வரம் – 54

அன்றைய தினமும் பூஜா அவனுக்கு போக்கு காட்டி விட்டு மாதவ்வுடன் தான் கிளம்பினாள். அதில் இவனுக்கோ பல்லைக் கடிக்க மட்டுமே முடிந்தது. ஸ்டாப் ரூம் வந்து கண்ட மேனிக்கு அவனை கோவம் தீரும் மட்டும் திட்டி தீர்த்தான்.

அதில் மாதவ்வோ, “ஏண்டா? நீ வேனும்னா, உன் ரூல் புக்ல இருக்கிற மாதிரியே சுத்து. பட் என்னால எல்லாம் அப்படி இருக்க முடியாது. ஒன்னு பூஜாவ நீ கூட்டிட்டு வந்து விடு. இல்லையா? நானே கூட்டிட்டு வந்து விடுறேன். யாராச்சும் கேட்டா, எனக்குலாம் உன்ன மாதிரி எந்த கெளரவ குறைச்சலும் இல்ல. என் தங்கச்சின்னு சொல்லிப்பேன்” என்றான் மாதவ்.

“ச் மாதவ். புரியாம பேசாத. நம்ம இங்க வேல பாக்குறோம். பட் அவ இங்க படிக்க வந்திருக்கா? இங்க நம்மள சுத்தி இருக்கிற பிரச்சனை எல்லாம் அவ மேலத்தான் போயி விழும். அதுலையும், நம்ம அவளுக்கு கிளாஸ் வேற எடுக்கிறோம். அப்படி இருக்கிறப்ப, நம்ம என்னப் பண்ணாலும், நம்ம பார்ஷியாலிட்டி பாக்குற மாதிரி மத்தவங்களுக்கு பீல் ஆகும்” என்றான்.

“எப்படியும் ஒரு செமஸ்டர் முடிய போகுது. இன்னும் மூனு இல்லன்னா, நாலு மாசத்துக்குத்தான் நான் அவங்களுக்கு கிளாஸ் எடுப்பேன். சோ நான் அவ அண்ணன்னு சொல்றதால ஒன்னும் ஆகிடாது. அதுவும் போக, என்னால எல்லாம், உன்னை மாதிரி பூஜா எக்கேடோ கெட்டு போட்டும்னு விட முடியாது. இப்போ என் தங்கச்சின்னு தெரிஞ்சா, கண்டிப்பா மத்த பசங்க அவகிட்ட பிரச்சன பண்ண மாட்டாங்க” என்றான் மாதவ்.

அதைக் கேட்டவனோ, “ரொம்பத்தான் அக்கற” என்று கடுப்பாய் சொல்ல, “பின்ன பூஜா மாதிரி ஒரு தங்கச்சி கிடைக்க கொடுத்து வெச்சிருக்கனும் தெரியுமா? அதுலையும் அவ பேசுனா, கேடுட்டே இருக்கலாம். நீ எல்லாம் என் பிரண்டா போயிட்ட, இல்லன்னா, எப்பவோ அவளுக்கு உன்கிட்ட இருந்து டைவர்ஸ் வாங்கி கொடுத்து, வேற ஒரு ஸ்வீட்டான பையன கல்யாணம் பண்ணி வச்சிருப்பேன்” என்றான்.

“மாதவ்” என்றவன் அவன் கழுத்தைப் பிடித்து நெறிக்க, “ஐயோ கொல கொல” என்று கத்தினான் மாதவ். அதில் இன்னுமே இறுக்கிப் பிடித்தவன், “மவனே, உன் அக்கறையால, அவளுக்கு தேவையில்லாத பிரச்சன வந்திச்சு. உன்ன கொன்னுடுவேன். பெரிய இவன். இவனுக்கு மட்டுமே அக்கற இருக்கிற மாதிரி. எதுக்கு சொல்றேன்னு புரிஞ்சிக்காம, என்னென்னவோ உளறிட்டு இருக்கான்” என்று மிரட்டி விட்டு அவனை விட்டு சென்றான் அர்ஜூன்.

செல்பவனைப் பார்த்த மாதவ்வோ, “ப்பா! கொஞ்சம் விட்டா இப்பவே கொன்னுருப்பான். பட் பரவாயில்ல இவனுக்கு அப்போ பூஜாவ டைவர்ஸ் பண்ற எண்ணம் எல்லாம் இல்ல. பொசஸிவ்வும் இருக்கு. இத வச்சே, இவன எப்படியாச்சும் பூஜா கூட கோர்த்து விட்டுரனும்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

“ஒரு புரோபசரா இருந்துட்டு என்ன வேல பாக்குற தெரியுமா?” என்று மனசாட்சியின் குரல் கேட்க, “ம் தங்கச்சி வாழ்க்கைக்காக, மச்சானுக்கு மாமா வேல பாக்கலாம். தப்பு ஒன்னும் இல்ல” என்று அசராது சொல்லிக் கொண்டவன் அவன் கிளாஸிற்கு சென்றான்.

