண்டாள்.

முடிவென்னவோ எடுத்து விட்டாள். ஆனால் அதை நிறைவேத்தத்தான் அவளால் அத்தனை எளிதில் முடியவில்லை.

காவ்யாவும் ஜித்தேஷும் ரேஷ்மி முன்னாடியேதான் அவங்க காதலைப் பகிர்ந்துக்கிட்டாங்க. ஒருத்தருக்கொருத்தர் கிஃப்ட் குடுத்துக்குறது, கையப் புடிச்சுக்கிறதுன்னு எல்லாமே ரேஷ்மி கண் முன்னாடிதான் நடந்துச்சு. அதைப் பார்க்கும்போது ரேஷ்மிக்கு உள்ளுக்குள்ள ஆயிரம் வலிகள் இருந்தாலும், வெளியில அவ ஒரு நல்ல ஃபிரண்டா அவங்க சந்தோஷத்த பார்த்து மனச தேத்திக்கிட்டா.

இப்படியான ஒரு நாளில் காவ்யா ரேஷ்மிகிட்ட "தேங்க்ஸ் ரேஷ்மி. நீ இல்லன்னா நாங்க ரெண்டு பேரும் சேர்ந்திருக்கவே முடியாது. நீதான் எங்களுக்குள்ள இருந்த தயக்கத்தை உடைச்சி எங்க காதல்ல வெளிய கொண்டு வர வச்ச. ஐ லவ் யூ டா” என்று சொல்லி தோழியைக் கட்டிக் கொண்டாள்.

அந்த வார்த்தை ரேஷ்மியின் இதயத்தை யாரோ கத்தியால் குத்திய்து போல் இருந்தது.. தன்னோட காதலை மறைச்சு, அவங்க ரெண்டு பேரும் சேர்றதுக்கு, தான் காரணமா இருந்திருக்கான்னு நினைக்கும்போது அவளுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.

'அவளுக்குத் தெரியுமா என் மனசுல என்ன இருக்குன்னு? நான் எவ்வளவு கஷ்டப்படுறேன்னு அவளுக்குப் புரியுமா?' என்று அவளுக்குள் இருந்த காதல் மனம் கேள்விக் கேட்டது. ஆனாலும் வழக்கம் போல் அதை வெளிக்காட்டாது. “ஹேய், பழக்க தோஷத்துல, உன் ஆளுன்னு நினைச்சி என்கிட்ட ஐ லவ் யூ சொல்லிட்டு இருக்கப் பாரு” என்று கேலி செய்து அவளை வெட்கப்பட வைத்தாள்.

ஏனோ அதுக்கப்புறம் ரேஷ்மி கொஞ்சம் கொஞ்சமா அவங்க ரெண்டு பேர்கிட்ட இருந்தும் விலக ஆரம்பிச்சா. முன்ன மாதிரி அவங்க கூட அதிகமா டைம் ஸ்பென்ட் பண்ணல. தனியாவே இருக்கறதுக்கு முயற்சி பண்ணா. 

'நான் ஏன் இவங்க கூட இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன்? நான் ஒரு நல்ல ஃப்ரண்டா இருக்கணும்னு தானே நினைச்சேன்.' என்று தனக்குள் கேட்டாள். ஆனால் அவங்க சந்தோஷமா இருக்கறதைப் பார்க்கும்போது அவளுக்குள் ஒரு வித வலி உருவாவதை அவளால் தடுக்க முடியவில்லை. 

அதனாலையே 'நான் கொஞ்சம் தூரமா இருந்தா என் மனசு கொஞ்சம் அமைதியா இருக்குமோ?' என்று தனக்குள்ளே முடிவெடுத்து அவர்களை விட்டு விலகவும் ஆரம்பித்து விட்டாள்.

காவ்யாவும் ரெண்டு மூணு தடவை அவளிடம் "என்ன ரேஷ்மி, முன்ன மாதிரி என்கூட பேசுறது இல்ல? என்னாச்சு உனக்கு?" என்றாள்.

