“ஐயோ கடவுளே, இவன் ஏன் இப்படி என்னையே முறைச்சுப் பாக்குறான்?” என்று ஸ்ரீநிதி தனது மேக்கப்பைச் சரிசெய்து கொண்டிருந்தபோது, கண்ணாடி வழியே எதிரில் தெரிந்த தீரனைப் பார்த்தாள்.
அவனோ கேமராவுக்கு முன்னால் நின்று, அவளது ஒவ்வொரு அசைவையும் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் என்னவோ சாதாரணமாய் நின்றிருப்பது போல் தான் தோன்றியது. ஆனால் இவளுக்குத்தான் பதட்டம்.
இந்த உலகமே போற்றும் சூப்பர் ஸ்டார் ஹீரோ அவன், ஆனால் இவனைப் பற்றிப் பல காதலும், கசப்பான வதந்திகள் என தினமும் செய்தி தாளில் அவனைப் பற்றிய செய்திகள் தான் உலவுகின்றது.
இந்திய சினிமாவில் முக்கிய இடம் பிடித்த பாலிவுட் உலகம் அது. அதிலும் பாலிவுட் நகரம் என அழைக்கப்படும் மும்பை நகரம். அங்கே புகழின் உச்சியில், ஒரு நட்சத்திரமாய் ஜொலித்துக் கொண்டிருந்தான் தீரன்.
அவன் ஒரு சாக்லேட் பாய், ஒரு ஆக்ஷன் ஹீரோ, ஒரு ரொமான்டிக் கிங், இப்படி பல பெயர்கள் உண்டு. அந்தந்த சூழ்நிலைக்கேற்ப அவன் அந்த கதாப்பாத்திரமாகவே மாறி விடுவான். திரையில் மட்டும் அல்ல நிஜத்திலும் அவன் அப்படித்தான். அவனது வசீகரமான புன்னகையும், கண்கள் பேசும் ஜாலமும் கோடிக்கணக்கான ரசிகைகளைத் தன் வசப்படுத்தியிருந்தது. பல பெண்களின் ட்ரீம் பாய், கிரஸ் இப்படி சொல்லிக் கொண்டே செல்லலாம்.
ஆனால் தீரனுக்கு காதல், திருமணம் என்பதிலெல்லாம் சுத்தமாக நம்பிக்கையில்லை. “காதல் ஒரு மாயை, திருமணம் ஒரு ஒப்பந்தம்” இதுதான் அவனின் திடமான எண்ணம்.
அதே போல் தான் அவனுடைய இந்த பிளே பாய் இமேஜ் அதை மேலும் உறுதிப்படுத்தியது. ஒரு நாள் தீரனுடன் நேரத்தை செலவிட உலகின் பல மூலைகளில் இருந்தும் இளம்பெண்கள் காத்திருந்தனர். ஆனால் அவனுக்கோ, அவர்கள் வெறும் ரசிகர்கள். அவ்வளவுதான்.
இத்தனை ஏன் பல பிரபல நடிகைகளில் ஆரம்பித்து கோடீஸ்வரர்களின் மகள்கள் கூட அவனை அடைய நினைத்தனர். ஏனோ அவனுக்கு வாழ்நாள் முழுவதும் ஒருவருடன் வாழும் எண்ணம் எல்லாம் கிடையவே கிடையாது. அவனைப் பொறுத்தவரை அத்தனைப் பேரும் பாஸிங் கிளவுட் தான்.
அந்த சமயத்தில், தான், அவனின் மனதிற்குள் மட்டும் அல்லாது, அந்த பாலிவுட் திரைப்பட துறைக்குள்லும் ஒருவள் நுழைந்தாள். அவள் பெயர் ஸ்ரீநிதி. தீரன் படத்தின் அறிமுக நாயகி. பெரிய கனவுகளுடன், ஆனால் சற்றும் திரைத்துறை பற்றிய அனுபவமில்லாமல், சினிமாவின் பிரம்மாண்ட உலகத்திற்குள் அடியெடுத்து வைத்தாள்.
ஸ்ரீநிதி ஒரு பக்கா சாது. எளிதில் பயந்துவிடக்கூடிய குணம் அவளுக்கு. அமைதியும், அடக்கமும் அவளை அடையாளப்படுத்தும். பொதுவாகவே தீரனுடைய படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு எல்லாம் அத்தனை எளிதில் கிடைத்து விடாது. இதுவரை அவன் அறிமுக நாயகியுடன் நடித்ததும் இல்லை. ஆனால் தீரனாக அப்படி ஒன்றும், புது முக நடிகையுடன் நடிக்க மாட்டேன் என்று சொல்லியதெல்லாம் கிடையாது.
ஸ்ரீநிதிக்கு இது முற்றிலும் எதிர்பாராத ஒரு வாய்ப்பு. படத்தின் இயக்குனர், அவளைப் பார்த்த உடனே, அவள் தான் இந்த படத்துக்கு பொருத்தமாய் இருப்பாள் என்று முடிவு செய்ததால், அந்த சினிமாவின் கருப்பு பக்கங்களுக்குள் செல்லாமலே, இத்தனைப் பெரிய வாய்ப்பு அவளுக்கு கிடைத்திருந்தது.
ஆனால் தீரனைப் பற்றி ஏற்கனவே பல வதந்திகளைக் கேட்டிருந்ததால், அவன் மீது சிறிதாய் கூட அவளுக்கு நம்பிக்கை இல்லை. அவன் சாதாரணமாக அவளைப் பார்த்தால் கூட அவளுக்கு அத்தனை பயமாய் இருந்தது. அதிலும் பிளே பாய் என்ற பட்டம், அவளை மேலும் அவனிடம் இருந்து விலக வைத்தது.
“ஒரு சூப்பர் ஸ்டாருடன் நடிக்கப் போகிறோம்” என்ற பரபரப்பும், அதே நேரம் “அவர் ஒரு பிளே பாய்” என்ற பயமும் ஸ்ரீநிதியின் மனதை ஆட்கொண்டிருந்தது.
இப்போதும் அவர்களுடைய முதல் நாள் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது நினைவில் இருந்தது. ஸ்ரீநிதி தன்னுடைய காட்சிக்காகத் தயாராகிக் கொண்டிருந்தாள். பெரிதாக மேக்கப் எதுவும் இல்லாமல், சாதாரண ஒரு கிராமத்துப் பெண்ணுடைய தோற்றம் என அவள் தனித்துத் தெரிந்தாள்.
அந்த படத்தின் கதாப்பாத்திரமும் அதுத்தான். அது ஸ்ரீக்கு நன்றாகவே பொருந்திப் போயிருந்தது. அவளே முதல் நாள் என்பதால் பதட்டமாய் தான் இருந்தாள். அப்போது அங்கே தீரன் வந்தான்.