அதன் பின் மாலை போல் தான் கார்னிவல் நடத்துவதற்கான அப்ரூவல் வந்திருந்தது. ஆனால் சில பல கண்டிஷன்கள் எல்லாம் போடப்பட்டிருந்தது, அதை எல்லாம் தாண்டித்தான், அர்ஜூன் அந்த பொறுப்பை எடுத்துக் கொண்டான்.

அதிலும் சில ப்ரோப்சர்களுக்கு கடுப்புத்தான். இம்முறை, நிகழ்ச்சிக்களுக்கான பொறுப்பை பூஜா ஏற்றுக் கொள்ளவில்லை. அர்ஜூனும் வற்புறுத்தவெல்லாம் இல்லை. பொறுப்பு வேறு கேங்கிடம் சென்றிருந்தது.

பூஜாவோ எதிலும் கலந்துக் கொள்ளவில்லை என்று சொல்லிவிட்டாள். அவள் இம்முறை அத்தனையையும் பார்க்க முடிவெடுத்திருந்தாள். இங்கே நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளப் போகும் மாணவர்களின் பெயர் அடங்கிய பேப்பரைப் பார்த்த அர்ஜூனுக்கோ இப்போது கோவம் வந்தது.

“இப்போ எதுக்கு இவ எதுலையும் நேம் கொடுக்காம இருக்கா?” என்று யோசித்தவன் விறுவிறுவென்று அவர்கள் வகுப்புக்கு சென்றான். அங்கே ஏற்கனவே பூங்கொடி மேடம் வகுப்பு எடுத்துக் கொண்டிருக்க, “எக்ஸ்கியூஸ் மீ மேடம். நான் கொஞ்சம் ஸ்டூடண்ட்ஸ் கிட்ட பேசிக்கலாமா?” என்றான்.

“ஆ..ங் அர்ஜூன். வாங்க” என்றவர், மணியைப் பார்த்து விட்டு, “ஒகே ஸ்டூடண்ட்ஸ். நான் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கு இல்லையா? இந்த வீக் டெஸ்ட் இருக்கும். சோ படிச்சிட்டு வந்துடுங்க” என்றப்படி அவர் அங்கிருந்து கிளம்பினார்.

பூஜாவோ, அர்ஜூனைப் பார்த்ததும், “என்ன பிரியா? அர்ஜூன் சார் வந்திருக்காரு?” என்றாள்.

“ம் என்கிட்ட கேட்டா? நானே என்னென்னு தெரியாமத்தான இருக்கேன்” என்றாள் பிரியா.

அதற்குள்ளாக, “கார்னிவல் ப்ரோகிராம்ஸ்ல யாரெல்லாம் கலந்துக்கல” என்று கேட்டான் அர்ஜூன்.

“என்னடி? வழக்கமா கலந்துக்கிட்டவங்களத்தான கேட்பாங்க” என்று பூஜா கேட்க, “அதான?” என்ற பிரியாவுமே பாவமாய் பார்த்தாள்.

“உங்க கிட்டத்தான கேட்குறேன்” என்று அர்ஜூன் சத்தம் கூட்ட, ஒரு ஏழில் இருந்து எட்டு பேர் எழுந்து நின்றனர்.

அதில் பூஜாவோ, “நல்ல வேள நம்ம கூட கம்பெனிக்கு ஆள் இருக்கு” என்று சொல்ல, பிரியாவோ, “கொஞ்ச நேரம் அமைதியாத்தான் இரேன்” என்றாள்.

அவளும் அமைதியாகிவிட, இப்போது அர்ஜூனோ, “எதுக்காக கலந்துக்கல?” என்றான். அவனின் கேள்வியில் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்க்க, “கிளாஸ்ல எல்லாருமே கலந்துக்கனும்னு சொல்லித்தான்ன அனுப்புனேன்” என்றான்.

“இல்ல சார். செமஸ்டர் வருது. படிக்கிறதுக்கே டைம் இல்ல” என்று ஒருவள் சொல்ல, “இந்த மாதிரி ப்ரோகிராம்ஸுக்கும் சேர்த்துத்தான் இண்டர்னஸ் மார்க் கொடுக்கிறாங்க” என்றான்.