“ஹேய் அப்படில்லாம் இல்ல. எக்ஸாம் வேற வருது. அதுவும் போக வீட்டுல கொஞ்சம் இஸ்யூ அதுத்தான். நெக்ஸ்ட் அதான் இப்ப உனக்கு ஜித்து இருக்கான் தான. அவன் கூட டைம் ஸ்பெண்ட் பன்ணு. எப்படியும் காலேஜ் முடிச்சதுக்கப்புறம், ஜித்து கூட உன்னால டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாது. நீயும், நானும் எப்படியும் ஒன்னாத்தான வேல பார்க்கப் போறோம்” என்று ஏதோ ஒன்றை சொல்லி மழுப்பி விட்டாள்.

காவ்யாவுக்குமே அது சரி என்றுத்தான் தோன்றியது. ஏனெனில் இப்போது ஜித்தேஷும் வேலைக்கு சேர்ந்திருப்பதால், அவர்களுக்கான நேரமும் மிகவும் கம்மியாகத்தான் இருந்தது. ஆனால் அவனுமே காவ்யாவைப் பார்க்கும் போதெல்லாம் ரேஷ்மியைப் பற்றி மறக்காமல் கேட்டுக் கொள்வான்.

ரேஷ்மி அவங்கள விட்டுத் தள்ளி வந்தது அவளை ரொம்பவே பாதிச்சுது. தன்னோட பெஸ்ட் ஃபிரண்டையும், தான் காதலிக்கிறவனையும் பக்கத்துல வெச்சுக்கிட்டும் அவங்க கூட பேசவும் முடியாம, தன்னோட ஃபீலிங்ஸ ஷேர் பண்ணிக்கவும் முடியாம ரேஷ்மி ரொம்பவே தனிமையா ஃபீல் பண்ணா. 

'நான் ஏன் இவ்வளவு லோன்லியா பீல் பண்றேன்? யார்கிட்டயாவது என் மனசுல இருக்கிறதை சொல்ல முடியுமா?' என்று தனக்குத் தானே கேட்டாள். ஆனால் அவளோட ஃபிரண்ட்ஷிப்காகவும், அவங்க காதலுக்காகவும் தன்னோட காதலை முழுசா மறைச்சுக்கிட்டா. ‘அவங்க சந்தோஷமா இருந்தா போதும். என் சந்தோஷம் முக்கியமில்ல’ என்று எப்போதும் போல் இப்போதும் சொல்லிக் கொண்டாள்.

அதோ இதோ என்று கல்லூரியும் முடிந்து விட்டது. பல கனவுகளோடு அந்த கல்லூரிக்குள் அடி வைத்திருந்தவர்கள் எல்லாரும் இப்போது அவர்கள் வாழ்க்கையைப் பார்க்க, அங்கிருந்து சென்று விட்டனர்.

ஜித்தேஷும் காவ்யாவும் அவங்க காதலை இன்னும் அழகா வளர்த்துக்கிட்டாங்க. அடிக்கடி போன் பண்ணிப் பேசுவாங்க, மீட் பண்ணிப்பாங்க. இப்போலாம் அவங்க பியூசர் பத்தி பேசிக்கிறதுக்கே அவங்களுக்கு நேரம் சரியா இருந்திச்சு. ஆனா ஜித்து நடுவுல ஒரு நாள் ரேஷ்மிய பார்த்தான். பட் அவ, “எனக்கு வேலைக்கு டைம் ஆச்சு” என்று சொல்லிவிட்டு சென்றிருந்தாள்.

ரேஷ்மியும் ஒரு நல்ல வேலையில சேர்ந்து தன்னோட லைஃப்ல செட்டில் ஆக முயற்சி பண்ணிட்டு இருந்தா. ஆமா முயற்சி மட்டுமே. அவ மனசுல இருந்த காயம் கொஞ்சம் கொஞ்சமா ஆறிட்டு வந்தாலும், அந்த ஞாபகங்கள் மட்டும் அவளை விட்டுப் போகல. 

