கல்லூரியில் ஏதாவது கல்சுரல் புரோகிராம் என்றாலே அர்ஜூன் சற்று காட்டமாகத்தான் சுத்துவான். இப்போதும் அப்படித்தான். காலையில் இருந்தே அரக்க பறக்க அவசரமாய் கிளம்பிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்தப்படி அமர்ந்திருந்தவளோ, இன்னும் குளிக்க கூட செல்லவில்லை.
ஒரு கட்டத்தில், எதையோ தேடியப்படி திரும்பியவன், அவள் இன்னமும் காலை காபியோடு அமர்ந்திருப்பதைப் பார்த்து, “ஹேய் இன்னும் நீ கிளம்பாம என்னப் பண்ணிட்டுருக்க?” என்று கத்தினான்.
அதில் காதை ஒரு விரலால் குடைந்தவள், “காலேஜ் பத்து மணிக்குத்தான் சார்” என்றாள்.
“அதுக்குன்னு, இப்படியே உட்கார்ந்திருப்பீயா? இன்னிக்கு கல்சுரல் டேய். என்கிட்ட என்ன சொன்ன நீ? அங்க எந்த இஸ்யூவும் வராம பார்த்துக்கிறேன்னு சொன்னத்தான? இப்படி இவ்ளோ அசால்டா உட்கார்ந்திட்டு இருக்க” என்றான்.
“சார். காலேஜ்ஜே திறக்கவே டைம் இருக்கு. நீங்க எதுக்கு இவ்ளோ டென்சன். இன்னிக்கு புல்லா கார்னிவல் செலிபிரேஷன்ஸ் தான சார்” என்றாள்.
“ச் உன்கிட்ட பேசிட்டு இருந்தா, எனக்குத்தான் லேட்டாகும், என்னமோ பண்ணு. நான் கிளம்புறேன்” என்றவன் நகரப் போக, அவன் கையைப் பிடித்து நிறுத்தினாள் பூஜா.
“என்ன?” என்று இவன் கடுப்பாய் கேட்க, எதுவும் சொல்லாது அவனை மெல்லமாய் கட்டிக் கொண்டாள். சட்டென்று அவள் அணைக்கவும், அத்தனை நேரம் அவனுக்குள் ஓடிக் கொண்டிருந்த படபடப்பு எல்லாம் சரசரவென்று குறைந்திருக்க, அவளோ, “இதென்ன உங்களோட பர்ஸ்ட் ப்ரோகிராம்மா? எவ்வளவு பண்ணியிருப்பீங்க? இவ்ளோ டென்சன் வேண்டாம். எல்லாம் சரியாத்தான் நடக்கும்” என்றாள்.
அவளின் அணைப்பை விட, அவளுடைய வார்த்தை நிச்சயம் அவனை என்னமோ செய்தது. வாழ்க்கையில் கிடைக்காத விஷயங்கள் எல்லாம் புதிதாய் கிடைக்கும் போது, அதை எப்படி ஏற்றுக் கொள்வது என்று தெரியாது நிற்போமே? அப்படி ஒரு நிலையில் தான் அர்ஜூன் நின்றிருந்தான்.
அவளின் கரம் அவன் சட்டையில் பதிந்திருக்க, அவனுடைய இதயமோ இப்போது அத்தனைப் பலமாய் துடித்தது. அவளோ மேலும் சில நொடிகள் அந்த அணைப்பை நீட்டித்து பின் மெதுவாய் அவனை விட்டு விலகினாள்.
அவனோ அவளையே பார்த்திருக்க, “அச்சோ சாரி சார். சட்ட கசங்கிடுச்சி. நான் போயி வேற சட்டை எடுத்துட்டு வரவா?” என்றப்படி உள்ளே சென்றவள், கையில் வேறு ஒரு சட்டையுடன் வந்தாள்.
அவளின் செயலில், “இந்த சட்டையத்தான் நான் போடனும்னு சொன்னா போடப் போறேன். அதுக்கு எதுக்கு இப்படி கசக்கனும்? அப்புறம் எடுத்துக் கொடுக்கனும்?” என்று அவள் மூக்கை பிடித்து மெல்லமாய் ஆட்டினான்.