அதில் அவள் அமைதியாகிவிட, இப்போது அர்ஜூனோ, “இன்னிக்கு ஒரு நாள் டைம். நாளைக்கு நீங்க எல்லாருமே ஏதாச்சு ஒன்னுல கலந்துக்கிட்டுத்தான் ஆகனும். அது எதுன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. இல்லையா? நாளைக்கு நானே வந்து எதுலையாச்சும் பேர சேர்த்திடுவேன்” என்று கிட்ட தட்ட மிரட்டிவிட்டுத்தான் அங்கிருந்து கிளம்பினான்.

அதைக் கேட்ட பிரியாவோ, “ச் இந்த விஷயத்துல, அர்ஜூன் சாரும் உன்ன மாதிரியே இருக்காரு” என்றாள்.

“என்ன?” என்று கேட்க, “ஆமா போன தடவ நீ எங்கள கேட்காமலே, கோர்த்து விட்ட. இப்போ அவரும் அப்படித்தான் சொல்றாரு. ஏதாச்சும் கூட்டமா சேர்ந்து பண்ற மாதிரி இருக்கிறதுல சேர்ந்துக்கலாம்” என்றாள் பிரியா.

“ம்ஹூம், இந்த தடவ பூஜா எதுலையும் கலந்துக்க மாட்டா” என்று பூஜா சொல்ல, “ஹேய் சார் சொன்னது கேட்கலையா உனக்கு?” என்று கேட்டாள்.

“ம் அவர் சொன்னா? நான் கேட்கனுமா? அதுலாம் முடியாது. நான் வேண்டாம்னு முடிவெடுத்தா எடுத்ததுத்தான்” என்று அவள் சொல்லிவிட, இப்போது பிரியாவும் விஷ்வாவும் தான் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அதன் பின் அன்றும் மாதவ்வுடன் வீட்டுக்கு தாமதமாய் வந்த பூஜாவிடம், அவள் உடையை கூட மாற்ற விடாது, “எதுக்கு நீ நேம் கொடுக்கல?” என்று கேட்டான்.

“என்ன சார்?” என்று இவள் கேட்க, “ச் ப்ரோகிராம்க்கு எதுக்கு நேம் கொடுக்கல” என்றான்.

“சார் இது காலேஜ் இல்ல. வீடு” என்றவள், அவன் கையில் இருந்த பேக்கை வாங்கி ஓரமாய் வைத்தாள். அவளின் செயலில், “ச் பூஜா” என்று ஏதோ சொல்லப் போக, அவன் பக்கம் திரும்பி, அவன் அணிந்திருந்த டையை கழட்டியவள், “நேத்தே சொன்னேன் தான சார். வீட்டுல கொஞ்சமா சிரிக்கலாம். இவ்ளோ இறுக்கமா இருக்க வேண்டாம்” என்றவள். எக்கி அவன் தலை முடியை கலைத்து விட்டாள்.

ஏனோ அவளுடைய செயல், ஒரு வித இதத்தைக் கொடுக்க, மனமோ அவள் மடியில் தலை வைத்து படுத்துக்க சொல்லி கெஞ்சியது. அதற்குள் அவளோ, இன் செய்திருந்த அவன் சட்டையை வெளியில் எடுத்தவள் அவன் சட்டைப் பட்டனை கழட்டப் போக, “ஹேய் என்னப் பண்ற?” என்று வேகமாய் பின் எட்டு வைத்தான்.

“ஹெல்ப் பண்றேன் சார். நீங்க சீக்கிரமா ரிபிரஸ் ஆனாத்தான, எனக்கு ரிபிரஸ் ஆக காபி போட்டு கொடுப்பீங்க” என்று சொல்லி கண்ணடித்தாள்.

அவளின் சேட்டையில் சிரித்தவன், “ஏன் இன்னிக்கு மாதவ் உனக்கு டீ வாங்கி கொடுக்கலையா?” என்றான்.

“ஆங் அண்ணா கூப்டார்த்தான். ஆனா, எனக்கென்னமோ உங்க கூட காபி சாப்பிடனும்னு தோணுச்சு. அதான் போகல” என்றாள். அவளின் வார்த்தையில் மனதில் ஜில்லென்ற காற்று சுகமாய் தழுவியது.

“ஏன்?” என்று அவன் கேட்க, இப்போது அவன் சட்டைப் பட்டனை ஒவ்வொன்றாய் திருகி கழட்டியவளோ, “நேத்து நீங்க காபி குடிக்கவே இல்லையே. சோ, இனி நம்ம சேர்ந்தே குடிக்கலாம்” என்றவள் சட்டையை விலக்கி, அவன் நெஞ்சில் கரம் பதிந்திருந்தாள்.