அவன் வந்ததும் ஒட்டுமொத்த செட்டும் ஒரு கணம் நிசப்தமானது. அவனது வரவு அங்கிருந்த அத்தனைப் பேரையும் சிறு பதட்டத்துக்கு உள்ளாக்கியது. சக நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என எல்லோரும் அவனுக்கு ஒரு மரியாதையைக் கொடுத்தனர்.
ஆனால் அவனோ பதிலுக்கு யாரையும் கண்டுக்கொள்ளாது விறுவிறுவென்று நடந்து வந்தான். ஏனோ அவனைப் பார்த்ததும் ஸ்ரீநிதியின் மனதில் மேலும் ஒரு வித பதட்டம் எழுந்தது. அதில் அவளும் கூட அவனையேத்தான் பார்த்தப்படி நின்றிருந்தாள்.
தீரன் அங்கே வந்ததும், எதார்த்தமாய் ஸ்ரீநிதியைப் பார்த்தான். முதல் பார்வையிலேயே அவனுக்குள் ஏதோ ஒரு மின்னல் வெட்டியது. அவளது அமைதியான கண்கள், குழந்தைத்தனமான முகம், எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத அவள் அழகு. இவை அனைத்தும் அவனது கவனத்தை கவர்ந்தது.
அவளையே மேலிருந்து கீழாக பார்த்தான். அவனுக்குள் இனம்புரியாத புது உணர்வு. இதுவரை அவன் பல அழகான பெண்களைப் பார்த்திருக்கிறான், ஆனால் ஸ்ரீநிதி அவனுக்குள் நிச்சயம் மிகப்பெரிய புயலை ஏற்படுத்தியிருந்தாள். அதிலும் இதுவரை அவனைப் பார்த்தாலே சிறு ஆர்வத்துடன் பார்க்கும் பெண்களைத்தான் பார்த்திருக்கிறான்.
இப்படி அவள் பயந்து மிரண்டு, அவனை பார்த்துக் கொண்டிருப்பது அவனுக்குள் சிறு சுவாரஸ்யத்தை கொடுத்தது. அது அவன் முகத்தில் சிறு புன்னகையையும் கொடுத்தது.
அந்த புன்னகையுடன் அவளருகில் வந்தான். அதில் இன்னுமே ஸ்ரீக்கு பயம் கூடியது.
“இப்போ எதுக்கு இங்க வராரு” என்பது போல் அவள் அவனைப் பார்க்க, அவ்னோ “ஹாய் ஸ்ரீநிதி, நான் தீரன். இது உங்களோட முதல் படம்னு கேள்விப்பட்டேன். ஆல் தி பெஸ்ட்!” என்று தன் கையை நீட்டினான்.
அவளுக்கு அது எத்தனைப் பெரிய அதிர்வை ஏற்படுத்தியதோ? ஆனால், நிச்சயம் அங்கிருந்த டைரக்டருக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. இதுவரை அவனாக ஒருவரிடம் சென்று பேசி அவர் பார்த்ததே கிடையாது.
“ஹலோ” என்று அவன் புருவம் உயர்த்த, இப்போது ஸ்ரீநிதி சிறு தயக்கத்துடன் கையைப் பற்றினாள்.
ஏனோ அவளைப் போலவே அவளுடைய அந்த பிஞ்சு கரங்களும் அத்தனை மென்மையாய் இருந்தது. அதில் பூவை தொட்டு பார்ப்பது போல், சிறு அழுத்தம் கொடுத்து கை குலுக்கினான். அவனது தொடுதலில் இங்கே இவளுக்குள் ஒரு சின்ன அதிர்வு.
“தேங்க் யூ தீரன்,” என்றாள் மெல்லிய குரலில். அவனின் மீது பயம், நல்ல அபிப்ராயம் இல்லை என்றாலும் கூட, அவனது புகழுக்குரிய பிம்பமும், அவளைச் சுற்றியிருந்த அத்தனைப் பேரும் இருவரையும் பார்த்திருப்பது, அவளை சற்று சங்கடப்படுத்தியது.
ஆனால் அவனோ அவள் கரத்தை இன்னும் விடாது, “உங்க கூட நடிக்கிறதுல சந்தோஷம்,” என்றான் தீரன்.
“ஆ.ங்” என்றவள் தன் கரத்தை விலக்கி கொள்ள நினைக்க, அவளது தயக்கம் புரிந்தாலும் ஏனோ அவள் கரத்தை விட மனம் வரவில்லை.
இருந்தும் அவளை மேலும் கஷ்டப்படுத்தாமல், “நம்ம சீன்ஸ் எல்லாம் நல்லா வரும்னு நம்புறேன்.” என்றப்படி கரத்தை விலக்கிக் கொண்டான்.
அதில் ஒரு சிறு புன்னகையுடன் தலையாட்டினாள். அவளது கண்களில் இன்னும் அந்த பயம் குடியிருந்தது.
“இவர பத்தி என்னென்னவோ சொன்னாங்க? ஆனா இவர் பார்க்க ரொம்ப ஜோவியல்லா தெரியுது” என்று அவளின் ஒரு மனம் சொல்ல, “ஹேய் அவன பத்தி கேள்விப்பட்டிருக்கத்தான. பொண்ணுங்க விஷயத்துல அவன் ரொம்ப மோசமானவன்” என்று அவளின் இன்னொரு மனம் எச்சரித்தது.
ஆனால் தீரனோ அவளிடம் சகஜமாகப் பழக ஆரம்பித்தான். ஷூட்டிங் இடைவேளைகளில் அவளுடன் பேச முயற்சித்தான். அவள் கேட்காமலஏ அவளுக்குத் தேவையான பல உதவிகளைச் செய்தான்.
அன்றும் அப்படித்தான் அவளோ, என்ன செய்வதென்று தெரியாது நகத்தை கடித்து துப்பிக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் அப்பட்டமான பதட்டம். அதை கவனித்தாலும், முதலில் அவன் நடிக்க வேண்டிய காட்சிகளை நடிக்க ஆரம்பித்திருந்தான்.
நொடிகள் கூட கூட அவள் மேலும் மேலும் நெற்றியில் வடிந்த வியர்வையை துடைத்தப்படி நிற்பதைப் பார்த்து நெற்றி சுருக்கினான். அதில், பாதி காட்சியிலேயே, “ஐ நீட் சம் பிரேக்” என்று சொல்லிவிட்டு ஸ்ரீயின் பக்கம் வந்தான்.