அதில் நாக்கை கடித்தவள், “கண்டுப்பிடிச்சிட்டீங்களா சார்? உங்களுக்கு லைட் கலர்ஸ விட டார்க் கலர் எல்லாம் சூப்பரா இருக்கும்” என்று ரசித்துக் கூறினாள்.
அதில் கையில் இருந்த அந்த டார்க் கலர் சட்டையைப் பார்த்தவனோ, “சரி. பேசிட்டே நிக்காத. டைம் ஆகுது போயி கிளம்பு” என்றான்.
“ம்” என்று சொல்லியவள், உள்ளே சென்று குளித்து முடித்து கிளம்பி வெளியில் வர அர்ஜூன் அதுவரையிலும் அவளுக்காக காத்துக் கொண்டுத்தான் இருந்தான்.
அதைப் பார்த்தவள், “என்ன சார்? இன்னும் கிளம்பலையா?” என்று கேட்க, “நீத்தான சொன்ன. காலேஜ் திறக்கவே டைம் இருக்குன்னு” என்று சொல்லியவன், அவளை மேலிருந்து கீழாய் பார்த்தான். வழக்கமாய் அணிவது போல் ஜீன்ஸும் டாப்பும் அணிந்திருந்தாள்.
சென்ற முறை அவள் புடவை கட்டிக் கொண்டு வந்தது நினைவுக்கு வர, இப்போது அவனின் மனமும் அதைத்தான் எதிர்பார்த்திருந்தது.
அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்கவும், “என்ன சார்? அவ்ளோ அழகாவா இருக்கேன்?” என்று சீண்டலாய் கேட்டான்.
அதில் சட்டென்று தன் முகத்தை திருப்பி, “நீ என்ன எப்பவும் போலவே வந்திருக்க?” என்று கேட்டான்.
“ஏன் சார் பேன்சி ட்ரஸ் காம்பிடீசன் எதுவும் இருக்கா? என்ன?” என்று மேலும் சீண்டலாய் கேட்க, “பூஜா” என்று பல்லைக் கடித்தான்.
“இல்ல சார்! அது லாஸ்ட் டைம்மே, சேல கட்டி ஒரே பிரச்சனையா போச்சி” என்றாள் பூஜா.
“ஏன்? என்னாச்சு? யாராச்சும் உன்கிட்ட பிரச்சன பண்ணாங்களா?” என்று சிறு கோவத்துடன் அவன் கேட்க, அந்த நொடி, நிச்சயம் அவன் கண்ணில் ஒரு பொறாமை உணர்வு தலை தூக்கியிருந்தது.
அதைக் கண்டுக் கொண்டவளின் மனமோ, “சார் இவ்ளோ எக்சைட் ஆவாருன்னு தெரிஞ்சிருந்தா. சேரியே கட்டிருக்கலாமோ” என்று யோசித்தப்படி, “அச்சோ அதெல்லாம் இல்ல சார். நான் ஒரு பக்கம் போக, அந்த சேல ஒரு பக்கம் போகன்னு, என்ன வெச்சி செஞ்சிடுச்சி. இதுல வேற நீங்க என்னை அடிச்சிட்டீங்க. அந்த சேலைய கட்டிட்டு என்னால நடக்க கூட முடியல தெரியுமா?” என்றாள்.
அப்போதே அவனுக்கு அவளை அவன் அடித்த விஷயம் நினைவுக்கு வர, ஏனோ இப்போது தன் மீதே அவனுக்கு கோவம் வந்தது.
“ஹேய் சாரி. அன்னிக்கு ஏதோ டென்சன்ல” என்று அவன் வருத்தப்பட, “ஐயோ சார்! அடிவாங்குறதெல்லாம் எனக்கு புதுசு கிடையாது. உங்கள விட என் அம்மாட்ட ஏகப்பட்ட அடி வாங்கியிருக்கேன்” என்று சிரித்துக் கொண்டே கூறினாள்.
அதைக் கேட்டவனோ, “சேட்ட கம்மியா பண்னனும்” என்று சொல்லியப்படி அவளுடன் நடக்க, “அதுக்குத்தான் சார். எனக்கு இப்படி வாத்தியார் மாப்பிள்ளையா பாத்து கட்டி வெச்சிருக்காங்க” என்று கிண்டலாய் கூறினாள்.
