“இப்போ இவன் எங்க போனான்?” என்று யோசித்தப்படி பிரியா விஷ்வாவைத் தேட, அப்போது அவனின் முன்னே வந்து நின்றான் வெங்கட்.
சட்டென்று அவன் முன்னே வந்து நிற்கவும் ஒரு நொடி பதறி, அவள் பின்னே செல்லப் போக, “ஹேய் பப்ளி பார்த்து” என்றான்.
அவனின் அழைப்பில், இவளோ, “என் பேரு பிரியா. பப்ளி ஒன்னும் கிடையாது” என்றாள். “பட் எனக்கு பப்ளி மாதிரித்தான் தெரியிற” என்றவன், அவளை மேலிருந்து கீழாக பார்த்தான். ஏனோ அவளுக்கு அது சிறு பயத்தைக் கொடுத்தது.
அதில் அவனிடம் பேசாது அவள் செல்லப் போக, இப்போது அவள் வழியை தடுத்தப்படி நின்றவன், “சும்மா சொல்லக் கூடாது. இந்த சேலையில, செம்மையா இருக்க” என்றான் வெங்கட்.
அவனின் பேச்சில், இப்போது இவளுக்கு சுள்ளென்ற கோவம் எட்டிப் பார்க்க, “இங்கப்பாருங்க. தேவையில்லாம என்கிட்ட பிரச்சன பன்ணீங்கன்னா, கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன்” என்றப்படி நகர முயற்சித்தாள்.
அதில் இப்போது அவளை மேலும் நெருங்கி வந்தவனோ, “அழகா இருக்கன்னுத்தான சொன்னேன். நான் என்ன இப்படி உன் கைய பிடிச்சேன்னா? இல்ல கட்டித்தான் பிடிச்சேன்னா?” என்று கேட்டப்படி அவள் கரத்தைப் பிடிக்க சென்றான்.
அவனின் செயலில், பட்டென்று அவன் கன்னத்தில் அடித்திருந்தவள், “இந்த மாதிரி வேலைய எல்லாம் என்கிட்ட வெச்சிக்காத” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடியிருந்தாள்.
அவளுமே அடிப்பாள் என்று நினைத்திராதவன், “ஹேய்” என்று அவளின் பின்னே செல்ல நினைத்தான். அதற்குள் அந்தப் பக்கமாய் சிலர் வரவும், கன்னத்தை துடைத்து விட்டு திரும்பினான்.
அங்கே ஆதி, “ச்சீ த்தூ. ஒரு பொண்ணுக்கிட்ட போயி அடி வாங்கிட்டு இருக்க” என்றான்.
“இல்ல ஆதி. அது” என்று வெங்கட் ஏதோ சொல்லப் போக, “நான் சொன்னத பண்ணிட்டீயா?” என்றான்.
“ஆ.ங் இந்தா போரேன்” என்று வெங்கட்-ம் சென்று விட, இப்போது பிரியாவுக்கோ கண்ணெல்லாம் கலங்கியது. ஏதோ ஒரு வேகத்தில் அடித்து விட்டாள் தான். ஆனால் பூஜா அளவுக்குலாம் அவள் தைரியசாலி கிடையாது.
இப்போது ஏனோ பயமாய் இருந்தது. “நீ பாட்டுக்கு அடிச்சிட்ட. அவன் திரும்பவும் வந்து பிரச்சனைப் பண்ணா என்னப் பண்றது?” என்று தனக்குள்ளே யோசித்தாள்.
அன்னேரம் அவளிடம் வந்தவளோ, “ஹே பிரியா. நீ இங்க இருக்கீயா? உன்ன பூஜா, அங்க ஆடிட்டோரியத்துக்கு வர சொன்னா” என்றாள்.
“ஆ..ங் சரி” என்ற பிரியாவும் கண்ணைத் துடைத்துக் கொண்டு, திரும்ப, அப்போதுத்தான் விஷ்வா எதையோ பறிக்கொடுத்தவன் போல் வந்துக் கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்ததும், “இவனுக்கு என்னாச்சு? விஷ்வா” என்றப்படி அவள் அழைக்க, அதில் கலங்கிய முகத்தை அவசரமாய் துடைத்துக் கொண்டவன், “இன்னும் நீ அங்க போகலையா?” என்றான்.
“நீ எங்கப் போன? ஆமா உன் தலை எல்லாம் ஏன் இப்படி கலைஞ்சிருக்கு?” என்ற பிரியா அவனுடைய தலை முடியை சரி செய்து விட்டாள். அது அவனுக்கு அவனின் அம்மாவை நினைவுப்படுத்த. சட்டென்று பிரியாவைக் கட்டிக் கொண்டான் விஷ்வா.