அவளோ அவன் வந்ததை கூட உணராது அப்படியே நின்றிருந்தாள். “ஸ்ரீநிதி, என்னாச்சு? ஏன் பதட்டமா இருக்கீங்க?” என்று அவளருகில் வந்து கேட்டான் தீரன்.
அவனைப் பார்த்ததும் மேலும் பயந்து அவள் பின்னே நகர, அங்கிருந்த பெஞ்ச் பட்டு கீழே விழ சென்றாள். “ஹேய் பாத்து” என்று அவள் இடையோரம் கைக் கொடுத்து தாங்கிப் பிடித்தான்.
அவளுமே பதட்டத்தில் அவனுடைய சட்டையை இறுக்கிப் பிடித்திருக்க, இங்கே இவனுக்குத்தான் மனம் என்னமோ செய்தது. எத்தனை பெண்களை தொட்டு தூக்கியிருக்கிறான். ஆனால் இவள் அவனை மொத்தமாய் என்னமோ செய்தாள்.
ஏனோ அவளை இப்படியே வைத்துக் கொள்ள சொல்லி ஒரு மனம் ஆசைப்பட்டது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாது, அவள் முகத்தையே சில நொடிகள் பார்த்தான்.
அதற்குள் அருகில் கேட்ட சத்தத்தில் இவ்வுலகம் வந்து, வேகமாய் அவனை விட்டு விலகி நின்றாள். இப்போது அவள் முகத்தில் மேலும் பதட்டம் கூடியது.
“ரிலாக்ஸ் ஸ்ரீ. இப்போ எதுக்கு இவ்ளோ டென்சன். என்னென்னு சொன்னா, கண்டிப்பா என்னால முடிஞ்ச உதவிய பண்ணுவேன்” என்றான்.
அவளுக்குமே இப்போது சிறு உதவி தேவையாய் இருக்க, “இல்ல, அது எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு தீரன். இந்த டயலாக்ஸ் எல்லாம் என்னால பேச முடியுமான்னு தெரியல,” என்றாள் ஸ்ரீநிதி சிறு தயக்கத்துடன்.
அதைக் கேட்டதும் அவனுக்கு சிறு புன்னகை அரும்பியது. “போன சீன்ல நீ பேசுன டயலாக் லெவலுக்கு என்னாலையே பேச முடியல. உனக்கு பயமா?” என்றான்.
அவளோ அப்போதும் அப்படியே நிற்க, இப்போது அவள் கையில் இருந்த சீன் பேப்பரை வாங்கிப் பார்த்தான். அவளுக்கு டயலாக் பேசுவதில் எல்லாம் பயம் இருந்திருக்கவில்லை. அது ஒரு காதல் காட்சி. இதுவரை இருவருக்குமா காதல் காட்சி என்று பெரிதாய் வந்தது கிடையாது. இதுவே முதல் காட்சி. இத்தனைக்கும் அவள் அவனின் அருகில் கூட நிற்கப் போவதில்லை.
கேமராவைப் பார்த்துத்தான் பேசப் போகிறாள். ஆனால் அவளுக்கு அதுவே அத்தனை தயக்கமாய் இருந்தது. ஏனோ அந்த தயக்கம் கூட அவனுக்கு அத்தனைப் பிடித்திருந்தது. அதே நேரம், ஏனோ இப்போது அந்த வசனத்தை அவள் தன்னைப் பார்த்து பேச வேண்டும் என்று தோன்றியது.
“இப்போ என்ன? இத்தன பேர் முன்னாடி, உனக்கு இப்படி பேச கூச்சமா இருக்கு அவ்வளவுத்தான?” என்றான்.
அதுத்தான் அவளுக்கும் பிரச்சனை ஆனாலும் அதை சொல்ல முடியாது அவள் தடுமாற, இப்போது அவள் கரத்தைப் பிடித்தான்.
அதில் அவள் அவனைப் பார்க்க, “நான் உனக்கு ஒரு ஐடியா சொல்றேன். அத பாலோ பண்ணு. உனக்கு கண்டிப்பா ஹெசிடேட் பீல் இருக்காது” என்றான்.
“என்ன?” என்று அவள் கேட்க, “நீ சுத்தி இருக்கிறவங்கள பத்தி யோசிக்காம, என்ன பத்தி மட்டும் யோசி” என்றான். “என்ன?” என்று அவள் மேலும் அதிர, அதில் மேலும் அழகாய் சிரித்தான்.
ஏனோ அவனுடைய புன்னகையில் நிச்சயம் வசிய சக்தி இருக்க வேண்டும். இருந்தும் அவள் தடுமாற, அவனோ, “இது ஜஸ்ட் ஆக்டிங் தான். நீ என் கண்ண பார்த்து பேசு. உன்னால முடியும். நீ வேற யாரையும் எத பத்தியும் யோசிக்காத” என்றான்.
அதற்குள் அவளுக்கான காட்சிக்கு நேரமாகியிருக்க, ஸ்ரீயும், “ம்” என்று தலையாட்டியப்படி அங்கு சென்றாள். இப்போது தீரனுமே அவள் பார்வையில் விழும்படித்தான் நின்றான். அவள் முதல் இரண்டு முறை சொதப்ப, இப்போது தீரனைப் பார்த்தாள்.
அவன் கண்களில் இருந்த ஏதோ ஒன்று. அவளையும் அறியாமல் அவனுக்குள் மூழ்கிப் போக, இப்போது அந்த காதல் வசனங்களை எல்லாம் அழகாய், அத்தனை உணர்வுக்குவியலாய் சொல்லி முடித்திருந்தாள். அத்தனைப் பேரும் கைத்தட்ட, அவளுக்கே ஒரு மாதிரி ஆகியிருந்தது. வேகமாய் அங்கிருந்து ஓடியிருந்தாள். அதைப் பார்த்து தீரன் மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டான்.
தீரன் ஒவ்வொரு அடி அவளை நோக்கி எடுத்து வைக்க நினைக்க, ஸ்ரீநிதியோ, அவனை விட்டு விலகவே நினைத்தாள். அவனது எந்த ஒரு முயற்சிக்கும் எளிதில் அவள் அசைந்துக் கொடுக்கவில்லை.
ஏனோ அவனது ஒவ்வொரு அணுகுமுறையையும் அவனை ஒரு பிளே பாயாகவே காட்டியது. அதிலும், அவனது புன்னகை, அவனது உதவி, அவனது பேச்சு இவை அனைத்தும் அவளை அவனிடம் இருந்து மேலும் விலக்கியது. அவனது புகழ், அவனது ரசிகர்கள் கூட்டம், அவனது பெண் தோழிகள் இவை அனைத்தும் ஸ்ரீநிதிக்கு தீரன் மீது மிகப்பெரிய பயத்தைத்தான் உருவாக்கியது.