“ஆமா இப்போ மட்டும் மேடம் சேட்ட பண்றது இல்லையா?” என்று அவளுடன் சகஜமாய் கேட்டப்படி நடக்க, இதை எல்லாம் பார்த்த மாதவ்வோ, “என்னடா இது? வழக்கமா இந்த மாதிரி நாள்ல எல்லாம் நாயை விட மோசமா கத்திட்டு சுத்துவான். இன்னிக்கு என்னென்னா, பொண்டாட்டியோட சுமூகமா பேசி சிரிச்சிட்டு போறான்” என்று தனக்குள் சொல்லியவன் தப்பித் தவறி கூட அவன் முன் சென்றிருக்கவில்லை.
அதன் பின் அர்ஜூனே பூஜாவையும் அழைத்துக் கொண்டு செல்லும் வழி எங்கிலுமே பூஜா அவனுடன் பேசிக் கொண்டேத்தான் வந்தாள்.
அது அவனுடைய மனநிலையை இன்னுமே அழகாக்கியது. வழக்கம் போல், அவளை இறக்கிவிட, அவளோ வழக்கமாய் கொடுக்கும் முத்தத்தை கொடுக்காமல் நகர்ந்தாள்.
“ஹேய் பூஜா” என்று அவன் அழைக்க, “என்ன சார்?” என்று அவன் பக்கம் திரும்பினாள்.
“மறந்துட்டுப் போற?” என்று அவன் சொல்ல, “அச்சோ அட ஆமால்ல” என்றவள் இப்போது அவன் சட்டையைப் பற்றி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
அதில் அவனோ, “ச் பூஜா. நான் உன் காலேஜ் பேக்க சொன்னேன்” என்று அதை நீட்டினான்.
“ஓ இதுவா? ஐயோ சாரி சார். கன்னத்த துடைச்சிக்கோங்க” என்று சொல்லிவிட்டு ஓடியிருந்தாள்.
அதில் அவனின் மனமோ, “நீயும் இதுக்காகத்தான சொன்ன” என்று சீண்ட. “ச்சே ச்சே அதெல்லாம் இல்ல. அவ பேக்கத்தான் சொன்னேன்” என்றான்.
“நீயும் அவ கூட சேர்ந்து ஒரு மாதிரி ஆகிட்டு வர்ற” என்று மனம் சொல்ல, அவனோ கன்னத்தை தேய்த்தப்படி ஹெல்மெட்டை எடுத்து மாட்டினான்.
ஆம் அந்த முத்தத்துக்காகத்தான் அவன் ஹெல்மெட் கூட அன்று அணிந்திருக்கவில்லை. அவனே அறியாமல் அவளின் மீது காதல் பூக்க ஆரம்பித்திருந்தது. காதல் என்பதைத் தாண்டி, கொஞ்சம் கொஞ்சமாய் பூஜா என்பவள், அவனுடைய தேவையாய் மாறிக் கொண்டிருந்தாள்.
இப்போது, வெங்கட்டோ, “மச்சான் நல்லா யோசிச்சிக்கோடா. பொண்ணு விஷயம். ஏதாச்சும் தப்பாச்சுன்னா, ரொம்ப பெரிய விஷயமாகிடும்டா” என்றான்.
“ஹேய் இப்படி பயந்து சாவுறதா இருந்தா, கெளம்பி போ. நானே பார்த்துக்கிறேன். அந்த அர்ஜூன் என்ன அத்தன பேர் முன்னாடி அடிச்சு அவமானப்படுத்துனான் தான? இன்னிக்கு, அவென்ன, இந்த ஒட்டு மொத்த காலேஜ் முன்னாடியும் அவமானப்படுத்துறேன். அவனால எங்கையுமே வேல பாக்க விடாம பண்றேன்” என்று குரோதமாய் சொல்லிக் கொண்டான்.
இங்கே பூஜாவோ, பிரியா, விஷ்வாவிடம் வந்து, “என்ன? எல்லாம் ஒகேத்தான?” என்று கேட்டாள்.