'அந்த நாட்கள்... ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு கஷ்டமா இருந்துச்சு?' என்ற கேள்விக்கான பதில் மட்டும் அவளுக்கு கிடைக்கவில்லை.

என்னத்தான் காவ்யாவும், ஜித்துவும் லவ் பண்ணாலும் கூட, ஜித்து அடிக்கடி ரேஷ்மிய பத்தி காவ்யாக்கிட்ட கேட்டுட்டே இருப்பான். “அவளுக்கு என் மேல எதுவும் கோவமா? உன்ன லவ் பண்ணி உன்ன அவகிட்ட இருந்து பிரிச்சிட்டேன்னு திங் பன்றாளா?” என்றான்.

“என்ன பேசுறீங்க ஜித்து? ரேஷு எல்லாம் அப்படி நினைக்கிற ஆளே கிடையாது. இப்போ அவ கெரியர்ல போகஸா இருக்கா. ஈவன் நம்ம சேர்ந்ததுக்கு ரீசன்னே அவத்தான” என்றாள் காவ்யா.

அதன் பின் இது பற்றி காவ்யா ரேஷ்மியிடம் சொல்ல, ஏனோ அவர்களுக்குள் மீண்டும் மீண்டும் தன்னுடைய பேச்சு வளர்வது சரியாக படவில்லை. அதனால் அதன் பின் ரேஷ்மியும் அவர்களுடன் நன்றாக பேச முயற்சித்தாள்.

காவ்யாவும் ஜித்தேஷும் அடிக்கடி ரேஷ்மிக்கு போன் பண்ணிப் பேசுவாங்க. அப்போவும் ரேஷ்மி வெளியில சந்தோஷமா இருக்கிற மாதிரிதான் பேசுவா. "சூப்பரா போய்ட்டு இருக்கு காவ்யா. நீ எப்படி இருக்க?"ன்னு கேட்பா.

இப்படி அழகாய் சென்றுக் கொண்டிருந்த ஜித்தேஷ் காவ்யா காதலில் மீண்டும் ஒரு மிகப்பெரிய புயல் வீசியது.

அன்று வேலை முடிந்து ரேஷ்மி சற்று சோர்வாக வீட்டுக்குள் வந்தாள் அப்போது காஷ்வி ரேஷ்மிக்கு கால் செய்திருந்தாள்.

“என்னாச்சு? வழக்கமா நைட் தான கால் பண்ணுவா? இப்போ என்ன இப்பவே கூப்டிருக்கா” என்று யோசித்தப்படித்தான் அழைப்பை எடுத்து காதில் வைத்தாள்.

"ரேஷு, எனக்கு ஒரு பெரிய பிரச்சனை. வீட்ல எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் பாக்குறாங்க. நான் ஜித்தேஷை விட்டுக் கொடுக்க மாட்டேன்ன்னு சொன்னா அவங்க கேட்க மாட்டேங்குறாங்க. அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்காரு. வேற ஒரு நல்ல இடத்துல சம்பந்தம் வந்துருக்குன்னு சொல்றாங்க." என்று இவளை பேச விடாது அவள் அழுது தீர்த்தாள்.

ரேஷ்மிக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. ஒரு பக்கம் தன்னோட ஃபிரண்ட் கஷ்டப்படுறான்னு வருத்தமா இருந்தாலும், இன்னொரு பக்கம் ஜித்தேஷோட நிலைமைய நினைச்சு அவளுக்குப் பாவமா இருந்துச்சு. 

'என்ன பண்றதுன்னு எனக்குத் தெரியல. ரெண்டு பேருமே கஷ்டப்படுறாங்களே. நான் யாரை தேற்றது?' என்பதுத்தான் அந்த நொடி அவளுக்கு தோன்றியது. ஏனெனில் அந்த நொடி உண்மையான ஒரு தோழியாய் அவர்கள் காதல் சேர வேண்டும் என்று மட்டுமே யோசித்தாள்.