இதை எல்லாம் தாண்டி அவளுக்கு அவனைப் பிடித்திருக்கிறதா? என்று கேட்டால் அதற்கும் அவளிடம் பதில் இல்லை.
“இவரு என்கிட்ட மட்டும் இல்ல, எல்லா பொண்ணுங்க கிட்டயும் இப்படித்தான் பழகுவாரோ? ஒருவேளை என்னை ஏமாத்தப் பார்க்கிறாரா?” என்று அவள் மனதுக்குள் கேள்வி எழுந்தது. அவளது பயந்த சுபாவமும், தீரன் மீதான அவளது எதிர்மறை எண்ணமும் அவளை அவனிடம் இருந்து ஒரு பெரிய தூரத்திலேயே வைத்திருந்தது.
இப்படி நாட்கள் செல்ல செல்ல, தீரனுக்கு ஸ்ரீநிதி மீதான ஈர்ப்பு அதிகரித்தது. அவனது மனதில் இதுவரை தோன்றாத ஒரு உணர்வு அது. மற்ற பெண்களிடம் அவன் பழகிய விதம் வேறு, ஸ்ரீநிதியிடம் அவன் உணர்ந்தது வேறு.
அதிலும் அவள், அவன் சாதாரணமாக பழகுவதை கூட, ஏற்றுக் கொள்ள மறுப்பது கஷ்டமாக இருந்தாலும், அவனால் அவளை புரிந்துக் கொள்ள முடிந்தது. அவளது மென்மையான குணம், அவளது பயந்த சுபாவம், அவளது இந்த தயக்கம் இது அனைத்தும் அவனுக்குள் ஒரு புதிய தீரனை உருவாக்க ஆரம்பித்தது.
ஆம் இதுவரை கூட அவனைப் பற்றிய வதந்திகளை அவன் பெரிதாய் எடுத்துக் கொண்டது இல்லை. எதற்கும் விளக்கம் கொடுத்தது இல்லை. ஆனால் இப்போது அதை எல்லாம் திருத்திக் கொள்ள நினைத்தான். எப்படி அவள் மீது இத்தனைக் காதல் வந்தது? என்ற கேள்விக்கு நிச்சயம் அவனிடம் பதில் இல்லை. ஆனால், அவள் மனதில் எப்படியாவது இடத்தை பிடிக்க வேண்டும் என்று நினைத்தான்.
“இவளுக்கு எப்படித்தான் என் மனச புரிய வைக்கிறது? ஏன் இவ மட்டும் இப்படி இருக்கா?” என்று அவன் யோசிக்க ஆரம்பித்தான்.
அவன் அதை சரி செய்ய முயற்சித்த எல்லா வழிகளும் அவளிடம் இருந்து அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கியது. அவன் அருகில் வரும்போதெல்லாம் அவள் விலகிச் செல்வது, அவன் பேச முற்படும்போது பேச்சை சுருக்கிக் கொள்வது, அவன் கலகலப்பாகப் பேசினாலும் அவள் அமைதியாக இருப்பதெல்லாம் தீரனுக்குப் புதிதாக இருந்தது. அது சிறு கோவத்தையும் உருவாக்கியது.
ஒரு நாள் ஷூட்டிங்கில், ஒரு முக்கியமான காட்சி. ஸ்ரீநிதிக்கு மிகவும் சவாலானது. அந்தக் காட்சியில் அவள் ஒரு பெரிய கூட்டத்தின் முன் நின்று பேச வேண்டும். ஸ்ரீநிதிக்குக் கூட்டம் என்றாலே பயம். அவள் பதட்டத்துடன் இருந்தாள்.
அவள் பதட்டத்தைப் பார்த்தவன் இம்முறை, அவளிடம் செல்ல நினைக்கவில்லை. “இந்த தீரன் ஒன்னும் அவ்ளோ குறைஞ்சுப் போகல” என்று சொல்லிக் கொண்டு விலகிக் கொள்ளத்தான் நினைத்தான்.
ஆனால் காதல் வந்த மனம் அப்படி ஒருவனை அமைதியாக இருக்க விட்டு விடுமா என்ன? அவனையும் விடவில்லை வேற வழியின்றி எழுந்து அவளிடம் சென்றான்.
“என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி இருக்க? உடம்பு எதுவும் சரியில்லையா?” என்று தீரன் அவளருகில் வந்து கேட்டான்.
ஏனோ அவனுடைய அக்கறை, அந்த நொடி அவளுக்குமே தேவையாய் இருக்க, “இல்ல, எனக்குக் கூட்டம்னா கொஞ்சம் பயம் த. எப்படி நடிக்கப் போறேன்னு தெரியல. கைகால் எல்லாம் இப்பவே நடுங்குது,” என்று தன் உள்ளங்கையில் பூத்திருந்த வியர்வையைப் பார்த்தப்படி கூறினாள்.
அந்த நொடி அவன் கண்ணுக்கு அவள் சிறுமியாய் தெரிந்தாள். அன்றும் காதல் காட்சியை எப்படி பேசுவது என்று புரியாது நின்றவளின் நினைவு வர, இப்போது மீண்டும் அவள் கையைப் பிடித்து “பயப்படாத. நான் இருக்கேன் தான. நீ ஒரு நிமிஷம் கண்ண மூடிட்டு, இங்க யாரும் இல்ல. நீ மட்டும் தான் இருக்கன்னு நெனச்சுக்கோ. நான் உன் பக்கத்துலயே இருக்கேன். நீ தைரியமா பேசு. நீ நல்லா பண்ணுவன்னு நான் நம்புறேன்” என்றான்.
ஸ்ரீநிதி தீரனைப் பார்த்தாள். அவனது கண்களில் இருந்த அக்கறை அவளுக்கு ஒரு சிறிய நம்பிக்கையைக் கொடுத்தது. அவள் கண்களை மூடினாள். தீரன் சொன்னபடியே அவள் ஒரு நிமிடம் எல்லாவற்றையும் மறந்தாள். அவனது அருகாமை அவளுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைக் கொடுத்தது.
அந்த உணர்வோடே அவள் சென்று அதை நடித்தாள். உண்மையில் அவளாலையே நம்ப முடியவில்லை. அவள் அத்தனை சிறப்பாய் அதை நடித்து முடித்திருந்தாள். ஷாட் முடிந்ததும், தீரன் அவளைப் பாராட்டினான்.
“நான் சொன்னேன்ல? நீ நல்லா பண்ணுவன்னு. ஈவன் இந்த சீன் தியேட்டர்ல பெரிய ரெஸ்பான்ஸ கிரியேட் பண்ணும்” என்றான்.