அவன் திடீரென அணைப்பான் என்று எதிர்பாராதவள், ஒரு நொடி அதிர்ந்து, “விஷ்வா என்னப் பன்ற?” என்றாள்.
அப்போதே அவனுக்கும் புரிய, வேகமாய் விலகி, “ஐயோ சாரி சாரி பிரியா. நான் அது ஏதோ அம்மா ஞாபகத்துல அது” என்றவனின் குரலும், முகமும் அத்தனை கலங்கிப் போனது.
அதில் இவளோ, “சரி சரி. அதுக்கு எதுக்கு நீ இவ்ளோ டென்சன் ஆகுற. இப்போ நீ ஒகேத்தான?” என்றவள், அவனுடைய சட்டையை சரி செய்துவிட்டாள்.
“ம்” என்றவன், சிறுவனாய் தலையாட்ட, ஏனோ பிரியாவுக்கு அவளுடைய பிரச்சனை மறந்துத்தான் போனது. “சரி வா. பூஜா நம்மள தேடுவா” என்ற பிரியா அவன் கரத்தைப் பிடித்து அழைத்துக் கொண்டு சென்றாள்.
இதை எல்லாம் சற்று தள்ளி நின்று பார்த்த வெங்க்ட்டுக்கு அத்தனை ஆத்திரம் எழுந்தது.
“நான் உன் கைய பிடிச்சதுக்கு என் கன்னத்துலையே அடிச்ச. இப்போ அவன் மட்டும் உன்னை கட்டிப் பிடிப்பான், நீ அவென் கைய புடிச்சிட்டு சுத்துவீயா? நில்லு இதுக்கெல்லாம், அவென் இன்னும் அனுபவிப்பான் பாரு” என்று குரோதமாய் சொல்லிக் கொண்டான்.
அங்கே அர்ஜூனோ, எல்லாம் சரியாக நடக்கிறதா? என்றுப் பார்த்துக் கொண்டிருந்தவனின் முதுகுக்குப் பின்னே வந்து நின்ற பூஜாவோ, “குட் மார்னிங் சார்” என்றாள்.
அவளின் குரலில் முகம் தானாய் சிரிப்பை தத்தெடுக்க, இருந்தும் அதை வெளிக்காட்டாது, அவள் பக்கம் திரும்பி, “குட் மார்னிங். இங்க என்னப் பண்ணிட்டிருக்க?” என்றான்.
“எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துட்டு இருக்கேன் சார்” என்று சொல்ல, “உன்னோட பேட்ஜ பாத்தா போதும். சீனியர்ஸ் ஏரியால உனக்கென்ன வேல” என்றான்.
“ஆல் ஏரியாலையும் அலாட்டா இருக்கனும்ல சார்” என்று அவள் சொல்ல, அதற்குள், அருகில் இருந்த சைண்ஸ் டிபார்ட்மெண்ட் மாணவர்கள், கையில் இருந்த சிகுனா பேப்பர்ஸை வெடிக்க வைத்திருக்க, அந்த சத்தம் கேட்டு, “சார்” என்றப்படி அவனின் கரத்தைப் பிடித்து நின்றாள்.
“ஹேய் பாத்து” என்றவன், இப்போது அந்தப் பக்கம் ஸ்டூடண்ட்ஸைப் பார்த்து “இங்க என்னப் பண்ணிட்டிருக்கீங்க” என்று சிறு கோவத்துடன் கேட்டான்.
அவனின் குரலில், “ஆ..ங் இல்ல சார். சும்மா ஒரு ட்ரெயல்” என்று சொல்ல, “உங்களோட கேம்பைன்க்குள்ள போங்க” என்று அவன் கை காட்ட, அவர்களும் அங்கிருந்து ஓடியிருந்தனர்.
இப்போது பூஜாவின் தலையிலும் சிகுனா பேப்பர்கள் எல்லாம் கொட்டியிருக்க, மெல்ல அதை எடுத்து விட்டான்.
கையிலுமே பட்டிருக்க, “போ போயி வாஸ் பண்ணிட்டு வா” என்றான். “இதுவே அழகாத்தான சார் இருக்கு” என்று அவள் சொல்ல, அதில் அவள் தலையில் கொட்டியவன், “உன்ன திருத்த முடியாது. போ போயி உன் பிரண்ட்ஸ் கூட இரு. ஏதாச்சும்னா கூப்பிடிறேன்” என்றான்.
“ம்” என்று தலையாட்டியவள் செல்ல நினைத்து அடி எடுத்து வைத்து விட்டு பின், “உங்களுக்கும், இந்த சிகுனா சூப்பரா இருக்கும் சார்” என்றவள் சுற்றி ஒரு நொடி பார்த்து விட்டு, அவன் கன்னத்தில், சிகுனாவை தேய்த்து விட்டு ஓடியிருந்தாள்.