"நீ கவலைப்படாத காவ்யா. நான் ஜித்தேஷ்கிட்ட பேசுறேன்" என்று அழுத்திக் கூறினாள். ஏனோ அவள் குரலில் தெரிந்த உறுதி, அவளை சற்று தேற்றியது.

ரேஷ்மி உடனே ஜித்தேஷுக்கு காசல் செய்தாள். காவ்யா சொன்ன விஷயத்தை அவனிடம் கூறினாள். அதைக்கேட்டு அவனுக்கு அத்தனை அதிர்ச்சி. ஏனோ அதுவரைக் கூட கெரியர், வேலை என்று யோசித்திருந்தவனுக்கு, இப்போது காதல் மட்டுமே கண் முன் வந்து நின்றது.

உள்ளுக்குள் ஒரு வித பயமும் சேர்ந்து வந்தது. அது அவன் குரலிலேயே தெரிந்தது. "நான் என் காயுவ விட்டுக் கொடுக்க மாட்டேன் ரேஷு. அவ இல்லாம என்னால இருக்க முடியாது. அவங்க வீட்ல என்ன பிரச்சனைன்னு தெரியல. நான் போய் அவங்க அப்பாகிட்ட பேசட்டுமா?" என்ற அவன் குரலில் இருந்த பதட்டம் ரேஷ்மிக்கு புரிந்தது.

ரேஷ்மி அமைதியா ஜித்தேஷ் பேசுறதை கேட்டுக்கிட்டிருந்தா. அவனோட காதல் எவ்வளவு ஆழமானதுன்னு அவளுக்கு நல்லாவே புரிஞ்சுது. ஆனா இந்த விஷயத்துல அவ என்ன பண்ண முடியும்னு அவளுக்குத் தெரியல. 

'நான் என்ன பண்ணாலும் அது சரியா வருமான்னு தெரியலையே.' என்று தனக்குள்ளே சில நொடிகள் யோசித்தாள்.

"எனக்கு கொஞ்சம் டைம் கொடு ஜித்து. நான் காவ்யா வீட்ல பேசிப் பார்க்கிறேன்"ன்னு ரேஷ்மி  கூறினாள்.

“இல்ல ரேஷ்மி நானே பேசுறேன். நீயும் எனக்காக எவ்வளவுத்தான் பண்ணுவ. இப்போ அப்பாக்கு உடம்பு கொஞ்சம் சரியில்ல. இல்லன்னா, எங்க வீட்டுல இப்பவே பேசியிருப்பேன்” என்றான்.

“எனக்கு புரியுது ஜித்து. இதுல எனக்கு ஒன்னும் இல்ல. நான் பேசிப் பார்க்குறேன். முடியலன்னா, நீங்க என்னப் பண்ணலாம்னு யோசிங்க” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

அடுத்த நாளே ரேஷ்மி காவ்யாவோட வீட்டுக்குப் போனா. அவங்க அம்மா அப்பாகிட்ட ரொம்ப நேரம் பேசினா. காவ்யாவும் ஜித்தேஷும் ஒருத்தரை ஒருத்தர் எவ்வளவு விரும்புறாங்கன்னு எடுத்துச் சொன்னா. அவங்க ரெண்டு பேரோட எதிர்கால கனவுகளைப் பத்தி பேசினா. ஆனா அவங்க கேட்கிற மாதிரி இல்ல. 

"எங்க பொண்ணுக்கு நாங்க நல்ல இடத்துலதான் கல்யாணம் பண்ணி வைப்போம். இதுக்கு மேல இத பத்தி பேசுறதுல எங்களுக்கு எந்த விருப்பமும் இல்ல. என் பொண்ணோட பிரண்டா மட்டும் இங்க வர்றதுன்னா வா. இல்லன்னா நீ வரவே வேண்டாம்” என்று காவ்யாவுடைய அப்பா சொல்லிவிட, அதற்கு மேல் ரேஷ்மிக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை.