அவனுடைய அந்த பாராட்டு அவளுக்கு ஏதோ மிகப்பெரிய ஆஸ்கர் அவார்டை வாங்கியது போல் இருந்தது. அதிலும் அவன் அவளுடன் இருக்கும் போது அவள் சற்று தைரியமாக உணர்ந்தாள்.
அதனால் இப்போது சிறு புன்னையுடன்,“தேங்க்ஸ் தீரன். நீங்க இல்லனா நான் பண்ணிருக்க மாட்டேன். உங்களோட நம்பிக்கையாலத்தான் இத பண்ணேன்” என்றாள். முதன் முறை அவளுடைய தயக்கத்தை விட்டு விட்டு, அவனிடம் பேசினாள்.
அந்த ஒரு காட்சி, அவர்களுக்கு இடையில் ஒரு சிறிய பாலத்தை அமைத்தது. தீரன் மெதுவாக ஸ்ரீநிதியின் மனதை வெல்ல முயற்சிகளைத் தொடர்ந்தான். அவளுக்குப் பிடித்த விஷயங்களைப் பற்றிக் கேட்டான். அவளது கனவுகள், அவளது ஆசைகள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டான்.
அதனால் அவளிடம் நிறைய பேசினான். ஏனெனில் ஸ்ரீநிதி அத்தனை எளிதில் எது குறித்தும் வாயைத் திறக்கவே இல்லை. ஏனெனில் இன்னும் கூட அவள், அவனது பிளே பாய் இமேஜில் இருந்து வெளிவரவில்லை.
தீரனிடம் பல பெண்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து அவனுடன் கலகலப்பாகப் பேசுவதைப் பார்த்தாள். அது அவளை மேலும் சங்கடப்படுத்தியது. அதிலும் பெண் ரசிகைகள் எல்லாம் அவனைக் கட்டிப் பிடித்து பேசுவது, அதற்கு அவனுமே அவர்களுடன் சிரித்து பேசுவது இது எல்லாம் அவளுக்குள் பொறாமை என்பதைத் தாண்டி, மேலும் பயத்தைக் கொடுத்தது. ஆனால் இம்முறை அவளுக்கு அது வருத்தத்தையும் கொடுத்தது.
“இவன் என்கிட்ட மட்டும் இல்ல. எல்லாக் கிட்டயும் இப்படித்தான் பழகுறான். இவன் எப்பவுமே மாற மாட்டான்,” என்று அவள் மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.
படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. ஒரு நாள், இரவு நேர ஷூட்டிங். ஸ்ரீநிதி ஒரு தனி அறையில் தனது அடுத்த காட்சிக்காகத் தயாராகிக் கொண்டிருந்தாள்.
திடீரென, படத்தின் ஒரு துணை இயக்குனர், நாகராஜ், அவளருகில் வந்தான். அவன் ஒரு சில நேரங்களில் ஸ்ரீநிதியிடம் தேவையில்லாமல் நெருங்கிப் பழக முயற்சிப்பதை அவளும் உணர்ந்திருக்கிறாள்.
ஆனாலும் அவளுடைய பயந்த சுபாவம் அவனை எதிர்த்து கேள்வி கேட்க விடவில்லை. இப்போதும் மெல்லிய பதட்டத்துடன் வேறு யாராவது வருகிறார்களா? என்று தான் பார்த்தாள்.
“நான் உன்கிட்ட தனியா கொஞ்சம் பேசணும், நீ இன்னிக்கு நம்ம புரோடியூசர் பங்களாவுக்கு வந்துடு” என்றான் நாகராஜ்
அதில் அவள் அதிர்ந்து நிற்க, அவனோ அவளது கையைத் தொட முயற்சித்தான். அவனது கண்களில் ஒரு கெட்ட எண்ணம் தெரிந்தது.
அதில் ஸ்ரீநிதிக்கு உள்ளுக்குள் பயம் பரவியது. “என்ன விஷயம் சார்? இங்கேயே பேசலாமே?” என்று அவள் கையைப் பின்னிழுத்துக் கொண்டாள்
“இல்ல, இல்ல. அதெல்லாம் இங்க பேச முடியாது. நாம தனியா பேசலாம். இந்த வாய்ப்பு அடிக்கடி கிடைக்காது. ஏன்னா, இதுக்கப்புறம் உன் வாழ்க்கையே வேற மாதிரி மாறப் போகுது. உனக்கு ஒரு புது உலகத்த இன்னிக்கு நான் காமிக்கிறேன்” என்று சொல்லியப்படி அவளை இப்போது மேலும் நெருங்கி அவள் கையைப் பற்றினான்.
அவனுடைய பேச்சும், செயலும், அவனுடைய நோக்கம் என்ன என்பதை அவளுக்கு புரிய வைத்தது. அவனோ அவள் கையை விடாது மேலும் அவன் இடையோரம் கைக் கொடுத்துப் பிடிக்க இப்போது இவளுக்கு கைகால் நடுங்க ஆரம்பித்தது. அவள் பயத்தில் உறைந்து போனாள்.
அவனுக்கு அந்த பயம் சாதகமாய் போக, “இந்த ட்ரஸ்ல நீ ரொம்ப அழகா இருக்க. ஆனா இன்னும் கொஞ்சம் கிளாமரா ட்ரைப் பண்ணா, இன்னும் சூப்பரா இருக்கும். நான் வேணும்னா சேஞ் பண்ணிக் காமிக்கட்டா” என்றவன் இப்போது அவளுடைய பின் பக்க ஜாக்கெட் ஊக்கை கழட்ட முயற்சித்தான்.
அதில் திடுக்கிட்டு,“ஐயோ என்னப் பண்றீங்க” என்று அவள் விலகப் போக, “ஹேய்! இப்போ ஏன் சத்தம் போடுற? சினிமால இந்த மாதிரி அட்ஜஸ்ட்மெண்ட் எல்லாம் ரொம்ப சாதாரணம். ஆரம்பத்துல ஒரு மாதிரி இருக்கும். கிட்ட வாயேன் உனக்கு கொஞ்சம் கொஞ்சமா” என்றவனுக்கு அவள் அழகு போதையைக் கொடுக்க, ஏனோ இரவு வரை காத்திருக்க முடியாது என்பது போல் அவளை ஆட்கொள்ள நினைத்தான்.
“வேண்டாம் சார்! என்னை விடுங்க!” என்று அவள் விலக, அதற்குள் அவன் அவளுடைய மேலாடையைப் பிடித்திழுக்க அவன் கையோடு சென்றிருந்தது.