அதில். அவனின் இதயம் சற்று பலமாய் துடிக்க, இப்போது எதையும் யோசிக்காது அவன் நெஞ்சில் கன்னத்தைப் பதித்து சாய்ந்துக் கொண்டவள், “இப்படி ஹக் பண்ணிக்கிட்டா டயர்ட் போயிடும் சார்” என்றாள்.

அவள் சொல்வதில் உண்மை இருக்கிறதா? இல்லையா? என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும், அவள் அவனுக்கு புதிதாய் ஒன்றை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவள் இல்லாமல், அவனின் அணு கூட அசையாது என்பதை அவனுக்கு கூடிய சீக்கிரமே புரிய வைக்கும் முயற்சியில் அவள் இருக்க, அதை அறியாத அவனோ, புதிதாய் உணரும் அந்த உணர்வை மெய்மறந்து ரசித்தான்.

அவனின் கரமும் கூட சிறிது நேரம் அவளை மெல்லமாய் அணைத்துக் கொள்ள, இப்போது அவளோ, இன்னுமுமே அவனை இறுக்கி கட்டிக் கொண்டாள்.

சில நொடிகள் கழித்து மெல்ல விலகியவள், “ரிபிரஸ் ஆகிட்டு, ஒரு காபி சார் ப்ளீஸ்” என்று முகத்தை சுருக்கி, தலையை சாய்த்து அவள் கேட்க, இப்போது அவனுக்கோ அவளை அள்ளி தூக்கி முத்தமிட மனம் பரிதவித்தது.

ஆனாலும் அதை அடக்கி, “போட்டு தரேன்” என்றான். “தேங்க் யூ சார்” என்றவள், இப்போது அவன் கொடுக்க நினைத்த முத்தத்தை, பட்டென்று அவன் கன்னத்தில் அழுத்தி கொடுத்துவிட்டு அறைக்குள் ஓடியிருந்தாள்.

அதில் கன்னத்தில் கை வைத்தவன் ஒரு நொடி அப்படியே நின்று விட, மனமோ, “டேய் அர்ஜூன்” என்று அவனை உழுப்பியது அதன் பின்னே, அவன் நிற்கும் நிலையே அவனுக்கு உரைத்தது.

அவள் அத்தனை உரிமையாய் அவன் சட்டையை கழட்டி, அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த வாலட்டையும் எடுத்து தனியே வைத்திருந்தாள். அதோடு இல்லாது அவனுடைய பெல்டையும் அவள் கழட்டியிருக்க, இதை எல்லாம் அவள் எப்போது செய்தாள்? அந்தளவுக்கா உணர்வில்லாமல் நின்றோம்? என்ற நினைவே, அவனை என்னமோ செய்ய, “ச் அவ பாட்டுக்கு ஏதாச்சும் பண்ணிட்டு போயிடுறா. அதுக்கப்புறம் எனக்குத்தான் நிம்மதியா தூக்கம் வர மாட்டேங்கிது” என்று சொன்னாலும் கூட மனம் அதை ரசிக்கத்தான் செய்தது.

இப்படி எல்லாம் அவனுக்கு இதுவரை யாரும் செய்ததில்லை. அதிலும் அவன் தலை முடியை அவள் அழகாய் கோதிய நொடி, நிச்சயம் அவன் இம்மண்ணுலகிலேயே இல்லை. அதை நினைத்தப்படியே அறைக்கு சென்று உடை மாற்றி வந்தவன், அவளுக்கும், அவனுக்கும் சேர்த்தே காபி போட்டு எடுத்து வந்தான்.

மொத்தத்தில் அவன் அவளிடம் ஒன்று பேச நினைக்க, அவளோ, மொத்தமாய் அவனை மறக்கடித்து, அவளின் நினைவில் தத்தழைக்க வைத்துக் கொண்டிருந்தாள்.

(ம் பூஜா செம்ம போ. வாத்தியவே சூப்பரா கரெக்ட் பண்ற. ஆனாலும், இந்த ரெமோ மூட்லையே எத்தன நாள் இருப்பான்னுத்தான் தெரியல. சரி அடுத்து என்னென்ன்னு அடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்புறம் பெஸ்ட் கமெண்ட்ஸ பேனர்ல போஸ்ட் பண்ணிருக்கேன். சோ உங்க கமெண்ட்ஸும் அதுல வரலாம். சோ அதையும் செக் பண்ணிக்கோங்க.  அப்புறம் மறக்காம ரேட்டிங் கொடுத்திடுங்க)

தொடரும்…

Comments   7

*** வரம் – 54 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***