காவ்யாவை வலியோடு பார்த்து விட்டு வந்திருந்தாள். இப்போது ஜித்தேஷ் ரேஷ்மியிடம் வந்து நின்றான். அவனுக்கு ஏனோ தன்னால் ரேஷ்மியும் அவமானப்பட்டது கவலையாய் இருந்தது.

‘இதுக்குத்தான் நான் உன்ன போக வேண்டாம்னு சொன்னேன். இப்போ பாரு என்னால உன் பேரும் கெட்டுப் போச்சு” என்று அத்தனை கவலையாய் கூறினான். ஏனோ அவனுடைய இந்த அக்கறைத்தான் அவளை இன்னும் கூட அவனை மறக்க விடாமல் சதி செய்தது.

இருந்தும் கூட, “ச் என்ன விடுங்க நீங்க அடுத்து என்னப் பண்ணலாம்னு இருக்கீங்க?” என்று கேட்டாள். “வேற வழியே இல்ல ரேஷ்மி. பேசாம நான் காவிய ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு யோசிக்கிறேன். அதுக்கப்புறம் பொறுமையா ரெண்டு வீட்டுக்கும் எக்ஸ்பிளைன் பண்ணிக்கலாம்” என்றான்.

“ம் அதுவும் சரித்தான். நீங்க காவ்யாக்கிட்ட பேசிட்டீங்களா?” என்று ரேஷ்மி கேட்க, “இல்ல இனிமேல் தான் பேசனும்” என்றவன் அதன் பின் காவ்யாவை தனியே வரவழைத்து பேசினான்.

அவளும் சம்மதம் என்று சொல்லிவிட்டுத்தான் சென்றாள். ஆனால் சொல்லிவிட்டு சென்றவள் அதன் பின் இருவருடைய அழைப்பையும் ஏற்கவில்லை. அவள் வீட்டில் என்ன நடந்ததோ, காவ்யா வேற வழியில்லாம வீட்ல சொல்ற பையன கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டா. 

இந்த விஷயம் ஜித்தேஷுக்குத் தெரிஞ்சதும் அவன் ரொம்ப உடைஞ்சு போய்ட்டான். ரேஷ்மி அவன்கிட்ட பேசப் போனப்போ அவன் ரொம்ப கோவமா இருந்தான். ஆம் கோவம் தான். யார் மேல் அந்த கோவத்தை காட்ட என்றே தெரியவில்லை.

கிட்ட தட்ட நான்கு வருட காதல், இப்படி அவன் கையை விட்டு செல்லும் என்று அவன் நினைத்திருக்கவில்லை.

“ஜித்து எனக்கு உங்க கஷ்டம் புரியுது” என்று ரேஷ்மி சொல்லும் முன்னே, "எல்லாம் உன் தப்புதான் ரேஷ்மி. நீ மட்டும் அன்னைக்கு எனக்கு ஹெல்ப் பண்ணலைன்னா நான் என் மனசுல இருந்த விருப்பத்த அப்படியே மறந்திருப்பேன். நீ எதுக்கு நான் சொன்னதும் அவ கிட்ட எனக்காக பேசுன. போயிடு" என்று கத்தி விட்டான். 

அவன் வார்த்தைகள் ரேஷ்மியோட மனதை இன்னுமே ஆழமாய் பாதித்தது, 

'நான் என்ன தப்பு பண்ணினேன்? நான் அவங்க சந்தோஷத்துக்காகத்தானே எல்லாத்தையும் செஞ்சேன். இப்ப நான் குற்றவாளியா?'

ரேஷ்மிக்கு அந்த வார்த்தைகள் ரொம்ப பெரிய வலியைக் கொடுத்தது. தன்னோட காதலை மறைச்சு அவங்க ரெண்டு பேரும் சேர்றதுக்கு ஹெல்ப் பண்ணியும் கடைசியில தான் தப்புன்னு சொல்றாங்களேன்னு அவள் சோர்ந்துத்தான் போனாள்

'நான் என்னதான் பண்ணாலும் எல்லாம் தப்பாதான் முடியுதா? ஒரு வேள நான் தான் அவங்கள பார்த்து கண்ணு வெச்சிட்டேன்னா? அவங்க சந்தோஷத்த பார்த்து நான் பொறாமைப்பட்டுட்டேன்னா?” என்று தனக்குள்ளே ஏதேதோ யோசித்தாள்.