சரியாக அன்னேரம், தீரன் அங்கே வந்தான். அவன் ஸ்ரீநிதியின் அறையைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தபோது, அவளது அலறல் கேட்டு உள்ளே நுழைந்திருந்தான். நாகராஜ், ஸ்ரீநிதியைப் பிடித்து இழுக்க முயல்வதைப் பார்த்ததும், தீரனுக்குள் அத்தனைக் கோவம்.
“என்ன நடந்துச்சு இங்க? என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று தீரன் கர்ஜித்தான். அவனது குரல் அந்த அறையையே அதிர வைத்தது.
அவனைப் பார்த்ததும் என்ன நினைத்தாளோ, வேகமாய் ஓடி சென்று அவனை இறுக்கமாய் கட்டிக் கொண்டாள் ஸ்ரீநிதி. அவளுடைய தாவணி, அந்த நாகராஜின் கையில் இருக்க, இப்போது அவனுடைய உடல் இரும்பென இறுகியது.
தன்னை அணைத்திருந்தவளை, எதிரில் நின்றிருந்தவனின் கண் பார்வையில் விழாதவாறு மறைத்து நின்றான். நாகராஜ் அதிர்ந்து போய்த் தயங்கினான். “ஒன்னுமில்ல சார். சும்மா பேசிட்டு இருந்தோம்.” என்று சமாளிக்க முயன்றான்.
“இதுத்தான் நீ பேசிட்டு இருந்த லட்சணமா? அதான் அவ வேண்டாம்னு சொல்றாத்தான” என்று தீரன் நாகராஜின் சட்டையைப் பிடித்து, அவனை சுவற்றோடு அழுத்தினான்.
அந்த நொடி அவனது பிளே பாய் இமேஜுக்குள் மறைந்திருந்த ஒரு ஆக்ஷன் ஹீரோ வெளியே வந்தான். ஸ்ரீநிதி பயத்தில் தீரனின் பின்னால் ஒளிந்து கொண்டாள்.
“சார்... சார்... தப்பா புரிஞ்சுக்காதீங்க,” என்று நாகராஜ் கெஞ்சினான்.
“நீ தப்பா நடக்க ட்ரை பண்ணியிருக்க, அதுவும் யார்கிட்ட தெரியுமா?” என்று தீரன் அவனை வெளியே தள்ளி, “இந்த செட்ல இருந்து மட்டும் இல்ல இதுக்கப்புறம் நீ இந்தப் பக்கம் வரவே கூடாது. இப்போவே வெளிய போயிடு. இல்லனா என் சினிமா வாழ்க்கை முடிஞ்சாக் கூட பரவாயில்லன்னு உன் சினிமா வாழ்க்கைய மொத்தமா முடிச்சுடுவேன்.” என்று எச்சரித்தான்.
அதில் அவன் பயந்து அங்கிருந்து ஓடி விட, இப்போது ஸ்ரீநிதியோ தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள். தீரன் ஸ்ரீநிதியிடம் திரும்பினான். அவளது உடல் முழுவதும் நடுங்கிக் கொண்டிருந்தது. கண்களில் கண்ணீர் பெருகியது. தீரன் அவளருகில் சென்று, அவளது கையைப் பற்றினான்.
“பயப்படாத ஸ்ரீ. நான் இருக்கேன். உனக்கு ஒன்னும் ஆகாது.” என்றான் தீரன் மெல்லிய குரலில். அவனது வார்த்தைகளில் இருந்த ஏதோ ஒன்று அவளை என்னமோ செய்ய, இப்போது மீண்டும் அவனை இறுக்கமாய் கட்டிக் கொண்டாள்.
அந்த அணைப்பு தீரனுக்கு என்னவோ செய்தது. அடுத்த நொடியே அந்த நாகராஜ்ஜையும், இதற்கு பின் இருந்த அந்த புரோடியூசர் மகனையும் மொத்தமாய் சினிமாவை விட்டு ஓட விட முடிவெடுத்திருந்தான்.
அவன் அவளை சமாதானப்படுத்த, அவளோ, “ப்ளீஸ் தீரன் இன்னிக்கு என் கூடவே இருக்கீங்களா? எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்றாள். அவனுடன் அவள் ஒரே அறையில் இருக்க கேட்கிறாள். இப்படி எத்தனையோ பெண்களும், நடிகைகளும் அவனிடம் கேட்டிருக்கிறார்கள். ஆனால் இது முற்றிலும் வேறு.
அவனும் சம்மதித்தான். அன்றைய இரவு, ஸ்ரீநிதிக்குத் தீரனின் உண்மையான குணம் புரிந்தது. அவன் ஒரு பிளே பாய் மட்டுமல்ல. அவன் ஒரு காவலன். ஒரு பாதுகாவலன். அவளது பயத்தில், அவளது ஆபத்தில், அவன் அவளுக்காக நின்றான். அன்றுதான் அவள் அவனை முழுமையாக நம்ப ஆரம்பித்தாள். அவனது காதல் உண்மையானது என்பதை அவள் உணர்ந்தாள். அவன் அவளது பிளே பாய் இமேஜை உடைத்து, ஒரு புதிய மனிதனாக அவளது மனதில் நுழைந்தான்.
அந்த நிகழ்வுக்குப் பிறகு, ஸ்ரீநிதி தீரனுடன் மிகவும் இயல்பாகப் பழக ஆரம்பித்தாள். அவனது பேச்சில், அவனது பார்வையில், அவனது ஒவ்வொரு அசைவிலும் அவளது மீதான உண்மையான அக்கறையை உணர்ந்தாள். அவள் இதுவரை தீரனைப் பற்றி நினைத்த தவறான விஷயங்களை எல்லாம் மாற்றிக் கொண்டாள்.
இப்போது அவளுடைய பார்வை மொத்தமும் அவனிடம் தான் இருந்தது. நேற்று வரை தவறாய் தெரிந்தது எல்லாம் இப்போது சரியாய் மாறியது போல் தோன்றியது.
“தீரன், அன்னைக்கு நீங்க மட்டும் வரலனா என்ன ஆகியிருக்கும்னு தெரியல. ரொம்ப தேங்க்ஸ்,” என்றாள் ஒரு நாள் ஷூட்டிங் இடைவேளையில்.