“ம் ஒகேத்தான். ஆனா நீ என்ன? இப்படி எப்பவும் போல கிளம்பி வந்திருக்க?” என்றாள் பிரியா. “நீங்களாம் பார்டிசிபேட் பண்றீங்க. சோ அதுக்கு தகுந்த மாதிரி காஸ்டீயூம்ல வந்திருக்கீங்க. நான் ஜஸ்ட் வேடிக்கைத்தான பார்க்கப் போறேன்” என்றாள்.
“ஆமா உன்ன மட்டும் எப்படி அர்ஜூன் சார் சும்மா விட்டாரு?” என்று விஷ்வா குழப்பமாய் கேட்க, “அதெல்லாம் டாப் சீக்ரெட்” என்றாள் பூஜா.
அதற்குள், “என்ன பூஜா? இன்னிக்கு நீ சேரி கட்டிட்டு வருவன்னு நினைச்சேன்” என்றான் ஆதி.
அதில் பிரியாவோ விஷ்வாவிடம், “ச் என்னடா? இன்னும் இவன் வரலையேன்னு நினைச்சேன். எனக்கென்னமோ, இவன் ஆக்டிவிட்டீஸே பிடிக்கல” என்றாள்.
“ஆதி சீனியர விடு. அவர் பிரண்ட நோட் பண்ணீயா நீ?” என்று கேட்டான் விஷ்வா. அதில் பிரியா அந்த வெங்கட்டைப் பார்த்தாள். அவனோ, இவளைத்தான் பார்த்திருந்தான்.
அதில் இவளோ இப்போது சிறு பதட்டத்துடன் விஷ்வாவின் கரத்தை இறுக்கமாய் பற்றிக் கொண்டாள். அதைப் பார்த்த வெங்கட்டோ, விஷ்வாவை அத்தனை எரிச்சலாய் பார்த்தான்.
விஷ்வாவோ, “ஹேய் என்ன? அவருக்கு உன்ன பிடிச்சிருக்கோ? என்னமோ?” என்றான்.
அதில் இப்போது அவனை முறைத்தவளோ, “எனக்கு சுத்தமா பிடிக்கல. தேவையில்லாம இப்படி ஏதாச்சு பேசுன, பிரண்ட்ன்னு பாக்க மாட்டேன். கடிச்சி வெச்சிடுவேன்” என்று திட்டினாள் பிரியா.
அதென்னவோ மற்றவர்களிடம் எல்லாம் பிரியா சற்று அமைதித்தான். விஷ்வாவிடம் மட்டுமே அவளுக்கு வாய் வரும். அதுத்தான் வெங்கட்க்கு அத்தனை கடுப்பை கொடுத்தது.
“முதல்ல இந்த விஷ்வாவ தட்டி வைக்கனும். எப்போ பார்த்தாலும் என் பப்ளி கூடவே சுத்திட்டு இருக்கான்” என்று கோவமாய் தனக்குள் சொல்லிக் கொண்டான்.
அங்கே பூஜாவோ, “ஐயோ சீனியர்! நான் கூட நீங்க வேஷ்டி கட்டிட்டு வருவீங்களோன்னு நினைச்சேன்” என்று சிறு கிண்டலுடன் கூறினாள்.
அதற்குள் பிரியாத்தான், “பூஜா வா. அப்பவே பூங்கொடி மேடம் கூப்டாங்க” என்றப்படி அவளை இழுத்துக் கொண்டு சென்றாள்.
“ஹே நில்லுங்க நானும் வரேன்” என்றப்படி விஷ்வா அவர்கள் பின்னே செல்லப் போக, “ஹே நில்லு” என்ற ஆதி, அவனை அங்கிருந்து பாத்ரூமிற்கு இழுத்து சென்றான்
அதில் விஷ்வாவோ சற்று பயந்து, “என்ன சீனியர்?” என்றான். “எப்போ பார்த்தாலும் அவங்க கூடையேத்தான் சுத்திட்டு இருப்பீயா?” என்று கேட்டான் வெங்கட்.