ஆனா அவ எதுவும் பேசல. அமைதியா அவன் கோவமெல்லாம் தீர்ற வரைக்கும் அங்கேயே நின்னா. அவ கண்ணுல இருந்து கண்ணீர் மட்டும் அமைதியா வழிஞ்சுட்டு இருந்துச்சு. 

'நான் அழுதாக்கூட யாருக்கும் தெரியாதே.' என்று அவள் மனம் சத்தமின்றி ஊமையாய் அழுதது.

அவன் கொஞ்சம் அமைதியானதும் ரேஷ்மி மறுபடியும் "நான் எதையும் வேணும்னு பண்ணல ஜித்து. எனக்கு உன்னையும் காவ்யாவையும் ரொம்ப பிடிக்கும். நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்னுதான் நான் நினைச்சேன். ஆனா விதி வேற மாதிரி இருக்கு போல." என்று அவள் சொல்லும் போதே அவள் குரலில் அத்தனை வலி தெரிந்தது.

“நீ சொன்னது மாதிரி நானே தப்பா இருந்துட்டு போறேன். என்ன மன்னிச்சிடு” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள். அவள் சென்ற பின் தான், காவ்யாவின் மீதிருந்த கோவத்தை ரேஷ்மியிடம் காட்டியதே அவனுக்கு புரிந்தது.

“ஐயோ! நான் ஏன் ரேஷுக்கிட்ட இப்படி பேசுனேன்” என்று தன்னைத் தானே நொந்துக் கொண்டான். ஒரு பக்கம் காதல் தோல்வி. மறு பக்கம் இத்தனை நாள் நல்ல தோழியாக இருந்தவளை காயப்படுத்திய வலி என்று அவனை இன்னும் இன்னும் இறுக்கமாக்கியது.

அதன் பின் காவ்யாவோட கல்யாணத்துக்கு முன்னாடி ஜித்தேஷும் ரேஷ்மியும் தனியா சந்திச்சாங்க. ரெண்டு பேரும் எதுவும் பேசிக்காம ரொம்ப நேரம் அமைதியா இருந்தாங்க.

“ஐயம் சாரி ரேஷு. நான் உன்கிட்ட அன்னிக்கு அப்படி பேசியிருக்க கூடாது. உண்மையாவே அதுக்காக நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்” என்றான்.

அதில் ரேஷ்மிக்கு ஒரு நொடி ஆச்சர்யமாய் இருந்தது. ஏனெனில் அவனே எத்தனை பெரிய கஷ்டத்தில் இருக்கிறான். அந்த நொடியிலும் அவன் தனக்காக யோசித்தானா? இப்போது கூட அதற்காகத்தான் அவளை அழைத்தானா?

அவள் அந்த குழப்பத்திலேயே நின்றாள். இருவரும் அடுத்த சில நொடிகள் வேறு எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அவங்க கண்ணுல இருந்த வலியும் வேதனையும் அவங்க பேசாமலே ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சுக்கிட்டாங்க. 

ஜித்தேஷ் காவ்யாவைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட அவளிடம் பேசவில்லை. அவனுக்கு ரேஷ்மியை கஷ்டப்படுத்திவிட்டோம் என்று மட்டும் தெளிவாய் புரிந்தது.

“என்ன நீயும் விட்டுட்டு போக மாட்டத்தான ரேஷு?” என்று கேட்டான். அந்த வார்த்தையில், ரேஷ்மி மேலும் உடைந்துத்தான் போனாள்.

மனம் அவளையும் மீறி, “உங்கள விட்டுட்டு போக முடியாமத்தான ஜித்து. இப்பவும் இங்க வந்து நின்னுட்டு இருக்கேன் என்று தனக்குள்ளே சொல்லியவள் எதுவும் பேசவில்லை.