அதில் அவனோ எதுவும் சொல்லாது அமைதியாய் இருந்தான். “உண்மைய சொல்லனும்னா நீங்க ஒரு பிளே பாய்னு நினைச்சேன். ஆனா நீங்க ரொம்ப நல்லவர்,” என்று சிறு தயக்கத்துடன் கூறினாள்
அதைக் கேட்டு இப்போது தீரன் சத்தமாகவே சிரித்தான். “ஆக்சிவலி உன்ன நான் மீட் பன்றதுக்கு முன்னாடி வரைக்கும், நான் கூட என்னப் பத்தி அப்படிதான் நினைச்சிட்டு இருந்தேன். நான் நினைச்சா எப்பேற்பட்ட பொண்ணையும் என் பின்னாடி சுத்த வைக்க முடியும்? அத்தன பொண்னுங்களுக்கும் என்ன பிடிக்கும் அப்படின்னு. பட் நீ என்ன பார்த்து பயந்து ஓடுறப்பத்தான் எனக்கு புரிஞ்சிச்சு. என்னால ஒரு நல்ல பொண்ணு மனசுல இடம் பிடிக்க முடியலன்னு” என்றான்.
அதைக் கேட்டு அவள் இதயம் சிலிர்த்தது. அவளையே பார்த்தவன் இப்போது மீண்டும் அவள் கையைப் பிடித்து, “இதுவரைக்கும் எத்தனையோ பொண்ணுங்கள பார்த்திருக்கேன் பழகியிருக்கேன். ஈவன் அவங்க மனசுல என்ன இருக்கும்னு நான் யோசிச்சதே இல்ல. ஆனா உன்ன பார்த்த பர்ஸ்ட் செகண்ட்ல இருந்து உன் மனசுல நான் இருக்கனும்னு நினச்சேன். ஈவன், இப்பவும் எனக்கு தெரியல. நீ என்ன அக்சப்ட் பண்ணிப்பீயான்னு. பட் ஐ மேட்லி லவ் வித் யூ ஸ்ரீ. இதுவரைக்கும் நடந்த எதையும் என்னால மாத்த முடியாது. பட் எனக்கு ஒரு சான்ஸ் கொடு. கண்டிப்பா உனக்கு நான் உண்மையா இருப்பேன். என்ன நான் கண்டிப்பா மாத்திப்பேன்” என்றான்.
எத்தகைய வார்த்தைகள்? அதிலும் எப்பேற்பட்ட நடிகன் அவன். அவன் நினைத்தால் எத்தனையோ பெண்கள் வந்து நிற்பார்கள். ஆனால் அவனோ அவளுடைய பதிலுக்காக காத்திருந்தான்.
அவன் அவளுக்காக மாறத் துணிந்தவன் என்பதை வெறும் வார்த்தையில் மட்டும் அல்லாது அவனுடைய செயலிலும் உணர ஆரம்பித்தாள். அவன் மற்ற பெண்களிடம் சகஜமாகப் பேசினாலும், அவளிடம் பேசும் போது மட்டுமே அவன் கண்ணில் அந்த காதல் தெரிந்தது. எத்தனைப் பென்கள் அவனை சுற்றி நின்றாலும், அவனுடைய கண்கல் அவளைத்தான் தேடியது.
அதே நேரம் அவன் தன்னுடைய காதலை சொல்லியப் பின்னும் கூட அவன் அவளை எதற்காகவும் வற்புறுத்தவில்லை. அவளுக்கான நேரத்தை கொடுத்தான். அவன் அவளிடம் ஒரு நல்ல நண்பனாகப் பழகினான். அவளுக்குத் தேவையான உதவிகளைச் செய்தான். அவளது படங்களில் அவளுக்கு ஆதரவாக இருந்தான். அவளது பயத்தைப் போக்கினான். ஷூட்டிங் இல்லாத நாட்களில் கூட அவளுக்கு அவன் எல்லா வகையில் பக்கப்பலமாய் நின்றிருந்தான்.
ஒரு வழியாய் படப்பிடிப்பு முடிந்தது. அவர்கள் இருவரும் நடித்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தீரன் மற்றும் ஸ்ரீநிதியுடைய காதல் காட்சிகள் எல்லாம் பெரும் அளவில் வரவேற்கப்பட்டது. அவர்களின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
அடுத்தடுத்து இருவரையும் சேர்த்து வைத்து நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயற்சித்தனர். பல விளம்பர கம்பெனிகள் இருவரையும் தங்கள் கம்பெனியில் நடிக்க வைக்க ஒப்பந்தமிட வந்தனர்.
இதற்கிடையில், ஸ்ரீநிதிக்கும், தீரனும் இடையில் நட்பைத் தாண்டிய காதல் அழகாய் வளர ஆரம்பித்தது. அவனிடம் முன்பிருந்த தயக்கம் அவளிடம் இப்போது இல்லை. அவனை காதலித்தாள். ஆனாலும் அவன் மிகப்பெரிய நடிகன் என்ற பயம் அவளுக்கு அப்போதும் இருந்தது.
என்னத்தான் இவளும் இப்போது பிரபல நடிகையாக மாறியிருந்தாலும் கூட, அவனுடைய உயரத்துக்கு முன்பு தான் சாதாரணமாகவே அவளுக்கு தோன்றியது. அதிலும் திரையுலக காதல் எல்லாம் நிஜ உலகில் எத்தனை தூரம் சாத்தியம் என்றும் தெரியவில்லை. ஆனாலும் அவளுக்கு தீரனைப் பிடித்தது. அவனை யாருக்குத்தான் பிடிக்காது? என்ற கேள்வித்தான் அவளுக்குள் எப்போதும் ஓடும்.
ஒரு நாள், தீரன் தனது புதிய படத்தின் வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தான். அந்த விழாவில், அவன் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிடப் போவதாகச் சொல்லியிருந்தான். ஸ்ரீநிதிக்கும் அழைப்பு விடுத்திருந்தான். ஸ்ரீநிதிக்கு ஒருவித எதிர்பார்ப்பு. என்ன நடக்கப்போகிறது என்று தெரியவில்லை. ஆனாலும் மனம் அன்று சிறு படபடப்புடன் இருந்தது.
விழா தொடங்கியது. பிரபலங்கள், மீடியாக்கள், ரசிகர்கள் என மண்டபம் நிரம்பியிருந்தது. தீரன் மேடைக்கு வந்தான். அவனின் பார்வை ஒரு நொடி ஸ்ரீயை தொட்டு மீண்டது. அவளோ வழக்கம் போல் விரல்களை பிசைந்துக் கொண்டிருந்தாள்.
ஏனோ அவளை முதன் முதலாய் பார்த்த நாள் தான் நினைவுக்கு வந்தது. அதை நினைத்தப்படியே அவன் பேச ஆரம்பித்தான்.
