கதிர் பஸ் ஸ்டாப்பிற்கு வருவதற்கும், அவன் புக் செய்திருந்த பஸ் வருவதற்கும் சரியாக இருந்தது. அதனால் அவனுடைய பைக்கை ஸ்டாண்டில் போட்டு விட்டு பஸ்ஸில் ஏறினான். மனமோ நிலாவை ஒரு நொடி நினைக்க, “பேசாம போன் பண்ணியாச்சி சொல்லுவோம்மா?” என்றப்படி சீட்டில் அமர்ந்து மொபைலை கையில் எடுத்தான்.
அதற்குள்ளாக, அவனுக்கு வேலை விஷயமாக கால் வந்திருக்க, அவனும் அட்டண்ட் செய்து, விடுப்பு எடுத்திருப்பதாகவும், வந்து பார்ப்பதாகவும் சொல்லியிருந்தான். அதன் பின் பஸ் கிளம்ப, சில நொடிகள், அந்த சீட்டில் சாய்ந்தமர்ந்து விட்டான்.
இங்கே நிலாவோ சில நிமிடம் கண்ணீரில் உழன்று விட்டு, பின் எழுந்து குளித்துக் கிளம்பினாள். “இப்போ நீ போறதால என்னாகப் போது நிலா?” என்று அவள் மனசாட்சி கேள்வி கேட்டது.
“நான் அங்கப் போயி, அவிங்க கூட நிக்கலன்னா, அது மாமாக்குத்தேன் அவமானம்” என்று சொல்லியவள், தனக்கு என்று ஒரு உடையை மட்டும் எடுத்துக் கொண்டாள். பின் அங்கிருந்து வெளியில் வர ட்ரைவர், வந்து அவள் உடைமையை வாங்கிக் கொண்டார்.
காரில் ஏறும் நொடி, “சைரன்ன கழட்டிடுங்க” என்றாள். உடனே அவரும் அதை செய்ய, அவளும் சீட்டில் சாய்ந்தமர்ந்து விட்டாள்.
கிட்ட தட்ட முழுதாய் சில வருடங்களுக்குப் பின் அந்த ஊருக்கு செல்கிறாள். கதிருடன் தான் அங்கு செல்வேன் என்று அவள் முடிவு எடுத்திருக்க, இப்போது வேறு ஒன்று நடந்துக் கொண்டிருக்க. நடப்பது நடக்கட்டும் என்ற முடிவோடு சீட்டில் சாய்ந்தமர்ந்தாள். கிட்ட தட்ட ஐந்தில் இருந்து ஆறு மணி நேர பயணம்.
ஷீபாவுக்கு கால் செய்து, அவள் வரும் வரை என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கி கூறியிருந்தாள். பின்பு கண்ணாடி வழியே வெளியில் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள். சேலம் - மதுரை நெடுஞ்சாலையில் கார் பயணித்துக் கொண்டிருந்தது. மனம் கதிரை நினைத்து கலங்க, அதை உள்ளிழுத்து கண்ணீரை துடைத்தாள்.
சட்டென்று ட்ரைவர் சடன் பிரேக் அடித்து காரை நிறுத்த, அவள் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.
ட்ரைவரோ, “ம்மா. அங்க” என்று சொல்ல, “அங்க என்ன?” என்று இவளும் தலையை சாய்த்து முன்னே பார்க்க, கதிர் தான் காரின் முன்னே நின்றிருந்தான்.
அவனை சற்றும் எதிர்பாராதவள், கார் கதவைத் திறந்து இறங்கப் போக, அதற்குள்ளாக அவள் பக்கம் வந்து, “என்ன கொஞ்சம் போற வழியில ட்ராப் பண்றீங்களா?” என்றான்.
அவனின் கேள்வியில் அவள் இப்போது முறைக்க, “ப்ளீஸ் மேடம். பஸ்ஸ வேற மிஸ் பண்ணிட்டேன்” என்றான்.
இப்போது அவனை அவள் கேள்வியாய் பார்க்க, “கொஞ்சம் இடம் இருந்தா கூட போதும்” என்று சிறு கிண்டலுடன் கூறினான்.