அந்த வாரத்திலேயே காவ்யாவுக்கு கல்யாணம் நடந்து முடிஞ்சது. ஜித்தேஷ் அந்த நாளைக் கடக்க மிகவும் கஷ்டப்பட்டான். நான்கு வருட காதல் முடிவுக்கு வந்திருந்தது. ரேஷ்மி சென்றிருந்தாள்.

ரேஷ்மியைப் பார்த்ததும் காவ்யா ஓடி வந்து கட்டிக் கொண்டாள். “என்ன நீயாச்சும் புரிஞ்சிக்கோ ரேஷு. பிராமிஸா நான் ஜித்துக்கு துரோகம் பண்ணனும்னு நினைக்கல. ஆனா அம்மாவும், அப்பாவும் உயிரோடவே இருக்க மாட்டேன்னு சொல்லி என்ன பிளாக்மெயில் பண்ணிட்டாங்க” என்றாள்.

தோழியைப் பார்க்கவும் அவளுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. “ச் அழாத நடந்தத மாத்த முடியாது. நீ சந்தோஷமா இருந்தா எனக்கு போதும். ஈவன் ஜித்துக்கும் கூட, நீ சந்தோஷமா இருக்கிறதுத்தான் வேணும்” என்றாள்.

ஏனோ தோழியுடன் அன்றைய நாள் இருந்து அவளைத் தேற்றியவளுக்கு இப்போது ஜித்தேஷை நினைத்து அத்தனை கவலையாய் இருந்தது. என்னத்தான் கூறினாலும் தோழியாவது அவளுடைய புது வாழ்க்கைக்கு தன்னை தயார் செய்து விட்டாள். எப்படியும் அவள் வாழ்க்கையை அவள் பார்த்துக் கொள்வாள். ஆனால் ஜித்தேஷ்?

திருமணத்தில் இருந்து வந்தவள் நேரே சென்றது என்னவோ ஜித்தேஷிடம் தான். ஒரு மாத தாடியுடன் நின்றிருந்தான். அவளைப் பார்தத்தும் தன் சோகத்தை மறைத்து சிரிக்க முயற்சித்தான். ஆனால் அவனால் அது முடியவில்லை.

கஷ்டப்பட்டு கண்ணீரை உள்ளடக்கியவன், “காயூ. இல்ல உன் பிரண்ட் மேரேஜ் நல்லப்படியா முடிஞ்சிதா?” என்று கையில் இருந்த கூல்ட்ரிங்க்ஸை இறுக்கிப் பிடித்தப்படி கேட்டான்.

அவன் தன் வலியை மறைத்து சிரிப்பதை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது. இந்த வலியைத்தானே அவள் ஒவ்வொரு நொடியும் அனுபவித்துக் கொண்டிருந்தாள். இப்போது, அவளின் ஜித்து அந்த வலியில் இருப்பதை அவளால் பார்க்கவே முடியவில்லை.

எதைப் பற்றியும் யோசிக்காது வேகமாய் ஓடி சென்று அவனை இறுக்கமாய் கட்டிக் கொண்டாள் ரேஷ்மி. அடுத்த நொடி அவளை மேலும் இறுக்கமாய் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்திருந்தான் ஜித்தேஷ். அந்த அணைப்புக்குள் இருந்தது வெறும் அன்பு மட்டுமே. ஏனோ என்ன முயன்றும் அவனால், தன் அழுகையை இழுத்துப் பிடிக்க முடியவில்லை.

“நான் ரொம்ப அன் லக்கி ரேஷு. நான் உயிருக்கு உயிரா நேசிச்ச பொண்ண கூட என்னால என் கூட வச்சிக்க முடியல” என்றவன் அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு சிறுவனாய் அவள் தோளில் முகம் புதைத்தான்.