அவளின் செயலில், “பூஜா” என்று அவன் கத்த, சரியாக அன்னேரம் அங்கு வந்த மாதவ், “என்னடா? இன்னிக்கு இப்படி ஜொலிக்கிற” என்று கிண்டலடித்தான்.
அதில் பூஜாவின் மீது காட்ட முடியாத கடுப்பை, அவனின் கன்னத்தில் காட்டிவிட்டு அங்கிருந்து சென்றான் அர்ஜூன்.
“என்னத்தாண்டா ஈஸியா அடிச்சிடுறீங்க” என்ற மாதவ்-ம் அவனுக்கான வேலையைப் பார்க்க சென்றனர். மொத்த கல்லூரியுமே அந்த கிரவுண்டில் தான் இருந்தனர். அவரவர் டிபார்ட்மெண்ட்க்கு ஏற்றப்படி ஸ்டால் போட்டிருந்தனர். அவர்களும், பல வகையான தங்கள் கண்டுப்பிடிப்புகளை அங்கே காட்சிப்படுத்தி செய்துக் காட்டிக் கொண்டிருந்தனர்.
வெளி கல்லூரிகளில் இருந்தும் பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் வந்துக் கொண்டிருக்க, அர்ஜூனும் அதன் பின் பூஜாவைப் பார்க்கவில்லை.
இங்கே பூஜாவுக்கும், அந்த இடத்தை எல்லாம் சுற்றிப் பார்க்கவே நேரம் பற்றவில்லை. இங்கே பூஜாவோ, “ஹேய், அந்த பாட்டனி ஸ்டூட்ன்ஸ் எல்லாம் பூவ வெச்சி சூப்பரா ஒரு எக்ஸ்பீரிமெண்ட் பண்ணியிருக்காங்க. பார்க்க வறீங்களா?” என்றாள்.
“ஆ..ங் நான் வரல” என்று விஷ்வா சொல்ல, அதில் பூஜாவோ அப்போதே அவனைப் பார்த்தாள். அவன் என்னவோ சற்று பதட்டமாகவே இருந்தான்.
“என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி இருக்க?” என்று அவள் கேட்க, “ஆ..ங் ஒன்னும் இல்லையே” என்று அதையும் பதட்டமாய் தான் கூறினான்.
இங்கே அதற்குள் பூஜாவிடம், “ஹே பூஜா, இங்க எங்க எக்ஸ்பீரிமெண்ட் ஒர்க் ஆகல. கொஞ்சம் என்னென்னு பாக்குறீயா ப்ளீஸ்” என்று ஒருவள் அழைக்க, “ம் வரேன்” என்றவளும் அங்கு சென்றாள்.
இப்போது பிரியாவோ விஷ்வாவிடம், “என்னாச்சுடா?” என்றாள். “அதெல்லாம் ஒன்னும் இல்ல. எனக்கு எங்க ஹாஸ்டல் எக்ஸ்ப்ரீமெண்ட் ஒர்க் எல்லாம் இருக்கு. நான் அங்கப் போறேன். நீ பூஜா கூட போ” என்று சொல்லிவிட்டு சென்றான்.
அதில் பிரியாவும் அதற்கு மேல், எதுவும் சொல்லாது பூஜாவுடன் சென்றாள். இங்கே விஷ்வாவுக்கோ நேரம் ஆக ஆக அத்தனைப் பயமாக இருந்தது.
இடையில் வேறு அந்த ஆதி அவனிடம் வந்து, “சொன்ன டைமுக்கு, அந்த பொண்ண அங்க கொண்டு வந்து விடனும். இல்ல. உன்னோட படத்த ஒட்டு மொத்த காலேஜும் பாக்கும். யார்ட்டையாச்சும் கம்ப்ளைன்ட் பண்ணனும்னு நினைச்ச, என் பவர் என்னென்னு தெரியும்த்தான?” என்று மிரட்டிவிட்டுத்தான் சென்றிருந்தான்.
இப்போது அந்த யோசனையிலே வந்த விஷ்வா, எதிரில் வந்துக் கொண்டிருந்த மாதவின் மீதே மோதினான்.
“டேய் பாத்து வர மாட்டீயா?” என்று மாதவ் கேட்க, அதில் மேலும் பயந்தவன், “ஆ..ங் இல்ல சார். சாரி சாரி” என்று அவன் அத்தனை பயத்துடன் கூறினான்.
அதில் மாதவ்வோ, “பரவாயில்லையே, நம்மள பாத்தும் ஸ்டூடண்ட்ஸ் பயப்படத்தான் செய்றாங்க” என்று தனக்குள் சொல்லியவன், “பாத்து போ” என்றப்படி நகர்ந்தான்.