“இந்த பங்க்சன் என் படத்தோட வெற்றிக்காக மட்டும் இல்ல. என் வாழ்க்கையோட புது அத்தியாயத்துக்கான ஆரம்பம். என் வாழ்க்கையில காதல், திருமணம் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லாம இருந்தது. எப்படி ஒருத்தர் கூட லைப் லாங் வாழ முடியும்னு நானே யோசிச்சிருக்கேன். பட் என் எண்ணத்த எல்லாம் மாத்துற மாதிரி என் லைப்ல ஒருத்தவங்க வந்தாங்க. ஈவன் எல்லாரோட வாழ்க்கையிலையும், ஒருத்தர் இருப்பாங்க. அவங்க மூலமாத்தான் நம்ம யாரு? என்னென்னு நமக்கு தெரிய வரும். அப்படி என் லைப்ல கூட ஒருத்தர் இருக்காங்க” என்றான்.
சுற்றி இருந்த அத்தனைப் பேரும், “தீரன் லவ் பண்றாரா? யாரா இருக்கும்?” என்பது போல் ஆர்வமாய் அவனைப் பார்த்தனர்.
ஸ்ரீநிதிக்குத் தீரன் தன்னைத்தான் சொல்கிறான் என்பது புரிந்தது. அதே நேரம் மெல்லிய பதட்டம். அவன் காதலை சொல்லிய விதம். அதை ஒவ்வொரு நொடியும் நிரூபித்துக் கொண்டிருக்கிறான். அவளுக்குத்தான் என்ன செய்ய என்று தெரியவில்லை.
“எல்லாருக்கும் அது யாருன்னு தெரிஞ்சிக்கனும் இல்லையா?” என்று கேட்டவன் மேடையில் இருந்து இறங்கி ஸ்ரீநிதியின் முன்னால் வந்து நின்றான். அதில் அத்தனைப் பேரும் அவர்களைப் பார்க்க, அத்தனை கேமராக்களும் இருவரின் பக்கமும் திரும்பியது.
அவளின் முன்னே மண்டியிட்டு, “ஸ்ரீ இப்பயாச்சும் என் லவ்வ நீ அக்சப்ட் பண்ணிப்பீயா? என் மேல இன்னும் நம்பிக்க வரனும்னா நான் என்னப் பண்ணனும்னு சொல்லு. அத நான் பண்றேன்” என்றான்.
அவளுக்கு என்ன சொல்ல என்றே தெரியவில்லை. அவளுடைய உடலெல்லாம் மெல்லிய அதிர்வை உணர்ந்தது. மெல்ல அவள் கையைப் பிடித்து அவளைப் பார்த்தான். “ஸ்ரீ, நான் உன்ன உண்மையா நேசிக்கிறேன். என் வாழ்க்கையை உன் கூட வாழ ஆசைப்படுறேன்.ஈவன் என்னோட ஒவ்வொரு செகண்டையும் உன் கூட ஸ்பெண்ட் பண்ணனும். என்ன மேரேஜ் பண்ணிக்கிறீயா? அதுக்கப்புறம் கூட என்ன பொறுமையா லவ் பண்ணிக்கோ” என்று முழங்காலிட்டு அவளிடம் ஒரு வைர மோதிரத்தை நீட்டினான்.
ஸ்ரீநிதிக்கு வார்த்தைகள் வரவில்லை. அவளது கண்கள் கலங்க முயற்சிக்க, அவளுடைய இயல்பு குணம் மறைந்து புது வித தைரியத்துடன் அவன் கரத்தைப் பற்றி, “ஐ லவ் யூ தீரன் லவ் யூ சோ மச்” என்றப்படி அவனைக் கட்டிக் கொண்டாள்.
அங்கிருந்த ஒட்டு மொத்த கேமராவும் அந்த அழகிய தருணத்தை அவர்களின் வாழ்நாள் மொத்தமும் சேமித்து வைத்துக் கொள்ளும் படி பதிவு செய்தது. அந்த அரங்கமே கரகோசத்தால் நிறைந்து வழிந்தது. ஸ்ரீயின் மனதில் மட்டும் அல்லாது உயிரிலும் கலந்தான் தீரன்.
புகழ் வெளிச்சம், காதலை மறைக்க
அவன் இதயமோ இறுகியிருக்க,
அறிமுகப் புதுமுகம்,
அவளோ பயந்த சுபாவம்.
அவன் மீது அவளுக்கு,
நல் எண்ணம் இல்லை.
முதல் பார்வை அது,
ஒரு மின்னல் வெட்டியது
அவன் இதய கதவை
மெலிதாய் தட்டியது.
விலகியே நின்றாள்,
அவள் பயத்தினாலே
அவனின் அன்பு,
அவளுக்குப் புரியவில்லை.
தீயவன் கரங்கள்,
அவளைத் தொட வந்த போது
அவன் வந்தான், ஓர் அரணாக.
அன்றே உணர்ந்தாள்,
அவன் நேசத்தின் ஆழம்
முகமூடி கலைந்தது, உண்மை புரிந்தது.
பயம் கடந்த காதல்,
இதயம் இணைந்தது!
மாற்றம் தந்த அன்பு,
வாழ்வை வென்றது!..
இந்த கதை எப்படி இருந்திச்சுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. இந்த மாதிரி வாரம் ஒரு சிறு கதையும் இங்க வரும். சோ நீங்க கொடுக்கிற கமெண்ட் அண்ட் ரேட்டிங் வச்சித்தான். அடுத்தடுத்து கதைகள் கொடுக்க முடியும். சோ மறக்காம உங்க கருத்து எதுவா இருந்தாலும் சொல்லுங்க. உங்க கமெண்ட்ஸ்காக வெயிட்டிங். அப்புறம் எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க...
முற்றும் 🙏🏻
Santhanalakshmi S
super sissy🎉🎉🎉😍😍😍
Anitha Satheesh
super sis
Samrin Shamil
super sis dheeran srinidhi pair enaku analil vilundha panithuli la romba pudikim😍❤️❤️
Ammu Sathish
சூப்பர்
Nisha Nis
super da
Kowsi Ram
wow sister ivanga அனலில் விழுந்த பனித்துளி தீரன் ஸ்ரீ தான. அந்த ஸ்டோரில நான் நேற்றைய நாள்ல ஒரு கமண்ட் பண்ணியிருந்தன் அத நீங்க படிச்சீங்களா என்னனு தெரில ஆனா நான் கேட்டது கிடைத்தது thank you sister thank you so much 💓
Sarmi SS
May 24, 2025it's my pleasure sis ❤️ thank you so much..
Kowsi Ram
May 25, 2025welcome sister 👍
Indhu Mathi
super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍❤️❤️😍❤️❤️😍❤😍❤😍❤😍❤😍No one can write a love story like you sis story was very super 👌❤😍feel pani story write pantra marii ireaku super keep going ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Sarmi SS
May 24, 2025thanks a lot for ur lovely comments 😍 keep supporting ❤️