"என் காதலை இன்றாவது சொல்லி விட வேண்டும் என நானும், இன்றாவது சொல்வானா என நீயும், நினைத்தபடியே எழுகிறோம் ஒவ்வொரு நாளும்..."
என அவன் மனதில் தோன்றியதை தன் பேஸ்புக் முகப்பு பக்கத்தில் எழுதி போஸ்ட் செய்து கொண்டிருந்தான் நம் கிஷோர்...
டேய் என்னடா பண்ணிட்டு இருக்க? நிம்மதியா கனவுல என் ஆள் சுஷ்மிதா கூட டூயட் ஆடிக்கிட்டிருந்த என்னை ஆபிஸ் க்கு லேட் ஆயிடுச்சி மீட்டிங் இருக்குன்னு சொல்லி எழுப்பி கிளம்ப சொல்லிட்டு இப்படி ஒரு மணி நேரமா மொபைல் ல நோன்டிகிட்டு இருக்க என அவன் நண்பன் முகேஷ் ஏறக்குறைய கத்தி கொண்டிருந்தான்...
இதை ஏதும் காதில் வாங்காதவன், அவன் மெசெஞ்சரில் இருந்து குட் மார்னிங் ஹேவ் ஏ நைஸ் டேய் என அனுப்பி கொண்டிருந்தான் கிஷோர்...
அதை பார்த்த முகேஷ் சற்று கடுப்பாகி, இன்னும் எத்தனை வருஷத்துக்கு இப்படியே குட் மார்னிங் குட் நைட்டுண்ணு அனுப்பிட்டு இருக்க போற? நீ போடுற போஸ்ட் எல்லாம் அவளுக்குதான? அதுல ஒன்னு ரெண்ட நம்ம ஆபிஸ் ல இருக்கிற பொண்ணுங்களுக்கு அனுப்பியிருந்த இந்நேரம் நீ அப்பாவாயிருப்ப என முகேஷ் சொல்ல?
திரும்பி முகேஷை பார்த்து முறைத்தவன், தன் மொபைலை பார்க்க அவன் தன்னை மறந்து சிரித்தான்...
ம், என்ன? இந்நேரம் ஒன்னு அவன் நம்மள கேவலமா திட்டிருக்கணும், இல்லன்னா? அட்லீஸ்ட் ஒரு பஞ் டைலாக் ஆச்சும் பேசிருக்கணும், ஆனா எதுவுமே சொல்லாம சிரிக்கிறான் என கிஷோர் மொபைலை முகேஷ் எட்டி பார்க்க அதில் அவளிடம் இருந்து ஹலோ பாஸ், உங்களுக்கு தான் இது குட் மார்னிங் ஆனா எனக்கு இது மிட் நைட் என அவள் அனுப்பியிருந்தாள், அதைப்பார்த்து மேலும் கடுப்பானான் முகேஷ்.
டேய் நீ டெய்லியும் அவளுக்கு குட் மார்னிங் குட் நைட் அனுப்புறது கூட பரவாயில்லை ஆனா அதுக்கு அவ சொல்ற ஆன்சர் அதுக்கு நீ என்னமோ, இன்னிக்கு தான் அவ புதுசா இதை சொல்ற மாதிரி சிரிக்கிற பார்த்தியா அத தான் என்னால தாங்க முடியலை... என முகேஷ் சொல்ல கிஷோர் அதை கண்டு கொள்ளாது அவள் அனுப்பிய குறுஞ்செய்தியை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்
டேய் தெரியாம தான் கேக்குறேன் இன்னியோட நீ அவ கிட்ட பேச ஆரம்பிச்சு 430 நாளாச்சு ஆனால் இப்போ வரைக்கும் அவளோட முழு பெயர் என்னன்னு கூட உனக்கு தெரியாது... ஏதோ அவ அப்பப்ப போடுற போஸ்ட் ஒரு வருஷத்துக்கு முன்னாடி வைத்திருந்த அவளோட டிபி, இதைத்தாண்டி அவளைப் பத்தி உனக்கு என்ன தெரியும்? என முகேஷ் கேட்க
பரவாயில்லையே மச்சான் என்னை விட நீ என் காதலை பத்தி தெளிவா புரிஞ்சு வச்சிருக்க? என சிரித்துக் கொண்டு கிஷோர் சொல்ல
டேய் நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன் நீ என்ன சொல்லிட்டு இருக்க? உன்னோட நல்லதுக்கு தான் டா சொல்றேன்... என முகேஷ் சொல்ல
என்னடா புதுசா என் மேல அக்கறை எல்லாம் ரொம்ப பலமா இருக்கு... என கிஷோர் நக்கலாக சொல்ல
டேய் சிரிக்காத, நம்ம ஆபீஸ்ல கூட பல பேர் ஃபேக் ஐடி வைத்து சுத்திகிட்டு இருக்காங்க ஒருவேளை அதுவும் ஃபேக் ஐடியா இருந்தா என்னடா பண்ணுவ? சரி சரி முறைக்காத அது ஒரிஜினல் ஐடியாவே இருக்கட்டும் ஆனால் அவளும் உன்னை லவ் பண்றாளா இல்லையானு உனக்கு தெரியுமா? அட்லீஸ்ட் உன் லவ்வை ஆச்சும் அவ கிட்ட சொல்லு.. அதுக்கப்புறம் என்ன நடக்குதோ நடக்கட்டும் ஆனால் இப்படியே லைஃப ஸ்பாயில் பண்ணாத... என முகேஷ் தன் நண்பன் மேலுள்ள அக்கறையால் கூறினான்.