ட்ரைவர் வேறு இருக்க, எதுவும் சொல்லாது அவனுக்கு இடம் கொடுத்து விலகி அமர்ந்தாள்.
தன் பேக்கை டிக்கியில் வைத்து விட்டு, அவளுக்கு அருகில் வந்தமர, அவளோ முறைத்தாள்.
அதில் அவனோ, “தேங்க்ஸ்ண்ணா. நான் கூட நீங்க வந்த ஸ்பீடுக்கு, அடிச்சு தூக்கிடுவீங்கன்னு நினைச்சேன்” என்று கிண்டலாய் சொல்ல, இங்கே நிலாவுக்கோ சட்டென்று இதயம் பலமாய் துடித்தது.
“ச் என்னப் பேசிட்டிருக்கீங்க?” என்று கேட்க நினைத்து பின் அதை கேட்காது, “அண்ணா, நீங்க கார ஸ்டார்ட் பண்ணுங்க” என்றாள்.
அவரும் காரை ஸ்டார்ட் செய்ய, இப்போது நிலாவோ, “ஏன்த்தேன் இப்புடி பண்றீக. ஆறாச்சும் இப்படி பைப்பாஸ்ல, காருக்கு நடுவுல வருவாகளா?” என்று கேட்டாள்.
“பஸ்ஸ மிஸ் பண்ணிட்டேன்” என்று அவன் அசராது சொல்ல, அதில் கையில் கட்டியிருந்த மணியைப் பார்த்தாள். அவன் சென்ற நேரத்துக்கு இன்னேரம் பஸ், மதுரைக்கே சென்றிருக்கும். அப்படி இருக்க, இப்போது அவனை ஆராய்ச்சியாய் பார்த்தாள்.
பஸ் கிளம்பிய கொஞ்ச நேரத்தில் முருகேசனிடம் இருந்து அழைப்பு வந்தது. எடுத்துப் பேசியவன் அவன் பஸ்ஸில் வந்துக் கொண்டிருப்பதாக சொல்ல, உடனே அவரோ, “ஏன் ரெண்டு பேருமா வர்றப்ப, கார்லையே வர வேண்டியதுத்தேன்ன” என்றிருந்தார்.
அதில் இவனோ, “ரெண்டு பேரா?” என்று கேட்க, முருகேசனுக்கோ அப்படி ஒரு கோவம். அவ்வளவுத்தான், அவனின் அக்கா நிலாவிடம் பேசியதில் இருந்து, கடைசியாய் நிலா முருகேசனுக்கு கால் செய்து பேசியது வரை அத்தனையையும் சொல்லியிருக்க, கதிரோ தலையில் கையை வைத்து விட்டான்.
“ஏண்டா மாப்புள்ள நீ இப்புடி இருக்க? என்னிக்குமே அந்த புள்ள மனச நீ புரிஞ்சிக்கவே மாட்டீயா?” என்று பேச, “செரி மாமா நான் கூப்பிடுறேன்” என்று சொல்லியவன் அடுத்த ஸ்டாப்பில் இறங்கியிருக்க, எப்படியும் இந்த வழியாகத்தான் கார் வரும் என்பதை அறிந்திருந்தவன், அங்கேயே நின்று விட்டான்.
இப்போது நிலாவோ, ஏதும் சொல்லாது முகத்தை திருப்பிக் கொள்ள, அவள் கரத்தை மெலிதாய் பற்றினான். உறுவிக் கொள்ள முடியும் தான். ஆனால் அவளோ அதை செய்யாது அமைதியாய் இருந்தாள்.
அவள் எத்தனை கோவத்தில் இருப்பாள் என்று அவனுக்குத் தெரியும். ஆனாலும் கூட அவள் அமைதியாய் இருக்க, இவனோ, “உன்ன கஷ்டப்படுத்த வேண்டாம்னுத்தேன் கூப்பிடல” என்று மெதுவாய் கூறினான்.