“பிரண்ட் சீனியர்” என்று அவன் சொல்ல, “ஏன்? உனக்கு பையன் பிரண்ட்ஸே இல்லையா? இல்ல எந்த பையனும் உன்ன கூட சேர்த்துக்கலையா?” என்று நக்கலாய் கேட்டான் ஆதி.
அவனுடைய பேச்சில் விஷ்வாவுக்கு அவமானமாகிவிட, இருந்தும் அமைதியாய் இருந்தான்.
“இங்கப்பாரு. நான் யாரு தெரியும்த்தான?” என்றான் ஆதி. “என்ன மச்சான்? தெரியலன்னா, தெரிய வச்சிட வேண்டியதுத்தான” என்ற வெங்கட், இப்போது அவனுடைய சட்டைக் காலரைப் பிடித்திழுத்தான்.
“ப்ளீஸ் சீனியர் விடுங்க. யாராச்சும் பார்க்கப் போறாங்க” என்றவன் சட்டையில் இருந்த கரத்தை விலக்கிக் கொள்ள முயற்சிக்க, “பாருடா? சாருக்கு அவமானமா இருக்காம்” என்று ஆதி கேலி செய்ய, வெங்கட்டோ, “அப்போ இன்னும் கொஞ்சம் அவமானப்படுத்திப் பார்ப்போமா?” என்றப்படி அவன் சட்டைப் பட்டனை கழட்ட சென்றான்.
“ஐயோ என்ன சீனியர் பண்றீங்க? விடுங்க” என்று விஷ்வா சொல்ல, அங்கே அப்போதே பிரியா விஷ்வா எங்கே என்று தேடினாள். பூஜாவோ பூங்கொடி மேடமுடன் கிரவுண்ட்க்கு சென்றிருந்தாள்.
“எங்கப் போனான்?” என்றப்படி அவளும் அவனை தேடி வர, அங்கே ஆதியோ, “சொன்னது எல்லாம் புரிஞ்சிச்சித்தான? நான் சொல்றப்ப, அந்த பொண்ண, நான் சொல்ற இடத்துல கொண்டு வந்து விடனும். இல்ல. போன்ல இருக்கிறத அப்படியே காலேஜ் க்ரூப்ல போட்டு விட்டுடுவேன்” என்றான்.
அங்கே விஷ்வாவோ, “ஐயோ ப்ளீஸ் ப்ளீஸ் சீனியர் அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க” என்று கிட்ட தட்ட கெஞ்சினான். “ம் செய்ய கூடாது அப்படின்னா, நான் சொன்னத செய். இல்லன்னா அவ்ளோத்தான்” என்று சொல்லியப்படி அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்றனர்.
இங்கே விஷ்வாவோ அவசரமாய் தன்னுடைய சட்டைப் பட்டனை மாட்டியவனுக்கு முகமெல்லாம் சிவந்து கண்ணெல்லாம் கலங்கியிருந்தது.
(டேய் ஆதி, வெங்க்ட் ரொம்ப மோசமாத்தான் போறீங்க. சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்புறம் பெஸ்ட் கமெண்ட்ஸ பேனர்ல போஸ்ட் பண்ணிருக்கேன். சோ உங்க கமெண்ட்ஸும் அதுல வரலாம். சோ அதையும் செக் பண்ணிக்கோங்க. அப்புறம் மறக்காம ரேட்டிங் கொடுத்திடுங்க)
தொடரும்…
Samrin Shamil
sia priya and Vishwa love track vendam avangala friends aa paaka thaan nalla irukku
Keerthi S
venkat unnaku irruku da back fire
Mithra R
ayyo ore pathatama iruke, yenna nadakumnu
Ammu Sathish
சூப்பர் 🥰அப்படி என்ன பண்ண போறாங்க 🤔
Kowsi Ram
achoo arjun cute talk 😍😍😍 aathikum venkatkum neram sari illa 😡 paavam vishwa 😒 next ud Kaga waiting sister
Ammu Gnanarajan
pooja kita ne matna da aadhi
Devi Saravanan
dei poojava pathi theriyama ellam panreenga.avakukku ethavathu prachinainnakoofa kandukkamatta ana arjun ku ethavathu problem panneenga avlothan pathukkonga. pracha