கிஷோர் அவனைப் பார்த்துச் சிரித்தாலும் மனதினுள் அவன் கூறுவதும் சரிதானே, இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படியே போக முடியும்? என நினைத்தவன் நாளை கண்டிப்பாக தன் காதலை அவளிடம் கூற வேண்டும் என நினைத்துக் கொண்டான்.
சரி சரி விடுடா.. வா டைம் ஆயிடுச்சு, உன்னோட மீதி கிலாசை நாளைக்கு எடுத்துக்கோ இப்போ நம்ம ஆபீஸ்க்கு போலாம் என கிஷோர் முகேஷ் சை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்...
செல்லும் வழியில், முதன் முதலாக அவளிடம் தான் பேச ஆரம்பித்ததை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அது ஒரு மாலை நேரம் எதார்த்தமாக அவன் பேஸ்புக்கை பார்த்துக் கொண்டிருந்தான், அப்போது ஒரு போஸ்ட் ஐ பார்க்க வித்யாசமாக இருந்தது, அவன் தன்னை அறியாமல் கமெண்ட் பாக்ஸ் ஐ ஓபன் செய்தான்.. அதில் ஒரு பெண் பல பேருடைய நெகட்டிவ் கமெண்ட்ஸ்க்கு ரிப்ளை செய்து கொண்டிருந்தாள்... முதலில் இவளுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை அதான் இப்படி தவறாக பலபேர் பேசுகிறார்களே அமைதியாக செல்ல வேண்டியதுதானே? என நினைத்தவன் பிறகுதான் கவனித்தான் அவள் இவனுடைய கமெண்ட்டிற்கு ஆதரவாகப் பேசி தான் பலபேரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருந்தாள்... அச்சச்சோ என்னாலதான் இவ திட்டு வாங்கிட்டு இருக்காளா இந்த கமெண்டை டெலிட் பண்ணி விடுவோம் என அவன் செய்த கமெண்டை டெலிட் செய்தான்... அத்துடன் அந்த போஸ்ட் சண்டை முடிந்தது...
மறுநாள் காலை அவன் மொபைலை பார்க்க அதில் ஒரு குறுஞ்செய்தி இருந்தது... அதை ஓபன் செய்து பார்த்தவன்.. ஹலோ பாஸ், கருத்து சொல்றது முக்கியமில்லை... ஆனால் நம்ம சொன்ன கருத்தில கடைசி வரைக்கும் ஸ்ட்ராங்கா இருக்கணும்... இப்படி பாதியிலேயே கமெண்ட் டெலிட் பண்ண கூடாது.. என ஏறக்குறைய மிரட்டி இருந்தால் அந்தப் பெண்.. அப்போதே அவள் ஐடியை கவனித்தான்... ஸ்டிராங் கேர்ள் நிவி, முகப்பு படத்தில் ஒரு குழந்தையின் புகைப்படம் இருந்தது... அதன்பின் சிலபல வாக்கு வாதத்திற்கு பின் இருவரும் நண்பர்களாக பழக ஆரம்பித்தனர்.. அவள் இவனைப் பற்றி அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டாள் ஆனால் இவன் அவளிடம் எதையாவது கேட்டு அவள் தப்பாக எடுத்துக் கொள்வாளோ என அவளைப் பற்றி பெரிதாக எதையும் கேட்கவில்லை... அதையும் தாண்டி இவன் சோகத்தில் இருந்தால் கூட அவளிடம் மனம் விட்டுப் பேசி தன் பாரத்தைக் குறைத்துக் கொள்வான்.. அவளும் சில நேரங்களில் அவனிடம் சில குழப்பங்களை கேட்டு சரி செய்து கொள்வாள்... இப்படியே ஒரு வருட காலமாக இவர்களின் நட்பு பயணம் தொடங்கி இன்று இவன் மனதில் காதலாக முளைத்திருக்கிறது... பெரிதாக முகம் பார்த்து பேசாவிட்டாலும்.. தொலைபேசி வாயிலாக குரலை கேட்காவிட்டாலும்... அவளின் குறுஞ்செய்தி வாயிலாக அவள் அவன் மனதில் நிரந்தரமாக தங்கிவிட்டாள்.
மறுநாள் வழக்கம்போல் எழுந்தவன் இன்று நிச்சயம் தன் காதலை அவளிடம் வெளிப்படுத்த வேண்டும் என நினைத்து அவன் மொபைலை எடுத்தான்... பேஸ்புக்கை ஓபன் செய்தவன் அப்படியே திகைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்... அவன் நேற்று போட்டிருந்த போஸ்ட்டிற்கு கீழ் அவனுடைய நிவி கமெண்ட் செய்திருந்தாள். அதை படித்தவன் மனம் சந்தோசத்தில் துள்ளிக் குதித்தது.. கனவா நினைவா என்று புரியாமல் அந்த கமெண்டை வாசித்தான்.
"என்று உன் இதய திரை கிழித்து,
இந்த இணைய திரை வழியே
உன் மனதை காட்ட போகிறாய்?
என் அன்பே!
உனக்கான இந்த காத்திருப்பில்
நானும், என் காதலும்.
இப்படிக்கு உன் நிவி என்ற நிவேதிதா"
முற்றும்🫶🏻
Ponmalar M
nice sis 😍
Epshi Epshiba
indha story aha continue pannuga sis good Story
Ammu Sathish
சூப்பர் 🥰
Santhanalakshmi S
😍😍😍really super sissymaa🎉🎉🎉