அதில் சட்டென்று அவனை நிமிர்ந்துப் பார்த்தவள், “அம்புட்டுத்தேன் நீங்க என்ன புரிஞ்சிக்கிட்டது. ரொம்ப சந்தோஷம்” என்றவள் மீண்டும் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
ஏனோ கண்கள் கலங்கியது. ஆனாலும் அதை அவள் இழுத்துப் பிடிக்க, அவளின் பக்கம் நெருங்கி அமர்ந்தவனோ, அவள் தோள் மீது மெதுவாய் கைப் போடப் போக, அவன் பக்கம் திரும்பி முறைத்தாள்.
அதில் அவன் கரத்தை விலக்கிக் கொள்ள, அவளோ அவன் கைக்குள் இருந்த தன் கரத்தையும் உறுவிக் கொண்டாள்.
அதன் பின் சில பல நிமிடம் ஒரு வித அமைதி நிலவியது. “கதிரு. நீ இப்புடி இருந்தேன்னா. உன் அக்கா மவள இந்த ஜென்மத்துல நீ சந்தோஷமா வச்சிக்கவே முடியாது” என்று அவனின் மனசாட்சி சொல்ல, “நிலா” என்று மெதுவாய் அழைத்தான்.
அவள் செவியில் அது விழுந்தாலும், இவன் பக்கம் திரும்பாது அப்படியே இருக்க, “கலெக்டர் மேடம்” என்றான்.
இப்போது ஒரு வித கடுப்புடன் திரும்பி, “என்ன அப்படி கூப்பிடாதீங்கன்னு சொல்லிட்டேன்” என்று மூச்சு வாங்க சொல்ல, அவனோ, “சாரி” என்றான்.
அதில், எதுவும் சொல்லாது மீண்டும் அவள் திரும்ப போக, அதற்குள் அவள் கையை அழுத்திப் பிடித்தவன், “ஊருக்கு போயிட்டு வர்ற வரைக்குமாச்சும், நம்ம பழச எல்லாம் மறந்திடலாமே” என்றான்.
“நீங்கத்தேன் ஏற்கனவே மொத்தமா எல்லாத்தையும் மறந்துட்டீங்கத்தேன்னே” என்றவளின் வார்த்தையில் அழுத்தம் இருந்தாலும், குரல் என்னமோ சத்தமில்லாமல் தான் வந்தது.
“நிலா. இதத்தேன் வேண்டாம்னேன். ஒரு நாளைக்கு மட்டும் இத பத்தி எல்லாம் பேசாம” என்று அவன் ஆரம்பிக்க, அவனை அழுத்தமாய் பார்த்தாள்.
“செரி நீ எப்பவுமே அதெல்லாம் பேசலத்தேன். எனக்குத்தேன், என்னமோ அதெல்லாம் மனச போட்டு அழுத்திட்டே இருந்திச்சு. செரி நான் என்ன மாத்திக்கிடுறேன்” என்றான்.
அப்போதும் அவள் அமைதியாய் இருக்க, “நிலா” என்றான்.
“என்ன வான்னு ஒத்த வார்த்த கூப்பிட உங்களுக்கு மனசில்லத்தேன்ன” என்றாள். “ச் நான் அப்படி நினைக்கல நிலா. ஏற்கனவே உனக்கு கஷ்டம். இதுல இதுக்கு உன்னப் போட்டு கஷ்டப்படுத்தனுமானுத்தேன் யோசிச்சேன்” என்றான்.
“எப்பவுமே உங்களுக்கு, உங்க அக்கா மவளுக்கு ஒரு நியாயம், எனக்குன்னா ஒரு நியாயம்த்தேன்ன” என்றாள்.
அவளின் கேள்வியில், “ஹேய் அப்புடி இல்லம்மா” என்று அவன் ஏதோ சொல்ல முயற்சிக்க, “உங்க அக்கா மவ ஆசை மட்டும்த்தேன்ன உங்களுக்கு உசத்தி, என் ஆசை எல்லாம் அது தேவ இல்லத்தேன்ன” என்று அத்தனை கோவத்துடன் கேட்டாள்.