ஆனால் விஷ்வாவுடைய பதட்டத்தைக் கவனித்த அர்ஜூனோ, அடுத்த நொடி அவனிடம் செல்ல நினைத்தான். அதற்குள் பிரின்சிபல் அவனிடம் பேச வந்திருக்க, அவனும் அதை மறந்து விட்டான்.
இப்படியாக கார்னிவல் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்றுக் கொண்டிருந்தது. பிரதன்யாவின் கூட்டத்தில் இருந்தவளோ, “என்னடி? அந்த பூஜா மட்டும் ஜாலியா சுத்திட்டு இருக்கா” என்றாள்.
“ஆமா ப்ரது, இவள மட்டும் எப்படி அர்ஜூன் சார் விட்டாரு? என்று இன்னொருவள் கேட்டாள்.
“ம் அவகிட்ட கொடுத்தா எதுவும் உறுப்படியா இருக்காதுன்னு நினைச்சிருப்பாரோ என்னவோ? நீங்க அவள விடுங்க. நம்ம எக்ஸ்ப்ரீமெண்ட் தான், பர்ஸ்ட் பிரைஸ் வாங்கனும். அந்த பூஜா முன்னாடி நம்ம அர்ஜூன் சார்கிட்ட அப்ரிசியேசன்ஸ் வாங்கனும்” என்றாள் பிரதன்யா.
இது எல்லாம் பூஜாவின் காதிலும் விழத்தான் செய்தது. ஆனால் அவள் தான் அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.
எல்லாம் நல்லப்படியாய் முடியப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அர்ஜூனிடம் வந்த விஷ்வாவோ, எதையோ சொல்ல, “என்ன?” என்று கேட்டவன் வேகமாய் அந்த பிஸிக்ஸ் லேப் பக்கம் ஓடியிருந்தான்.
இங்கே விஷ்வாவோ முகத்தில் வடிந்த வியர்வையைத் துடைத்தப்படி, எதிரில் நின்ற ஆதியைப் பார்த்தான். ஆதியின் முகத்தில் கர்வ புன்னகை. இப்போது அவனும், வெங்கட்டின் காதில் எதையோ சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.
இப்போது பிரின்சிபால் அர்ஜூனை தேட, மாதவ்வோ, “இன்னேரத்துல இவன் எங்கப் போனான்?” என்று யோசித்தவன், அவரிடம் சென்று சமாளித்தான்.
லேப்பிற்குள் நுழைந்ததும் ஆதி, வெளியில் இருந்து அந்த கதவை மூடியிருந்தான். நொடிகள் கூட கூட இங்கே விஷ்வாவுக்கோ மயக்கமே வருவது போல் இருந்தது.
அவனைப் பார்த்தப்படியே அவனிடம் வந்த பிரியா, “ஹேய் என்னாச்சு? தண்ணி எதுவும் வேணுமா?” என்றாள்.
“ம்ஹூம்” என்ற விஷ்வாவோ அப்படியே அங்கிருந்த படிக்கட்டில் அமர்ந்துவிட்டான். “நீ நான் கேட்டா சொல்ல மாட்ட. பூஜா கேட்டாத்தான் சொல்லுவ” என்ற பிரியா பூஜாவிடம் செல்ல முயன்றாள்.
அதற்குள் ஸ்டூடண்ட்ஸுக்குள் சலசலப்பு ஏற்பட, பிரின்சிபல், ஸ்டாப்ஸ் அத்தனைப் பேருமே பிஸிக்ஸ் லேப்பின் பக்கம் வேகமாய் சென்றனர்.
(ரைட்டு அங்க என்ன நடக்கப் போதோ? டேய் ஆதி. இதுக்கெல்லாம் நீ கண்டிப்பா அனுபவிப்ப. சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்புறம் பெஸ்ட் கமெண்ட்ஸ பேனர்ல போஸ்ட் பண்ணிருக்கேன். சோ உங்க கமெண்ட்ஸும் அதுல வரலாம். சோ அதையும் செக் பண்ணிக்கோங்க. அப்புறம் மறக்காம ரேட்டிங் கொடுத்திடுங்க)
தொடரும்…
Mithra R
seekrm adutha episode podunga
Keerthi S
paavam antha pacha kolanthai vishva ippadi torchal panuringaley da…
Ammu Sathish
சூப்பர்.. waiting for next ud.. அர்ஜுன் கூட பூஜா தான் இருப்பா.. இந்த ஆதி மொக்க வாங்க போறான் னு நினைக்கிறேன் ❤
Ammu Gnanarajan
evan edho panitan pola aana kadaisila mokka vanga poran
Devi Saravanan
pavam anthapullapoochiya (vishwa) vitrungada
Kowsi Ram
enna nadkum eppadiyum aadhi than mokka vanguvanu nenaikuran mmm parkalam . next ud kaga waiting