அவளோ எதுவுமே பேசவில்லை. அவனை தன் தோள் சாய்த்துக் கொண்டாள். அவனுக்காக அவனுக்கே அவனுக்கான அவன் மீதான காதல் இன்னமும் அப்படியேத்தான் அவளிடம் இருந்தது. அவன் கேட்டால் அடுத்த நொடி அத்தனையையும் அள்ளி கொடுத்து விடுவாள்.

'நான் உன்ன இப்பவும் லவ் பண்றேன் ஜித்து . ஆனா இந்த உண்மையை உன்கிட்ட சொல்ல எனக்கு தைரியம் இல்ல. இப்போ இல்ல நானா இத எப்பவும் சொல்ல மாட்டேன். ஆனா ஒரு பிரண்டா உன் கூட எப்பவுமே லைப் லாங் இருப்பேன்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவளும் அவனை அணைத்துக் கொண்டாள்.

“முதல் பார்வையில் மின்னல் ஒன்று,

மனதை அறைந்த விந்தை இதுவா?

அவன் சிரிப்பினில் தொலைந்த இதயம்,

இதுதான் காதலின் தொடக்கமா?

அவள் தோழியின் தோள் சாயும் நிழல்,

அவன் விழிகள் அவளைத் தேடுதே.

என் காதல் மட்டும் கானல் நீரோ,

நெஞ்சுக்குள் புகைந்து வாடுதே.

மறைத்தேன் என் காதல் ரகசியத்தை,

தோழியின் சந்தோஷம் பெரிதென்று.

அவர் இணைந்து சிரிக்கும் போதெல்லாம்,

உள்ளுக்குள் வலிக்கும் ஒரு நொடி இன்று.

அவன் கேட்கிறான் அவள் மனதை,

நான் பொய்யான பதில்கள் உரைக்கிறேன்.

என் காதல் ஒருதலைப் பயணமோ,

கண்ணீரை மட்டும் சுமக்கிறேன்.

அவள் வீட்டின் கட்டளை ஒரு சுவரோ,

அவர் காதல் தடுமாறும் நேரம்.

நான் தோழமையின் கரம் நீட்டுகிறேன்,

என் காதல் சொல்ல ஒரு வார்த்தை ஏது?

கண்ணீரும் மௌனமும் தோழனாக,

என் இதயம் தனிமையில் துடிக்கிறது.

அவர் வாழ்வில் நான் ஒரு நிழலோ,

இதுதான் என் காதலா?” 

இந்த நொடி அவள் காதலை சொன்னால், ஜித்துவும் கூட அவளை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் காதல் என்பது தானாய் ஒருவர் மீது ஒருவருக்கு உருவாக வேண்டும். சூழ்நிலை அக்காதலை உருவாக்க கூடாது. ரேஷ்மிக்கும் கண்டதும் அவன் மீது உருவான காதல், இதன் பின் ஜித்துவுக்கு, அவள் மீது உருவாகலாம்? ரேஷ்மி ஜித்துவை காதலித்ததை விட, இன்னும் கூட அதிகமாய் ஜித்து ரேஷ்மியை காதலிக்கலாம்? காலம் எதை வேண்டுமானாலும் மாற்றும். அப்படி இருக்க? இவர்களின் வாழ்க்கையிலும் நிச்சயம் ஒரு அழான மாற்றத்தை உருவாக்கும் என்று நாமளும் நம்புவோம். 

இந்த கதை எப்படி இருந்திச்சுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. இந்த மாதிரி வாரம் ஒரு சிறு கதையும் இங்க வரும். சோ நீங்க கொடுக்கிற கமெண்ட் அண்ட் ரேட்டிங் வச்சித்தான். அடுத்தடுத்து கதைகள் கொடுக்க முடியும். சோ மறக்காம உங்க கருத்து எதுவா இருந்தாலும் சொல்லுங்க. உங்க கமெண்ட்ஸ்காக வெயிட்டிங். அப்புறம் எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க...

முற்றும் 🙏🏻

Comments   9

*** இதுதான் காதலா? 💞 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***