“ரெண்டுமே ஒன்னுத்தேன்ன?” என்று அவன் சொல்ல, அதில் அவனை முறைத்தவள், “எங்க? என்னப் பார்த்து சொல்லுங்க. ரெண்டுமே ஒன்னுன்னு” என்று இப்போது கொஞ்சம் சத்தம் கூட்டியே கேட்டிருந்தாள்.
அதில், “செரி செரி. தப்புத்தேன். இப்போ நான் என்ன பண்ணட்டும்?” என்று அவளிடமே பதிலை ஒப்படைத்தான். இப்போது அவளோ, ஏதும் சொல்லாது மீண்டும் அந்தப் பக்கம் திரும்பி கொண்டாள்.
இப்போதும் அழுது கொண்டே, “மாமா, அக்கா மவ ஆசைய நிறைவேத்துறேன்னு, கதிரு பொண்டாட்டி கனவ அழிச்சிடாதீங்க” என்று கண்ணில் நீரோடு கெஞ்சில் நிலா கண் முன்னே வந்து நின்றாள்.
அவன் ஒன்று நினைத்து செய்யப் போய், அது மொத்தமாய் என்னென்னவாகவோ மாறியிருக்க, இப்போது கதிரு பொண்டாட்டியின் கோவத்தை தீர்க்க வழி தெரியாது முழித்தான்.
அமைதியாக, அவனே அவளை ஊருக்கு அழைத்திருந்தால், கொஞ்சமாவது அவள் அமைதியாகியிருப்பாள். இப்போது அவளுடைய ஆதங்கம் இன்னுமே கூடியிருக்க, இப்போது அடுத்து என்ன செய்ய என்று புரியாது நின்றான்.
நிலாவோ, சில நிமிடம் கழித்து அவன் பக்கம் திரும்பி, “சாப்டீங்களா? இல்லையா?” என்றாள்.
அவளின் கேள்வியில், “ம்” என்று அவன் எல்லாப் பக்கமும் ஆட்ட, அதில் அவனை முறைத்தவள், ட்ரைவரிடம், “அன்ணா, அடுத்து ஏதாச்சும் நல்லதா ஒரு ஹோட்டல் வந்தா நிறுத்துங்க” என்று சொல்லியப்படி சீட்டில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டாள்.
அவனுடன் செல்வது மனதுக்கு நிம்மதியை கொடுத்தது. ஆனாலும் கூட, அவன் அழைக்கவில்லை என்ற உறுத்தல் அவளுக்குள் இருக்க, அவனைப் பார்ப்பதை தவிர்த்தாள்.
அதன் பின் இருவருமாய் ஒரு ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு வெளியில் வர, ட்ரைவர் சாப்பிட சென்றிருந்தார்.
காரில் வந்து நிலா அமர, கதிரோ, அந்த இடத்தை சுற்றிப் பார்த்தான். ட்ரைவர் வந்ததும் அவன் காரில் ஏற, நிலாவோ சாப்பிட்டதுக்கும் அதற்கும் சற்று கண் அசந்திருந்தாள்.
அதில் மெதுவாய் அசைவு கொடுக்காது அவள் பக்கம் ஏறி அமர்ந்தவன் ட்ரைவரிடமும், “அண்ணா கொஞ்சம் பொறுமையாவே போங்க” என்று சொல்ல அவரும் சரி என்றார்.
கார் அமைதியாய் பயணித்துக் கொண்டிருக்க, உறங்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்தான். அவள் கண்ணாடியில் இடித்துக் கொள்ள, இவன் மெதுவாய் அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.
அவளோ, அந்த வசதி பத்தாது என்பது போல், அவன் தோளில் இருந்து எழுந்து அவன் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள். அவளின் செயலில், அவனுக்கு சிரிப்பு வர மெதுவாய் அவள் தலையை கோதிக் கொடுத்தான். இரவெல்லாம் அவள் உறங்காமல் இருந்திருக்க, இப்போது நன்றாகவே அசந்து உறங்கிவிட்டாள்.
கார் மதுரையை நெருங்கும் போதும் கூட அவள் எழவில்லை. அவன் வயிற்றில் முகம் புதைத்து அவள் தூங்க. பெண்ணவளின் தீண்டலில், இங்கே இவனுக்குள்ளோ குற்றால சாரல் வீசியது.
கிட்ட தட்ட அவர்கள் ஊருக்குள் செல்லும் பாதைக்குள் கார் நுழைய, நிலாவுக்கு முழிப்பு தட்டியது. அதில் திடுக்கிட்டு அவள் எழ, அவனோ, “என்னாச்சி?” என்றான்.
“ம். ஒன்னுமில்ல” என்றப்படி மீண்டுமே அவன் மடியில் படுக்க சென்றவளுக்கு அப்போதே கனவு அல்ல நிஜம் என்பது புரிய, வேகமாய் அவனை விட்டு விலகி அமர்ந்தாள்.
அவளின் செயலில், அவன், “இன்னும் ஊருக்குள்ள போகல” என்றான். உடனே அவள் வெளியில் பார்க்க. அவள் ஊர் அவள் எப்படி விட்டு சென்றாளோ அப்படியேத்தான் இருந்தது. ஆனால் அந்த நிலாத்தான் காணாமல் போயிருந்தாள்.
இந்தப் பாதையில் எத்தனை நாள் அவனுடன் அவள் சென்றிருப்பாள். இப்போதும் கூட பஸ்ஸிற்காக காத்திருக்கும் போது, கதிரை அவள் அவனறியாமல் பார்ப்பது அவன் வந்து பேசுவது என்று அத்தனையும் மின்னலென மனதில் ஓட, ஒரு நொடி நிலாவின் மனம் அந்த பத்தாம் வகுப்பு மாணவியின் மனது போல் மாறியது.
அருகில் இருப்பவனைப் பார்த்தாள். அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். கிட்ட தட்ட, அவர்கள் ஊரை நெருங்கும் போது இரவாகியிருக்க, ட்ரைவரோ, “எந்தப் பக்கம் மேடம்” என்றார்.
“அது” என்று அவள் சொல்லும் முன்னே, கதிர் அவருக்கு வழியை சொல்ல, நிலாவோ அமைதியாய் திரும்பிக் கொண்டாள். ஆனால் வீடு நெருங்க, நெருங்க அவளுக்கோ ஒரு பதட்டம். அத்தனைப் பேரையும் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? என்ற கேள்வி உதயமானது. அவள் பக்கம் தவறே இல்லைத்தான். அவள் அங்கிருந்து சென்றதுக்கு அவள் காரணம் இல்லைத்தான். ஆனாலும் கூட இத்தனை வருடங்களுக்குப் பின் அவர்களை சந்திக்கப் போவது ஒரு வித பதட்டத்தைக் கொடுத்தது.
அது அவள் முகத்திலேயே தெரிய, அவள் கையை அழுத்திப் பிடித்து, “நான் இருக்கேன்த்தேன்ன” என்றான். அதில் சற்றும் யோசிக்காது அவன் தோளில் வேகமாய் சாய்ந்துக் கொண்டாள்.
(இம்புட்டு டென்சன் எதுக்கு நிலா? தப்புன்னு பார்த்தா?... ம் யார் மேலன்னு சொல்ல தெரியல. ஆனா உன் மேல தப்பு இல்ல.. செரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தென்றல் தீண்டுமா?..
Ayesha Shahul
ஸ்டோரி பாஸ்ட்டா மூவ் ஆகுற விதம் ரொம்ப பிடிச்சிருக்கு சிஸ்டர் நைஸ் ஸ்டோரி ❤️❤️❤️
Kadir Neela best couples 💞💞💞
தீண்டாதேன் தென்றலே ரொம்ப ரொம்ப பிடிச்ச ஸ்டோரி 🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻
தேன் சுடர் டெய்லி அப்லோட் பண்ணா நல்லா இருக்கும்
வரமாய் வந்தவழிதுணையே 😍👌🏻👌🏻👌🏻